Contact us at: sooddram@gmail.com

 

யூன் 19 தோழர் நாபா 21 வது நினைவு தினம்

தோழர் சுகு (பத்மநாபா ஈபிஆர்எல்எப்)

தோழர் நாபா தமிழ்த் தேசியப் போராட்டத்தில் தனித்துவமான மாற்றுப்பாதை ஒன்றை வகுத்தவர். வெகுஜன இயக்கமொன்றை தமிழ் சமூகத்தினுள் கட்டி எழுப்புவது, சக சமூகங்களுடன் ஐக்கியம், சர்வதேச ஒடுக்கப்பட்ட தேசங்களுடன் நட்புறவு, சகல விதமான சமூக ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுதலை என்று செயற்பட்டவர். இயக்கத்தின் பொருளாதார வறுமை, பசி பட்டினிக்கு மத்தியில் நம்பிக்கை ஒன்றையே அடிநாதமாகக் கொண்டு செயற்பட்டவர். ஈழமக்களின் பிரச்சனைகளை பல்வேறு தளங்களில் எடுத்துச் சென்றவர். முற்போக்கு ஆதரவுத் தளமொன்றை நிறுவியவர். அதற்கு தனக்கு கிடைத்த வளங்களை எல்லாம் பாவித்தவர். ஈழப்போராட்டதில் வெ வ்வேறு கருத்துக் கொண்டவர்களிடையே கருத்துப் போராட்டமும் நட்புறவும் எனச் செயற்பட்டவர். ஐக்கியமுன்னணி ஒன்றை கட்டி எழுப்புவதில் அவர் இடையறாது முயன்றவர். இயக்கத்தின் வர்க்க இயல்பு பாட்டாளிவர்க்க குணாம்சம் கொண்டதாக இருக்கவேண்டும் என்று கருதிச் செயற்பட்டவர். சமூகத்தில் அடிமட்டத்தில் இருந்து வந்தவர்களின் அங்கத்துவம் ஆதரிக்கப்படவேண்டும் என்று எப்பொழுதும் கருதியிருந்தவர்.

தோழர் நபாவின் பெயர் ஈழப்போராட்டத்தில் முற்போக்கு அணியின் குறியீடாக அமைந்திருந்தது. தேசியவிடுதலைப் போராட்டத்தில் சமூகத்தின் அடித்தட்டு மக்களை பிரதான பிரிவினராக அணிதிரட்டுவதில் அவர் பேரார்வம் கொண்டிருந்தார். மலையக மக்கள் இலங்கையின் சமூகமாற்றத்தில் தீர்மானகரமான பாத்திரமொன்றை வகிக்க முடியும் என்று அவர் திடமாக நம்பினார். ஸ்ரீமா சாஸ்திரி, இந்திரா - ஸ்ரீமா ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவிற்குப் புலம்பெயர்நத மலையக மக்களுடன் அவர் உறவைப் பேணினார்.

மலையகத்திலும் 'மலையகப்பாட்டாளிகள் முன்னணி' என்ற அமைப்பை உருவாக்கினார். சிங்கள மக்கள் மத்தியில் புரட்சிகர எண்ணம் கொண்ட புத்திஜீவிகள், தொழிற்சங்கவாதிகள் பலரையும் உள்ளடக்கியதான குழு ஒன்றை நிறுவினார். இந்தியாவின் இடதுசாரி இயக்கங்களின், குறிப்பாக தமிழகத்தில் சாதாரண தோழர்கள் மட்டத்திலிருந்து தலைமைத் தோழர்கள் வரை உறவைப் பேணினார். திராவிட இயக்கப் பாரம்பரியத்தில் வந்த சமூகப்பிரக்ஞை உள்ள பிரமுகர்களுடன், முதுபெரும் காங்கிரஸ்காரர்களுடன், சுதந்திரப்போராட்டத் தியாகிகளுடன், இலக்கியவாதிகளுடன், தொழிற்சங்கங்களுடன் சிறந்த பரிச்சயத்தை ஏற்படுத்திக்கொண்டார்.

