Contact us at: sooddram@gmail.com

 

பரமக்குடியில் வரலாறு காணாத கலவரம்,  6 பேர் பலி

தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கலவரம் வெடித்தது. இதில், ராமநாதபுரம் டி.ஐ.ஜி., சந்தீப் மிட்டல், சென்னை போலீஸ் துணை கமிஷனர் செந்தில்வேலன் உட்பட அதிகாரிகள் தாக்கப்பட்டனர். கலவரத்தைக் கட்டுப்படுத்த நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் பலியாகினர். ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும், 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

கடந்த சனிக்கிழமை தலித் மாணவர் ஒருவர் ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டதே இந்த மோதல்களுக்கு அடிப்படை காரணம் என்றும் கூறப்படுகிறது. இதை அடுத்து பரமக்குடிக்கு, தலித் தலைவர் இமானுவேல் சேகரின் நினைவு நாள் நிகழ்வுகளில் கலந்து கொள்ள சென்ற தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் தூத்துக்குடியில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி பரமக்குடியில் தலித் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட போதே அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. இதன்போது காவல்துறையினர் மீது கற்களும் கம்புகள் எறியப்பட்டதை அடுத்து, அவர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரையும் காவல்துறையினர் பீய்ச்சி அடித்துள்ளனர். பிறகு காவல்துறை வாகனம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. அந்தத் தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனத்துக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

பரமக்குடியில், இமானுவேல் சேகரன் நினைவு தினம், நேற்று அனுசரிக்கப்பட்டது. பல மாவட்டங்களிலிருந்து, அஞ்சலி செலுத்த வாகனங்களில் ஏராளமானோர் வந்தனர். தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான்பாண்டியன் வருகையை எதிர்பார்த்து, பரமக்குடியில் பலர் காத்திருந்தனர்.தூத்துக்குடியில், பகல் 12 மணிக்கு ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்டதாக தகவல் கிடைத்ததும், அவரது ஆதரவாளர்கள், பரமக்குடி ஐந்துமுனை ரோட்டில், மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம், சென்னை அண்ணா நகர் துணை கமிஷனர் செந்தில்வேலன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதை, மறியலில் ஈடுபட்டவர்கள் ஏற்கவில்லை.அந்தக் கும்பலில் இருந்த ஒருவர், செந்தில்வேலன் சட்டையைப் பிடித்து இழுத்தார். பதிலுக்கு, செந்தில்வேலன் கையை ஓங்கினார்.இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள், போலீசார் மீது கற்களை வீசினர். இதனால், பதட்டம் ஏற்பட்டு, பின் கலவரமாக மாறியது. இதில், சிதறி ஓடிய சிலர், பரமக்குடி டி.எஸ்.பி., கணேசனை கீழே தள்ளிவிட்டனர். விழுந்த அவர் தலை மீது, ஒரு கும்பல் பெரிய கல்லைப் போட்டு விட்டு, தப்பி ஓடிவிட்டது. தலையில் காயமடைந்த கணேசனை, அங்கிருந்த போலீசார் பரமக்குடி மருத்துவமனையில் சேர்த்தனர்.

பல இடங்களில் இருந்து, பலர் கற்களை வீசியதில், ராமநாதபுரம் டி.ஐ.ஜி., சந்தீப் மிட்டல், எஸ்.பி., செந்தில்வேலன் உட்பட ஏராளமான போலீசார் காயமடைந்தனர். காயத்தால் சுயநினைவை இழந்த சந்தீப் மிட்டல், மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கலவரம் பெரிதானதால், கூட்டத்தைக் கட்டுப்படுத்த, வஜ்ரா (தண்ணீரை பீய்ச்சி அடிக்கும்) வாகனம் கொண்டு வந்தனர். கலவரக்காரர்கள் அந்த வாகனத்திற்கு தீ வைத்ததால், அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

சிதறி ஓடிய கும்பல், பல இடங்களில் இருந்து, போலீசார் மீது கற்களை வீசியதுடன், அரசு மற்றும் தனியார் வாகனங்களுக்கு தீ வைத்தது. இதையடுத்து, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், ஓட்டப்பாலம், ஜெயபால், 20. பரமக்குடி, காந்திநகர், பன்னீர்செல்வம், 50. பரமக்குடி, கணேசன். கீழகொடுமனூர் தீர்ப்பு கனி, 25, உட்பட ஐந்து பேர் பலியாகினர்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகும், பரமக்குடி மெயின் ரோடு உட்பட, பல பகுதிகளில், கலவரம் தொடர்ந்தது. தீயணைப்பு வண்டியும் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதையடுத்து, பரமக்குடி ஸ்தம்பித்தது. பரமக்குடியின் நான்கு திசைகளிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மதுரை - ராமேஸ்வரம் சென்ற வாகனங்கள், சிவகங்கை, திருவாடனை, ராமநாதபுரம் வழியாக திருப்பி விடப்பட்டன.

