Contact us at: sooddram@gmail.com

 

சிரியா மீதான அமெ. நிலைப்பாட்டுக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் எச்சரிக்கை

அமெரிக்கா மற்றும் அதனது நட்பு நாடுகளின் சிரியா மீதான நடவடிக்கை ஒரு பக்கச்சார்பானதாகவே எடுத்துக் கொள்ள முடியும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் விபரித்துள்ளார். அத்துடன் ஐ.நா.வின் அனுமதியின்றி இராணுவ தாக்குதலை ஒரு ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகவே கருத முடியும் என்றும் அவர் எச்சரித்தார். சிரியாவில் இடம்பெற்ற இராசாயன தாக்குதலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அச்சுறுத்தியுள்ளார். இந்நிலையில் இந்த இரசாயன தாக்குதலை சிரிய அரசு தான் நடத்தியது என்பது சந்தேகமின்றி உறுதி செய்யப்பட்டால் அதன் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கும் ஐ.நா. பாதுகாப்புச் சபை தீர்மானத்தை ரஷ்யா ஆதரவளிப்பதை நிராகரிக்காது என புடின் வலியுறுத்தினார்.

இந்நிலையில் சிரியா மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்க செனட் சபையின் வெளியுறவு குழு உறுப்பினர்கள் நேற்று முன்தினம் ஆதரவளித்தனர். 60 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைக்கு அனுமதி அளிப்பது தொடர்பான வாக்கெடுப்பு அமெரிக்க கொங்கிரஸ் அவையில் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளது. இதில் சிரியாவுக்கு எதிராக அமெரிக்க படையை பிரயோகிப்பது தொடர்பான வரைவில் மட்டுப்படுத்தப்பட்ட முறையில் படைகளை பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தரைவழி படை நடவடிக்கைக்கு செனட் குழுவால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

டமஸ்கஸ் புறநகர் பகுதியில் கடந்த ஓகஸ்ட் 21 ஆம் திகதி இடம்பெற்ற இரசாயன ஆயுத தாக்குதலில் 1,429 பேர் பலியாகியிருப்பதாக அமெரிக்கா குறிப்பிடுகிறது. ஆனால் ஏனைய தரவுகளில் இதனை விடவும் குறைவானோரே இந்த தாக்குதலில் பலியாகியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சென் பீட்டர்ஸ் பேர்கில் இன்று ஆரம்பமாகவுள்ள ஜீ 8 மாநாட்டையொட்டி புடின் உரையாற்றியுள்ளார். ஜீ - 8 மாநாட்டில் சர்வதேச பொருளாதாரம் பற்றி அதிகம் கவனம் செலுத்த திட்டமிடப்பட்டிருந்த போதும் தற்போதைய சூழலில் சிரிய விவகாரத்தில் உலக பொருளாதார சக்திகள் அதிக அவதானம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏ.பி. செய்திச் சேவை மற்றும் ரஷ்ய தேசிய தொலைக்காட்சியான சென்னல் 1 க்கு புடின் விரிவான பேட்டியை அளித்திருந்தார். அதில் அவர், “கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான யுத்தத்தில் ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசு வெற்றிபெற்று வரும் நிலையில் அவர்கள் இரசாயன ஆயுத தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்படுவது விநோதமாக உள்ளதுஎன குறிப்பிட்டார். இராணுவம் இரசாயன ஆயுதத்தை பயன்படுத்தியதற்கு ஆதாரம் இருந்தால் அந்த ஆதாரம் கட்டாயம் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அத்துடன் அது உறுதிப்படுத்தப்படவும் வேண்டும்என்று புடின் வலியுறுத்தினார். இதில் இரசாயன தாக்குதலுக்கு பொறுப் பானவர் மீது நடவடிக்கை எடுக்க ரஷ்யா தயாராக இருப்பதாகவும் புடின் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.

எனினும் ஐ.நா. தீர்மானம் இன்றி அமெரிக்கா நடவடிக்கை எடுத்தால் ரஷ்யாவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு, அது பற்றி தீர்மானிக்க கால அவகாசம் இருப்பதாக புடின் குறிப்பிட்டார்.எனினும் சிரியாவுக்கு எஸ் - 300 ஏவுகணை முறையை வழங்குவதை ரஷ்யா தொடர்ந்து இடைநிறுத்தி வைத்திருப்பதாக புடின் சுட்டிக்காட்டினார். எனினும் சர்வதேச சட்டங்களை மீறி எடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிர்காலத்தில் எவ்வாறு முகம் கொடுப்பது என்பது குறித்து நாம் ஆலோசித்து வருகிறோம். குறிப்பாக தீர்க்கமான ஆயுதங்களை உலகின் குறிப்பிட்ட பிராந்தியத்திற்கு வழங்குவது குறித்து ஆலோசிப்போம்என்றார் புடின்.

