Contact us at: sooddram@gmail.com

 

வைகாசி 2011 மாதப் பதிவுகள்

வைகாசி 31, 2011

பிளஸ்- மைனஸீக்குள் திணறிக்கொண்டிருக்கும் தீர்வு

அன்று 'சமாதானப் பொறி" - இன்று 'பேச்சுவார்த்தை பொறியா?"

ஆயுதப் போராட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியாத விடயங்களை வேறு மார்க்க வாயிலாகப் பெற்றுக் கொள்வதற்குச் சர்வதேச நாடுகளில் உள்ள புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் முயற்சிக்கின்றனர். அதேவேளை தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக எந்தவொரு தரப்பினரையும் ஏற்றுக் கொள்ள முடியாது. இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து சகல கட்சிகளுடனும் பேச்சுக்களை நடத்துவோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமல்லாது அனைவருடனும் பேச்சுக்கள் நடத்தப்படும் என்று, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்த்தன. அரசாங்கத்தின் சார்பில் மீண்டும் ஒரு முறை வலியுறுத்திக் கூறியுள்ளார். (மேலும்....)

வைகாசி 31, 2011

மோதல் காரணமாக கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய நாளை மூடப்பட்டிருக்கும்

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் இன்று மேற்கொண்ட ஆர்பாட்டத்தில் பொலிஸாருக்கும் ஆர்பாட்டக் காரர்களுக்கும் இடையே இடம்பெற்றது. இதன் காரணமாக கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் நாளை மூடப்பட்டிருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இம் மோதலில் பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவர் மற்றும் மேலதிக பொலிஸ் அதிகாரி ஒருவர் உள்ளிட்ட 9 பொலிஸார் காயமடைந்துள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். தனியார் ஓய்வூதிய சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் இன்றுகாலை பாரிய ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதன்போது ஆர்பாட்டக் காரர்களை விரட்டியடிக்க பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் செய்ததை அடுத்து பொலிஸாருக்கும் ஆர்பாட்டக் காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பபட்டுள்ளது. மோதலில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

வைகாசி 31, 2011

உணவு உற்பத்தியில் பாதிப்பைத் தவிர்க்க

சிட்டுக் குருவிகளுக்கு கூடுகளை செய்து கொடுங்கள்       

60 கோடி கையடக்க தொலைபேசிகள் உள்ளன. இதற்காக 5 இலட்சம் கோபு ரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஏற்படும் மைக்ரோ வொயிஸ் அதிர் வால் 30 சதவீத சிட்டுக்குருவிகள் அழிந்து விட்டன. சிட்டுக்குருவி, தேனீ உள்ளிட்டவை அழிந்து கொண்டே வருவதால், அயல் மகரந்த சேர்க்கை குறைந்து வருகிறது. இதனால் உணவு உற்பத்தி குறைந்து வருகிறது. வேளாண்மைக்கு பயன்படுத்தப்படும் இரசாயன பூச்சிக்கொல்லி மருந்து களும், சிட்டுக்குருவிகளுக்கு விஷமாக மாறி, அவைகள் உயிரிழக்க நேரிடுகிறது. தொடர்ந்து கட்டப்படும் கொங்கிரீட் வீடுகளால் சிட்டுக்குருவி களுக்கு கூடு கட்டுவதற்கு போதிய இட வசதி இல்லாததாலும் அவற்றின் இருப்பிடத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிட்டுக்குருவிகளை பாதுகாத்து அவற்றின் எண்ணிக்கையை பெருக்க மரத்தாலோ, மூங்கிலாலோ அல்லது மண் கலசங்கள் மூலமாகவே சிட்டுக் குருவிகளின் கூடுகளை செய்து ஜன்னல் அல்லது நிழல் தட்டி போன்ற இடங்களில் தொங்கவிட வேண்டும்.

வைகாசி 31, 2011

கனிமொழி ஜாமீன் மனு,  தீர்ப்பு நிறுத்தி வைப்பு

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள திமுக எம்.பி., கனிமொழி யின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நிறுத்தி வைப்பதாக தில்லி உயர்நீதிமன்றம் திங்களன்று தெரிவித்தது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட கனி மொழி, இவ்வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதி மன்றம் ஜாமீன் அளிக்க மறுத்ததைத் தொடர்ந்து மத்திய குற்றப் புலனாய்வுக் கழக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில், ஜாமீன் மறுக்கப்பட்டதை எதிர்த்தும், தனக்கு ஜாமீன் அளிக்க உத்தரவிடக்கோரியும் கனிமொழி, தில்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையை மே 30ம் தேதிக்கு தில்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்திருந்தது. (மேலும்....)

வைகாசி 31, 2011

லெபனானின் எல்லைக்குள் புகுந்து ஐ.நா.வின் தீர் மான விதிகளை இஸ்ரேல் மீறியுள்ளது

இஸ்ரேல் ராணு வத்திற்குச் சொந்தமான ஆளில்லா விமானம், லெபனா னின் அல் நாகுரா என்ற கிராமத்தின்மீது பறந்தவாறு லெபனானின் எல்லைக்குள் புகுந்தது. சுமார் 35 நிமி டங்கள் லெபனானின் வானில் அது பறந்து கொண் டிருந்தது. உளவுவேலை பார்ப்பதே அந்த விமானத் தின் நோக்கம் என்று லெபனான் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இருநாடு களின் தடைகள் மற்றும் பொய்ப்பிரச்சாரங்களை மீறி ஒன்றுபட்ட அரசை உருவாக்குவதில் பாலஸ்தீனத் தைச் சேர்ந்த பதா மற்றும் ஹமாஸ் அமைப்புகள் முன் னேறியுள்ளன. ஜூன் ஆறாம் தேதிக்குள் எத்தகைய அரசை அமைப்பது என்பது முடிவாகிவிடும் என்று இரு தரப்பையும் சேர்ந்த தலைவர்கள் தெரிவித்துள் ளனர். யார், யார் அமைச்சர்கள் என்பதை ஒரு கூட்டுக் குழு ஆய்வு செய்து வருகிறது.

வைகாசி 31, 2011

வடக்கில் தமிழ் பிள்ளைகள் சிங்கள மொழியை கற்பதைப் போல தென் இலங்கையில் சிங்கள பிள்ளைகள் தமிழ் மொழியைக் கற்பார்கள்

 

வடக்கில் தமிழ் பிள்ளைகள் சிங்கள மொழியை கற்பதைப் போல தென் இலங்கையில் சிங்கள பிள்ளைகள் தமிழ் மொழியைக் கற்பார்கள் என நான் எதிர்பார்க்கின்றேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். வடக்கு பாடசாலைகளில் சிங்கள மொழியைக் கற்றுக் கொண்ட தமிழ் மாணவிகளும் தமிழ் ஆசிரியர்களும் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்த போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சிங்கள பிள்ளைகளுக்கு தமிழ் மொழியையும் தமிழ் பிள்ளைகளுக்கு சிங்கள மொழியையும் கற்பிக்க வேண்டும் என 1970ல் நாம் பாராளுமன்றத்தில் கொண்டு வந்த பிரேரணை அன்று நடைமுறைப்படுத்தப்பட்டிருக்குமானால் எம்மிடையே பரஸ்பர புரிந்துணர்வு மேலும் வளர்வதற்கு வாய்ப்பு கிட்டியிருக்கும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

வைகாசி 31, 2011

சர்வதேச அளவில் அணுசக்தித்துறை மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் முடிவை ஜெர்மனி அரசு எடுத்திருக்கிறது

சர்வதேச அளவில் அணுசக்தித்துறை மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் முடிவை ஜெர்மனி அரசு எடுத்திருக்கிறது. 2022 ஆம் ஆண்டுக்குள் அனைத்து அணுஉலைகளையும் இழுத்து மூடுவதாக அந்நாட் டின் சுற்றுச்சூழல் அமைச்சர் நார்பெர்ட் ரோட்ஜென் அறிவித்துள்ளார். அணுசக்தியைக் கைவிடும் முதல் தொழில்மய நாடுகளில் ஒன்றாக ஜெர்மனிதான் இருக்கப்போகிறது.

வைகாசி 31, 2011

உத்தேச ஓய்வூதியத் திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த ஸ்ரீ.ல.சுதந்திர கட்சி தீர்மானம்

இலங்கையிலுள்ள சகல அரசியல் கட்சிகளுடனும், தொழிற்சங்கங்களுடனும் கலந்துரையாடி மிகவும் பயன்மிக்க முறையில் சமர்ப்பிக்கும் வரையில், உத்தேச ஓய்வூதியச் சட்டமூலத்தை இடைநிறுத்த வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் நேற்று (30) மாலை அலரி மாளிகையில் ஒன்றுகூடிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இத்தீர்மானத்தை எடுத்துள்ளது. இதன் பிரகாரம் உத்தேச சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் செயற்பாடானது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஆளும் கட்சி பாராளுமன்றக் குழுக் கூட்டத்தின் போது இதுபற்றி கலந்துரையாடுவதற்கும், சுதந்திர வர்த்தக வலயத்தின் நடவடிக்கைகளை செயலிழக்கச் செய்வதற்காக சில தீய சக்திகளை நிபந்தனையற்ற முறையில் தோல்வியடையச் செய்து அனைத்து தொழிற்சாலைகளையும் மற்றும் அதன் ஊழியர்களின் உரிமைக ளையும் பாதுகாப்பதற்கான முக்கியத்துவம் பற்றியும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

வைகாசி 31, 2011

ஸ்பெயின் அரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள்

ஸ்பெயின் அரசின் பொருளாதாரக் கொள்கை களை எதிர்த்து தலைநகர் மாட்ரிட்டின் மையச்சதுக்கத் தில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் கடந்த 15 நாட்களாகத் தொடர்கின்றன. அப்பகுதியில் முகா மிட்டுள்ள ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர முடிவெடுத்துள் ளார்கள். பார்சிலோனாவிற்கு இந்தப் போராட்டம் பரவி யுள்ளதால், அரசின் மீது நிர்ப்பந்தம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வைகாசி 31, 2011

பாதிக்கப்பட்டோருக்கு நல்லிணக்க ஆணைக்குழு மூலம் நியாயமான தீர்வு கிடைக்கும்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க உரை

  • ஒரு நாட்டின் செயற்பாட்டை அரசுடன் இணைந்தே ஐ.நா சபை ஆராய்வது அவசியம்

  • புலம் பெயர்ந்த தமிழர்களை வடக்கு, கிழக்கு அபிவிருத்தியில் முதலீடு செய்ய அரசு அழைப்பு

  • உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதில் அரசாங்கம் முன்னுரிம

யுத்தம் முடிவடைந்த பின்னர் அரசாங்கம் சுமார் இரண்டு இலட்சத்து 90 ஆயிரம் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்கே முன்னுரிமை வழங்கி துரிதமாக செயற்பட்டது. (மேலும்....)

வைகாசி 31, 2011

தி. மு. க. ஆட்சியில் சகல துறைகளிலும் ஊழல்; விசாரணை நடத்தும்படி ஜெயலலிதா உத்தரவு

பொதுப்பணித்துறை மூலம் மணல் நேரடியாக விற்பனை செய்ய உள்ளதால், ஒரு வாரத்தில் மணல் விலை குறையும் என பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம் தெரிவித்தார். ஈரோடு வந்த அவர், எம். ஜி. ஆர். சிலைக்கு மாலை அணிவித்ததன் பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- கடந்த தி. மு. க. ஆட்சியில் அனைத்த துறைகளிலும் ஊழுல் நடந்துள்ளது. அதன் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிள்ளார். என் துறையில் ஆண்டு ஒன்றுக்கு 12 இலட்சம் டொன் மணல் மட்டுமே எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் முறைகேடு நடந்துள்ளது. (மேலும்....)

வைகாசி 31, 2011

14 சிவிலியன்கள் கொலை

அமெரிக்க படைக்கு ஆப்கான் ஜனாதிபதி இறுதி எச்சரிக்கை

அமெரிக்க படைக்கு கடைசி எச்சரிக்கை விடுப்பதாக ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கர்சாயி அறிவித்துள்ளார். அமெரிக்கப் படையின் வான்தாக்குதலில் இரண்டு பெண்கள், 14 ஆப்கான் சிறுவர்கள் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து ஆப்கான் ஜனாதிபதி வெளியிட்ட கண்டன அறிக்கையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. “அமெரிக்க, நேட்டோ படைகளுக்கு மீண்டும் மீண்டும் கூறுகிறேன், உங்கள் தேவையற்ற தாக்குதலால் ஆப்கான் பொது மக்களே கொல்லப்படுகிறார்கள். இது மிகப்பெரிய தவறாகும். இந்தத் தாக்குதல்களால் மனித விழுமியங்களே மீறப்படுகிறது” என்று ஆப்கான் ஜனாதிபதியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. (மேலும்....)

வைகாசி 31, 2011

 

யுத்த தோல்வியினால் நொந்துள்ள சில தமிழ் மக்களை அன்பின் மூலம் சிங்களவர் வென்றெடுக்க வேண்டும்
 

இது, மக்கள் அனைவருக்கும் கிடைத்த இரண்டாவது சுதந்திரம் என்ற உணர்வுடன் நாம் பெருமைப்பட வேண்டும் ஒரு நாடு யுத்தத்தில் வெற்றியடைவதற்கு, நாட்டு மக்கள் அனைவரின் ஒத்துழைப்பே பிரதான காரணமாகும். இதனால்தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்த வெற்றி என்னுடையதல்ல என்று எந்நேரமும் கூறுவதுண்டு. ஆயினும், சிலர் நாங்கள்தான் இந்த யுத்தத்தில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தோம் என்று ஆடம்பரமாகப் பேசுவதில் தன்னிச்சையான இன்பம் காண்கின்றனர். இந்த வெற்றிக்கு நானே பொறுப்பு, நான்தான் திட்டமிட்டு இந்த வெற்றியை ஏற்படுத்தினேன் என்று பிரபாகரனின் தோளைக் கட்டி அந்த மனிதனுடைய வலுவை புரிந்துகொண்டவர்கள் போன்று சிலர் தம்பட்டமடிப்பார்கள்.(மேலும்....)

 

வைகாசி 31, 2011

12 ஆண்டுகளாக நடந்த சர்வதேச விண்வெளி மைய கட்டுமான பணி முடிந்தது!

கடந்த 12 ஆண்டுகளாக நடந்து வந்த சர்வதேச விண்வெளி மையத்தின் கட்டுமான பணி இறுதி கட்டத்தை எட்டியது. விண்வெளி ஆய்வுக்காக பூமிக்கும் மேலே 355 கி.மீ. தொலைவில் சர்வதேச விண்வெளி மையம் கட்டும் முயற்சியில் 16 நாடுகள் ஈடுபட்டன. அமெரிக்க மற்றும் ரஷ்ய விண்கலகங்களில் மாறி மாறி, பொருட்கள் மற்றும் விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட்டு சர்வதேச விண்வெளி மையம் அமைக்கும் பணி நடந்து வந்தது. இந்த பணிகள் கடந்த 12 ஆண்டுகளாக தீவிரமாக நடந்து வந்தது. இதுவரை 4 இலட்சத்து 55 ஆயிரம் கிலோ எடையுள்ள வன் பொருட்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இறுதி கட்டமாக 15 மீற்றர் நீளமுள்ள ரோபோ கிரேன் பொருத்தும் பணியை எண்டவர் விண்கலத்தில் சென்ற விண்வெளி வீரர்கள் பின்கி மற்றும் சேமிடோப் ஆகியோர் முடித்தனர். (மேலும்....)

வைகாசி 30, 2011

பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் போராட ஆரம்பித்துவிட்டார்கள்??

சாம்பர் எங்களது இடம்! எங்களுக்கு எங்களது இடம் வேண்டும்!!’

