Contact us at: sooddram@gmail.com

 

அரசுக்கு ஆதரவாக இருப்பது மு.கா - தமிழ்க் கட்சிகள் உறவுக்கு குந்தகமாக அமையாது

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பஷீர் சேகுதாவூத் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணல்.

நேர் கண்டவர்: பி. வீரசிங்கம்

கேள்வி: அரசுக்கு ஆதரவு வழங்குவது என்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இந்த முடிவு ஏகமனதாக எடுக்கப்பட்டதா?

பதில்: அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வருவதற்காக அரசு மேற்கொண்டு வரும் இந்நடவடிக்கைக்கு ஆதரவு வழங்குவதென்ற காங்கிரஸின் இந்த முடிவு ஏகமனதான முடிவு. சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருந்தாலும் கூட முடிவு ஏகமனதானது. எங்கள் கட்சியில் பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்தார்கள். ஆனால் பொதுவான கருத்துக்கு பொதுவான ஆலோசனை அடிப்படையில் வருவோம். பெரும்பாலானவர்களின் கருத்தும் ஒட்டுமொத்தமான தீர்மானமும் அரசுக்கு ஆதரவளிப்பது என்பதுதான்.

கேள்வி : நிர்ப்பந்தங்கள் ஏதேனும்?

பதில்: எந்தவிதமான நிர்ப்பந்தம் எதுவுமில்லை. மக்களின் விருப்பம்தான் நிர்ப்பந்தம். கட்சியைப் பொறுத்தவரை மக்களுடைய விருப்பத்திற்கு சரியான முறையில் செயற்பட வேண்டும் என்ற அடிப்படையிலான முடிவுதான் எடுக்கப்பட்டிருக்கின்றது.

ஸ்ரீ.ல.மு.கா. என்பது முஸ்லிம் சமூகத்திற்குள் இருந்து முஸ்லிம்களால் உருவாக்கப்பட்ட முதலாவது கட்சி. அதன் பலம் தொழிலாளர்கள், மீனவ தொழிலாளர்கள், விவசாய கூலித் தொழிலாளர்கள், வயல்களில்களை பிடுங்குகின்ற பெண் என்போரில் தங்கியிருக்கிறது. அந்த மக்களுடைய அபிலாசைகளுக்கு ஏதுவாக செயற்பட வேண்டியது தனது கடமையென மு.கா. உணர்ந்திருக்கின்றது.

முதலாவது முஸ்லிம் அகதி என்றால் அவர் ஸ்ரீ.ல.மு.கா. இன் ஸ்தாபக தலைவர் மறைந்த அஷ்ரப் ஆகத்தான் இருக்க முடியும். 1985 ஆம் ஆண்டு முதன் முதலில் கல்முனை அம்மன் கோயிலில் இருந்து ஒரு முஸ்லிம் அகதியாக கொழும்பு நகருக்குள் நுழைந்தவர். அவர் உருவாக்கிய கட்சிதான் இந்த முஸ்லிம் காங்கிரஸ். இது சாதாரண மக்களின், அந்த மக்களின் உணர்வுகளை கொண்ட கட்சி. அதற்கேற்ற வகையில்தான் இந்த கட்சி தீர்மானங்களை எடுக்க முடியும்.

கேள்வி: அரசியலமைப்பில் மாற்றம் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்திருக்கிறது. ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது என்னென்ன விடயங்கள் ஆராயப்பட்டன?

பதில்: ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது இரண்டு விடயங்கள் ஆராயப்பட்டன. அரசியலமைப்புக்கு திருத்தம் செய்யும்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மூன்றாவது முறையாகவும் பதவி வகிப்பதற்கான திருத்தம். மற்றும் அர சியலமைப்பு சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பாக பேசப்பட்டது. இவ்விடயங்களுக்கு ஆதரவு வழங்குவதால் சிறுபான்மையினருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. சிறுபான்மையினருக்கு அநீதி ஏற்படாத வகையில் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் எந்தத் தவறும் கிடையாது.

