Contact us at: sooddram@gmail.com

 

முக்கிய ராணுவ ஒப்பந்தத்தில் அமெரிக்கா, ஆஸி., கையெழுத்து

அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகள் முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தம், சீனாவின் கோபத்தைக் கிளறிவிட்டுள்ளது. "தெற்காசிய மண்டலத்திற்கு இது நல்லதல்ல' என அந்நாடு எச்சரித்துள்ளது. ஆனால், சீனாவைக் கண்டு அமெரிக்கா பயப்படப் போவதில்லை என ஒபாமா வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
ஆஸி.,யில் ஒபாமா : ஹவாய் தீவில், சமீபத்தில் நடந்த ஆசிய பசிபிக் பொருளாதார உச்சி மாநாட்டை முடித்த கையோடு, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, நேற்று ஆஸ்திரேலியா சென்றார். கடந்த 60 ஆண்டுகளாக இருதரப்பு ராணுவங்கள் இணைந்து முக்கிய போர்களில் பணியாற்றியதை நினைவு கூரும் வகையில் ஒபாமா ஆஸி., சென்றுள்ளார்.

முக்கிய ஒப்பந்தம்: ஆஸி., பிரதமர் ஜூலியா கில்லார்டும், ஒபாமாவும் நேற்று முக்கிய ராணுவ ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர். அதன்படி, ஆஸி.,யின் வடபகுதியில் உள்ள டார்வின் துறைமுகத்தில், அமெரிக்காவின் 250 போர்க் கப்பல்கள் ஆறு மாத காலத்திற்கு முகாமிட்டிருக்கும். அவற்றில், மொத்தம் ஒரு கடற்படை அளவான 2,500 வீரர்கள் இருப்பர். இருதரப்பு ராணுவங்களும் அப்போது கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளும். இந்தத் திட்டம் அடுத்தாண்டு முதல் நடைமுறைக்கு வரும்.

சீனாவிற்கு ஆப்பு: அமெரிக்காவின் இந்தப் படைக் குவிப்பு இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஆஸி.,யில் மிக அதிகளவு எனவும், தென்சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கத்திற்கு ஆப்படிக்கும் முயற்சி எனவும் நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால் இந்த ஒப்பந்தம், ஆஸ்திரேலியாவில் அமெரிக்கா நிரந்தரமாக ராணுவத்தை நிலைநிறுத்தும் முயற்சியல்ல என, இருதரப்பு அதிகாரிகளும் கவனமாக விளக்கம் அளித்தனர்.

தற்போது ஜப்பான், தென்கொரியாவில் நிரந்தரமாகத் தனது படைகளைக் குவித்துள்ள அமெரிக்கா, அடுத்தாண்டில் இருந்து ஆஸி.,யிலும் தனது கூட்டுப் பயிற்சியைத் துவக்கும். எனினும், ஆஸி.யை அது தனது நிரந்தரத் தளமாக ஆக்காது என்றே நிபுணர்கள் கருதுகின்றனர்.

பயமில்லை: ஒபாமா, கில்லார்டு இணைந்து அளித்த பேட்டியில், சீனாவை ஒடுக்கும் முயற்சியா இது என செய்தியாளர்கள் கேட்ட போது ஒபாமா கூறியதாவது: ஒரு வளர்ந்த நாடாக உருமாறும் போது சீனா சில பொறுப்புக்களுடன் செயல்பட வேண்டியது அவசியம். சீனாவின் வளர்ச்சியைக் கண்டு அமெரிக்கா பயப்படவில்லை.

அமெரிக்கா சீனாவைக் கண்டு பயப்படுகிறது என்பதும், சீனாவை அமெரிக்கா தவிர்க்க நினைக்கிறது என்பதும் தவறு.

இருதரப்பு ராணுவங்களும் தங்கள் திறன் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது மட்டும் இந்த படைக் குவிப்பின் நோக்கம் அல்ல. இப்பகுதியில் உள்ள சில நட்பு நாடுகள் தாங்களும் பயிற்சி பெற வேண்டும் என நினைக்கின்றனர். இப்பகுதியின் பாதுகாப்புக்கு நாங்கள் இங்கிருந்தால் நலம் பயக்கும் எனக் கருதுகின்றனர். அவற்றுக்காகவும் தான் இந்தப் படைக் குவிப்பு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒபாமா தெரிவித்தார்.

