Contact us at: sooddram@gmail.com

 

உரிமைக்கான நெடும்பயணம்! - ஈ.என்.டி.எல்.எப். தலைவர் ஞா.ஞானசேகரன்

ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி சார்பாக முதலில் எங்களது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஈழத் தமிழரின் விடுதலைக்கான போராட்டம் பல வழிகளில் பந்தாடப்பட்டு இன்று எதுவுமே அற்ற மிகப் பொரிய வெற்றிடத்தை ஏற்படுத்தி திக்குத் தெரியாமல் திகைத்து நிற்கிறது. எங்கள் இனம் விடுதலை பெறுவதற்கான அனைத்துத் தகுதிகளையும் பெற்றிருந்தது. எங்கள் இனத்துக்கு விடுதலை ஒன்றுதான் தீர்வு என்பதை சிங்கள அரசு உலகத்துக்குப் பல வழிகளிலும் பகிங்கிரமாகக் காண்பித்தது.

விடுதலை இயக்கங்கள் என்று புறப்பட்ட அமைப்புகள் தங்கள் அணியினை முதன்மைப்படுத்த முற்பட்டனரே தவிர எங்களது மக்களின் விடுதலைக்கு என்ன வழி என்பதைக் கண்டுகொள்ளாமல் பாதைகளை மாற்றிக்கொண்டனர். புலிகள் இயக்கம் ஏனைய இயக்கங்களை அழித்து தான் மட்டுமே ஏகப்பிரதிநிதி என்று எங்கள் இனத்தின் பலம் எது பலவீனம் எது என்று தெரியாமல் ஆயுதம் மட்டுமே விடுதலையைப் பெற்றுத் தரும் என்று அராஜகத்தில் ஈடுபட்டனர். இவர்களது அநீதிக்குப் பயந்து சில இயக்கங்கள் எதிரியான சிங்கள அரசிடம் அடைக்கலம் தேடினர். பின்நாளில் அமைதிப்படைக்கு அஞ்சி விடுதலைப் புலிகளும் அதே எதிரியான சிங்கள அரசிடம் தஞ்சமடைந்தனர்.

இந்த இரு சாராருமே அச்சத்தின் அடிப்படையில் எதிரியிடம் உதவி பெற்றவர்கள்தான். இப்படி உதவி பெற்றவர்களில் ஒரு பகுதியினர் எதிரியிடமே ஐக்கியமாகி எங்கள் இனத்துக்கு தவறான வழி காட்டுதலை மேற்கொண்டு வருகின்றனர்.

1987ல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் தமிழ் இனத்தின் முழுமையான விடுதலைக்கான தீர்வல்ல. பலவீனப்பட்டிருந்த எங்கள் இனத்துக்கு கிடைத்த குறைந்த பட்ச அங்கீகாரமாகும் அந்த ஒப்பந்தம். இந்த அங்கீகாரத்தை அன்றைய அமெரிக்க ஏகாதிபத்தியமும், சிறிலங்கா அரசும் முறியடிக்க முற்பட்டன!

விடுதலைப் புலிகளின் அமைப்பு இந்த முறியடிப்புக்குப் பயன்படுத்தப்பட்டது. தமிழகத்திலிருக்கும் சில தரகர்களும், வேறு கண்டங்களிலிருந்த சில தரகர்களும் புலிகளைப் பயன்படுத்தி ஈழத் தமிழருக்கும் இந்தியாவுக்கும் இழிவை ஏற்படுத்தினர்.

அமைதிப்படை ஈழம் சென்ற போது புலிகளின் அமைப்பினர் திரு. திலீபனை உண்ணாவிரதம் இருக்கும்படி தூண்டி அவரை மரணமடையச் செய்தனர். அவர் எதற்காக உண்ணா நோன்பு மேற்கொண்டார் என்பதை யாராவது சிந்தித்துப் பார்த்ததுண்டா?

இந்திய-இலங்கைஒப்பந்தத்தினை உடனே நிறைவேற்ற வேண்டும் என்றுதான் உணவு உண்ணாமல் இருந்து மரணித்தார்.

அப்படியாயின்இந்திய-இலங்கைஒப்பந்தத்தினை புலிகள் இயக்கம் ஏற்றுக்கொண்டுதான் அதனை நடைமுறைப்படுத்தச் சொன்னார்கள் என்பதுதானே உண்மை!

