Contact us at: sooddram@gmail.com

 

தமிழ்ப் பேசும் மக்களின் பிரிந்து செல்லும் உரிமை குறித்து ஜே.வி.பி பிளவுற்ற குழுவுடன் உரையாடல்

உறைந்து கிடந்த இத்தாலியில் மாபெரும் மாணவர் போராட்டங்களை நாம் எதிர்பார்த்ததில்லை. பில்லியன்களைச் திருடிவைத்திருப்பவர்களின் சொர்க்கபுரியான வோல் ஸ்ரீட்டை அமரிக்க உழைக்கும் மக்கள் ஆக்கிரமிக்கும் போராட்டத்தை யாரும் எதிர்பார்த்ததில்லை. அதிகாரத்தைச் சர்வாதிகாரிகளின் கைகளில் ஒப்படைத்துவிட்டு மதத்திற்குள் புதைந்துகிடந்த அரேபிய மக்கள் தெருக்களில் உரிமைக்காகப் போராடுகிறார்கள். கார்ல் மார்க்சை கோமாளி என்ற அதிகார வர்க்கம் கூட இப்போது அவரை மேதை என்று புகழாரம் சூட்டுகிறது. இந்த மாற்றங்களின் ஒரு பகுதிதான் இலங்கையில் இடது சாரிக் கட்சி என்று தம்மைத்தாமே கூறிக்கொண்ட ஜே.வி.பி இனுள் ஏற்பட்ட பிளவா அன்றி வெறும் அதிகாரப் போட்டியா என்ற தேடலில் இனியொரு தன்னை உட்படுதி கொண்ட முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நேர்காணல் வெளியாகிறது.

ஜே.வி.பி (மக்கள் விடுதலை முன்னணி)இன மத்திய குழு உறுப்பினரும் ஜே.வி.பி யிலிருந்து பிளவுற்ற குழுவின் பிரதான உறுப்பினருமான , வருண ராஜபக்ச உடனான இனியொரு நீண்ட உரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அதன்   ஒரு பகுதி கீழே தரப்படுகிறது.

இனியொரு: ஜே.வி.பி யில் ஏற்பட்ட பிரிவின் அடிப்படைக் காரணம் என்ன?

வருண: உழைக்கும் மக்களின் சோசலிசப் பாதைக்கான போராட்டமாகவே ஜே.வி.பி உருவாக்கப்பட்டது. வழி முறைகளில் விமர்சனங்கள் சுய விமர்சனங்கள் என்பன இருந்தாலும், கடந்த சில வருடங்களாக ஏற்பட்ட பின்னடைவுகள் போன்று முன் எப்போதும் ஏற்பட்டதில்லை. இவ்வாறான வலதுசாரித் துவத்தை நோக்கிய மாற்றங்களுக்கு எதிராக கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக ஜே.வி.பி யில் உட்கட்சிப் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. குறிப்பாக திருத்தல் வாத அரசியல் மற்றும் வலது சாரி சந்தர்பவாதப் போக்கு என்பவற்றிற்கு எதிராக முற்போக்கு சக்திகளின் இடைவிடாத உட்கட்சிப் போராட்டங்களில் எதிர் விளைவே இன்றைய பிளவாக வெளிப்பட்டுள்ளது.
குறிப்பாக மகிந்த ராஜபக்சவை தேர்தலில் ஆதரித்தமை,வன்னி யுத்ததை ஆதரித்தமை பின்னதாக இராணுவ அதிகாரியான சரத் பொன்சேகாவை ஆதரித்தமை என்பன ஏற்றுக்கொள்ல முடியாத தவறுகளாகும்.

இனியொரு: பாராளுமன்ற வாக்குக் கட்சிகளில் வழமையான அணிசேர்க்கைகளில் ஒன்று தானே இதுவும்?

வருண: நாம் குறிப்பாக உட்கட்சிப் போராட்டம் நடத்தும் பிரிவினர , பாராளுமன்றத்தை மக்களை அணிதிரட்டுவதற்கான ஒரு இடை நிலைப் பாதையாகவே பன்படுத்திக்கொள வேண்டும் என்று நம்புகிறோம் அது இறுதியான தீர்வல்ல. மக்கள் போராடியே உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.

இனியொர : தமிழ்ப் பேசும் மக்களுடையை அல்லது இலங்கையில் வாழும் சிறுபான்மைத் தேசிய இனங்களது சுய நிர்ணய உரிமை குறித்து உங்களது நிலைப்பாடு என்ன?

வருண: சோசலிச அரசு ஒன்று உருவாகும் வேளையில் சிறுபான்மைத் தேசிய இனங்கள் உரிமை பெற்றவர்களாக மாறுவார்கள். ஆக, சோசலிச அரசை உருவாக்குவதில் ஏனையவர்களோடு இணைந்து தமிழ்ப் பேசும் மக்கள் போராடும் போதே அவர்கள் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இனியொர : சோசலிச அரசு உருவாவதற்கான முன் நிபந்தனையாக ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் விடுதலை என்பதை நீங்கள் கருதவில்லையா?

