Contact us at: sooddram@gmail.com

 

தமிழக மக்களின் ஒன்றுபட்ட ஆதரவினை வரவேற்கின்றோம்

ஸ்ரீலங்கா இனவாத அரசு ஈழத்தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட கட்டுமீறிய இனப்படுகொலை மற்றும் தமிழர் வாழ்விடங்களில் மேற்கொண்டுவரும் திட்டமிட்ட குடியேற்றங்கள், உட்பட சிங்கள இனவாத அரசினால் வன்னியில் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தில் மேற்கொண்ட இன அழிப்புக்கு எதிராக தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒரணியாக தமது ஒன்றுபட்ட ஆதரவினை வெளிப்படுத்தியிருப்பது ஈழத்தமிழ் மக்களிற்கு ஆறுதலை தந்துள்ளது.

சிங்கள அரசுகளால் பல்லாண்டு காலமாக புறக்கணிக்கப்பட்டு அரசியல் ரீதியான அடக்குமுறைக்கு எதிராக தந்தை செல்வா முதல் அண்ணர் அமிர்வரை பல்வேறு தலைவர்களின் கீழ் அகிம்சை வழியில் போராடி எந்தவொரு உரிமையையும் இனவாத அரசுகள் வழங்குவதற்கு முன்வராத நிலையில் ஆயுதப்போராட்டம் கூர்மையடைந்தது. அகிம்சை வழியில் மேற்கொண்ட போராட்டங்களிற்கும் ஆயுதபோராட்டத்திற்கும் தமது தார்மீக ஆதரவினை வழங்கிய இந்திய மற்றும் தமிழக மக்களின் ஆதரவினை என்றுமே நாம் மறந்துவிடவில்லை.

பயங்கரவாத அழிப்பு என்ற போர்வையில் ஈழத்தமிழினத்தையே அழித்து ஒட்டுமொத்த இன அழிப்பினை கட்டவிள்த்துவிட்டுள்ள சிங்கள இனவாத அரசு இன்றுவரை எந்தவொரு அரசியல் தீர்வினையும் ஈழத்தமிழ் மக்களிற்கு வழங்க தயாரில்லை. ஆயுதப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டு தமிழ்மக்களிற்கு ஒர் நியாயமான தீர்வை வழங்குவேன் என்று ஆட்சிபீடம் எறிய இன்றைய மஹிந்த அரசு, பேச்சுவார்த்தை என்றும் பாராளுமன்ற தெரிவுக்குழு என்றும் கடந்த காலங்களைப்போன்று சர்வதேசத்தையும், தமிழ்மக்களையும் ஏமாற்றும் வழக்கமான அரசியல் நகர்வையே முன்நிலைப்படுத்தி வருகின்றது.

இந்திய மற்றும் தமிழக மக்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் என்றுமே எமது விடுதலையை பெற்றிடுவதற்கு உதவவேண்டும் என்பதுவே எமது நிலைப்பாடு. தொப்புள்கொடி உறவு என்று தெரிவித்துவரும் தமிழ் மக்களிற்கு தமிழக மக்களின் இந்த ஒன்றுபட்ட ஆதரவு பெரிய ஆறுதலை தந்துள்ளது. இறுதி யுத்தம் என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான மக்களை பலியெடுத்தும், அங்கவீனர்களாக்கியும், முகாம்களிற்குள் முடக்கிவைத்து அராஜக ஆட்சி நடாத்திவரும் இலங்கை அரசு. நியாயபூர்வமான ரீதியில் தீர்வை வழங்க தவறிவருவதுடன். தமிழ்மக்களின் ஆயுதபோராட்டத்தை நசுக்கிவிட்டேன் என்ற விறாப்புடன் தொடர்ந்தும் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கியும், தமிழர் வாழ்விடங்களை அபகரித்தும், சொத்துக்களை சூறையாடியும் பல்வேறு சூழ்ச்சிமங்களை அரங்கேற்றி தமிழ்மக்களை விரக்தியின் விழிம்பிற்கு தள்ளியள்ளது.

ஆகவே எமது மக்களின் மறுக்கப்பட்ட உரிமைக்காக உழைத்துவரும் அமைப்புக்களிற்குள் ஒற்றுமையென்பது அல்லது ஒன்றுபட்ட கருத்தினை முன்வைக்க முடியாத துரதிஸ்டம் தொடர்கின்றது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க, தி.மு.க, தமிழக காங்கிரஸ், பாரதிய ஜனதாக்கட்சி, சி.பி.ஜ, சி.பி.எம் உட்பட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரே குரலாக ஜெனிவாவில் இலங்கை அரசிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தை இந்திய மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று ஒன்றுபட்டு குரல் எழுப்பியுள்ளது ஈழத்தமிழ் மக்களிற்கு நம்பிக்கையையை தோற்றுவித்துள்ளது.

இந்திய அரசினதும், தமிழக மக்களினதும் பூரண ஆதரவு தொடர்ந்து நீடிக்கவேண்டும். மறுக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களிற்கு உரிமை கிடைத்திட தமிழகத்தில் வாழும் தமிழக உறவுகள் தொடர்ந்து கைகொடுத்திட வேண்டும். நீண்டகாலத்திற்கு பின்னர் தமிழகத்தில் உள்ள கட்சிகள் தமக்குள் உள்ள வேறுபாடுகளை மறந்து ஈழத்தமிழ் மக்களிற்காக ஒன்றுபட்டு வெளியிட்டுள்ள தற்போதைய கருத்து மிகப்பெரும் நம்பிக்கை கீற்றினை தோற்றுவித்துள்ளது. தமிழக மக்களினது ஆதரவு தொடர்ந்து நீடிக்க வேண்டும் உங்களுடனான நல்லுறவு என்றென்றும் நீடிக்க வேண்டும் என்பதுவே எமது நிலைப்பாடும் ஆகும்.

தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (சர்வதேச ஒன்றியம்)

ஊடக இணைப்பாளர் எஸ்.மையூரன்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com