கேள்வி: உள்ளூராட்சி சபைகள் மீள்நிர்ணயம் செய்யப்படுவது தொடர்பில் ஏதேனும் பேசப்பட்டதா?

பதில்: அரசாங்கம் கடந்த அமைச்சரவை கூட்டத்திலும் மூன்று விடயங்களை முன்வைத்தது. ஜனாதிபதி இரண்டு முறைதான் தேர்தலில் பங்குபற்றலாம் என்ற வரையறையை நீக்கிவிட்டு மூன்றாவது முறையும் தேர்தலில் கேட்கலாம் என்பது. இரண்டாவது 17 ஆவது திருத்தச் சட்டமூலத்தின்படி பத்து உறுப்பினர்கள் இருப்பதாக அமையப்பெற்றது. ஆனால் அதை ஐந்தாக்குவது புதிய திருத்தம். அதில் பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், பிரதமரால் சிபாரிசு செய்யப்படுகின்ற ஒருவர், எதிர்க்கட்சித் தலைவரால் சிபாரிசு செய்கின்ற ஒருவர். முன்றாவது விடயம் கபினட்டில் இருப்பதாக பத்திரிகைகளில் வெளிவந்திருக்கும் உள்ளூராட்சித் தேர்தல் பற்றியது.

இப்போது இருக்கின்ற முறையை மாற்றியமைத்து வட்டார முறைகளுக்கூடாக நடத்துவது என்றும் 70 வீதம் வட்டார முறைகள் ஊடாக பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் ஏனைய 30 வீதம் மாவட்ட அடிப்படையிலே தெரிவு செய்வது எனவும் ஆலோசனை முன்வைக்கப்பட்டிருக்கிறது. இது பிரதேச அடிப்படையிலே அமையும். அதற்குரியவாறு தெரிவு செய்யப்படுவார்கள் என்று சில சில மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஜனாதிபதியுடன் உரையாடியபோது இரண்டு சட்டமூலங்கள் தொடர்பாகவே பேசினார். உள்ளூராட்சி சபைகள் நிறுவுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையில்லை. ஒரு வழக்கின் தீர்ப்பொன்றின் மூலமாக எல்லா மாகாண சபைகளும் அதற்கான அனுமதியை வழங்குமாக இருந்தால் அதனை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக்கொள்ள முடியும். மூன்று விடயங்களும் உள்ளடங்குமாக இருந்தால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் ஜனாதிபதி பேசுவார் என நம்புகின்றேன்.

ஒரு ஜனாதிபதி மூன்றாவது முறையாகவும் தேர்தலில் கேட்கலாம் என்பது ஜனநாயக நடைமுறை என்றே நினைக்கிறேன். அதாவது மூன்றாவது முறையும் தேர்தலில் போட்டியிட்டு அவர் வெல்லுவாராக இருந்தால் அது மக்களுடைய விருப்பம். மக்களுடைய அபிப்பிராயத்தை ஒரு சட்டமூலத்தின் ஊடாக மறுத்துரைப்பது ஜனநாயகத்துக்கு முரணானது.

ஜனாதிபதியை மூன்றாவது முறையாகவும் தெரிவு செய்வது என இருந்தால் அதற்கு வாய்ப்பளிக்க சட்டமமைத்து கொடுப்பதில் எந்தவிதத் தவறும் கிடையாது. அதேபோல்தான் 17 வது திருத்த சட்டமூல திருத்தத்துக்கு வருவது மிகவும் நல்ல விடயம். எல்லா ஆணைக்குழுக்களும் தற்போது முடங்கிப்போயுள்ளன. அது வருவது நல்ல விடயம்.

