Contact us at: sooddram@gmail.com

 

முஅம்மர் கடாபி மகன் சாதி அயல் நாடான நைகரில் தஞ்சம்

தலைமறைவாகியுள்ள லிபிய தலைவர் முஅம்மர் கடாபியின் மூன்றாவது மகன் சாதி கடாபி அயல் நாடான நைகரில் தஞ்சம் புகுந்துள்ளார். இதனை அந்நாட்டு அரச பேச்சாளர் மவுரோ அமன்டோ உறுதி செய்தார். கிளர்ச்சியாளர்கள் முஅம்மர் கடாபியின் கட்டுப்பாட்டிலுள்ள எஞ்சிய நகரங்களை கைப்பற்றும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ள நிலையிலேயே சாதி கடாபி நைகருக்கு தப்பிச் சென்றுள்ளார். பாலைவனத்தை கடந்து சாதி கடாபி நேற்று முன்தினம் நைகர் எல்லையை எட்டியுள்ளார். 8 அல்லது 9 வாகன தொடரணி மூலம் சாதி கடாபி நைகரின் அகடாஸ் நகரை வந்தடைந்துள்ளார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் நைகரை வந்தடைந்ததாக அங்கிருக்கும் அல் ஜரா செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

வாகனத் தொடரணி ஒன்று நைகரை வந்தடைந்துள்ளது. அதில் முஅம்மர் கடாபியின் மகன் மற்றும் அந்த அரசின் முக்கிய அதிகாரிகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. அந்த வாகன தொடரணி தற்போது (நேற்று) அகடாசை வந்தடைந்துள்ளது. அந்த தொடரணி விரைவில் தலைநகர் நியாமியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறதுஎன்று நைகர் அரச பேச்சாளரும், நீதி அமைச்சருமான மவுரோ அமன்டோ தெரிவித்துள்ளார்.

முன்னதாக இம்மாத ஆரம்பத்தில் சாதி கடாபி கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அதில் தான் சரணடைய தயாராக இருப்பதாகவும் அவர் கூறியதாக கிளர்ச்சியாளர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

38 வயதான சாதி கடாபி முஅம்மர் கடாபியின் 7 மகன்களில் மூன்றாவது மகனாவார். இவர் முன்னாள் லிபிய கால்பந்து அணியின் தலைவராக செயல்பட்டார். எனினும் இவர் நீண்ட காலம் இத்தாலியிலேயே வசித்து வந்தார். அதேபோன்று லிபிய கால்பந்து சம்மேளனத் தலைவராக செயல்பட்ட சாதி கடாபி கடந்த 2004 ஆம் ஆண்டு லிபிய இராணுவத்தில் இணைந்தார்.

அண்மைக்காலமாக சாதி கடாபி திரைப்படத்துறையில் ஈடுபட்டு வந்தார். அவர் சுமார் 100 மில்லியன் டொலர் அளவில் திரைப்படத்துறையில் முதலீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, முஅம்மர் கடாபியின் இரண்டாவது மனைவி சபியா மற்றும் அவரது மூத்த மகன் மொஹம்மட் மற்றுமொரு மகனான ஹனிபல் ஆகியோருடன் அவரது மகள் ஆயிஷா அயல் நாடான அல் ஜீரியாவில் தஞ்சம் புகுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நைகருக்கு அழுத்தம்

இதனிடையே முஅம்மர் கடாபி அரசின் முக்கிய அதிகாரிகள் மற்றும் அவரது உறவினர்கள் தொடர்ச்சியாக நைகரில் தஞ்சம் புகும் நிலையில் நைகர் அரசுக்கு சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ளது. முஅம்மர் கடாபியின் அரசில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட நபர்கள் நைகருக்குள் வந்தால் கைது செய்யும்படி அமெரிக்கா நைகர் அரசிடம் கோரியுள்ளது.