ஐந்து வருடங்களாகக் கேட்கும் அவர்களது வேண்டுகோளானது செவிட்டு யானைகளிடத்தில் வீணை வாசிப்பது போல ஆகியமையால் அவர்கள் தமது உரிமைகளுக்காக வீதியிலிறங்கத் தீர்மானித்திருக்கிறார்கள். சேருநுவர – திருகோணமலை வீதியில் முகாமுக்கு முன்னே வந்து நின்று கிளிவெட்டி இடம்பெயர் முகாம் மக்கள் தங்களது போராட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். இவ்வளவு காலமும் அடங்கிப் போயிருந்த மக்கள் போராட்ட அட்டைகளை உயர்த்தியபடி கோஷமெழுப்புகிறார்கள். ‘சாம்பூர் எங்களது இடம்! எங்களுக்கு எங்களது இடம் வேண்டும்!!’ அந்தப் பாடசாலையில் நாங்கள் சந்தித்த சிறு குழந்தையின் கையிலும் ஒரு போராட்ட அட்டை இருந்தது. கிளிவெட்டி முகாமானது நாளை பற்றியெரியக் கூடிய மக்கள் போராட்டத்தின் முதல் வித்தோடு திரும்பவும் இரவின் இருளில் மூழ்கியது.(மேலும்...)

வைகாசி 30, 2011

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவர் இனந்தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் நாளிதழினது அலுவலகச் செய்தியாளரான கவிதரன் என்பவரே அவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயைச் சேர்ந்த குடும்பஸ்தரான கவிதரன் காலை வழமை போன்று அலுவலகம் செல்லும் நோக்கில் யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது யாழ். இந்துக் கல்லூரிக்கு அருகில்  ஐந்து நபர்களைக் கொண்ட குழுவொன்று அவரைத் தாக்கியுள்ளது. (மேலும்...)

வைகாசி 30, 2011

‘பாலஸ்தீனமே பெரிது’

இஸ்ரேலையும் அமெரிக்காவையும் எரிச்சலடையச் செய்யும் நிகழ்வுகள் பாலஸ் தீனத்தில் நடந்துவருகின்றன. காசா பகுதியை தனது பிரதேசமாகவும், மேற்கு கரைப்பகுதியை தனது பிரதேசமாகவும் கருதி ஹமாஸ் இயக்க மும், பதா இயக்கமும் தனித்தனியாக ஆளுமை செலுத்திவந்த பாலஸ்தீனத்தில் தற்போது இவை இரண்டும் கைகோர்த்துள்ளன ; ஒற்றுமைகீதம் இசைக்கத் துவங்கியுள்ளன. பாலஸ்தீன மக்களின் இரண்டுபெரும் அமைப்புகளுக்கிடையே முரண்பாடும், மோத லும் ஏற்பட்டதை பயன்படுத்திக்கொண்ட இஸ் ரேல், காசாவை கொடிய குண்டுகளால் துளைத் தெடுத்தது. அப்பாவி பாலஸ்தீனர்களைக் கொன்றுகுவித்தது. கடந்த சுமார் 4 ஆண்டுகாலமாக நிலைமை மோசமாகவே சென்றுகொண்டிருந்த பாலஸ் தீனத்தில், எகிப்து உள்பட அரபு நாடுகளில் ஏற் பட்ட பிரம்மாண்டமான மக்கள் எழுச்சி, ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றை ஏற்படுத்தியுள்ளது. (மேலும்...)

வைகாசி 30, 2011

இன ஒற்றுமை முயற்சிகளை மேற்குலகம் குழப்பிவருகிறது

எமது அரசாங்கத்தால் இனங்களிடையே கட்டியெழுப்பப்பட்டுவரும் சமாதான மான ஒற்றுமை முயற்சிகளை மேற்குலகம் குழப்பிவருகின்றது. இதன் மூலம், எமது பொருளாதார வளத்தை சுரண்டுவதற்கு மேற்குலக சக்திகள் முயற்சிக்கின்றன என புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார். வடக்கு தெற்கு என்ற பேதமின்றி நாங்கள் அனைவரும் சகோதர ஒற்றுமையுடன் வாழ்கின்ற போதும் அதனைக் குழப்புவதற்கும் மேற்குலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் முயற்சிக்கின்றார்கள். அவ்வாறான முயற்சிகளை நாம் முறியடிப்பதற்கு விழிப்படைய வேண்டும். அதற்கு எதிராகக் குரல்கொடுக்க வேண்டும் என்பதை இந்த இடத்தில் ஆணித்தரமாகக் கூறிக்கொள்கின்றேன் என்றார். (மேலும்...)

வைகாசி 30, 2011

ஐ.நா. மனித உரிமை கவுன்சில் 17வது அமர்வு இன்று ஆரம்பம்

ஜெனீவாவில் இன்று ஆரம்பமா கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலின் 17வது அமர்வில் பெருந்தோட்டத்துறை மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இன்று உரையாற்றுகிறார். இதன் பின்னர் ஐ. நா.வின் மனித உரி மைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை யும் அமைச்சர் தலைமையிலான குழுவும் சந்திக்கவுள்ளது. அத்துடன், ஐ. நா.வின் ஆசிய பிராந்தியப் பிரதிநிதிகள், ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளைச் சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்த உண்மைத் தன்மையை விளக்கமளிக்கவிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். (மேலும்...)

வைகாசி 30, 2011

ஆப்கனில் அமெரிக்கா கொடூர தாக்குதல்  12 குழந்தைகள் உள்பட 52 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையி லான நேட்டோ படையி னர் நடத்திய கொடூரத் தாக்குதலில் 52 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் 14 பேர் பச்சி ளம் குழந்தைகளும் பெண் களும் ஆவர். பின்லேடன் கொல்லப் பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற பகுதியிலும் ஆப்கானிஸ்தானின் மலைப்பகுதிகளிலும் அமெரிக்கப்படையினர் தாக்குதல்களை தீவிரப்படுத் தியுள்ளனர்.  பின்லேடனை தேடுவ தாகக் கூறி ஏற்கெனவே ஆப்கனின் மலைப்பகுதிக ளில் நாள்தோறும் குண்டு வீச்சுக்கள் நடத்தி ஆயிரக் கணக்கானோரை கொன்று குவித்த அமெரிக்கா, தற் போது மலைப்பகுதிகளில் பதுங்கியுள்ள பயங்கரவாதி களை அழிக்கிறோம் என்ற பெயரில் தொடர்ந்து தனது குண்டுவீச்சு தாக்குதலை நடத்தி வருகிறது. (மேலும்...)

வைகாசி 30, 2011

இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் - வைகோ _

இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுடன் அதுதொடர்பில் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானமொன்று நிறைவேற்றப்படவேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்த அந்நாட்டின் அரசை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். போர்க் குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கவேண்டும் என்ற குரல் உலகெங்கும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் விரைவில் கூடவுள்ள தமிழக சட்டப்பேரவையில் இலங்கை அரசினை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார். ஆயிரக்கணக்கான தமிழ் சிங்கள் முஸ்லீம் மக்களை கொலை செய்த புலிகளையும் சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்று வைகோ கோரிக்கை முன்வைப்பாரா என்று அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

வைகாசி 30, 2011

 

உலகின் மிகப்பெரிய உர்மியா ஏரி முற்றிலுமாக உறைந்து விடும் அபாயம்

உலகின் மூன்றாவது மிகப் பெரிய ஏரியான ஈரானின் ‘உர் மியா’ உப்பு ஏரி முதன் முறையாக முழுவதுமாக உறைந்துள்ளது. இதனால் ஏரி உள்ள பகுதியில் மிகப் பெரிய அளவில் சுற்றுச் சூழல் மாற்றம் உருவாகக் கூடும் என நிபுணர்கள் அச்சம் தெரிவி த்துள்ளனர். ஈரானின் மேற்கு அசர்பைஜான் மற்றும் கிழக்கு அசர்பைஜான் மாகாணங்களுக்கிடையில் 140 கி. மீ. நீளமும், 55 கி. மீ. அகலமும், 52 அடி ஆழமும் கொண்ட ஏரி உர்மியா ஏரி. மத்திய கிழக்கு பகுதியில் இது தான் மிகப்பெரிய ஏரி. உலகளவில் இது மூன்றாவது மிகப்பெரிய ஏரி. இதில் உள்ள தண்ணீரில் அதிகள வில் உப்பு இருப்பதால் உப்பு ஏரி என்று அழைக்கப்படுகிறது. சமீபத் தில் இந்த ஏரி முதன் முறையாக முழுவதுமாக உறைந்து விட்டது. இந்த ஏரியை சுற்றி நடக்கும் ஆக்கி ரமிப்புகள், ஏரிக்குள் விடப்படும் நச்சு கழிவுநீர் மற்றும் தவறான பாசனக் கொள்கைகள் அருகில் உள்ள ஆறுகளில் கட்டப்படும் பிர மாண்ட அணைகள், அப்பகுதியில் நிலவும் பஞ்சம் போன்றவற்றால் ஏரி தற்போது முன்பிருந்ததைவிட 60 சதவீதமாக சுருங்கி விட்டது.

வைகாசி 30, 2011

 

பாகிஸ்தானையும் அதன் அணு ஆயுதங்களையும் கைப்பற்றுவதே இலக்கு

பாகிஸ்தானையும், அதன் வசம் உள்ள அணு ஆயுதங்களையும் கைப்பற்றுவதே எங்களது நோக்கம் என்று தலிபான் அமைப்பு கூறியுள்ளது. பாகிஸ்தானைத் தாக்குவது எங்களது திட்டமல்ல. மாறாக அதை அப்படியே கைப்பற்றவே விரும்புகிறோம். அதன் வசம் உள்ள அணு ஆயுதங்களை அப்படியே எங்கள் வசம் கொண்டு வர திட்டமிட்டு வருகிறோம். பாகிஸ்தான் மட்டுமே அணு ஆயுதங்களை வைத்துள்ள ஒரே முஸ்லிம் நாடு. அந்த நாட்டை நாங்கள் அழிய விட மாட்டோம். மாறாக அந்த நாட்டையும், அதன் அணு ஆயுதங்களையும் சேதம் இல்லாமல் கைப்பற்றி எங்கள் வசம் கொண்டு வருவோம். பாகிஸ்தானை நாங்கள் அழிக்கப் போவதாக கூறி பாகிஸ்தானை மிரட்டிப் பணிய வைத்து எங்களுக்கு எதிராக செயல்பட வைக்க அமெரிக்கா முயலுகிறது. ஆனால் நாங்கள்தான் பாகிஸ்தானை உண்மையில் காப்பாற்றத் துடிப்பவர்கள். அணு குண்டுகளை கையில் வைத்திருந்தும், அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பணிவது மிகப் பெரிய கேவலம். அதை பாகிஸ்தான் அரசு செய்து கொண்டிருக்கிறது என்றார் அவர்.

வைகாசி 30, 2011

 

பலஸ்தீன் தனி நாடு அங்கீகாரம்  ஐ.நா விடம் கோர அரபுலீக் தீர்மானம்

பலஸ்தீனை தனி அரசாக அங்கீகாரம் வழங்குமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் கோர அரபு லீக் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. கட்டாரில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரபு லீக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 1967 எல்லையுடன் பலஸ்தீனை இறையாண்மையுள்ள தனி நாடாக அங்கீகரிக்கும் படி ஐ.நா.விடம் அரபு லீக் கோரவுள்ளதாக மேற்படி தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் இஸ்ரேல் தயாராகும்வரை மத்தியகிழக்கு சமாதானப் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதில்லை என இந்த கூட்டத்தில் தீர்மானிக் கப்பட்டுள்ளது. இதில் அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி கூறிய, ‘1967 எல்லையின்படி மத்திய கிழக்கு சமாதான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட வேண்டும்” என்ற கூற்றுக் குறித்தும் ஆராயப்பட்டது. ஒபாமாவின் இந்த கருத்தை இஸ்ரேல் பிரதமர் நெடன் யாஹு மறுத்தார். இதற்கு அரபு லீக் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. நெடன்யாஹுவின் பேச்சு இஸ் ரேல் உண்மையான சாமாதான த்தை விரும்பவில்லை என்பது வெளிப்படுகிறது என அரபு லீக் கூட்டத்தில் பங்கேற்ற கட்டார் பிரதமர் ஷேக் ஹமாத் பின் ஜெஸ் ஸம் அல்தானி தெரிவித்தார்.

வைகாசி 30, 2011

சாகும்வரை உண்ணாவிரதத்துக்கு காந்தியவாதி ஹஸாரே மீண்டும் ஆயத்தம்

 ‘ரிமோட் கன்ட்ரோல்’ போல செயல்பட்டு வரும் சோனியாகாந்தி தான் பிரச்சினைகளை உருவாக்கி வருகிறார் என்று காந்தியவாதியான அண்ணா ஹஸாரே குற்றம்சாட்டினார். ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பு சார்பில் பெங்களூரில் சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் பங்கேற்று பேசும்போது அவர் கூறியது: பிரதமர் மன்மோகன்சிங் நல்ல மனிதர் ஆனால் ‘ரிமோட் கன்ட்ரோல்’ போல் இருந்து கொண்டு அவரை இயக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திதான் பிரச்சினைகளை உருவாக்கி வருகிறார். ஆக. 16ம் திகதிக்குள் லோக்பால் சட்டமூலம் நிறைவேற்றப்படாவிட்டால், புதுடில்லியில் உள்ள ஜந்தர்மந்தரில் மீண்டும் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவேன். இதற்காக கர்நாடக மக்கள் சிறைநிரப்பும் போராட்டத்தை நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். ஊழலுக்கு எதிராக நான் பிரசாரம் செய்துவருவதால், இதுவரை 6 அமைச்சர்கள் ராஜிநாமா செய்துள்ளனர். இந்த 6 பேரும் என்னை பழிவாங்க துடிக்கிறார்கள் ஆனால், கறைப்படியாதவன் என்பதால் என்னை அவர்களால் நெருங்க முடியவில்லை என்று தெரிவித்தார்.

வைகாசி 29, 2011

நிபுணர் குழுவின் அடுத்த கட்ட நடவடிக்கை செயலாளர் நாயகம் பான் கீ மூன் வசமே

இலங்கை விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கை சம்பந்தமான அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனே தீர்மானிக்க வேண்டுமென ஐ.நா. பொதுச் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். மேற்குறித்த அறிக்கை பற்றி "இன்னர் சிற்றி பிரஸ்' ஊடகவியலாளர் ஒருவர், ஐக்கிய நாடுகள் பொதுச் சபைத் தலைவரான ஜோசப் டெய்ஸிடம் வினவிய போதே "இது செயலாளர் நாயகத்தினால் கையாளப்பட வேண்டிய விடயம்' என அவர் பதிலளித்துள்ளார். ___

வைகாசி 29, 2011

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குடாநாட்டில் அதிகரிப்பதாக விசனம்

யாழ். குடாநாட்டினில் என்றுமில்லாத அளவில் பெண்களுக்கெதிராக அதிகரிக்கும், பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பினில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக குடாநாட்டிற்கு வெளியிலிருந்து வரும். முன்பின் அறிமுகமற்ற நபர்கள் தொடர்பினில் மிக எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கோரப்பட்டுள்ளது. பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் தனக்கும் முறைப்பாடுகள் தொடர்ந்தும் கிடைத்துக் கொண்டிருப்பதாக யாழ் அரச அதிபரும் சுட்டிக்காட்டியுள்ளார். கோவைகள் முறைப்பாடுகளால் நிரம்பி வழிகின்றன. (மேலும்....)

