Contact us at: sooddram@gmail.com

 

இந்திய அரசின் உதவிகள் இலங்கை அரசின் ஊடாகவே வழங்கப்படும் - நிருபமா ராவ்

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இந்தியா அமைத்துக் கொடுக்கவுள்ள 50 ஆயிரம் வீடுகளில் முன்னோடித் திட்டமாக வடக்கில் ஆயிரம் வீடுகள் அமைக்கப்படவுள்ளதாகவும், இதற்கான மாதிரி வீட்டு வடிவம் முடிவுசெய்யப்பட்டு வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இந்திய வெளியுறவு செயலர் நிருபமா ராவ் வவுனியாவில் தெரிவித்துள்ளார். வவுனியா மெனிக்பாம் முகாமுக்கு விஜயம் செய்த நிருபமாராவ் தலைமையிலான இந்தியத் தூதுக்குழுவினர், திருமுறிகண்டி பகுதியில் இன்னும் மீள்குடியேற்றம் செய் யப்படாமல் உள்ள பொதுமக்களின் பிரதிநிதிகள் வன்னிமாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் ஆகியோரைச் சந்தித்தன் பின்னர் வவுனியா செயலகத்தில் வவுனியா அரசாங்க அதிபருடன் கலந்துரையாடியதன் பின்பு மகிழங்குளம் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளையும் பார்வையிட்டனர்.

அங்கிருந்து யாழ்ப்பாணத்திற்குப் புறப்படுவதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிருபமாராவ் இந்தியா இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்கும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள வடபகுதியின் பல்வேறு வேலைத்திட்டங்களுக்கும் உதவுவதற்கு முன்வந்துள்ளதாகவும் இந்த உதவிகள் யாவும் இலங்கை அரசாங்கத்தின் ஊடாகவே செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தெரிவித்ததாவது: நாங்கள் மனிக்பாம் முகாமுக்குச் சென்று அங்குள்ள பொதுமக்கள் சிலரைச் சந்தித்து அவர்களுடன் பேசினோம். எங்களுடன் வடமாகாண ஆளுனர் சந்திரசிறியும் வந்திருநதார். மீள்குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து அவர் பல தகவல்களைத் தெரிவித்தார். இந்தப் பிரதேசத்திற்குப் பொறுப்பான இராணுவ உயரதிகாரியும் இங்கு இடம்பெறுகின்ற மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொர்பான பல தகவல்களைத் தெரிவித்தார்.

சுமார் 2 லட்சத்து 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளுரில் இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த மனிக்பாம் முகாமில் இப்போது 28 ஆயிரம் பேர் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கு மிகுந்த ஆர்வமாக இருக்கின்றார்கள். இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்கும் அவர்களது அழிந்த வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கும், வடபகுதியின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தவும் இந்திய அரசாங்கம் உதவி செய்வதற்கு முன்வந்துள்ளது.

இந்தியா உறுதியளித்துள்ள 50 ஆயிரம் வீடுகள் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அமைக்கப்படவுள்ளன. இவற்றில் முன்னோடித் திட்டமாக வடக்கில் ஆயிரம் வீடுகள் அமைக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கான மாதிரி வீட்டு வடிவத்தை இலங்கை அராசங்கத்துடன் இணைந்து இந்தியா முடிவுசெய்துள்ளது. இதேவேளைஇ மதவாச்சியில் இருந்து மன்னார் வரையிலான ரயில் பாதையையும்இ ஓமந்தையில் இருந்து பளை வரையிலான ரயில் பாதையையும் அமைத்துக் கொடுப்பதற்கு இந்தியா முன்வந்துள்ளது. இடம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக இந்தியா வழங்குகின்ற அனைத்து உதவிகளும் இலங்கை அரசாங்கத்தின் ஊடாகவே வழங்கப்படும்.

வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனையும், திருமுறிகண்டி பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்களையும் சந்தித்துப் பேசினோம். திருமுறிகண்டி பகுதி மக்கள் தாங்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதையே விரும்புவதாக எங்களிடம் கூறினார்கள். இதற்கான உதவிகளைச் செய்யுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். இதையே நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் கேட்டார்.

திருமுறிகண்டி இந்துபுரம் பகுதி மக்கள் பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்த இடத்திலேயே மீண்டும் வாழ விரும்புவதாகவும், அங்கு பல வான்பயிர்களை வைத்து சிறப்பாக வாழ்ந்து வந்ததாகவும், மீண்டும் அங்கு சென்று மீள்குடியேறுவதில் தமக்குள்ள குறைகளையும் தெரிவித்து இதனைப் போக்குவதற்கு உதவுமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டார்கள் என இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமாராவ் தெரிவித்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com