Contact us at: sooddram@gmail.com

 

வடக்கிலிருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் வாக்குரிமைகளுக்கு வேட்டு - ஹசன் அலி

 "வடக்கிலிருந்து விடுதலைப்புலிகளினால் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் வாக்குரிமைகள் இதுவரை தொடர்ந்தும் அவர்களது தாயக நிலத்தொடர்போடு உறுதிப்படுத்தப்பட்டு வந்துள்ளன. அதன் பயனாக அவர்கள் தங்களது நாடாளுமன்ற உறுப்புரிமையினை தக்கவைத்துக்கொண்டிருந்தனர். இந்த உரிமையை இல்லாமல் செய்யும் நோக்குடன் தேர்தல் திணைக்களம் ஒரு புதிய திட்டத்தை அமுல்படுத்த தற்போது நடவடிக்கை மேற்கொண்டு வருவதனை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கின்றது".- இவ்வாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹசன் அலி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- சென்ற 14ம் திகதி ஜூலை மாதம் "பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக வேறு மாவட்டங்களிலிருந்து வருகை தந்து புத்தளம் மாவட்டத்தில் வதிகின்ற குடும்பங்களின் தலைமைக் குடியிருப்பாளர்களுக்கு விடுக்கப்படும் வேண்டுகோள்" என்ற தலைப்பில் வெளியாகியூள்ள ஒரு அறிவித்தலின் படி நீண்டகாலமாக தாயக நிலத்தொடர்பற்று இடம்பெயர்ந்தோராக வாழ்ந்துவரும் அனைவரும் புத்தளம் தொகுதியின்

வாக்காளர்களாகவே இனிமேல் பதிந்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தப்படுகின்றனர்.

நடைபெறவுள்ள மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் திட்டமிட்டு அவர்களது  உறுப்புரிமைகளை இல்லாதொழிப்பதற்கான ஒருமுயற்சியாகவே இதனை அவர்கள் கருதுகின்றனர்.

கடந்த இரண்டு தசாப்தங்களாக இடம்பெயர்ந்தவர்களாக அங்கீகரிக்கப்பட்ட இவர்களை யுத்தம் முடிந்த கையுடன் துரிதமாக உரிய இடங்களில் குடியமர்த்தும் முயற்சியில் ஈடுபட வேண்டிய அரசு மாறாக அவர்களை தமது தாயக தொகுதிகளில் இருந்து அவசர அவசரமாக நிரந்தரமாக விரட்டியடிக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்க விடயமாகும்.

யுத்தம் முடியும் வரை இடம் பெயர்ந்தவர்களின் பட்டியல்களில் இவர்களின் கணிசமான எண்ணிக்கையை ஒரு வலுவான தரவாக சர்வதேச சமூகத்திற்கு காட்டி அனுதாபத்தையும், உதவிகளையும் பெற்று வந்த அரசாங்கம் தற்போது இந்த புதிய யுக்தியால் இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையை திடீரென குறைத்துக் காட்டுவதன் மூலம் துரிதமான மீள் குடியேற்றத்திட்டமொன்றினை அமுல்படுத்தி விட்டதாக காட்ட முயற்சிக்கின்றதா என எண்ணத் தோன்றுகின்றது.

வாக்குரிமை என்பது நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜைக்குமுரிய பிரத்தியோகமான ஜனநாயக உரிமையாகும்.  பிறந்த மண்ணுடன் தொடர்புள்ள இந்த உரிமையை தீர்மானிக்கும் அதிகாரம் அவர்களுக்கே உரியதாகும். விடுதலைப்புலிகள் இனச்சுத்திகரிப்புச் செய்து எந்த நோக்கத்திற்காக வடமாகாண முஸ்லிம்களை துரத்தி அடித்தார்களோ அந்த நோக்கத்தை நியாயப்படுத்துவது போல தேர்தல் திணைக்களம் நடந்து கொள்வது வேதனைக்குரியது.