வைகாசி 29, 2011

நிபந்தனை அடிப்படையில் நெடியவனுக்குப் பிணை

விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் நெடியவன் எனப்படும் சிவரூபனுக்கு நோர்வே நீதிமன்றம் நிபந்தனை அடிப்படையிலான பிணை வழங்கியுள்ளது. விடுதலைப் புலிகளின் ஐரோப்பிய நிதி திரட்டல் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் நெதர்லாந்து விசாரணையாளர்கள் அண்மையில் அதன் ஒரு கட்டமாக நோர்வேயிலும் தங்கள் விசாரணைகளை விரிவுபடுத்தியிருந்தனர். அதன் போது நெதர்லாந்து விசாரணையாளர்களின் வேண்டுகோளின் பிரகாரம் நோர்வேயில் வசித்து வந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் சிவரூபன் என்பவர் நோர்வே பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின் நோர்வே பொலிஸாரின் கண்காணிப்புக்கு உட்பட்டு வாழும் நிபந்தனையின் அடிப்படையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி மீண்டும் நீதிமன்ற விசாரணைக்குச் சமுகமளிக்குமாறும் அவருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

வைகாசி 29, 2011

புலம்பெயர் விடுதலைப் புலிகளுக்கு பெரியளவில் ஆற்றல் எதும் இல்லை

புலம்பெயர் விடுதலைப் புலிகளுக்கு சொல்லிக் கொள்ளும்படியான ஆற்றல் எதுவும் இல்லையென்றும் அவர்களை எளிதாக அடக்கிவிட முடியும் என்றும் அமைச்சர் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார். சிங்கள இணையத்தளம் ஒன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியொன்றிலேயே அமைச்சர் விமல் வீரவன்ஸ புலம்பெயர் விடுதலைப் புலிகள் மற்றும் விடுதலைப் புலிகளின் சார்பு நிலை அமைப்புகள் குறித்து மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  புலம்பெயர் நாடுகளில் செயற்படும் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் மிகமிகக் குறைந்த அதிகாரம் மற்றும் ஆற்றல்களையே கொண்டிருப்பதாகவும், அதனையும் படிப்படியாக இல்லாதொழித்து விட முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் அமெரிக்காவின் ஐ.நா. முன்றலில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மிகக்குறைவானவர்களே கலந்து கொண்டனர். அவர்களும் கனடாவில் இருந்தே கொண்டுவரப்பட்டவர்கள்.  இதை பார்க்கும் போது புலம்பெயர் தேசங்களில் விடுதலைப்புலிகளின் சக்தி குறைந்து கொண்டு போவதையே எடுத்துக் காட்டுகின்றது. அதன் காரணமாக அவர்களை இலகுவாக அடக்கி விடலாம் என்பதை உறுதியாகக் கூற முடியும் என்றார். ___

வைகாசி 29, 2011

அல் ஜவாஹிரி, முல்லா ஒமரை ஒழித்துக் கட்ட அமெரிக்கா தீவிரம்  பாகிஸ்தானுக்கு ‘உத்தரவு’

பாகிஸ்தானில் பதுங் கியுள்ள 5 பயங்கர தீவிர வாதிகளின் பட்டியலை அந்த நாட்டிடம் வழங்கி யுள்ள அமெரிக்கா, அவர் கள் இருக்குமிடம் குறித்து தகவல் தருமாறும், அவர் களை ஒழித்துக் கட்ட உட னடியாக நடவடிக்கை எடுக்குமாறும் ‘உத்தரவிட் டுள்ளது.’ பின்லேடனின் கூட் டாளியான அய்மான் அல் ஜவாஹிரி, ஆப்கானிஸ் தான் தலிபான் அமைப்பின் தலைவர் முல்லா ஒமர், கமாண்டர் சிராஜ் ஹக் கானி, லிபியாவின் அல்-கொய்தா தலைவர் அப்தெல் ரஹ்மான், மும்பை தாக்கு தலில் முக்கிய பங்கு வகித்த இலியாஸ் காஷ்மீரி ஆகிய 5 பேரின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற் றுள்ளன. பின்லேடன் கொல்லப் பட்ட பின்னணியில் அமெ ரிக்கா மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் கடந்த 2 வாரங்களாக நடத்தி வந்த ஆலோசனைகளின் போது இந்தப் பட்டியலை அமெ ரிக்கா தந்தது. இந்நிலையில், வெள்ளி யன்று பாகிஸ்தான் வந்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ‘ஹிலாரி கிளிண்டனும் இந்தப் பட்டியலில் உள்ளோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தான் ஜனாதிபதி ஜர்தாரியிடம் வலியுறுத் தினார். இவர்கள் மீது பாகிஸ் தான் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், பாகிஸ் தானுக்குள் நுழைந்து பின் லேடனை சுட்டுக் கொன் றது போல தன்னிச்சையான முடிவை எடுக்க வேண்டி வரும் என்றும் பாகிஸ் தானை அமெரிக்கா பகி ரங்கமாக மிரட்டியுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.

வைகாசி 29, 2011

They call it ‘the voyage of the damned’. But thousands still want to try it

Sri Lankan refugees in India are ready to do anything to escape their camps. Sai Manish finds out why

IN THE 1980s, Sri Lankan Tamils escaped to India from the ravages of a bitter war in the island nation. Now they are fleeing India for a better life in the West, undertaking a mindnumbing 3,000 nautical mile journey into a watery void so perilous that many call it the “voyage of the damned”.“I was hoping to get on the last ship but the agent says the seas are rough and I can go only after the rains are over,” says Manikandan, 28, who stays with his father in one of the largest refugee camps at Mandapam in the coastal district of Ramanthapuram. “I have already paid Rs 20,000 and will pay another Rs 80,000 when I reach Australia. My brother and his wife are there on Christmas Island at the special camp and he will soon be given asylum. I came from Trincomalee four years ago but I can’t spend the rest of my life living on doles and doing odd jobs. I’m a graduate and I deserve better.” (more....)

வைகாசி 29, 2011

டெல்லி கோர்ட்டில் கோபாலபுரம்!

எமோஷனல் கெட்-டு-கெதர்

ழகிரிக்கும் மாறன் சகோதரர்களுக்கும் இடையே நிலவிய மனக் கசப்பு முடிவுக்கு வந்தபோது, 'கண்கள் பனித்தன... இதயம் இனித்தது!’ என மனம் உருகிச் சொன்னார் கருணாநிதி. மீண்டும் மொத்தக் குடும்ப உறவுகளும் ஒன்று கூடும் வைபோகம் பாட்டியாலா நீதிமன்றத்திலும் திகார் சிறைச்சாலையிலும் கடந்த சில நாட்களாக நடந்தது. அதாவது கோபாலபுரமே டெல்லிக்கு இடம் பெயர்ந் தது மாதிரி இருந்தது. அழுகை, ஆதங்கம், கோபம், கூச்சல் என மீடியாக்களின் பார்வைக்கு அப்பால் நடந்த அத்தனை நிகழ்வுகளும் அப்படியே இங்கே...(மேலும்....)

வைகாசி 29, 2011

Devananda is running Jaffna exactly the way the LTTE ran Jaffna says Prof Ratnajeevan Hoole

Although we may or may not agree with everything Hoole says here, it is food for thought, especially with regard to Douglas Devananda and his minions. Hoole blames neither the President nor the Sinhalas. He is not telling Tamils who want to return to Sri Lanka not to do so. Nevertheless he is unhappy with the prevailing situation in the North.  If this situation is allowed to further deteriorate it will undermine the efforts the government is making to build national unity and boost Sri Lanka's global image. By Namini WijedasaOn a personal assurance from President Mahinda Rajapaksa, Prof. Ratnajeevan Hoole, a former vice chancellor of the University of Jaffna, returned to Sri Lanka with his family to serve the country he so loved. His experience since coming back has been “horrible” and has left him sorely disappointed. (more...)

வைகாசி 29, 2011

 

அணு ஆட்டம்!

'வேலை செய்துவிட்டது’ என்று மட்டும் அவர் முணுமுணுத்ததாக அருகே இருந்த, அவர் சகோதரர் ஃபிராங் ஓபன் ஹெய்மர் சொன்னார். பரிசோதனை வெடிப்பு வெற்றி அடைந்ததும் பகவத் கீதையின் சுலோகம்தான் தன் மனத்தில் தோன்றியதாக ஓபன் ஹெய்மர் பின்னர் தெரிவித்தார். 'ஓராயிரம் சூரியன்கள் ஒன்றாய் விரவி விண்ணில் தோன்றினால், அதுதான் பரம்பொருளின் பிரகாசமாக இருக்கும்!’ இந்த மாபெரும் சக்தியைப் பார்த்தபோது இன்னொரு கீதையின் சாரமும் தனக்குள் நினைவு வந்ததாக ஓபன் ஹெய்மர் சொன்னார். அது, 'நான் மரணமாக மாறிவிட்டு இருக்கிறேன்; உலகங்களை உருக்குலையச் செய்பவனாகிவிட்டேன்!(மேலும்....)

வைகாசி 29, 2011

LTTE denies KP’s allegation on Jaya’s life

A statement purportedly originating from the defunct Liberation Tigers of Tamil Eelam (LTTE) has rubbished jailed ex-LTTE leader K Padmanathan's recent claim that the Tamil Tigers had once planned to assassinate Tamil Nadu Chief Minister J Jayalalithaa. "KP's claim in a television interview that LTTE had once planned to assassinate Jayalalithaa was far from the truth and we perceive the act as a ploy to create fissures among Tamils," the statement said on Friday. According to the fourpage statement signed by A Anbarasan, said to be from the LTTE's media wing, and published in their official online mouthpiece www.viduthalaipulikal.net, Sri Lankan Sinhalese government, which has been under tremendous international pressure after the release of the UN panel report on war crimes, has used KP to plant wild allegations on the movement to create fissures among Tamils. (more...)

வைகாசி 29, 2011

Sri Lanka New visa rules

Sri Lanka has decided to suspend the on arrival visa facility for all  countries except Singapore and Maldives with effect from 30th of  September 2010, the Controller General of Immigration and Emigration W.  A. C. Pereratold to media.Mr. Perera said that under the move tourists arriving to Sri Lanka from  nearly 70 countries will be required to obtain visas from the  department of immigration and emigration in Colombo or from the Sri  Lankan missions abroad before their arrival in Sri Lanka. Sri Lanka however is willing to offer visas on arrival to citizens of  any country if those countries also reciprocate in the same manner, Mr.  Perera explained. So far only Singapore and the Maldives offers visas on  arrival for Sri Lankan citizens. Tourism industry officials meanwhile said that the move could affect  the tourism industry in Sri Lanka as there maybe a drop in tourist  arrivals to Sri Lanka.

வைகாசி 28, 2011

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம் (பகுதி 13)

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத் தில் தப்பியவரின் வாக்குமூலம்

சரி இனி எப்படி நம்மை சரணடைய வைத்து மோசம் செய்தனர் என சொல்லுகிறேன்
இறுதி போரின் இறுதி நாட்களில் இந்தியாவுக்கும், நமது தலைமைக்கும் நடந்த பேச்சுக்களில் கலந்து கொண்ட பாதிரியார் காஷ்பார் . போரை நிறுத்த புலிகளிடம் சில நிபந்தனைகளை முன்வைத்தார். எமக்கு 48 மணி நேரத்துக்குள் யுத்தநிறுத்தம் செய்யப்படும் என்று சொல்லப்பட்டது. அதுமட்டுமல்லாது தமிழ் மக்களுக்கு நிரந்தரமான தீர்வு வரும்பொழுது ஆயுதங்களை ஒப்படையுங்கள் என்றும் சொல்லப்பட்டது. இந்த நிபந்தனை விதிபோடு ,
தலைவர் (பிரபாகரன்) சரணடைய வேண்டும் பொட்டு அம்மான் சரணடைய வேண்டும் இன்னும் முக்கிய புலிகள் உறுப்பினர்கள் தம்மிடம் சரணடைய வேண்டும் என்று எந்த நிபந்தனையும் அப்போது விதிக்கப்பட்டது.
(மேலும்....)

வைகாசி 28, 2011

வடக்கில் புற்றுநோய் சிகிச்சை நிலையம் ஒன்றை அமைத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக நிதிதிரட்டும் நோக்குடனான ஒரு நடைப்பயணம்

இலங்கையில் புற்றுநோய் சிகிச்சை வசதிகளை தரமுயர்த்தும் நோக்குடன் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்ற ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான The Colours of Courage Trust எனும் நிதியம் அதே எண்ணங்களைக் கொண்டுள்ள பங்காளர்களுடன் இணைந்து யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான புற்றுநோய் சிகிச்சை நிலையம் ஒன்றை கட்டியெழுப்புவதற்காக 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தொகையைத் திரட்டும் நம்பிக்கையுடன் இலங்கையின் தெற்கிலிருந்து வடக்கிற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது தொடர்பில் அறிவித்துள்ளது. (மேலும்....)

வைகாசி 28, 2011

சாத்தான்கள் ஓதும் வேதத்தால் தமிழ் மக்களுக்கு விமோசனம் இல்லை _

சிங்களத் தலைமைகள் தமிழ்த் தலைமைகளின் விரல்களால் ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் கண்களையே குத்திக் குருடாக்கிய பல சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. பயங்கரவாதச் தடைச் சட்டத்தைத் தயாரித்த ஜே.ஆர். ஜயவர்தன தமிழ் புத்திஜீவிகளை கொண்டு அங்கீகரிக்க வைத்து தமிழ் அரசியல் தலைமைகளின் ஆசீர்வாதத்துடன் நாடாளுமன்றத்தில் அரங்கேற்றி வெற்றி கண்டார். மண்ணுக்குள் தலையைப் புதைத்துக் கொண்டது போன்று பாவனை காட்டி தமது அரசியல் நலன்களுக்காக பேசாமடந்தயாய் இருந்த தமிழ்த் தலைமைத்துவங்களால் தமிழினம் பட்ட இன்னல்கள் பல. தமிழ்த் தேசிய போராட்டத்தையே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் பயங்கரவாத முத்திரை குத்தி அடக்கி ஒடுக்க தமிழ்த் தலைமைத்துவங்களே காரணமாக இருந்துள்ளன. (மேலும்....)

வைகாசி 28, 2011

லெனின் உடல் தொடர்பில் சர்ச்சை நீடிக்கின்றது

கம்யூனிச தலைவர் விளாடிமிர் லெனின் 1924-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் நாள் மரணம் அடைந்தார். இதன் பின்னர் இவரது உடல் ரஷ்யாவின் கிரெம்ளின் நகரில் அமைந்துள்ள செஞ்சதுக்கத்தில் பதப்படுத்தப்பட்ட நிலையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. ரஷ்யாவில் லெனின் உடலைப் புதைப்பது தொடர்பில் முடிவுகள் எடுக்கப்படுவதற்கு முன்னர் பல்வேறு சமூகக் குழுக்களினதும் கருத்துக்கள் பெறப்படவேண்டுமெனவும் இல்லாவிடின் அது கிளர்ச்சிக்கு வழிவகுக்குமெனவும் அந்நாட்டு பழமைவாத கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. (மேலும்....)