நேற்று மாலை 4 மணி வரை தொடர்ந்த கலவரத்தில், ரோட்டில் நடமாடியவர்கள், உயிருக்குப் பயந்து ஓடி, அருகேயிருந்த வீடுகளில் தஞ்சமடைந்தனர். பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர். காயமடைந்த போலீசார், சிவகங்கை, பரமக்குடி, ராமநாதபுரம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். பரமக்குடியில், ஆங்காங்கே அரசு டவுன் பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன.பரமக்குடி சம்பவத்தைத் தொடர்ந்து, முதுகுளத்தூரில் கடையடைப்பு நடந்தது. பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

கமுதியில் இருந்து அருப்புக்கோட்டை தவிர, பிற ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால், பயணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பரமக்குடி தாலுகாவில், நேற்று மாலை 4 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மருத்துவமனையில்போலீசார்: பரமக்குடி கலவரத்தில் காயமடைந்த ராமநாதபுரம் டி.ஐ.ஜி., சந்தீப் மிட்டல் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அப்பல்லோ மருத்துவமனையிலும், சென்னை அண்ணா நகர் துணை கமிஷனர் செந்தில்வேலன் மதுரை பிரித்தி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுரை அரசு மருத்துவமனையில் முனியசாமி, மணியன், பூமிநாதன், டெய்சி நிர்மலா ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெண் போலீஸ்மானபங்கம்:பரமக்குடியில் நடந்த கலவரத்தில், பெண் போலீஸ் டெய்சி, மானபங்கம் செய்யப்பட்டார். ரயில்வே சிக்னல்கள் உடைக்கப்பட்டதை தொடர்ந்து ரயில்கள் நிறுத்தப்பட்டன.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், போலீசார் பற்றாக்குறையால், நேற்று நடந்த கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. கலவரக்காரர்கள், பரமக்குடி பொன்னையாபுரத்தில் உள்ள ரயில்வே சிக்னல்களையும், ரயில்வே கேட்டையும் உடைத்தனர். கேட்-கீப்பர் அறையையும் தாக்கி நொறுக்கினர். இதையடுத்து, ராமேஸ்வரம் - சென்னை எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் - மதுரை பாசஞ்சர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

பரமக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான ஐந்து பேர்:மொபைல் போன் மூலம் அடையாளம் தெரிந்தது:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், நேற்று நடந்த கலவரத்தில் இறந்த நால்வர் அடையாளம் தெரிந்தது; மற்றொருவர் விவரம் தெரியவில்லை. பரமக்குடி கலவரத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், ஐந்து பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் மூன்று பேரின் உடல்கள், ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டன. இருவரது பையிலிருந்த மொபைல் போன்கள் ஒலித்துக் கொண்டே இருந்தன.இதைக் கேட்ட ராமநாதபுரம் டி.எஸ்.பி., முரளிதரன், போன்களில் பேசியவர்களிடம் கேட்ட போது, ஒருவர் பரமக்குடி ஓட்டப்பாலத்தைச் சேர்ந்த ஜெயபால், 20. இவர், ஒரு மாதத்திற்கு முன் கலப்புத் திருமணம் செய்தவர் என்றும், மற்றொருவர், பரமக்குடி காந்திநகரைச் சேர்ந்த பன்னீர்செல்வம், 50, என்றும் மூன்றாவது நபர் பரமக்குடியைச் சேர்ந்த கணேசன் என்றும் தெரியவந்துள்ளது.

குண்டு காயமடைந்தவர்களில் எட்டு பேர், இளையான்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில், தலையில் குண்டு காயத்துடன் இருந்த பரமக்குடி அருகேயுள்ள கீழகொடுமனூரைச் சேர்ந்த தீர்ப்பு கனி, 25, பலியானார்.அதேபோல், மதுரை அரசு மருத்துவமனையில் குண்டு காயத்துடன் அனுமதிக்கப்பட்ட மற்றொருவரும் பலியானார். இவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. இவரையும் சேர்த்து, துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.

 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com