Contact us at: sooddram@gmail.com

 

உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இருப்பின் யாழ். காணிகளின் மீது உரிமை கோருவதில் தடையேதுமில்ல

யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார் வாசுகி சிவகுமாருக்கு அளித்த பேட்டி

30 வருட கால யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு சகலரது கவனமும் யாழ்ப்பாணத்தை நோக்கித் திரும்பியிருக்கும் நிலையில் அங்கு இடம்பெறும் மீள்குடியமர்வு அபிவிருத்தி நடவடிக்கைகள் பற்றி யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமாரிடம் கேட்டோம்.

கேள்வி:- யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் எந்தளவில் இருக்கின்றன? இதுவரை எத்தனை குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டிருக்கின்றன?

பதில்:- நான் யாழ்ப்பாணத்தின் அரச அதிபராகப் பதவியேற்று இரண்டு மாதங்கள் தான் ஆகின்றன. வடமராட்சி கிழக்கில் இம்மாதம் 9ஆம் திகதி மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

கடந்த மாதம் 28ஆம் திகதி, பிரதேச செயலாளரும், நானும், கிராமசேவகரும் யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துரு சிங்ஹவைச் சந்தித்தோம். இந்தச் சந்திப்பு, பலாலி இராணுவப் படை முகாமில் இடம்பெற்றது.

இதன்போது உயர் பாதுகாப்பு வலயங்கள் சிலவற்றில் மீள்குடியேற்றத்துக்கான அனுமதியை மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க வழங்கினார். அதேமாதம் 30ஆம் திகதி உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த அடம்பனில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

81 கிராமங்களில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டனர். அன்றைய தினமே, செம்பியன்பற்று வடக்கு, தெற்கு, மருதங்கேணி, உடுத்துறை ஆரியவளைவத்திராயர் ஆகிய பகுதிகளில் மக்கள் மீளக்குடியேறலாம் என்று பணிப்புரையும் வழங்கப்பட்டது. அந்தப் பகுதிகளில், 356 குடும்பங்களைச் சேர்ந்த, 1091 பேர் மீளக்குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

கேள்வி:- மீளக்குடியேறியவர்களுக்கான வசதிகள் போதுமானவையாக உள்ளனவா?

பதில்:- நிச்சயமாக, மீள்குடியேற்றங்கள் இடம்பெற்றவுடனேயே அவர்களுக்கான உதவித் திட்டங்களும் அமுல் செய்யப்பட்டுவிட்டன. அவர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. குடிநீர், கல்வி, போக்குவரத்து, தபால் சேவைகள் ஏனைய வசதிகள் யாவும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. குடத்தனைப் பகுதியில் 175 குடும்பங்களைச் சேர்ந்த 517 பேர் மீளக் குடியமர்ந்திருக்கிறார்கள்.

இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியேற வேண்டுமானால், அதற்காக அவர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற அறிவித்தலும் விடுக்கப்பட்டிருக்கின்றது. பதிவு செய்பவர்களின் அடிப்படையிலேயே மீளக் குடியமர்வு இடம்பெறுகின்றது.

கேள்வி:- யாழ்ப்பாணத்தின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துவிட்டதாகக் கூறமுடியுமா?

பதில்:- இல்லை. வடமராட்சி கிழக்கில் 3500 குடும்பங்களைச் சேர்ந்த 11,000 பேர் மீளக் குடியமர்த்தப்படுவதற்காகக் காத்திருக்கின்றனர். பாதுகாப்பு அனுமதி கிடைத்ததும் அவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பக் கூடியதாக இருக்கும். யாழ்ப்பாணத்தின் மீள்குடியேற்ற அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் கடந்த புதன்கிழமையன்று பொருளாதார அபிவிருத்தியமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது. இதன்போது வலிகாமம் தெற்கு இளவாலை, கொல்லன்கலட்டி, வீமன்காமம், கட்டுவன், வலுத்தலைவிளான் முதலான ஜே 221 முதல் ஜே 242 வரையான பகுதிகளில், 4146 குடும்பங்களைச் சேர்ந்த 14,600 பேரை மீளக்குடியமர்த்துவது பற்றி ஆராயப்பட்டது.

தென்மராட்சிப் பகுதியில் 3000 ஏக்கர் விளைநிலங்கள் பயன்படுத்தப்படாத நிலையில் உள்ளன. இவற்றைப் பயிரிடுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் புதனன்றைய மீளாய்வுக் கூட்டத்தில் நாங்கள் கோரிக்கையை முன்வைத்திருந்தோம். அந்தபகுதிகளில் இன்னமும் கண்ணிவெடிகள் அகற்றப்படாத நிலையில் இருப்பதனால் இவற்றை உடனடியாக அகற்றி, பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ள வழி செய்யுமாறு அமைச்சர் பசில் ராஜபக்ஷ கண்ணிவெடி அகற்றும் பிரிவுக்குப் பணிப்புரை விடுத்திருக்கிறார்.

கேள்வி:- மீள்குடியேற்றங்கள் துரிதமாக இடம்பெற்று வருகின்ற அதே சமயத்தில் யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி குறித்தும் கூடுதல் கவனம் செலுத்தப்படுகின்றதல்லவா?

