Contact us at: sooddram@gmail.com

 

ஒரு அகதியின் நன்றிக் கடிதம்

நன்றி புலம்பெயர் உறவுகளே!

இதுவரை 'புலம்பெயர் உறவுகள்' என்ற வார்த்தைகள் எனக்கு வெறும் சம்பிரதாயங்களாகவே பட்டன. எனினும் இந்த அகதி யுத்த அகதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஜொலிஸ்ரார் விளையாட்டுக்கழக இலண்டன் கிளையினருக்கு எழுதிய 'ஒரு அகதியின் கடதாசி' எனத் தலைப்பிடப்பட்ட பகிரங்க மடலுக்கு உங்கள் அனைவரிடமும் இருந்து தெளிவான பிரதிபலிப்புகள் செயற்பாடுகளாக வெளிவந்தன என இன்று மாலை தெரிய வந்தது.

அதற்காக எனது நன்றிகள்.....!

எனது மக்களின் உண்மையான துயரார்ந்த வாழ்வை, எண்ணத்தை எம்மால் எங்குமே சொல்ல முடியாத, வாய்விட்டு அழமுடியாத, பரஸ்பரம் பேசிக்கொள்ள முடியாத நிலையில் புலம்பல்களாக எழுதப்பட்ட அந்தக் கடதாசிக்கு உங்களிடமிருந்து இத்துணை மதிப்பார்ந்த பதிலிருப்புகள் என நான் எதிர்பார்க்கவில்லை.

எமது ஆதங்கத்தை வெளிப்படுத்திய புலம்பல்களை வெறும் புலம்பல்களாகவே எடுத்துக் கொள்வீர்கள் என நினைத்தோம். எனினும் எங்கள் உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு உடனடி எதிர்வினையாக ஜொலிஸ்ரார் விளையாட்டுக்கழக இலண்டன் கிளை எனும் 'பிக்பொக்கட்' கும்பலின் மாய விளையாட்டு நிகழ்வை நீங்கள் அனைவரும் புறக்கணித்ததை அறிந்து எமது இருண்ட நெஞ்சங்கள் புன்னகை புரிகின்றன. வறண்டு போன எமது இதயங்களிலிருந்து சிறு ஈரலிப்பான நன்றிகளை மீண்டும் தெரிவிக்கிறோம்.

எமது அவலங்களைப் பற்றி கையுயர்த்தி உரக்கக் குரலெடுத்துப் பேசுவார்கள். சில வேளைகளில் கண்ணீரும் விடுவார்கள். எனினும் அவலங்களைப் போக்க வழி தேடுபவர்களாக அவர்கள் இல்லை. எமது கண்ணீரைத் துடைக்க அவர்களது கரங்களுக்கு நேரமில்லை.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் உங்களிடையே கோட்பாடு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் வேறு பல காரணிகளாலும் முரண்பாடுகள், சிலவேளைகளில் பகைமைகள் கூட இருக்கலாம். எனினும் சிதைந்து போன எமது மக்களுக்காக, தொலைந்து போன அவர்களது முகவரிகளுக்காக வேற்றுமைகளிடையே ஒற்றுமையைக் காணுங்கள்.

முரண்பாடுகளிடையே உடன்பாடுகளைத் தேடிக் கண்டறியுங்கள்.

என்னதான் வேற்றுமைகள் இருந்தாலும், என்னதான் பகைமைகள் இருந்தாலும் 'உங்கள் உறவுக்கான எம்மை சிதைவுகளிலிருந்து மீட்டெடுத்து மனிதர்களாக வாழ வைக்க வேண்டும்' என்ற எண்ணம் உங்கள் எல்லோருக்கும் இருக்கும் என நான் உறுதியாக நம்புகின்றேன்.

நினைவில் இருத்திக் கொள்ளுங்கள். நாம் உண்பதற்கு மீன் கேட்கவில்லை. தூண்டிலைக் கேட்கிறோம். அதைத் தாருங்கள். மீனை நாமே பிடித்துக் கொள்வோம். எமது மக்களுக்காக என்று அங்கே நடைபெறும் ஆடம்பரச் செலவுகளைச் சுருக்கி எளிமையாக்கிக் கொள்ளுங்கள். எஞ்சும் பணத்தொகையை எமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தச் செலவிடுங்கள்.

உங்களிடம் வரும் இந்தச் செய்தியை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். நாம் தொடர்ந்து ஆக்கபூர்வமான தொடர்பாடலைப் பேணுவோம்.

இவ்வண்ணம்

நண்பர்களுடன்

அகதி.

(இது தொடர்பான கட்டுரையை வாசிக்க...)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com