பாலஸ்தினவிடுதலைக்கான பிரபல முன்னணியினர் அதன் மாணவர் அமைப்பினருடன் இடையறாத உறவுகளைப் பேணியதோடு அவர்களின் போராட்ட கருத்தரங்குகள் நிகழ்சிகளுக்கும் தோழர்களை அனுப்பிவைக்க அவர் தவறுவதில்லை.

தமிழகத்தில் நீண்ட தூரப் பயணங்கள் மேற்கொள்ளும்போது அங்கங்கே இறங்கி நண்பர்களை தோழர்களை சந்தித்துச் செல்வார். இலங்கையில் தோழர்களுக்குப் பயிற்சிப்பாசறைகளை துன்புறும் ஒடுக்கப்படும  மக்கள் வாழும் பகுதிகளிலேயே அவர் ஏற்பாடு செய்தார்.

சகோதரப்படுகொலை தன்னை தெளிவாக எமது சமூகத்தில் அறிமுகம் செய்த போது அதனை முதலாவதாக கண்டிக்கும் மனிதராக தோழர் பத்மநாபா நின்றிருந்தார். யாழ் சித்திரா அச்சக வாசலில் புளொட் அமைப்பின் 'புதியபாதை' பத்திரிகையின் ஆசிரியர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டபோது சகோதரப்படுகொலையின் பாரதூரத்தன்மையைச் சுட்டிக்காட்டி பிரசுரங்களை வெளியிட்டார். இலங்கை நிலவரங்களை தமிழகத்தில் எடுத்துரைப்பதற்காக 'ஈழச்செய்திகள்' என்ற பிரசுரத்தை மாதாந்தம் வெளியிட்டார்.மிகவும் அமைதியாக தணிந்த குரலில் ஆணித்தரமாக அவர் தனது கருத்துக்களை முன்வைப்பார்.

இந்திய- இலங்கை ஒப்பந்தத்தினடிப்படையில் அதிகாரப்பகிர்வினூடாக தமிழ்மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதிலும் பாதுகாப்பதிலும்; அவர் தீர்க்கதரிசனமான, உறுதியான முடிவுகளை செயலாளர் நாயகம் என்ற ரீதியில் எடுத்திருந்தவர். அவர் சிதைவுகள், அழிவுகளிலிருந்து புத்தாக்கம் செய்யும் ஆற்றல்கொண்டவர். எமது இயக்கம் புலிகளால் தடைசெய்யப்பட்டு தோழர்கள் நிர்க்கதி நிலைக்கும் அவல நிலைக்கும் உள்ளாகிய போது தோழர்களைப் பாதுகாப்பதற்கும் இருப்பை பாதுகாப்பதற்கும் இரவுபகல் கண்விழித்துப் பாடுபட்டவர்.

சகோதரப்படுகொலைகள் 1986களின் முற்பகுதியில் உச்சம் பெற்றபோது பாசிசவாதிகளுக்கு அடிபணியாமல் ஐக்கியத்தை வலியுறுத்திக்கொண்டு இப்போக்கிற்கெதிராக தோழர்களை வழிநடத்தியவர். எமது இருப்பை விட சமூகத்தின் தார்மீக வலுக்கள் முக்கியமானவை எனக் கருதிச் செயற்பட்டவர்.

தனது தாய்தந்தையரின் செல்வாக்கான பின்புலத்தில் கிடைத்த மேற்குலக கல்வி வாழ்வெலாம் துறந்து இலட்சியப் பயணத்தை மேற்கொண்டவர் தோழர் நாபா.

1970களின் மாணவர் பேரவையுடன் ஆரம்பித்த அவரின் பயணம்.

தனது 39 வயதில் தமிழ் பாசிஸ்டுகளால் ஈபிஆர்எல்எப் இன் 12 தோழர்கள் தலைவர்களுடன் அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த 39 ஆண்டு வாழ்க்கையில் அவர் 20 ஆண்டுகள் சமூகத்திற்காகத் தன்னை அர்ப்பணித்திருக்கிறார்.

