Contact us at: sooddram@gmail.com

 

மர்ம மனிதர்கள் விவகாரத்துக்கு எதிராக ஒரு மக்கள் இயக்கத்தை நடத்த வேண்டும்

(அ.வரதராஜப்பெருமாள )

வடக்கு கிழக்கு மாகாணங்கள் பூராவும் குறிப்பாக தற்போது யாழ்ப்பாணக் குடாநாட்டில் மர்ம மனிதர்கள் பற்றிய பயத்தில் மக்கள் ஒவ்வோர் இரவும் பயந்து நடுங்கி வாழ வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். இரவில் ஆண்கள் நித்திரை முழித்து தமது பெண்டிர், பிள்ளைகளைப் பாதுகாப்பதில் ஈடுபட வேண்டியுள்ளது. பெண்கள் எந்த நேரத்தில் மர்ம மனிதர்கள் தங்கள் வீடுகளுக்கும் வந்துவிடுவார்களோ என்று பயந்து பயந்தே இரவுகளைக் கழிக்க வேண்டியவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். மர்ம மனிதர்கள் பயத்தில் இரவில் நித்திரை முழிப்பதனால் அடுத்த நாள் அவர்கள் தமது வேலைகளை ஒழுங்காகச் செய்யமுடியாது உள்ளனர். குழந்தைகள், சிறுவர்கள் இரவு முழுவதும் தமது பெற்றோர்களைக் கட்டிப்பிடித்தபடி பயத்தில் உறைந்தபடி உள்ளனர். அவர்கள் இரவு நேரங்களில் தமது படிப்புகளை மேற்கொள்ள முடியாதுள்ளனர்.

இந்த நிலைமையானது வடக்கு கிழக்கின் மக்கள் சமூகம் முழுவதையும் உளவியல் ரீதியாக வாட்டி வதைக்கும் ஒரு கொடூரமாக இங்கு நிறைவேறிக் கொண்டிருக்கிறது. இதனை பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் வதந்தி என்ற  ூறுவதில் அர்த்தம் இல்லை. பொத்துவில் தொடக்கம் பருத்தித்துறை வரை பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் மர்மமாக நடமாடிய மனிதர்களை மக்கள் துரத்திய சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன. அவர்களில் சிலர் அரச படைகளின் முகாம்களுக்குள்ளேயே ஓடி மறைந்திருக்கிறார்கள். அத்துடன் இவை தொடர்பாக இந்த அரச அதிகாரிகள் விடுக்கும் அறிக்கைகளும் சேர்ந்து இந்த மர்ம மனிதர்களின் நடமாட்டத்துக்கும் அரச படைகளின் அதிகாரத்துக்கும் இடையே திட்டமிட்ட தொடர்பு இருப்பதாக மக்கள் உறுதியாக நம்புவதற்கே வழிவகுத்திருக்கிறது.

இந்த மர்ம மனிதன் விவகாரம் மேலும் தொடருமாக இருந்தால் பலர் இதனால் மிகவும் ஆபத்தான உளவியல் நோய்களுக்கு உள்ளாக்கப்படும் நிலையே ஏற்படும். இரவு நேரங்களில் ஆண்கள் தமது வீடுகளை விட்டு வேறு இடங்களுக்குச் செல்ல முடியாது உள்ளது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டிருக்கிறது தொடர்ந்து .இரவுகள் தோறும் நித்திரை முழிப்பதினால் ஏற்படும் பலயீனங்களுக்கும் நோய்களுக்கும் பலர் உள்ளாக நேரிடும்.

இந்த மர்ம மனிதர்கள் பற்றிய சம்பவங்களினால் மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்திருந்த கொஞ்சநெஞ்ச நம்பிக்கையையும் இப்போது இழந்துபோய் உள்ளனர். அரசாங்கம் இந்த சம்பவங்களை வேண்டுமென்றே திட்டமிட்டு ஏதோ ஒரு குறுகிய அரசியல் நோக்கத்துக்காகச் செய்கிறது என்றே பரவலாக மக்கள் நம்புகிறார்கள். எனவே ஜனாதிபதியும் மற்றும் அமைச்சர்களும் இந்த விடயத்தில் உடனடியாக அக்கறை எடுத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்புப் படைகள் மீதும் பொலிசார் மீதும் நம்பிக்கைகள் ஏற்பட வழிவகுக்க வேண்டும்.  

பாதுகாப்புப் படைகளின் தளபதிகளும், பொலிஸ் அதிகாரிகளும் மக்களைக் குற்றம் சாட்டுவதை நிறுத்திவிட்டு மர்ம மனிதர்கள் விவகாரத்தை மூடிமறைக்கும் போக்கைக் கைவிட்டு விட்டு மிகவும் காத்திரமான முறையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு மர்மமான மனிதர்களின் நடமாட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். மக்கள் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது என்று அறிவித்து சமூகவிரோதிகளுக்கு எதிராகச் செயற்படும் மக்களை அதிகாரத்தால் கட்டிப்போடுவது மர்ம மனிதர்களின் செயல்களுக்கும் அதைப் பயன்படுத்த முயலும் திருடர்களுக்குமே உதவியாக அமையும். எனவே பாதுகாப்புப் படைகளின் உயர் அதிகாரிகள் மக்கள் அமைப்புக்களை அனைத்துக் கிராமங்களிலும் ஏற்படுத்தி அவை மர்ம மனிதர்கள் மற்றும் சமூக விரோதிகளுக்கு எதிராக காத்திரமான முறையில் செயற்பட அரச படைகளும் பொலிஸாரும் மக்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

மேலும், வடக்கு கிழக்கில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசியல் பிரதிநிதிகளும், சமயத் தலைவர்களும், சமூகப் பிரமுகர்களும் ஒன்றிணைந்து இந்த மர்ம மனிதர்கள் விவகாரத்துக்கு எதிராக ஒரு மக்கள் இயக்கத்தை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

அ.வரதராஜப்பெருமாள்

முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர்.

31-08-2011

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com