Contact us at: sooddram@gmail.com

 

எதிர்ப்பு அரசியல் என்றுமே தமிழினத்துக்கு விடிவு தராது

கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட எஸ்.தவராஜா 18ஆம் வயதில் அரசியலில் பிரவேசித்தவர். 1970 இல் இருந்து மக்களின் நலனுக் காக உழைத்துவரும் டக்ளஸ் தேவானந்தவுடன் இணைந்து E.N.D.L.Fஆரம்பித்த காலத்திலிரு ந்தும் பின்னர் EPDP வளர்ச்சியிலும் பங்களிப்புச் செய்தவர். EPDP கட்சி சார்பில் 1994 பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று 2000, 2001ஆம் ஆண்டு வரை பாராளு மன்றப் பிரதிநிதியாக இருந்தார். கடந்த சில காலமாக டக்ளஸ் தேவானந்தவின் அமைச்சில் நிதி தொடர்பான மதியுரைஞராக பணிபுரிகி றார். தற்போது வட மாகாண சபை தேர்தலில் ஐ.ம.சு முன்னணியின் தலைமை வேட்பாளராக போட்டியிடுகின்றார். மாகாண சபைத் தேர்தலில் அர சின் வெற்றி வாய்ப்புப் பற் றிய அவரது கருத்துக்கள் அவருடனான இந்த செவ்வி யில் இடம் பெறுகின்றன.

கேள்வி: வடமாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்படு முன்னர் அமைச் சர் டக்ளஸே தேர்தலில் போட்டியிடவிருப்பதாக இருந்தது. தற்போது UPFA இன் தலைமை வேட்பாளராக நீங்கள் போட்டியிடுகின்aர்கள். இது எவ்வாறு நிகழ்ந்தது?

பதில்: நான் அமைச்சரின் எண்ணங்களை அச்சொட்டாகச் செயல்படுத்துபவன். அதனால் அவர் போட்டியிட்டாலும் நான் போட்டியிட்டாலும் அதில் எந்த வேறுபாடுமில்லை. தேர்தல் முதன்மை வேட்பாளரான நான் வென்றால் சட்டம் இடமளிக்குமாயின் முதலமைச்சராக அவர் பதவி வகிக்க நான் தாராளமாக விட்டுக் கொடுப்பேன். எமக்குள் எந்த வேறுபாடும் இல்லை. ஆட்கள் இருவர் எண்ணமும் செயலும் ஒரு நோக்குடையவை.

கேள்வி: ஜனநாயக அரசியலிலே நீண்ட கால அனுபவம் கொண்ட தமிழ் அரசியல் கட்சி என்றவகையில் வடமாகாண சபைத் தேர்தலில் உங்கள் வெற்றி வாய்ப்பு எவ்வாறுள்ளது. நீதி, நேர்மையான தேர்தலாக இது அமையுமா?

பதில்: 2009க்கு முன்னர் எமது நிலை மோசமாக இருந்தது. 2004இல் நடந்த தேர்தலில் கூட்டமைப்புக்கு உதவியாக புலிகள் மோசடி செய்தனர். 2009க்குப் பின் நடந்த ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நீதி, நேர்மையாக நடந்தமை பற்றி பவ்ரல் அறிக்கையும் விணிரிV அறிக்கை யும் தெளிவுபடுத்துகின்றன. ஆசிய நாட்டுத் தேர்தல்களு டன் ஒப்பிடுகையில் நமது நாட்டுத் தேர்தல்கள் நீதி, நேர்மையுடன் நடைபெறுவதைப் பெருமையோடு கூறலாம். 100 சதவீதமான தூய்மையை எங்கும் எதிர்பார்க்க முடியாது.

அண்மைக்காலங்களில் நடைபெற்ற தென்னிலங்கைத் தேர்தல்கள் நீதியாகவும் நேர்மையாகவும் நடைபெற்றதை மறுப்பதற்கில்லை.

கேள்வி: வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதலாவது மாகாண சபை தேர்தல் இது. 13ஆவது திருத்தம் அமுல்படுத்தப்படுவதை முன்னெடுக்கும் நீங்கள் தற்போதைய அரசியல் நிலை பற்றி என்ன கூறுகிaர்கள்?

