Contact us at: sooddram@gmail.com

 

இந்திய வம்சாவளி மக்களின் காணிகள் திரும்பக் கையளிக்கப்படும : நிருபமா ராவ்

இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட இடம்பெயர்ந்த மக்களுக்கு உரித்தான வவுனியாவிலுள்ள காணிகளை இராணுவத்தினர் மீளக்கையளிப்பர் என இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் உறுதிமொழியளித்துள்ளதாக நிருபமா ராவ் சுட்டிக்காட்டினார். அடிப்படையில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட இடம்பெயர்ந்த மக்கள் 1977 ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தின் பின்னர் வவுனியாவில் மீளக்குடியமர்த்தப்பட்டவர்களாவர்.

அவர்கள் தமது நிலத்தில் விவசாயநடவடிக்கையில் ஈடுபட்டுவந்தனர் ஆனால் யுத்தத்தின் பின்னர் அவர்கள் மெனிக் பாமிற்கு இடம்பெயர நேர்ந்தத . அங்கு சுமார் 1000 அங்கத்தவர்களை உள்ளடக்கிய 150 குடும்பங்கள் உள்ளன. அவர்கள் வாழ்விடங்களுக்கு திரும்பிச்செல்வதில் சில கஷ்டங்களை எதிர்;கொண்டுள்ளனர். தமக்குரிய காணிகளை இராணுவத்தினர .

கையகப்படுத்தியுள்ளமையால் தாம் வாழ்ந்த பகுதிகளுக்கு மீண்டும் திரும்பிச்செல்ல முடியாத சிக்கல் நிலை காணப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். என செய்தியாளர்களிடம் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் குறிப்பிட்டார்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் இராணுவத்தினர் இப்பகுதிகளுக்குள் நகர்ந்துள்ளதால் மக்களுக்கு சொந்தமான காணிகளை விட்டு;க்கொடுக்கவோ அங்கு அனுமதிக்கவோ இல்லை எனத் தெரிவித்த திருபமா ராவ் அந்தவகையில் இவ்விடயத்தை இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்கு எடுத்துச்சென்றதாக குறிப்பிட்டார்

இந்த விடயத்தை நான் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஸவிடம் எடுத்துரைத்தேன். இவ்விடயம் தொடர்பில் ஏற்கனவே கவனம் செலுத்திவருவதாக அவர் என்னிடம் உறுதியளித்தார் இவ்விடயத்திற்கு தீர்வுகாணப்படும் எனவும் மக்கள் திரும்பிச்செல்வார்கள் எனவும் அவர் எதிர்பார்க்கின்றார். என இந்திய வெளிவிவகாரச் செயலாளர் செய்தியாளர்களிடம் கூறினார்.

மூன்று நாள் விஜயத்தை முடித்துக்கொண்டு செயதியாளர்களிடம் கருத்துவெளியிட்ட நிருபமா ராவ் தாம் சுமார் ஒன்றரை நாட்கள் காலப்பகுதியில் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் சுமார் 1100 கிலோமீற்றர் பயணம் செய்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இந்த விஜயத்தின் போது இந்திய வெளிவிவகார செயலாளர் வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் கிளிநொச்சி ஓமந்தை யாழ்ப்பாணம் முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். ஒட்டுமொத்தமாக நோக்குகையில் இது மிகவும் பயனுள்ள விஜயமாகும். நான் பெருமளவு இடங்களுக்கு செல்ல முடிந்ததுடன் அரசாங்கம் எதிர்க்கட்சிகள் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களிலுள்ள மக்கள் என பெரும் எண்ணிக்கையாளவர்களை சந்தித்தேன். எனக்குறிப்பிட்ட அவர் சிறுபான்மையினர் மத்தியிலுள்ள அரசியல்கட்சிகளுடன் கலந்துரையாட முடிந்ததாகவும் இது மிகவும் ஆக்கப+ர்வமான விஜயம் எனத் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கிற்கான தமது விஜயத்தின் போது சிறப்பான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டிருந்ததாக ராவ் பாராட்டுத்தெரிவித்ததார்.

நேற்று முன்தினம் இந்திய உயர்ஸ்தானிகள் அசோக் கே காந்தா அளித்த இராப்போசன விருந்;துபசாரத்தின் பஸில் ராஜபக்ஸ கோத்தபாய ராஜபக்ஸ உட்பட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலருடன் இந்திய வெளிவிவகாரச் செயலாளார் கலந்துரையாடியிருந்தார்.

தனது விஜயத்தின் போது தமிழ் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களைச் சந்தித்ததற்கு அப்பால் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்ததாக நிருபமா ராவ் தெரிவித்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com