Contact us at: sooddram@gmail.com

 

தமிழீழத்தைத் தன் இதயத்தில் ஏந்திநிற்கும் ஈழவேந்தன் ஐயாவின் கழுத்தைப் பிடித்து தள்ளியவர்கள் யார்?

உலகத் தமிழினத்தின் அன்புக்கும், மதிப்புக்கும் உரியவரும், எழுபத்தி எட்டு வயதிலும் அவரது இரு மொழித்திறமையால் தனது ஆழ்ந்த கருத்துக்களை எம்மினத்துக்காக சர்வதேசத்தின் முன் எடுத்துச்செல்ல என்றுமே தயங்காத ஈழவேந்தன் ஐயாவை, தமிழீழத் தேசியத் துக்கநாளான மே 18 ம் நாள்,... கனடா மக்கள் அவையினரால் ரொறான்ரோ மாநகரில் நடாத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில், மக்களவையைச் (NCCT) சார்ந்தவர்கள் அவரது கழுத்தில்ப் பிடித்துத் தள்ளியதாக ஈழவேந்தன் ஜயா வேதனையுடன் கூறினார். மேடை அருகே நின்ற புதிய மக்களாட்சித் (NDP) தலைவர் ஜாக் லேயிற்றனையும் ராதிகாவையும் சந்தித்து வாழ்த்துத் தெரிவிக்க சென்றவேளை ஈழவேந்தன் ஐயாவின் கழுத்தைப் பிடித்துத் தள்ளியது தமிழினத்தை அவமதித்தது மட்டுமல்ல மானிடத்தையே மதிக்காத ஓர் செயலாகும்.

அதைப் பார்த்தவர்கள் அனுதாபத்துடனான அக்கறையுடன் அவருக்கு வருத்தத்தோடான ஆறுதலை வழங்கியபோது மக்களவையைச் சார்ந்த முக்கியமானவர்கள் பார்த்தும் பாராமுகம் காட்டியது தனக்கு வேதனை தருவதாகவும் கனடாத் தமிழரின் மூத்த அரசியல்வாதியான ஈழவேந்தன் ஐயா கும்பிட்டார்.

நேரில் கண்ட பலர் தொலைபேசிமூலம் தன்னை அழைத்து ஆறுதல் கூறியதாகவும், சாட்சி சொல்வதற்கு தாம் எப்பவும் வரத்தயார் எனவும், மக்களவையினர் செயலுக்கு தாம் மன்னிப்பு கேட்பதாகவும் அவர்கள் கூறியது கண்டு தான் பெருமையடைந்ததாகவும் தேசியத்தலைவரால் பரப்புரைக்காக தேசியப் பட்டியலில், நாடு நாடாக பரப்புரை செய்ய, நியமித்த ஈழவேந்தன் ஐயா குறிப்பிட்டார்.

பெரியார் கூற்றின்படி தன்மானம் இழந்தும் தமிழ்மானம் காக்க தான் உறுதி கொண்டுள்ளதகவும் இந்தியாவில் இருந்து இரண்டு தடவைகள், பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவேளையிலும், ஈழத் தமிழருக்குப் பரப்புரை செய்ததற்காக அங்கிருந்து நாடுகடத்தப்பட்ட அந்த நாவின் வல்லவன் கூறினார்.

இன்றுவரை, மக்களவை நிர்வாகம் மௌனம் சாதிப்பது அவர்களுடைய கொள்கையை, அவர்களின் மனப்போகை திட்டவட்டமாகக் எடுத்துக் கூறுவதாகவே அமைகிறது. இந்தக் கொடிய நிகழ்வு கனடாத் தமிழருக்கு மட்டுமல்ல உலகத் தமிழருக்கும் வேதனையும், வெட்கமுமான ஓர் விடயமாகும்.

அவரை இம்சைப்படுத்தி, அவமானப்படுத்தியவர்களின் வயதை விட ஈழவேந்தன் ஐயாவின் ஈழத்தமிழ்ர்களின் விடிவுக்கான போராட்டதின் இடைவிடாத பங்களிப்பின் வயதோ பலமடங்கு. ஈழவேந்தன் ஐயா ஒரு பகுதிநேர ஈழப் போராளி அல்ல, தந்தை செல்வா காலம்தொட்டு இன்றுவரை தொடர்ந்து முழுநேரப் போராளியாக செயற்பட்டு வரும் ஈழத்தாயின் ஓர் இணையற்ற புதல்வன்.

இந்தத் தண்டனையைப்பெற அவர் செய்த குற்றம்தான் என்ன? தன் மொழிக்கும், தனது இனத்தின் விடுதலைக்கும் ஏறக்குறைய 60 வருடகாலமாக அயராது உழைத்தது, உழைப்பது தவறா? அல்லது தேசியத் தலைவரின் கொள்கைக்கு அமைய இறைமையும் சுதந்திரமும் கொண்ட தமிழீழத்தை அமைக்க, தேசியத் தலைவரின் இலட்சியப் பாதையில் ஈழவேந்தன் ஐயா பயணிப்பது தப்பா? அவரின் கழுத்தைப் பிடித்து தள்ளியவர்களே சொல்லுங்கள்.

இந்த நிகழ்வு கனடா வாழ் தமிழருக்கு இழிவாக அமைந்தாலும், ஈழவேந்தன் ஐயாவுக்கு இது ஓர் பெருமைப்பட வேண்டிய விடயமாகும். தன் இனத்திற்காக இலங்கையில் சிங்களவனிடமும் கனடாவில் மக்களவையினரிடமும் (NCCT) அடிவாங்கிய ஒரே ஒரு மறத்தமிழனும், பாராளுமன்ற உறுப்பினரும் இவரே. தள்ளாத வயதிலும் தனியொருவனாக போரிட்டு தப்பிவந்த உங்கள் வீரத்தை, தீரத்தைக் கண்டு உலகத் தமிழினமே உன்னைச் சிரம்தாழ்த்தி வணங்குதய்யா.

ஈழவேந்தன் ஐயாவின் ஆழ்ந்த அரசியல் அனுபவத்தை எண்ணாது, 78 வயதிலும் காலை 8 மணிக்கே தமிழருக்கான பணியை ஆரம்பிக்கும் அவர் செயலை உணராது, அன்னாரின் அறிவை, ஆற்றலை, அனுபவத்தை மதிக்காது மக்களவையினர் செய்த மனிதாபிமானமற்ற செயலை உலகெலாம் வாழும் ஈழத் தமிழர் சார்பில் நாடுகடந்த தமிழீழ அரசின் கல்வி, கலாச்சார, உடல்நல அமைச்சு வன்மையாகக் கண்டிக்கிறது.

எமது பண்பாட்டுக்கு முரணான, எங்கள் கலாச்சாரத்துக்கு எதிரான, எம் பழக்க வழக்கத்துக்கு மாறான இச்செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இல்லையேல், இவர்கள் எம் மக்களின் சீற்றத்துக்கு ஆளாவதை யாராலும் தடுக்கமுடியாது.

கலாநிதி ராம் சிவலிங்கம்

கல்வி, கலாச்சார, உடல்நல அமைச்சு

நாடுகடந்த தமிழீழ அரசு

r.sivalingam@tgte.org

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com