Contact us at: sooddram@gmail.com

 

தமிழ் கனடியர்களுக்கான ஐக்கிய ஜனநாயக கலாச்சார அமைப்பு

(பத்திரிகை அறிக்கை)

தாயகத்தில் தேவைகளை நாடுகின்ற மக்களுக்காக புதிய அமைப்பாக உருவெடுத்த நாம் எமது சமூகத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை ஒருங்கிணைத்து பல்வேறு கலாச்சார வடிவங்களை ஒருங்கிணைத்து கருத்து ஒருமித்தவர்களுக்கு எமது தாயகத்தின் எதிர்காலத்தை அழைத்துச் செல்ல விளைகின்கின்றோம்.

புலிகளின் எச்சசொச்சங்கள் குறிப்பாக பருத்த கடல் கடந்த தமிழ் குறும் தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்டு கனடியத் தமிழ் தீவிரவாதிகளின் துணையோடு மேற்குலகின் 'ஜனநாயகம்' இன் போர்வையில் கனடாவில் உலா வருகின்றது. இதே போலவே 'வெற்றி' கொண்ட சிங்களப் பேரனவாதமும் இலங்கையில் சிறுபான்மையினரின் உரிமைகளை தொடர்ந்தும் மறுதலித்து வருகின்றது. கூடவே அவர்களின் அரசியல் அபிலாஷைகளை மறுதலிப்பதோடு தொடந்தார்போல் வீறுகொண்டு சிங்கள் குடியேற்றவாதக் கொள்கையை இலங்கைத் தீவு முழவதும் பிரச்சாரமாக செயற்படுத்துகின்றது. போரில் பாதிக்கப்பட்டவர்கள் அனைத்துப் இனப்பிரிவுகளிலும் நாடு முழுவதும் பரந்துபட்டுள்ளனர். இப் போரின் பாதிப்புக்குள்ளாகிய பிரஜைகளின் துன்பங்கள் நாடு முழுவதும் காணப்படுவது உண்மை. தமிழ் தீவிரவாதிகள் கனடாவில் தொடர்ந்தும் அப்பாவி தமிழ் மக்களை தமக்கு இரையாக்கி வருகின்றனர். பொய்யான பிரச்சாரத்தினூடு பல்வேறு வகையான குற்றச் செயல் நடவடிக்கைகளை புலம் பெயர் தமிழர் மத்தியில் தொடர்ந்தும் செய்து வருகின்றனர். இதற்கு அவர்கள் இலங்கை அரசு அடையாளப்படுத்துகின்றனர். இதற்கு இலங்கை அரசால் தமிழ் மக்களின் சமூக அரசியல் அபிலாஷைகள் அங்கீகரிக்க மறுக்கும் நிலையும் மறுதலிக்கும் நிலையும் காரணமாக அமைகின்றன.

இப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் முகமாக நாம் உருவெடுத்தோம். ந} ஒரு அரசியல் அமைப்பு அல்ல. எவ்வாறாகினும் இலங்கைச் சிறுபான்மையினரின் அரசியல் பிரச்சனையில் எமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த தயங்குவதில்லை. இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். ஒரு சமஷ்டி முறைமையிலான அரசு வடிவம் மூலம் தீர்வு எட்டப்பட வேண்டும். முஸ்லீம்களின் உரிமைகளும், அரசியல் பொருளாதார மற்றும் சமூக கலாச்சார அபிலாஷைகள், மலையகத் தமிழர்களுக்கும் சமஷ்டி முறமையான அரசியல் தீர்வு மூலம் அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும். இலங்கை மக்கள் தற்போதுள்ள அரசை எமது தீவில் உள்ள நீண்டகால அரசியல் பிரச்சனைக்கு தீர்வு காணும் பொருட்டே ஆதரித்தனர். மக்கள் பெரும்பான்மை அரசு ஒன்றை அரசியல் பிரச்னைக்கு தீர்வு காணும் பொருட்டே அங்கீகரித்தனர். மேலும் சர்வ அதிகாரம் பொருந்திய ஜனாதிபதிக்கும் தமிழ் பயங்கரவாதத்தை முறியடித்ததன் காரணமாகவும் ஆதரவு பெருங்கியது. இக் காரணங்களால் இந்த அரசாங்கம் அரசியல் யாப்பில் மாற்றங்களை ஏற்படுத்தி இலங்கை முழுவதும் உள்ள சிறுபான்மையினரின் கோரிக்கைகளை சட்ட வரையறைகள் மூலம் தீர்த்து வைப்பது இவ் அரசின் கடமையாகும்.