இந்த திருத்தத்தின் ஊடாக சிறுபான்மை இனத்துக்கு ஒரு தீர்வு வரவில்லை. இந்த விடயத்தில் ஜனாதிபதி சிறுபான்மை மக்களுக்கு அதாவது 13 வது திருத்தத்துக்கு மேலதிகமாக வழங்குவேன் என்று வாக்கு கொடுத்திருக்கிறார். அந்த வாக்கின் அடிப்படையிலே அவர் செயற்படுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.

கேள்வி: அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கப்போவதாக அறிவிப்பு வெளியானவுடன் ஐ.தே.க. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகிறது. ஐக்கிய தேசிய முன்னணியுடனான கூட்டு என்பது தேர்தல் நடவடிக்கைகளுக்காக ஏற்படுத்தப்பட்டதா?

பதில்: ஐக்கிய தேசிய முன்னணி ஒரு கூட்டு முன்னணிதான். அது கடந்த தேர்தல்களில் ஒன்றிணைந்து செயற்படுவதற்காக இந்த முன்னணி உருவாக்கப்பட்டது. அதேநேரம் ஒரு பொதுவான எதிர்க்கட்சி என்ற நிலையில் பொதுவான வேலைத்திட்டங்களை நாடு தழுவிய ரீதியில் முன்வைத்து செயற்பட்டதற்கான எந்த ஆதாரமும் கிடையாது. அது மாத்திரமல்ல ஐ.தே. முன்னணியும் அதன் தலைவரும் வீட்டில் உட்கார்ந்து கொண்டு அரசியல் செய்வதுபோல் முஸ்லிம் காங்கிரஸ் வீட்டில் உட்கார்ந்து அரசியல் செய்ய முடியாது.

முஸ்லிம் காங்கிரஸ் ஒரு சிறுபான்மை அரசியல் கட்சி. ஐக்கிய தேசிய முன்னணியில் இருக்கின்ற எந்தவொரு கட்சியும் சுயாதீனமாக தமது கட்சிக்கு நன்மை பயக்கும் வகையில் கட்சி ஆதரவாளர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய விதத்தில் தனித்துவமான முடிவுகளை மேற்கொள்ள முடியும். அந்த அடிப்படையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த யாப்பு திருத்தத்திற்கு ஆதரவு வழங்குவதென்று முடிவெடுத்திருக்கிறது.

கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான உறவு எப்படியிருக்கிறது? இது தொடர்பாக தமிழ்க் கட்சிகளுடன் கலந்துரையாடப்பட்டதா?

பதில்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் ஆத்மார்த்தமானதும் நெருக்கமானதுமான உறவுகளுடன் செயற்பட்டு வந்திருக்கிறது. தேர்தல் உடன்படிக்கையோ அல்லது வேறு எந்த உடன்படிக்கையும் செய்து கொள்ளப்படாவிட்டாலும் கூட பெரும்பான்மையான தமிழ் மக்களின் பெரும்பான்மையான வாக்குகளை பெற்ற சக்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற வகையிலும் பெருமளவிலான முஸ்லிம் சக்திகளின் ஆதரவை பெற்ற சக்தி முஸ்லிம் காங்கிரஸ் என்ற வகையிலும் எதிர்கால அரசியலில் இணைந்து செயற்படுவது, கருத்துக்களை முன்வைப்பது என்பது இரண்டு சமூகங்களுக்கும் நல்லது.

இதற்கும் இன்று நாம் எடுத்திருக்கிற முடிவுக்கும் இடையில் இரண்டு கட்சிகளும் பேசுவதில் எந்தத் தடையோ, உணர்வுபூர்வமான பிரச்சினைகளோ பிரிவினையோ வருவதற்கான எந்தவித வாய்ப்பும் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் இதனை தெளிவாக சொல்லியிருக்கிறார். அவர்கள் எந்தப் பக்கம் இருந்தாலும் அவர்கள் எந்த முடிவை எடுத்தாலும் அவர்களுடன் பேசுவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். அதற்கு எந்தத் தடையும் இல்லை.

