Contact us at: sooddram@gmail.com

 

யாழ். குடாநாட்டில் மர்ம மனிதன் பீதி

மக்களின் பாதுகாப்புக்கென கிராம மட்டத்தில் குழுக்கள்

யாழ். குடாநாட்டில் அதிகரித்திருக்கும் மர்ம மனிதன் பீதி தொடர்பில் கிராம மட்டங்களில் குழுக்களை அமைப்பதற்கு யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற உயர்மட்ட பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிராம சேவகர் தலைமையில் கிராம மட்டத்தில் குழுக்கள் அமைக்கப்படவுள்ளன. வடமாகாண ஆளுநர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலாளர், இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகளைக் கொண்ட உயர்மட்டக் குழுவினர் அடுத்தவாரம் சந்தித்து இது பற்றிக் கலந்துரையாடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் மர்ம மனிதனின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக வெளியான தகவல்களையடுத்து மக்கள் மத்தியில் பீதி நிலை தோன்றியது. இது தொடர்பாக ஆராய்வதற்கு பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில்த்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், சிவில் சமூக அமைப்புக்கள், வர்த்தக சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக இந்த உயர்மட்ட பாதுகாப்பு மாநாடு நடத்தப்பட்டது.

ஒவ்வொரு கிராமத்திலும் கிராம சேவகர் தலைமையில் குழுக்களை நியமித்து பாதுகாப்புக் குறித்து உயர்மட்டக் குழுவினருடன் வாராந்தம் ஆராய்வதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிராம மட்டக் குழுக்களில் யார் யாரை உள்ளடக்குவது என்பது பற்றி இன்றையதினம் மீண்டும் கூடி ஆராய்வதற்கும் நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

நேற்றைய கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்குடன் ஒவ்வொரு வாரமும் கூடி ஆராய்வார்கள். யாழ். மாவட்ட மக்கள் மத்தியில் தற்பொழுது நிலவும் மர்ம மனிதர்கள் தொடர்பான பீதி ஆரம்பத்தில் நாட்டின் தென்பகுதியிலேயே தோற்றம்பெற்றது. இந்த மர்ம மனிதர்கள் தொடர்பான பீதி யாழ். மக்கள் மத்தியில் தற்பொழுதும் அதிகரித்துள்ளது என்பதை நாம் அறிவோம். இதற்கு உடனடித் தீர்வு காணும் வகையில் கெளரவ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமையவே நான் இங்கு வந்துள்ளேன்.

இந்த யாழ். மாவட்ட மக்களின் பீதியைப் போக்குவதற்கு மத குருமார்கள், சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர், இராணுவத் தளபதி, அரசாங்க அதிபர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய உயர் மட்ட அதிகாரிகள் குழு ஒன்றினை ஏற்பாடு செய்யவுள்ளோம் என்றார். குடாநாட்டில் பெண்களின் பாதுகாப்பு மிகவும் கவலைக்கிடமான முறையில் உள்ளதைச் சுட்டிக்காட்டப்பட்டது. இதனைவிட ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுகளிலும் பிரதேச செயலாளர்கள், பொலிஸார், பொதுமக்கள் உள்ளிட்ட விழிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றினூடாக சகல குற்றச் செயல்களையும் கட்டுப்படுத்தி மக்களுக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியும் என்றார்.

இந்த நிகழ்வில் கற்றுக் கொண்ட மனித உரிமைகள் அமைப்பின் பிரதிநிதிகள், வர்த்தக சங்கத்தினர், பொதுமக்கள், பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள், யாழ். குடாநாட்டின் தற்போதைய நிலை தொடர்பாக விளக்கமளித்தனர். பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் குடாநாட்டில் பெண்களின் பாதுகாப்பு மிகவும் கவலைக்கிடமான முறையில் உள்ளதை சுட்டிக்காட்டினர்.

மேலும் தமது பாதுகாப்பினை உடனடியாக உறுதி செய்து தருமாறும் சந்தேகத்தின் பெயரில் பொலிஸார் தடுத்து வைத்துள்ள நாவாற்துறை மக்களை விடுதலை செய்யுமாறும் கேட்டுக்கொண்டனர். இந்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரையாற்றும் பொழுது இந்தப் பிரச்சினைகளினை தீர்ப்பதற்கு பொதுமக்கள் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் பொதுமக்கள் தமக்கிடையே வதந்திகளைப் பரப்பி இயல்பு நிலையினைக் குழப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். இதில் கலந்துகொண்ட சர்வ மதத் தலைவர்கள் பொதுமக்களும் இராணுவத்தினரும் பெலிஸாரும் ஒற்றுமையாக, சமாதானமாக வாழ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி, யாழ். மாவட்ட கட்டளைகத் தளபதி மேயர் ஜெனரல் ஹத்துருசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான மு. சந்திரகுமார், சில்வெஸ்திரி அலன்ரின், சர்வ மதத் தலைவர்கள், சிரேஷ்ட பெலிஸ் மா அதிபர், அரசாங்க அதிபர்கள், யாழ். நகர மேயர், சமூக ஆர்வலர்கள், மனித உரிமை அமைப்பினர், பெண்கள் அபிவிருத்தி நிலைய அதிகாரிகள், புத்திஜீவிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com