Contact us at: sooddram@gmail.com

 

மனித உரிமைகளை பாதுகாப்பதில் இலங்கை உலக நாடுகளுக்கு முன்மாதிரி - ஜனாதிபதி

மனித உரிமை மீறல் தொடர்பில் இலங்கைக்கு எதிராக குரல் எழுப்பும் நாடுகளே கடந்த காலங்களில் பயங்கரவாதிகளைப் பாதுகாத்து அவர்களின் நிதி திரட்டல் நடவடிக்கைகளுக்கும் உறுதுணையாக இருந்ததாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மனித உரிமையைப் பாதுகாப்பது எமது பொறுப்பு என தெரிவித்த ஜனாதிபதி, மனித உரிமையைப் பாதுகாப் பதில் இலங்கை உலக நாடுகளுக்கு இணையாகச் செயற்படுவதாகவும் தெரிவித்தார். பலமுள்ள பல நாடுகள் பயங்கரவாதத்தை ஒழிப்பதிலும் அதன் பாதிப்புகளிலுமிருந்தும் மீள முடியாத போதுங்கூட சிறு நாடாகிய இலங்கை பங்கரவாதத்தை நாட்டிலிருந்து ஒழித்து சர்வதேச நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்வதாகத் தெரிவித்த ஜனாதிபதி; பயங்கரவாதத்தை ஒழிப்பதில் படையினரும் அரச அதிகாரிகளும் காட்டிய அர்ப்பணிப்புடனான செயற்பாடுகள் குறிப்பிடத்தக்கவை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அபிவிருத்திக்கும் ஒத்துழைப்புக்குமான தெற்காசிய ரோட்டரி கழக மாநாடு நேற்றுக் கொழும்பு கலதாரி ஹோட்டலில் ஆரம்பமானது. 4, 5, 6 ஆகிய மூன்று தினங்களுக்குத் தொடர்ந்து நடைபெறும் இம்மாநாட்டினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

அமைச்சர்கள், ராஜதந்திரிகள், சர்வதேச ரோட்டரிக்கழக முக்கியஸ்தர்கள் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளின் அமைச்சர்கள், பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்ட இம்மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமதுரையில் மேலும் தெரிவித்ததாவத :

நாட்டுக்கு எதிராக தற்போது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும் சர்வதேச நாடுகளே பயங்கரவாதத்தைப் பாதுகாப்பதிலும் போஷிப்பதிலும் உதவியாகச் செயற்பட்டன.

தற்போது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைப்போர் அதன் உண்மை நிலையைத் தெரிந்துகொள்ளாது வீண் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். மனித உரிமை விடயத்தில் இலங்கை மிகவும் பொறுப்புடன் செயற்படும் நாடாகும். இது விடயத்தில் வேறெந்த நாட்டிற்கும் இலங்கை இரண் டாவது நிலை நாடல்ல என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.

பயங்கரவாதத்தை வெற்றிகொண்டுள்ள நாடு என்று வகையில் ஏனைய தெற்காசிய நாடுகளுக்கு முன்னுதாரணமாகவும் அதே வேளை, ஏனைய நாட்களுக்கு உறுதுணை வழங்கும் நாடாகவும் இலங்கை செயற் படுகிறது. இருபது வருட யுத்த சூழலுக்குப் பின் மக்களையும் குறிப்பாக பயங்கர வாதத்தின் பிடியில் சிக்கியிருந்த பெற்றோர், சிறுவர், இளைஞர்கள், போராளிகளென சகலரையும் நாம் மீட்டுள்ளோம். முன் னாள் புலி உறுப்பினர்களுக்குப் புனர்வாழ் வளித்து வருகிறோம். சமத்துவம் சம உரிமையுடன் சகல மக்களும் வாழக்கூடிய புதிய சமூக மொன்றைக் கட்டியெழுப்பும் செயற்பாடு களையே எமது அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. அதற்கு சகலரதும் பூரண ஒத்துழைப்பு அவசியமாகும்.

மிக குறுகிய கால கட்டத்தில் யுத்தத் தினால் இடம்பெயர்ந்த இரண்டு இலட் சத்து 80 ஆயிரம் மக்களை மீளக்குடியமர்த்தி யுள்ளோம். இரண்டு வருட குறுகிய காலகட்டத்தில் உலகில் வேறெந்த நாடு களும் போலன்றி இதனை எம்மால் மேற் கொள்ள முடிந்துள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். ரோட்டரிக் கழகம் தொடர் பில் கருத் துக்களைத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்; ரோட்டரிக் கழகமானது பொருளாதார அபிவிருத்தி முன்னேற்றச் செயற்பாடுகளில் பங்களிப்பு களை செய்து வருவதுடன் இலங்கையைப் பொறுத்தவரை வர்த்தக சமூகத்தின் மேம்பாட்டுச் செயற்பாடுகளில் உறு துணையாகச் செயற்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ரோட்டரிக் கழகத்தின் கிளைகள் இயங்குகின்றன.

எதிர்காலத்திலும் அபி விருத்தியின் பங்காளியாக ரோட்டரிக் கழகம் செயற் படும் எனவும் ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார். நேற்றைய இம்மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் சார்க் நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு, நேபாளம், பூட்டான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாட்களின் பிரதிநிதிகள் பொரு மளவில் கலந்து கொண்டதுடன் ரோட்டரிக் கழகத்தின் சர்வதேசத் தலைவர் கல்யாண் பெனர்ஜி தெற்காசிய ரோட்டரிக் கழகத்தின் சார்பில் சிறப்புரையாற்றினார்.

அவரது உரையின்போது பயங்கரவாதத் திலிருந்து இலங்கைக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பாராட்டியதோடு இது உலகிற்கு முன்னுதாரணமான செயற்பாடு எனவும் குறிப்பிட்டார்.

கடந்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் சர்வதேச ரோட்டரிக் கழகம் பல மில்லி யன் அமெரிக்கன் டொலர்களை நிதி உதவி யாக வழங்கியதையும் சுட்டிக் காட்டிய அவர் எதிர்காலத்திலும் பூரண ஒத்துழைப் பினை வழங்கும் எனவும் தெரிவித்தார்.

ரோட்டரிக் கழகத்தின் தெற்காசிய மாநாட்டிற்கு நேற்று வருகை தந்த ஜனாதிபதியை ரோட்டரிக் கழக சர்வதேச பிரதிநிதிகள் கரங்களைத் தட்டி வரவேற்றனர். மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஜனாதிபதிக்கு ஞாபகச் சின்ன மொன்றும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com