Contact us at: sooddram@gmail.com

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்,தமிழர் விடுதலை கூட்டணி தொடர்ந்து இயங்க இடமுண்டா?

அறிந்து சொல்லுங்கள் ஆண்டகை அவர்களே!

மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி அவர்கள் எழுதிய உருக்கமான கடிதம் இது

அதி. வணக்கத்திற்குரிய ஆண்டகை இராயப்பு ஜோசப் அவர்களுக்கு,ஆண்டகை இல்லம்,மன்னார்.தமிழ் மக்களின் ஒற்றுமைஅன்புடையீர்,

இனப்பிரச்சனைத் தீர்வுக்கு குறிப்பாக அதற்கு முன்னோடியாகிய தமிழ் மக்களின் ஒற்றுமை பற்றித் தாங்கள் எடுக்கும் பெருமுயற்சி சம்பந்தமாக எனது ஆதங்கத்தை வெளிப்படுத்த விரும்புகின்றேன். அண்மையில் வடமாகாண சபைக்குத் தெரிவுசெய்யப்பட்ட சில உறுப்பினர்கள் முல்லைத்தீவில் சத்தியப் பிரமாணம் செய்ய எடுத்த முடிவை தாங்கள் தலையிட்டு வெற்றிகரமாக நிறுத்திய செய்தியே இக்கடிதத்தை உடனடியாக எழுதத் தூண்டியது. தங்கள் முயற்சியைப் பாராட்டும் அதேவேளையில் தங்களுக்குரிய மரியாதையை அளித்து மிக்க தயக்கத்துடன் நான் அதிலுள்ள சில குறைகளை சுட்டிக்காட்ட விரும்பு கின்றேன். தங்களின் இம்முயற்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உண்மையாகவும், நேர்மையாகவும், இன ஒற்றுமைக்காகவும் உழைக்கின்ற சில தலைவர்களைப் பற்றி, ஒருசில சுயநலம் விரும்புபவர்களால் தப்பான விமர்சனத்துக்கு இலக்காகுவதோடு பின்னணி தெரியாத சில அப்பாவிகளும் தப்பாக எண்ண வழிவகுக்கும். இத்தகையவர்களை எல்லா வேளைகளிலும் குற்றவாளிகளாக ஆக்கக்கூடிய பாதகமான நிலையைத் தவிர்க்க வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இக்கட்டான நிலையேற்படும்வேளையில் அவர்களை மீட்டெடுப்பது இதுதான் முதற்தடவையல்ல. இச்சந்தர்ப்பங்களில் ஒரு சிறு குழு தம்மைப் பாதுகாப்பதற்கு தங்கள் மீது சாய்வதை தாங்கள் அனுமதிக்கக்ககூடாது. முதலமைச்சர் வேட்பாளர் தெரிவிலும் கூட ஏகமனதாக முடிவெடுக்க வேண்டிய தேவையிருந்தும் அவ்வாறு செயற்படவில்லையென்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன். முதலமைச்சர் வேட்பாளர் நியாயமாகவும் திறமையாகவும் செயற்படகூடியவர் என்பதோடு அவர் என்னுடைய நண்பரும் சட்டக்கல்லூரியில் ஒன்றாய்ப் பயின்ற வருமாவார். மேலும் சொல்லப்போனால் பல ஆண்டுகளுக்கு முன்பு முயற்சித்து உண்மை நிலையை அறிந்தபின் அதில் தலையிடாமல் ஒதுங்கியவருமாவார். எனவே அவரின் தெரிவில் எனக்கு ஒருவித அபிப்பிராயபேதமும் இருக்கவில்லை. ஆனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் எவருக்கேனும் ஏதாவது வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளதா? அப்படியானால் அது நிறைவேற் றப்பட்டதா? என்பதே தற்போ தைய கேள்வி! கூட்டமைப்பில் உள்வட்டம் ஒன்றிருப்பதால் அவர்களாலேனும் இவ்வாக் குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா? அன்றேல் முதலமைச்சர் மீது திணித்து விடப்பட்டதா? முதலமைச்சர் கூட்ட மைப்பைப்பற்றி அறிந்துகொள்ளுவதற்கு இன்னும்பல விடயங்கள் எண்டு.

அண்மையில் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பில் பொதுவேட் பாளராகப் போட்டியிட்டிருப்பின் பல தப்பபிப்பிராயங்களையும் பிரச்சினைகளையும் தவிர்த்திருக்க முடியும்.

