Contact us at: sooddram@gmail.com

 

அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஏகோபித்த ஆதரவு

அரசியலமைப்பு திருத்த யோசனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுப் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற் றப்படுமென அரசாங்க வட்டாரங்கள் உறுதியாகத் தெரிவித்தன. இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்னமும் தெளிவான நிலைப்பாட்டை எடுக்காத போதிலும், அவற்றின் பெரும் பாலான உறுப்பினர்கள் அரசியலமைப்புத் திருத்தத்தை ஆதரிக்க தீர்மானித்துள்ளதாக நம்பகரமாகத் தெரிய வருகின்றது. இந்நிலையில் எதிர்வரும் எட்டாந் திகதி இந்தத் திருத்த யோசனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் பொழுதும், அதனை எதிர்த்து விவாதிக்கும் திறன்கூட எதிர்க் கட்சிகளுக்குக் கிடையாது என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கும் கூடுதலான ஆதரவுடன் அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்படும் என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள் கூறினர்.

அரசியலமைப்புத் திருத்தத்தை எதிர்க் கப்போவதாக ஆரம்பத்தில் பிரதான எதிர்க்கட்சியும் ஜே.வி.பியும் தெரிவித்திரு ந்தன. எனினும், திருத்தத்தை மேற்கொள் வதால் தமது கட்சிக்குப் பாதிப்பு இல்லையென்றும் அதனால், அதனை ஆதரித்து வாக்களிக்கப்போவதாகவும் ஐ.தே.க வின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பகிரங்கமாகவே அறிவித்துவிட்டனர். இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப் பலை பிசுபிசுத்துப் போய்விட்டது. ஜே.வி.பி எதனைக் கூறினாலும், அதன் கருத்துகளை ஏற்கும் நிலையில் மக்கள் இல்லை என்பதால், அரசியல் ரீதியாக ஜே.வி.பி அநாதரவான ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டதாகவும் அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சினை விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்தியா சென்றிருப்பது, அரசியலமைப்புக்கு எதிரான நிலைப் பாட்டிலிருந்த கட்சி உறுப்பினர்களையும் அரசை ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளி யிருப்பதாக சிறிகொத்த வட்டாரங்கள் மூலம் தெரிய வருகின்றது. இந்நிலையில், எதிர்வரும் எட்டாந் திகதி பாராளுமன்றத்தில் பரபரப்பான திருப்பங்கள் ஏற்படலாமென எதிர்பார்க் கப்படுகிறது.

புதிய அரசியலமைப்புத் திருத்தத்தின்படி ஜனாதிபதி பதவியை இரண்டு தட வைகளுக்கு வகிக்கும் ஒருவர் அதனையடுத்து எத்தனை தடவையும் போட்டியிட முடியும். இரண்டு தடவை பதவி வகித்தவர் மூன்றாவது தடவை போட்டியிடுவதைத் தடை செய்யும் சரத்தே நீக்கப்பட்டிருக்கிறது. மேலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களைத் தொகுதிவாரியும் விகிதாசார முறையும் கலந்ததாக மேற்கொள்ளவும் வழிபிறக்கும்.

இந்தத் திருத்தங்களை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதை, அரசாங்கத்துடன் இணைந்துள்ள இடதுசாரிகள் ஏற்றுக் கொள்வதைத் தவிர அவர்களுக்கு வேறு மார்க்கம் இருக்காது. நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல நிலையான அரசு தொடர வேண்டும் என அரச தரப்பினர் மக்கள் மத்தியில் வலுவான ஆதாரங்களை முன்வைக்கும்போது, அதற்கு மாறான கருத்தியலை மக்கள் மத்தியில் கட்டியெழுப்பும் அரசியல் செல்வாக்கை இடதுசாரிகள் மட்டுமன்றி பொதுவாக எதிர்க் கட்சிகள் இழந்து விட்டதாகவே அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

இந்த நிலையில், கூடி ஆராயப்போவதாகத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வழமையைப் போன்றே எதிர்க்கப்போவதாக அறிவிப்பை விடுக்கும் என்பதிலும் ஆச்சரியப்படுவதற்கில்லை யென்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஏற்கனவே மூன்றிலிரண்டு பெரும்பான்மையை அரசாங்கம் அண்மித்துள்ள நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரபா கணேசன், ப. திகாம்பரம், அப்துல் காதர் ஆகியோரின் அரச தரப்பு ஆதரவும், முஸ்லிம் காங்கிரஸின் எதிர்பார்ப்பும், ஐ.தே.க வின் லக்ஷ்மன் செனவிரட்ன, ஏர்ள் குணசேகர, மனுஷ நாணயக்கார ஆகியோரின் அறிவிப்பும் அரசமைப்புத் திருத்தத்திற்கு அரசாங்கத்திற்கான உறுதியான பக்கபலம் என்றும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com