காலம் தாழ்த்தக்கூடாது உடனே நிறைவேற்றி அதிகாரத்தைத் தங்களிடம் தர வேண்டும் என்றுதானே புலிகள் கோரினர். தமிழ் இனத்துக்கான அந்த இடைக்காலத் தீர்வை புலிகளின் பின்னணியிலிருந்து யாரோ ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் குழப்பியுள்ளனர் என்பதுதான் உண்மை.

திரு. பிரபாகரன் அவர்கள் தனக்கு மட்டும்தான் அதிகாரம் வேண்டும் என்று அடம் பிடித்த வேளை ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.) இயக்கத்தைச் சேர்ந்த நாங்கள் எங்களுக்கும் அதிகாரம் வேண்டும் என்று போட்டிப் போட்டுக் குரல் கொடுக்கவில்லை.

எங்களுக்குத் தேவை ஓர் மாநில அரசு, அது யார் கைகளில் கிடைத்தாலும் தமிழ் மக்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் என்று நாங்கள் இந்த அதிகாரப் போட்டியில் கலந்து கொள்ளவில்லை!

திரு. பிரபாகரன் அவர்கள்இந்திய-இலங்கைஒப்பந்தத்தை நிராகரித்து, தமிழர்களுக்குக் கிடைக்கவிருந்த குறைந்த அளவு உரிமையான அங்கீகாரத்தை குழப்பி, இந்தியாவுக்கு எதிராகத் துப்பாக்கியைத் திருப்பி, ஒப்பந்தத்தை குழப்புவதற்குப் புறப்பட்டப் பின்னர்தான் ஈ.என்.டி.எல்.எப். மாநில அரசில் பங்கு கொள்வெதென்று முடிவெடுத்தது.

எங்கள் இயக்கத்தைப் பற்றி விடுதலைப் புலிகளும் அவர்களது கூலிப் பேச்சாளர்களும் மிகவும் மோசமான கட்டுகதைகளுடன் கூடிய விசமப் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.இந்தியாவின் கைக்கூலிகள்’, “றோ அமைப்பின் செல்லப்பிள்ளைகள்”, “றோ வினால் தயாரிக்கப்பட்ட அமைப்புஎன்றெல்லாம் தங்களது அரைகுறை அறிவைக் கொண்டு எதிர்ப் பிரசாரம் மேற்கொண்டனர், இன்றும் மேற்கொள்கின்றனர்.

எங்கள் இயக்கத்தைப் பற்றிக் குற்றஞ்சாட்ட எதுவுமே இல்லாதபடியால் குறைந்த பட்சம் இதையாவது சொல்லிவைப்போம் என்று உரக்கச் சொல்ல அதை எங்கள் மக்களில் ஒரு பகுதியினர் நம்பிக்கொண்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் பற்றிய விமர்சனங்களையோ எங்களைப் பற்றிய விளக்கங்களையோ நாங்கள் விவாதித்துக் கொண்டிருக்க இது நேரமல்ல. எனவே அவர்களது விமர்சனங்களுக்கு நாங்கள் பதில் கொடுப்போம். அதேவேளை நாங்கள் முன்வைக்கும் விமர்சனத்துக்கு அவர்களால் பதில்கூற முடியாது திகைத்து நிற்பார்கள் என்பது உறுதி! எனவே அதனை பின்வரும் நாட்களில் காணலாம்.

இப்போது நாங்கள் மேற்கொள்ளும் இந்த நடைபயணமானது இந்தியாவின் நல்லெண்ணத்தை ஈழத் தமிழர்களின் பக்கம் திருப்ப வேண்டும் என்பதுடன், இந்தியா எங்கள் இனத்தின் சார்பாக கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன்,

1948ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழர்களின் பூர்விகப் பகுதிகளில் சிங்கள அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி திட்டமிட்டுக் குடியேற்றிய சிங்களக் குடியேற்றவாசிகளை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து இந்த நடைபயணத்தை மேற்கொள்கிறோம்.

ஈழத் தமிழர்களின் முக்கிய பிரச்சினையே இந்தச் சிங்களக் குடியேற்றங்கள்தான். எஙகளின் பூர்விகப் பகுதியை ஆக்கிரமிக்கும் உரிமை சிங்கள அரசுக்குக் கிடையாது. பிரித்தானியர் செய்துவிட்ட தவறு சிங்களவரது கைகளுக்கு ஆட்சியுரிமை சென்றது.

