Contact us at: sooddram@gmail.com

 

வாழ்க்கையை கொண்டாடுவோம்

நவம்பர் 19 தோழர் பத்மநாபா பிறந்தநாள்

தியாகிகள . ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணின் பெருமைக்குரிய செயலாளர் நாயகம் தோழர் பத்மநாபா அவர்களின் பிறந்ததினம இன்றாகும். தோழர் பத்மநாபாவும் பன்னிரண்டு தோழர்களும் தமிழக மண்ணில் படுகொலை செய்யப்பட்டதை நினைவு கூர்ந்த ராஜீவ்காந்தி அவர்கள் தனது தாயார் இந்திரா காந்தி அவர்களும் தோழர் பத்மநாபா அவர்களும் ஒரே தினத்தில்தான் பிறந்தவர்கள். ஒரே விதமான இலட்சியங்களுக்காக போராடி மரணித்தவர்கள் என தனது இரங்கல் குறிப்பில் குறிப்பிட்டிருந்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் சுதந்திரம், சர்வதேச சகோதரத்துவம் நவ காலனித்துவத்துக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றை வரிந்து கொண்டவர் அவர். இலங்கையில் தமிழர்களின் உரிமைகளுக்காகவும் சமூகங்களிடையே சகோதரத்துவத்துக்காகவும், சமூக மாற்றத்துக்காகவும் உழைத்தவர் அவர். சகல விதமான அடிமைத்தனங்களையும் அவர் எதிர்த்தவர். நீதியான சமூக அமைப்பை, பாரபட்சமற்ற சமூக அமைப்பை அவர் வேண்டி நின்றவர்.

இந்த உயரிய இலட்சியங்களுக்காக 70 களின் முற்பகுதியில் இருந்து 1990ல் அவர் படுகொலை செய்யப்படும் வரை அல்லும் பகலும் அயராது உழைத்தவர். முப்பத்தொன்பது வருடங்களில் இந்த உலகில் வாழக்கிடைத்த சந்தர்ப்பத்தில் 20 வருடங்களை தனது சமூகத்திற்காக, மானிடத்தின் விடிவிற்காக அர்ப்பணித்திருந்தவர்.

எமது சமூகத்தில், எமது நாட்டில் பல்லாயிரக்கணக்கான இளந்தலைமுறையினர் அகாலமாக படுகொலை செய்யப்பட்டதைப் போன்றே அவரும் படுகொலை செய்யப்பட்டார். ஒரு விடயத்தை இங்கு நாம் ஊன்றி கவனிக்க வேண்டும். சமூக நீதி தொடர்பான அக்கறையும், ஆவேசமும் கொண்ட இளந்தலைமுறையொன்று கடந்துவந்த கால் நூற்றாண்டுகளில் அழிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் பல்வேறு சமூக விடுதலை இயக்கங்களைச் சார்ந்தவர்களாகவும் மனித உரிமை அமைப்புக்களைச் சார்ந்தவர்களாகவும், அகிம்சை, சகிப்புத்தன்மை என்பவற்றில் நம்பிக்கைக் கொண்ட தலைவர்களாகவும் தீர்க்கதரிசனமும் ஆளுமையும் கொண்ட புத்திஜீவிகளாகவும் சாதாரண சராசரி மாந்தர்களாகவும் இருந்திருக்கிறார்கள். எத்தகைய பெரிய ஆற்றல் அழிக்கப்பட்டிருக்கிறது என ஆழமாக சிந்தித்தோமேயானால் எமக்கு பேரதிர்ச்சி ஏற்படும். இதில் தமிழர்கள் மாத்திரமல்ல சிங்களவர்கள், முஸ்லீம்களும் அடக்கம்.

'நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ' என்ற பாரதியின் வரிகளை நினைவுறுத்தும் விதமாக 'கண்களை விற்று சித்திரம் வாங்கும்' குரூர பைத்தியக்காரத்தனத்தை நினைவுறுத்தும் விதமாக இங்கு இளந்தலைமுறை வீழ்த்தப்பட்டிருக்கிறது. இந்த இளம் தலைமுறையினர் நியாய உணர்வு கொண்டவர்கள். அவர்கள் அஞ்சா நெஞ்சம் கொண்டவர்கள். அவர்களுடைய உழைப்புக்கள், அர்ப்பணங்கள் எல்லாமே இங்கு விரயமாக்கப்பட்டிருக்கின்றன.

தமிழ் பாசிசம் தேசிய விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தது மாத்திரமல்லாமல், இளந்தலைமுறையினரின் பேரழிவுக்கும் வழிவகுத்தது என்றால் அது மிகையல்ல.

உன்னதமான இலட்சியங்களுக்காக போராடிய மனிதர்கள் மாத்திரமல்ல தவறாக வழிநடத்தப்பட்டு அழிவுற்றவர்களையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். நினைவுகூர வேண்டும்.

