Contact us at: sooddram@gmail.com

 

தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைப் பெறுவதற்கு சரியான இடம் பாராளுமன்றத் தெரிவுக்குழு

நேர் கண்டவர்: மர்லின் மரிக்கார்

கேள்வி : உங்களது அரசியல் வாழ்வின் இருபதாண்டு நிறைவு தொடர்பாக சுருக்கமாக விபரிக்க முடியுமா?

பதில : ஆம். இற்றைக்கு இருபது வருடங்களுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் ஊடாக நேரடி அரசியலில் பிரவேசித்தேன். அன்று உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றிபெற்று நேரடி அரசியலுக்கு வந்த நான் மாகாண சபை மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.

இப்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்து பெற்ற அமைச்சராக இருக்கின்றேன்.

மக்கள் தொடர்ந்தும் எனக்கு அளித்து வரும் ஆதரவு, ஒத்துழைப்பு காரணமாக நான் நேரடி அரசியலில் இருக்கின்றேன். அரசியல் வாதியிடம் எவ்வளவு தான் பணம் இருந்தாலும் மக்கள் ஆதரவு, ஒத்துழைப்பு இல்லா விட்டால் நேரடி அரசியலில் இருக்க முடியாது.

இது வரலாறாகும். அந்த வகையில் எனக்கு தொடர்ந்தும் ஆதரவு நல்கி வருகின்ற ஹம்பாந் தோட்டை மாவட்ட மக்களுக்கு முதலில் நன்றி கூறி அவர்களைக் கெளரவப்படுத்த விரும்புகின்றேன்.

நான் எப்போதும் மக்களுடனேயே இருப்பவன். அவர்களது குரல்களுக்குச் செவி தாழ்த்தி அவர்களது குறைகளை யும், தேவைகளையும் நிறைவேற்றி வைக்கின்றேன்.

இதன் பயனாக தேர்தலுக்காக ஆகக்குறைந்தளவு பணத்தை செலவிடும் ஒருவராக நான் இருக்கின்றேன். இதனை நான் பெருமை யோடு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

எனது மக்கள் எனக்கு அளித்து வருகின்ற ஆதரவு, ஒத்துழைப்பு தொடர்ந்து அதிகரித்தே வருகின்றது. இதற்கு தேர்தல்களில் நான் பெறுகின்ற விருப்பு வாக்குகள் நல்ல சாட்சியமாக இருக்கின்றது.

எமது ஆளும் கட்சி தோல்வியுற்ற தேர்தலிலும் கூட எனது விருப்பு அதிகரித்தே இருந்தது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் இலங்கையில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவர்கள் பட்டியலில் எனக்கு ஐந்தாவது இடம் கிடைக்கப் பெற்றது. இதற்கு மக்கள் அளித்து வரும் ஆதரவே அடிப்படை.

கேள்வி : அரசியலில் இருபதாண்டு களை நிறைவு செய்திருக்கும் நீங்கள் இவ்வேளையில் விசேட நிகழ்ச்சிகள் ஏதாவது ஒழுங்கு செய்துள்Zர்களா?

பதில : மக்களுக்கென பல நலனோம்பு திட்டங்களை செயற்படுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளேன். இதற்கென ஒரு மாதகால நிகழ்ச்சித்திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கின்றது. இந்தக் காலப்பகுதியில் பல அபிவிருத்தித் திட்டங்களுக்கு அடிக்கல் நடப்படவுள்ளன. மேலும் பல அபிவிருத்தித் திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்படவிருக்கின்றன. அத்தோடு சமூக, கலாசார நிகழ்வுகளும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

மக்கள் தொடர்ந்து எனக்கு அளித்து வரும் ஆதரவு, ஒத்துழைப்புக்காக அவர்கள் நன்மை பெறும் வேலைத்திட்டங்களையே இந்த சந்தர்ப்பத்தில் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றேன். அவர்களை மறந்து என்னால் ஒரு போதும் செயற்பட முடியாது. அதனால் இரவு 12.00 மணிக்கு மக்கள் என்னைத் தேடிவந்தாலும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைக்கின்றேன்.

கேள்வி : உங்களிடம் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. இந்த அமைச்சு தொடர்பாக உங்களது அபிப்பிராயம் என்ன?

பதில : இலங்கையிலுள்ள மிக முக்கியமான அமைச்சுகளில் ஒன்றுதான் அனர்த்த முகாமைத்துவம். அந்த அமைச்சையே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் என்னிடம் ஒப்படைத்திருக்கின்றார். அனர்த்த முகாமைத்துவ அமைச்சு என்றால் வெள்ளம், மண்சரிவு ஏற்பட்டால் நிவாரணம் வழங்கும் நிறுவனமாகவே இற்றைவரையும் பார்க்கப்பட்டு வந்தது.