பதில்: 1987இன் இந்திய - இலங்கை ஒப்பந்தப் பிரகாரம் 1987இல் ஆட்சி மன்றத்தில் அரசியல் திருத்தம் செய்த போது கஷ்டமான சூழலிலேயே அது நடைபெற்றது. மாகாணசபை நிர்வாகம் கூட சுதந்திரமான சூழலில் நடைபெறாது வடக்குக் கிழக்கின் பிற தாக்கங்களுக்கு உட்பட்டிருந்தது. ஆகவே அவற்றைச் சுதந்திரமான நீதி நேர்மையான தேர்தல் என்றோ நிர்வாகம் என்றோ கூறுவதற்கில்லை.

ஆனால் தற்போது சுதந்திரமாக இயங்கி, அரசியலில் தங்கள் சுயாதீனமான தீர்மானப்படி தேர்தலில் ஈடுபட வாய்ப்புக்கிடைத்துள்ளது. எனவே தற்போதைய வடமாகாண தேர்தல் நீதி, நேர்மை, சுதந்திரச் செயற்பாட்டுடன் நடைபெறுமென நம்பலாம்.

கடந்த காலங்களில் பல தாக்கங்களுக்கு ஆளான வடமாகாண மக்கள் சுதந்திரமாகத் தமது பிரதிநிதிகளைத் தெரிந்து ஜனநாயக ரீதியாக நிர்வாகத்தை அமைக்க இத்தேர்தல் வாய்ப்பளிக்கிறது. வடக்குக்கும் கிழக்குக்கும் தெரிவு செய்யப்பட்ட அல்லது நியமிக்கப்பட்ட அரசியல் அதிகாரம் கொண்ட சபை வேண்டுமென எமது கட்சி ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்து வந்தது. கடந்த 25 ஆண்டுகளின் பின் செப்ரம்பர் 21இல் நடைபெறவுள்ள தேர்தல் வடமாகாண மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் என நம்பலாம்.

கேள்வி: இந்தத் தேர்தலிலே ஆளும்கட்சியில் அங்கம் பெற்ற நீங்கள், ரிஜிளிஜி சார்பில் அதிகளவு வேட்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் கருத்துப் பற்றி என்ன நினைக்கின்aர்கள்?

பதில்: ஆளும் கட்சியால் வேட்பாளர்களாக நியமிக்கப்பட் டோரில் 10 பேர் மட்டுமே ரிஜிளிஜி சார்பானவர்கள். கிளிநொச்சியில் 4 பேர் இடம்பெற்றுள்ளனர். நீதியா கவே எமக்குரிய வேட்பாளர் நியமனம் கிடைத்தது.

கேள்வி: ரிஜிளிஜிக்குக் கிடைத்துள்ள வேட்பாளர் நியமனம் பற்றி நீங்கள் திருப்தி கொண்டீர்களா?

பதில்: ஆம். திருப்தியடைந்தோம். ஆயினும் மேலும் கிடைத்திருந்தால் மிகவும் திருப்தி பெறுவோம்.

கேள்வி: வடமாகாணத்தை வெற்றிகொள்வது அரசுக்கு ஒரு சவால் என்ற நிலைப்பாட்டிலே உங்களது வெற்றி வாய்ப்பு பற்றிக் கூறுவீர்களா?

பதில்: ஆம். அது ஒரு பெரிய சவால்தான். பல கஷ்டங்களையும் அனுபவித்த மக்களுக்கு ஏற்படப் போகும் ஒரு நன்மையான விளைவாகவே இத் தேர்தல் அமைகிறது. எனவே அதில் வெற்றி பெற்று மக்களுக்கு நன்மை செய்யத் தேர்தலில் கடுமையாக உழைக்கிறோம். வடக்கிலே அரசுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட கட்சி மூலமே அரசின் நன்மைகளைப் பெற முடியும். என்பதை மக்கள் அறிவர். அரசை விமர்சித்துக் கொண்டு பிணக்க அரசியல் நடத்தி இந்தியாவுக்கும் அமெரிக்கா வுக்கும் செல்லும் கட்சிகளால் நன்மை இல்லை என்பதை யும் மக்கள் அறிவர். அதனால் எமக்கு வெற்றி வாய் ப்பு உண்டு என்று துணிந்து கூறலாம்.

கேள்வி: தமிழ்க் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் பற்றி என்ன கூறுகிaர்கள்?

