Contact us at: sooddram@gmail.com

 

மியன்மார் இராணுவ ஆட்சியுடன் இந்தியாவின் நல்லுறவு

தொண்ணூறுகளில் மியன்மார் ஜனநாயக இயக்கத்தினதும் அந்த இயக்கத்தின் தலைவியான ஆங் சான் சூ கீயினதும் வலுவான ஆதரவாளராக இந்தியா விளங்கியது. இந்தியாவின் அதிஉயர் சிவிலியன் விருதான ஜயஹர்லால் நேரு விருது 1993ம் ஆண்டு ஆங் சான் சூ கீக்கு வழங்கப்பட்டதை இங்கு குறிப்பிடலாம். இப்போது காட்சி மாறுகின்றது. மியன்மார் ஜனநாயக இயக்கத்தை ஆதரிக்கும் நிலையில் இந்தியா இல்லை. இரு நாடுகளினதும் அரசாங்கங்களுக்கு இடையிலான உறவு இப்போது நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றது.

இன்றைய இந்திய அரசாங்கத்துக்கும் அமெரிக்காவுக்குமிடையே நெருக்கமான நல்லுறவு நிலவுகின்றது. அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியன் நாடுகளும் மியன்மார் ஜனநாயக இயக்கத்துடனான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் மியன்மார் மீது பொருளாதாரத் தடை விதித்திருக்கின்றன. அமெரிக் காவுடனான உறவைப் பேணுகின்ற அதேவேளை மியன்மார் பற்றிய அமெரிக்க நிலைப்பாட்டுக்கு முரணான வகையிலேயே இந்தியா செயற்படுகின்றது.

இந்தியாவின் உள்துறை அமைச்சுச் செயலாளர் ஜீ.கே. பிள்ளை ஜனவரி மாதத்தில் மியன்மாருக்கு விஜயம் மேற்கொண்டார். மியன்மார் இராணுவ ஆட்சித் தலைவர் ஜெனரல் தான் ஷுவே (THAN SHWE) ஜுலை மாத இறுதி வாரத்தில் இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது இரு நாடுகளுக்கு மிடையே பல ஒப்பந்தங்கள் கைச் சாத்தாகின.

கைதிகள் மற்றும் தேடப் படுபவர்கள் பரிமாற்ற ஒப்பந்தமும் இதில் அடங்கும். இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் பிரிவினை கோரிச் சில அமைப்புகள் கெரில்லா போராட்டத்தில் ஈடுபடுகின்றன.

இந்த அமைப்புகளைச் சேர்ந்த பலர் மியன்மாரின் எல்லைப் பகுதிகளைத் தங்கள் மறைவிடமாகக் கொண்டிருக்கின்ற னர். சிலர் பல்வேறு குற்றங்களுக்காக மியன்மார் சிறைகளில் உள்ளனர். இந்த ஒப்பந்தத்தின் கீழ் இவர்களைக் கையளிக்குமாறு இந்தியா கோரலாம்.

மியன்மார் ஆட்சியாளர்களுடன் நல்லுறவைப் பேணுவதற்கு இந்தியா முன்வந்ததற்கு இரண்டு விடயங்கள் பிரதான காரணமாக இருக்கின்றன. ஒன்று மியன்மாரில் சீனாவின் செல்வாக்கு. மற்றது வடகிழக்கு மாநிலங்களில் பிரிவினைப் போராட்டம்.

ஆரம்ப காலம் தொட்டு மியன்மாரின் தற்போதைய இராணுவ ஆட்சியாளருக்குச் சீனா ஆதரவளித்து வருகின்றது. இரு நாடுகளுக்குமிடையே வர்த்தக உறவு வளர்ந்து வருவதுடன் மியன்மாரில் சீனாவின் முதலீடுகளும் அதிகரித்துள்ளன. இந்த வளர்ச்சிப் போக்கு இந்தியாவின் பிராந்திய நோக்கத்துக்கு உவப்பானதாக இல்லை.