தமிழ் தேசிய சக்திகள் சுதந்திரத்திற்கு பின்னர் அதிக காலத்தை எதிர்க் கட்சியில் இருந்தபடியே தமது மக்கள் நலன்களை கவனித்து வந்திருக்கிறது. ஆனால் முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரை சுதந்திரத்திற்கு பிற்பட்ட காலங்களில் பெரும்பாலான காலங்களை அரசுடன் இணைந்துதான் தமது சமூகத்தின் நலன் களை கவனித்து வந்திருக்கிறது. இந்த இரு சக்திகளும் இணைந்து செயற்பட ஒரு பாலத்தை போட்டு செயற்படுவோமாக இருந்தால் அது இரண்டு சமூகங்களுக்கிடை யிலான உறவுப்பாலமாக மாத்திரமல்ல அரசியல் ரீதியாக சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள கூடிய உறவுப்பாலமாகவும் அமையும்.

கேள்வி: தொகுதிவாரி பிரதிநிதித்துவ முறையில் சிறுபான்மை மக்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படும் என்று கருதுகிaர்களா?

பதில்: பாராளுமன்ற தேர்தல் முறையில் தொகுதிவாரி முறையிலான உடனடியாக மாற்றம் வரும் என்பதற்கான எந்த அறி குறியும் தென்படவில்லை. அவ்வாறு வரும் போது சிறுபான்மை மக்களுக்கு நன்மைகள் தீமைகள் இருக்கின்றனவா என்று அலசி ஆராய்ந்து பார்த்து அதற்கு ஆதரவை வழங்குவதா இல்லையா என்பதை நாங்கள் தீர்மானிப்போம்.

கேள்வி: வடக்கு, கிழக்கு அபிவிருத்தி நடவடிக்கைகளில் உங்களது கட்சியின் பங்களிப்பு, காணிப் பிரச்சினைகளுக்கான தீர்வை எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியுமென கருதுகிaர்கள்?

பதில்: காணிப் பிரச்சினைகள் என்பது பொதுவாகவே மூன்று சமூகங்களுக் கிடையிலான பிரச்சினையாகும். இப்பிரச்சினை சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கு மிடையேயும், சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையேயும், தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையேயும் இருக்கிறது.

ஒரு ஒட்டு மொத்தமாக மூன்று சமூக பிரதிநிதிகளும் உட்கார்ந்து தீர்த்துக் கொள்கின்ற வகையில் பேசுவதுதான் இதற்கான சிறந்த வழியென்று நான் நினைக்கின்றேன். அதேபோல் புனர் நிர்மாணம் மற்றும் புனர்வாழ்வு வேலைகள் என்பது வடகிழக்கில் பெரிய அளவில் செய்யப்பட வேண்டும். அது மட்டுமல்ல, புத்தளத்திலும் கூட செய்ய வேண்டும். இயற்கை அனர்த்தங்களாலும் கூட பாதிக்கப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்படாது எஞ்சியிருக்கின்ற மக்கள் ஒரு புறமாக இருக்கிறார்கள்.

இதில் அகதிகள் என்பது ஒரே இனம்தான். இன்றைய காலகட்டத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்களாக காணப்படுகின்றார்கள். எனவே புனர்வாழ்வு வேலைத்திட்டங்களை துரிதப்படுத்தி அவர்களுக்கான நிவாரணங்களை வழங்க வேண்டியது மிக முக்கியம். அவ்வாறான வேலைகளை முன்னெடுப்பதில் சிறுபான்மை கட்சிகள் துரிதமாக செயற் படுவது முக்கியமானது. வெறும் பெட்டிசன்கள் மூலமாக மக்களுக்கு ஒருகாலமும் நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க முடியாது. அரசுக்கூடாக பேச்சுவார்த்தையை துரிதப்படுத்தி செயற்படுத்தப்பட வேண்டியது முக்கியமானது. அபிவிருத்தி இன்று உரிமையாக மாறியிருக்கிறது. இலங்கையில் போராட்டத்துக்கான மூலகாரணம் என்னவென்று பார்த்தால் அபிவிருத்தியில் சமத்துவமின்மை என்பதுதான்.

