Contact us at: sooddram@gmail.com

 

பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டு காணிகளை உரியோரிடம் ஒப்படைக்க வேண்டும் - ரணில் விக்ரமசிங்க

பாதுகாப்பு வலயங்கள் பெருமளவு குறைப்பு, காணிகளும் கையளிப்பு - நிமல் சிறிபால டி சில்வா

அவசரகாலச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட அனைத்து அதி உயர் பாதுகாப்பு வலயங்களும் அகற்றப்பட்டு உரிய உரிமையாளர்களிடம் அவர்களின் காணிகள் வழங்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள மர்மமனிதன் தொடர்பான பிரச்சினையை கட்டுப்படுத்துமாறும் அவர் குறிப் பிட்டார். யாழ். பிரதேசத்தில் இடம் பெற்று வருவதாக கூறப்படும் கிறீஸ் பேய் அச்சம் தொடர்பாக பாராளு மன்றத்தில் விசேட அறிக்கையொ ன்றை சமர்ப்பித்து உரையாற்றிய அவர் கூறியதாவது, யாழ்ப்பாண மக்கள் மீதான கிறீஸ் பூதத்தின் கெடுபிடிகளை தடுக்க இராணுவத்திற்கு முடியாது போனது சம்பந்தமாக ஓகஸ்ட் 23ஆம் திகதி இந்த சபையில் நான் சுட்டிக்காட்டி னேன். ஏனைய உறுப்பினர்களும் இவ்விடயம் சம்பந்தமாக சபையில் சுட்டிக்காட்டியுள்ளனர். அரசாங்கம் இவ்விடயத்தைக் கருத்திற் கொண்டு யாழில் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டும் என நாம் எதிர்பார்த் தோம். எனினும், துரதிர்ஸ்டவசமாக இது நடைபெறவில்லை.

நாளுக்கு நாள் பிரச்சினைகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. மர்ம மனிதர்கள் சம்பந்தமான பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டே செல்வதுடன் யாழ். குடாநாடு முழு வதும் ஒருவித பீதியும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. இதைக் கட்டுப் படுத்த அரசாங்கம் இதுவரை எது வித நடவடிக்கைகளையும் மேற் கொள்ளவில்லை.

ஓகஸ்ட் 30ஆம் திகதி கோண்டா வில் பிரதேசத்தில் பல சம்பவங்கள் இடம்பெற்றதுடன், அதே தினத் தன்று இரவு 8.30 மணியளவில் திரு நெல்வேலி பிரதேசத்தில் மற்று மொரு சம்பவமும் இடம்பெற்றுள் ளது. அத்துடன் கொக்குவில் யாழ். மருத்துவ பீடத்திற்கு அருகாமையி லும், செப்டெம்பர் 01ஆம் திகதி உரும்பிராய், குருநகர் போன்ற பிரதேசங்களிலும் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. யாழ். மக்களை அச்சத்தில் ஆழ் த்தும் ஒரு சடுதியான செயலாகவே இதை மக்கள் கருதுகின்றனர்.

தற்போது 50,000 ற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் யாழில் கடமை யில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். யாழ் ப்பாணத்தில் 20-30% பிரதேசம் அதி உயர் பாதுகாப்பு வலயத்திலேயே காணப்படுகிறது. வீதித்தடைகளும் 24 மணிநேர பாதுகாப்பு ரோந்துச் சேவையும் காணப்படுகிறது.

கிaஸ் பூதத்தைத் தடுப்பதற்கு இவர்களால் முடியும். அவசரகாலச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டிருந்த அனைத்து உயர் பாதுகாப்பு வலயங்களும் இர த்தாகின்றன. அதன்பிரகாரம் உயர் பாதுகாப்பு வலயத்திற்காகப் பெற்றுக் கொண்ட காணிகளை உரிய உரிமை யாளர்களுக்கு வழங்கப்பட வேண் டும். மீண்டும் இவைகளை உரியவர் களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?

இவ்விடயம் சம்பந்தமாக யாழ்ப் பாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் அரசாங்க தரப்பு யாழ். பாராளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளடக்கிய குழு ஒன்றை நியமி த்து, இதற்காக தேவையேற்படும் போது ஆலோசனை வழங்கக்கூடிய நபர்களையும் இணைத் துக்கொண்டு அக்குழுவின் மூலம் இவ்விடயம் சம்பந்தமாக ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்றும் வேண்டிக்கொள்கிறேன்.

