Contact us at: sooddram@gmail.com

 

குண்டு வெடித்து 11 பேர் பலி!

டெல்லி ஐகோர்ட்டில் இன்று காலை பயங்கரம்  

டெல்லி ஐகோர்ட் அருகே இன்று காலை பயங்கர குண்டு வெடித்தது. இதில், 11 பேர் உடல் சிதறி பலியாயினர் 40 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் எப்போதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். டெல்லி ஐகோர்ட் வளாகத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 10 மணிக்கு ஐகோர்ட் திறக்கப்பட்டது. வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுக்குள் செல்ல வாயில் எண் 5-ல் நூற்றுக்கும் அதிகமானோர் வரிசையில் நின்று அனுமதி சீட்டு வாங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது சரியாக 10.17 மணிக்கு 5-ம் எண் வாயில் அருகே பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. வரிசையில் நின்றிருந்தவர்கள், தூக்கி வீசப்பட்டனர். இதில் 9 பேர் உடல் சிதறி பலியாயினர். 40-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். குண்டு வெடித்ததும் கோர்ட் வளாகத்தில் இருந்தவர்கள் அலறியடித்து நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால், அங்கு பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆம்புலன்ஸ்களும் விரைந்தன.

காயமடைந்தவர்களை போலீசார் மற்றும் மீட்புப் படையினர் மீட்டு ராம் மனோகர் லோகியா மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிலரது நிலைமை மோசமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. குண்டுவெடிப்பு நடந்த இடத்தை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். ஐகோர்ட் வளாகத்தில் இருந்த அனைவரும் உடனடியாக வெளியே செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். அங்கு போலீஸ் ஸ்பெஷல் கமிஷனர்கள் தர்மேந்திர குமார், பி.என்.அகர்வால் மற்றும் இணை கமிஷனர்கள் ஆர்.எஸ்.கிருஷ்ணய்யா, சந்தீப் கோயல் தலைமையில் போலீசாரும் அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

சூட்கேசில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். தடய அறிவியல் நிபுணர்கள் சோதனைக்கு பிறகே குண்டு எங்கு மறைத்து வைக்கப்பட்டது, எந்த வகையை சேர்ந்தது போன்ற விவரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். குண்டு வெடித்த இடத்தில் தேசிய புலனாய்வு நிபுணர்களும் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மாநிலங்களவை இன்று காலை கூடியதும், ஐகோர்ட்டில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்த தகவலை மாநிலங்களவை தலைவர் அன்சாரி தெரிவித்தார்.

இது தொடர்பான அறிக்கை, பகல் 2 மணிக்கு மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் அறிவித்தார். இதையடுத்து, அவை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே, குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு மக்களவையில் அனைத்து கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், பிற்பகலில் குண்டு வெடிப்பு குறித்து மக்களவையில் அறிக்கை தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி ஐகோர்ட்டில் கடந்த மே 25-ம் தேதி வாயில் எண் 7 அருகே குண்டு வெடித்தது. அதிர்ஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை. இதைத் தொடர்ந்து டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஐகோர்ட் வளாகத்திலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், ஐகோர்ட்டில் மீண்டும் சக்திவாய்ந்த குண்டு வெடித்திருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி ஐகோர்ட் வளாகத்தில் நடந்த குண்டு வெடிப்புக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஹர்கத்-அல்-ஜிகாத்-இஸ்லாமி (ஹூஜி ) அமைப்பு பொறுப்பு ஏற்று உள்ளது. அந்த இயக்கத்தின் இ.மெயில் மூலம் இது தெரியவந்து உள்ளது என தேசிய புலனாய்வுத்துறை தலைவர் தெரிவித்து உள்ளார். மும்பையில்
நடந்த தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் இந்த அமைப்பு இருந்தது குறிப்பிடதக்கது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com