Contact us at: sooddram@gmail.com

 

பிரபாகரன், வட மாகாணத்தின் முதலமைச்சராக இருந்திருக்கலாம் - ஆனந்தசங்கரி

கடந்த காலத்தில் உள்ளுர் வெளிநாட்டு ஊடகங்கள் சில ஒத்துழைத்திருந்தால் பிரபாகரன் இன்று உயிருடன் இருந்திருப்பார் என்பது மட்டுமல்ல வட மாகாணத்தின் முதலமைச்சராக கூட இருந்திருக்கலாம். தூரதிஸ்டவசமாக எனது செய்தி மக்களை சென்றடையாததால் மக்கள் என்னை தப்பாக நினைக்கத் தோன்றியதோடு பல ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்களின் இழப்புக்களுக்கும் காரணமாக அமைந்தது என்று தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.                   

அவரவிடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயமேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள சில சம்பவங்கள் தமிழ் மக்களுக்கு பெரும் சங்கடமான நிலைமையை உருவாக்கியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பும் குறிப்பாக இலங்கை தமிழரசுக் கட்சி முற்று முழுதாக இருட்டில் வாழ்கின்ற தமிழ் மக்களை எங்கஇழுத்துக் கொண்டு செல்கின்றோம் என்று தெரியாமல் நிலைதடுமாறி நிற்கிறதுஅவர்களுடைய தாரக மந்திரமாகிய சில வார்த்தைகள் படிப்படியாக அதன் செயலையும் மதிப்பையும் இழந்து வந்துள்ளமையால்; மக்கள் அவர்களை நோக்கி கேள்விகள் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

பெருந்தலைவர்களாகிய திருவாளர்கள் எஸ்.ஜே.வி. செல்வநாயகம், ஜி.ஜி.பொன்னம்பலம், எஸ். தொண்டமான் , அ.அமிர்தலிங்கம், மு.சிவசிதம்பரம், எஸ்.ஆர். கனகநாயகம் போன்ற இன்னும் பல வழக்கறிஞர்கள், புத்திஜீவிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், ஆகியோரின் கடும் உழைப்பால் மட்டுமன்றி பல நூற்றுக்கணக்கான இளைஞர்களின் தியாகத்தாலும் உருவாகிய, தமிழ் மக்களின் சகல நன்மை தீமைகளை பரிபாலிக்கின்ற ஒரநம்பிக்கை நிறுவனமான தமிழர் விடுதலைக் கூட்டணியின் உண்மையான சரித்திரத்தை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.

துஸ்பிரயோகம

திரு.
அமிர்தலிங்கம் அவர்களைப்பற்றி கதைப்பதற்கு மிகவும் உரித்துடையவருமான திருமதி அமிர்தலிங்கம் அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் '1972 ம் ஆண்டு தமிழ் அரசியல் கட்சிகளாகிய தமிழரசு கட்சியும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை ஸ்தாபித்து முழு தமிழ் சமூகத்தையும், ஒன்றிணைத்து சரித்திரம் படைத்தனர்' மேலும்  ' எனது கணவர் தமிழரசு கட்சியின் பதிவை பாதுகாத்து வைத்ததன் ஒரநோக்கம் தகுதியற்ற சிலர் அக்கட்சியின் சின்னத்தையும், பெயரையும் துஸ்பிரயோகம் செய்துவிடக்கூடாது என்பதற்காக மட்டுமன்றி தமிழரசு கட்சியை மீளப்புத்துயிரூட்ட ஒருபோதும் அவர் எண்ணவில்லை' திருமதி மங்கையர்கரசி அமிர்தலிங்கம் அவர்கள் மேலும் கூறுகையில் என் கணவரால் வளர்த்தெடுக்கப்பட்ட சிலர் தமிழரசு கட்சியின் பெயரை துஸ்பிரயோகம் செய்ததுடன் அக்கட்சியை மீளப்புதுப்பிக்க நடவடிக்கை எடுப்பது கவலையை தருகிறது.

ஒரேயொரதடவை மட்டும்  உபயோகிக்கப்பட்டது

அவர்கள் மீது எனது கணவர் வைத்திருந்த நம்பிக்கைக்கு அவர்கள் துரோகம் செய்துள்ளனர்'. அறிக்கையினமுடிவில் அவர் தெரிவித்திருப்பதாவது நான் திட்டவட்டமாக கூற விரும்புவது யாதெனில் இந்த முயற்சியை அங்கீகரிக்கவோ, ஆதரிக்கவஇல்லை. அதற்குப்பதிலாக எமது பெருந்தலைவர்களால் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியை அவர்கள் அழிக்க எடுத்த முயற்சியை கண்டிக்கின்றேன்.

