Contact us at: sooddram@gmail.com

 

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம் - 26வது நாள் நிகழ்வுகள்!

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணத்தின் 26 வது நாளான 10-02-2011 வியாழக்கிழமை நடைபயண வீரர்கள் காலை 05:30 மணியளவில் அர்குல் என்ற இடத்திலிருந்து புறப்பட்டு நிர்மல் என்ற இடத்தை நோக்கி நடந்தனர். காடுகள் அடுத்து கிராமங்கள் என்று நடந்து இரவு 09:00 மணியளவில் 40 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள சோனாபேட் என்ற இடத்தை அடைந்தனர். அங்கேயே இரவு முகாம் அமைத்தனர். இன்று இரவு வரை மொத்தமாக 870 கிலோ மீற்றர் தூரத்தை நடைபயண வீரர்கள் கடந்தனர்.

நடைபயண வீரர்களில் ஒரு சிலரைத் தவிர அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கின்றனர். அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான உணவு உட்பட அனைத்தும் சரியான நேரத்தில் உயர்திரு. தம்பி தோழர் அவர்களின் தலைமையிலான குழு வழங்கி வருகிறது. உயர்திரு. தம்பி தோழர் அவர்கள் வீரர்களின் உடல் ஆரோக்கியத்தில் மிகுதந்த பொறுப்புடன் நடந்து வருகிறார்.

உயர்திரு. தம்பி தோழர் அவர்களின் குழுவுக்கு துணையாக திரு. கரன் அவர்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். தேவையான நேரத்தில் அனைத்துப் பொருட்களையும் குறுகியகால இடைவெளிக்குள் வாங்கிக்கொடுத்து தேவைகளை நிவர்த்தி செய்து கொடுத்தும் வருகிறார் மேலும் பல முக்கியமான வேலைகளையும் கரன் அவர்கள் பொறுப்பிலே தலைமைக்குழு கொடுத்துள்ளது.

திரு. கரன் அவர்கள் தாத்தா நெடுந்தீவைச் சேர்ந்த உயர்திரு. கார்த்திகேசு வேலயுதம்பிள்ளை மாஸ்ரர் அவர்கள் கடந்த 02-02-2011 அன்று மதியம் இயற்கை ஏய்தினார். கரன் அவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மிகவும் வேதனை அடைந்தார். நடைபயண வீரர்களை தலைமையேற்று நடத்தி வரும் உயர்திரு. ஞா.ஞானராஜா அவர்கள் கரன் அவர்களை தாத்தாவின் இறுதி கிரியைக்கு சென்று வரும்படி கேட்டுக்கொண்டார். உயர்திரு. ஞானராஜா அவர்களுக்கும் அவர் நெருங்கிய உறவினர்தான்.

திரு. கரன் அவர்கள், நான் நடைபயணத்திற்கு வரும்போது என்னை வாழ்த்தி விட்டு, உங்களால் பயணத்தை தொடரமுடியுமா? கணதூரமாச்சே, இறைவன் அருளால் நீங்கள் நடந்து முடிக்க வேண்டும், இந்தியா மீண்டும் நேரடியாகத் தலையிட்டு எங்கட நாட்டுப் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றார் என்று கண்ணீரோடு கூறி நான் போகவில்லையென்று மறுத்துவிட்டார்.

 

உயர்திரு. கார்த்திகேசு வேலாயுதம்பிள்ளை மாஸ்ரர் அவர்களின் நல்லடக்கம் 08-02-2011 செவ்வாய்கிழமை நடைபெற்றது. இலங்கையிலிருந்து வந்த மாஸ்ரர் அவர்களது உறவினர்கள் உயர்திரு. ஞா.ஞானராஜா அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு கரன் இங்கு வரவேண்டாம், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், நடைபயணத்தை தொடரச் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டனர்.

எனினும் திரு. ஞானராஜா அவர்கள் கரன் அவர்களிடம் உங்களது தாத்தாவின் இறுதிக் கிரியைக்குச் சென்று வாருங்கள் என்று கேட்டுக்கொண்டார், தலைமைக் குழுவும் சென்றுவருமாறு பணித்தது. அதற்கு கரன் அவர்கள், நான் நடைபயணத்தில் இருந்து இடையில் திரும்பி அங்கு சென்றால்தான் எனது தாத்தாவின் ஆத்மா சாந்தியடையாது.

எனது தாத்தாவின் கடைசி ஆசை நடைபயணத்தை எப்படியாவது முடிக்க வேண்டும் என்றுதான் அதனால் எனது தாத்தாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும், அதனால் நான் நடைபயணத்தை தொடர விரும்புகிறேன் என்று கண்ணீரோடு தெரிவித்து விட்டு நடைபயணத்தில் தனது கடமையை செவ்வென செய்து வருகிறார்.

இன்று காலையில் ஆந்திர மாநில தொலைக்காட்சி நிறுவனமான “ஐ நியூஸ்நடைபயண வீரர்களை வீடியோ எடுத்து செய்திகள் சேகரித்துச் சென்று தொலைக்காட்சியில் ஒலிபரப்பி ஆதரவு வழங்கினர். மேலும் மாலை நேரத்தில் சொக்ஸி மற்றும் ஈநாடு என்ற ஆந்திராவில் பிரசித்திப் பெற்ற பத்திரிகைகளும் வந்து நடைபயணம் பற்றிய செய்திகளை மீண்டும் சேகரித்து தொடர்ந்து ஆதரவு வழங்குவதாகக் கூறிச் சென்றனர். ஆந்திர மாநில தொலைக்காட்சி நிறுவனமான ஜீ தொலைக்காட்சி உள்பட பல தொலைக்காட்சிகன் நேற்றும இன்றும் நடைபயணத்தை பற்றிய செய்திகளையும் படங்களையும் ஒலிபரப்பி ஆதரவு வழங்கியிருந்தனர்.

இந்த இலட்சிய வீரர்களின் நடைபயணம் வெற்றி பெற ஈழத் தமிழர்களும் இந்திய மக்களும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி!

இவ்வண்ணம்,

மங்களராஜா

நடைபயணக் குழுத் தலைவர்

26-02-2011

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com