Contact us at: sooddram@gmail.com

 

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம் - 16வது முதல் 21வது நாள்வரையான நிகழ்வுகள்!

மருத்துவ பரிசோதனையை முடித்துவிட்டு 31-01-2011 திங்கள் கிழமை கொன்ரபொல் என்ற இடத்தில் காலை 06:10 மணியளவில் புறப்பட்ட நடைபயணம் மிரியல்குண்டா என்ற இடத்தைக் கடந்து இரவு 08:00மணியளவில் நல்குண்டா என்ற இடத்தில் இரவு முகாம் அமைத்தனர். 31-01-2011 திங்கள் கிழமை நடைபயண வீரர்கள் 38 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்தனர். மொத்தமாக 532.8 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்திருந்தனர்.

17வது நாளான 01-02-2011 செவ்வாய்கிழமை காலை 06:00 மணியளவில் நல்கொண்டாவில் இருந்து புறப்பட்ட நடைபயண வீரர்கள் தொடர்ந்து நடைபயணத்தை மேற்கொண்டு 38.5 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்து இரவு 07:30 மணியளவில் நர்கட்பள்ளி என்ற இடத்தில் இரவு முகாம் அமைத்தனர். நடைபயண வீரர்களுக்கு வழிநெடுகிலும் பள்ளி மாணவர்கள் கைகொடுத்து வாழ்த்துச் சொல்லி அனுப்பிவைத்தனர். 17 நாட்களிலும் மொத்தமாக 571.3 கில  ீற்றர் தூரத்தைக் கடந்திருந்தனர்.

18வது நாளான 02-01-2011 புதன் கிழமை காலை 06:00 மணியளவில் நர்கட்பள்ளியில் இருந்து தொடங்கிய நடைபயணம் கோயில குளம் என்ற இடத்தைக் கடந்து இரவு 07:45மணியளவில் சொதுப்பல் என்ற இடத்தை அடைந்தனர். அங்கேயே இரவு முகாம் அமைத்தனர். புதன்கிழமை மட்டும் 34.5 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்திருந்தனர். மொத்தமாக 605.8 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்தனர்.

ஒவ்வொரு நாள் காலையில் புறப்படும் போதும் இரவு வந்து சேரும் போதும் வீரர்களின் உடல் ரீதியான கஸ்ரங்கள் கேட்கப்படுகிறது. ஏதாவது கஸ்ரங்கள் குறைகள் இருந்தால் உடனே நிவர்த்தி செய்யப்படுகிறது. ஆனால் வீரர்கள் எங்களுக்கு எந்தக் குறையும இல்லை என்று தெரிவித்து உற்சாகத்துடன் நடைபயணத்தை மேற்கொள்கிறார்கள்.

மருத்துவ முகாமில் பரிசோதனை செய்யப்பட்டு உடல் தகுதியில்லாத நபர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு இப்போது நலமுடன் இருக்கிறார்கள். எங்களையும் நடைபயண வீரர்களுடன் இணைத்து விடுங்கள் நாங்கள் இப்போது நலமுடன் இருக்கிறோம் என்று திரு. மங்களராஜா அவர்களிடம் தெரிவித்தனர். அதற்கு திரு. மங்களராஜசா அவர்கள் நடைபயணத்தை மேற்கொள்ள தேவையான நபர்கள் இருக்கிறார்கள், ஆகையால் நீங்கள் ஓய்வெடுங்கள் என்று தெரிவித்தார். அவர்கள் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

19வது நாளான 03-01-2011 வியாழன் காலை 06.30 மணியளவில் சொதுப்பல் என்ற இடத்திலிருந்து புறப்பட்ட நடைபயண வீரர்கள் மால்கபூர், கயாத் நகர் என்ற இடங்களைக் கடந்து இரவு 07;30 மணியளவில் எல்.பி. நகர் என்ற இடத்தை வந்து சேர்ந்தனர். அங்கு இரவு முகாம் அமைத்தனர். 19வது நாள் 30.5 கிலோமீற்றர்களைக் கடந்து மொத்தமாக 636.3 கிலோ மீற்றர் தூரங்களைக் கடந்துள்ளனர்.

