Contact us at: sooddram@gmail.com

 

கனடியத் தமிழர் தேசிய அவை விடுக்கும் அறிக்கை

எமது அன்பிற்கும், மதிப்பிற்குமுரிய தமிழ் உறவுகளே,

எமது தாயக மக்கள் தொடர்ந்தும், அவல வாழ்விற்குட்பட்டிருக்கும் இன்றைய நிலையில் இத்தகைய ஒரு அறிக்கையினூடாக உங்களைச் சந்திப்பதையிட்டு மிகுந்த வேதனை அடைகின்றோம்.

கனடிய தமிழர் தேசிய அவை உறுப்பினர்களாகிய எங்களை நீங்கள் சனநாயகத் தேர்தல் ஒன்றின்மூலம் தெரிவு செய்து ஓராண்டு பூர்த்தியாக உள்ளது. கடந்த ஓராண்டில் எம்மால் முடிந்தளவு இதயசுத்தியுடன் தமிழர் நலன் சார்ந்து பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருக்கின்றோம், முன்னெடுத்து வருகின்றோம். அதில் நீங்களும் உங்களின் அமைப்பு என்ற முழுமையான உணர்வுடன் கலந்து செயற்பாடுகளை வலுப்படுத்தியுள்ளீர்கள், வலுப்படுத்திவருகின்றீர்கள்.

அதேவேளை கடந்த ஓராண்டில் கனடியத்தமிழர் தேசிய அவைச் செயற்பாடுகளை முடக்கிவிட பல்வேறு விசமச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதையும், முன்னெடுக்கப்பட்டு வருவதையும் நீங்கள் நன்கறிவீர்கள். தாயகத்தில் எமது மக்களை பேரழிவிற்கு உட்படுத்தியவர்கள், புலம் பெயர்ந்த தமிழர் சனநாயக செயற்பாடுகளையும் தற்போது முடக்க முனைந்து நிற்பதுவும் நீங்கள் அறியாததல்ல.

மக்கள் பலம் என்ற உங்கள் பலம் கொண்டு இச்சனநாயக விரோத செயற்பாடுகள் என்ற நெருப்பாற்றை நாம் வெற்றிகரமாக தொடர்ந்தும் கடந்து வருகின்றோம். ஆனாலும் சமீபகாலமாக தமிழருக்குள்ளேயே அதுவும் தமிழர் அமைப்புகளுக்கிடையேயே உருவாக்கப்படும் இம்முரண் அதீத கவலையளிப்பதாக அமைந்துள்ளது.

இந்நிலையில் தான் கடந்த மே மாதம் 31ம் திகதி கலாநிதி ராம் சிவலிங்கம், கல்வி, கலாச்சார, உடல்நல அமைச்சு, நாடு கடந்த தமிழீழ அரசு எனக் குறிப்பிடப்பட்டு வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று இணையத்தளங்கள் ஊடாக வெளியிடப்பட்டு எமது கவனத்திற்கு மக்களால் கொண்டுவரப்பட்டது.


அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்ட உண்மைக்குப் புறம்பான விடயங்களும், அதன் நோக்கமும் எமக்கு அதிர்ச்சி தருவதாக அமைந்தன. எனினும் எம் மக்கள் நலன்கருதி அமைதி காத்தவாறு இது குறித்து உடன் விளக்கம் தருமாறும், இவ்வுண்மைக்கு புறம்பான அறிக்கையை மீளப்பெறுமாறும் வினயமாக வேண்டி நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர், மற்றும் சம்பந்தப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரச உறுப்பினர்களுக்கு ஒரு மின்னஞ்சலை அன்றே உடன் அனுப்பி வைத்தோம். மூன்று நாட்களுக்குள் நல்ல பதிலைத் தருமாறும் இல்லையேல் மக்களுக்கு நேரடியாக விளக்கம் அளிக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்படுவோம் என்பதையும் விளக்கியிருந்தோம்.


ஆறு நாட்கள் கடந்துள்ள நிலையிலும், தமிழருக்குள் எழுந்த ஓர் தவறான அபிப்பிராயத்தை எமக்குள்ளேயே பேசித்தீர்த்துக் கொள்ள முடியவில்லையே, சந்தர்ப்பம் ஏற்படுத்தப்படவில்லையே என்ற அதீத குற்ற உணர்வுடனேயே காலம் கடந்த இவ்வறிக்கையினை வெளியிடுகின்றோம்.

நாடுகடந்த தமிழீழ அரச உறுப்பினர் திரு.ஈழவேந்தன் அவர்கள் சம்பந்தப்பட்டு வெளியிடப்பட்ட அவ்வூடக அறிக்கை முற்றிலும் தவறானது. மேடையில் நடந்த கடந்த கால சில கசப்பான சம்பவங்களாலும், முள்ளிவாய்க்கால் ஈராண்டு போர் குற்ற நாள் கனடிய நிகழ்வில், கனடிய, ஒன்ராரியோ பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டதாலும் (Liberal MP. Bob Rae, NDP MP. Rathika sitsabaiesan, MPP Michael Prue, MPP Glen Murray), மேடையைச்சுற்றி அதீத பாதுகாப்பு ஏற்பாடுகள் வழமைபோல் செய்யப்பட்டிருந்தன. வழமைபோல் மேடைப்பகுதிக்குள் முன்கூட்டியே அனுமதிபெறாத எவரையும் அனுமதிக்காது பாதுகாப்பினை தொண்டர்கள் இறுக்கமாக மேற்கொண்டனர்.