வருண: தொழிலாளர்களின் போராட்டம் என்பதே இங்கு பெரும்பாலானவர்கள் முன்வைக்கும் கருத்து. தொழிலாளர்களின் போராட்டம் வெற்றி பெறும் போது ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களும் விடுதலை பெறும். சிங்கள தேசியத்தையோ அன்றி தமிழ்த் தேசியத்தையோ நம்மில் பெரும்பாலனவர்கள் ஆதரிக்கவில்லை. யுத்ததின் பின்னர் சிங்களத் தேசியம் மிக அதிகமாக வளர்ச்சி பெற்றுள்ளது. நாட்டை ஆபத்தான நிலையை நோக்கி இட்டுச் செல்கிறது. எவ்வாறு சிங்கள தேசியம் முதலாளித்துவக் கோசமோ அதே போன்றே தமிழ்த் தேசியமும் முதலாளித்துவக் கோசம் என்றே நாம் கருதுகிறோம்.
அதே நேரம் இந்திய அரசும் மேற்கத்தைய அரசுகளும் தமிழர் பிரச்சனையை இலங்கையைச் சுரண்டுவதற்கான ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இவர்கள் தமிழர் போராட்டத்தை ஆதரிப்பதாகச் சொல்வார்கள், போர்க்குற்ற வழக்குப் போடுவதாகச் சொல்வார்கள , இவ்வாறு இலங்கை அரசை மிரட்டிவிட்டு பின்னர் இலங்கை அரசிடமிருந்து அதிக லாபத்தைப் பெற்றுக் கொள்வதற்காகப் பேச்சு நடத்துவார்கள். இலங்கை அரசு அவர்கள் விரும்பியதைக் கொடுத்ததும் தமிழர்களைக் கைவிட்டு விடுவார்கள். இது தான் முப்பது வருடங்களாக நடைபெற்றுவருகிறது. இங்கு தமிழர்கள் வெறும் பகடைக் காய்களாகவே பாவிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அவர்கள் பாவவனைக்கு உட்படுத்தப்படுவதால் அவர்கள் தமது உண்மையான நண்பர்களைக் கூட இழந்துவிடுவிகிறார்கள்.

இனியொர : தேசியம் என்பது முதலாளித்துவக் கோசம் என்பதிலும் உள்ளகச் சந்தைக்கான போட்டியிலிருந்தே தேசிய இன முரண்பாடு உருவாகிறது என்பதிலும் நாமும் தெளிவாக இருக்கிறோம். இங்கு தேசிய இன முரண்பாடு பிரதான முரண்பாடாக இருக்கின்றது. ஒடுக்கப்படும் தேசிய இனம் தமது ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவது தவறானதா? அந்த ஒடுக்கு முறை தேசிய இன ஒடுக்குமுறையாக இருக்கும் போது அதற்கு எதிராகப் பிரிந்துபோகும் உரிமைக்காகப் போராடுவது தவறானதா?

வரு : தேசிய இன ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம் என்பது இலங்கை தழுவிய ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டமாக முன்னெடுக்கப்படும் போது மட்டுமே வெற்றி பெறும். தனியாக தேசிய இனப் போராட்டமாக முன்னெடுத்தால் வெற்றிபெற முடியாது. தமிழர்கள் ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களோடு இணைந்து சோசலிச அரசை அமைப்பதற்காகப் போராடினால் அவர்கள் தேசிய இன ஒடுக்கு முறையிலிருந்தும் விடுதலை பெறுவார்கள்.

இனியொரு: நாம் கோருவது மிகத் தெளிவானது. இலங்கையில் பிரதான முரண்பாடாக தேசிய இன முரண்பாடு உள்ளது. தமிழ்ப் பேசும் மக்கள் சாரி சாரியாகக் கொல்லப்படுகிறார்கள். இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள். இனச்சுத்திகரிப்பிற்கு உள்ளாக்கப்படுகிறார்கள். தேசிய இன முரண்பாடு அந்த அளவிற்குக் கூர்மையடைந்திருக்கிறது என்பதை இலங்கையில் வாழும் உங்களுக்கு நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இலங்கையில் உள்ள இடதுசாரி அமைப்புக்கள் என்று கூறிக்கொள்கின்ற ஒவ்வொரு கட்சிகளும் தமிழ்ப் பேசும் மக்களுடைய சுய நிர்ணய உரிமையைபிரிந்து செல்லும் உரிமையைஏற்றுக்கொண்டுபோராடத நிலையென்பதே பெருந்தேசிய வாததை வலுவூட்டுகிறது

வரு : ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் மத்தியிலிருந்து இடதுசாரி இயக்கம் உருவாகுமானால் நாம் ஆதரிப்பதற்கும் அவர்களோடு ஐக்கிய முன்னணி அடிப்படையில் வேலை செய்வதற்கும் தயாரான நிலையிலுள்ளோம். தேசியத்தையும் பிரிவினையையும் ஆதரிப்பது தவறான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே எமது கருத்து. இன்றைய முதலாளித்துவம் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் சூழலில் ஒன்றிணைந்த போராட்டம் என்பதே அவசியமானதாகக் கருதப்படுகிறது.