நாமமுக்கியமாக கவனிக்க வேண்டியது யாதெனில் இந்த விடயத்தில் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வஎவ்வாறான அபிப்பராயம் கொண்டிருந்தார் என்பதே. அவர் 1977ம் ஆண்டு சித்திரை மாதம் உயிர் நீத்தார். ஆனாலஅவர் இறப்பதற்கு முன்பு திருவாளர்கள் எஸ் தொண்டமான், ஜி.ஜி.பொன்னம்பலம் கியூ.சி ஆகியோரை தங்களுடன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்களாக தெரிவு செய்தார். தமிழர் விடுதலைக் கூட்டணி ஆரம்பிக்கப்பட்டதன் பின் தமிழரசு கட்சியின் பெயர் ஒரேயொரு தடவை மட்டும்  உபயோகிக்கப்பட்டது.

அதுவதமிழரசு கட்சியினுடைய வெள்ளிவிழாவாக வெள்ளவத்தை இராமகிருஸ்ண மண்டபத்தில் 18-12-1974 அன்று  ொண்டாடப்பட்டது. அந்நிகழ்விலதிரு. எஸ். தொண்டமான் அவர்கள் தந்தை செல்வாவுக்கு முதறிஞர் பட்டம்  வழங்கி கௌரவித்தார். அந்த நிகழ்ச்சியில்  அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நான் தந்தை செல்வஅவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தேன். இந்த உண்மைகளை எவரேனும் மறுப்பார்களேயானால் நான் அரசியலில் இருந்து ஒதுங்கத் தயாராக உள்ளேன்.

'ஈழத்து காந்தி' என இன்றும் அழைக்கப்பட்டு வருகின்றார்

1977ஆம் ஆண்டு சித்திரை மாதம் தந்தை செல்வஇறந்ததிலிருந்து 2003ம் ஆண்டுவரை ஏறக்குறைய 26 ஆண்டுகள் செயலிழந்திருந்த தமிழரசு கட்சியின் மீள்புனரமைப்பு விடுதலைப்புலிகளின் அரசியல் துறை துணை பணிப்பாளர் திரு.தங்கன் அவர்களின் பணிப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்டது. இதசம்பந்தமாக 2003ம் ஆண்டு ஒக்டோபர் 14ஆம் திகதி இதற்கான சந்திப்பு தமிழர் விடுதலைக் கூட்டணி பிரமுகருடன் இடம்பெற்றது. துரதிஸ்டவசமாக விடுதலைப் புலிகள் வன்முறையில் ஈடுபட்டவொரு கட்சியாகும். ஆனால்  தந்தை செல்வஅவர்கள் அகிம்சை வழியை பின்பற்றியமையால் 'ஈழத்து காந்தி' என இன்றும் அழைக்கப்பட்டு வருகின்றார்.

தமிழர் ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்ட காலம் தொடக்கம் பல ஆண்டுகள் குறிப்பிட்ட இருவர் தமிழர்  ிடுதலைக் கூட்டணியுடன் எவ்வித தொடர்பும் அற்றவர்களாக இருந்தனர். இந்த ஸ்தாபனத்தை விஸ்தரிப்பதற்கு நாம் எவ்வளவு கஸ்டப்பட்டோம் என்பது இவ்விருவருக்கும் தெரியாது. நான் ஒரேயொரு தமிழ் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தமையால் வடக்கு கிழக்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டங்கள் அனைத்திலும் கலந்து கொள்ளும் நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டது.

விசுவாசமாக இணைந்து செயற்பட்டன

இந்தக் காலப்பகுதியில் தமிழரசு கட்சியின் ஒரு கூட்டமேதும் நடைபெற்றதாக யாராவது நிரூபிக்க முடியுமா?
தமிழரசுக்கட்சியும், தமிழ் காங்கிரஸ் கட்சியும் தேர்தலில் போட்டியிட்டவேளை வெற்றியீட்டியவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிட்டு பெற்ற வாக்குகளை ஒப்பிட்டு நோக்கினால் இரு கட்சிகளும் விசுவாசமாக இணைந்து செயற்பட்டன என்பது நிரூபணமாகிறது. உதாரணமாக தமிழரசு கட்சி, தமிழ் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தனித்தனியபோட்டியிட்டு 13,520, 14,120, 16,428, 13,110, 9049 என வாக்குகளை பெற்றவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிட்டு பெற்ற வாக்குகள் முறையே 31,115, 27,550, 25,840, 29,858, 15,607 பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

அந்த நேரத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் புனரமைப்புக்கு எதுவித தேவையும் இருக்கவில்லை. இந்த மீள் புனரமைப்பு  தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட துரோகமாகும். அதுவுமகூட கட்சியால் வழங்கப்பட்ட, ஏனையவர்களுக்கு மறுக்கப்பட்ட பல்வேறு சலுகைகளையும், பயனையும் அனுபவித்த ஒருவரால் மேற்கொள்ளப்பட்டதாகும். கட்சியின் செயலாளர் நாயகம் அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் படுகொலையைத் தொடர்ந்து அவரது வெற்றிடமான இடத்துக்கு பதவியை குறிப்பிட்ட நபருக்கு வழங்கியதால் நான் பலரின் வெறுப்புக்கு ஆளாக நேர்ந்தது.

