Contact us at: sooddram@gmail.com

 

சென்னை முதல் டெல்லி வரை நடைபயணம்!

(ஈழத் தமிழர் விடுதலைக்கான நடைபயணத்தில் ஈ.என்.டி.எல்.எப். யினரால் தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் வழங்கப்பட்ட பிரசுரத்தின் தமிழாக்கம்!)

இலங்கை தமிழர்களாகிய நாங்கள் இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து சென்னை முதல் டெல்லிவரை நடைபயணம  ேற்கொண்டுள்ளோம்.

(01)    மதிப்புமிக்க இந்தியப் பிரதமராக இருந்த ஸ்ரீ ராஜீவ்காந்தி அவர்கள் ஏற்படுத்தியஇந்திய-இலங்கைஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.

(02)    இலங்கையில் தமிழர்களின் பூர்விகப் பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிங்கள அரசாங்கத்தால் அத்துமீறி குடியேற்றப்பட்ட சிங்களக் குடியேற்றவாசிகளை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும்.

என்ற இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியினராகிய (ஈ.என்.டி.எல்.எப்.) நாங்கள் இந்த 2500 கிலோ மீற்றர் தூரத்திலான நடைபயணத்தை மேற்கொள்கிறோம்.

இலங்கையின் பூர்விகக் குடிகள் தமிழர்கள், வங்காள தேசத்திலிருந்து வந்து குடியேறிய சிங்கள இனத்வர் கடந்த சில நூற்றாண்டாக தமிழர்களை சிறுகச் சிறுக அழித்தும், அடித்து விரட்டியும் இப்போது முழு இலங்கையையும் கைப்பற்றிவிட்டனர்.

பிரித்தானியரின் வருகைக்கு முன்னர் சிறிலங்கா இரு நாடுகளாகத்தான் இருந்தது. தங்களது நிர்வாகத்திற்காக பிரித்தானியர் ஒரே நாடாக்கினர். அவர்கள் இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுக்கும் போது எவ்வித எதிர்ப்பும் இல்லாதிருந்த இலங்கைக்கும் சுதந்திரம் கொடுத்தனர். அப்போது, தமிழர்கள் இந்தியாவுடன் கலாச்சார ரீதியாகத் தொடர்புடையவர்களாக இருந்தபடியால் பிரித்தானியர் தமிழர்களை நிராகரித்து சிங்கள இனத்தவரிடம் அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் 1948ல் வழங்கிவிட்டுச் சென்றுவிட்டனர்.

இலவசமாகக் கிடைத்த அந்தச் சுதந்திரத்தை தமிழ் மக்களை அழித்தொழிக்க பயன்படுத்துவதற்குக் கிடைத்த சந்தற்பமாக நினைத்து திட்டங்கள் வகுத்தனர்.

சிங்கள மக்களுக்கென்று தனிச் சிங்கள இராணுவத்தை உருவாக்கினர் சிங்கள ஆட்சியாளர். தமிழரின் பூர்விக நிலங்களை ஆக்கிரமித்தனர். சிங்களக் குடியேற்றங்களை அரசாங்கத்தின் செலவில் தமிழர் நிலங்களில் ஊடுருவிக் குடியமர்த்தினர். இப்படியாக 30,00,000(முப்பது லட்சம்) சிங்களக் குடியேற்றவாசிகளை தமிழரின் விருப்புக்கு மாறாக குடியமர்த்தினர்.

ஐந்து தடவைகள் இனக் கலவரம் என்று கூறித் தமிழர் மீது தாக்குதல் நடத்திப் பல ஆயிரக்கணக்கானவர்களைக் கொலை செய்துள்ளனர் சிங்கள இனத்தவர்.

1958, 1961, 1977, 1981, 1983 இந்த ஆண்டுகளில் இலங்கை இராணுவமும் சிங்கள இனத்தவரும் இணைந்து தமிழர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இறுதியாக 1983ல் தமிழர்களைப் படுகொலை செய்து அவர்களது சொத்துக்களைச் சூறையாடிய போது, இந்தியப் பிரதமராக இருந்த திருமதி. இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் அன்றைய வெளிவிவாகார அமைச்சராக இருந்த உயர்திரு. நரசிம்மராவ் அவர்களை அனுப்பி சிங்கள ஆட்சியாளரை மிரட்டி தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை நிறுத்தினார்.

