Contact us at: sooddram@gmail.com

 

சுன்னாகம் மைலணியில்

திருமதி ஞானசக்தி ஸ்ரீதரன் அவர்களின் தேர்தல் பிரச்சாரம்

சுன்னாகம் மைலணி ஆலய முன்றலில் 27-08-2013 மு.ப 11.00 மணியளவில் இடம் பெற்ற பெண்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய வேட்பாளர் சுந்தரம் டிவகலாலா அரசியல் உரிமைகளை பெற வேண்டுமாக இருந்தால் நாம் அறிவுபூர்வமாக செயற்பட வேண்டும  தமிழ் அரசியல் தலைமைகளால் தமிழ் மக்கள் பெற்றுக்கொள்ள முடியாமைக்கான காரணத்தை தமிழ் மக்கள் அறிவுபூர்வமாக சிந்திக்க வேண்டும். எமக்கு கிடைத்தவைகள் என்னவென்று பார்த்தால் விதவைகள் 40,000 பெற்றோரை இழந்த பிள்ளைகள் 10,000 இற்கு அதிகமானோர். விடுதலைப் போராளிகளில் இறந்தவர்கள் மாத்திரம் 10,000 இற்கு மேற்பட்டோர். இதுதவிர ஏனைய இயக்க போராளிகள் 10,000 இற்கு அதிகமானோர். இவைகளே எமது சமூகத்தினருக்கு கிடைத்தவை. மாற்று வழிமுறைகளை தெரிவு செய்ய வேண்டும் தொடர்ச்சியாக உணர்ச்சியூட்டும் அரசியலை நம்பி கடந்த 30 வருடங்களுக்கு மேல் எமக்கான அபிவிருத்திகளை, தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் தொடர்ந்தும் எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்காமல் இணக்கப்பாட்டுடன் கலந்து பேசி பெறக்கூடிய சின்ன சின்ன விடயங்களையாவது பெற்றுக்கொள்ள முயல வேண்டும் என்றார்.

ஞானசக்தி ஸ்ரீதரன் தன்னை அறிமுகப்படுத்தி உரையாற்றுகையில் பெண்கள் எவ்வாறான ஒடுக்கு முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறோம். தனது அரசியல் பிரவேசம் முதலில் தமிழரசு கட்சி மாதர் அமைப்பிலும் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி திருமதி மங்கையர்கரசி ஆகியோருடனும் பின்னர் ஈழமாணவர்பொதுமன்றம் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பெண்கள் அமைப்பில் செயற்பட்ட வரலாற்றை குறிப்பிட்டு பெண்களுக்கு ஏற்படும் இன்னல்கள், அடக்குமுறைகள் ஒடுக்குமுறைகள் என்பன பற்றி விளக்கினார். முதன் முதலாக இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபையில் ஒரேயொரு பெண் உறுப்பினராக இருந்ததை குறிப்பிட்ட ஞானசக்தி ஸ்ரீதரன் சாதாரண சமூகத்திலும் சரி இயக்கங்களிலும் சரி பெண்களுக்கு சமத்துவம் கிடைக்காமை பற்றியும் விதவைகள், பெற்றோர்களை இழந்த சிறார்கள், போராட்டங்களில் ஈடுபட்ட பெண்கள் தற்போது சமூத்தினரால் ஓரங்கட்டப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டார். எனவே அவர்களுக்கு எதிர்கால வாழ்வாதாரத்தை வளம்படுத்த நாம் அறிவுபூர்வமாக சிந்தித்து செயற்படவும், எவரது தயவிலும் தங்கியிருக்காமல் சுயமான பொருளாதாரத்தை தேடிக்கொள்வதற்கான வழிமுறைகள் பற்றியும் சிந்திக்க வேண்டும் என்றார். நாங்கள் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடுவது என்பது சரணாகதி அரசியல் அல்ல இணக்கப்பாடான அரசியல் நட்பு ரீதியாக மக்களுக்கு பெற்றுக்கொள்ளக்கூடியவற்றை பெற்றுக்கொள்வோம்

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தினூடாக இணைந்த வடக்கு கிழக்கு மகாணசபை 13வது திருத்தத்தை கொண்டது அன்றைய ஜனாதிபதி- பிரபாகரன் இணைந்தே அந்த மாகாணசபையை செயலிழக்க செய்தனர். அன்று மாகாணசபையே வேண்டாம் என்றவர்கள் இன்று அதிகாரங்கள் பறிக்கப்பட்ட நிலையில் இருக்கும் தற்போதைய வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். 13வது திருத்தத்தின் கீழ் பொலிஸ், காணி அதிகாரங்களை கொண்ட அந்த மாகாணசபையை இயங்க விடாமல் செய்ததன் விளைவே இன்று அதிகாரங்கள் குறைந்த, தனியாக பிரிக்கப்பட்ட வடக்கு மாகாணசபை தேர்தலில் தங்கள் சுயநல அரசியலுக்காக போட்டியிடுகின்றனர்

கடந்த வடக்கு மாகாண உள்ளுராட்சி சபைக்கு தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட த.தே.கூ இனரால் என்ன சாதிக்கப்பட்டத  என்பதை நீங்கள் அறிவீர்கள்.அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதி திரும்பிச் செல்லும் அளவிற்கு அவர்களின தலைமையிலான உள்ள10ராட்சி சபைகள் தூங்கி வழிகின்றன. மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் என்பதை மறந்து விட்டார்கள். எனவே நீங்கள் சமூகத்தை நேசிப்பவர்களுக்கும் குறிப்பாக பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் அவர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் உறுப்பினர்களை தெரிவு செய்யுங்கள் என்றார்.

பின்னர் வரணியில் பெண்களுடனான சந்திப்பில் அரசியல் ரீதியாக பெண்கள் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் பெண்களுக்கு உதவ முடியும் மாதர் சங்கங்களை பலப்படுத்தி அதனூடாக பெண்களுக்கு பொருளாதார ரீதியாக அவர்களை ஊக்குவிக்கலாம். சுய பொருளாதார தேவைகளை நிறைவேற்றவும், பிரதிநிதித்துவம் அவசியம். அவர் மேலும் அவர்களிடத்தில் கூறும் போது நான் ஏனைய அரசியல்வாதிகளை போல் வாக்குறுதி தர முடியாது. தேர்தல் முடிந்த பிறகும் நான் எனது சேவையை தொடர்ந்து முன்னெடுப்பேன். அறிவு சார்ந்து வளங்களை உரிய முறையில் பாவித்து பெண்களுக்கு செய்ய முடிந்த சேவைகளை என்னால் உங்களுக்கு வழங்க முடியும் என்றார். 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com