எழுபதுகளில் உலகம் தழுவிய ரீதியில் அபிவிருத்தி என்பது ஒரு சலுகை என்ற தோற்றப்பாட்டை கொடுத்தாலும் கூட இன்று அபிவிருத்தி என்பது ஒரு சமுதாயத்தின் மக்கள் கூட்டத்தின் உரிமையாக மாறியிருக்கிறது. மூன்றாம் உலக நாடுகளில் இலங்கை மாத்திரமல்ல ஏனைய நாடுகளிலும் ஆளும் கட்சி சார்ந்த அபிவிருத்திதான் நடைமுறையில் இருக்கிறது. ஆகவே நடைமுறையில் இருக்கின்ற அபிவிருத்தியை எமது சமூகத்துக்கு பெற்றுக்கொடுப்பதில் எந்த காட்டிக் கொடுப்பும் கிடையது என்பதை நான் மிகத் தெளிவாகக் கூறுகிறேன்.

கேள்வி: இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன? தற்போதுள்ள நிலைமையில் அதுபற்றி பேசுவது குறைவாக இருக்கிறதே?

பதில்: இனப்பிரச்சினை என்பதன் விளைவே யுத்தம். இதனை பலர் புரிந்து கொள்கிறார்கள் இல்லை. இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. யுத்தத்திற்கு முடிவு வந்திருக்கலாம், யுத்தத்தில் எவரும் வெல்லலாம். ஆனால் நிரந்தரமாக மக்களை வெல்ல வேண்டும்.

ஜனாதிபதியும் அவர் தலைமையிலான அரசும் வடக்கு, கிழக்கு மக்களை வென்றிருக்கிறது என்றுதான் கூறவேண்டும். ஏனென்றால் கிழக்கு மாகாணத்தில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான உறுப்பினர்களை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுள்ளது. வாக்குகளை எடுத்துக் கொண்டால் முதலாவதாக கிழக்கு மாகாண மக்களின் வாக்குகளை பொதுஜன மக்கள் முன்னணி பெற்றிருக்கிறது.

ஒட்டுமொத்தமாக வடக்கு, கிழக்கை பார்த்தால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிதான் பெற்றிருக்கிறது. ஆகவே இந்த விடயங்களை மிக அவதானமாக நாம் பார்க்க வேண்டும். சிறுபான்மை மக்கள் என்ன புதிய உணர்வுகளோட இருக்கின்றார்கள் என்பதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். புதிய நடைமுறைகளுக்கூடாக நாம் செயற்பட வேண்டும்.

கடந்தகால பழைய ஆய்வுகளை மன இறுக்கங்களை வைத்துக் கொண்டு துவம்சம் செய்கிற அடிப்படையில் அரசியல் செய்வது என்பது பொருத்தமற்றது. புதிதாக ஏற்பட்டிருக்கின்ற சூழல்களுக்கு ஏற்ப மக்களின் மன விருப்பங்களுக்கேற்ப சிறுபான்மை கட்சிகள் செயற்பட வேண்டும். சிறுபான்மை கட்சிகள் அவ்வாறு செயற்படத் தவறினால் இந்த நாட்டிலே பெரிய மையவாத தேசிய உணர்வு மேலோங்கி சிங்கள பெளத்த பெருந்தேசிய வாதத்தினுடைய கரங்களை பலப்படுத்துவதாக அமைந்துவிடும். அது சிறுபான்மை மக்களுக்கு மிகவும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது.