அந்த ஆட்சி உரிமையை சிங்கள இனத்தவர் தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தி வருகின்றனர். தமிழ் இனத்துக்கும் சிங்கள இனத்துக்குமான பகை 2000 ஆண்டுகளைக் கொண்டது. இந்தப் பகையை பிரித்தானியரின் புண்ணியத்தில் இப்போது தீர்த்துக் கொண்டுள்ளனர் சிங்கள இனத்தவர்.

ஈழத்தில் நடைபெற்றது இன அழிப்பு நடவடிக்கையே அல்லாமல் பயங்கரவாத ஒழிப்பு அல்ல. வெளியுலகுக்கு பயங்கரவாதம், உள்ளுர அது பேரினவாதம்! அந்தப் பேரினவாதம் தமிழர் பகுதிகள் முழுவதையும் கைப்பற்றி சூறையாடியுள்ளது.

இந்தச் செயலானது 18ம் மற்றும் 19ம் நூற்றாண்டை நினைவுப் படுத்தியது. சூறையாடுதல் ஓய்ந்த பின் இப்போது தமிழினத்தின் ஆணிவேரை அறுக்கும் செயலை சிங்கள அரசு மேற்கொண்டு வருகிறது.

இவற்றினைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றால் உடனடியாக நடைமுறைச் சாத்தியம்இந்திய-இலங்கைஒப்பந்தம்தான். அதனை முழுமையாக நிறைவேற்றினால் எங்கள் இனம் காக்கப்படும்.

இதுமட்டுமல்ல, வடக்குக் மற்றும் கிழக்கு மாகாணங்களில் குடியேற்றப்பட்ட சிங்களக் குடியேற்றவாசிகள் வெளியேற்றப்பட்டால் தமிழ் இனம் அமைதியாக வாழ முடியும். இவர்கள் எங்கள் பகுதிகளில் இருக்கும் வரை எங்கள் இனம் அமைதியாக வாழ முடியாது.

நாங்கள் முன்னெடுத்துள்ள இந்த முயற்சியினை புலிகளின் தமிழகத்து ஆதரவாளர்கள் விபரம் புரியாமல் வெறும் கூலிக்காக பிதற்றுகிறார்கள், “இந்திய அரசின் ஏற்பாடு”, “றோவின் ஏற்பாடு”, “காங்கிரஸ் கட்சியின் ஏற்பாடுஎன்று தங்களது உள்ளுர் வாக்கு வேட்டைக்குமாகச் சேர்த்து எங்களின் இந்த முயற்சியை முறியடிக்க முற்பட்டுள்ளனர்.

இந்திய அரசின் ஏற்பாடு என்றால் சிங்களக் குடியேற்றங்களை அகற்றக்கூடாது என்றா இந்த நபர்கள் கேட்கிறார்கள், முழுமையாக ஒப்பந்தம் நிறைவேற்றப்படக் கூடாது என்றால் இந்த நபர்களால் வேறு தீர்வு ஒன்றினைப் பெற்றுத் தரமுடியுமா?

இந்த நபர்களது வீண் பேச்சுக்களைக் கேட்டு திருப்திப்படும் தமிழர்கள் பல ஆயிரக்கணக்கானவர்கள் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். இதனால் இந்த நபர்கள் உற்சாகம் அடைந்து மேலும் மேலும் தமிழ் இனத்துக்குத் தீமை செய்கின்றனர் தமிழ் உணர்வாளர்கள் என்ற தந்திரத்தினால்.

ஈழத் தமிழர்ளுக்கு இப்போது சாத்தியம் எதுவோ அதனைப் பயன்படுத்தி தமிழர்களையும், அவர்களது பூர்விகப் பகுதிகளையும் காப்பாற்ற வேண்டும். அதன் பிறகுதான் அடுத்தக்கட்டத்தைப் பற்றி யோசிக்க வேண்டும்.

இதனை விடுத்து வாயை மட்டும் முதலீட்டாகக் கொண்டு பிழைப்பு நடத்தும் நபர்களுக்குப் பின்னால் இனியும் அலையக்கூடாது என்று கோருவதுடன் நாங்கள் முன்னெடுத்திருக்கும் இந்த முயற்சிக்கு தமிழ் மக்கள் முன்வந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டுவதுடன், சிங்களக் குடியேற்றவாசிகளை எங்களது பூர்விகப் பகுதிகளிலிருந்து வெளியேற்ற இந்தப் பிரச்சினையை உலக நாடுகளுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வண்ணம்,

ஞா.ஞானசேகரன்

தலைவர்,

ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி

(ஈ.என்.டி.எல்.எப்.)

23-01-2011

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com