Contact us at: sooddram@gmail.com

 

தி.மு.க - காங்கிரஸ் கூட்டில் வெளித்தெரியாத விரிசல்கள்

தமிழ்நாடு சட்ட சபைத் தேர்தல் அடுத்த வருடம் மே மாதம் நடைபெறவிருக்கின்றது. இதற்கான கூட்டணி முயற்சிகள் இப்போதே ஆரம்பமாகிவிட்டன. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் முன்னர் இடம்பெற்ற கட்சிகளுள் பாட்டாளி மக்கள் கட்சி அதிலிருந்து வெளியேறிவிட்டது. டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி இப்போது இக்கூட்டணியில் சேர்ந்திருக்கின்றது.

திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் கழகமும் காங்கிரஸ் கட்சியும் பிரதான கட்சிகளாக விளங்குகின்றன. ஏனையவை மிகச் சிறிய கட்சிகள். இவ்விரு கட்சிகளுக்குமிடையே நெருக்கமான நல்லுறவு இருப்பதாக வெளிப்பார்வைக்குத் தோன்றினாலும் வெளியே தெரியாமல் பல விரிசல்கள்.

காங்கிரஸ் கட்சி தனியாக அல்லது தனது தலைமையில் ஆட்சி அமைக்கும் இலக்குடனேயே செயற்படுகின்றது. காமராஜர் ஆட்சியை மீண்டும் அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் அடிக்கடி கூறுவது அவர்களுடைய நோக்கத்தை வெளிப்படுத்துகின்றது. காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்று இளங்கோவன் போன்ற தலைவர்கள் வெளிப்படையாகவே சொல்கின்றார்கள். இளங்கோவன் அத்தோடு நிற்கவில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்தை விமர்சனம் செய்கின்றார்.

தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜயகாந்த் கருணாநிதிக்கு எதிரானவர். அவரது பிறந்த நாளன்று இளங்கோவன் காலையிலேயே வீட்டுக்குச் சென்று வாழ்த்துத் தெரிவித்ததோடு தமிழ்நாட்டில் விஜயகாந்த் பெரிய தலைவராக வருவார் என்றும் கூறினார். இளங்கோவன் திட்டமிட்டுச் செய்தாரோ என்னவோ இச் செயல் நிச்சயமாகக் கருணாநிதியிடம் எரிச்சலைத் தோற்றுவித்திருக்கும்.

திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு அறுதிப் பெரும்பான்மை இல்லை. காங்கிரஸ் கட்சியின் தயவிலேயே அதன் ஆட்சி தங்கியிருக்கின்றது. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் காங்கிரஸ் கட்சி பல தடவைகள் ஆட்சியில் பங்கு கோரியது. கருணாநிதிக்கு இது பெரிய தலையிடி. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இணைவதற்கு ஜூன் மாதத்தில் பாட்டாளி மக்கள் கட்சி முன்வந்தபோது காங்கிரஸ் தரும் தலையிடிக்கு நல்ல மருந்து என்று கலைஞர் மகிழ்ச்சி அடைந்திருப்பார். பாட்டாளி மக்கள் கட்சிக்கு இடங்கள் ஒதுக்க வேண்டும் எனக் கூறிக் காங்கிரஸ் கட்சியின் தொகுதிகளைக் குறைக்கலாம் என்றும் தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கேட்டால் பாட்டாளி மக்கள் கட்சியைக் காட்டித் தவிர்க்கலாம் என்றும் கலைஞர் நினைத்திருப்பார். அன்புமணி ராமதாஸுக்கு மாநிலங்களவையில் உறுப்புரிமை வேண்டும் என்பதில் பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு அவசரம். சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் ஏற்படும் வெற்றிடத்துக்கு நியமிக்கலாம் என்ற கலைஞரின் உறுதிமொழி அவர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை. இணைவு முயற்சி இடையில் முறிந்தது.

ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையைக் காங்கிரஸ் கட்சி இப்போதெல்லாம் முன்னர் போல வலியுறுத்துவதில்லை. மத்திய தலைமையின் ஆலோசனையாக இருக்கலாம். மத்தியில் ஆட்சியைக் கொண்டு நடத்துவதற்குக் கருணாநிதியின் ஆதரவு தேவை. அதனால் அவரை அனுசரித்துப் போகவேண்டும் என்று மத்திய தலைமை கருதுவதில் நியாயம் உண்டு. எனினும் தமிழ் நாட்டில் ஆட்சியதிகார நோக்கம் காங்கிரஸ் மத்திய தலைமைக்கு இல்லை எனக்கூற முடியாது. ராகுல் காந்தி பல தடவைகள் தமிழ் நாட்டுக்கு வந்து சென்றிருக்கின்றார். ஒரு தடவையாவது மரியாதைக்காகக் கருணாநிதியைச் சென்று பார்க்கவில்லை. காங்கிரஸ் மத்திய தலைமையின் மனோநிலையை இதிலிருந்து விளங்கிக்கொள்ளலாம்.

கலைஞருக்குக் காங்கிரஸ் கட்சி தொடர்பான தலையிடி ஒருபுறம். அதனிலும் கூடுதலாக இருக்கின்றது கட்சிக்குள் குடும்ப உறுப்பினர்கள் தொடர்பான தலையிடி. கனிமொழியை மத்திய அமைச்சராக்க வேண்டும் என்பது கருணாநிதியின் பிரதான விருப்பம். தனக்கு விசுவாசமான ஆங்கில அறிவுள்ள ஒருவர் மத்தியில் அமைச்சராக இருக்கவேண்டியது அவரைப் பொறுத்த வரையில் அவசியமான தேவை. முன்னர் முரசொலி மாறன் இருந்தார். பின்னர் பேரப்பிள்ளை தயாநிதி மாறன். இப்போது மாறன் சகோதரர்களை அணைத்துக்கொண்டுள்ள போதிலும் முன்னைய நம்பிக்கை இல்லை. ஒருமுறை முட்டிய எருது இனிமேல் முட்டாது என்று நம்ப அவர் தயாராக இல்லை.

விசுவாசமான குடும்ப உறுப்பினர் ஒருவர் மத்திய அமைச்சராக இருக்க வேண்டும் என்பதில் கலைஞர் உறுதியாக உள்ளார். அழகிரி இப்போது அமைச்சராக உள்ள போதிலும் அவருக்கு ஆங்கிலம் தெரியாதது ஒரு பெரிய பின்னடைவு. கனிமொழியே கலைஞரின் எதிர்பார்ப்புக்குப் பொருத்தமானவர். அழகிரி அமைச்சராக இருக்கும்போதே கனிமொழிக்கும் அமைச்சுப் பொறுப்பைப் பெறுவது நடைமுறைச் சாத்தியமானதல்ல. அழகிரியை மாநில அரசியலுக்குக் கொண்டு வருவதிலும் சிக்கல் இருக்கின்றது. ஸ்ராலினை முதலமைச்சராக்குவதற்கு அழகிரி ஒருபோதும் சம்மதிக்கப் போவதில்லை. பிரச்சினைகளை உருவாக் குவார். கலைஞரைப் பொறுத்தவரையில் இது தீர்க்க முடியாத சிக்கல்.

காங்கிரஸ் கட்சிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையிலான பனிப்போரைத் தனக் குச் சாதகமாகப் பயன்படுத்துவ தற்குப் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் முயற்சிக் கின்றார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி வர வேண்டும் என்று அவர் அண்மை யில் விடுத்த அறிக்கை காங்கிரஸ் கட்சியின் தலைமையில் மூன்றாவது அணி உருவாக வேண்டும் என்றும் அதில் பாட்டாளி மக்கள் கட்சி இணைய வேண்டும் என்றும் அவர் விரும்புவதைப் பிரதி பலிக்கின்றது. இது இப்போதைக்கு நடக்கக் கூடியதல்ல.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com