20 வருடங்களுக்குமுன்னர் இடம் பெயர்ந்தவர்கள் தங்களது தற்காலிக இருப்பிடங்களை கல்வீடுகளாக்கியுள்ள ஒரே காரணத்திற்காக அவர்கள் தற்போது வசிக்கின்ற இடங்களை தாரைவார்த்து விட்டு வெளியேற வேண்டும் என அரசாங்கத்திலுள்ள ஒரு அமைச்சரால் ஏற்கனவே ஒருவேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அதனை வலுப்படுத்துவது போன்று தற்போதைய புதியநகர்வுகள் தென்படுகின்றது. கல்வீடுகளில் வசிக்கின்றார்கள் என்ற காரணத்துக்காக புத்தளத்திலிருந்து வெளியேறுங்கள் என்று ஒரு பக்கமும் மன்னாரில் வாக்காளர்களாக இருக்கமுடியாது என்று மறுபக்கமும் இவர்கள் எச்சரிக்கப்படுவது எவ்வகையில் நியாயமாகும ?

இடம் பெயர்ந்தவர்கள் என்ற அடையாளத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக நிரந்தரமாக கொட்டில்களில் காலாகாலமாக அல்லலுறத்தான் வேண்டும் என எதிர்பார்ப்பதென்பது மனிதவதைக்கொப்பானதாகும்மீள்குடியேற்றம் என்ற போர்வையில் கோடிக்கணக்கான பணம் வீண்விரயம் செய்யப்பட்ட கடந்த காலங்களில்

உண்மையில் எவ்வித மீள்குடியேற்றமும் அர்த்தபுஷ்டியாக நடைபெறவில்லை என்ற உண்மை எங்கு வெளியே தெரிந்து விடுமோ என்பதற்காக இவ்வாறான அரைகுறை நடவடிக்கை களில் அரச திணைக்களங்கள் ஈடுபடுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

கடந்த இரண்டு தசாப்தங்களாக பலவிதமான வேதனைகளையும், சோதனைகளையும், அரசியல் பழிவாங்கல்களையும் தாங்கிக்கொண்டு தாக்குப்பிடித்து வந்துள்ள ஒரு சமூகம் தனது வாக்குரிமையை பிறந்த மண்ணுடன் தொடர்பு படுத்திக் கொள்ளும் உரிமையை இழக்க முடியாது. ஒருவரது வாக்குரிமை எங்கு இருக்க வேண்டும் என்பதனை தீர்மானிக்கும் உரிமையில் வேறு எவரும் கைவைப்பதற்கு நாம் அனுமதிக்க முடியாது.

புத்தளத்தில் இடம் பெயர்ந்து வாழும் சகலரையும் உடனடியாக மீள்குடியேறுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

அவர்கள் இழந்து விட்ட வாழ்வாதாரம் மீளக்கட்டியெழுப்பப்படுவதற்கு போதுமான நஷ்டஈடுகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

நாட்டின் எந்தப்பாகத்திலும் சொத்துரிமையை அனுபவிக்கும் கௌரவமான அந்தஸ்து இடம் பெயர்ந்தவர்களுக்கும் உண்டு என்ற அங்கீகாரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக தமது சொந்த நிலங்களுக்கு மீளும் உரிமைகள் இடம் பெயர்ந்த சகலருக்கும் வலுவாக உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

யுத்தம் முடிந்ததை மட்டும் கொண்டாடி மகிழ்வதால் மட்டும் சகஜ நிலைமை தோன்றிவிடாது. யுத்தம் உருவானதற்கான காரணங்களை இனங்கண்டு அவற்றிற்கான பரிகாரங்களை காண்பதும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களினதும் இடம் பெயர்ந்தவர்களினதும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வது என்பனவும் சகஜ நிலையை கொண்டு வருவதற்கான முக்கிய
காரணிகளாகும்.

எனவே, அர்த்தமற்ற மனச்சஞ்சலத்தை ஏற்படுத்தும் அறிக்கைகளை வெளியிடுவதிலிருந்து அரச திணைக்களங்கள் தவிர்ந்து கொள்வதுடன், இரண்டு தசாப்தங்களாக இடம் பெயர்ந்துள்ள முஸ்லிம்களின் மீள்குடியேற்றப் பிரச்சினைத் தீர்வூக்கு முன்னுரிமை கொடுத்து நடைமுறைப்படுத்துவதற்கான விசேட செயலணி ஒன்றினை உடனடியாக அமைத்து அரசியல் சார்பற்ற அனுகுமுறையை அமுல்படுத்துமாறு நாம் கேட்டுக் கொள்கின்றோம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com