20வது நாளான 04-01-2011 வெள்ளிக்கிழமை காலை 0520 மணியளவில் எல்.பி. நகரிலிருந்து புறப்பட்ட நடைபயணம் திரிநகா, செக்கந்திரபாத் (கைதரபாத் அருகில்) என்ற இடங்களைக் கடந்து 34.5 கிலோ மீற்றர் தூரங்கள் நடைபயணம் மேற்கொண்டு மாலை 06:00 மணியளவில் கண்ட்லாகோய் என்ற இடத்தில் அதாவது கைதராபாத் என்ற இடத்திலிருந்து 30 கிலோ மீற்றர் தூரம் தாண்டி தங்குவதற்காக முகாம் அமைத்தனர். நடைபயண வீரர்கள் மொத்தமாக 670.5 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்திருந்தனர்.

நடைபயணத்தின் 21 வது நாளான இன்று 05-01-2011 சனிக்கிழமை மருத்துவ பரிசோதனை. வீரர்களின் உடுப்பு சுத்தம் செய்ய மற்றும் ஓய்விற்காக இன்று முழு நேர ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது. மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் வீரர்கள் அனைவரும நல்ல உடல் தகுதியுடன் இருப்பதாக சான்றிதழ் வழங்கப்பட்டது.

மதிய இடைவேளைக்குப் பிறகு வீரர்கள் அனைவரும் ஒருவருடன் ஒருவர் கதைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்த வேளையில் ஒரு துக்கமான செய்தி வந்து சேர்ந்தது. வீரர்கள் மிகவும் கவலையடைந்தனர். நடைபயணம் மேற்கொண்டிருக்கும் கடலூர், குறிஞ்சிபாடி முகாமைச் சேர்ந்த திரு. சிவகுரு (அனில்) என்பவரின் தந்தை (திரு. கந்தசாமி அவர்கள்) உடல் நலக்குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி பெறப்பட்டது.

திரு. சிவகுரு அவர்கள் மிகவும் வேதனையடைந்தார். நான் எனது தந்தைக்கு மட்டும் தெரிவித்துவிட்டு வேறு யாரிடமும் தெரிவிக்காமல்தான் சென்னை வந்தேன். எனது தந்தை தனக்கு உடல்நிலை சரியில்லாத சூழ்நிலையிலும், இங்கு நான் பார்த்துக்கொள்கிறேன் என்று ஆறுதல் வழங்கி என்னை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

நான் எனது தந்தை இவ்வளவு மோசமான நிலையில் இருப்பார் என்று நினைக்கவில்லை என்று மனவேதனையுடன் அழுதார். நடைபயண வீரர்களுக்கு அவர் ஆறுதல் கூறினார், எனது தந்தையின் ஆத்மா எமது நடைபயணத்தை வெற்றி பெற வாழ்த்துக் கூறிக்கொண்டுதான் இருக்கும். நீங்கள் கவலைபட வேண்டாம், எனது தந்தைக்கு எனது கடமையை செய்துவிட்டு வருகிறேன், நீங்கள் நடைபயணத்தை தொடருங்கள் என்று வீரர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு சிவகுரு அவர்கள் இன்று தனது குறிஞ்சிபாடி முகாம் செல்கிறார்.

நடைபயண வீரர்கள் அதிக தூரம் நடந்து சென்றுவிட்தால் நாளை காலையில்தான் தனது முகாம் சென்றடைய முடியும் என்றும் தெரிவித்தார். அதற்கு முன்பு சென்னையிலிருக்கும் தனது நண்பர்களை முதலில் செல்லுமாறு தொலைபேசியில் அறிவித்துவிட்டு புறப்பட்டார்.

நடைபயண வீரர்கள் அனைவரும் இன்று ஒருவகை சோர்வுடன் காணப்பட்டனர். இலட்சிய வெறிகொண்ட வீரன் திரு. சிவகுரு அவர்கள் ஒருவகை இறுகிய மனதுடன் வாழ்த்துச் சொல்லி அனுப்பிய தனது தந்தைக்கு இறுதி கடமையைச் செய்ய இன்று கடலூர் புறப்பட்டுச் செல்கிறார்.

திரு. ஞானராஜா அவர்கள்

நடைபயண தலைமைக்குழு

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com