வைகாசி 28, 2011

மும்பையில் ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாகத் தரையிறக்கம்      

மும்பை- ஹைதராபாத் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் திடீரென தீவிபத்து அலாரம் ஒலித்ததால் 140 பயணிகளுடன் மும்பையில் அந்த விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. மும்பை விமான நிலையத்தில் இருந்து காலை 5.30 மணிக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் புறப்பட்டது. தீ அலாரம் ஒலித்ததால் 6.05 மணியளவில் மீண்டும் மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. தீ அலாரம் ஒலித்ததையடுத்து 5.58 மணியளவில் முழு அவசரகால அறிவிப்பு வெளியிடப்பட்டதாக மும்பை விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எனினும் தீவிர சோதனைக்குப் பின் தீ எதுவும் ஏற்படவில்லை எனக் கண்டறியப்பட்டதால் 7.08 மணியளவில் அவசரநிலை வாபஸ் பெறப்பட்டது. இதைத் தொடர்ந்து அனைத்து செயல்பாடுகளும் இயல்பு நிலைக்குத் திரும்பியதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

வைகாசி 28, 2011

சிகிச்சைக்காக ரஜினிகாந்த் சிங்கப்பூர் பயணம்

சுவாச தொற்று கார ணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த் இயல்பு நிலையில் இருப்பதாகவும் சிறந்த உடல் ஆரோக்கியத் தை கருத்தில் கொண்டு சிங் கப்பூருக்கு வெள்ளிக்கிழமை சிகிச்சைக்கு செல்வதாகவும் அவரது குடும்பத்தினர் தெரி வித்தனர். கடந்த 4 வாரமாக சென் னை தனியார் மருத்துவம னைகளில் சுவாச தொற்றுக் காக சிகிச்சை பெற்று வந்த ரஜினி காந்த் மேலும் நல்ல உடல் ஆரோக்கியத்தைப் பெற, சிங்கப்பூர் செல்கிறார். இந்த தகவலை அவரது மனைவி லதா, வெள்ளிக்கிழ மை தெரிவித்தார். ரஜினி காந்த் மேலும் பொலிவுடன் திகழ்வதற்காக சிங்கப்பூர் செல்கிறார். அவரது உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்குகிறது. அவர், இயல்பான நிலையிலேயே உள்ளார். அவரது உடல் நிலை குறித்து பரபரப்பு ஏற் படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.  ரஜினிகாந்த் மகள் ஐஸ் வர்யா கூறுகையில், ரஜினி காந்த் இதர பயணிகளைப் போலவே விமானத்தில் சிங் கப்பூர் செல்கிறார். அவரது உடல்நிலை நன்றாகவே உள்ளது என்றார்.

வைகாசி 28, 2011

கிளிநொச்சியில் ஜே.வி.பி உறுப்பினர்கள் ஏழு பேர் கைது

ஜே.வி.பி உறுப்பினர் ஏழு பேர் நேற்று இரவு 8 மணியளவில் கிளிநொச்சியில் வைத்து இராணுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இவர்கள் தொடர்ந்தும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 'தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்!, சரத்பொன்சேக்காவை உடனடியாக விடுதலைச் செய்!, அவசரகாலச் சட்டத்தை உடனடியாக இரத்து செய!;, மற்றும் ஊடக சுதந்திரத்தைப் நிலைநாட்டு' போன்ற வசனங்கள் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகளை ஒட்டும் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். (மேலும்....)

வைகாசி 28, 2011

வட, தென் சூடான் எல்லையில் பதற்றம்

சில பகுதிகளை உரிமை கோருவதில் சர்ச்சை

சூடான் இரண்டாக பிளவுபட்ட பின்னரும் எல்லையிலுள்ள பிரதேசங்களை உரிமை கொண்டாடுவதில் மோதல்கள் தலைதூக்கியுள்ளன. கார்டூமை தலைமையாகக் கொண்டுள்ள வட சூடான் தென் சூடானின் அபெய் பிரதேசத்தை ஆக்கிரமிக்கும் வகையில் நடந்துள்ளது. வட சூடான் இராணுவம் அபெய், மிசெரியா போன்ற பிரதேசங்களில் நிலை கொண்டுள்ளதால் மீண்டும் பதற்றம், சந்தேகம் எழுந்துள்ளன. தென் சூடான் ஜனாதிபதி சல் வார் கிர், வட சூடான் ஜனாதிபதி ஒமரல் பசீர் ஆகியோரின் கவனத் துக்கு இவ்விடயத்தைக் கொண்டு வர ஆபிரிக்க யூனியன் ஆலோசித் துள்ளது. அபெய், மிசெரியா பிரதேசங்கள் எப்பகுதிக்குச் செல்ல வேண்டும் என்பதற்கான சர்வஜன வாக்கெடுப் புக்கள் அடுத்த வருடம் ஜனவரியில் நடைபெற ஏற்பாடான போதும் சில காரணங்களால் இது பின்போ டப்பட்டுள்ளது. வட சூடானிலுள்ள அரபு பழங் குடியினர் தங்களது கால்நடைகளுக் குத் தேவையான மேய்ச்சல் புற்கள், தண்ணீரைப் பெறுவதற்கு தென் சூடான் வசமுள்ள அபெய் ஆற்றங் கரைக்கே வருகின்றனர். இதை தென் சூடானியர் தடுக்கின்றனர். இதனாலேயே இம் முரண்பாடுகள் வெடித்துள்ளன. இதையடுத்து வட சூடான் இப் பகுதியை ஆக்கிரமித்துள்ளது.

வைகாசி 28, 2011

வடக்கு கிழக்கு மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த பின்னிற்கப் போவதில்லை - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

  • நாட்டு மக்களின் அனுமதியின்றி வெளிநாட்டு சக்திகளின் தலையீடுகளுக்கு இடமில்லை.

  • பிரிவினைவாதிகள், இனவாதிகள் கேட்கின்றவற்றை பெற்றுக்கொடுக்க நாம் தயாராக இல்லை.

வடக்கு, கிழக்கு மக்களின் ஜனநாயக உரிமைகளையும், மனித உரிமைகளையும் உறுதிப்படுத்த ஒரு நிமிடம் கூட தயங்கமாட்டோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். நேற்றையதினம் காலிமுகத் திடலில் நடைபெற்ற படைவீரர்களின் வெற்றிவிழா வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதமர் டி.எம்.ஜயரட்ண, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, சிரேஷ்ட அமைச்சர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர். (மேலும்....)

வைகாசி 28, 2011

 

ஜப்பான் பிரதமருக்கெதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

ஜப்பான் பிரதமர் நஓட்டோ கானுக்கெதிராக எதிர்க் கட்சிகள் நம்பிக் கையில்ல தீர்மானம் கொண்டுவரவுள்ளது. ஜப்பானில் ஏற்பட்ட புகம்பம், சூறாவளி போன்ற இயற்கை அழிவுகளின் பின்னர் நாட்டை கட்டி எழுப்பும் பணியில் பிரதமர் போதியளவு கரிசனை செலுத்தவில்லையென்ற பேரில் இந்த நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது. புக்ஷிமா அணு உலைக ளில் வெளிவரும் கதிர் வீச்சுக்களால் ஏற்படவுள்ள மிக மோசமான விளைவு களை சமாளிக்க பிரதமர் நஓட்டோ கான் தவறி விட்டார். எனவே அவரது அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டுமென வியாழக்கிழமை கூடிய எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. பிரதமருக்கெதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டால் ஏனைய கட்சிகளின் ஆதரவும் கிடைக்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது. பிரதமர் நஓட்டோ கானின் ஜனநாயக கட்சிக்குள்ளும் எதிர்ப் புள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் ஆளும் கட்சியிலிருந்து 75 பேர் ஆதரவளிக்கலாம் என எதிர்க்கட்சிகள் நம்பு கின்றன. ஆளும் கட்சியிலிருந்து 75 எம்.பிக்கள் ஆதரவளித்தால் நம்பிக்கையில்ல தீர்மானம் வெற்றியடைய வாய்ப்புள்ளது.

வைகாசி 28, 2011

Sri Lanka Northern Province GDP Grew by 14.2%

A fast recovery of economic activities is taking place in the Northern Province of Sri Lanka since the end of the conflict in May 2009. In 2009, the Northern Province recorded a provincial nominal GDPgrowth rate of 14.2 per cent, the second highest in Sri Lanka. Sri Lanka's northern and eastern provinces were badly affected by the three decades war that ended in May 2009. The LTTE during its intensified fight made obstacles to government's development initiatives. Tamil civilians and public officers who were supportive of the government's move to develop the northern areas were threatened and the defying officers, politicians and the civilians were assasinated. (more.....)

வைகாசி 28, 2011

சர்வதேச பயங்கரவாதம் பாகிஸ்தானில் மையம் கொண்டுள்ளது - ப.சிதம்பரம்

இந்தியாவின் மிக அரு கிலுள்ள அண்டை நாடான பாகிஸ்தானில் சர்வதேச பயங்கரவாதம் மையம் கொண்டிருக்கிறது என் றும், பாகிஸ்தானில் மிகப் பரந்து விரிந்த அளவில் பயங்கரவாதக்கட்டமைப்பு நீண்ட காலமாகவே அர சின் ஒரு கொள்கையாகவே வளர்ந்து வந்திருக்கிறது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டினார். இத்தகைய சூழலில், இந்திய மக்களின் பாதுகாப் புக்காக, “ஒரு நிலையான, அமைதியான அண்டை நாடு” இந்தியாவுக்கு தேவைப்படுகிறது என்றும், அதற்கு இந்தியா - அமெ ரிக்கா இடையிலான உறவு மேலும் மேலும் வலுப்படு வது அவசியமென்றும் சிதம்பரம் கூறினார். மேலும், உலகிலேயே மிகக்கடின மான அண்டை நாட்டை பெற்றிருக்கிற மக்களைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது என்றும் அவர் கூறினார். (மேலும்....)

வைகாசி 28, 2011

அமைதிப் போராளி அமெரிக்காவில் கைது

இஸ்ரேலுக்கு எதிராக முழங்கியதால் தாக்குதல்

இஸ்ரேலிய ஆதரவா ளர்களால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளான அமைதிப் போராளி ரே அபிலே என்ற பெண், மருத் துவமனைப் படுக்கையி லேயே கைது செய்யப்பட் டார். அமெரிக்க நாடாளுமன் றத்தில் உரையாற்றுவதற் காக இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நேடன்யாஹூ அழைக்கப்பட்டிருந்தார். அவரது பேச்சை கோட் பின்க் என்ற அமைதி அமைப் பின் உறுப்பினர் ரே அபிலே இடைமறித்தார். ஆக்கிரமிப்பை நியாயப் படுத்த முடியாது என்றும் போர் கொடூரங்களை நிறுத் துங்கள் என்றும் அட்டை யில் எழுதி உயர்த்திப் பிடித் தவாறு முழக்கங்களை எழுப்பினார். இதனால் ஆத் திரமடைந்த இஸ்ரேலிய ஆதரவாளர்கள் அவர் மீது கடுமையான தாக்குதலை நடத்தினர். (மேலும்....)

வைகாசி 27, 2011

யுத்தத்தின் பின்

வடமாகாணத்தில் சகஜநிலை திரும்பிக் கொண்டிருப்பதனால் மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் (பகுதி 2)

பயங்கரவாத யுத்தத்தின் பின் இடம்பெயர்ந்த மக்களுக்கு மனிதாபிமான சேவைகளை ஏற்படுத்தி அரசாங்கம் அவர்களின் வாழ்வை வளமாக்கியது. அரசாங்கம் மேற்கொண்டு வரும் மனிதாபிமான செயற் பாடுகள் குறிப்பாக வட மாகாணத்தின் மீள்குடியேற்றம், அபிவிருத்தி பாதுகாப்பு தொடர்பான நிலைப்பாடு குறித்து நாம் நேற்று பிரசுரித்த கட்டுரையின் தொடர்ச்சியை இன்று தருகிறோம்.

2006 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 15 ஆயிரம் குடும்பங்களுக்கும் அதிகமானோருக்கு நீரை வழங்குவதற்கு தடைசெய்யக்கூடிய வகையில் எல். ரி. ரி. ஈயினர் மாவிலாறு வான்கதவை மூடியதைய டுத்து, இலங்கை ஆயுதப்படைகளின் மனிதாபிமான செயற்பாடுகள் வெற்றிகரமான முறையில் ஆரம்பமானது. அத்துடன் ஆரம்பமாகிய இராணுவ நடவடிக்கைகளினால் கிழக்கு மாகாணத்தை எமது படைகள் எல். ரி. ரி. ஈ பயங்கரவாதத்திலிருந்து விடுவித்தனர். அதையடுத்து முல்லைத் தீவில் எல். ரி. ரி. ஈயினர் பணயக் கைதிகளாக வைத்திருந்த 2 இலட்சத்து 75 ஆயிரத்துக்கு கூடுதலான அப்பாவி மக்களை பாதுகாப்பாக விடுவிப்பதற்காக பயங்கரவாதிகளை போர்முனையில் முறியடிக்கும் மனிதாபிமான நடவடிக்கை தொடர்ந்தது. இவ்விதம் விடுவிக்கப்பட்ட மக்களை எமது ஆயுதப்படை வீரர்களும், வீராங்கனைகளும், பொலிஸாரும் அன்புடன் அரவணைத்து அவர்களுக்கு சிறந்த சேவையை வழங்கினர். அவர்களை பாதுகாப்பான முறையில் நல்வாழ்வு கிராமங்களுக்கு பாதுகாப்பு படையினர் அனுப்பி வைத்தார்கள். (மேலும்....)

வைகாசி 27, 2011

Dr.K.D. Selvarasagopal commemorative event - Saturday, May 28th

Just a reminder that the Ealathupooradanar Dr.K.D. Selvarasagopal commemorative event happening on Saturday, May 28th at Scarborough Village Community centre at 5:30 PM. (# 3600 Kingston Rd - Markham & Kingston)

Please attend the above event.

Thank you

On behalf of the Group

Ajantha Gnanamuttu

905 460 1667

வைகாசி 27, 2011

ஓமந்தைவரை யாழ்தேவி

21 ஆண்டுகளுக்கு பின்னர் வடபகுதிக்கான ரயில் சேவை இன்று வெள்ளிக்கிழமை ஓமந்தை வரை செல்லவுள்ளது. மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் ஓமந்தை ரயில் நிலையம் வைபவரீதியாக பயணிகளுடைய பாவனைக்கு இன்று திறந்துவைக்கப்படும். போரின் காரணமாக பாதிக்கப்பட்ட வட பகுதிக்கான ரயில் பாதை புனரமைப்பு பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. ஓமந்தை முதல் பளை வரையிலான பாதை புனரமைப்பினை இந்திய நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. ஆனால் தாண்டிக்குளம் முதல் ஓமந்தை வரையிலான ரயில் பாதை இராணுவத்தினராலும் ரயில்வே திணைக்களத்தினாலும் புனரமைக்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டுக்கு பின்னர் வவுனியாவிற்கு அப்பால் ரயில் சேவை நடைபெறவில்லை. இன்று காலை கோட்டையிலிருந்து வரும் யாழ்தேவி நேரடியாக ஓமந்தை சென்றடையும். வழமைபோல் அனைத்து ரயில்களும் ஓமந்தையிலிருந்தே ஆரம்பிக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

வைகாசி 27, 2011

கனடிய தமிழ் மன்றத்தில் கலாநிதி ஜோசப் சந்திரகாந்தன் வழங்கிய உரையிலிருந்து ஒரு பகுதி

(புலிகளின் இருப்பு காலத்தில் இதே சந்திரகாந்தன் புலிகளை வளர்த்து விடுவதிலும் புலிகளின் பாசிச செயற்பாடுகளுக்கும் கொலைகளுக்கும் ஒத்து ஊதியவர் என்பது இங்கு கவனிக்கத் தக்கது.)

பல நூற்றாண்டுகளாக மிகவும் பழமை வாய்ந்த சமூகங்களாக இலங்கைத் தீவை நாம் பகிர்ந்திருந்தோம். சிங்களவர்கள் இல்லாமல் எமக்கு எதிர்காலம் இல்லை என்ற  உண்மையை நாம் மீழ் ஆய்வு செய்துகொள்ளவேண்டும். இதே வேளை தமிழர்களையும்  இஸ்லாமியர்களையும் கீழ்ப்படுத்திக்கொண்டு வாழ்வது நிரந்தரமான நம்பிக்கை  இன்மை என்பதை சிங்களவர்களும் புரிந்துகொள்ள வேண்டும். எம்மைப் பிரிக்கின்ற  காரணிகளை வைத்துக்கொண்டு போரிடாமல் மனித சமூகமாக எவ்வாறு ஒன்றாக வாழலாம்  என்கிற விடயத்தில் நாம் கவனம் செலுத்தல் வேண்டும்.  தமிழர்களும்  சிங்களவர்களும் இந்தக் கொடுரமான போரில் இறந்து போயிருக்கலாம். ஆனால்  மொத்தத்தில் மானிடம் தான் அங்கே கொல்லப்பட்டது. இந்த இருபத்தொராம்  நூற்றாண்டில் எமது தலைமுறையின் எதிர்காலத்துக்கென ஊனத்தையும், சிதைவுகளையும் சொத்தாக விட்டுவிட்டு செல்லமுடியாது. (மேலும்....)