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியாவில் புகலிடம் வழங்கினார் திருமதி இந்திராகாந்தி அவர்கள். அவரது மறைவுக்குப் பிறகு அவரது மைந்தன் திரு. இராஜீவ்காந்தி அவர்கள் 'இந்திய-இலங்கை" ஒப்பந்தத்தினை ஏற்படுத்தினார்.

இந்த ஒப்பந்தத்தினை விடுதலைப் புலிகள் இயக்கமும் (L.T.T.E) இலங்கையின் முன்னைநாள் ஜனாதிபதி திரு. பிரேமதாசா அவர்களும் இணைந்து முறியடித்தனர். இதனால் நாங்கள் இன்று பல அழிவுகளைச் சந்தித்து எந்தவித உரிமைகளும் இன்றி அகதிகளாக வாழ்ந்து வருகிறோம்.

1987ல் 'இந்திய-இலங்கை" ஒப்பந்தம் கையெழுத்தான நாள் முதல் தமிழர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட்டது.

தமிழர் பகுதிகளில் சிங்களவரைக் குடியேற்றும் சதித்திட்டம் நிறுத்தப்பட்டது.

தமிழர்களைக் கைது செய்து கொலை செய்வது, சித்திரவதை செய்வது, சிறை பிடிப்பது நிறுத்தப்பட்டது.

தமிழ் இனத்துக்கு என்று வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்கள் இணைக்கப்பட்டு, மாநில அரசு ஒன்று உருவாக்கப்பட்டது.

அந்த மாநில அரசில் கல்வி, காவல், நிலம் மற்றும் தன்னாட்சி உரிமைகள் வழங்கப்பட்டிருந்தது.

அந்த மாநில அரசைப் பாதுகாக்க ஆயுதப் படை ஒன்றும் அமைக்கப்பட்டது.

இப்படியான அனைத்துப் பாதுகாப்பையும் புலிகள் இயக்கம் நிராகரித்து தமிழ் இனத்தை மீண்டும் அழிவுப் பாதைக்கு இழுத்துச் சென்றது.

இந்திய அமைதிப்படை வெளியேறிய பின் 1991ஆம் ஆண்டு முதல் இன்று வரை இரண்டு இலட்சம் தமிழ் மக்கள் இலங்கை அரசாங்கத்தால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் உடல் உறுப்புகளை இழந்துள்ளனர்.

நான்கு இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் தடுப்பு முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார்கள்.

பத்து இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் உலகம் முழுவதும் அகதிகளாகத் தஞ்சம் அடைந்துள்ளனர்.

ஒரு இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் குழந்தைகளும் மக்களும் அனாதைகளாக ஆக்கப்பட்டுள்ளனர் தமிழரது சொந்த மண்ணில்.

எங்கள் இனத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றால் திரு. இராஜீவ்காந்தி அவர்கள் ஏற்படுத்திய 'இந்திய-இலங்கை" ஒப்பந்தத்தினை முழுமையாக நிறைவேற்றுவதுதான் இன்றைய காலகட்டத்தில் இருக்கும் ஒரே வழி!

இலங்கையில் சிங்கள இனத்தவரிடமிருந்து எங்கள் தமிழ் இனத்தைக் காக்க வேண்டும் என்றால், அந்த அடிமை வாழ்விலிருந்து விடுபட வேண்டும் என்றால், 'இந்திய-இலங்கை" ஒப்பந்தத்தினை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்".

அத்துடன், 'தமிழர் பகுதிகளில் குடியேற்றப்பட்ட சிங்களக் குடியேற்றங்களை வெளியேற்ற வேண்டும்." இந்தியா இந்த இரண்டு கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தரவேண்டும்.

இலங்கையின் தமிழர்கள் சார்பாகத்தான் இந்தியா இலங்கையுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. எனவேதான் நாங்கள் இந்த இரு கோரிக்கைகளையும் முன்வைத்து இந்த நடைபயணத்தை மேற்கொள்கிறோம்.

தீர்வு கிடைக்க, இலங்கையி தமிழர்கள் அமைதியுடன் வாழ இந்தியா இந்த விடயத்தில் நேரடியாகத் தலையிட்டு தமிழர்களது உரிமைகளைக் காப்பாற்ற வேண்டும்.

ஆதலால் இந்த நடைபயணத்துக்கும், ஈழத் தமிழருக்கான தீர்வுக்கும் இந்திய மக்களும், இந்தியாவும் உதவியும் ஆதரவும் வழங்கவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம்.

ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி

EELAM NATIONAL DOMECRATIC LIBERATION FRONT

E.N.D.L.F.   

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com