பதில்:- நிச்சயமாக, வீதி மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி திட்டங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியின் அபிவிருத்திப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அது தொடர்பான காட்சிகளும் நேற்றை மீளாய்வுக் கூட்டத்தில் எங்களால் காண்பிக்கப்பட்டது. நீர்ப்பாசனத் திட்ட வசதிகளும் பாரியளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதனன்று இடம்பெற்ற மீளாய்வுக் கூட்டத்தில் யாழ். மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்ற அபிவிருத்திப் பணிகள், அவற்றின் முன்னேற்றங்கள், எதிர்காலத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயங்கள் குறித்தெல்லாம் ஆராயப்பட்டன. இக்கூட்டத்தில் நாங்கள் எங்கள் கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். பண்ணை, குறிக்கட்டுவான், ஊர்காவற்றுறை வீதி அபிவிருத்தி செய்யப்படவேண்டியதன் அவசியத்தையும் இதன்போது வலியுறுத்தினோம். உடனேயே, 15 மில்லின் ரூபாவை ஒதுக்கி இதற்கான திட்டங்களை உடனடியாக வகுத்துச் செயற்படுமாறு அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் இக்கூட்டத்தில் எங்களுக்கு பணிப்புரை வழங்கியிருக்கின்றார்கள். அத்தோடு உரத்தை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கு முகமாக, புங்குடுதீவில் உள்ள உரக்களஞ்சியத்தை திருத்தியமைப்பதற்கு 5 மில்லியன் ரூபாவை உடனடியாக ஒதுக்கித் தந்திருக்கிறார்கள். இவை மாத்திரமல்ல, சேரன் பற்று புதுக்காடு வழியாக மருதங்கேணிக்குச் செல்லும் பாலம் திருத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தோம்.

அதனையும் உடனடியாக நிறைவேற்றுமாறு, வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுக்கு இம்மீளாய்வுக் கூட்டத்தில் பணிப்புரை வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த புதன்கிழமையன்று, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடனான மீளாய்வுக் கூட்டம் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது.

கேள்வி: அண்மையில், இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமாராவ் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார். அவரது விஜயத்தின் நோக்கம் என்னவாக இருந்தது?

பதில்: இந்திய அரசின் பிரதிநிதியாக அரச மட்டப் பேச்சுகளுக்காகவே அவர் வந்திருந்தார். யாழ்ப்பாணத்தில் யுத்தத்தால் சேதமடைந்த வீடுகளைப் புனரமைப்பது மற்றும், புதிய வீடுகளை அமைப்பது பற்றி அவர் எங்களுடன் பேசினோம்.

கேள்வி: கொழும்பில் வசிக்கும் அல்லது புலம் பெயர்ந்து வசிக்கும் யாழப்பாணத்தவர்கள் தங்களது அசையாச் சொத்துக்களை உரிமை கோர முடியாது என்பதாக சில ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்த செய்தி எந்தளவுக்கு உண்மையானது?

பதில்: உண்மையில் அவ்வாறு எதுவும் இங்கு இடம்பெறவில்லை. யாழ்ப்பாணத்தில் அசையாச் சொத்துக்களைக் கொண்டிருப்பவர்கள் அவர்கள் கொழும்பில் இருந்தாலென்ன, புலம்பெயர்ந்து வாழ்ந்தால் என்ன; அந்தச் சொத்துக்கள் தம்முடையவை தான் என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் அவர்களிடத்தில் இருக்கும் பட்சத்தில் அவர்கள் தங்கள் சொத்துக்களை உரிமை கோருவதில் தடையேதும் ஏற்படாது. உயர் பாதுகாப்பு வலயப் பகுதிகள், கண்ணிவெடி அகற்றப்படாத பகுதிகள் என்பனவற்றிலேயே மக்கள் தங்கள் காணிகளை உரிமை கோரிப் பெற்று அபிவிருத்தி மேற்கொள்ள முடியாத நிலை இருக்கின்றது. ஏனைய இடங்களில், சொத்து தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்து காணிகளை மீளப்பெற்று அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எந்தத் தடையும் இல்லை.

கேள்வி: அரச அதிபர்களின் மாநாடு அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. அதைப் பற்றிக் கூறுங்கள்.

பதில்: இலங்கையில் வழக்கமாக அரசின் நிர்வாக நடவடிக்கைகளை மீளாய்வு செய்யும் முகமாக இம்மாநாடு மாதத்துக்கு ஒரு தடவை கொழும்பில் இடம்பெறுவது வழக்கம். இம்மாதம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருக்கிறது. இதில் இலங்கையின் எல்லா அரச அதிபர்களும் கலந்துகொண்டார்கள். இதன்போது நிர்வாக ரீதியான வழிகாட்டல்களும் ஆலோசனைகளும் அரச அதிபர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம்.

கேள்வி:- யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பில், குறிப்பாக யாழ். மாவட்டத்தில் கணவனை இழந்த பெண்களின் வாழ்வாதார நடவடிக்கைகள் தொடர்பில் என்னென்ன திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன?

பதில்:- சேதமடைந்த வீடுகள் புனரமைக்கப்படுகின்றபோதோ, அல்லது யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கான வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்ற போதோ கணவனை இழந்த பெண்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. யுத்தத்தால் கணவனை இழந்த பெண்களுக்கான வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி செயலகம், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்குப் பணிப்புரை விடுத்திருக்கின்றது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com