வைகாசி 27, 2011

சர்ச்சைக்குள்ளாகிய சன் பிக்சர்ஸ் ‘ஆடுகளம்’ படம்!

தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டவுடன், பிராந்திய மொழிப்படங்களுக்குத்தான், அதிலும் தமிழ் மொழிப்படங்களுக்கு ஏராளமான விருதுகள் என்றவுடன் தமிழ் திரைப்பட ரசிகர்கள் அ தை இன்ப அதிர்ச்சியாகவே எடுத்துக் கொண்டனர். அந்தப் பெருமையைப் பெற்றது ‘ஆடுகளம்’ என்பது பெரும்பாலான திரைப்பட ரசிகர்களுக்கு எதிர்பாராத ஒன்றாகவே இருந்தது. சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த எடிட்டிங், சிறந்த நடனம் என்று 58வது தேசிய திரைப்பட விழாவுக்கான குழுவினர் அள்ளித்தந்து விட்டார்கள். இப்படத்தின் குழுவினர் இவ்வளவு விருதுகளை எதிர்பார்க்கவில்லை என்பது ஒருபுறம். மறுபுறத்தில்விருது வழங்குவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலகட்டத்தில் வெளியான அங்காடித்தெரு, மைனா, மதராசப்பட்டிணம் உள்ளிட்ட பல படங்களுக்கு எதுவுமே இல்லை என்பது பல ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. (மேலும்....)

வைகாசி 27, 2011

 

இலங்கை வரும் வெளிநாட்டினருக்கு ஒன்லைன் விசா வழங்க ஏற்பாடு

இலங்கைக்குள் வரும் வெளிநாட்டவர் களுக்கு Online  வீசா வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கென அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். குடிவரவு - குடியகல்வு திணைக் களத்தின் இணையத்தளமான www.lmmigration.gov.lk என்ற இணையத்தளமூடாக விசாவுக்காக விண்ணப்பிக் முடியும். வீசா பெறுவதற்கான நடைமுறை கட்டணத்தை செலுத்தவும் முடியும். இப்புதிய நடைமுறையை விரைவில் குடியகல்வு குடிவரவு திணைக்களம் தயாரித்து வருகிறது. விசா கிடைத்து இலங்கை வரும் நபர் விமான நிலையத்தில் தனது கடவுச் சீட்டை வழங்கியவுடன் அவருக்குரிய விசா முத்திரை இடப்பட்டு விசாவுக்கான பணமும் அறவிடப்படும். இப்புதிய நடைமுறையை குடிவரவு - குடியகல்வு திணைக்களம் விரைவில் நடைமுறைப்படுத்தும்.

வைகாசி 27, 2011

அரசின் நற்காரியங்களுக்கு தி.மு.கவினர் ஒத்துழைக்க வேண்டும் - கருணாநிதி  

அரசு செய்கின்ற நல்ல காரியங்களுக்கு தி.மு.க. தொண்டர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார். அமைச்சர் ஜெயலலிதா தி.மு.க. ஆட்சி காலத்தில் பறிக்கப்பட்ட சொத்துக்கள் உரிய முறைப்படி மீட்கப்படும் என்று சொல்லியிருக்கிறாரே எனக் கேட்ட போது அப்படி ஏதாவது இருந்தால் அதை திரும்ப பெற்று உரியவர்களிடமோ அல்லது உரிய அமைப்புகளிடமோ ஒப்படைப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றார். டில்லி பயணத்தின் போது சோனியா காந்தியை வாய்ப்பிருந்தும் நீங்கள் சந்திக்கவில்லையே என்றதற்கு வாய்ப்பு இருந்தது. சோனியா காந்தியை சந்திக்க நேரம் இருந்தும், நான் என்மகள் கனிமொழி சிறையில் இருந்ததால் இந்த நேரத்தில் சோனியாவை சந்திப்பது முறையாக இருக்காது என்பதற்காகவே நான் சந்திக்கவில்லை. நான் அப்படி சந்திப்பதை தவிர்த்துக்கொண்டேன் என்றார். (மேலும்....)

வைகாசி 27, 2011

The Dutch judiciary says that Tamil Tiger leaders in the Netherlands have played a prominent role in financing the civil war in Sri Lanka. The 10,000 Tamils in the Netherlands, police say, were under the iron grip of the guerilla group. (Part 2)

Marcel Haenen (NRC Handelsblad

‘Operation Koninck’ has been described by the judiciary as very complex and elaborate. Some 90 witnesses have been heard, dozens of house searches have been conducted, and numerous documents, photos, computers, CDs and DVDs have been obtained. Detectives from the Crime Investigation Department have gathered 120 files on the case with a wren branded on them (wren in Dutch is winterkoning, the basis for the name of the operation). The judiciary now has large quantities of propaganda material such as films, books and calendars honouring Tamils who have gone on suicide missions. The digital material is particularly plentiful with the Dutch authorities possessing around 6,000 gigabytes worth of information. More material is expected to be obtained in the coming weeks. At the request of the Netherlands, Norway will be carrying out house searches at the home of a Tamil with the code name Nediyavan. According to officials, he is one of the LTTE’s new leaders. On Wednesday a Dutch investigative team, along with lawyers of the suspects in the Netherlands, will travel to Oslo to interrogate Nediyavan. (more...)

வைகாசி 27, 2011

இந்தியா, சீனா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை

இந்திய சீன பாதுகாப்பு செயலாளர்கள் இடையிலான பேச்சுவார்த்தை ஓராண்டுக்குப் பிறகு அடுத்த மாதம் மீண்டும் நடக்கிறது. இந்திய சீன பாதுகாப்பு செயலாளர்கள் இடையே நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை 4ம் கட்டத்தை எட்டிய நிலையில், காஷ்மீரை சேர்ந்த இராணுவ தளபதி ஒருவர் சீனாவுக்கு பயணம் செல்ல இருந்தார். ஆனால், சீனா அவருக்கு விசா வழங்க மறுத்ததை தொடர்ந்து, இந்த பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இந்த பேச்சுவார்த்தை மீண்டும் நடக்க இருக்கிறது. டில்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற கடற்படை தளபதிகள் மாநாட்டில் பாதுகாப்பு அமைச்சர் ஏ. கே. அந்தோணி கலந்துகொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி வருமாறு; இந்திய சீன பாதுகாப்புத் துறை செயலாளர்கள் இடையே நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை, சில காரணங்களால் தடைப்பட்டது. (மேலும்....)

வைகாசி 27, 2011

 

3 ஜி தொலைத்தொடர்பு கோபுரங்களால் 1 கோடி மக்களுக்கு புற்றுநோய் ஆபத்து

3ஜி தொலைத்தொடர்பு கோபுரங்களால் 1 கோடி பேருக்கு புற்றுநோய் ஆபத்து ஏற்படும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. தற்போது கையடக்க தொலைபேசிகளின் பயன்பாடு சர்வ சாதாரணமாகி விட்டது. அதே நேரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பயன்படத்தக்கதாக உள்ளது. கையடக்க தொலைபேசிகளின் தேவை அதிகரித்து வரும் வேளையில் அவற்றின் தொழில் நுட்பத்தின் தரம் உயர்ந்து வருகிறது. தொலைபேசி துறையில் 2 ஜி (இரண்டாம் தலைமுறை) ஆக இருந்த கையடக்க தொலைபேசி தற்போது 3 ஜி (மூன்றாம் தலைமுறை)க்கு வளர்ந்து விட்டது. இதையடுத்து தொழில்நுட்ப வளர்ச்சியின் தரமும் அதிகரிக்கப்பட் டுள்ளது. (மேலும்....)

வைகாசி 27, 2011

தென்னாபிரிக்க ஜனாதிபதி அடுத்த வாரம் லிபியா பயணம்

லிபிய பிரச்சினையில் சுமுகமான முடிவை ஏற்படுத்தவும், லிபியத் தலைவர் கடாபியை பத்திரமாக வெளியேற்றி, நிலையான அரசியல் சூழலை ஏற்படுத்தவும், தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சுமா அடுத்த வாரம் லிபியாவுக்குச் செல்ல இருப்பதாக, “டாக் ரேடியா 702” செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரலில் நடந்த ஆபிரிக்க யூனியன் கூட்டத்தில், லிபிய விவகாரம் குறித்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், சில மணி நேரங்களிலேயே தோல்வியில் முடிவடைந்தன இதையடுத்து, இப்போது தென்னாபிரிக்க ஜனாதிபதி அடுத்த முயற்சியில் இறங்கியுள்ளார். தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேகப் சுமா லிபிய ஜனாதிபதி முகம்மது கடாபி பதவி விலகுவது தொடர்பான சமரசத்திட்டம் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவார். துருக்கி அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் அவர் இந்த முயற்சியில் ஈடுபடவுள்ளார்.

வைகாசி 27, 2011

அமெரிக்காவை எதிர்த்து இராக்கில் பெரும் பேரணி

இராக்கிலிருந்து அமெ ரிக்கப்படைகள் வெளியேற வேண்டும் என்று வலியு றுத்தி 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாபெரும் பேரணி நடை பெற்றது. இந்த ஆண்டுக்குள் அமெரிக்கப்படைகள் வெளியேறாவிட்டால் கடு மையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று ஷைதி அமைப்பு எச்சரித்துள்ளது. பேரணியில் பங்கேற்ற வர்கள் அமெரிக்க, இஸ் ரேல், பிரிட்டிஷ் கொடி களை தீ வைத்துகொளுத் தினர். இந்த பேரணி மூலம் இராக் பிரதமர் நூரி அல் மாலிக்கிற்கு நெருக்கடி உரு வாகியுள்ளது. பேரணியை நடத்திய ஷைதி அமைப்பு கடந்த ஆண்டு பிரதமருக்கு ஆதரவு அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. (மேலும்....)

வைகாசி 27, 2011

அமெரிக்காவில் அடுத்தடுத்து சூறாவளி பலியானோர் எண்ணிக்கை 200

அமெரிக்காவின் மத்திய பகுதியில் உள்ள ஒக்லஹாமா, கன்சாஸ் மற்றும் அர்கன்சாஸ் மாகாணங்கள் நேற்று முன்தினம் வீசிய பயங்கர சூறாவளியால் பெரும் பாதிப்படைந்தன. இச் சூறாவளிக்கு மட்டும் 9 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 200ஐ தாண்டி விட்டது. அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தில் கடந்த 22ம் திகதி மணிக்கு 320 கி.மீ. வேகத்தில், ‘டொர்னடோ’ என்றழைக்கப்படும் பயங்கர சூறாவளி வீசியது. இதில், 122 பேர் பலியாயினர். இதைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மற்றும் நேற்று முன்தினம் அதிகாலையில் ஒக்லஹாமா மாகாணத்தில் உள்ள ஒக்லஹாமா நகரின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் உள்ள கிராமப் புறங்களைத் தாக்கியது. (மேலும்....)

வைகாசி 26, 2011

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம் (பகுதி 12)

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத் தில் தப்பியவரின் வாக்குமூலம்

இப்படி மருத்துவ உதவி செய்ய சென்ற அந்த போராளியை சூசகமாக கைதுசெய்து கொடுத்தான் இந்த பாப்பா. ஆம். இறுதி யுத்தம் நடந்து கொண்டிருந்த பொழுது வீதிகளிலும் காணிகளிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் காயப்பட்டிருந்தபொழுது அவர்களை மீட்கும் பணியில் இவளும் இன்னும் பலரும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர் . இந்த பாப்பாவின் பிடிக்குள் மக்கள் அதிகமானோர் அதுவும் இராணுவ எல்லைகளில் இருந்ததால் அங்கு காயப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி செய்ய சென்றிருந்த வேளையில் சில முன்னரங்க பாப்பாவின் நபர்களுடன் இவள் வாய்த்தர்க்கம் செய்து அந்த மக்களை காப்பாற்ற சென்றுள்ளாள், இவளை பழிவாங்க நினைத்த பாப்பா கும்பல் திட்டமிட்டு ஒரு நாடகம் ஆடினார்கள். (மேலும்....)

வைகாசி 26, 2011

புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனின் மனைவி இசைச்செல்வி விடுதலை!

புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனின் மனைவி இசைச்செல்வி என்றழைக்கப்படும் சசிரேகாவும் அவரது இரண்டு குழந்தைகளும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஒரு வருடமாக இசைச்செல்வி குழந்தைகளுடன் தடுத்து வைக்கப்பட்டார். வன்னியில் இறுதி யுத்த களத்திலிருந்து மீண்டு தடுப்பு முகாமில் சென்று தனது பிள்ளைகளுடன் தஞ்சமடைந்த இசைச்செல்வியை இராணுவத்தினர் கைது செய்து தடுப்பு முகாமதிற்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் குழந்தைகளுடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த இசைச்செல்வியை நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.  இவரின் விடுதலைக்காக செல்வாக்கு பிரயோகத்தில் முன்னாள் புலி முக்கியஸ்தர்களும் இன்னாள் அரச தரப்பு செயற்பாட்டாளர்களும் முக்கிய செல்வாக்கு செயற்பாடுகள் இருந்ததாக அறிய முடிகின்றத.ு

வைகாசி 26, 2011

வறுமையின் உச்சிக்குச் சென்று தற்கொலைக்கு துணியும் நிலையிலுள்​ள குடும்பங்க​ளின் வாழ்க்கையை மேம்படுத்த புலம்பெயர் நிதிசேகரிப்​பு உதவுமா?

யுத்த சூழ்நிலையில் இருந்து மீண்டு இரு வருடங்கள் கடந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அரசு ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எதனையும் எடுக்காத நிலையில், சொந்தங்களை இழந்து சொத்துக்களை இழந்து நிற்கும் இம்மக்களும் முன்னாள் புலி உறுப்பினர்களும் வறுமையாலும் மனவிரக்தியாலும் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பெயரால் ஐரோப்பிய நாடுகளில் சேர்க்கப்பட்ட, சேர்க்கப்பட்டுவரும் நிதியினில் கொஞ்சத்தையேனும் இவ்வாறான மக்களுக்கு கொடுத்து உதவாமல் புலிகளுக்காகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் சேகரிக்கப்பட்ட நிதியினை அதற்குப் பொறுப்பாக செயற்பட்ட பலர் சொகுசாக செலவுசெய்து வாழ்ந்து வருகின்றனர். (மேலும்....)

வைகாசி 26, 2011

The Dutch judiciary says that Tamil Tiger leaders in the Netherlands have played a prominent role in financing the civil war in Sri Lanka. The 10,000 Tamils in the Netherlands, police say, were under the iron grip of the guerilla group. (part 1)

Marcel Haenen (NRC Handelsblad)

The Liberation Tigers of Tamil Eelam (LTTE) waged a bloody war for a quarter of a century in Sri Lanka, but on May 17th, 2009, it admitted defeat to the country’s majority Sinhalese regime. Tamil Tiger founder and chairman Velupillai Prabhakaran died the following day, killed while he attempted a desperate escape from the battlefield in an ambulance. Meanwhile, some 8,300 km north of that battleground, Tamil Tiger representatives in places like Schagen, The Hague, Breda, Zeist, Raalte and Ammerzoden had yet to capitulate. Their struggle for a Tamil homeland continued. The Dutch police said that until their arrest in 2010, the Dutch Tamils had remained active in raising funds and organising meetings to gather support for their struggle and liberation organisation. (more....)

