Contact us at: sooddram@gmail.com

 

அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைவோர் 48 மணி நேரத்துக்குள் வெளியேற்றப்படுவர்

கொழும்பில் உள்ள அவுஸ்திரேலியா உயர் ஸ்தானிகராலயம் அளித்துள்ள விளக்கம்

இறையாண்மை எல்லைகள் நடவடிக்கையில் கடுமையானது என்ன?

இறையாண்மை எல்லைகள் நடவடிக்கை என்பது, அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் இராணுவம் வழிநடத்தும் புதிய பாதுகாப்பு முன்முயற்சியாகும். படகுகளைத் தடுத்து நிறுத்துவதும், குற்றாவளிகள் கைகளில் சிக்கி மக்கள் கடலில் உயிராபத்தை எதிர்கொள்வதைத் தவிர்ப்பதும், அவுஸ்திரேலிய குடிவரவுத் திட்டத்தின் கெளரவத்தைப் பேணுவதும் இதன் நோக்கங்களாகும்.

புதிய கொள்கை முன்னைய கொள்கையிலிருந்து வேறுபடுவது எவ்வாறு?

பப்புவா நியூகினியா மற்றும் நெளறு அரசாங்கங்களுடன் இணக்கப் பாட்டுடனான பங்காளித்துவம் செயற்படும் நிலையில் உள்ளது. இதன் பிரகாரம், கடல் மார்க்கமாக சட்ட விரோதமான முறையில் வருபவர்கள் மதிப்பீடுகளுக்காக பப்புவா நியூ கினியா அல்லது நெளறுவிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். புதிய கொள்கையின் ஊடாக துரித இடமாற்ற செயன்முறை அறிமுகமாகிறது.

அதன் பிரகாரம், அவுஸ்திரேலியாவை அடையும் புகலிடக் கோரிக்கையாளர்கள் 48 மணித்தியால யங்களில் பப்புவா நியூ கினியா அல் லது நெளறுவிற்கு அனுப்பி வைக்கப் படுவார்கள். இந்த இரு இடங்களிலும் இயங்கும் மதிப்பீட்டு நிலையங்களை விஸ்தரித்தலும், புகலிடக் கோரிக்கை யாளர்களுடன் கூடிய படகுகளை திருப்பி அனுப்புவதும் புதிய கொள் கையில் உள்ளடங்கும்.

அவுஸ்திரேலியா, பப்புவா நியூ கினியா, நெளறு ஆகியவற்றிற்கு இடையிலான ஏற்பாடுகள் யாவை?

அவுஸ்திரேலியாவும் பப்புவா நியூ கினியும் மற்றும் அவுஸ்திரேலியாவும் நெளறுவும் கைச்சாத்திட்ட ஏற்பாடுக ளானவை சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வரும் சகலரையும் பப்புவா நியு கினிக்கு அல்லது நெளறுவிற்கு அனுப்பி மதிப்பீடு செய்யவும், அகதியாக இனங்காணப் படுபவரை அது குடியேற்றவும் வழிவகுக்கின்றன. அகதிகளாக இனங்காணப்படாத வர்கள் தாய்நாட்டுக்கு அல்லது வதிவிட உரிமை கொண்ட நாடொன்றிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்.

புதிய விதிமுறைகள்

அவுஸ்திரேலியாவானது பிராந்திய மதிப்பிடல் நிலையங்களை விஸ்தரிப் பதற்காக பப்புவா நியூ கினி மற்றும் நெளறுவுடன் பணியாற்றி வருவதுடன், மேலதிக வசதிகளை அமைப்பதற்கு புதிய இடங்களைத் தேடி வருகிறது. இது போதியளவு கடல் கடந்த மதிப்பிடல் வசதிகளை ஏற்படுத்துவதுடன், 48 மணித்தியால துரித இடமாற்ற நடைமுறையின் தேவைகளை சமா ளிக்கவும் இடமளிக்கும்.

பப்புவா நியூ கினி மற்றும் நெளறு விற்கான 48 மணித்தியாலய இடமாற்றம் பெண்கள் மற்றும் பிள்ளைகளுக்கும் ஏற்புடையதா? சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவை அடையும் சகலரும் பப்புவா நியூ கினியா மற்றும் நெளறுவிற்கு இடமாற்றப்படக் கூடியவர்கள். பிள்ளைகள் மற்றும் குடும்பக் குழுக்களுக்கு இடமாற்றத்தில் இருந்து விலக்களிக்கப்படமாட்டாது. விசா இல்லாமல் படகு மூலம் அவுஸ்திரேலியாவை அடைகின்ற எவரும் அந்நாட்டில் குடியமர்த்தப்பட மாட்டார்கள்.

துணையில்லாமல் வரும் சிறார்களுக்கு என்ன நடக்கும்?

