Contact us at: sooddram@gmail.com

 

மக்கள் மீது சவாரி விடுபவர்களுக்குப் பதிலாக மக்கள் நேய அரசியல் கலாச்சாரம் வேண்டும்

1. நீங்கள் ஆயுதப்போராட்ட இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினராக இருந்துள்ளீர்கள். தமிழ் மக்களின் விடுதலைக்காக முப்பதாண்டுகளுக்கு முன்பே களத்திற்கு வந்த பெண்போராளி என்ற வகையில் உங்களுக்குத் தூண்டுதலாக இருந்த காரணிகளைப் பற்றிச் சொல்லுங்கள்?

உரும்பிராய் சிவகுமாரனின் மரணம் என்னுள் ஒரு பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. அவர் இன ஒடுக்குமுறைக்கெதிரான ஆயுதப்போராட்டதில் மாத்திரம் நம்பிக்கை வைத்திருக்கவில்லை சாதி, பெண் அடிமைத்தனம , மூடத்தனங்களை வெறுத்த சீர்திருத்த வாதியாகவும் இருந்தார். அவருடைய இறுதிச்சடங்கில் ஆண்களும் பெண்களும் திரண்டிருந்தனர்.

1970களின் பிற்பகுதியில் ஒருபதட்டமான சூழ்நிலை காணப்பட்டது. கைதுகள், காணாமல் போதல் என்பன திடீரென அதிகரித்திருந்தன .

இன்பம் ,ெல்வம் ஆகியோரின் மரணங்கள் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தன .

தவிர பெண்கள் பற்றிய எமது மரபார்ந்த சமூக மதிப்பீடுகளிலிருந்தும் விடுபடவிரும்பினேன்.

எமது பாரம்பரிய தலைலைமைகளின் இயலாமையும் என்னை வெறுப்படைய வைத்தது.

1980களில் வர்க்கம் சாதி- பெண் ஒடுக்குமுற  எமத சமூக அமைப்பு பற்றியும் தேசியம் பற்றியும் ஈழமாணவர் பொதுமன்றம் முற்போக்கான கருத்துக்களை பிரச்சாரப்படுத்தியது. அவை பல எனக்கு உடன்பாடானவையாகவும் இருந்தன

2. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வடக்கு கிழக்கு இணைந்த முதலாவது மாகாண சபையில் ஒரு உறுப்பினராக இருந்தவர் நீங்கள். குறுகிய காலமே செயற்பட்டாலும், அவ்வாறு ஏற்கனவே மாகாணசபை அனுபவம் பெற்ற ஒருவராக இத்தேர்தலில் போட்டியிடுபவர் நீங்கள் மட்டுமே. இம்முறை போட்டியிடுவது பற்றி என்ன கூறுவீர்கள்?

இத்தேர்தல் மிகவும் முக்கியமானது. மாகாண சபையே வேண்டாம் என்று 20 வருடங்களாக சொல்லி வந்தவர்கள் இம்முறை தேர்தலில் போட்டியிடுகிறார்கள் இது காலம் கடந்த ஞானம். அப்போதே ஒற்றுமையாக நாம் மாகாண சபையை கையேற்றிருந்தால் இந்த 20 வருட பேரழிவுகளுக்கு இடம் இருந்திருக்காது. ஒரு வலுவான மாகாண சபையை நாம் கொண்டவர்களாக இன்று இருந்திருப்போம்

ஆனால் எல்லாம  ுடிந்த பின் தோத்லில் பங்கு பற்றுகிறார்கள் . குதிரை ஓடிய பின் லாயத்தை மூடும் கதைதான்.

ஆனால் ஒன்று மாகாண சபையின் அதிகாரங்கள் கவனிக்காமல் விட்டு காலத்தால் தேய்வடைந்திருந்தாலும் அதனை நாம் புத்துயிராக்க முடியும்.

இலங்கை அரசாங்கமுறைமையில் ஒரு அதிகாரபரவலாக்கல் கட்டமைப்பில் எம்மவர்கள் செயற்படுவது நல்லதே. காலம் காலமாக நடந்த நிராகரிப்பு புறக்கணிப்பு அரசியலுக்கு பதிலாக பங்குபற்றுதல் ,அதற்கூடாக துன்புறும் எமது  மக்களுக்கு உருப்படியாக காரியமாற்றல்

 மாகாண சபை வெறும்பானையாகவே இருந்தாலும்? அதில் மனம் இருந்தால் பிரயாசை இருந்தால் தண்ணீர் விட்டு -அரிசிபோட்டு -பால் விட்டு பொங்கவைக்க எம்மால் முடியும்.