வைகாசி 26, 2011

லிபியா நெருக்கடிக்கு தீர்வு  ஆப்பிரிக்க யூனியன் முயற்சிக்கு மன்மோகன் ஆதரவு

லிபியாவில் நீடிக்கும் அரசியல் நெருக்கடிக்கு அமைதியான முறையில் தீர்வு காண ஆப்பிரிக்க யூனியன் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங் ஆதரவு தெரிவித்தார்.  எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் நடைபெற்ற இந்தியா-ஆப்பிரிக்கா உச்சிமாநாட்டில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், லிபியாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப்போரை அமைதி யான முறையில்முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று இந்தியா விரும்புவதாக தெரிவித்தார். அந்நாட்டில் நீடித்து வரும் அனைத்து பகைமை நடவடிக்கைகளும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வுகாண அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூறினார்.

வைகாசி 26, 2011

எல்டிடிஈ முக்கிய தளபதி   ராமச்சந்திரன் கைது  நெதர்லாந்து போலீசார் நடவடிக்கை

நெதர்லாந்து நாட்டில் எல்டிடிஇ முக்கியத் தலை வர்களில் ஒருவரான ராமச் சந்திரன் கைது செய்யப்பட் டுள்ளார். அவரது அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஞானம் என்பவரும் நெதர்லாந்து உளவுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் எல்டிடிஇ முக்கியத் தலைவரான நெடி யவன், நார்வே நாட்டு தலை நகர் ஓஸ்லோவில் கைது செய்யப்பட்டார். இந்நிலை யில், ராமச்சந்திரன் நெதர் லாந்தில் கைது செய்யப்பட் டுள்ளார். ராமச்சந்திரனிடம் இருந்து நெதர்லாந்து உள வுப் பிரிவினர் கைப்பற்றிய கம்ப்யூட்டர், பென் டிரைவ் மற்றும் ஆவணங்கள் மூலம் எல்டிடிஇ-க்காக நிதி திரட் டப்பட்டு, சேமித்தது தெரிய வந்துள்ளதாகவும் கூறப் படுகிறது. (மேலும்....)

வைகாசி 26, 2011

சிறுநீரகங்கள் பாதிப்பு

நடிகர் ரஜினிக்கு லண்டனில் சிகிச்சை

சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் மேலதிக சிகிச்சைக்காக நடிகர் ரஜினி அடுத்த சில நாட்களில் லண்டன் கொண்டு செல்லப்படவுள்ளார். முன்னதாக அவரை அமெரிக்கா அழைத்துச் செல்ல திட்டமிட்டனர். பின்னர் அமெரிக்க டாக்டர் குழு சென்னைக்கு வரவழைக்கப்பட்டது. இந்நிலையில் அவரை லண்டனுக்கு கொண்டு செல்ல முடிவு செய்ய ப்பட்டுள்ளது. கடந்த மாதம் 29ம் திகதி ராணா படப்பிடிப்பில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல் நிலை பாதிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு என்ன பிரச்சனை என்பதைச் சொல்லாமல் மூடி மறைத்தனர் அவரது குடும்பத்தினர். இதையடுத்து முதலில் இசபெல்லா மருத்துவமனையிலும் இப்போது ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையிலும் ரஜினி சிகிச்சை பெற்று வருகிறார். கிட்டத்தட்ட 1 மாத காலமாகவே ரஜினி உடல் நலக்குறைவுடன் உள்ளார். (மேலும்....)

வைகாசி 26, 2011

Emilda says she’s relieved over arrest

Jaffna District Secretary Emilda Sukumar said she was happy and relieved over the arrest of Oslo-based LTTE leader Nediyawan who had threatened her with death until very recently. She said Nediyawan had been threatening her from Norway by e mail to resign from her post and not to support the government. Mrs. Sukumar said he even threatened to kill her and her family. “I lived under severe stress due to these threatening messages,” she said. She had served eight years as the Government Agent of Mullaitivu during the LTTE controlled period.  Even then she had been forced to resign by Nediyawan on the orders of the LTTE leader. She also said the appreciation of her duties by the people and the government during the past 13 years in the district was a great strength for her future.

வைகாசி 26, 2011

இலங்கை - இந்திய நட்புறவை சீர்குலைக்க ஜே.வி.பி முயற்சி

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையி லான நெருங்கிய நட்புறவைப் பலப்படுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ள வேளையில் இந்த நட்புறவைச் சீர்குலைக்கும் செயற்பாடுக ளையே ஜே. வி.பி. மேற்கொள்வதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தன நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று ஜே. வி.பி. எம்.பி. அநுர குமார திசாநாயக்க இலங்கை- இந்திய வெளிநாட்டமைச்சர் களின் அண்மைய கூட்டறிக்கை தொடர்பான விசேட அறிக்கையொன்றை முன்வைத்தார். இது தொடர்பில் அவர் உரையாற்று கையில், இவ்வறிக்கையானது இலங்கையின் இறைமை, பாதுகாப்பு, பொருளாதார நடவடிக்கைகளில் இந்தியா தலையீடு செய்வதையே காட்டுகிறது எனவும் இதற்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது எனவும் குறிப்பிட்டார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன; வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தற்போது வெளிநாட்டு விஜயமொன்றில் ஈடுபட்டுள்ளதால் அவர் நாடு திரும்பி யதும் அநுர குமார திசாநாயக்கவின் கேள்விகளுக்கு அவர் விரிவான பதிலளிப்பார் எனவும் தெரிவித்தார்.

வைகாசி 26, 2011

யுத்தத்தின் பின்னர்

இடம்பெயர்ந்த மக்களுக்கு மனிதாபிமான சேவைகளை ஏற்படுத்தி அரசாங்கம் அவர்களின் வாழ்வை வளமாக்கியுள்ளது (பகுதி 1)

அரசாங்கம் மேற்கொண்டு வரும் மனிதாபிமான செயற்பாடுகள் குறிப்பாக வடமாகாணத்தின் மீள்குடியேற்றம், அபிவிருத்தி, பாதுகாப்பு தொடர்பான நிலைப்பாட்டை இங்கு நாம் பிரசுரிக்கிறோம். மூன்று தசாப்த காலத்திற்கும் கூடுதலான காலம் இலங்கையில் இடம்பெற்று வந்த பயங்கரவாத வன்முறை 2009ம் ஆண்டு மே மாதத்தில் இலங்கையின் பாதுகாப்பு படையினரால் தமிbழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை படுதோல்வியடையச் செய்ததன் மூலம் நிறைவுபெற்றது. 1980ம் ஆண்டு தசாப்த ஆரம்பத்தில் இலங்கையில் உருவாகிய தமிழ் போராளிக் குழுக்களின் வன்முறை காரணமாக ஏற்பட்ட தாக்கத்தினால் மக்கள் உள்ளூரில் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர ஆரம்பித்தனர். (மேலும்....)

வைகாசி 25, 2011

இன்னும் 3 கிலோமீற்றர் படையினர் பின்வாங்கியிருந்தால் வெற்றியை இழந்திருப்போம் -  சரத்பொன்சேகா

எனது கடுமையான எதிர்ப்பிற்கு மத்தியில் 2009 ஜனவரி 31 ஆம் திகதி முதல் பெப்ரவரி இரண்டாம் திகதி வரை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தமையினால் ஒரே தடவையில் தாக்குதல்களை மேற்கொள்ள முடியாமல் போனது. அதன் பெறுபேறாக 4 கிலோமீற்றர் படையினர் பின்வாங்கினர். அங்கு இன்னும் 3 கிலோமீற்றர் பின்வாங்கியிருந்தால் 1999 ஆம் ஆண்டு மாங்குளத்தில் வீழ்ச்சி கண்டது போல, 25 மாதத்தில் நாம் பெற்ற சகல வெற்றிகளையும் தனி நபரின் தீர்மானத்தினால் இழந்திருப்போம் என்று முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா தெரிவித்தார். (மேலும்.....)

வைகாசி 25, 2011

இனியொரு கிளர்ச்சியை ஏற்படுத்த புலம்பெயர் தமிழருக்கு இடமளியேன் - கே.பி.

இறுதி யுத்தத்தின்போது புலிகளின் உயர் தலைமையை காப்பாற்ற ஐ.நா, ஐரோ. நாடுகள் முயன்றன

இலங்கையில் மீண்டும் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு புலம்பெயர் தமிழர்கள் மேற்கொள்ளும் முயற்சிக ளுக்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்களுள் ஒருவ ரான குமரன் பத்மநா தன் தெரிவித்துள்ளார்.(மேலும்.....)

 

வைகாசி 25, 2011

கனிமொழிக்கு ஜாமீன் இப்போதைக்கு இல்லை

கனிமொழி ஒரு பெண் என்ற வாதத்தை முன் வைத்து, பள்ளி செல்லும் மகனைக் கவனிக்க வேண் டும், தந்தை அரவிந்தன் வெளிநாட்டில் பணிபுரிகி றார். எனவே தனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். கனிமொழி மற்றும் சரத்குமார் ஆகியோர் இருவரும் ரூ. 200 கோடி லஞ்சம் பெற்றதாக சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது. இருவரி டமும் கலைஞர் தொலைக் காட்சியின் பங்கு தலா 20 சதவீதம் உள்ளது. கலைஞர் கருணாநிதியின் மனைவி யான தயாளு அம்மாளுக்கு 60 சதவீத பங்குகள் உள்ளன. (மேலும்.....)

வைகாசி 25, 2011

முல்லை மக்கள் விருப்பத்துக்கு மாறாக மீள்குடியேற்றப்படமாட்டார்கள்

  • கண்ணிவெடி அகற்றும்வரை தற்காலிக ஏற்பாடு

  • விவசாயம் செய்ய அரை ஏக்கர் காணி

இடம்பெயர்ந்த முல்லைத்தீவு மாவட்ட மக்களை சொந்த இடங்களில் மீள் குடியேற்றாது வேறிடங்களில் மீள்குடியமர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை முல்லைத்தீவு அரச அதிபர் பத்திநாதன் முற்றாக நிராகரித்தார். மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஒருபோதும் அவர்கள் வேறு இடங்களில் மீள்குடியேற்றப்பட மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார். (மேலும்.....)

வைகாசி 25, 2011

ராஜீவ் கொலை பின்னணியில் மறைமுகமாக திமுக - ஜெயலலிதா

கே.பி.  அளித்த பேட்டியில், ராஜிவ் காந்தியை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும், அதன் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மனும்தான் திட்டமிட்டு கொன்றதாக ஒப்புக்கொண்டார். அத்துடன், ராஜீவ் காந்தியை படுகொலை செய்ததற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறியிருந்தார். மேலும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் கொலை செய்ய விடுதலைப்புலிகள் முயன்றதாக அந்தப் பேட்டியில் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், இன்று நிருபர்களை சந்தித்த முதல்வர் ஜெயலலிதாவிடம் கே.பி.யின் பேட்டி குறித்து கருத்து கேட்கப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையின் பின்னணியில் திமுக மறைமுகமாக இருந்தது என்பது தங்கள் குற்றச்சாட்டு என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். (மேலும்.....)

வைகாசி 25, 2011

மும்பை தாக்குதலுக்குஉதவிய பாகிஸ்தான் உளவு அமைப்பு

மும்பையில் லஷ்கர் - ஏ -தொய்பா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உள வுத் துறை உதவியது என தீவிரவாதி டேவிட் ஹெட்லி சிகாகோ நீதிமன்றத்தில் தெரிவித்தார். மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம்தேதி பாகிஸ் தான் லஷ்கர் - ஏ - தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து 16 மணி நேரத்திற்கு மேல் அவர் கள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட் டனர். மும்பைத் தாக்குதலில் முக்கிய குற்றவாளிகளாக அமெரிக்காவின் டேவிட் ஹெட்லியும், பாகிஸ்தான் வம்சாவளி கனடா நாட்ட வருமான தகாவுர் ரானாவும் கருதப்படுகின்றனர். (மேலும்.....)

வைகாசி 25, 2011

இலங்கையிலிருந்து ஐரோப்பிய விமான சேவைகளில் பாதிப்பில்லை

ஐஸ்லண்ட் எரிமலை குமுறலின் எதிரொலியாக ஐரோப்பாவுக்கான ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு இதுவரை எவ்வித பாதிப்பும் இல்லை என ஸ்ரீலங்கன் விமான சேவை தெரிவிக்கிறது. எரிமலை குமுறலையடுத்து கிளம்பிய பாரிய புகை மண்டலம் மற்றும் சாம்பல் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் சில உள்ளூர் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலைமையை ஸ்ரீலங்கன் விமான சேவையும் அவதானித்து வருவதாக விமான சேவையின் பேச்சாளர் தெரிவித்தார். நேற்று அதிகாலை முதல் ஐரோப்பிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு குறிப்பிட்ட நேரத்தில் விமானங்கள் வந்து சேர்ந்தன. அதேபோன்று விமானங்களும் புறப்பட்டுச் சென்றுள்ளன என விமான நிலையம் தெரிவித்தது. எவ்வாறாயினும், ஐஸ்லண்ட் எரிமலை வெடிப்பு விவகாரம், தொடர்பாக ஸ்ரீலங்கன் விமான சேவை கண்காணித்தே வருகிறது. ஏதாவதேனும் மாற்றங்கள் செய்யப்படுமாயின் உடனடியாக அறிவிக்கப்படும் என தெரிகிறது.

வைகாசி 25, 2011

ரசிகர்களை சமாதானப்படுத்த ரஜினிகாந்தின் வீடியோ படம் வருகிறது

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், ரசிகர்களை சமாதானப்படுத்தவும் ரஜினிகாந்த் பேசுவது போன்ற வீடியோ படம், இன்னும் 3 நாட்களில் வர இரு க்கிறது. தமிழ்நாடு முழுவதும் ரஜினி ரசிகர்கள், கோவில்களில் விசேட பூஜைக ளும், பிரார்த்தனைகளும் நடத்தி னார்கள். இந்த நிலையில் ரஜினிகாந்துக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அமெரிக்காவில் இருந்து 4 டாக்டர்கள் அடங்கிய குழு நேற்று முன்தினம் சென்னை வந்தது. விமான நிலையத்தில் இருந்து அவர்கள் நேராக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்றார்கள். அமெரிக்க டாக்டர்கள் சென்னையில் 3 நாட்கள் தங்கியிருந்து ரஜினிகாந்துக்கு சிகிச்சை அளிக்கிறார்கள், அதில் ஏற்படும் முன்னேற்றத்தை பார்த்த பிறகே அவர்கள் அமெரிக்கா திரும்ப இருக்கிறார்கள். (மேலும்.....)

வைகாசி 25, 2011

முதலாளிகளிடம் கையேந்தும் அமெரிக்க அரசு! 

அமெரிக்காவின் மத்திய அரசு தனது கடன் வரம்பைத் தாண்டிவிட்டது. அதை உயர்த்த வேண்டும் என்று கோரி ஜனாதிபதி மாளிகை மற்றும் நாடாளுமன்ற கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஓய்வு பெறுபவர்களுக்கான பலன்கள் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றைத் தற்காலிகமாக அமெரிக்க அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையைத்தான் அடுத்த கட்டத்திற்கு நகர, முதலாளிகளிடம் கடன் வாங்குவது பற்றி அமெரிக்க அரசு ஆலோசனை செய்து கொண்டிருக்கிறது. ஏற்கெனவே அமெரிக்க அரசு பத்திரங்களில் இந்த முதலாளிகள் ஏராளமாக முதலீடு செய்துள்ளனர். இது குறித்து முன்னாள் அதிபர் கிளிண்டன் அரசின் தொழிலாளர் துறை அமைச்சராக இருந்தவரும், தற்போது பெர்க்லி கல்வி நிறுவனத்தில் பேராசிரியராக உள்ளவருமான ராபர்ட் ரீச் விரிவாக எழுதியுள்ளார். (மேலும்.....)

