Contact us at: sooddram@gmail.com

 

மியன்மாரில் தொடரும் கலவரம்

22,000 க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு: 4000 க்கும் அதிகமான வீடுகள் தரைமட்டம்

மியன்மாரில் மீண்டும் ஏற்பட்டுள்ள இனக் கலவரத்தில் 22,000 க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளதோடு 4000 க்கும் அதிகமான வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக ஐ.நா. அறிக்கை கூறியுள்ளது. இந்த புதிய கலவரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எமக்கு கிடைத்த புதிய தரவுகளின்படி 22,587 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அதேபோன்று 4,665 வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. மியன்மார் அரசு ஐ.நாவுக்கு வழங்கிய தரவில் இது குறிப்பிடப்பட்டுள்ளதுஎன்று யான்கோனுக்கான ஐ.நா. தூதுவர் அஷோக் நிகம் ஏ. எப். பி. செய்திச் சேவைக்கு இந்த தகவலை அளித்துள்ளார். இதில் வீடுகளை இழந்து இடம்பெயர்ந்தோரில் 21,700 பேர் முஸ்லிம்களாவர் என அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஜூனில் ஏற்பட்ட இனக் கலவரத்தை தொடர்ந்து மேற்கு மியன்மாரில் ரகினே பெளத்தர்களுக்கும் பங்காளி மொழி பேசும் ரொஹிங்கியா முஸ்லிம்களுக்கும் இடையிலான பதற்ற நிலை நீடித்து வருகிறது. எற்கனவே ரகினெ தலைநகர் சித்வாவிலுள்ள தற்காலிக முகாம்களில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாக ரகினெ மாநில அரச பேச்சாளர் வின் மியங் கடந்த சனிக்கிழமை தெரிவித்திருந்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இரு தரப்புக்கும் இடையிலான புதிய கலவரம் கடந்த 21 ஆம் திகதி தொடக்கம் நீடித்து வருகிறது. தற்போதைய கலவரத்தில் 112 பேருக்கும் மேல் கொல்லப்பட்டிருப்பதாக மியன்மார் அரசு கூறியிருந்தது.

செய்மதி படம் அம்பலம்

இதனிடையே மியன்மாரில் இருக்கும் ரொஹிங்கியா முஸ்லிம்களின் பாதுகாப்பு குறித்து மனித உரிமை அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது. கலவரம் இடம்பெற்ற ஒருசில பகுதிகள் எரிந்து சாம்பலாகியுள்ள செய்மதி படங்கள் வெளியானதைத் தொடர்ந்தே மனித உரிமை அமைப்புகள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

நியூயோர்க்கை மையமாக கொண்டு செயற்படும் மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள செய்மதி படத்தின் மூலம் கலவரத்தால் மியன்மாரின் பல பகுதிகளும் தரைமட்டமாகியுள்ளது அம்பலமானது. இதில் ரகினெ மாநிலத்தில் ரொஹிங்கியா முஸ்லிம்கள் பெரும்பான் மையாக வசிக்கும் கியவ்பியு பகுதி முற்றாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இதுதவிர மோதல்கள் இடம்பெற்ற பல பகுதிகளிலும் கட்டடங்கள் எரிந்து சம்பலாகியுள்ளது அந்த செய்மதி படத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

கியவ்பியு பகுதியில் 811 க்கும் மேற்பட்ட படகு வீடுகள், கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. கடந்த 24 ஆம் திகதி இடம்பெற்ற மோதல்களிலேயே இந்த பகுதி தரைமட்டமாகியுள்ளது

இதனைத் தொடர்ந்து அங்கு வசித்துவந்த ரொஹிங்கிக்கள் கடல் மார்க்கமாக மாநில தலைநகர் சித்வெக்கு இடம்பெயர்ந் துள்ளனர் என்று மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

இதுதவிர ரொஹிங்கிக்கள் வசிக்கும் அரகான் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிரிவுக்கான துணை இயக்குனர் பிலிப் ரொபட்சன் வலியுறுத்தியுள்ளார்.

மியன்மார் அரச தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில் கடந்த 21 மற்றும் 25 ஆம் திகதிகளில் ஏற்பட்ட வன்முறைகளால் 2,818 வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளது. இந்த வன்முறைகளால் நாட்டில் ஜனநாயகத்தை கொண்டுவரும் மியன்மாரின் முயற்சிக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக ஐ. நா. கூறியுள்ளது. சமூக ஒழுங்கு பாதிக்கப்பட்டிருப்பதோடு அரசின் ஜனநாயகத்தை கொண்டுவரும் செயற்பாடுகள் இக்கட்டுக்குள்ளாகியுள்ளதுஎன்று ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

எனினும் மியன்மாரில் தற்போது ஏற்பட்டுள்ள இனக்கலவரத்திற்கான காரணம் குறித்து தெளிவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட இனக்கலவரத்தில் 90 பேர் கொல்லப்பட்டதோடு 3000 வீடுகள் முற்றாக சேதமாக்கப்பட்டன. பெளத்த பெண் ஒருவரை கற்பழித்து கொன்றதாக மூன்று முஸ்லிம்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதனையடுத்தே கலவரம் மூண்டது. இதனால் இன்றும் 75,000 க்கும் மேற்பட்டோர் தற்காலிக முகாம்களிலேயே வசித்து வருகின்றனர்.

எனினும் இரு இனக் குழுக்களுக்கும் இடையிலான பதற்ற நிலையை தணிக்க அரசு எந்த முன்னெடுப்பையும் மேற்கொள்ள வில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்து ள்ளன.

இதனிடையே தற்போதைய கலவரங்கள் காரணமாக மியன்மாரின் இஸ்லாமிய அமைப்புகள் அனைத்தும் பெருநாள் கொண்டாட்டங்களை ரத்துச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மியன்மாரில் வசித்துவரும் ஆயிரக் கணக்கான ரொஹிங்கிய முஸ்லிம்கள் சட்டவிரோத குடியேற்றவாசிகளாகவே அந்நாட்டு அரசு கருதி வருகிறது. இவர்கள் பங்களாதேஷிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என மியன்மார் அரசு கூறுகிறது.

இந்நிலையில் மியன்மாரில் ஏற்பட் டுள்ள இனக் கலவரம் நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவும் அபாயம் இருப்பதாக அங்கிருக்கும் பி. பி. சி. செய்தியாளர் கூறியுள்ளார். எனினும் இந்த கலவரத்தை ஒட்டி பங்களாதேஷ் தமது எல்லைப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

மியன்மாரில் இருந்து தப்பிவரும் ரொஹிங்கியா முஸ்லிம்களை தடுத்துநிறுத்தும் முயற்சியில் பங்களாதேஷ் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். பங்களாதேஷின் இந்த செயலுக்கு ஐ. நா. ஏற்கனவே கண்டனம் வெளியிட் டிருந்தது.

இந்நிலையில் மியன்மார் ஆற்றினூடாக கடந்த ஒரு சில தினங்களில் பங்களா தேஷக்குள் ஊடுருவ முயன்ற ரொஹிங்கிய முஸ்லிம்களை ஏற்றிவந்த 52 படகுகளை பங்களாதேஷ் எல்லைப் பாதுகாப்பு படையினர் திருப்பி அனுப்பியிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com