ஒபாமாவின் இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதா என்பது குறித்து அமெரிக்க கொங்கிரஸ் அவை எதிர் வரும் செப்டெம்பர் 9 ஆம் திகதி வாக்கெடுப்பை நடத்தவுள்ளது. இந்நிலையில் அமெரிக்க இராஜங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி நேற்று முன்தினம் செனட் சபையின் வெளியுறவு குழு முன் தோன்றி ஒபாமாவின் திட்டத்திற்கு ஆதரவு திரட்டினார். இதில் பஷர் அல் அசாத் அரசு இரசாயன தாக்குதலை நடத்தியதற்கான நியாயமான சந்தேகங்களை ஏற்படுத்தும் ஆதாரங்கள் இருப்பதாக கெர்ரி வலியுறுத்தினார்.

ஜனாதிபதி அமெரிக்காவை யுத்தத்திற்கு செல்லும் படி கோரவில்லை என்று செனட்டர்களிடம் வலியுறுத்திய கெர்ரி, “அமெரிக்கா கூறுவதற்கான அர்த்தத்தை தெளிவுபடுத்தவே அனுமதியை கேட்கிறோம்என்றார்.அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் சக்ஹேகல் மற்றும் முன்னணி இராணுவ அதிகாரி ஜெனரல் மார்டின் டிப்சி ஆகியோரும் செனட் குழு முன் தோன்றினர். மக்கள் பிரதிநிதிகள் அவையின் குடியரசு கட்சியைச் சேர்ந்த சபாநாயகர் ஜோன் போஹ்னரும் ஒபாமாவின் இராணுவ நடவடிக்கையை ஆமோதித்துள்ளார்.

எனினும் இவ்வாறான ஒரு யுத்தம் பேரழிவை யும் அமெரிக்க அரசியல் முறையின் செயலிழந்த தன்மையையுமே வெளிக்காட்டும் என கடந்த 1973 - 1977 காலப்பகுதியில் அமெரிக்க இராஜாங்க செயலாளராக இருந்தவரும் நோபல் விருது வென்ற வருமான ஹென்றி கிஸ்ஸிங்கர் விமர்சித்தார். இந்த யுத்த நடவடிக்கைக்கு அமெரிக்க மக்களின் ஆதரவைப் பெறும் கடும் சவாலுக்கு ஒபாமா முகம்கொடுத்திருப்பதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர். சிரிய பிரச்சினையில் தலையிடுவது குறித்த கருத்துக்கணிப்பில் அமெரிக்காவில் 10 இல் 6 பேர் சிரியா மீதானம் தாக்குதலுக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைக்கு அதனது நட்பு நாடான பிரான்ஸ் தனது முழு ஆதரவையும் வெளியிட்டு வருகிறது. இது தொடர்பிலான விவாதம் பிரான்ஸ் பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்றது. பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கொயிஸ் ஹொலன்டே செவ்வாய்க் கிழமை வெளியிட்ட கருத்தில், “இரசாயன படுகொலை இடம்பெற்ற நிலையில், அதுபற்றி உலகுக்கு தெரிந்த நிலையில், அது பற்றிய ஆதாரங்களும் வெளியிடப்பட்ட நிலையில், குற்றவாளிக்கு அது தெரியுமான நிலையில், அதற்கு கட்டாயம் பதில் கிடைக்க வேண்டும்என்றார்.

பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூனும் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு வெளியிட்டுள்ளார். ஆனால் சிரியா மீதான இராணுவ நடவடிக்கைக்கான தீர்மானம் பிரிட்டன் பாராளுமன்றத்தில் தோல்வியடைந்தது.கடந்த 2011 மார்ச்சில் ஆரம்பமான ஜனாதிபதி பஷர் அஸாத் அரசுக்கு எதிராக மக்கள் எழுச்சி போராட்டத்திற்கு பின்னர் இதுவரை 100,000க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறதுஉள்நாட்டு யுத்தம் காரணமாக சிரியாவின் 2 மில்லியனுக்கு அதிகமானோர் வெளிநாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.

அதேபோன்று மேலும் 4.25 மில்லியன் பேர் உள்நாட்டிலேயே அகதிகளாக இடம்பெயர்ந்திருப்பதாக ஐ.நா. அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் ஆலயம் குறிப்பிட்டுள்ளது. 1994 ருவண்டா இனப்படுகொலைக்கு பின் கடந்த 20 ஆண்டுகளில் உலகம் முகம்கொடுத்த மிகப்பெரிய அகதிகள் பிரச்சினை இதுவென ஐ.நா. எச்சரித்துள்ளது. இந்நிலையில் சிரிய அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கும் அயல் நாடுகளான லெபனான், ஜோர்தான், துருக்கி மற்றும் ஈராக்கின் வெளியுறவு அமைச்சர்கள் நேற்று ஜெனீவாவில் சந்தித்து ஆலோசித்துள்ளனர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com