எப்பொழுதும் எதிராளியை வைத்துக் கொண்டிருப்பது, சிறுபான்மை மக்களை பெருபான்மையினம் தமது எதிரி என்று உருவகப்படுத்தி வைப்பதற்கே உதவும். ஆகவே கூட்டு அடிப்படையில் ஜனாதிபதியின் தலைமையில் அவரது கரத்தை பலப்படுத்தி அவரது கருத்துக்களையும் பெற்று நாம் புதிய கோணத்தில் இலங்கையின் எதிர்காலத்தை அமைப்பதற்கு சிறுபான்மை கட்சிகள் உதவ முடியுமாக இருந்தால் அதுதான் இப்போதைய சிறுபான்மை மக்களின் வெற்றி என்று நினைக்கிறேன். புதிய அத்தியாயத்தின் கீழ் புதிய வாழ்க்கையை ஆரம்பிப்பதுதான் இந்த மக்களுக்குரிய சரியான அரசியல் வழிகாட்டியாக இருக்க முடியும்.

கேள்வி: உங்களது கட்சியின் தலைவரின் நடவடிக்கைகள் ஐக்கிய தேசியக் கட்சிக்காரரைப் போல நடந்து கொள்வதாக கூறப்படுகிறது?

பதில்: எமது கட்சியில் இருந்து பிரிந்து சென்ற பலர் எமது தலைவர் ஐ.தே.க.வின் விசுவாசி என்றவொரு தோற்றப்பாட்டை நாடு முழுவதும் பரப்ப பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள். எமது தலைவர் ஐ.தே.கட்சியில் உள்வாங்கப்பட்டிருக்கிறார் என்பதை விட அவர் ஆக்ரோசமான எதிர்க்கட்சி அரசியல் செய்ய பழக்கப்பட்ட அரசியல்வாதி என்பதுதான் பொருத்தமானது. அநீதிக்கெதிராக கிளர்ந்தெழுகிற மனப்போக்கும் தனது மனதுக்கு பட்ட விடயத்தை பட்டென மேடைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

அந்த வகையில் அவர் ஒரு உக்கிரமான எதிர்க்கட்சி அரசியல்வாதி என்று அடையாளம் காணலாமே ஒழிய அவர் ஐ.தே.கட்சிக்காரர் என உடனடியாகக் கருதக்கூடாது.

கேள்வி: எதிர்வரும் காலங்களில் முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கப்போகிறதா? அல்லது அரசுடன் இணைந்து மக்களுக்காக சேவை செய்யப்போகிறதா?

பதில்: எதிர்க்கட்சியில்தான் இருக்க வேண்டுமென்று எந்த அடிப்படையும் இல்லை. எதிர்க்கட்சி வரிசையில் இருப்பீர்களா, அல்லது அமைச்சுப் பதவிகளை பெறுவீர்களா என்ற தொனியும் உங்கள் கேள்வியில் இருந்தது. முஸ்லிம் காங்கிரஸின் யாப்பில் யாரும் அமைச்சராக இருக்கக் கூடாது என்றில்லை. யாரும் எந்தவிதமான பதவிகளும் வகிக்கக்கூடாதென்று எதுவும் இல்லை. ஆனால் பதவிகளுக்கு அடிமைப்பட்டு தீர்மானங்களுக்கு ஆதரவளித்தோம் என்று இருக்கக்கூடாது. பதவிகள் பிரதானமான விடயமல்ல. சமூகம் சார்ந்த நடவடிக்கைகளுக்காகத்தான் செயற்பட வேண்டியது என்பது முக்கியமானது. அந்த சமூகத்தின் நலன் கருதிய விடயங்களில் பதவிகள் தேவை ஏற்படுகின்ற போது அதனை ஏற்றுக்கொள்வதும் தேவையில்லாதபோது தூக்கியெறிவதுமான ஒரு வரலாற்றை மு.கா. கொண்டிருக்கிறது. இந்த பதவிகளை வைத்திருப்பதால் முஸ்லிம் சமூகத்துக்கு கேடு விளைகிறது என்றால் அதனை தூக்கி எறிய தயாராக இருக்கிறோம். நன்மை கிடைக்கும் என்றால் வைத்திருக்கவும் தயார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com