அவரை மியன்மாரின் அங்சாங்சுஜி அவர்களுடன் ஒப்பிட்டு இந்தியாவின் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஹரிகரன் அவர்கள் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

தோழர் பத்மநாபா தென்னாசியாவில் உருவாகிய முக்கியமான மானிடநேயம் மிக்க தலைவர் ஆனால் அவரைத் தமிழ் பாசிசம் விட்டுவைக்கவில்லை. அவரை மாத்திரமல்ல, தமிழ் சமூகத்தில் பெரிதும் மதிக்கப்பட்ட தலைவர்கள், போராட்டக்காரர்கள், கல்வியாளர்கள், சமானிய மனிதர்கள் எவரையும் தமிழ் பாசிசம் விட்டு வைக்கவில்லை. தார்மீக உணர்வு மிக்க சமூகப்பகுதி கணிசமான அளவில  இல்லாதொழிக்கபட்டு விட்டது.

இத்தகைய தீர்க்க தரிசனம் மிக்க தலைவர்களின் இழப்பே இன்றைய சமூக அவலத்திற்கு காரணம் என்றால் அது மிகையல்ல. பிராந்திய, வட்டார உணர்வுகள் கடந்த சர்வதேசவாதியாக தோழர் பத்மநாபா திகழ்ந்தார்.

அவரின் வழித்தடத்தில் செல்லும்; தோழர்கள் நாம் என்பதிலும், அவருடன் வாழ்ந்தவர்கள் என்ற வகையிலும் நாம் பெருமையுறுகிறோம். தோழர் பத்மநாபா படுகொலைசெய்யப்படுவதற்கு சில மாதங்கள் முன்னர்தான் இயற்கை எய்திய தமது தாயாருக்கு இறுதிக்கிரியைகள் செய்திருந்தார். சில மாதங்களுக்கு முன்னரே திருமணம் செய்திருந்தார்.

அவரது படுகொலை தமிழக, இந்திய அளவில் பெரும் அதிர்ச்சி அலைகளைத் தோற்றுவித்திருந்தன. இந்தியாவின் பெருமைக்குரிய நண்பரின் படுகொலையாக அது பார்க்கப்பட்டது. அதன் பின்னர் இந்தியாவின் இளந்தலைவர் ராஜிவ்காந்தி அவர்களையும் புலிப் பாசிசவாதிகள் படுகொலைசெய்தார்கள். ராஜிவ் காந்தி அவர்கள் தமது இரங்கல் குறிப்பில் 'பத்மநபாவிற்கும் தனது தாயார் இந்திராகாந்தி அவர்களுக்கும் பிறந்ததினம் நவம்பர் 19. அவர்கள் இருவரும் ஒரே மனித குல லட்சியங்களுக்காக வாழ்ந்து ஒரேவிதமாக மறைந்தார்கள்' என்று குறிப்பிட்டிருந்தார். ராஜிவ்காந்தி அவர்களின் இரங்கல் குறிப்பு தோழர் கேதீஸ் அவர்களிடம் வழங்கப்பட்டு பின்னர் தோழர் நபா நினைவு மலரில் இடம்பெற்றது. கடந்த 2006 ஆகஸ்ட் 11 இல் தோழர் கேதீஸ் அவர்களையும் பாசிசப்புலிகள் படுகொலை செய்தார்கள்.

ஒன்று தெளிவானது புலிகள் மனுக்குலத்தின் விரோதிகள். அவர்கள் தமிழ் சமூகத்திற்கும, இந்த நாட்டிற்கும் இந்தப் பிராந்தியத்திற்கும் மாபெரும் துரோகம் இழைத்திருக்கிறார்கள்.

தமிழ் பாசிசம் தோற்கடிக்கப்படுவதும் இலங்கை பல்லினங்களின் தேசமாக மலர்வதும் சமூக ஏற்றத்தாழ்வுகளை களைவதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதும் தமிழ் சமூகத்தின் சுயமரியாதையும், கௌரவத்தையும் உறுதி செய்யும் தீர்வைக் காண்பதும், உலகளாவிய அளவில் சமூக பாரபட்சங்களுக்கெதிராக குரல் கொடுப்பதுமே தோழர் நாபாவிற்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

தோழர் சுகு

பத்மநாபா ஈபிஆர்எல்எப்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com