சீனா கடும் எதிர்ப்பு? : இந்த ஒப்பந்தத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லியு வெய்மின் பீஜிங்கில் நேற்று அளித்த பேட்டியில்,"இது பொருத்தமில்லாத நடவடிக்கை. இப்பகுதி நாடுகளுக்கு நன்மை பயக்கும் செயலல்ல' என்றார்.

சீனாவின் எதிர்ப்புக்கு அமெரிக்க தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் பென் ரோடெஸ் உடனடியாக அளித்த பதிலில்,"இது பொருத்தமான நடவடிக்கை தான்' என்றார்.

இன்று... : இன்று, ஆஸி., பார்லிமென்ட்டில் உரையாற்றும் ஒபாமா அதன்பின், டார்வின் துறைமுகத்திற்குச் செல்கிறார். அங்கு அமெரிக்காவின் ஆசிய பசிபிக் மண்டலம் பற்றிய கொள்கையை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, அவர் இந்தோனேசியாவின் பாலி தீவில் இன்று துவங்கி 19ம் தேதி வரை நடக்க உள்ள "ஏசியான்' அமைப்பின் 19 மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

எங்கப்பன் குதிருக்குள் இல்ல : இந்தியாவுக்கு யுரேனியம் அளிக்கும் ஆஸி., பிரதமர் ஜூலியா கில்லார்டின் முடிவின் பின்னணியில், அமெரிக்கா செயல்பட்டதாக ஆஸி., பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. கில்லார்டு அளித்த பேட்டியில்,"எனது இந்த முடிவையும் அமெரிக்க அதிபரின் ஆஸி., வருகையையும் இணைத்துப் பார்க்க வேண்டியதில்லை. இது எனது சுய முடிவு' எனத் தெரிவித்திருந்தார்.

நேற்று ஆஸி., வந்த ஒபாமாவும்,"ஆஸி.,யின் இந்த முடிவிற்கும் அமெரிக்காவிற்கும் சம்பந்தமில்லை. இவ்விஷயத்தில் ஜூலியா எனது ஆலோசனையைக் கேட்க வேண்டிய அவசியமும் இல்லை. இது இந்தியாவுக்கும் ஆஸி.,க்கும் இடையிலான விஷயம்' என்றார்.

இதுகுறித்து ஆஸி., பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த பல மாதங்களாக அமெரிக்கா மற்றும் ஆஸி., அதிகாரிகள், இந்தியா மற்றும் இந்தியப் பெருங்கடல் குறித்து பேச்சு நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளது.

இந்தியா உடனான தனது உறவில், ஆஸி.,யும் பிரிக்க முடியாத அங்கம் என அமெரிக்கா கருதுவதாகவும் அப்பத்திரிகை கூறியுள்ளது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் சமீபத்தில் அளித்த பேட்டியில்,"அமெரிக்கா, ஆஸி., கூட்டணி என்பது, ஆசிய பசிபிக் மற்றும் இந்திய பசிபிக் கூட்டணியில் இருந்து உருவானதுதான்' என்றார் என்பது குறிப்பிடத் தக்கது.

கெவின் ரூத் கோபம : இந்தியாவுக்கு யுரேனியம் வினியோகிப்பது குறித்து, ஆஸி., முன்னாள் பிரதமரும் தற்போதைய வெளியுறவு அமைச்சருமான கெவின் ரூத்தை பிரதமர் ஜூலியா கில்லார்டு கலந்தாலோசிக்கவில்லை என்பதால் கெவின் ரூத் கோபத்தில் உள்ளார்.

கில்லார்டின் முடிவுக்கு போக்குவரத்து அமைச்சர் அந்தோணி அல்பேன்சி தான் முதலில் எதிர்ப்பு தெரிவித்தார். ரூத் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பிரதமரை ஆதரிப்பதாகத் தெரிவித்த அவர், இவ்விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பும் எனக் கூறியுள்ளார். இதனால்
, ஆளும் தொழிலாளர் கட்சியில், யுரேனியம் விவகாரம் பிளவை ஏற்படுத்தலாம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com