பதில்: அவர் உயர் நீதிமன்ற நீதியரசராகப் பதவி வகித்தவர். தகைமையும் உன்னத தன்மையும் கொண்டவர். அவரது ஆற்றலை, மதிப்பை நாம் மதிக்க வேண்டும். எனினும் கூட்டமைப்புக்குள் அவர் இழுக்கப்பட்டதைப் பயனுள்ள பால்துளி அபாயகரமான பொருள் உள்ள ஒரு போத்தலுள் வீழ்ந்ததாகவே கருத முடியும். அவர் அரசியலில் நீண்ட காலம் ஈடுபட்டவர் அல்லர். அவரது துறை வேறாக இருந்தது. நான் 18 வயதிலிருந்து அரசியல் செய்பவன். திரு. சேனாதிராஜாவும் அவ்வாறே அரசியல் அனுபவம் கொண்டவர். இவற்றைச் சீர்தூக்கிப் பார்க்கும் திறமை மக்களுக்கு உண்டு. மாகாணசபை நிர்வாகத்துக்குப் பொருத்தமானவர்களை மக்கள் தெரிவு செய்வார்கள்.

கேள்வி: 13ஆவது திருத்தத்தை இல்லாமற் செய்யும் முனைப்புடன் ஆட்சி மன்ற விவாதம் நடைபெறும் இத்தருணத்தில் EPDPி யினரைத் தெரிவு செய்வதால் மக்கள் நன்மை பெற முடியும் என்று நினைக்கிaர்களா?

பதில்: 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தப் பொருத்தமானவர்கள் நாங்களே. அரசுடன் மிக நெருங்கிய தொடர்பு வைத்திருப்பவர்களும் நாங்களே. ஆளும் கட்சிகளுடன் இணைப்புள்ள எங்களிடம் ஜனாதிபதி நம்பிக்கை கொண்டுள்ளார். டக்ளஸ் தேவானந்தா வடக்கின் முதல் அமைச்சரானால் காணி, பொலிஸ் அதிகாரங்கள் கொடுக்கத் தாம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். டக்ளஸ் என்று ஜனாதிபதி குறிப்பிட்டதன் காரணம், டக்ளஸ் போன்ற கொள்கையும், திடமும், திறனும் உள்ள எவரிடமும் அந்த அதிகாரங்களைக் கொடுக்கத் தயார் என்றே பொருள்படும் எனக் கருதுகின்றேன். அத்துடன் அர சுடன் இணைந்து செல்லும் கொள்கையுடைய எவருக்கும் அதிகாரமளிக்கத் தயார் என்றே ஜனாதிபதி கருதுகிறார். தமிழ் மக்களின் நலன்களைப் பேண நாங்கள் அரசுடன் மட்டுமே பேசுகின்றோம். ஒபாமாவிடமோ மன்மோகன் சிங்கிடமோ செல்லவில்லை. எதிர்ப்பு அரசியல் நடத்தவும் இல்லை. வடமாகாண சபையை எமது கட்சி கைப் பற்றுமானால் தமிழ் மக்கள் சார்ந்த பல நல்ல காரியங்களைச் செய்து முடிக்க சித்தமாக இருக்கின்றோம்.

கேள்வி: வடக்கில் உள்ள மக்கள் உங்களிடம் முக்கியமாக எதிர்பார்ப்பதென்ன? அபிவிருத்தியா? அரசியல் தீர்வா?

பதில்: அபிவிருத்திக்கே நான் முதலிடம் கொடுப்பேன். அரசு புலிகளைத் தோற்கடித்தபின் 2009ஆம் ஆண்டிலிருந்து பல பில்லியன்களை வடக்கின் அபிவிருத்துக்குச் செலவிட்டுள்ளது. யாழ். மாவட்டத்துக்கு 30 பில்லியன், கிளிநொச்சிக்கு 25, 26 பில்லியன், முல்லைக்குச் சுமார் 30 பில்லியன் அபிவிருத்திக்குச் செலவிட்டுள்ளது. தி9 பாதையைத் திறக்கக் கிளிநொச்சிக்கு வந்த ஜனாதிபதி பின்வருமாறு கூறினார். வடக்குக்கு அரசு செலவிட்ட தொகை போல ஒரு தொகையை வடக்கின் அபிவிருத்திக்கு மாகாணசபை செலவிட நான் சந்தர்ப்பம் வழங்குவேன் என்றார். நாங்கள் இழந்தவை அதிகம். எங்கள் பொருளாதாரம் குடை சாய்ந்தது. கல்வி தொழில், நிம்மதி அனைத்தையும் இழந்துள்ளோம். இவை மீட்கப்பட்ட பின்னர்தான் அரசியல் தீர்வு பற்றிப் பேச வேண்டும். உலகம் வேகமாக முன்னேறுகின்றது. எனவே பொருளாதார முன்னேற்றம் காண நாம் வடமாகாண சபையைப் பயன்படுத்த வேண்டும். அரசின் உதவியுடன்தான் இது சாத்தியம்.