கடல் கடந்த நாடுகளில் மதிப் பிடுதலுக்கான நடைமுறையில் எவருக் கும் விலக்களிப்புக்கள் கிடையாது. துணையில்லாமல் வந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவை அடையும் சிறார்களும் பப்புவா நியூ கினியா அல்லது நெளறுவிற்கு இடமாற்றப்படக்கூடும். துணையில்லாமல் வரும் சிறார்கள் பிராந்திய மதிப்பிடல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்குரிய ஏற்பாடுகள் அடங்கிய சட்டகத்தை உருவாக்குவதற்காக அவுஸ்திரேலிய அதிகாரிகள் பப்புவா நியூ கினியா மற்றும் நெளறு அதிகாரிகளுடன் நெருங்கிப் பணியாற்றி வருகிறார்கள்.

திரும்பிச் செல்லுமாறு படகுகளுக்கு உத்தரவிடப்படுமா?

அவுஸ்திரேலியாவில் அரசாங்கம் மாறியுள்ளதால் விதிமுறைகளும் மாறியிருக்கின்றன. நீங்கள் விசா இல்லாமல் படகு மூலம் அவுஸ்திரேலியா விற்கு வந்தால், நீங்கள் வழிமறிக்கப்படு வீர்கள். நீங்கள், திருப்பி அனுப்பப்படலாம் அல்லது மதிப்பீடுகளுக்காக விரைவில் பப்புவா நியூ கினியா அல்லது நெளறு விற்கு இடமாற்றப்படலாம். நீங்கள் ஒருபோதும் அவுஸ்திரேலியாவில் குடியமர்த்தப்படமாட்டீர்கள்.

நான் அவுஸ்திரேலியாவில் குடியமர்த்தப்படும் தகுதியைப் பெறுவேன் என்று ஆட்கடத்தல்காரர்கள் சொன்னார்களே?

ஆட்கடத்தல்காரர்களின் பொய்களை நம்ப வேண்டாம். அவர்களுக்கு உங் களது பணமே தேவை. நீங்கள் விசா இல்லாமல் அவுஸ்திரேலியாவிற்கு வருவீர்களானால், உங்கள் வாழ்க்கை அடங்கலாக, சகலவற்றையும் இழக்கும் அபாயத்தை எதிர்கொள்வீர்கள்.

ஏற்கெனவே அவுஸ்திரேலியாவில் உறவினர்கள் இருந்தால் என்ன நடக்கும்? உறவினர்களுக்கு விசா இருந்தால் ஏதேனும் மாற்றம் நிகழுமா?

எவருக்கும் அவுஸ்திரேலியாவில் (பிள்ளைகள், குடும்பங்கள், துணையில்லாத சிறார்கள் அடங்கலாக) குடும்பமொன்று இருக்கும் பட்சத்திலும் மாறுதல் ஏற்படப் போவதில்லை. அங்கு வரும் எவரும் வந்த நேரத்தில் இருந்து 48 மணித்தியாலங்களுக்குள் பப்புவா நியூ கினியா அல்லது நெளறுவிற்கு இடமாற்றப்படுவார்கள்.

புகலிடக் கோரிக்கையாளர்கள் பிரதான நிலப் பரப்பை அடைந்தால் என்ன நடக்கும் அவர்கள் புதிய ஏற்பாடுகளுக்கு அமைய பப்புவா நியூ கினியா அல்லது நெளறுக்கு இடமாற்றப்படும் நிலையை எதிர்கொள்வார்களா?

புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் படகு மூலம் அவுஸ்திரேலியாவின் எவ்விடத்தை அடைகிறார் என்பது கருத்திற் கொள்ளப்பட மாட்டாது. அவர் பப்புவா நியூகினியா அல்லது நெளறுவிற்கு இடமாற்றப்படுவார்.

அத்தகையோர் உண்மையான அகதிகள் அல்லவென இனங்காணப்பட்டால் என்ன நடக்கும்?

அகதிகளாக இனங்காணப்படாதவர்கள் சொந்த நாட்டுக்கு அல்லது தாம் வதிவிட உரிமை கொண்ட நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்.

புதிய ஏற்பாடுகளின் கீழ் பப்புவா நியூ கினியாவிற்கு அல்லது நெளறுவிற்கு எத்தனை பேரை இடமாற்ற முடியும்?

இடமாற்றக் கூடியவர்களின் எண்ணிக்கைக்கு உச்ச வரம்பு கிடையாது. இரு நாடுகளிலும் உள்ள வசதிகள் தொடர்ச்சியாக விஸ்தரிக்கப்பட்டு வருகின்றன. புதிய ஏற்பாடுகளின் கீழ் பப்புவா நியூ கினியா அல்லது நெளறுவிற்கு இடமாற்றப்படும் அல்லது அங்கு குடியமர்த்தப்படுவோரின் எண்ணிக்கை மீதாக கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது.

நான் அவுஸ்திரேலியா அல்லது வேறெந்த நாட்டில் நிரந்தர வதிவிட உரிமையைப் பெறுவது எவ்வாறு?

ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகராலயம் (UNHCR)  அல்லது புலம்பெயர்தல் தொடர்பான சர்வதேச ஸ்தாபனத்தில் (IOM)  தமது கோரிக்கையைப் பதிவு செய்வதன் ஊடாக சரியான செயன்முறையை அனுசரிக்க முடியும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com