Contact us at: sooddram@gmail.com

 

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம் 24 மற்றும் 25வது நாள் நிகழ்வுகள்!

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணத்தின் 24வது நாளான 08-02-2011 செவ்வாய்கிழமை காலை 05:30 மணியளவில் புறப்பட்டு காட்டு வழியில் பயணத்தைத் தொடர்ந்தது. சாலைகள் சாயாக இல்லாததால் நடைபயண வீரர்கள் வேகமாக நடக்க முடியவில்லை. மிகவும் சிரமப்பட்டு நடந்த நடைபயண வீரர்கள் தினமும் நடக்க வேண்டிய சராசரியான தூரத்தை கடக்க அதிக நேரம் எடுத்துக்கொண்டார்கள். இரவு 10:00 மணியளவில்தான் இரவு முகாம் வந்து சேர்ந்தனர். 24வது நாளான நேற்று செவ்வாய்கிழமை மிகவும் சிரமப்பட்டு 40 கிலோ மீற்றர் தூரம் நடந்தார்கள். மொத்தமாக 788.5 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்தனர்.

காட்டு வழி பயணமாகையினால் ஒரு சில வீரர்கள் ரைபாய்டு மற்றும் மலேரியா காச்சலினால் அவதிப்படுகின்றனர். அதில் நடைபயண வீரர்களாலும் மற்றும் அனைவராலும் குண்டு மாமா என்று அன்புடன் அழைக்கப்படும் திருவண்ணாமலை முகாமிற்கு வெளியில் தங்கியிருக்கும் திரு. சேதுபதி மாமா அவர்களுக்கும் மலேரியா காச்சல் தொற்றியுள்ளது. மிகவும் கஸ்ரப்பட்ட அவருக்கு அங்கேயே சிகிச்சையளிக்கப்பட்டது.  எனினும் அவர் ஓய்வு எடுக்காத காரணத்தினால் காச்சல் குணமாகவில்லை.

அவர் சிகிச்சைக்காக சென்னைக்கு கட்டாயத்தின் பேரில் வரவழைக்கப்பட்டார். அவர் எனக்கு காச்சல் குணமாகாவிட்டாலும் பரவாயில்லை, என்னை உடனே எனது பிள்ளைகள் (நடைபயண வீரர்கள்) இருக்கும் இடத்திற்கு அனுப்பிவையுங்கள் என்று பாசத்துடன் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவரின் அன்பு கலந்த வெருட்டலுக்கு நடைபயண வீரர்கள் அனைவரும் அடிமையாகியுள்ளனர் நடைபயண வீரர்கள் குண்டுமாமா எப்போது திரும்பி வருவார் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

குண்டு மாமாவுக்கு காச்சல் அதிகமானதால் சென்னை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இப்போது குணமடைந்து வருகிறார். நடைபயண வீரர்களுக்கு தொலைபேசியில் தினமும் தொடர்பு கொண்டு மாமா கெதியில் வந்துவிடுவேன் யோசிக்க வேண்டாம் என்று நடைபயண வீரர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். விரைவில் அவர் நடைபயண வீரர்களோடு இணைந்துகொள்வார்.

25வது நாளான இன்று (09-02-2011 புதன் கிழமை) காலை 05:30 மணியளவில் மீண்டும் காடுகள் வழியாக பயணத்தை தொடங்கிய நடைபயண வீரர்கள் மோசமான சாலைகள் வழியாக பயணித்து. விழியில் சிறிய சிறிய கிராமங்களைக் கடந்து சற்று நேரத்திற்கு முன்னர் இரவு 10:00 மணியளவில் 41.5 கிலோ மீற்றர்கள் கடந்து இரவு முகாம் வந்து சேர்ந்தனர். மொத்தமாக 830 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்துள்ளனர்.

இன்று பகல் நேரத்தில் ரி.வி.5 என்ற உலகத்தில் அனைத்து மொழிகளிலும் ஒலிபரப்பாகும் தொலைக்காட்சி நிறுவனம் வந்து எங்களோடு உரையாடி வீடியோ படங்கள் எடுத்து பேட்டிக்கண்டனர். திரு. சகானி (P.T.I.District correspondent)  அவர்கள் திரு. ஞானராஜா அவர்களிடமும் திரு. மங்களராஜா அவர்களிடம் மற்றும் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் துணைப் பொதுச் செயலாளர் திரு. வசீகரன் அவர்களிடமும் பேட்டி எடுத்தார்கள்.

திரு. வசீகரன் அவர்கள் நடைபயணத்தின் நோக்கத்தையும், இலங்கையின் அரசியல் சூழ்நிலைகளையும் ஆங்கிலத்தில் விபரமாக தெளிவாக எடுத்துரைத்தார். திரு. சகானி அவர்கள் உங்கள் நியாயமான கோரிக்கைகளுக்கு நிச்சயமாக நாங்கள் தொடர்ந்து ஆதரவு தருவோம் என்று கூறி உறுதி வழங்கி வாழ்த்துக் கூறிச் சென்றார்கள்.

மேலும் இன்று இரவு முகாம் அர்குல் என்ற கிரமாத்தில் உள்ள உயர்திரு. கங்காரெட்டி என்ற உயர்ந்த மனிதர் தனது தோப்பில் முகாம் அமைக்குமாறு கேட்டுக்கொண்டதிற்கினங்க அங்கு இரவு முகாம் அமைத்திருந்தனர்.

திரு. கங்காரெட்டி அவர்கள் வீரர்களின் உடல்நலன்களை தெரிந்துகொண்டு, சிறப்பு மருத்துவர் ஒருவரை வரவழைத்து மருத்துவ பரிசோதனை செய்து, தனது சொந்த செலவில் சிகிச்சை மற்றும் மருந்துகள் கொடுத்து மருத்துவ முகாம் நடத்திக்கொண்டிருக்கிறார். இவைமட்டுமல்லாமல் மேலும் பல உதவிகள் செய்வதாக கூறியுள்ளார்.

திரு. கங்காரெட்டி அவர்கள் நடைபயண வீரர்களின் முகாமில் தங்கி நடைபயண வீரர்களின் ஒவ்வொரு குறைகளையும், ஈழத் தமிழர்களின் வரலாரையும் கேட்டுத் கொண்டு ஈழத் தமிழர்களுக்கும் அவர்களுக்கு ஆதரவான உங்களுக்கும் எங்களது ஆதரவு தொடர்ந்து இருக்கும் என்று தெரிவித்து மருத்துவ முகாம் முடியும் வரை அங்கே இருப்பதாகவும் மீண்டும் காலையில் வருதாகவும் தெரிவித்தார்.

நடைபயண வீரர்கள் திரு. கங்கா ரெட்டி அவர்களின் அன்பிலும் கனிவான பேச்சிலும் அரைவாசி வருத்தம் குறைந்துவிட்டதாக அவரிடம் தெரிவித்து நன்றி தெரிவித்தனர்.

இவ்வண்ணம்,

சீ. வசீகரன்

நடைபயண தலைமைக் குழு

09-02-2011

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com