கேள்வி: தேர்தல் மேடைகளில் உங்கள் முக்கியமான சுலோகம் எது என்று கூறுவீர்களா?

பதில்: அரசோடிணைந்து தமிழ் மக்களின் தேவைகளை நிறைவேற்றக் கூடிய ஒரே கட்சி நாங்கள் தான். 13ஆவது அரசியல் திருத்தத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதும் நாங்கள் தான். தமிழ் மக்களின் பிரச்சினைகளை வெளியாரிடம் கூறித்திரியும் கட்சியல்ல நாம். அவை அரசுடன் பேசி நல்லெண்ணத்துடன் தீர்க்கப்பட வேண்டியவை. பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பொறிமுறை எம்மிடம் உண்டு. பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்குபற்றாமல் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. வடக்கிலே குடும்ப உழைப்பாளிகளாகப் பெண்கள் பலர் உள்ளனர். அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வழிவகை செய்யவுள்ளோம்.

வடபகுதி இளைஞரின் வேலையில்லாப் பிரச்சினையைத் தீர்க்க அரச தனியார் துறைகளில் வேலை வாய்ப்பளிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். போரினால் ஊனமடைந்த பலர் உள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஏற்ற நிவாரணம் கிடைக்க அவர்களது புள்ளி விபரங்களைத் திரட்டி வருகிறோம். நிவாரணம் பெற வழி செய்வோம்.

கேள்வி: உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதியைப் பாரபட்சமாக அரசு வழங்குவதாகக் குற்றம் சுமத்தப்படுவது பற்றி என்ன கூறுகிaர்கள்?

பதில்: யாழ். மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களுள் ஒரு மாநகரசபை, 3 பிரதேச சபைகள் அடங்கிய 4 உள்ளூராட்சி மன்றங்களை நாம் நடத்தும் அதேவேளை ஏனையவை ஹினிதி இன் கட்டுப்பாட்டில் உள்ளன. அரசு 100 மில்லியன் ஒவ்வொரு பிரதேச சபைக்கும் வழங்குகிறது. ஹினிதி இன் கட்டுப்பாட்டில் உள்ள மன்றங்கள் அரசுடன் நேசமாக இருந்து மேலும் நிதியைப் பெற முயல்வதில்லை. ஆனால் நாம் தேவை ஏற்படும் போது அரசுக்கு வேண்டுகோள் விடுத்து மேற்கொண்ட நிதி பெறுகின்றோம். அரசை விமர்சித்துக் கொண்டு நிதி கேட்பது பயனளிக்கமாட்டாது. இணக்கப்பாடு வேண்டும். ஆசியாவிலும் இந்தியாவிலும் கூட மத்திய அரசின் நல்லெண்ணம் கொண்ட உள்ளூராட்சி மன்றங்களே கூடிய நிதியைப் பெற்று நிர்வாகம் நடத்துகின்றன.

கேள்வி: ஐ.ம.சு முன்னணி வேட்பாளர் குழுவைப் பற்றித் திருப்திப்படுகின்aர்களா?

பதில்: எமது வேட்பாளர் குழு நல்லது. மாகாண சபை முறைமை பல்வேறு துறைகளிலும் அனுபவப்பட்டவர்களின் செயற்பாட்டுக்குழு. எமது குழுவில் ஒரு பங்கினர் மக்களின் பிரச்சினைகளோடு ஒன்றித்து வாழ்ந்தவர்கள். எங்களது வேட்பாளர்களுள் ஒருவர் வட கிழக்கு மாகாணக் கல்வியமைச்சின் செயலாளராக இருந்த அனுபவசாலி. பத்திரிகைத் துறைசார்ந்த ஒருவர். தகைமையும் திறமையும் நேர்மையும் கொண்ட பெண்ணினத்துக்குப் பொதுவாழ்விலும் அரசியலிலும் ஈடுபடும் சந்தர்ப்பம் கொடுபட வேண்டும். எனவே ஒரு வேட்பாளர் பெண்கள் சார்பில் போட்டியிடுகின்றார். மாநகர மேயராகவும் அரச அதிபராகவும், சர்வகலாசாலை உபவேந்தராகவும் பெண்கள் பதவி வகிக்கும் நிலையைச் சிபாரிசு செய்தவர்கள் நாமே.

