Contact us at: sooddram@gmail.com

 

ஜனாதிபதி தலைமையிலான ஒரு தேசியக் கட்சியில் பயணிப்பதுதான் சிறந்த விடயம்! - அமைச்சர் வி.முரளிதரன்

ஒரு தேசிய கட்சியில் நாங்கள் பயணிப்பது தான் சிறந்த விடயம். இனங்களையோ மதங்களையோ பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சியிலே நாங்கள் இருந்தோமானால் மீண்டும் குரோதங்களும் பிரச்சனைகளும் உருவாக்கப்பட்டு எங்களுக்குள் பிளவுகள் ஏற்படத்தான் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

பட்டிருப்பு மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற திவிநெகும ஒருங்கிணைப்பு கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் சமுர்த்தி அதிகாரிகளை உள்ளீர்க்கும் திட்டத்தின் விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மீள்குடியேற்ற அமைச்சின் இணைப்புச்செயலாளர் ருத்திரமலர் ஞானபாஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜிதவேரகொட உட்பட அதிதிகள் கலந்துகொண்டனர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதியமைச்சர்,

எமது நாட்டில் மூன்று கட்டங்களாகப் பிரித்து இந்த அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மகிந்த சிந்தனைத் திட்டத்தினூடாக கட்டுமானங்கள் மேற்கொள்ளுதல். வாழ்வாதாரங்களை சமனாகக் கொண்டு போதல். அடுத்ததாக மக்களின் பாதுகாப்பு. பாதுகாப்பையும் மக்களின் ஒழுக்கப்பாடையும் அதே வேளையில் அதே சமனாகக் கொண்டு போதல். இந்தத்திட்டத்தின் அடிப்படையில் தான் அபிவிருத்தி பிரித்து எங்களுடைய இலங்கைத் திருநாடு பாரிய அபிவிருத்தியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.

இதை நீங்கள் ஒரு தூர நோக்கான சிந்தனையுடன் சிந்திப்பீர்களாக இருந்தால் மாத்திரம் தான் விளங்கிக்கொள்ள முடியும். ஏனென்றால் சிலர் குறைகளைக் கூறுவார்கள் விதண்டாவாதமாகப் பேசுவார்கள் இதைக் கேட்டுக் கொண்டிருந்தால் எங்களது தூரநோக்குப் பயணத்தை புரிந்து கொள்ள முடியாது.

இலங்கை வரலாற்றில் ஒரு அரசாங்கமும் செய்யாதது. இந்தப் பெருமையெல்லாம் எமது மதிப்பிற்குரிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்~ அவர்களைத் தான் சேரும். வீதிகள் பாலங்கள் அமைக்கும் பணியை இலங்கையில் எந்தவொரு ஜனாதிபதியும் மேற்கொள்ளவில்லை. இன்று மட்டக்களப்பும் திருகோணமலையும் இணைக்கப்பட்டிருக்கிறது. 5பெரிய பாலங்கள். நினைத்துக்கூட பார்க்க முடியாது.

இன்று நாங்கள் படுவான்கரையையும் எடுவான்கரையையும் இணைப்பதற்கு பாலங்களை போடுகின்றோம். மண்முனைத்துறைப் பாலம் கட்டப்போகின்றோம். வவுணதீவுப்பாலம் புனரமைக்கின்றோம். இதே போன்று எத்தனை மாவட்டங்களை தலைநகருடன் இணைக்கின்ற பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன என்பதை நீங்கள் நாடு பூராகவும் சென்று பார்த்தால் விளங்கும்.

அதேபோன்றுதான் அடுத்த கட்டமான பாடசாலைக் கட்டடங்கள் பாடசாலை அபிவிருத்திகள் ஆயிரம் பாடசாலைத் திட்டம். .அதிலே 14 பாடசாலைகள் உள்வாங்கப்பட்டு 6கோடி ரூபா ஒரு பாடசாலைக்கு ஒதுக்கப்பட்டு முதல் கட்டடத் தொகுதியை முதலைக்குடா மகாவித்தியாலயத்தில் அன்று கல்வியமைச்சர் பந்துல குணவர்தன அவர்கள் திறந்து வைத்தார்.