அவ்வாறு தான் அமைச்சும் செயற்பட்டு வந்தது. இந்த நிலைமையிலிருந்து அமைச்சை விடுத்து இயற்கை அனர்த்தங்கள் மூலம் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் ஏற்படுகின்ற பாதிப்புகளைக் குறைப்பதற்கும், அவற்றைத் தவிர்ப்பதற்கும் தேவையான வேலைத்திட்டங்களை இப்போது முன்னெடுத்து வருகின்றோம். இதற்காக நாடெங்கிலும் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்யப்படுகின்றது.

நாம் தற்போது முன்னெடுத்து வருகின்ற வேலைத்திட்டங்கள் வெற்றியளிக்கத் தொடங்கியதும் வெள்ளம் உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்கள் இலங்கைக்குப் பெரும் சவாலாக இருக்காது. அந்தவகையில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயற்பாடுகள் யாவும் அர்த்தபூர்வமானவையாக மாற்றமடைந்து வருகின்றன. இவை இந்நாட்டின் சுபீட்சத்திற்கும், மறுமலர்ச்சிக்கும் பாரிய பங்களிப்பு செய்யும் என்பதில் ஐயமில்லை.

கேள்வி : தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணவென பாராளுமன்றத் தெரிவிக்குழு அமைக்கப்படவிருப்பது தொடர்பாக நீங்கள் என்ன நினைக்கிaர்கள்?

பதில : ஜனாதிபதி எடுத்திருக்கும் மிகச் சிறந்த தீர்மானமே இது. அரசியல் தீர்வை ஜனாதிபதியினதோ, அரசாங்கத்தினதோ தேவைக்காக மாத்திரம் நினைத்தபடி முன்வைக்க முடியாது. மாறாக நாட்டில் வாழுகின்ற சகல இன, மத மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய எம்.பிக்கள் அங்கம் வகிக்கின்றன பாராளுமன்றத் தால் தான் இதனை செய்ய முடியும்.

பாராளுமன்ற தெரிவுக்குழு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய வகையிலேயே அமைக்கப்படும். இதன் பயனாக ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எம்.பிக்கள் இக்குழுவில் உள்ளடக்கப்படுவர். இதனூடாக எல்லா மக்களும் விரும்பி ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான சிறந்த தீர்வைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

நாம் எடுக்கின்ற தீர்மானத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி மக்களின் அங்கீகாரத்தைப் பெறவேண்டிய நிலை ஏற்பட்டாலும் அது பாதிப்பாக அமையாது. இல்லாவிடில் சர்வஜன வாக்கெடுப்புக்கு எதிராகவும், ஆதரவாகவும் கட்சி ரீதியாக பிரிந்து நின்று செயற்படும் நிலமை உருவாகும். அது அதிக செலவையும், பாதிப்பையும் ஏற்படுத்தலாம். அதனை தவிர்க்க இக்குழு பெரிதும் உதவும்.

பாராளுமன்ற தெரிவிக்குழு என்ற வரும் போது எதிரணிக் கட்சிகள் கடந்த காலங்களைப் போலல்லாமல் மிகுந்த பொறுப்புடன் நடந்து கொள்ளும் என நினைக்கின்றேன். இதனூடாக பெரும்பான்மை இணக்கப்பாட்டுடன் சிறந்த தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இனவாதத்தையோ, மதவாதத்தையோ வெளிப்படுத்தாமலும், நாட்டைத் துண்டாடும் செயற்பாடுகளில் ஈடுபடாமலும ?னிநிலையாக சிந்தித்து எல்லா மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நியாயபூர்வமான தீர்வைத்தேட வேண்டியது சகல அரசியல் கட்சிகளினதும் பொறுப்பாகும்.

கேள்வி : அரசாங்கத்திற்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் இடம்பெற்று வருகின்ற பேச்சுவார்த்தையை உத்தேச பாராளுமன்ற தெரிவுக்குழு யோசனை பாதிக்குமெனக் கருதுகிaர்களா?

பதில : நிச்சயமாக இல்லை. அரசாங்கத்திற்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடைபெறும். அரசாங்கம் அரசியல் தீர்வு, அதிகாரப்பரவலாக்கல் போன்ற விடயங்களுக்காக மாத்திரம் த.தே.கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இது இரு தரப்புக்களுக்குமிடையில் விரிவான அடிப்படையில் இடம்பெறும் பேச்சுவார்த்தையாகும். அதனால் இப்பேச்சுவார்த்தை தொடரும்.

கேள்வி : அரசியலமைப்புக்கான 13வது திருத்தம் குறித்து வெவ்வேறு அபிப்பிராயங்கள் நிலவுகின்றனவே....

பதில : சிலர் அரசியலமைப்புக்கான 13வது திருத்தம் அதிகம் என்கிறார்கள். இன்னும் சிலர் போதாது என்கிறார்கள். மேலும் சிலர் 13வது திருத்தத்திற்கும் அப்பால் செல்ல வேண்டும் என்கிறார்கள். என்ன தான் இருந்தாலும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பெரும்பாலானவர்கள் ஒருமித்த இணக்கப்பாட்டுக்கு வருவதே ஜனநாயகத்தின் சிறந்த பண்பாக இருக்கும். அதன்படி செயற்படுவது மிக அவசியம்.

