Contact us at: sooddram@gmail.com

 

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் யாழ்ப்பாணத் தமிழன் தேசவழமைச் சட்டத்துக்கு உட்பட்டவன்’. எவரும் குடாநாட்டில் காணியை கொள்வனவு செய்யத் தடையில்லை!

தமிழனாக இருந்து யாழ்ப்பாணத்தில் பிறந்த எந்தவொரு நபரும் தேசவழமைச் சட்டத்திற்குள் உள்வாங்கப்படுவரெனக் கூறியுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி ஏ.ஆர்.சுரேந்திரன் யாழ்ப்பாணத்தைச் சேராதவர்களுக்கும் அங்கு காணியை கொள்வனவு செய்வதற்குத் தடை விதிக்கும் எந்தவொரு சட்டமும் அமுலில் இல்லையெனவும் தெரிவித்தார்.

வட மாகாண உள்ளூராட்சி பிரதிநிதிகளுக்கும் உத்தியோகத்தர்களுக்குமான சட்ட அறிவூட்டல் கருத்தரங்கு நேற்று முன்தினம் திங்கட்கிழமை இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றபோது உரை நிகழ்த்துகையிலேயே ஜனாதிபதி சட்டத்தரணி ஏ.ஆர்.சுரேந்திரன் இவ்வாறு தெரிவித்தார். தேசவழமைச் சட்டம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்திய அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்;

தேச வழமை என்பதை தேசத்தின் வழமையென கருத்தில் கொள்ளலாம். தேசவழமைச் சட்டம் சட்டங்களில் மிகவும் முக்கியமானதொரு சட்டமாகும். தேசவழமைச் சட்டம் வாழ்வின் எத்தனையோ சந்தர்ப்பங்களில் எம்மைத் தொட்டுச் செல்கின்றது. குறிப்பாக வடக்கில் அதிலும் யாழ்ப்பாணத்திலுள்ள சட்டங்களில் தேசவழமைச் சட்டம் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது. தேசவழமைச் சட்டம் எவ்வாறு சட்டமாக்கப்பட்டது என்பதனை ஆராய்ந்தால் யாழ்.மக்களால் தொன்று தொட்டு பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஒழுக்க முறைமைகளைத் தொகுத்தே தேசவழமைச் சட்டம் உருவாக்கப்பட்டது.

1707 ஆம் ஆண்டில் தேச வழமை சேவையென உருவாக்கப்பட்ட இந்தச் சட்டம் 1800 களில் சட்டமாக ஒழுங்கமைக்கப்பட்டு தேசவழமைச் சட்டமாக உருப்பெற்றது. மகா தேசாதிபதி ஜோன் சைமன் தேசவழமைச் சட்டம் நாட்டின் வழமையெனக் கூறியுள்ளார்.

இத் தேசவழமைச் சட்டம் எத்தனையோ மாறுதல்களுடன் வாழ்வின் எந்தவொரு அத்தியாயத்தையும் தொட்டுச் செல்கின்றது. 1869 இல் தேசவழமைச் சட்டத்தை கற்றுக் கொண்ட அப்போதைய பிரதம நிதியரசர் அலெக்சான்டரா ஜொனாதன் தேசவழமைச் சட்டத்தை மக்கள் வழங்கும் மரியாதை எனவும் வட பகுதி மக்களால் புனிதமாகப் போற்றப்படும் ஒரு சட்டம் எனவும் அச்சட்டத்தினை மேலைத்தேய நீதிபதிகளும் கற்று அதன் பிரகாரம் தீர்ப்பு வழங்க வேண்டுமெனக் கூறியுள்ளார். இன்று நாம் நாளாந்தம் ஒவ்வொரு விதமான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றோம். ஒருவர் இறந்தால் சொத்துக்களை எவ்வாறு பிரிப்பது, எவருடைய பெயரிற்கு மாற்றுவது என்பன உள்ளிட்ட பல பிரச்சினைகள் உண்டு.

அதேவேளை பிள்ளைகள் அற்ற பெற்றோர் இறந்தால் அந்தச் சொத்துக்களை எவ்வாறு பிரிப்பது என்பன குறித்தும் பல பிரச்சினைகள் எழுவதுண்டு. கணவன் இறக்கும் பட்சத்தில் பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் சரிசமமாக சொத்துக்கள் பிரிக்கப்படவேண்டும். 50 வீதம் மனைவிக்கும் 50 வீதம் பிள்ளைகளுக்கும் வழங்கப்பட வேண்டும். தேடிய தேட்டம், முதுசொம், சீதனம் என சொத்துக்கள் மூன்று வகைப்படும். தேடிய தேட்டம் கணவன், மனைவியின் இல்லற வாழ்வின் போது கொள்வனவு செய்யப்பட்ட சொத்துக்கள். இதற்கு கணவனும் மனைவியும் பங்குதாரர்கள் முதுசொம் பரம்பரை பரம்பரையாக வரும் சொத்துக்கள். மற்றையது சீதனச் சொத்துக்கள்.