நைகர் அரசு லிபியாவின் கிளர்ச்சிப்படை மாற்ற கெளன்ஸிலை அந்நாட்டின் அதிகார பூர்வ அரசாக அங்கீகரித்துள்ளது. எனினும் முஅம்மர் கடாபி அங்கு தஞ்சம் புகுந்தால் அவரை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து நைகர் அரசு இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்க வில்லை என்பது குறிப்பிட த்தக்கது.

முன்னாள் பிரதமர் கைது

இந் நிலையில் முஅம்மர் கடாபி அரசின் வெளி நாட்டு உளவுப் பிரிவு தலை வர் அபு செயித் டொர்டாவை கைது செய்ததாக கிளர்ச் சிப்படை அறிவித்துள்ளது. தலைநகர் திரிபோலியில் வைத்து அவர் கைதானதாக கிளர்ச்சியாளர்களின் பேச்சாளர்களில் ஒருவரான அனஸ் ஷரீகப் தெரிவித்தார்.

கைதாகியுள்ள அபு செயித் டொர்டா 1990 களில் லிபியாவின் பிரதமராக இருந்துள்ளார். அத்துடன் 2003 ஆம் ஆண்டில் அவர் ஐக்கிய நாடுகள் சபையில் லிபியா வுக்கான தூதுவராகவும் செயல்பட்டுள்ளார். அதேபோன்று முஸா கவுசாவுக்கு முன்னர் லிபிய உளவுப் பிரிவின் தலைவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

10 நாட்களில் இடைக்கால அரசு

இதனிடையே இன்னும் 10 நாட்களுக்குள் இடைக்கால அரசு ஒன்றை அமைக்கவுள்ளதாக தேசிய மாற்ற கெளன்ஸிலின் பிரதித் தலைவர் மஹ்மூத் ஜிப்ரில் நேற்று திரிபோலியில் வைத்து அறிவித்துள்ளார். அத்துடன் லிபியாவில் கிளர்ச்சிப் படைகள் அனைத்தும் அந்நாட்டு தேசிய மாற்ற கெளஸில் என்ற ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்படும் எனவும் குறிப் பிட்டார்.

எனினும் மஹ்மூத் ஜிப்ரிலின் அறிவிப்பை தொடர்ந்து கிளர்ச்சியாளர்களுள் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக திரிபோலியில் இருக்கும் அல் ஜkரா செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதில் திரிபோலியில் இருக்கும் கிளர்ச்சியா ளர்களின் இராணுவ கெளன்ஸில், தேசிய மாற்ற கெளன்ஸிலின் கீழ் இயங்குவதை நிராகரிக்க வாய்ப்பு இருப்பதாக அந்த செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து மோதல்

இந் நிலையில் முஅம்மர் கடாபியின் கட்டுப்பாட்டிலுள்ள பானி வலீதின் பெரும் பகுதியை கைப்பற்றியதாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். திரிபோலியில் இருந்து தெற்காக 150 கி.மீ. க்கு அப்பாலுள்ள பானி வலீத் நகரின் மையப் பகுதியை எட்டியதாக கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து கிளர்ச்சிப் படை வீரர் ஒருவர் அல் ஜkராவுக்கு கூறும் போது, நாம் பானி வலீத்துக்குள் இருக்கிறோம். நகரின் பெரும்பாலான பகுதியை நாம் கைப்பற்றியுள்ளோம். எனினும் கடாபி ஆதரவுப் படை ஆங்காங்கே நிலைகொண்டு தாக்குதல் நடத்தி வருவதாக சாபில் வபாலி என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பானி வலீதில் இருந்து இயங்கும் கடாபி ஆதரவுப் படையின் வானொலி சேவை கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக மோத நகர மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஆயுத குழு; எலிகளிடம் இருந்து நகரத்தை காக்கும்படி அங்குள்ளோரிடம் கடாபி ஆதரவுப்படை கேட்டுக் கொண்டுள்ளது. இதேவேளை கடாபி பிறந்தகமான சிர்த் நகரிலும் இரு தரப்புக்கும் இடையில் மோதல் நீடித்து வருகிறது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com