இனியொரு: 1905 ஆம் ஆண்டு நோர்வே சுவீடனிலிருந்து பிரிந்து சென்ற போது லெனின் அதனை ஆதரித்தது மட்டுமன்றி, சுவீடிஷ் தொழிலாலர்களை நோர்வேயின் பிரிவினையை அங்கீகரிக்குமாறு கோரிக்கை விடுத்தார். சுவீடிஷ் தொழிலாளர்களின் போராட்டமே நோர்வேயின் பிரிவினையை விரைவுபடுத்தியது. அவ்வாறு இடதுசாரிகள் என்று கூறும் நீங்கள் சிங்களத் தொழிலாளர்களை இணைத்து தமிழ்ப் பேசும் சிறுபான்மை இனங்களின் பிரிந்து செல்லும் உரிமைக்காகப் போராடத் தயாரா?

வருண: இது புறச் சூழல் சார்ந்த பிரச்சனை. அன்றை நிலை, ஐரோப்பியப் பொருளாதாரம், உலக நிலை என்பன எல்லாம் வேறுபட்டது….

இனியொரு: புறச் சூழல் என்பதைக் கூட லெனின் தெளிவாகக் கூறுகிறார். தேசிய இன முரண்பாடு கூர்மையடைந்து அது பிரதான முரண்பாடாக உருவான சூழல் குறித்தே நாம் இங்கு பேசிக் கொண்டிருக்கிறோம். தேசிய இனம் குறித்த கருத்தை முதலில் உருவாக்கியவரான லெனின் இதற்கு முன்னுதாரணமாகவே நாம் கருதுகிறோம். தேசிய இனங்கள் ஒடுக்கப்படும் சூழலில் பிரிந்து செல்லலையும், பிரிவினையையும், அதற்கான உரிமையையும் கம்யூனிஸ்டுகள் ஆதரிக்க வேண்டும் என்று லெனின் ஓட்டோபவர், ரோசா லக்ஸம்பேர்க் போன்றவர்களுடன் நடந்த விவாதங்களில் பல தடவைகள் சுட்டிக் காட்டியிருக்கிறார். நீங்கள் லெனினை நிராகரிக்கிறீர்களா?

வரு : நீங்கள் சொல்வதில் சில நியாயங்கள் இருக்கின்றன என்பது உண்மையே. கட்சிக்குள் இது குறித்த பிரச்சனை முக்கிய விவாதமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இது குறித்த விவாதத்தை இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசுவது பொருத்தமானதாக இருக்கும்.

இனியொர : இலங்கையில் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து இடதுசாரிக் கட்சி தொழிலாளர்களின் பிரதினிதிகளாக பிரிந்து செல்லும் உரிமைக்காகக் குரல் கொடுப்பார்களானால் தமிழ் மக்கள் இணைந்து வாழ விரும்பும் நிலை உருவாகும். சிங்களத் தொழிலாளர்கள் தமிழ்ப் பேசும் மக்களுக்கு இழைக்கப்படும் அநிதிகள் குறித்து அறியாதவர்களாகவே உள்ளனர். இலங்கையில் அவ்வாறான ஒரு இடதுசாரிக் கட்சி உருவாகி பிரிந்து செல்லும் உரிமைக்காகப் போராடினால், சிங்கள மக்கள் மத்தியில் இனவாதம் இலாது போகும் அதே வேளை தமிழ்ப் பேசும் மக்களும் பிரிவினை குறித்துச் சிந்திக்க மாட்டார்கள். அவ்வாறு பிரிவினையை ஆதரிக்கும் போராட்டத்தை முன்னெடுக்க நீங்கள் தயாரா?

வருண: இன்னும் பலமான உட்கட்சி வாதப் பிரதிவாதங்களுக்கு உட்பட்டிருக்கும் இப் பிரச்சனையில் உங்கள் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன. ஒவ்வொருவரின் பங்களிப்பும் அவசியமானது.இதுவரையில் முழுமையாக முடிவற்ற பிரச்சனைகளை நாம் அதிகமாக விவாதிக்க முடியாது.

இனியொரு: யார் இந்த பிரமகுமார் குணரத்தினம்? தமிழர் என்று சொல்கிறார்களே? உங்கள் பிரிவுற்ற குழுவின் தலைவரா? இந்திய உளவாளியா? ராஜபக்சவின் ஆளா? புலிகளோடு தொடர்பானவரா? இவ்வளவு நாளும் எங்கே இருந்தார்?

நேர்காணலின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com