ஆகவே தேசியப் பிரச்சினை குறித்த தெளிவுள்ளவர்களையே இக்குழுவில் உள்ளடக்க வேண்டும். ஏனெனில் எந்தவொரு இனக்குழுவும் பாதிக்கப்படாத வகையில் எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு எட்டப்படுவது மிக அவசியம்.

தமிழர்களுக்குப் பிரச்சினை உள்ளது. அதனால் தான் நாட்டில் நெருக்கடி நிலமை ஏற்பட்டது. அதன் காரணத்தினால்தான் எமது அரசாங்கம் எப்போதும் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பின் நிற்கமாட்டோம் எனக்கூறி வந்திருக்கிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும், புலிப்பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதும் அரசியல் தீர்வு பெற்றுத்தருவேன்" என ஏற்கனவே கூறியுள்ளார். இந்த அடிப்படையில் தான் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

யாழ்ப்பாணத்தில் வாழும் ஒருவருக்கு தமிழ் மொழியில் அனுப்பும் கடிதத்தை அங்குள்ள தபாலகத்தில் பணிபுரியும் ஊழியருக்கு விநியோகிக்க முடியாத நிலை காணப்பட்டால் தமிழர் ஒருவர் புகார் செய்ய பொலிஸ் நிலையத்திற்கு வந்து அவரது புகாரை எழுதக்கூடிய மொழியறிவைப் பொலிஸார் பெற்றில்லாவிட்டால் அவை பிரச்சினையே. இப்பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட வேண்டும். அந்த வகையில் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் முயற்சிகள் வரவேற்கத்தக்கதாகவுள்ளன.

இருப்பினும் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தனியே தீர்த்துவைக்கப்போய் அவர்களுக்கு அதிகமாக வழங்கிவிட்டால் அதற்கு முஸ்லிம் மக்கள் ஆட்சேபனை தெரிவிப்பார்கள். பெரும்பான்மையினரான சிங்கள மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். இதனால் மீண்டும் கருத்து முரண்பாடுகளும், நம்பிக்கையீனங்களும், சந்தேகங்களும் தலைதூக்கும். ஆகவே எல்லோரும் ஒன்றுபட்டு கலந்துரையாடி அரசியல் தீர்வைத் தேடுவதே நாட்டின் சுபீட்சத்திற்கு நன்மை பயக்கும்.

கேள்வி : "பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கப் போவதில்லை" என மக்கள் விடுதலை முன்னணி கூறியுள்ளதே...

பதில : நாட்டைப் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையின் போது எதிர்க் கட்சியினர் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள்.

அதனால் கடந்த பொதுத்தேர்தலில் ஐ.தே.க.வையும், ஜே.வி.பி.யையும் மக்கள் முற்றாக நிராகரித்தார்கள். ஆகவே இனியாவது யதார்த்தத்தை உணர்ந்து இரு கட்சிகளும் அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். தற்போது நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு தேடும் முயற்சிகளிலிருந்து ஜே.வி.பி. விலக முடியாது. அவர்களுக்கும் பொறுப்பு உள்ளது. அதனை உணர்ந்து நெகிழ்வுத் தன்மையுடன் செயற்படுவது அவசியம். இதேபோல் ஜாதிகஹெல உருமய கட்சியும் செயற்பட வேண்டும். எல்லோரும் ஒன்றுபட்டு இனம் காணும் தீர்வே வரலாறாக அமையும். அதுவே இந்த நாட்டை உலகின் முன்னிலைக்குக் கொண்டு வரும்.

கேள்வி : இறுதியாக நீங்கள் கூறவிரும்புவதென்ன?

பதில : நாம் எதையாவது கொடுத்து இதுதான் தீர்வு எனத் திணிக்க முடியாது. அதனால் எல்லோரும் ஒன்றுபட்டு பொது அரசியல் தீர்வைத்தேட வேண்டும். காணி, பொலிஸ் அதிகாரங்கள் குறித்து பேசப்படுகின்றது. பாராளுமன்றத் தெரிவுக்குழுவே அது குறித்தும் முடிவெடுப்பதற்குரிய சரியான இடம்.

அதனால் இக்குழுவில் அங்கம்வகிக்க முடியாது எனக் கூறுவது அற்ப அரசியல் இலாபம் பெறும் பின்நோக்கத்தைக் கொண்டதாகவே இருக்கும். இந்த அறிவிப்பை ஜே.வி.பி. மீள்பரிசீலனை செய்வது அவசியம். கட்சி அரசியலுக்கு அப்பால் நாடு என்ற அடிப்படையில் சகலரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய நேரம், காலம் இது. இதனை உணர்ந்து சகலரும் செயற்பட வேண்டும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com