Contact us at: sooddram@gmail.com

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் ஐ.நா உறுப்பு நாடுகளுக்கு எழுதியுள்ள கடிதம்

மனித உரிமை சபையின் 19வது மாநாடு ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்று வருவதைத் தொடர்ந்து அதில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளுக்கும் கடிதமொன்றின  தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் அனுப்பியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபை – 19 வது மாநாடு, ஜெனீவா, மார்ச் 2012

27 பெப்ரவரி 2012

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராகிய நான் சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வசிக்கும் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என்பதால் அவர்கள் சர்ர்பாக இந்த கடிதத்தினை உங்களுக்கு எழுதுகின்றேன். சிறிலங்காவில் அமைதி, நீதி, ஜனநாயகம் ஆகியவை நிலைக்க வேண்டும் என்பதற்காக தாங்கள் எடுத்து வரும் அனைத்து முயற்சிகளுக்கும் முதலில் என் நன்றியினை கூற கடமைப்பட்டிருக்கிறேன்,

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விசாரணைகள் நடத்தப்படுவதோடு மக்களுக்கு உரிய தீர்வுகள் ஏற்படுத்தித் தரப்படும் என மே 2009 இல் சிறிலங்கா ஜனாதிபதி அளித்த உறுதிமொழிகளைத் தொடர்ந்து இந்த விடயம் குறித்து அறிவுறுத்த ஜூன் 2010 இல் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று தலைமைச் செயலரால் நியமிக்கப்பட்டது. 31 மார்ச் 2011 அன்று இந்தக் குழுவினர் தங்கள் அறிக்கைய  ாக்கல் செய்தனர். போரின் இறுதிக் கால கட்டங்களில் இரு தரப்பிலும் போர்க்குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் நடந்திருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஐ.நா வின் அறிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றதுடன் அதில் குறிப்பிடப்பட்டிருந்த பரிந்துரைகளை உடனடியாக செயல்படுத்துமாறும் கேட்டுக் கொண்டோம். உண்மையை அனைவருக்கும் விளங்கச் செய்வதும் அதற்கான பொறுப்புக்களை எடுத்துக் கொள்வதுமே இது போன்ற துயரங்கள் மீண்டும் நடக்காத வண்ணம் தடுக்கும் என்ற ஆறுதலும் அடைந்தோம்.

இதனிடையே சிறிலங்கா அரசின் சார்பில் சமரசத் தீர்வுகளுக்கா  2010 இல் அமைப்பு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது. இந்தக குழுவினர் விசாரணை மேற்கொண்டு அறிக்கையை தாக்கல் செய்த பின்னர் உரிய தீர்வுகள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு உறுதியளித்திருந்தது. நவம்பர  2011 இல் இக்குழுவினர் தங்கள் அறிக்கையை தாக்கல் செய்தனர்.  இக்குழுவின் அறிக்கைகள் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய தீர்வுகளை வழங்கும  வகையில் சர்வதேச தரத்தில் இல்லை என்பதை ஏற்கனவே அனைத்து நாடுகளுடனும் நாங்கள் பகிர்ந்து கொண்டுள்ளோம்.

இருப்பினும் போருக்குப் பின்னரும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்த பெருமளவிலான அரசப்படைகள் அகற்றப்பட வேண்டும். போரின் போது அரசப்படைகளின் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகள் மற்றும் இது தொடர்பான தகவல்கள் அனைவருக்கும் அளிக்கும் வண்ணம் சட்டப்படியா  அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட சில ஏற்புடைய பரிந்துரைகளையும் இந்த அமைப்பு வழங்கியிருந்தது. அதிகாரங்கள் பகிந்தளிக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்த குழுவினர் உணர்ந்து தெரியப்படுத்திய பின்னரும் கூட அதற்கான நடவடிக்கைகள் அரசினால் மேற்கொள்ளப்படவே இல்லை. அரசியல் ரீதியான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படாமல் இருப்பதே சிறிலங்காவின் தமிழர் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் ஆணிவேராக அமைந்துள்ளது என்பதை விளங்கப்படுத்திய பின்னரும் அரசினால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் பரிந்துரைகளை கூட குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகள் ஏதும் அரசால் மேற்கொள்ளப்படவில்லை.