மனித வாழ்வு என்பது மிக குறுகிய காலம். ஆனால் அந்த குறுகிய காலத்தில் அர்த்தபூர்வமான வாழ்க்கை வாழ்வதற்கு ஆக்கபூர்வமான சாதனைகள் செய்வதற்கு இடமளிக்காமல் தவறாக வழிநடத்தப்பட்டு குறுகிய காலத்தில் வாழ்வு அழிக்கப்பட்டவர்களின் மரணம் அவலமானது.

காந்தியடிகளின் கொல்லாமை, அன்பு, அகிம்சை என்ற உயரிய கோட்பாடுகளை, விழுமியங்களை எமது சமுகத்தில் நிலை நிறுத்த இந்த அவலமான வரலாற்று காலகட்டத்தில் நாம் பாடுபடவேண்டும்.

நாம் எதனை எல்லாம் இழந்து விட்டோம், எதனையெல்லாம் இழந்து கொண்டிருக்கிறோம் என்பதை ஓய்வில்லாமல் எம் மனக்கண்ணில் நிலை நிறுத்த வேண்டும். தனது பிள்ளை கற்க வேண்டும,; வையத்துள் வாழ்வாங்கு வாழவேண்டும், தார்மீக நியாய உணர்வு கொண்ட பிள்ளையாக வளர வேண்டும் என்றே பெற்றவர்கள் கனவு காண்பார்கள். எமது சமூகத்தில் எத்தனை ஆயிரம் கனவுகள் நொறுங்கிப் போயின. இந்த கனவுகள் சுமந்த நெஞ்சங்கள் இன்று தாங்கொணா துயர சுமைகளை தாங்கி நிற்கின்றன. வெறுமை, சூனியம் என்பன அவர்களின் மனதை நிறைத்திருக்கின்றன. யுத்தம் ஈவிரக்கமற்ற வன்முறைகள் மாத்திரமல்ல இயற்கையும் தன் பங்கிற்கு அள்ளிச் சென்று விட்டது. ஒரு மனிதனின் அவதாரம் என்பது எவ்வளவு மகத்தான விடயம்.

வள்ளுவரின் இரு வரிக் கவிதைகள் ' ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்' என்கிறது தன்மகன் சான்றோன் என அறியும் போது அவனைப் பெற்ற பொழுதைவிட தாய் பெரிதும் மகிழ்வாள் என்கிறது. ஆனால் பிள்ளைகளை இழந்த பெற்றோரின், மனைவியரின், கணவர்களின், உற்ற சுற்றத்தின் பெரு மூச்சுக்கள் எமது தேசத்தின் காற்றை வெப்பமாக்கியிருக்கின்றன.

இன்று உலகளாவிய அளவிலும் மனிதர்கள் அன்றாடம் கொல்லப்படுவதென்பது இயல்பான விடயமாகி வருகிறது. நவீன காட்டுமிராண்டி நிலையை நோக்கி உலகம் சிதைந்து கொண்டிருக்கிறது ஊரளவில் மாத்திரமல்ல, உலகளவிலும் இது பற்றிய விழிப்புணர்ச்சி அவசியமாகிறது.

மனிதன் வாழும் உலகின் இயற்கைச் சூழலை பாதுகாப்பதற்கான ஆபிரிக்க பெண்மணி வங்கரிமாதாவின் விழிப்புணர்ச்சி செயற்பாடுகள் உலகளாவியளவில் விதந்துரைக்கப்பட்டன. அதற்கான நோபல் பரிசையும் அவர் பெற்றிருந்தார்.

விலை மதிப்பற்ற மனித உயிர்களின் மாண்பை உயர்த்திப் பிடிப்பதற்கு ஒரு பிரமாண்டமான விழிப்புணர்ச்சி இயக்கம் தேவை.

தமது பிள்ளைகள் கற்க வேண்டும், எதிர்காலத்தில் சகல சௌபாக்கியங்கங்களுடனும் வாழ வேண்டும் என கண் துஞ்சாது அல்லும் பகலும் அயராது பாடுபடும் புலம் பெயர் சமூகத்தின் பெற்றோர்கள் ஒரு கணமேனும் அவர்களின் தாயகத்தில் அன்றாடம் கொல்லப்படுபவர்களை பற்றி மரணத்தை எதிர்நோக்கி இருப்பவர்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். வாழ்க்கை அழகிய ஒவியம் போன்றது. அதன் மீது இரத்தத்தை தெளித்து அழகு பார்க்கும் குரூர ரசனை எமக்கு வேண்டாம். மரணத்தை வழிபடும் காட்டுமிராண்டி கலாச்சாரம் எமக்கு வேண்டாம்.

நவ உலகின் மனிதர்களான எமக்கு இது வேண்டாம். 'பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சி சொல்ல' இது எமக்கு வேண்டாம்.

மனிதத்தின் அவதாரத்தின் வாசனை, ஜனனத்தின் வாசனை, உயிர்ப்பின் வாசனை, வளர்ச்சியின் அதிர்வுகள் இவையே எமக்கு வேண்டும். நாம் வாழ்க்கையை கொண்டாடுவோம்.

தோழர் பத்மநாபா அவர்களின்அன்னை இந்திராகாந்தி அவர்களின் பிறந்த தினத்தில் நாம் சொல்ல விளைந்த செய்தி இதுதான்.

பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com