Contact us at: sooddram@gmail.com

 

சிங்கள அரசோடு இணைந்து ஈழத்தமிழ் இனத்தை இல்லாதொழிக்கும் யு.என்.எச்.சி.ஆர்! - ஈ.என்.டி.எல்.எப்.

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை ஏமாற்றி இலங்கைக்கு அனுப்பி ஈழத் தமிழினத்தை இல்லாதொழிக்கும் யு.என்.எச்.சி.ஆர் அமைப்பின் நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்தும் படி இந்திய அரசையும், தமிழக அரசையும் வேண்டிக்கொள்கிறோம். இலங்கைத் தமிழருக்கு ஒரு நியாயமான தீர்வு ஏற்படுத்திக் கொடுக்கும் சர்வதேசத்தின் முயற்சியை சீர்குலைக்கும் முயற்சியாக யு.என்.எச்.சி.ஆர் இலங்கை அரசுடன் இணைந்து தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை ஏமாற்றி ஆசைவார்த்தைகள் கூறி இலங்கைக்கு அழைத்துச் சென்ற செய்தி கேட்டு நாம் பேரதிர்ச்சி அடைந்துள்ளோம்.

இலங்கையில் எம் சொந்த மண்ணில் இன்னும் இரண்டு லட்சம் (200000) தமிழ் மக்கள் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் இங்குள்ள அகதிகளுக்கு பாயும், சமையல் உகரணங்களையும் இலவசமாக கொடுத்து விமானக்கட்டணத்தையும் அவர்களே வழங்கி கடந்த 5ம் திகதி செவ்வாய்கிழமை தமிழகத்திலிருந்து 1000 அகதிகளை யு.என்.எச்.சி.ஆர். அமைப்பு அழைத்துச் சென்று இலங்கை அரசிடம் ஒப்படைத்துள்ளது.

2009ம் ஆண்டு போரின் போது அந்த மக்கள் கொல்லப்படப் போகிறார்கள் என்று தெரிந்தும் யு.என். அமைப்பு வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலிருந்து வெளியேறியது. இலங்கை அரசாங்கம் தமிழ் இனத்தவர்களை சாட்சியம் இல்லாமல் அழிக்கும் நடவடிக்கைக்கு வழிசமைத்துக் கொடுத்ததும் இதே யு.என்.எச்.சி.ஆர். தான். உண்மையில் யு.என். அமைப்பு மக்களுக்கான அமைப்பாக இருந்திருந்தால் அந்த மக்களைக் காப்பாற்ற முயற்சி செய்திருப்பார்கள். அதை விடுத்து, அந்த மக்களை இலங்கை அரசு அழிப்பதை வேடிக்கைப் பார்த்துகொண்டிருந்துவிட்டு இன்று இறுதி யுத்தத்தில் 40,000 மக்கள் கொல்லப்பட்டதாக மரணச் சான்றிதழ் வழங்கிக் கொண்டிருக்கிறது.

இறுதி நேர யுத்தத்தில் காயமடைந்த மக்களைக் காப்பாற்ற இந்திய மருத்துவக் குழு திருகோணமலையிலுள்ள 'புல்மோட்டை" என்ற இடத்தில் மருத்துவமணை அமைத்து காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அழித்து வந்தது. யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த பகுதிகளில் இருந்த அதாவது முல்லைத்தீவு கடல் மார்க்கமாக காயப்பட்ட மக்களை இதே யு.என்.எச்.சி.ஆர். என்ற அமைப்பு கப்பல் மூலமாக அழைத்து வந்து இந்திய மருத்துவக் குழுவிடம் ஒப்படைக்காமல் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைத்தது. இவர்கள் மூலமாக இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட மக்களின் விபரங்கள் எதையும் இவர்கள் பதிவு செய்து வைக்கவில்லை. அல்லது அப்பதிவுகளை வேண்டுமென்றே மறைத்துவிட்டனர்.

இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட, காயமடைந்த தமிழ் மக்களில் எத்தனை பேர் சித்திரவதைச் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டனர் என்பது அந்த நேரத்தில் யு.என்.எச்.சி.ஆர். அமைப்பில் செயல்பட்டவர்களுக்கு நிச்சயமாக தெரியும். பல ஆயிரம் காயப்பட்ட மக்களை சிகிச்சை அளிக்கிறோம் என்று கூறி சிங்கள இராணுவத்திடம் ஒப்படைத்தததையும், அவர்கள் எப்படியான கொடுமைகளைச் செய்து அவர்களின் உடைமைகளைப் பறித்துக் கொண்டு அவர்களை கொலை செய்தார்கள் என்பதையும் ஈழ மக்கள் இன்றுவரை மறக்கவில்லை. இந்த அழிப்பு நடவடிக்கைக்கு யு.என்.எச்.சி.ஆர். அமைப்பு உடந்தையாக இருந்ததையும் எம்மக்கள் மறக்கவில்லை.

யு.என்.எச்.சி.ஆர். அமைப்பு அன்று செய்த அதே வேலையைத்தான் இன்றும் செய்துகொண்டிருக்கிறது. இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் போது, இந்தியாவில் உள்ள அகதிகளை எந்த அடிப்படையில் யு.என்.எச்.சி.ஆர். அமைப்பு மீண்டும் இலங்கைக்கு அழைத்துச் செல்கிறது? வடகிழக்கு தமிழர் பிரதேசங்களில் தமிழர்கள் பலியாவது தொடர்ந்துகொண்டிருக்கிறது. கடத்தல், காணாமல் போதல், கற்பழிப்பு, கொலை, சமூக சீரழிப்பு போன்ற சம்பவங்கள் தினந்தோறும் அரங்கேறிகொண்டிருக்கும் இவ்வேளையில், ஏன், தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் எந்த உத்தரவாதத்துடன் யு.என்.எச்.சி.ஆர். எம் மக்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்துச் செல்கிறது? அதிலும் ராஜபக்சேயின் வலதுகரமாக மாறி  கருணாவிடம் எம் மக்களை ஒப்படைக்கின்றனர். தமிழ் யுவதிகளை சிங்களவருக்கு இரையாக்கும் கருணா போன்றவர்களின் வழிகாட்டலில்தான் இந்த யு.என்.எச்.சி.ஆர். அமைப்பு எம் மக்களை ஏமாற்றுகின்றனர்.

ஆகவே தமிழக அரசும் இந்திய மத்திய அரசும் இவ்விடயத்தில் தலையிட்டு இந்த யு.என்.எச்.சி.ஆர். அமைப்பின் தமிழர் விரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரமான ஓர் அரசியல் தீர்வு கிடைக்கும் வரைக்கும், பாதுகாப்பும், சுதந்திரமும் உறுதி செய்யப்படும் வரை தமிழகத்தில் வாழும் ஈழத்து அகதிகள் யாரையும் யு.என்.எச்.சி.ஆர். அமைப்பு அழைத்துச் செல்ல அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசையும், மத்திய அரசையும் ஈழத் தமிழ் மக்கள் சார்பாக, ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியினராகிய (ஈ.என்.டி.எல்.எப்.) நாங்கள் மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

 

இவ்வண்ணம்,

ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி

(ஈ.என்.டி.எல்.எப்.)

06-07-2011

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com