இராணுவத்தினால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளோரின் பட்டியலை அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்ற இடைக்கால அறிக்கையையும் செப்டம்பர் 2010 இல் இக்குழுவினர் வெளியிட்டனர். ஆனால் அதையும் செய்ய அரசு தவறி விட்டது. தொடர்ந்தும் இது போன்ற எந்த பரிந்துரைகளையும் கண்டு கொள்ளாமல் இருப்பதும் நாட்டில் மீண்டும் அமைதியையும் நீதியையும் நிலை நிறுத்தும் வகையிலான சமூக அரசியல் மாற்றங்களையும் அரசு உண்டாக்காமல் இருப்பதே தற்போது சிறிலங்காவில் வாழும் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான முக்கிய காரணம்.

சிறிலங்காவில் தொடர்ந்தும் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களும , மனிதர்களுக்கான பாதுகாப்பற்ற ஒரு நிலையம் எங்களுக்கு பெரும் துன்பத்தை  உண்டுபண்ணியுள்ளது. கடந்த சில மாதங்களிலும் கூட சிலர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். வர்த்தகம், மக்களின் தினசரி வாழக்கை, தமிழர்கள் வாழும் தெருக்கள் மட்டுமல்லாது ஆட்சியிலும் கூட ராணுவத்தின  ுறுக்கீடு அதிக அளவில் உள்ளது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்குப் பகுதியில் நிர்வாகமும  ீர்கெட்டுப் போயுள்ளது. தனியாருக்குச் சொந்தமான நிலங்கள் அரசினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. வடக்குப் பகுதிகளில் மக்கள் மீண்டும் குடியேறிவரும் இடங்களிலும் அதிகப்படியான ராணுவ முகாம்களை அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது போன்ற விடயங்களிலிருந்தே சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களின் சமூக மற்றும் அரசியல் சுதந்திரங்களில் நிலவும் ஒருதலைச் சார்பான நிலையை தெளிவாக அறிந்து கொள்ள முடியும். இராணுவத்தினால் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் அதிகப்படியானோர் பெண்களும், சிறார்களும் தான்.  போரினில் கணவனை இழந்த பெண்கள், உறவுகளை இழந்து அனாதைகள் ஆக்கப்பட்டவர்களை குறிவைத்தே வன்முறைகள் கட்டவிழ்த்து விடப் படுகின்றன. விடுதலைப்புலிகள் அமைப்பில் பணியாற்றிய பெண்கள் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த பெண்கள் துணை ராணுவப் படையினரால் கற்பழிக்கபட்டும், பெரும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டும் வருகின்றனர். ஆட்கடத்தல , திட்டமிட்ட விபச்சாரம் உள்ளிட்டவற்றிலும் இவர்கள் பயன்படுத்தபடுகின்றனர்.

சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு கடந்த அறுபது ஆண்டுகளாகவே ஆளும் தரப்பினரால் மறுக்கப்பட்டே வந்துள்ளது. தற்போதும் தமிழ்மக்களின் ஜனநாயகம் குறித்த கேள்விகளுக்கு அரசு மௌனம் சாதித்து வருவதோடு சிறிலங்காவில் அதிகமாக தமிழர்கள் வாழ்ந்து வரும் வடக்கு மற்றும கிழக்கு பகுதிகளில் சிங்களவர்களை அதிக அளவில் குடியேற்றும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பொதுச் சேவை ஸ்தாபனங்களில் பணியாற்றி வரும் தமிழர்கள் அகற்றப்பட்டு வருவதோடு ராணுவத்தினை சேர்ந்தோருக்கு அந்த பணியிட வாய்ப்புக்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. வடக்கு, கிழக்கு பகுதிகளில் வசித்து வரும் தமிழ் மக்களின் கலாச்சாரம், மொழி, சமய நிகழ்வுகள் உள்ளிட்டவற்றிலும் ராணுவத்தினர் குறுக்கிட்டு வருகின்றனர். இந்துக்களின  வழிபாட்டுத் தலங்கள் பல அழிக்கப்பட்டு புத்த சமய கோவில்கள் புதிதாக அங்கு நிறுவப்பட்டு வருவது இதற்கு ஒரு சிறந்த சாட்சியம்.

