Contact us at: sooddram@gmail.com

 

பல தலைமுறை தலைவர்களுடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர் தோழர் சிவதாசன் -  பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ்.

அங்கிள் என எங்கள் எல்லோராலும் அன்போடும், மரியாதையோடும் அழைக்கப்பட்ட தோழர் சிவதாசன் தனது 77 வது வயதில் காலமாகிவிட்ட துயரச்சம்பவம் நேற்று (13.11.2011) நிகழ்ந்திருக்கிறது. இலங்கை கம்யூனிஸ இயக்க வரலாற்றில் தனக்கொன ஒரு தனியிடத்தை வகித்தவரும், தொழிற்சங்க போராட்டங்களில் முனநின்றவரும் வடபகுதியில் தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களில் பங்கேற்றவரும் வர்க்க விடுதலை மூலமே இலங்கையில் ஏற்றத் தாழ்வற்ற சமுதாயத்தை படைக்க முடியும், தமிழ் மக்கள் விடிவை எய்த முடியும் என்று கருதி செயற்பட்ட தோழர் சிவதாசன் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் முனைப்புப் பெற்று ஆயுதந் தாங்கிய போராட்டமாக மாறியபோது அதிலும் பங்கேற்ற ஒருவர். பாராளுமன்ற உறுப்பினராகவும், பனை அபிவிருத்தி சபை தலைவராகவும் பதவிவகித்தவர். அவர் இறக்கும் வரை தனது அரசியல் பயணத்தை இடைவிடாது தொடர்ந்தவர்.

தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற தோழர் சிவதாசன் சிங்களத் தலைவர்களுக்கும் தமிழ் மக்களுக்கிடையேயும், தமிழ் தலைவர்கள் சிங்கள மக்களிற்கிடையேயும  ஒர பாலமாக விளங்கினார். பீற்றர் கெனமன், எஸ்.ஏ விக்கிரமசிங்கா போன்ற தென்னிலங்கை கம்யூனிஸ்ட் தலைவர்களோடும், சிறந்த மாக்ஸிஸ்ட் என போற்றப்பட்டவரும் வட பிரதேசத்தில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் பல்வேறு போராட்டங்களுக்கு உந்து சக்தியாய் இருந்தவருமான சண்முகதாசன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியிலும், இளம் தமிழ் தலைவர்களான பத்மநாபா, டக்ளஸ் தேவானந்தா போன்ற பல்வேறு தலைமுறைகளை சேர்ந்த தமிழ் சிங்கள தலைவர்களுடனும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு பரந்த தளத்தில் செயற்பட்டவர். அவர், அமரர் தோழர் பத்மநாபா தலைமையிலான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில், (ஈ.பி.ஆர்.எல்.எவ்) ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த காலகட்டத்திலும், பின்னர் 1987 இல் இந்திய இலங்கை உடன்படிக்கையை தொடர்ந்து உருவாக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணசபையை நிறுவி பாதுகாப்பதிலும் தோளோடு தோள் நின்றவர். புலிகளின் ஜனநாயக மறுப்புக்கு எதிராகவும் துணிச்சலாக செயற்பட்டவர்.

1994 இல் ஈழமக்கள் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு (ஈ.பி.டி.பி) முதல் தடவையாக பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். அன்றிலிருந்து அவர் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் அத்தனை அரசியல் நடவடிக்கைகளிலும் காத்திரமான பங்களிப்பை நல்கி வந்துள்ளார்.

நோர்வே அரசின் அனுசரணையுடன் 2002 க்கு பின்னர் ஏற்படுத்தப்பட்ட சமாதான காலத்தில் 2006 இல் புலிகள் அவர் பயணம் செய்த வாகனத்தின் மீது நடாத்திய தாக்குதலில் காயங்களுடன் உயிர் பிழைத்திருந்தார்.

அவரோடு பழகவும், அவரோடு அரசியல் பணிகளில் ஈடுபடவும் அவரது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் எமக்கு கிடைத்த சந்தர்ப்பம் பெறுமதி மிக்கதாகும். அவரது அனுபவங்களையும், ஆற்றல்களையும் எம்மிடமிருந்து பறித்துக்கொண்ட அவரது இழப்பு பேரிழப்பாகும். அவரது இழப்பால் துயரடைந்திருக்கும் அனைவரதும் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம். அவரது பணிகளுக்காக அவரை மரியாதைசெய்து எமது உளப்பூர்வமான அஞ்சலிகளையும் உரித்தாக்குகின்றோம். 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com