வைகாசி 25, 2011

தி.மு.கவுடன் உறவில் பாதிப்பு இல்லை - காங்கிரஸ்

‘தி. மு. க.வுடன் தற்போது இருக்கும் உறவில் எந்தவித பாதிப்பும் இல்லை’ என்று காங்கிரஸ் கூறி இருக்கிறது. 2 ஜி அலைவரிசை ஒதுக்கீட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருக்கும் மகள் கனிமொழியை பார்க்க தி. மு. க. தலைவர் கருணாநிதி டெல்லி சென்று இருக்கிறார். இந்த பயணம் பற்றி கருணாநிதியிடம் நிருபர்கள் கருத்து கேட்ட போது தனிப்பட்ட முறையில் டெல்லி செல்கிறேன். டெல்லியில் சோனியாவை சந்திக்கும் வாய்ப்பு இருக்காது என்று கருதுகிறேன்’ என்று கூறி இருந்தார். (மேலும்.....)

வைகாசி 25, 2011

கடாபி குடியிருப்பு மீது நேட்டோ மீண்டும் தாக்குதல்

லிபிய ஜனாதிபதி முஅம்மர் கடாபியின் குடியிருப்பு பகுதியான திரிபோலியின் பாப் அல்-அசிசியாவுக்கு நேட்டோ படையினர் நேற்றைய தினத்திலும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதோடு 150 பேரளவில் காயத்துக்குள்ளானதாக லிபிய அரசு குறிப்பிட்டுள்ளது. திரிபோலியின் பாப் அல்-அசிசியா பகுதியில் நேற்று 12 முதல் 20 வெடிப்புச் சப்தங்கள் கேட்டதாக அங்கிருக்கும் பி.பி.சி செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த பகுதி புகை மண்டலமாக காட்சியளித்ததாகவும் அவர் செய்தி வெளியிட்டுள்ளார். இந்நிலையில் லிபியா மீது தாக்குதல் நடத்த பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் தாக்குதல் ஹெலிகொப்டர்களை பயன்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளன. இதன் மூலம் குறித்த இலக்கிற்கு தெளிவாக தாக்குதல் நடத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வைகாசி 24, 2011

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம் (பகுதி 11)

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத் தில் தப்பியவரின் வாக்குமூலம்

ஆம்! பாப்பா நமது மூத்த தளபதிகளில் ஒருவர்தான். அவர் சமாதானக்காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டு நல்ல சுகபோகமாக வாழ்வை அனுபவித்து வந்ததை யாரும் மறக்க மாட்டார்கள். இந்த சுகபோக அனுபவிப்பால் பல பெண்களுடன் இவர் தொடர்பு கொண்டமையால் மறுபடியும் வன்னிக்கு அழைக்கப்பட்டு கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தார். இவர் நமது விளையாட்டு துறைப்பொருப்பை கவனித்து வந்தவர்.
இப்படி அந்த சமாதான காலகட்டத்தில் இவர் யாழ்மாவட்ட புலனாய்வுத்துறையினருடன் நன்கு தொடர்பை கொண்டுள்ளார் என அப்போது யாழப்பானத்திலிருந்த மற்றைய பொறுப்பாளர்கள் மற்றும் இரகசிய புலனாய்வுத்துறையினர் தகவல் கொடுத்தமையால் இவர்மீது எம் தலைமைக்கு ஒரு கண் இருந்தது. ஆனாலும் அவர்மீது நடவடிக்கை எடுக்க அப்போது நமக்கு போதுமான உறுதிமிக்க தடையங்கள் கிடைக்கவில்லை. மேலும் மூத்த தலைவர்கள் மீது உறுதியான சாட்சியம் இல்லாமையால் நடவடிக்கை எடுக்க எம் தலைமை பீடம் சற்று தயங்கியது, காரணம் மறுபடியும் எமக்குள் ஒரு பிரிவு ஏற்படுவதை தலைமை விரும்பவில்லை.
(மேலும்....)

வைகாசி 24, 2011

இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் சர்வதேச சமூகம் செயல் முனைப்பற்றிருந்தமைக்கு காரணம் என்ன?

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பில் அனைத்துலக சமூகம் செயல் முனைப்பு அற்ற நிலையில் இருந்ததென நோர்வே தமிழ் கற்கை மையத்தின் கருத்தரங்கில் நோர்வேயின் வெளியுறவு அரசியல் ஆய்வு மையத்தின் தலைவரும் முன்னாள் நோர்வே பிரதி வெளியுறவுத் துறை அமைச்சரும் ஐ.நா. பிரதிநிதியுமான ஜான் இஜ்லண்ட் தெரிவித்துள்ளார். ஆசியாவின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவுகளையும் உதவிகளையும் வழங்கியமை மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான அனைத்துலக போரின் விளைவாக விடுதலைப் புலிகளை வேறொரு அணுகு முறையில் அனைத்துலக சமூகம் எதிர்கொள்ளும் நிலைக்குள் தள்ளப்பட்டமை என இரண்டு மூல காரணிகளாலேயே அனைத்துலக சமூகம் செயல் முனைப்பு அற்ற நிலையில் இருந்ததென அவர் தெரிவித்தார். (மேலும்....)

வைகாசி 24, 2011

மக்களே முக்கியம் மூலதனமல்ல!  ஐரோப்பாவில் எழும் முழக்கம்

சிக்கன நடவடிக்கைகள் என்ற பெயரில் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வரும் மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கை கள் அமலாக்கத்திற்கு மக் கள் கடுமையான எதிர்ப் பைத் தெரிவித்து வருகிறார் கள். லி ஹாவ்ரேயில் நடை பெற்ற ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட பேரணியில், “மக்களே முக் கியம்; மூலதனமல்ல”, “ஜி-8 வெளியேறு” என்ற முழக் கங்கள் எழுப்பப்பட்டன. இந்தப் பேரணிக்கு இடது சாரிக்கட்சிகள், தொழிற் சங்கங்கள் ஆகியவை ஏற் பாடு செய்திருந்தன. ஜி-8 கூட்டம் நடைபெறுவதற்கு பல நாட்கள் முன்னதாகவே துவங்கியுள்ள எதிர்ப்பு, நாட் கள் நகர, நகர வலுவடையும் என்று தலைவர்கள் பேசு கையில் தெரிவித்தனர். (மேலும்....)

வைகாசி 24, 2011

“ஊழலின் காரணமாக திமுக வீழ்ச்சி”  அமெரிக்க துணைத்தூதரிடம் தயாநிதி மாறன் கூறியது அம்பலம்

ஊழலின் காரணமாக திமுக வீழ்ச் சியடைந்து கொண்டிருக்கிறது’ என்றும் ‘ஆட்சி அதிகாரத்திலிருக்கும்போது, ஆட் சியாளர்கள் பணம் பண்ணத் தொடங்கி விடுகிறார்கள்’ என்றும் 2008ல் தயாநிதி மாறன், அமெரிக்க துணைத் தூதரக அதிகாரியிடம் தெரிவித்ததாக, விக்கி லீக்ஸ் அம்பலப் படுத்திய ரகசியத்தை ‘தி இந்து’ நாளிதழ் (23.5.2011) முதல் பக்கச் செய்தியாக வெளியிட்டுள்ளது. 2008 பிப்ரவரியில் அமெரிக்கத் தூதர கத்தின் கன்சல் ஜெனரலிடம் அப்போது திமுக நாடாளுமன்ற உறுப்பின ராக இருந்த தயாநிதி மாறன் மனந்திறந்து உரையாடியிருக்கிறார். அப்போது அவர், தன் கட்சியில் நிலவும் ஊழல் குறித்தும், மக்கள் மத்தியில் ஆட்சிக்கு எதிராக அதி கரித்து வரும் மனோபாவம் குறித்தும் குறிப்பிட்டிருக்கிறார். (மேலும்....)

வைகாசி 24, 2011

புத்தளம் வீதியொன்றுக்கு தந்தை செல்வா பெயர்

புத்தளம் நகரிலுள்ள பெயர்களற்ற அனைத்து குறுக்கு வீதிகளுக்கும் புதிய பெயர்களைச் சூட்டி அதற்கான பெயர்ப்பலகைகளை நாட்டிவைக்க புத்தளம், நகர பிதா கே. ஏ. பாயிஸ் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக நகர சபைப் பேச்சாளரும், நகர பிதாவின் செயலாள ருமான எஸ். எச். எம். நியாஸ் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தின்போது, 1976 புத்தளம் பெரிய பள்ளிவாசலில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பல முஸ்லிம்கள் கொல்லப்பட்ட போது இது குறித்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி நியாயம் கேட்ட அமரர் தந்தை செல்வநாயகம், முஸ்லிம் மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியைத் தோற்றுவித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் மர் ஹும் எம். எச். எம். அஷ்ரப் மற்றும் புத்தளத்தில் முஸ்லிம் நகர சபைத் தலைவர்களாக கடமையாற்றியோர் மக்களின் நலனுக்காக உழைத்தவர்கள் போன்ரோரின் நாமங்கள் சூட்டப்படும்.

வைகாசி 24, 2011

கனிமொழியுடன் கருணாநிதி சந்திப்பு

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப் பட்டுள்ள கனிமொழியை, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி திங்களன்று நேரில் சந்தித்தார். திங்களன்று தில்லி வந்த கருணாநிதி, மாலையில் திகார் சிறைக்குச் சென்று கனிமொழி, முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, கலை ஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோரை சந்தித்து பேசினார். அவரு டன் குடும்பத்தினரும் இருந்தனர். முன்னதாக கனிமொழியை மத்திய அமைச்சர் அழகிரி யின் மனைவி காந்தி திங்க ளன்று தில்லி நீதிமன்றத்தில் சந்தித்தார். தனது மகன் துரை தயாநிதி உள்ளிட்ட சிலருடன் பாட்டியாலா வளாகத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றத்துக்கு வந்த காந்தி, கனிமொழியை சந்தித்துப் பேசினார்.

வைகாசி 24, 2011

அமெரிக்க ஜொப்லின் நகரில் சூறாவளி: 110 பேர் பலி

அமெரிக்க மிஸோரி மாநிலத்திலுள்ள ஜொப்லின் நகரைத் தாக்கிய சூறாவளியில் சுமார் 110 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் பலர் காயமடைந்துள்ளதோடு இன்னும் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம் என நம்பப்படுகின்றது. சூறாவளியின் பின்னர் மிஸோர, ஆளுனர் ஜே.நிக்ஸன் அம்மாநிலத்தில் அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்தியுள்ளார்.

வைகாசி 24, 2011

பயங்கரவாததடைச் சட்டத்தை திருத்த அரசாங்கம் முடிவு

பயங்கரவாததடைச் சட்டம் மற்றும் ஏனைய அவசரகாலச் சட்டங்களை திருத்தி அமைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார். ஆனால் இது தொடர்பான நடவடிக்கை குறித்து அரசாங்கம் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை எனவும் அவசரகாலச் சட்டத்தின் சில சரத்துக்களை அகற்றும் நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

வைகாசி 24, 2011

யாழ். சிறையில் 8 அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

யாழ். சிறையில் உள்ள 8 அரசியல் கைதிகள் தங்களை விடுதலை செய்யக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இக் கைதிகளின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை விசாரணை செய்த மேல் நீதிமன்றம் தகுந்த ஆதாரங்கள் இல்லையென வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. ஆனால் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து கைதிகளின் விடுதலை தொடர்பான தேவையான ஆவணம் வராமையால் தொடர்ந்தும் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் தங்களை உடன் விடுவிக்குமாறு கோரியுமே இவ் உண்ணாவிரதப் போராட்டத்தை குறித்த கைதிகள் ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. _

வைகாசி 24, 2011

கிழக்கின் மாபெரும் அறிவியல் கண்காட்சி கிண்ணியாவில் திறந்து வைப்பு

கிழக்கின் மாபெரும் அறிவியல் கண்காட்சி நேற்று கிண்ணியா அப்துல் மஜீது வித்தியாலயத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண சபைத் தவிசாளர் எச். எம். எம். பாயிஸ் தலைமையின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ. எல். எம். அதாவுல்லா, கிழக்கு மாகாண முதலமைச்சர் எஸ். சந்திரகாந்தன் ஆகியோர் முதன்மை அதிதிகளாக கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தனர். நேற்று திங்கள் 23 ஆம் திகதி முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை ஐந்து நாட்கள் நான்கு பாடசாலைகளில் நடைபெறவுள்ளன.  இக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் மூவினங்களைச் சேர்ந்த சமயப் பெரியார்கள் கலந்துகொண்டதோடு கிழக்கின் பாரம்பரிய கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன. இதேவேளை கிழக்கு மாகாணத்திலுள்ள 16 கல்வி வலயங்களுக்குட்பட்ட 1012 பாடசாலைகளைச் சேர்ந்த மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் 23 ஆசிரியர்களும் இக் கண்காட்சியை பார்வையிடவுள்ளதாக கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளரும் கண்காட்சி ஒழுங்கமைப்பாளருமான யு. எல். எம். ஹாசீம் தெரிவித்தார்.

வைகாசி 24, 2011

முல்லா ஒமர் படுகொலை, தலிபான் மறுப்பு

ஆப்கானிஸ்தான் தலிபான் தலைவர் முல்லா முகமது ஒமர் பாகிஸ்தானில் கொல் லப்பட்டுவிட்டதாக தனியார் தொலைக்காட்சி ஒன்று தெரிவித்துள்ளது. குவெட்டாவில் இருந்து வடக்கு வாஜிரிஸ்தானுக்கு செல்லும் வழியில் அவர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தானின் டோலோ தொலைக் காட்சி தெரிவித்தது. எனினும் அவர் எப்படி யாரால் கொல்லப்பட்டார் என்ற விவரத்தை அந்த தொலைக்காட்சி வெளியிடவில்லை. இதனிடையே முல்லா ஒமர் கொல் லப்பட்டதை பாதுகாப்பு அதிகாரி ஒரு வரும் உறுதிப்படுத்தினார். முல்லா ஒமர் கொல்லப்பட்ட தகவல் சரியானதுதான் என்றார் அவர். எனினும் முல்லா ஒமர் கொல்லப்பட்ட தகவலை தெஹ்ரீக்-இ- தலிபான் அமைப்பு மறுத்துள்ளது. அத்துடன் ஆப்கானிஸ்தான் தலிபான் அமைப்பும் இந்த தகவலை மறுத்துள்ளது. இதேவேளை முல்லா ஒமர் கொல்லப் பட்டதை ஆப்கான் அரசு உறுதி செய்ததாக வெளியான செய்தியை ஆப்கான் உளவுப் பிரிவு மறுத்துள்ளது. எனினும் முல்லா ஒமர் தங்கியிருந்த பாகிஸ்தானின் குவா ட்டாவில் அவரை கடந்த 5 நாட்களாகக் காணவில்லை என்று ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்புக்கான இயக்குனரகத்தின் பேச்சாளர் நுத்புல்லா மஷல் தெரிவித்தார்.

வைகாசி 24, 2011

தனியார் துறைக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் சிறந்தது

தனியார் துறைக்கும் ஓய்வூதியம் வழங்கும் அரசாங்கத்தின் திட்டம் ஓர் சிறந்த திட்டமெனத் தெரிவித்திருக்கும் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, சிறந்த திட்டத்தைக்கூட எதிர்க்கட்சிகள் காரணமின்றி எதிர்ப்பதாகத் தெரிவித்தார். ஓய்வூதியத் திட்டத்தில் பங்குகொள்ள விரும்பும் தனியார்துறையில் வேலைசெய்பவர்கள் மற்றும் சுயதொழிலாளர்கள் தமது சம்பளத்தில் 2 வீதத்தை செலுத்துவார்கள். அதேபோல தொழில் தருனர்கள் தலா ஒவ்வொரு தொழிலாளருக்கும் 2 வீதத்தை செலுத்தவேண்டும். அவ்வாறு பார்க்கும் பட்சத்தில் தொழில் தருனர்கள் பெரும் எண்ணிக்கையிலான தொகையொன்றை செலுத்தவேண்டியிருக்கும். (மேலும்....)