14 பாடசாலைகள் அதில் அமைக்கப்படப்போகின்றன. மேலதிகமாக நாங்கள் பாடசாலைகளை கோரியிருந்தோம். அதற்காக வருகின்ற வருடம் 6000 பாடசாலைத்திட்டம் என்று சொல்லி ஜனாதிபதி அந்தத் திட்டத்தை அமுலாக்கப் போகின்றார். ஏனென்றால் கல்வியை வளர்ப்பதற்கு. நாங்கள் கட்டுமானங்களை அமைக்கின்றபொழுது வீதிகள் பாலங்களை போடுகின்றபொழுது கட்டடங்களை கட்டுகின்றபொழுது மக்களின் வாழ்க்கைத்தரம் என்னவாவது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்காலம் என்னவாவது என்பதை சிந்தித்துத்தான் இந்த வாழ்வாதார நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த அரசாங்கத்தின் அபிவிருத்தி என்பது உணருகின்ற விடயமாக உள்ளது. இந்த அரசாங்கத்தில் எதுவித குறையுமில்லை. ஜனாதிபதி அவர்கள் பூரண வளங்களை அள்ளித் தந்துகொண்டிருக்கிறார். அதற்குரிய பிரதிபலன்களை அளிக்கின்ற அதிகாரிகளாக நாங்கள் இருக்க வேண்டும். அரசியல் என்பது அபிவிருத்திக்காக இருக்க வேண்டும். ஒரு அரசியல்வாதியால் உங்களுக்கு பலன் வர வேண்டும். அந்த அரசியல்வாதி உங்களின் நலன் கொண்டு செயற்பட வேண்டும்.

மக்களுக்கு உரிய முறையில் செயற்பாடுகளை காட்ட வேண்டும். வீணாக எதிர்க்கட்சிகளுடன் இருந்துகொண்டு விதண்டாவாதங்களை பேசிக்கொண்டு இருப்பதற்கு நீங்கள் அனுப்பி வைத்தால் அவர்களால் முடியுமா உங்களை உள்வாங்குவதற்கு. அவர்களால் முடியுமா அபிவிருத்தி செய்வதற்கு. காலத்தை கடத்திக் கொண்டு இருப்பார்கள்.

மட்டக்களப்பை பொறுத்தவரையிலே வடக்கு கிழக்கிலே இன்று முதன்மையான மாவட்டம். அபிவிருத்தியடைந்து வருகின்ற ஒரு முன்மாதிரியான மாவட்டமாக எங்களுடைய மாவட்டம் இருக்கிறது. அந்தளவிற்கு இரவும் பகலுமாக இருந்து பூரண ஒத்துழைப்புகளுடன் வேலைகளை செய்து வருகின்றோம். அதற்கு உண்மையில் எமது அதிகாரிகளை பாராட்ட வேண்டும்.

இன்று ஒரு தேசிய கட்சியில் நாங்கள் பயணிப்பது தான் சிறந்த விடயம். இனங்களையோ மதங்களையோ பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சியிலே நாங்கள் இருந்தோமானால் மீண்டும் குரோதங்களும் பிரச்சனைகளும் உருவாக்கப்பட்டு எங்களுக்குள் பிளவுகள் ஏற்படத்தான் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

ஒரு தேசியக் கட்சியில் போகும்பொழுது எமது உரிமைகளும் பாதுகாக்கப்படும் வளமும் வந்துகொண்டிருக்கும் மக்களிடையே ஒற்றுமையும் புரிந்துணர்வும் ஏற்படும். நாம் போராடியிருக்கிறோம். இதற்கும் காரணம் அரசியல்வாதிகள் தான். அன்றிருந்த அரசியல்வாதிகள் இரண்டு பக்கமும் துவே~ங்கள் பேசினார்கள்.

தமிழ் அரசியல்வாதிகளும் பேசினார்கள் சிங்கள அரசியல்வாதிகளும் பேசினார்கள். அதனால் பாரிய விரிசலும் குரோதமும் வந்தது. பேசிய அரசயல்வாதிகளெல்லாம் வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார்கள். நாங்கள் ஆளுக்காள் அடிபட்டு கிட்டத்தட்ட 90ஆயிரம் பேர் இறந்தோம். ஓடிய அரசயல்வாதிகளெல்லாம் இப்போது வந்துவிட்டார்கள். ஏனென்றால் இப்போது அமைதி வந்துவிட்டது. நாட்டில் எந்தவொரு பிரச்சனையுமில்லை.