ஏனெனில் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தார்களே அல்லாமல் தனிப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அல்ல. ஆனால் துரதிர்ஷ்டவசமாக மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட அத்தனை வேட்பாளரும் ஏதோ ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் முன்னிலை வேட்பாளன் நானாக இருந்தும், தமிழரசுக் கட்சியில் போட்டியிட்ட மூன்று வேட்பாளர்களையும் நியமன தினத்தில் அன்று கண்டபின் இன்றுவரை காணவில்லை. அவர்கள் சார்பில் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் பா. சிaதரன் அவர்களின் இலக்கங்கள் புள்ளடியிடப்பட்டு காட்டப்பட்டிருந்தன. அவர்கள் நடத்திய பல கூட்டங்களில் இம்மூவருக்குமே வாக்களிக்கும்படி கூறப்பட்டதே தவிர ஏனய நால்வரைப் பற்றிக் குறிப்பிடவில்லை. கிளிநொச்சி கூட்டமைப்பு வேட்பாளர்கள் அனைவரும் ஒரே மேடையில் அல்லது ஒரே கூட்டத்தில் வைத்து கட்சித் தலைவர்களால் அறிமுகப் படுத்தப்படவில்லை.

முதலாவது கூட்டத்தில் இம்மூவரையும் ஆதரிக்குமாறு இருகட்சித் தலைவர்கள் முறையே மாவை. சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன் அவர்களுடன் பா.உ. சிaதரனும், கரைச்சி பிரதேச சபை தலைவர் உட்பட உறுப்பினர்கள் சிலர் பரப்புரை செய்தனர். ஏனைய நால்வருக்கும் இதுபற்றி எதுவித தகவல்களும் கொடுக்கப்படவில்லை. மட்டகளப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் அரியநேந்திரன், யோகேஸ் வரன் ஆகியோரும் கொழும்பிலிருந்து மனோ கணேசன், பாஸ்கரா ஆகியோரும் இம்மூவ ரையும் ஆதரித்துப் பிரச்சாரம் செய்தனர். இதுதவிர தமிழரசுக் கட்சியின் நியமன பா.உ எம்.ஏ. சுமந்திரன் பல கூட்டங்களில் பேசியது மட்டுமல்ல கிளிநொச்சி நகர்ப்புறத்திலும், சந்தையிலும் இவர்களை ஆதரிக்கும் துண்டுப்பிர சுரங்களையும் விநியோகித்தார். மிகமோசமான செயல் என்னவெனில் கட்சித் தலைவர்க ளுடைய கூட்டத்திற்கு தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் அட்டவணையில் கிளிநொச்சிக்கு இடம் ஒதுக்கப்படவில்லை. மொத்தத்தில் கட்சித் தலைவர்கள் உரையாற்றுகின்ற ஒரு கூட்டத்தையேனும் கிளிநொச்சியில் நடத்தவில்லை. பல்வேறு கட்சிகளைச் சார்ந்த வேட்பாளர்கள் பற்றிய கட்டுரைகள் முக்கியமாக சில தினசரிகளில் பெருமளவில் வெளிவந்தன ஆனால் என்னைப்பற்றிய கட்டுரைகள் எதுவும் பிரசுரிக்கப்படாமையை அறிந்தால் நீங்கள் ஆச்சரியம் அடைவீர்கள்!

ஆண்டகை அவர்களே! அண்மையில் நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஏன் - எவ்வாறு மிகமோசமாக நான் தோற்கடிக்கப்பட்டேன் என்பது பற்றி நீங்கள் அறிந்துகொள்ள முயற்சிக்காதது எனக்குப் பெரும் ஆச்சரியத்தைத் தருகிறது. தங்களுக்கு என்னை 35, 40 வருடங்களாகத் தெரியும், நாமிருவரும் பல தடவைகள் சந்தித்தமையைத் தவிர அதற்கும் மேலாக கடந்த பத்து ஆண்டுகளில் ஐந்து தடவைகளுக்கு மேலாக பலநாட்கள் தொடர்ந்து ஒஸ்றியா நாட்டில் சில கருத்தரங்குகளில் சந்தித்துள்ளேன். இந்தச் சந்தர்ப்பங்களில் நாம் பல விடயங்களைப்பற்றி பேசக்கூடிய வாய்ப்புக் கிட்டியிருந்தது. என்னுடைய அரசியல் சிந்தனைபற்றி முற்றுமுழுதாக அறிந்திருந்தவர் நீங்கள்! பல விடயங்களில் எமக்கு எதுவிதமான அபிப்பிராய பேதமும் இருக்கவில்லை. பல்வேறு விடயங்களில் நான் வெளிப்படையாக கருத்துத் தெரிவிப்பவனாக இருந்தாலும், தங்களின் ஆலோசனைகள் ஏதாவது இருந்திருப்பின் அவற்றை ஏற்காது மறுத்தவனல்ல. அண்மையில் எனது சில கடிதங்கள் அடங்கிய கோவையை தங்களிடம் கையளித்திருந்தேன்! நீங்கள் அவற்றைப் படித்திருப்பீர்கள் என நம்புகிறேன்! அதில் கூறப்பட்டவை அத்தனையும் உண்மை! நான் பொய்யைப் பேசுவதுமில்லை. எழுதுவதுமில்லை. அக்கடிதத்தைத் தங்களுக்கு கையளித்ததன் நோக்கம், தாங்களும் என்னைப்பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும் என்பதற்காகவும், கள நிலமையை நீங்கள் நன்றாகப்புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவுமே!