தற்போது நிலவி வரும் நிலைகளுக்கு மாறாக வடக்கு, கிழக்குப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஆட்சி அதிகாரங்களை ஏற்படுத்திக் கொடுத்து இனப் பிரச்சனைகளுக்கு முடிவு ஏற்படும் வகையில் விரைந்து அரசு செயல்பட தயாராகும் பட்சத்தில் அவர்களுடனான பேச்சு வார்த்தைகளுக்கும் நாங்கள் தயாராகவே இருந்தோம். இது தொடர்பாக கடந்த ஜனவரி 2011 முதல் அரசுடன் நடத்தப்பட்ட இரு தரப்பு தொடர் பேச்சு வார்த்தைகளில் எந்த சுமூக முடிவும் எட்டப்படவில்லை. ஜனவரி 2012 இல் பொறுப்பற்ற வகையில் இரு தரப்பு பேச்சு வார்த்தைகளையும் அரசு விலக்கிக் கொண்டுள்ளது. ஒன்றுபட்ட தேசத்தில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பயனுள்ள நிரந்தர அரசியல் தீர்வினை நாங்களும் ஏற்றுக் கொள்ளத் தயாராகவே உள்ளோம்.

போரின் இறுதிக் கால கட்டங்களில் இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களுக்கும், இழப்பீடுகளுக்கும் உணமையான நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதிலும் நாங்கள் உறுதியாகவே உள்ளோம். உணமையையும், நீதியையும் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது மக்களின் பிரதிநிதி என்ற முறையில் எங்கள் கடமை என்பதனையும் நன்கு உணர்ந்துள்ளோம். இந்த விடயத்தில் இது வரையிலும் நாங்கள் பின்னடைவையே சந்தித்து வந்து கொண்டிருக்கிறோம் என்பதை மறுக்க முடியாது. பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தை சேர்ந்த மக்கள் அதிலிருந்து மீண்டு தங்கள் வாழக்கையை மீளக் கட்டியெழுப்ப அவசர உதவிகளை விரைந்து செய்வதற்கான முக்கியப் பொறுப்பும் அரசுக்கு உள்ளது. தனிப்பட்ட விருப்ப , வெறுப்புக்களை மறந்து மீண்டும் வன்முறை பாதைகளுக்கு செல்லாமல் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய சமரசத் தீர்வினை உண்டாக்குவதே எங்கள் நோக்கம். இதற்காகவே இரு தரப்பிலும் போரின் இறுதிக் கட்டங்களில் நடந்த குற்றங்கள் குறித்தா  சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையினையும் நாங்கள் விடுத்து வந்தோம்.

அரசினால் அமைக்கப்பட்ட விசாரணை அமைப்பின் பரிந்துரைகள் இதுவரையிலும் அமல்படுத்தப்படாதது உள்ளிட்ட பல விடயங்களுக்கும் பொறுப்பான ஒரு பதிலும் உத்திரவாதமும் தற்போது ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் சபையின் 19 வது மாநாட்டில் எடுக்கப்படும் என நாங்கள் கருதுகிறோம். அரசினால் அமைக்கப்பட்ட விசாரணைக் அமைப்பின் பரிந்துரைகள  இதுவரையிலும் செயல்படுத்தாமல் அரசு புறக்கணித்து வந்துள்ளது என்பது தாங்கள் அறிந்ததே. எனவே தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் எடுக்கப்படவிருக்கும் முடிவு இதற்கான தீர்வினை ஏற்படுத்தித் தருவதற்கு சிறிலங்க அரசாங்கத்தை நிர்பந்தம் செய்யும் வகையும் அமைவதோடு தமிழ் மக்களுக்கான உரிய அங்கீகாரம் பெற்றுத் தரும் வகையிலும் அமைய வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.

தங்கள் உண்மையுள்ள,

இரா. சம்பந்தன்,

தலைவர , தமிழ் தேசியக் கூட்டமைப்பு.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com