Contact us at: sooddram@gmail.com

 

தமிழ் பத்திரிகைகளில் செய்தி பிரசுரமாகவே பாராளுமன்றத்தில் காரசார உரை

அன்று அப்பாவி தமிழ் மக்களின் சேமிப்பை சூறையாடி பலரது தற்கொலைக்கு காரணமானவர் இன்று மனித உரிமைக்காக குரல்

TNA வெளிநாடு செல்வது உறவுகளை சந்திக்கவும், பணம் வசூலிக்கவுமே!

இந்த வரவு செலவுத்திட்டம் இலங்கையில் வடபகுதியை முற்றாகப் புறந்தள்ளி வைத்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இச்சபையில் உரையாற்றும் போது குறிப்பிட்டுள்ளார். அத்துடன், மாகாண சபைகளுக்கான ஒதுக்கீட்டில் வடக்கிற்கு எவ்வளவு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதனை அவரால் அறியமுடியாமல் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இவ்வருடத்திற்கென மாகாணசபைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மூலதனச் செலவீனம் ரூபா 14 பில்லியன் மாத்திரமே எனவும் அவர் மேலும் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத்திட்ட மூலதன செலவீட்டுத் தொகையாக ரூபா 5.1 பில்லியன், மற்றும் 3.8 பில்லியன் ஆகியவை முறையே கிழக்கு மற்றும் வடமாகாணங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்பதனை எவராலும் கண்டுகொள்ள முடியும். இம்மூலதன செலவீன ஒதுக்கீடுகள் ஏனைய சகல மாகாணங்களுக்கான ஒதுக்கீடுகளுடன் ஒப்பிடுகையில், மிகக்கூடிய தொகையாகவும் இரண்டாவது மிகக்கூடிய தொகையாகவும் காணப்படுகின்றது.

இது அரசாங்கத்தின் கொள்கையாகிய சமநிலைப்படுத்தப்பட்ட பிராந்திய அபிவிருத்தி மற்றும் இன்று வரை அபிவிருத்தி செய்யப்படாத பகுதிக ளாகிய குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்தல் என்ற அரசின் கொள்கையினை மீள் வலியுறுத்தும் நடவடிக்கையாக அமைந்துள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த உறுப்பினர் இவ்வாறானதொரு பொய் யான கூற்றை ஏன் கூறியுள்ளார் என எனக்குப் புரியவில்லை. இந்த உறுப் பினர் வரவுசெலவுத்திட்ட மதிப்பீடுகளின் உள்ளடக்கத்தைப் புரிந்து கொள்ளவில் லையா அல்லது இச்சபையையும் அவரின் ஊடகத்தின் மூலம் வெளி உலகையும் தப்பான வழியில் இட்டுச் செல்வதற்கு முயற்சிக்கின்றாரா என எனக்குப் புரியவில்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அந்தப் பாராளுமன்ற உறுப்பினர் யாழ்ப்பாண மற்றும் கிளிநொச்சி மாவட் டங்களுக்கான மாவட்ட இணைப்புக் குழுக் கூட்டங்களில் பங்குபற்றி இருந்த தோடு, இம்மாவட்டங்களின் அபிவிருத் திக்கென இத்தகைய பெருந்தொகைப் பணம் செலவிடப்பட்டி ருப்பதையும் நன்கு அறிவார். அவர்கள் தமிழ்ப் பத் திரிகைகளில் பிரசுரமாவதற்காகவே இங்கு உரையாற்றுகின்றனர். அவர்கள் அக்கிராசனத்தை நோக்கி உரையாற்றினா லும், அவர்களின் முழுக் கவனமும் பார்வையாளர் கூடத்தில் உள்ள தமிழ் ஊடகங்களை நோக்கியதாக இருப்பதுடன் தமது தப்பான அரசியல் பிரசாரத்தை மேற்கொள்வதையே அவர்கள் மையப் படுத்திக்கொண்டுள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளு மன்ற உறுப்பினர்கள் உலகம் பூராகவும் பொய் உரைப்பது போல் இச்சபையிலும் பொய் பேசுகின்றனர். அதே பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் பல தசாப்தங்களுக்கு முன்னர் அப்பாவி மக்களின் பணத்தை மோசடி செய்தவர். அவ் உறுப்பினர், தெற்கில்சக்விதி” (sakvithi) என்ற நிதி நிறுவனத்தைப் போல்சப்ரா பினான்ஸ்” (Sabra Finace) எனும் பெயரில் மக்களை ஏமாற்றிய நிதி நிறுவனமொன்றுடன் தொடர்புடையவர். அந்நிறுவனத்தின் மோசடி செயற்பாட்டால் தமது வாழ்நாள் சேமிப்புகளை வைப்பிலிட்ட அனேகமான மக்கள் இறுதியாக தற் கொலை செய்துகொண்டனர். பெருமளவு அப்பாவி மக்களின் தற்கொலைகளுக்கு காரணமாகயிருந்த இவர் ஓர் கொலை யாளியாக கணிக்கப்பட வேண்டியவர்.