வடக்கில் சுமுகநிலையைப் பேணவும், அமைதியை உறுதிப்படுத்தவும் சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. யாராவது சமாதானத்தைக் குழப்ப முயன்றால் நடவடிக்கை எடுக்க அரசாங்கம் பின்நிற்காது என சபை முதல்வர், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறினார். யாழ். குடாவிலுள்ள அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் 3.5 முதல் 4 வீதம்வரை குறைக்கப்பட்டுள்ளன. அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகவிருந்த பெருமளவு காணிகள் மீள வழங்கப்படவுள்ளன.

எதிர்க்கட்சித் தலைவர் சபையில் முன்வைத்த விசேட அறிக்கைக்கு பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது; பயங்கரவாதத்தின் பிடியிலிருந்த வடக்கு, கிழக்கு மக்களை இராணுவமே மீட்டது. இதனால் இன்று அந்த மக்கள் இயல்பு வாழ்க்கை வாழ்கின்றனர். யாழ். மக்களும் சுமுகமாக வாழும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட இராணுவத்தினர் உதவி வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படவில்லையென எதிர்க்கட்சித் தலைவர் குற்றஞ்சாட்டினாலும், அங்கு சட்டம் ஒழுங்கு திருப்திகரமாகவே உள்ளது.

நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தவே கிறீஸ் மனிதன் என கட்டுக்கதை பரப்பப்படுகிறது. இவ்வாறான நிலைமைகளைக் கட்டுப்படுத்த சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. புலிகளிடமிருந்து மக்களை மீட்ட படையினரின் புனிதத்துக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவரின் கூற்று அமைந்துள்ளது.

மக்களை அச்சுறுத்துவதற்காகவே கிறீஸ் பேய் பற்றிய கட்டுக்கதை பரப்பப்படுகிறது. இது அரசாங்கத்தின் மீது சேறுபூசும் முயற்சியாகும். இது அப்பகுதிகளில் இடம்பெறும் முதலீடுகளைத் தடுக்கும் செயலாகும்.

யாழ்ப்பாணத்தில் 50 ஆயிரம் படையினர் நிலைகொண்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டது.

ஆனால், அங்கு 27ஆயிரம் முப்படையினரே உள்ளனர். முப்படையினரின் பங்களிப்புடன் வடக்கில் கண்ணிவெடி அகற்றப்படுகிறது. இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்ற இந்த நடவடிக்கை அவசியமாகும். 2009 மே மாதம் முதல் இன்றுவரை கண்ணிவெடியில் சிக்கி ஒரு பொதுமகனும் இறக்கவில்லை.

யாழ் குடாவில் 3.5 முதல் 4 வீதமான காணிகள் மட்டுமே அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக உள்ளன. அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்த பெருமளவான காணிகள் மீள வழங்கப்பட்டுள்ளன. முடிந்தளவான காணிகள் மீள வழங்கப்பட்டு வருகின்றன.

யாழ் குடாவில் சோதனைச் சாவடிகளும், இராணுவ ரோந்து நடவடிக்கைகளும் இடம்பெறுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார். இது வடக்கின் சுமுகநிலை கிடையாது என சர்வதேச சமூகத்துக்குக் காட்டும் முயற்சியாகும். அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று இலங்கைக்கு அவப்பெயர் ஏற்படுத்தியிருந்தால் தற்பொழுது வெளிநாட்டு சக்திகளைப் பயன்படுத்தி இலங்கை மீது அழுத்தம் மேற்கொள்ளத் தயாராகிறார்.

ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் யாழ்ப்பாண மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராயும் கூட்டம் நடத்தப்பட்டது. மக்கள் மத்தியிலுள்ள தேவையற்ற அச்சத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு எமக்கு முக்கியமானதாகும். மீண்டும் பயங்கரவாத நிலைமை எழாதிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்களின் நலன்களைப் பேணுவதற்கும், மக்கள் அச்சமின்றி வாழவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதிய சட்டங்களை கொண்டுவர அரசாங்கம் பின்நிற்காது என்றார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com