Contact us at: sooddram@gmail.com

 

தாயகம் திரும்புவோர் தொகை அதிகரிப்பு

மோதல்கள் காரணமாக இடம் பெயர்ந்து இந்தியா சென்ற இலங்கையர்களில் ஒரு தொகுதியினர் நேற்று கப்பல் மூலமாக தாயகம் திரும்பினர். சுமார் 20 வருடங்களுக்கு பின் முதற் தடவையாக கப்பல் மூலம் இலங்கை அகதிகள் இந்தியாவிலிருந்து தாயகம் அழைத்து வரப்பட்டது இதுவே முதற் தடவையாகும் என்றும் இது ஒரு சிறந்த வாய்ப்பு என்றும் ஐ. நா. வின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது. தூத்துக்குடியில் இருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இலங்கை பிரஜைகளில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 37 பேர் அடங்குவதாக யு. என். எச். சி. ஆர். தெரிவித்தது. மோதல் காரணமாக வேறு நாடுகளுக்கு அகதிகளாகச் சென்ற இலங்கைப் பிரஜைகள் நாடு திரும்புவது தற்போது அதிகரித்து வருவதாக யு. என். எச். சி. ஆர். இலங்கை வதிவிடப் பிரதிநிதி மைக்கல் ஸ்வாக் தெரிவித்தார்.

இலங்கை திரும்பிய இலங்கை பிரஜைகளை வரவேற்கும் நிகழ்வு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது. பிரதி மீள்குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர். இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையி லான ஒத்துழைப்பின் அடிப்படையில் ஐ. நா. வுக்கான அகதிகள் உயர்ஸ்தானிகராலயம், மீள்குடியேற்ற அமைச்சு என்பன இணைந்து இவர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தன.

இவர்கள் மன்னார், குருணாகல், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு கூறியது. இவர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவு என்பனவும் வழங்கப்படும் என அமைச்சு குறிப்பிட்டது. நாடு திரும்பும் 18 வயதுக்குக் குறைவானவர்களுக்காக 7500 ரூபாவும் பெரியவர்களுக்காக 10 ஆயிரம் ரூபாவும் யு. என். எச். சி. ஆர். வழங்கி வருகிறது.

மோதல் முடிவடைந்துள்ள நிலையில் 2009 ஆம் ஆண்டு 818 பேரும் 2010 இல் 2054 பேரும் இந்த வருடத்தில் செப்டம்பர் மாதம் வரை 1493 பேரும் நாடு திரும்பியுள்ளனர். இந்த வருடத்தில் நாடு திரும்பியவர்களில் 1,448 பேர் இந்தியாவில் இருந்தும் ஏனையோர் மலேசியா, ஜோர்ஜியா மற்றும் சென் லூசியா தீவுகள் என்பவற்றில் இருந்தும் திரும்பி வந்ததாக யு. என். எச். சி. ஆர். தெரிவித்தது. இலங்கைப் பிரஜைகளின் வேண்டுகோளின் பிரகாரமே அவர்கள் கப்பல் மூலம் அழைத்துவரப்பட்டதாகவும் இதன் மூலம் அவர்களுக்கு தமது வீட்டு உபகரணங்களையும் எடுத்துவர முடிவதாகவும் யு. என். எச். சி. ஆர். வதிவிட பிரதிநிதி மைக்கல் ஸ்வார்க் கூறினார்.

மேலும் பலர் நாடு திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எத்தனை பேர் கப்பல் மூலம் திரும்ப உள்ளனர் என்று கூற முடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாடு திரும்ப விருப்பமானவர்களுக்கு ஐ. நா. வுக்கான அகதிகள் உயர் ஸ்தானிகராலயம் சகல உதவிகளையும் வழங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது சுமார் 65 நாடுகளில் சுமார் 1,41,063 இலங்கையர் இடம் பெயர்ந்து வாழ்வதாக யு. என். எச். சி. ஆர். புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இவர்களில் 69 ஆயிரம் பேர் தமிழ் நாட்டில் உள்ள 112 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 32 ஆயிரம் பேர் தமிழ் நாட்டுக்கு வெளியில் உள்ள முகாம்களில் உள்ளனர். இது தவிர பிரான்ஸ், கனடா, பிரித்தானியா, சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா, மலேசியா, இத்தாலி மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் அதிகமான இலங்கையர் வாழ்கின்றனர்.

யுத்தம் முடிவடைந்துள்ளதால் தாய்நாட்டுக்கு திரும்பி வருமாறு அரசாங்கம் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது தெரிந்ததே.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com