இவர் இன்று மனித உரிமைகளின் இரட்சகரைப் போல் இச்சபையில் உரையாற்றுகின்றார். இவ்வாறு மோசடி செய்யப்பட்ட பணத்தின் மூலம் யாழ்ப் பாணத்தில் அவர்கள் ஆரம்பித்த தின சரிப் பத்திரிகை தான் எல்.ரீ,ரீ.ஈயினரின் அழிவுச் செயற்பாடுகளில் இளைஞர், யுவதிகள் இணைந்துகொள்வதற்கு உற்சாகமளித்ததோடு, இறுதியில் அவர் களின் மரணம் வரை செல்வதற்கும் பொறுப்பாக இருந்தது. அந்தப் பத்தி ரிகை இன்றும் ஊத்தையன் வேலையைத் தான் செய்து கொண்டிருக்கின்றது. இப் பத்திரிகை தமிழ் மக்களின் சாபக்கேடு ஆகும். எல்.ரீ.ரீ.ஈ.யினரும் அவர்களைச் சார்ந்தவர்களும் கடந்த முப்பது ஆண்டு களுக்கு மேலாக எவற்றை எல்லாம் அழித்தார்களோ, அவற்றையெல்லாம் மூன்று முதல் ஐந்து வருடகால எல் லைக்குள் புனர்நிர்மாணம் செய்யும் முயற்சிகளில் அரசாங்கம் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது. இத்தகைய ஆக்கபூர்வமான செயற்பாடுகளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சக பாராளு மன்ற உறுப்பினர்களுக்கு ஏன் தெரிய வில்லை என்பதனை என்னால் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது.

எமது நாட்டின் வரலாற்றில் என்றும் எதிர்பார்த்திராத அளவில் மேற்கொள்ளப் படுகின்ற பாரிய அபிவிருத்தித் திட்டங் களையும், நல்லிணக்கத்திற்கான நடவ டிக்கைகளையும் தங்கள் கபடத்தனமான அரசியல் வார்த்தைகளால் முட்டுக்கட்டை போட வேண்டாமென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் களையும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளையும் இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். முன்னர் அவர்கள் எல்.ரீ.ரீ.ஈ.யினரே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என கூறியி ருந்தனர். இவர்கள் எல்.ரீ,ரீ.ஈ யினரின் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தூண்டியதோடு மாத்திரமல்லாது மறை முகமாக அவர்களுக்கு ஆதரவளித்து வந்துள்ளனர். தமது சொந்த தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களான அமிர்தலிங்கம், கலாநிதி நீலன் திருச்செல்வம், தங்கத் துரை, பத்மநாபா, ஸ்ரீசபாரட்ணம் மற்றும் ஏனையோர் எல்.ரீ.ரீ.ஈ.யினரால் கொலை செய்யப்பட்ட போதும் கூட அவர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை. அவர்களுக்குத் தைரியம் இருக்குமானால் எல்.ரீ.ரீ.ஈ னரே தமது தலைவர்களைக் கொலை செய்தார்கள் என்று எழுந்து நின்று கூறட்டும்?