கேள்வி: வடக்கிலே இராணுவம் இருப்பது பற்றியும் உங்கள் கட்சி ஆதரவு எனவும் உள்ள குற்றச்சாட்டுக்கள் உங்களது எதிரணியின் குரல்கள். அது பற்றி என்ன கூறுகின்aர்கள்?

பதில்: இவைகள் பிழையான குற்றச்சாட்டுகள். ஹினிதி பாராளுமன்றப் பிரதிநிதியொருவர் 200 பெண்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட்டுக் கற்பழிக்கப்பட்டதாக நாக்கூசாமல் பொய் பேசி இருக்கிறார். இப்படிப்பட்டவர்களை அரசு தண்டிக்காமல் விட்டு விடுகிறது. மூத்த அரசியல்வாதியான சம்பந்தன் அவர்களை நான் மதிக்கிறேன். முழு நாட்டிலும் உள்ள இராணுவத்தின் தொகை ஓரிலட்சம்தான். அப்படி இருக்க வடக்கில் ஓரிலட்சம் இராணுவம் குவிக்கப்பட்டதாக இந்தச் சிரேஷ்ட தலைவர் பிழையான தகவலை வெளியிட்டுள்ளார். ஹினிதிக்காரர்கள் இவ்வாறுதான் துணிந்து பொய் பேசுகிறார்கள்.

கேள்வி: உயர் பாதுகாப்பு வலயம் என மக்களது காணியில் இராணுவம் நிலைகொண்டிருப்பது பற்றி குறை கூறப்படுகின்றதே.

பதில்: நாம் அனுபவித்த கொடிய யுத்தம் எம்மை வாட்டியது. 2009இல் யுத்தம் முடிந்ததும் வடக்கில் அமைதி, சமாதானம் தேவைப்பட்டதால் தெல்லிப்பளை, கே.கே.எஸ்.பகுதியில் 42 கிராம சேவையாளர் பிரிவுகள் இராணுவ பாதுகாப்புக்குத் தேவைப்பட்டது.

எமது கட்சியின் தொடர்ச்சியான வேண்டுகோளுக்கிணங்கப் படிப்படியாக இராணுவம் குறைக்கப்பட்டு வருகிறது. இதற்காக நாங்கள் வெளிநாடு சென்று கூச்சலிடவில்லை. இதமாக இணக்கமாக அரசுடன் பேசி இராணுவத்தைக் குறைத்து வருகிறோம். அவர்கள் இருந்த இடங்களும் மக்களிடம் கையளிக்கப்பட்டு வருகின்றன. உயர் பாதுகாப்பு வலயமான 16 கிராம சேவையாளர் பிரிவில் மட்டுமே இராணுவம் இருக்கிறது. ஏனையவை கொடுபட்டு விட்டன. இராணுவம் இருந்த வீடுகளும் உரியவர்களிடம் கொடுபட்டு வருகிறது. அரியாலையில் 32 வீடுகள் உரிய மக்களிடம் கொடுபட்டுள்ளது. தற்போதைய இடங்களையும் உரியவர்களிடம் கையளிக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். நிச்சயமாக எங்கள் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.

கேள்வி: தேர்தலில் உங்கள் எதிர்பார்ப்புக்கள் எவை?

பதில்: நாங்கள் TNA போல் பொய் பேசுபவர்கள் அல்லர். உண்மையைச் சொல்லுகின்றோம். நல்லதைச் செய்கிறோம். யுத்தம் முடிந்த பின் வடபுல மக்களுக்கான எமது சேவை அளப்பரியது. மக்கள் நன்றியுணர்வுள் ளவர்கள். அவர்கள் எம்முடன் இருக்கிறார்கள். எனவே மாற்றாரின் பொய்களுக்கு அவர்கள் எடுபடமாட்டார்கள். எமது அமைச்சரின் வேண்டுகோளை அரசு புறக்கணிப்பதில்லை. என்பதையும் மக்கள் அறிவார்கள். எனவே எதிர்காலத்திலும் மக்கள் எம்மைக்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com