தேசவழமைச் சட்டத்தின் அடிப்படையில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சர்வானந்தா கந்தசாமி எதிர் மாணிக்கவாசகர் என்ற வழக்கில் வழங்கிய தீர்ப்பு சிறந்த உதாரணமாகும். இல்லறத்தின் போது மனைவியோ கணவனோ சொத்தினை கொள்வனவு செய்தால் இருவருக்குமே அதில் சம உரிமை உண்டு. கணவன் கொள்வனவு செய்யும் சொத்தில் மனைவிக்கும் மனைவி கொள்வனவு செய்யும் சொத்தில் கணவனுக்கும் சம உரிமை உண்டு.

கணவன் மனைவிக்கு எழுதப்பட்ட ஆதனத்தையோ அல்லது மனைவிக்கு எழுதப்பட்ட ஆதனத்தையோ மனைவியின் அனுமதியின்றி கணவன் அடகு வைக்க முடியும். ஆனால் விற்பனை செய்ய முடியாது. திருமணத்தின் பின்னர் கணவன்,மனைவியின் ஒரு பிரதிநிதியாகவே செயற்படுவார். இதனால் கணவன் சுயேச்சையாக செயற்பட முடியும்.

ஆனால் மனைவிக்கு எழுதியிருந்தாலும் அந்த ஆதனத்தை மனைவியால் மாத்திரம் ஒப்பமிட்டு விற்பனை செய்யவோ அடகு வைக்கவோ முடியாது. பெண்ணியம்,சம உரிமை குறித்து நாம் இன்று பேசிக் கொண்டாலும் திருமணத்தின் பின்னர் பெண்கள் தேசவழமைச் சட்டத்திற்கு உட்பட வேண்டும். அதேவேளை, கணவன் வெளிநாட்டில் இருந்தால் குறித்த ஆதனத்தை விற்பனை செய்வதற்கு எவ்வாறாயினலும் கணவனின் ஒப்பத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். அல்லாதுவிடின் அந்த சொத்துக்களை விற்பனை செய்ய முடியாது.

ஆனால் சில குறித்த சந்தர்ப்பங்களில் மனைவி நீதிமன்றம் சென்று கணவர் ஆதனப்பத்திரத்தில் கைச்சாத்திட சரியான காரணம் எதுவும் இன்றி மறுப்புத் தெரிவிக்கின்றார் என வழக்குத் தாக்கல் செய்தால் வழக்கை விசாரித்த பின்னர் அந்த சொத்தினை விற்பனை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கும். அதேவேளை கணவனும் மனைவியும் இணைந்து ஆதனங்களை அனுபவிக்கின்ற சில விடயங்களில் கட்டுப்பாடுகள் உண்டு. இல்லற வாழ்வின் போது மனைவியால் தனியாக வழக்குத் தாக்கல் செய்ய முடியாது. அதேவேளை மனைவிக்கு எதிராக ஒருவர் வழக்குத் தாக்கல் செய்தால் கணவனும் மனைவி சார்பில் கட்சிக்காரராகின்றார். கணவனும் கட்சி தாரராக இணைக்கப்படவேண்டும்.

அதேவேளை இல்லறத்தின் போது மனைவியோ கணவரோ தமது ஆதனத்தின் அல்லது சொத்தின் பெறுமதியின் 50 வீதத்திற்கும் குறைவானதையே தேடி தேட்ட ஆதனத்தில் பிள்ளைகளுக்கு நன்கொடையாக கொடுக்கலாம்.

அதேவேளை மனைவி இறந்தால் மனைவியின் சொத்தில் 25 வீதம் பிள்ளைகளுக்கும் 25 வீதம் கணவனுக்கும் சென்றடையும். கணவன் இறந்தால் மனைவிக்கு பிள்ளைகள் இல்லாவிடின் 75 வீதமான சொத்துக்கள் வந்தடையும்.

அதேவேளை கணவன் தேசவழமைச் சட்டத்திற்கு உட்படாதவராக இருந்தால் மனைவிக்கு 50 சதவீதமும் கணவனின் சகோதரர்களுக்கு 50 வீதமும் சொத்துக்கள் சென்றடையும்.தமிழனாக இருந்து யாழ்ப்பாணத்தில் பிறந்த எந்தவொரு நபரும் தேசவழமைச் சட்டத்திற்கு உட்பட்டவராவார். குறித்த ஒரு நபர் யாழ்ப்பாணத்தில் பிறந்து வெளிநாட்டில் அந்நாட்டின் குடியுரிமையை பெற்றிருந்தாலும் யாழ்ப்பாணத்துடன் பூர்வீகத் தொடர்புகளை பேணுமிடத்தில் அவர் தேச வழமைச் சட்டத்திற்கு உட்பட்வராவார்.

அதேவேளை யாழ்ப்பாணத்திலுள்ள காணிகளை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மக்களுக்கு தான் விற்பனை செய்ய வேண்டுமென எந்தச் சட்டமும் கூறவில்லை. சொந்தக் காணியாக இருந்தால் ஏனைய பங்குதாரர்கள் கொள்வனவு செய்யாதவிடத்து அக்காணியை பிறருக்கு விற்பனை செய்ய முடியும். சிறுபான்மையினர் தமது கலாசார மரபுகளை பேணிப் பாதுகாத்து வளர்த்துக் கொள்வதற்கே தேசவழமைச் சட்டம் வழி வகுக்கின்றதென வெளிநாட்டவர்களால் கூறப்படுகின்றது எனத் தெரிவித்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com