அவர்கள் ஐக்கிய அமெரிக்க இராச் சியத்திற்குச் சென்று இராஜாங்க அமைச் சின் செயலாளர் திருமதி ஹிலாரி கிளிண்டனைச் சந்தித்து, தமிழ் மக்களுக் கான அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பத ற்கு அமெரிக்க மக்களின் உதவியை நாடப்போவதாக கடந்த வருடம் கூறி யிருந்தனர். அண்மையில் தமிழ் மக்க ளின் அரசியல் விடயங்களுக்குத் தீர்வு காண்பதற்கு இந்தியாவின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு இந்திய விஜய த்தை மேற்கொள்வதாகக் கூறியிருந்தனர். கடந்த காலங்களிலும் இதேபோன்ற செயற்பாடுகளைத்தான் அவர்கள் செய்து கொண்டிருந்தனர். ஆனால் அவர்களை சர்வகட்சி மாநாட்டுக் குழுவில் பங்கேற்கும் படி அரசாங்கம் அழைப்புவிடுத்த போது அதனை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். சகல அரசியல் கட்சிகளினதும் சம் மதத்துடன் தீர்வொன்றைக் காண்பதற்கு பாராளுமன்ற தெரிவுகுழுவில் பங்கு பற்றும் வண்ணம் அரசாங்கம் அவர்களை கேட்டுக்கொண்ட போது, அத் தெரிவுக்குழுவிற்கு பெயர் குறித்து நியமனம் செய்வதற்கு பதிலாக உலகம் பூராகவும் பயணம் செய்து சர்வதேச சமூகத்திற்கு பொய்யான கூற்றுக்களையும் தவறான தகவல்களையும் பரப்புரை செய்து வருகின்றனர். உண்மையில் அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது அவர்களின் உறவினர்கள் மற்றும் குடும்பங்களைச் சந்திப்பதற் கேயாகும்.

அத்துடன் அவர்களின் வெளிநாட்டுப் பயணங்களின்போது தமது பொய்ப்பிரசார நடவடிக்கைகளுக்காக புலம்பெயர் தமிழ் மக்களிடமிருந்து பணம் வசூலித் தும் வருகின்றனர். தாமே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்றும் அரசாங்கம் தம்மிடம் மட்டுமே பேச்சு வார்த்தையில் ஈடுபடவேண்டுமென்றும் அவர்கள் கூறி வருகின்றனர். பிரபாகரனின் மனோநிலைக்கும் இவர்களின் மனோ நிலைக்கும் இடையில் நான் எவ்வித வேறுபாட்டையும் காணவில்லை அவ்வாறு தான் அவரும் கூறியிருந்தார். பிறர்மீது சேறு பூசுவதற்கு முன்னர் தனது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் பழைய வரலாறுகளை புரட்டிப் பார்க்கும்படி சுமந்திரனிடம் நான் வேண்டிக்கொள்ள விரும்புகின்றேன். நேரக் கட்டுப்பாடு இல்லாதிருக்குமே யாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களின் பழைய வரலாறுகள் தொடர்பாகவும் என்னால் பல விடயங் கள் எடுத்துச்சொல்ல முடியும். எனது நேர்மை யான அரசியல் வரலாறு காரணமாகவே தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புத் தலைவர்கள் பெற்ற விருப்பு வாக்குகளை விட மிக அதிகமளவு விருப்பு வாக்குகள் மூலம் மக்கள் என்னைத் தேர்ந்தெடுத்துள் ளனர். இதே காரணத்திற் காகவே 1994ம் ஆண்டிலிருந்து இற்றை வரை மக்கள் என்னை தொடர்ச்சியாகப் பாராளுமன்றத் திற்குத் தேர்ந்தெடுத்து வருகின்றனர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com