அங்கு கூடியிருந்த மக்களினதும் ஊடகங்களினதும் நேரடிச் சாட்சிப்படி மேடைப் பேச்சாளர்களின்  ாதுகாப்புக் கருதி மேடையைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்த தொண்டர்களில் இளைய தொண்டர் ஒருவரின் வேண்டுகோளைப் புறக்கணித்து திரு ஈழவேந்தன் அவர்கள் அத்துமீறி மேடைக்குச் செல்ல முற்பட்டிருக்கின்றார். அத்துமீறி மேடைக்குச் செல்ல முயற்சித்த திரு.ஈழவேந்தன் அவர்களை மேடைப் பாதுகாப்புத் தொண்டர் தடுக்க முயற்சித்தபோது அந்தத் தொண்டரின் வாயில் காயம் வரும்வரை திரு.ஈழவேந்தன் அவர்கள் தாக்கியது மிகுந்த வேதனைக்குரியதாக அமைந்தது. எனினும் அவ்விளைய தொண்டர் பொறுமை காத்துள்ளார்.

திரு. ஈழவேந்தன் அவர்களின் வயது நிலை காரணமாகவும், அவரது  கனடிய அகதிநிலைக் கோரிக்கை காரணமாகவும் அவ்விடத்தில் அத்தொண்டர் கனடியத் தமிழர் தேசிய அவையின் வேண்டுகோளுக்கு இணங்க திரு. ஈழவேந்தன் அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

மே 18 போர்க்குற்றநாள் நிகழ்வில் புதிய ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜக் லெய்றன் (NDP Leader Jack Layton) அவர்கள் பங்குபற்றாதபோதும் அவரைச் சந்தித்து வாழ்த்துக்கூற முயற்சித்தார் என்று அறிக்கையில் குறிப்பிட்டதும் தவறான விடயமாகும். இருந்தும் இச்சம்பவத்தின் பின்னரும் திரு. ஈழவேந்தன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க நாம் அனுமதித்திருந்தோம் என்பதையும் இங்கு நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

அத்துடன் கனடியத் தமிழர் தேசிய அவை, நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினர்களான திரு. உருத்திரகுமாரன், திரு.ராம் சிவலிங்கம், திரு. சாம் சங்கரசிவம் ஆகியோருடன் இவ்விடயம் சம்பந்தமாகக் கதைப்பதற்குப் பல தடவை மின்னஞ்சல் தொலைபேசி மூலமாகத் தொடர்புகொண்டோம். அதை அடுத்து மே 30.2011 மாலை 7.00 மணிக்கு நா.க.த.அரசும் க.த.தே.அவையும் சந்திப்பு ஒன்றை ஒழுங்கு செய்திருந்தது. ஆனால் அச்சந்திப்பை ரத்துச்செய்துவிட்டு மே மாதம் 31ம் திகதி தன்னிச்சையாக ஒரு ஊடக அறிக்கையை  ெளியிட்டமை என்பது மிகுந்த மனவருத்தத்தையும், அதிர்ச்சியையும் எமக்களித்தது.

தமிழர் அமைப்புக்கள் ஒற்றுமையாகவும், ஒருமைப்பாட்டுடனும், ஒன்றை ஒன்று வலுப்படுத்தி, செயற்பாடுகளை தம்மடையே பகிர்ந்து தாயக மக்களின் அவல வாழ்வை விரைந்து போக்கி, உரிமை பெற்ற மக்களாக எம் தாயக மக்கள் வாழ விரைந்து உழைப்போம் என்பதே எம்மக்களின் பேரவாவாக உள்ளது. ஒருவரை ஒருவர் தூற்றி வெளிப்படையாக அறிக்கைகளை விட்டு எதிரிக்கு வலுச்சேர்த்து எம்மையே மலினப்படுத்திக் கொள்ளவதை எமது மக்கள் என்றும் ஏற்றுக் கொள்ளப் போவதோ அனுமதிக்கப்போவதோ இல்லை என்பதை நாம் நன்கறிவோம்.


எனவே எமக்குள் ஏதாவது தப்பவிப்பிராயமோ, கருத்து வேறுபாடுகளோ இருந்தால் அல்லது எழுந்தால் ஒருவரை ஒருவர் அணுகி, உளமார்த்தமாக எம் மக்கள் நலனை மனதில் நிறுத்தி வெளிப்படையாக பேசி எமக்குள்ளேயே தீர்வு காண்போம். எமது கதவுகள் அதற்காக என்றும் திறந்தே இருக்கும். வெளிப்படையாக அறிக்கைகள் விட்டு எம்மை பலவீனப்படுத்தி எதிரிக்கு துணைபோகோம் என்ற அடிப்படையில் இதுவே இவ்விடயத்தில் நாமும், தமிழ் மக்கள் நலனை முன்னிலை நிறுத்தும் ஏனையோரும் வெளியிடும் இறுதி அறிக்கையாக இருக்கட்டும் என எம் மக்கள் சார்பில் மனதார விரும்புகின்றோம்.

தொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT)
பணிமனை: 5310 Finch Avenue East, Unit 10, Scarborough, ON
தொலைபேசி:                         1.866.263.8622             –                         416.646.7624
மின்னஞ்சல்: info@ncctcanada.ca
இணையத்தளம்
: www.ncctcanada.ca

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com