அன்றைக்கு தூண்டிவிட்ட சம்பந்தன் தான் இன்று வந்திருக்கிறார். அன்றைக்கு போராட்டத்திற்கு வாங்கடா என்று கூறிய மாவை சேனாதிராஜா தான் இன்றைக்கு வெளிநாட்டிலிருந்து வந்து நிற்கிறார். அவர்கள் அவர்களின் சமூகத்தை வைத்துத் தான் அரசியல் நடத்துவார்கள்.

விடுதலைப்புலிகள் பிள்ளைகளை பிடிக்கின்றனர் என்று தப்பி ஓடி வந்தால் ஆமி பிடிக்கும். என்ன செய்வதென்று தாய்மார் தவித்து திரிந்தார்கள். இதை எல்லாம் நிறுத்துவதற்குத் தான் யுத்தத்தை நிறுத்தி கொண்டுவந்திருக்கிறோம். எங்களுக்கென்று ஒரு தனித்துவத்தை அரசியலை கொண்டுவரவேண்டும். இன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உலகத்தில் போய் தமிழருக்காக குரல் கொடுக்கிறதாம் என்று போயிருக்கிறார்கள்.

மட்டக்களப்பிலே இருக்கின்ற மூன்று பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கூட்டிச் சென்றிருக்கலாம் தானே. மட்டக்களப்பிலுள்ளவனும் தமிழன் தானே. இதை நாங்கள் நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும். இங்கிருக்கும் உறுப்பினர்களை குற்றம் சாட்ட வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஏனென்றால் அவர்கள் என்னால் அரசியலுக்கு வந்தவர்கள் தான்.

முதன்முதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலே ஆட்களைப் போட்டு அரசியலுக்கு கொண்டுவந்தது நான் தான். 4உறுப்பினர்களை கொண்டுவந்தேன். அவர்களை நான் குற்றம் சொல்ல மாட்டேன். அங்கிருப்பவர்களின் தலைமைத்துவப் போக்குகளும் எங்களை மட்டந்தட்டி நடத்துவதும் எனக்குப் பிடிக்காது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்~வைப் பாருங்கள் எங்களை உயர்த்தவேண்டும் என்பதற்காக இப்படியான திட்டங்களெல்லாம் போட்டு உயர்வான சிந்தனையுடன் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார். தமிழ் மக்களை கௌரவிக்க வேண்டும் எனும் நோக்கில் எனக்கு பாராளுமன்றத்தில் அமைச்சர் பதவி தந்து கட்சியிலும் பெரிய பதவி தந்து வைத்திருக்கிறார். நாங்கள் ஒற்றுமையாக இருப்பது தான் ஒரே வழி. நாங்கள் சேர்ந்து போக வேண்டும். அப்பொழுது எல்லாம் வரும். இன்று எங்களுக்கு என்ன வளம் இல்லை. எல்லாம் இருக்கிறது. நாங்கள் தெளிவாக இருக்க வேண்டும். இந்த வருடம் 8000ஆயிரம் மில்லியனை மட்டக்களப்பு மாவட்டத்திற்காக ஒதுக்கிக் கொடுத்திருக்கிறோம். இன்னும் செலவழித்து முடியவில்லை.

வெள்ளத்தில் அழிந்த அத்தனை பேருக்கும் விதை நெல் இலவசமாக எடுத்துக் கொடுத்திருக்கிறோம். 6000பேருக்கு வீட்டிற்கு காசு எடுத்துக் கொடுத்திருக்கிறோம். தேசிய வீடமைப்பு அதிகார சபையுடன் இணைந்து இந்த வீடுகளை கட்டப் போகின்றோம்.

இன்று எமது மாணவர்களின் திறமை அதிகரித்துச் செல்கிறது. நன்கு சித்தியடைகிறார்கள். படுவான்கரை மாணவர்கள் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்திருக்கிறார்கள். படுவான்கரையில் உள்ள மக்கள் அனைவரும் மின்சாரத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்போம். மட்டக்களப்பு மாவட்டம் ஒரு வளமான மாவட்டம். ஏராளமான அபிவிருத்தித் திட்டங்கள் இங்கு வரப் போகின்றன. அந்தளவு கரிசனையோடு ஜனாதிபதி செயற்படுகிறார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com