எதுவித பயனையும் பெறவில்லை

எம்மவரில் மிக முக்கியமான ஒருவர் இத் தீர்மானத்தை மறு கூட்டத்தில் பரிசீலிப்போம் என கேட்டுக்கொண்டதற்கிணங்க அக் கூட்டம் பிற்போடப்பட்டு அடுத்தக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்ற இந் நபர் கட்சியின் காரியாலயத்தை கவனிப்பதற்காக தொலை பேசி இணைப்பொன்றையும், ஒரு குமாஸ்தாவை தந்துதவியதுடன் தனக்குக் பாராளுமன்றத்தால் இலவசமாக வழங்கப்பட்ட பிரதி பண்ணும் இயத்திரத்தை 35,000 ரூபாவை பெற்றுக்கொண்டுதான் கட்சிக்கு அதனை வழங்கினார் என்பதை இவ்விடத்தில் குறிப்பிட வேண்டும். இவற்றதவிர அவருக்கு கிடைத்த வாகனம் உட்பட கட்சி எதுவித பயனையும் பெறவில்லை.

அடுத்தஇடம்பெற்ற பொதுத் தேர்தலிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்தது. அப்பதவியதமக்கதர வேண்டும் என்று இவ்விருவரும் வற்புறுத்தி நின்றனர். ஒரநாடாளுமன்ற உறுப்பினரின் படுகொலையால் ஏற்பட்ட வெற்றிடத்தை பெற்றுக்கொண்ட ஒருவர் திருப்தியடைந்தார். மற்றவரஅப்பதவியினை வழங்குமாறு தொடர்ந்து வற்புறுத்தி நின்றார்.

அனைவருமஉயிருடன் உள்ளனர்

அதற்கு அவர் கூறிய காரணங்களில் ஒன்று பென்சன் பெறுவதற்கு போதிய காலம் போதாமையஎன்பதாகும்.
தேசியபபட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் படுகொலையில் பின் அதன் வெற்றிடத்துக்கு ஒருவரை நியப்பிப்பதற்காக அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் குழு கூடியது. கூடியிருந்த ஏனைய ஆறு உறுப்பினர்களும் அதிர்ச்சியடைக்கூடிய வகையில் அப்பதவியை நானாக முன்மொழிந்து அவருக்கு வழங்குமாறு அக்குழு கூட்டத்தில் தெரிவித்தேன். அங்ககூடியிருந்த அனைவரும் நான் அப்பதவியை தனக்கு வழங்குமாறு உரிமை கோரியிருப்பேன் என எதிர்ப்பார்த்தனர்.

ஆனாலஎனது முடிவால் அவர்கள் அதிர்ச்சியடைந்ததோடு என்மீது கோபமுமடைந்தனர். என்னைபபொறுத்தவரை கட்சியின் ஒற்றுமைக்கு தொடர்ந்தும் முக்கியத்துவம் கொடுத்து வந்தேன். இதில் வேடிக்கை என்னவென்றால் ஆச்சரியத்தோடு என்மீது கோபம் கொண்டவர்களில் ஒருவரை தவிர மற்ற அனைவரும் உயிருடன் உள்ளனர் என்பது மட்டுமல்ல சம்பந்தப்பட்ட நபரை பல்லக்கில் சுமந்து நாட்டை சுற்றி வருகின்றனர்.

இதுபோன்ற பல விடயங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவர என்னால் முடியும். இடமபோதாமையினால் இத்துடன் நிறுத்துகிறேன். விடுதலைப் புலிகளை பொறுத்தவரையில் அவர்களைப் பற்றி எத்தகைய கருத்துக்களை கொண்டிருந்தேன் என்பதை ஊடகங்கள் ஒத்துழைக்குமாக இருந்தால் விரைவில் உண்மைகளை வெளியிடுவேன்.

கடந்த காலத்தில் உள்ளுர் வெளிநாட்டு ஊடகங்கள் சில ஒத்துழைத்திருந்தால் இன்று பிரபாகரன் உயிருடன் இருந்திருப்பார் என்பது மட்டுமல்ல வட மாகாணத்தின் முதலமைச்சராக கூட இருந்திருக்கலாம். தூரதிஸ்டவசமாக
எனது செய்தி மக்களை சென்றடையாததால் மக்கள் என்னை தப்பாக நினைக்கத் தோன்றியதோடு பல ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்களின் இழப்புக்களுக்கும் காரணமாக அமைந்தது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com