3. மாகாண சபைக்கென இப்போதுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்திக்கொண்டு எவற்றைச் செய்யலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

 ஏராளம் பிரச்சனைகள் இருக்கின்றன. தண்ணீர் ,ின்சாரம், மலசலகூடம் ,வீட்டுவசதி ,ஆஸ்பத்திரி ,வீதி ,போக்குவரத்து ,பாதுகாப்பு வறியவர்களுக்கு நிலம் இல்லை. குழந்தைகள்- சிறுவர்களுக்கு போசாக்கான உணவு- கல்வி என்ற வெளிச்சத்தை ஏற்றிவைப்பது முக்கியம். இளைஞர்கள், பெண்களுக்கு வேலை வாய்ப்பு, விவசாயம், மீன்பிடி, பாரம்பரிய தொழில்கள  அபிவிருத்தி செய்தல் ,கல்வி, சுகாதார துறைகளை மேப்படுத்துவது உள்ளிட்ட போக்குவரத்தை அபிவிருத்தி செய்வது புதியதொழில் துறைகளில் முதலீடு,  நில நீர் வளங்களை அபிவிருத்தி செய்வது உட்பட பலவேலைகளை மேற்கொள்ளமுடியும் 

 4. வட மாகாணத்தில் இன்று பெண்களுக்குரிய விசேட பிரச்சினைகளாக எவற்றைக் காண்கிறீர்கள்? காணப்பட வேண்டிய தீர்வுகள் பற்றியும் உங்களிடமுள்ள திட்டங்கள் பற்றியும் சொல்லுங்கள்?

பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள . கடந்த கால யுத்தம் சுனாமி போன்ற அனர்தங்களால் ஏற்பட்ட இழப்புக்கள ,கணிசமான பெண்களின் அகதி வாழ்வு- ஊனமடைந்த நிலை  பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் நடைமுறை, மற்றும் சமூக மனநிலை.

அரசியல் அரங்கில் பெண்களுக்கான இடைவெளி இல்லை என்றே கூறிவிடலாம்.

பெண்கள் மாத்திரம் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்துவது

பெண்கள் சமையலறையிலிருந்து வெளிவருவதற்கான சந்தர்ப்பங்கள் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துவது.

பெண்களை இரண்டந்தரபிரசைகளாக கருதும் ஊடககலாச்சாரத்திற்கெதிரான விழிப்புணர்வு நடவடிக்கை

வீடுகளிலும் வீதியிலும் கல்வி- தொழில் செய்யும் இடத்திலும் பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கெதிரான சட்ட சமூகப் பாதுகாப்பு.

 5. சமூகத்தில் பாதிப் பங்கினரான பெண்களின் முன்னேற்றத்திற்கென உதிரிகளாகப் பல பெண்கள் அமைப்புகள் செயற்பட்டு வந்தாலும் அவர்களுக்கென விசேடமான அரசியற் பின்பலம் எதுவும் இருப்பதில்லை. அமைப்புகளாகவும் கூட அவை இரண்டாந்தர நிலையிலேயே செயற்பட வேண்டியிருப்பதைப் பார்க்க முடிகிறது. மாகாண ரீதியான அந்த அரசியற் பலம் உங்களுக்குக் கிடைத்தால் என்னவெல்லாம் செய்ய உத்தேசித்திருக்கிறீர்கள்?

எமது சமூகத்தில் அரைப்பங்கினருக்கு மேலாக உள்ள பெண்களின் அரசியல் சமூக பிரவேசத்திற்கான தடைகளை அகற்றுவது அதற்கான சட்ட மற்றும் சமூக மாற்றங்களுக்காக வலிமையுடன் குரல் கொடுப்பத . பெண் ஒடுக்குமுறை தீண்டாமை என்பன அதன் அதன் அளவி  ுக்கியமான  பிரச்சனைகளே.

இந்த முக்கியத்துவ்தை இடையறாது வலியுறுத்துவது. இதற்காக பெண்களை சகல தளங்களிலும் அணிதிரட்டுவது.

தொழில் கல்வி வாய்ப்புக்களை அதிகரிப்பது

சட்டம் ஒழுங்கு நீதித்துறைகளை பெண்கள் இலகுவாக அணுகுவதற்கான நிலைமைகளை ஏற்படுத்துவது.

பெண்களுக்கான சமூக தொழில் பாதுகாப்புக்களை உத்தரவாதப்படுத்துவது

 6. வட மாகாணம் முழுமைக்குமான சமூக அபிவிருத்தித் திட்டங்களில் நீங்கள் எவற்றுக்கு முன்னுரிமை கொடுப்பீர்கள்?