கிழக்கை நோக்கல்’ (Looking East) என்ற இந்தியாவின் கொள்கைக்குச் சீனா மியன்மாரில் காலூன்றுவது தடங்கலாகவே இருக்கும். பிராந்திய ஆதிக்கத்தை இலக்காகக் கொண்டு, கிழக்கேயுள்ள நாடுகளைத் தனது செல்வாக்குக்குள் கொண்டுவர விரும்பும் இந்தியா மியன்மாரில் சீனா ஏகபோகம் அனுபவிப்பதற்கு இடமளிக்கத் தயாராக இல்லை.

மேலும், அண்டை நாடுகளில் சீனாவின் செல்வாக்கு வலுவடைவது தனது பாதுப்புக்கு அச் சுறுத்தலாக இருக்குமென்பது இந்தியாவின் நிலைப்பாடு. மியன்மாரில் சீனாவுக்கு எவ்விதத்திலும் குறைவற்ற நிலையைப் பெறும் நோக்கத்தில் மியன்மார் அரசாங்கத்துக்குப் பல பொருளாதார உதவிகளை வழங்குவதற்கும் அங்கு முதலீடுகளைச் செய்வதற்கும் இந்தியா முன்வந்துள்ளது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்க ளில் பிரிவினை கோருபவர்கள் நீண்டகாலமாகக் கெரில்லா போரில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்தியாவுக்கும் மியன்மாருக்கும் இடையிலான 1640 கிலோ மீற்றர் நீளமான எல்லை வடகிழக்கு மாநிலங்களையே அண்டியிருக்கின்றது.

வடகிழக்கு மாநிலங்களில் தாக்குதல் நடத்தும் கெரில்லாப் போராளிகள் அடிக்கடி மியன்மார் பிரதேசத் துக்குள் தப்பிச் சென்று மறைந்து விடு கின்றனர். சில தாக்குதல்களும் அங்கிருந்தே திட்டமிடப்படுகின்றன. மியன்மாருடன் நல்லுறவை வளர்ப்பது வட கிழக்குப் பிரிவினைவாதிகளைக் கட்டுப்படுத்துவதற்குச் சாதகமான சூழ்நிலையைத் தோற்றுவிக்கும்.

மியன்மார் ஜனநாயக இயக்கத்துக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக் கொண்டு, பாதுகாப்பு மற்றும் பிராந்திய அதிகாரம் போன்ற காரணங்களுக்காக மியன்மார் இராணுவ ஆட்சியாளர்களுடன் நட்புறவை வளர்க்கும் நடைமுறை பார திய ஜனதா கட்சியின் ஆட்சிக் காலத்திலேயே இந்தியாவில் ஆரம்பித்து விட்டது.

பாரதிய ஜனதா கட்சி அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் மியன்மார் ஜனநாயக இயக்கத்தின் தீவிர ஆதரவாளர். அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலம் மியன்மாரிலிருந்து வெளியேற்றப் பட்டவர்களான ஜனநாயக இயக்க மாணவர்களின் உத்தியோகப் பற்றற்ற தலைமையகமாக விளங்கியது.

இந்தக் காலகட்டத்திலேயே அன்றைய வெளிவிவகார அமைச்சர் ஜஷ்வந்த் சிங் 2001 ஆம் ஆண்டிலும் 2002 ஆம் ஆண்டிலும் மியன் மாருக்கு விஜயம் மேற் கொண்டு இராணுவ ஆட் சியாளர்களுடனான நல்லுறவுக்கு வித்திட்டார். பாதுகாப்பு அமைச்சரின் நிலைப்பாட்டை வாஜ்பாய் அரசாங்கம் பொருட்படுத்தவில்லை.

இந்தியா அயல் நாடுகளுக்கு ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்ய முடியாது. அந்நாடுகளின் அரசாங்கங்கள் எவ்வாறாக உள்ளனவோ அந்த நிலையிலேயே அவற்றுடன் தொட ர்புகளைப் பேண வேண் டும்”. இது இந்தியாவின் இன்றைய நிதியமைச்சர் பிரனாப் முகர்ஜி வெளி விவகார அமைச்சராக 2006 ஆம் ஆண்டு கூறிய கூற்று, இந்தியாவின் நிலைப்பாட்டை இக்கூற்று சரியாக வெளிப்படுத்து கின்றது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com