இலங்கை அரசையும், வெளிநாடுகளில் உள்ள ஏனைய இலங்கை அமைப்புக்களையும் இலங்கையின் சிறுபான்மை இனங்களின் அரசியல் பிரச்சனை சம்மந்தமாக தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்துமாறு அதிலும் குறிப்பாக தமிழர் அரசியல் பிரச்சனை சம்மந்தமான நிலைப்பாடுகளை வெளிப்படுத்துமாறு நாம் அறை கூவல் விடுக்கின்றோம். இவ்வாறான தெளிவு பெற்ற கொள்கைப் பிரகடனம் தமிழர்களையும், வெளிநாடுகளில் உள்ள தமிழர் அமைப்புக்களையும் எமது நாட்டடை மீளக் கட்டியெழுப்ப வருமாறு இலங்கை அரசு அழைப்பதற்கு முன்னதாக அவசியமாக இருக்கின்றது. சிறுபான்மையிரனின் அரசியல் கோரிக்கைகள் இலங்கைக்குள் தீர்வு காணத் தவறினால் எமது தேசத்தின் பொருளாதார நிலமைகள் வீழ்ச்சி பெறும். அது மாத்திரமல்ல அரசியல் ஸ்திரத் தன்மையும் அற்ற நிலமைகளும் ஏற்படும். மேலும் சர்வ தேச ரீதியாக அரசியல் சக்திகளும், எதேச்சாகாரமாக செயற்படும் அரசுகளுக்கு எதிராக சர்வதேச நிலைப்பாடுகள் மூலம் அந்தந்ந நாட்டுப் பிரஜைகளை பாதுகாக்கின்ற என்ற தொனியில்; ஏற்படுதப் போகின்ற தாக்கங்கள் அளப்பரியனவாக இருக்கும்.

ந} தீவிரவாதம் கொண்ட தமிழ் குறும் தேசியவாதிகளால் செய்யப்படுகின்ற பயங்கரவாதம் சார்ந்த பிரச்சாரத்தை ஆதரிக்கவில்லை. கூடவே சிறுபான்மையினரின் உரிமைகளை ஏற்க மறுக்கின்ற சக்திகளிடம் சரணடையவும் விரும்பவில்லை. நாம் அரசியல் சக்திகளை போரில் பாதிப்படைந்த மக்களுக்குரிய மனிதாபிமான வேலைகளை தடுக்கு வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றோம். அதே வேளை எமது தேசத்தில் அடிப்படையான உரிமைகளை வெளிப்படுத்துகின்ற உரிமையை ஆதரிக்குமாறும் வேண்டுகின்றோம்.

'யுத்தம் அற்ற நிலமை மட்டும் சமாதானம் அல்ல மாறாக நியாயமான அரசியல் தீர்வே சமாதானம் ஆகும்'

செயற்பாட்டுக் குழு

(நவம்பர் 05, 2011)

(இந்த பத்திரிகை அறிக்கை நவம்பர் 05, 2011 அன்று கனடாவில் நடைபெற்ற இலங்கை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பங்கு பற்றி பொதுக் கூட்டத்தில் துண்டுப்பிரசுர வடிவில் விநியோகிகப்பட்டது.)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com