நீர்வளத்தை -நன்னீர் - குடிநீர்.வளத்தை பாதுகாத்தலும் அதிகரித்தலும்,    சுற்றாடல்மாசடைதலில் இருந்து மீட்டெடுத்தல,;  ெண்களின் சுயஆற்றலை ஆளுமையை வளர்ப்பதற்காக ஏது நிலைகளை உருவாக்கல் ,நிலமற்ற வறியவர்களுக்கு நிலம் கிடைக்க வழிசெய்தல் ,பாரபட்சமற்ற கல்வி வேலைவாய்புக்களை அதிகரிப்பதற்கான தொழில் துறைகளை ஏற்படுத்துவது ,சமூக ஏற்றத்தாழ்வு இடைவெளியைக் குறைப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்தல்.

 7. தமிழ்மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினை தீர்க்கப்படாமலே தொடர்வதற்கு எவையெல்லாம் காரணம் என்று நினைக்கிறீர்கள்? அந்தக் காரணிகளை மேவி எப்படி தீர்வு நோக்கிச் செல்லலாம் என்று கருதுகிறீர்கள்?

நடைமுறைக்குச் சாத்தியமில்லா  இன்று வரை நிலவும் தமிழ் பித்தலாட்ட அரசியல் பிழைப்புவாத அரசியல்

இதனால் வாராது வந்துற்ற பல சந்தர்ப்பங்கள இழக்கபட்டன எமது இளம் மக்களின் அர்ப்பணிப்புக்கள் தியாகங்கள் வீண்போயின. இதைப்பற்றிய பிரக்ஞை அன்றைய இன்றைய கபடதாரிகளான தமிழ் தலைமைகளுக்கு இருக்கவி;ல. வருவதையெல்லாம் நிராகரிப்பது பேரினவாதிகளுக்கு மாத்திரமல்ல அவதந்திர தமிழ் தலைமைகளுக்கும் மரபாகிப்போய் விட்டது

மற்றது சக தமிழ் முஸ்லீம் சமூகங்களின் அரசியல் இருப்பை சகித்துக் கொள்ளாத பேரினவாத அரசியல்

இவற்றுக்கு அப்பால் சர்வதேச பயங்காட்டி பெரும்பான்மை சமூகத்iதை வெருட்டாமல் யதார்த்தமாக நிதானமாக நாம் இந்த நாட்டில் மற்றவர்களுடன் சமமாக வாழவிரும்புகிறோம் என்பதை நடைமுறையில் உறுதிப்படுத்த நடைமுறையில் முயலவேண்டும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற போக்கு தமிழ் அரசியல் அகராதியிலிருந்து அகல வேண்டும்

அதற்கு சிறுபான்மை சமூகங்கள் நாம் பிரதான விடயங்களில் கருத்தொருமிப்பிற்கு வர வேண்டும். பெரும்பான்மையான சிங்கள மக்கள் மத்தியில் அதிகாரப்பரவலாக்கலில் அக்கறை உள்ள சத்திகளுடன் உறவைப்பலப்படுத்தவேண்டும்.

 13 வதை முழுமைப்படுத்தப்படுவதும் செழுமைப்படுத்தப்படுவதும் முக்கியமானது. அதனை வெட்டிக் குறைத்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை. அது இன்றைய உலக பிராந்திய ஜனநாயக சம்பிருதயங்களுக்கு முரணானது

8. முடிவாக, தமிழ்மக்கள் எதற்காக உங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று நீங்கள் கேட்கிறீர்கள்?

அரசியல் அதிகாரம் மக்கள் மீது சவாரி விடுவதற்கான ஒன்றென கருதும் போக்கு நெடுங்காலமாக காண்ப்படுகிறது.

உண்மையில் அரசியல் பிரதிநிதிகள் மக்களின் நண்பர்களாக எளிதில் அணுகப்படக் கூடியவர்களாக இருக்கவேண்டும்

எனவே மக்களுக்கு நேயமான சாதாரண மனிதரின் கண்ணியத்தையும் சுயமரியாதையையும் பாதுகாக்க கூடிய மக்களின் இன்பதுன்பங்களில் உடனடியாகவும் நேரடியாகவும் நிற்க கூடிய அரசியல் நிர்வாக கலாச்சாரம் ஒன்றை ஏற்படுத்தவும்

எமக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்

 நன்றி தினமுரசு (26.8..2013) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com