அண்மையில் எனக்கு ஏற்பட்ட தேர்தல் தோல்வி தமிழர்களுக்கோ, முஸ்லிம்களுக்கோ, சிங்களவர்களுக்கோ அல்லது ஏதாவது இனத்தை, மதத்தைச் சேர்ந்த எவருக்குமோ அன்றேல் ஆட்சியாளருக்கோ, எதிர்க்கட்சி யாளருக்கோ மகிழ்ச்சிதரும் விடயம் அல்ல என்பது, ஆண்டகை அவர்களே தங்களுக்கு ஏன் தோன்றவில்லை. என்னை தோற்கடிக்க வேண்டுமென்ற முடிவு மக்களுடையதாக இருந்திருந்தால் நான் வருத்தப்படமாட்டேன். என்னுடைய வருத்தமெல்லாம், வெளிநாடுகளில் உருவாகிய ஒரு சதித்திட்டம் நாட்டில் பல் வேறு குழுக்களால் அமுல் நடத்தப்பட்டுள்ளது என்பதே!

கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு பலமுள்ள குழுவும், புலம்பெயர்ந்தவர்களில் ஒரு பகுதியினரும் இதில் முக்கிய பங்கெடுத் துள்ளனர். இந்தத் துர்ப்பாக்கியமான நாடகத்தில் கதாபாரத்திரங்கள் யாரென்பதையும் அல்லது இந்தக் கண்ணாம்பூச்சி விளையாட்டில் யார் பங்கெடுத்திருந்தார்கள் என்பதையும் நீங்கள் அறிந்தால் அதிர்ச்சி அடைவீர்கள்!

என்னை அரசியலிலிருந்து ஒதுக்கிவிட இம்முயற்சி எடுக்கப்பட்டிருந்தாலும், எனது மக்களுக்கு நேர்மையாகவும் பலமாகவும் உழைக்கக் கடமைப்பட்டுள்ளவ னாகையால் இம்முயற்சி அவ்வளவு இலகுவானதல்ல.

இவை பெரும் அனர்த்தத்திலேயே முற்றுப்பெறும். தங்கள் பாட்டன், பூட்டன் மற்றும் பேரப்பிள்ளைகள் ஆகியோரோடு சிறப்பாக வாழ்ந்துகொண்டி ருக்கும் புலம்பெயர்ந்தவர்கள் சிலரால் ஒரு வருடத்திற்குள் ஆரம்பிக்கப்பட்ட சதிமுயற்சி கடந்தமாதம் நடந்தேறிய தேர்தலுடன் முடிவுற்றது. ஒரு நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் அரசியலிலும், சமூக சேவையிலும் அறுபது ஆண்டுகளுக்கு மேல் நிலைத்திருந்த எனது சேவை புறக்கணிக்கப்பட்ட ஏழைகளுக்கும், தேவையானவர்களுக்கும், மறுக்கப்பட்டுள்தே தவிர வேறொன்று மில்லை. இனப்பிரச் சினைத் தீர்வுக்கு நீண்ட காலமாக சமஷ்டி ஆட்சிமுறையை வலியுறுத்தியும், அதற்கு மாற்aடாக இந்திய முறையிலான ஆட்சி முறையையும் வற்புறுத்தி வந்துள்ளேன்.

மேலும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சகல தமிழ்க்கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும் என்ற கோரிக்கையை நிபந்தனையற்று ஏற்று,2010 தொடக்கம் இன்றுவரை சகல உள்ளூராட்சி மன்ற, மாகாண சபைத் தேர்தல்களின் வெற்றிக்காக தீவரமாக உழைத்து வருகிறேன்.

தங்களைப் போன்றவர்களின் பெருமுயற்சியினாலும், எங்களைப் போன்றவர்களின் பல இழப்புக்களோடு, சுய கெளரவத்தையும் இழந்து, முன்வந்து எடுத்த பெருமுயற்சியால் தற்போது ஏற்பட்டிருக்கின்ற இன ஒற்றுமையை திட்டமிட்டு இல்லாமல் செய்யுமளவுக்கு எங்கேயோ ஓரிடத்தில் பிழை நடத்திருக்கிறது என்பதை தாங்களும் ஒத்துக்கொள்வீர்கள் என எண்ணுகிறேன். உடன் நடவடிக்கை எடுத்து நிலைமையை சீர் செய்யுங்கள். அன்றேல் கூட்டணி தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இயங்க இட முண்டா? என்பதையும் அறிந்து சொல்லுங்கள்!

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com