Contact us at: sooddram@gmail.com

 

இலங்கை மீதான சர்வதேச அழுத்தம் இன விரிசலை துருவப்படுத்தவே வழிகோலும்

அவசியமற்ற நேரத்தில், தேவையற்ற விதத்தில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஊடாக இலங்கை அரசாங்கத்தின் மீது சர்வதேச அழுத்தத்தை பிரயோகிப்பது ஏற்கனவே இனங்களுக்கிடையே காணப்படும் விரிசலை அதிகரித்து, மேலும் துருவப்படுத்துவதற்கே வழிகோலும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஜெனீவாவில் இடம்பெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19வது அமர்வுக்குச் சென்று விட்டு வந்துள்ள அமைச்சர் ஹக்கீம், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள பிரேரணை, அதனால் ஏற்படக் கூடிய விளைவுகள் பற்றி கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார். வாரமஞ்சரியின் கேள்விகளுக்குஅமைச்சர் ஹக்கீம் அளித்த பதில்கள்:

கேள்வி: ஜெனீவாவிற்குச் செல்வதற்கு முன்னரும், அமர்வுகள் ஆரம்பிக்க முன்னரும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை (பிரேரணை) அமெரிக்கா கொண்டுவரப் போவது பற்றி நன்கு தெரிந்திருந்ததா?

பதில்: அங்கு நாங்கள் ஆயத்தமாகவே சென்றோம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாமாகவே எமது தூதுக்குழுவின் பிரதி நிதிகளைத் தெரிவு செய்திருந்தார்.

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லி ணக்கத்திற்கான ஆணைக்குழுவின் அறிக்கை வெளியான தன் பின்னணியில் வெளிநாட்டமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அவசர வெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்டார். பின்னர் அமர்வுகளுக்கு இடையிலும் நிலைமையை அவதானித்து விட்டு ஆபிரிக்க நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்காக அவசரமாகப் புறப்பட்டுச் சென்று வந்தார்.

பல்வேறு வரலாற்றுக் காரணிகளுக்காக தென்னாபிரிக்காவிலுள்ள ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் என்ற அமைப்பின் உறுப்பினர்களுடன் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகம் உறவுகளையும், தொடர்புகளையும் கொண்டிருக்கின்றது. ஆனால், தென்னாபிரிக்க அரசாங்கம் இலங்கைக்கு ஆதரவு திரட்டும் முயற்சிக்கு எமக்கு ஒத்துழைத்து வருகின்றது.

இவ்வாறிருக்க, இலங்கைக்கு எதிரான பிரேரணையை ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரில் கொண்டுவரப்படப் போகும் தகவல் முதலில் ஜனவரி மாதம் 25ம் திகதியே எங்களுக்கு எட்டி யது. இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சி மேற் கொள்ளப்படும் சூழ்நிலையில் இவ் வாறானதொரு எத்தனிப்பு தேவையற்றதொன்றாகவே எமக்குத் தோன்றியது.

கேள்வி: அமெரிக்கா தற்போது முன்வைத்துள்ள பிரேரணை பற்றி என்ன நினைக்கின்aர்கள்?

பதில்: கடந்த புதன்கிழமையன்றுதான் அதனை முன்மொழிந்திருக்கின்றார்கள். அதனது உள்ளடக்கத்தை எனக்கு இன்னும் சரிவர பார்க்க கிடைக்கவில்லை.

கனடா போன்ற சில நாடுகள் பிரேரணையின் தொனியையும், வேகத்தையும், தாக்கத்தையும் குறைத்து போதிய கால அவகாசத்தையும் வழங்குவதற்கு விரும்பியதாகத் தெரிகின்றது. ஆனால், துரதிஷ்டவசமாக அமெரிக்காவும், பிரித்தானியாவும் வேறுவிதமான மனப் பதிவுகளோடு முற்றிலும் மாற்றமான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளோடு சுமுகமான உறவைப் பேணுவதற்கு நாம் விழையும் போது இவ்வாறானதொரு நிலைப்பாட்டை அந்நாடுகள் எடுப்பது அவ்வளவு ஆரோக்கியமானதாக தோன்றவில்லை.

கேள்வி: ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடருக்குச் சமாந்திரமாக அதன் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளோடு இலங்கைக் குழுவினர் மேற்கொண்ட உரையாடல்கள் எவ்வாறிருந்தன? அவர்கள் கடினமான நிலைப்பாட்டில் இருந்தனரா அல்லது சிநேகபூர்வமாக நடந்து கொண்டனரா?

பதில்: எங்களது குழுவினர் மத்தியில் கருத்து முரண்பாடுகள் இருந்ததாக சிலரால் குற்றஞ்சாட்டப்பட்ட போதிலும், வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடன் உரையாடும் போது எவ்வாறான அம்சங்களைக் கையாள்வது என்பது குறித்து ஒரு புரிந்துணர்வு காணப்பட்டது.

உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளைப் பொறுத்தவரை அவர்கள் கடும் போக்குடனோ, சினமடைந்தோ காணப் படவில்லை. புன்முறுவல் பூத்தவர்களாகவும், சிநேக பூர்வமாகவுமே எம்முடன் அவர்கள் நடந்து கொண்டனர்.

ஆனால் பிந்திய கட்டத்தில், நாம் ஏற்பாடு செய்திருந்த ஏற த்தாழ நாற்பது பிரதிநிதிகள் பங்குபற்றிய பகல் போசன ஒன்று கூடலின் போது அவர்களில் சிலர் பலதரப்பட்ட கேள்விகளை எழுப்பிய துடன் குறுக் கீடுகளை ஏற்படுத்தினர். இது எங்க ளில் சிலரைச் சினமடையச் செய்தது.

கேள்வி: ஆங்கிலத்தில்நவி பிள்ளைஎனக்குறிப்பிடப்படும் நவநீதம்பிள்ளையை நீங்கள் ஜெனீவாவில் சந்தித்திருக்கின்aர்கள். அவர் பக்கச் சார்பற்றவர் என நீங்கள் நம்புகின்aர்களா?

பதில்: மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் என்ற ரீதியில் உலகின் பல் வேறு சிக்கல்கள் மலிந்த நிலைகள் (Trouble Spots) மீது அவர் அதிக கவ னஞ் செலுத்தி வருகின்றார். இலங்கையின் மீதும் அவரது கவனம் வெகுவாகத் திரும் பியிருக்கின்றது. அதில் தவறில்லை.

நவநீதம்பிள்ளை இன அடிப்படையில் தமிழ் பெண்மணியொருவர் என்ற கார ணத்தினால் அவர் ஒரு பக்கச் சார்பாக நடந்து கொள்ளக் கூடும் என்ற விதத்தில் வதந்திகள் உலாவினாலும் கூட, எங்க ளைப் பொறுத்தமட்டில் அவர் அவ்வளவு கடுமையாக நடந்துகொள்ளவில்லை. அவர் தனது தொழிலைப் புரிகின்றார். அதனை நாம் மதிக்க வேண்டும்.

கேள்வி: இனங்களுக்கிடையிலான துருவப்படுத்தலின் விளைவு அல்லது அபாயம் பற்றி ஆரம்பத்திலேயே குறிப்பிட்டீர்கள். அதுபற்றி மேலும் ஏதாவது தெரிவிக்க விரும்புகின்aர்களா?

பதில்: யுத்தம் ஓய்ந்துள்ள சூழ்நிலையில், நாட்டில் முழுமையான சமாதானத்திற்கான ஒளிக் கீற்றுகள் தென்படுகின்ற வேளையில் தேவையற்ற வெளிச் சக்திகளின் தலையீடு ஏற்கனவே விரிசலடைந்துள்ள இனங்களுக்கிடையில் நிலவும் நல்லெண்ணத்தையும், நல்லுறவையும் மேலும் துருவப்படுத்திவிடலாம் என்ற அச்சம் மேலோங்கியுள்ளது. போதாக்குறைக்கு இருதரப்புகளிலுமுள்ள தீவிரவாத சக்திகள் குட்டையைக் குழப்பிவிடலாம் என்ற கவலையும் உண்டு.

கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்த முக்கியமான கூட்டத் தொடரில் பங்கேற்காமை பற்றி என்ன நினைக்கின்aர்கள்?

பதில்: அங்கு செல்வதில்லை என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் முடிவு ஒருவிதமான ஆறுதலை அளிக்கின்றது. அவர்கள் அங்கு சென்றிருந்தால் சில வேளை இங்கு விபரீதமான விளைவுகள் ஏற்பட்டிருக்க இடமுண்டு.

மிதமாகவோ தீவிரமாகவோ அன்றி பொதுவாக மத்தியதரமாக நடந்து கொள்வதே சாலச் சிறந்தது.

அவ்வாறு மத்தியதரத்திலிருந்து கருத்துக்களைக் கூறும் போது சிலவேளைகளில் அத்தகையோருக்குதுரோகிகள்என நாமகரணம்சூட்டப்படுவது இயல்பாகும்பிரிந்துபட்டிருக்கும் இருதரப்பிலும் இதனை அவதானிக்க முடியும்.

தமிழர் தரப்பை எடுத்துக் கொண்டால் ஒரே மனிதர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் துரோகியாகவும், வீரர் ஆகவும் சித்திரிக்கப்படலாம். இவ்வாறான கதி திருவாளர்கள் எஸ்.ஜே.வீ. செல்வநாயகம், ஜீ.ஜீ. பொன்னம்பலம், அ. அமிர்தலிங்கம், ஏன்! ஆர். சம்பந்தன் ஐயாவுக்கும் நேர்ந்திருக்கின்றது. இவ்வாறு, கள நிலவரத்தைப் பொறுத்து அரசியல் நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. எந்தவொரு தலைவரும் துரோகி என்றும் வீரர் என்றும் மாறி மாறி அழைக்கப்படுவது சகஜம்.

புதிய தலைமுறை அரசியல் தலைவர்களான நண்பர் சுமந்திரன் போன்றோர் எதிர்நோக்கும் சவால்களும் கவலை அளிக்கின்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அவருக்குகொடும்பாவிஎரித்திருப்பது நல்லிணக்க முயற்சிகளிலிருந்து அத்தகையோரை பின்வாங்கச் செய்யும் ஒரு துர்ப்பாக்கிய நிலைமைக்குத் தள்ளிவிடக் கூடும். உணர்ச்சிபூர்வமாக விடயங்களை அணுகுவதை விட, நிதானமாகவும், தூர நோக்கோடும் அவற்றை அணுகவேண்டிய தேவையுள்ளது.

கேள்வி: இறுதியாக, இந்தப் பிரேரணையை இலங்கையால் முறியடிக்க முடியுமா?

பதில்: முடியும் என்ற நம்பிக்கையுண்டு, ஆனால் ஒருமாதம் நீடிக்கும் இவ்வமர்வின் போது நாம் உறுப்பு நாடுகளுடனான உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் சோர்ந்துபோய் விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சுஐப் எம். காசிம்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com