வைகாசி 24, 2011

 

நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் வடக்கு, கிழக்கு பங்களிப்பு அதிகரிப்பு

நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார். மோதல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு இரண்டு வருடங்கள் பூர்த்தியடைந்திருக்கும் சூழ்நிலையில் இரு மாகாணங்களின் விவசாயத்துறை உற்பத்தி குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் அடைந்திருப்பதுடன் இவற்றின் மூலம் நாட்டின் பொருளாதாரத்துக்கு புத்துணர்வு அளிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார். (மேலும்....)

வைகாசி 24, 2011

 

ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பு: ஐரோப்பிய விமான சேவைகள் பாதிப்பு

ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ள பகுதியிலிருந்து 220 கி. மீ. தொலைவு (120 மைல்) வரை விமானங்கள் பறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் ஐரோப்பிய விமான சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பால் வான் பகுதியில் கரும் சாம்பல்கள் பரவி வருகின்றன. பல கிலோ மீற்றர் தூரம் பரவியுள்ள சாம்பலால் வான் வழியே செல்லும் விமானங்களுக்கு பாதை தெரியவில்லை. இதனால் பிரிட்டன் விமானச் சேவை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள துடன் டன் கணக்கில் எரிமலை சாம்பல்கள் வான் பகுதியில் உள்ளன. இந்த சாம்பல்கள் விமான என்ஜின் களுக்கு பெரும் அபாயத்தை விளை விக்கக்கூடும் என்பதால் மேற்கு ஐரோப்பா விமானங்கள் தரை இறக்கப்பட்டுள்ளன. (மேலும்....)

வைகாசி 24, 2011

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் அணுசக்தி தொடர்பான உலக உச்சி மாநாட்டை நடத்த ஏற்பாடு

ஐக்கிய நாடுகள், மே 15 (ஐபிஎஸ்) ஜப்பானின் ஃபுக்குஷிமா டெய்ஷி அணுசக்தி ஆலையில் அண்மையில் நடைபெற்ற விபத்தின் பாரதூரமான தாக்கம், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அரசியல் உணர்வுபூர்வ மான விடயமான அணுசக்தி பாதுகாப்பு குறித்து உலக தலைவர்களின் உயர் மட்ட மகாநாடு ஒன்றை நடத்த தூண்டியுள்ளது. ஜப்பானில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக அணுசக்தி விபத்துக்களை யும் அணுசக்தி பாதுகாப்பையும் மீள்மதிப்பீடு செய்யவேண்டி உள்ளது என்று ஐ.நா. செயலாளர் நாயகம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். (மேலும்....)

வைகாசி 24, 2011

யுத்தத்திற்கு விரயமான கோடிக்கணக்கான டொலர் இன்று அபிவிருத்திக்கு பயன்படுகிறது

வட மாகாணத்தின் அபிவிருத்திற்காக அரசாங்கம் 2011 முதல் 2013 வரையில் 250 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்தி ருக்கிறது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் முன்னேற்றத் திற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் நிதி முதலீட்டு திட்டங்கள் பற்றி கொள்கை விளக்கம் ஒன்றை அளித்த இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாற் கப்ரால் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார். வடக்கில் ஓமந்தையிலிருந்து காங்கேசன்துறை வரை ரெயில் பாதை களை அமைத்து, ரெயில் சேவையை மீண்டும் தென்னிலங்கை யின் மாத்தறையிலிருந்து காங்கேசன்துறை வரை நீடிக்கும் திட்டத்தின் கீழ் அரசாங்கம் 8.9 பில்லியன் ரூபாவை முதலீடு செய்யவுள்ளது. இதில் 5.3 பில்லியன் ரூபா இவ்வாண்டில் செல விடப்படும். (மேலும்....)

வைகாசி 23, 2011

 

ஜெயலலிதா இலங்கைக்கு எதிராக செயற்படமாட்டார் அதற்கான அதிகாரமும் அவரிடமில்லை

“1990 ஆண்டு தசாப்தம் முதல் எல்.ரி.ரி.ஈ. இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கமென்றும் அதனுடன் இலங்கை அரசாங்கத்திற்கு யுத்தம் செய்வது அவ்வளவு இலகுவான செயலல்ல என்ற வெளிநாட்டு கொள்கையை இந்தியா கொண்டிருக்கிறது. இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு நியாய பூர்வமான தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கு ஒத்துழைப்பை நல்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இந்திய அரசு இருந்து வருகிறது. தமிழ் மக்களுக்கு அதிகாரத்தை பரவலாக்குவதற்கு ஏற்புடைய வகையில் அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு நியாயபூர்வமான யதார்த்தமான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென்று இந்தியா விரும்புகிறது” “இதே வேளையில் எல்.ரி.ரி.ஈ இயக்கத்தை தடை செய்து தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பதற்கான தீர்மானத்தை எடுத்தமைக்கு ரஜிவ் காந்தியை படுகொலை செய்தமை மட்டுமன்றி எல்.ரி.ரி.ஈ ஒரு பயங்கரவாத இயக்கம் என்ற காரணத்தினால்தான் இந்த தீர்மானத்தை எடுத்ததாக இந்திய அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.(மேலும்...)

வைகாசி 23, 2011

முல்லைத்தீ​வு மாவட்ட தமிழ்மக்களை வெளியேற்ற நடவடிக்கை

சொந்த மண்ணிலிருந்து வாழ்விடங்கள் பறிக்கப்பட்டு, தொழில்துறைகள் பறிக்கப்பட்டு ஏதிலிகளாக முல்லைத்தீவு மாவட்ட தமிழ் மக்கள் விரைவில் துரத்தப்படுவார்கள் என சுட்டிக்காட்டியுள்ள மாவட்ட மக்கள், ஆக்கிரமிப்பிற்கு எதிரா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குரல்கொடுக்கவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர். யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தாமல் வேறிடங்களில் குடியமர்த்த ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றமை மேலும் கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக கரைவலைப் பாடுகளை வைத்து தொழில் செய்துவந்த மக்களிடமிருந்து அதிகார வர்க்கத்தினரால் அந்தப்பாடுகள் பிடுங்கப்பட்டு தென்னிலங்கை சிங்கள வியாபாரிகளிடம் கொடுக்கப்பட்டுள்ளது. (மேலும்....)

வைகாசி 23, 2011

Nediyavan’s arrest a major step forward

(Professor Rohan Gunaratna, Nanyang Technological University, Singapore)

(By Arthur Wamanan)

Sri Lanka should ensure the establishment of a mainstream Tamil political leadership in order to move towards permanent peace, said terrorism expert, head of the International Centre for Political Violence and Terrorism Research (IC PVTR), Professor Rohan Gunaratna. In an interview with The Nation, he said the arrest of the head of the LTTE’s international network Perinpanayagam Sivaparan alias Nediyavan was a major step in helping Sri Lanka to recover from violent 30 years. He also briefed on the activities of the LTTE during the past two years. (more...)

வைகாசி 23, 2011

பிளவடைகிறது ஐக்கிய தேசிய கட்சி

100 பேர் கொண்ட மாற்று செயற்குழு  சஜித் தலைமையில் உருவாக்கம்

நூறு அங்கத்தவர்களைக் கொண்ட மாற்று செயற்குழு வொன்றை ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச நியமித்துள்ளதுடன் அதன் தலைமைப் பொறுப்பையும் அவரே ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த மாற்று செயற்குழுவின் முதலாவது அமர்வு அடுத்த வாரம் இடம்பெறுமென்றும் தெரிய வருகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த மாற்று செயற் குழுவில் மாகாண சபை உறுப்பினர்கள் தொகுதி அமைப்பாளர்கள், கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் புத்திமான்கள் ஆகியோர் இடம்பெறு வதாக மேற்படி செயற் குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். இந்த மாற்று செயற்குழு ஐக்கிய தேசிய கட்சியின் நிறைவேற்று குழு, மகளிர் அணி ஆகியவை தொடர்பாக கூடி ஆராய்வதுடன் கட்சிக்கு புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது தொடர்பாகவும் தீர்மானிக்கும் என்று ஆவர் மேலும் கூறினார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் செயற் குழுவை நியமிக்கும்போது தனக்கு விருப்பமானவர்களுக்கு முன்னுரிமை வழங்கியதையடுத்தே இந்த பிரச்சினை ஏற்பட்டதாக குறிப்பிட்ட அவர் இதனைக் கட்சி பிளவுபடும் அபாயம் இருப்பதாகவும் கூறினார்.

வைகாசி 23, 2011

நெடியவன் கைது

 

உன்னிப்பாக கவனிக்கிறது இலங்கை

புலிகளின் முக்கியஸ்தர் நெடியவன் நோர்வேயில் கைது செய்யப்பட்டதன் பின்னரான நிலைமைகளை உன்னிப் பாகக் கண்காணித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நெடியவனின் கைது மற்றும் அவர் தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் பற்றி அவதானித்து வருவதுடன், நெடியவனின் பயங்கரவாத நடவடிக்கைகள் இலங்கையைப் பாதிக்குமா என்பது பற்றி ஆராயப்படும் என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, நோர்வேயில் புலிகள் அமைப்பைத் தடை செய்யவேண்டுமென அந்நாட்டு எதிர்க்கட்சியான கொன்ச வேர்டிவ் கட்சி கோரிக்கைவிடுத்துள்ளது. புலி பயங்கரவாதிகள் நோர்வேயில் செயற்படுவதை அனுமதிக்க முடியாது என நோர்வே எதிர்க்கட்சி குறிப்பிட்டு ள்ளது. புலிகள் அமைப்புக்காக ஐரோ ப்பா உட்பட பல்வேறு நாடுகளில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நோர்வேயில் வசித்து வந்த நெடியவன் ஹொலன்ட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

வைகாசி 23, 2011

ஆளுமைப் பயிற்சிக்கு வடக்கிலிருந்து மாணவர்கள் பயணம்

பல்கலைக்கழகங்களில் கல்வி யைத் தொடர்வதற்கு தகுதி பெற்ற மாணவர்களு க்கு இராணுவ முகாம்களில் நடை பெறவுள்ள தலைமைத்துவ பயிற்சி நெறிக்கு வடமாகாணத்திலிருந்து தெரிவானவர்கள் புறப்பட்டுள்ளனர். உயர்கல்வி அமைச்சினால் தனிப்பட்ட ரீதியாக மாணவர்களுக்கு கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. இன்று திங்கள் முதல் மூன்று வாரங்களுக்கு முதல் கட்டமாக மாணவர்களுக்கு இந்த பயிற்சிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மாவட்டங்களிலிருந்து தெரிவான மாணவர்களுக்கு தென்னிலங்கை இராணுவ முகாம்களில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

வைகாசி 23, 2011

கருணாநிதி

மக்களுக்காக அல்ல மகளுக்காக இன்று டில்லி பயணம்

ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் தி.மு.க. எம்.பி.யும் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் மகளுமான கவிஞர் கனிமொழி 20ம் திகதி கைது செய்யப்பட்டு, டில்லி திகார் ஜெயிலில் அடைக்கப் பட்டு உள்ளார். கனிமொழி மீதான கைது நடவடிக்கையின் காரணமாக அரசியலில் பரபரப்பான சூழ்நிலை ஏற் பட்டு உள்ளது. இந்த நிலையில் தற் போதைய அரசியல் சூழ்நிலை குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கருணாநிதி தனது கோபாலபுரம் வீட்டில் நேற்று முன்தினம் இரவு அவசர ஆலோசனை நடத்தினார். (மேலும்....)

வைகாசி 23, 2011

இயல்பு நிலைக்கு திரும்புகிறார் ரஜினி

சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நடிகர் ரஜினி காந்த் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். திட உணவை அவரே எடுத்துச் சாப்பிடுவதாகவும் மருத்துவமனை தரப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவாசப் பாதை நோய்த் தொற்று, நிமோனியா காய்ச்சல் காரணமாக நடிகர் ரஜினி காந்துக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. மே 13ம் திகதி இரவு ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் உள்ள சிறப்பு அறை யில் மருத்துவப் பரிசோதனைகளுக்காக சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் ரஜினிக்கு சிறப்பு மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். சிறப்புப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவரின் சுவாசத்தை சீராக்க தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். (மேலும்....)

வைகாசி 23, 2011

ஒபாமா இன் திமிர் பேச்சு

தேவைப்பட்டால் பாகிஸ்தானில்  மீண்டும் தாக்குதல் நடத்துவோம்
 

அந்த தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டி வரும் -பாகிஸ்தான்

 

பாகிஸ்தானில் பயங்கரவாதத் தலைவர்கள் இருப்பது தெரியவந்தால் பின்லேடனை தாக்குதல் நடத்திக் கொன்றது போல் மற்றொரு தாக்குதல் நடத்த அனுமதி அளிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்தார். பிரிட்டனுக்கு புறப்படுவதற்கு முன்பு பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அல் கொய்தா உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரோ அல்லது தலிபான் தலைவர் முல்லா ஒமரோ பாகிஸ்தானிலோ அல்லது வேறொரு நாட்டிலோஇருப்பது தெரியவந்தால் என்னனசெய்வீர்கள் என அவரிடம் கேட்ட போது, தேவைப்பட்டால் அமெரிக்கா தன்னிச்சையாகவே நடவடிக்கை எடுக்கும் என்றார் அவர்.(மேலும்....)

வைகாசி 23, 2011

ராஜீவ் காந்தி நினைவு நாள்

ஸ்ரீபெரும்புதூரில் தலைவர்கள் அஞ்சலி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 20 வது நினைவு நாளை முன்னிட்டு சனிக்கிழமை பல தலைவர்கள் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினை விடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். ராஜீவ் காந்தி 1991ம் ஆண்டு மே 21ம் திகதி, ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிர சாரத்துக்கு வந்த போது புலிகளின் மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். அவரது 20வது நினைவு தினம் சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி நூற்றுக்கணக்கான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொது மக்களும் அவரது நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினர்.

வைகாசி 23, 2011

நேட்டோ எண்ணெய் லொறிகள் குண்டு வைத்து தகர்ப்பு

நேட்டோ எண்ணெய் லொறிகளை தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்ததில் 16 பேர் இறந்தனர். பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் இருந்து ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள லேனடி கோட்டல் நகருக்கு எண்ணெய் ஏற்றிக்கொண்டு டேங்கர் லொறிகள் அணிவகுத்து சென்றன. இந்த லொறிகள் ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகளுக்கு எண்ணெய்யை எடுத்து சென்றன. சனிக்கிழமை காலை தெர்காம் என்ற இடத்தில் சென்றபோது தீவிரவாதிகள் சாலையில் வைத்திருந்த குண்டு வெடித்து சிதறியதில் எண்ணெய் லொறிகள் தீப்பிடித்து எரிந்தன. 10 லொறிகள் எரிந்து நாசமாயின. இதில் 16 பேர் உடல் கருகி இறந்தனர். பலர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

வைகாசி 22, 2011

இலங்கை வெளிநாட்டமைச்சரின்

சீனவிஜயத்தின் நோக்கம் இந்திய நிலைப்பாட்டை தளர்த்துவதே

ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை தொடர்பாக இந்தியா தொடர்ந்தும் இலங்கை எதிர்பார்க்கின்ற நிலைப்பாட்டுக்கு ஒத்துவராமல் இருப்பது இலங்கைக்கு மனக் கசப்பை உண்டு பண்ணியுள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.  அதேவேளையில், இந்திய அரசாங்கம் ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை; அது சர்வதேச ரீதியில் இலங்கைக்கு ஏற்படுத்தியுள்ள அழுத்தங்கள், நெருக்குவாரங்களை வைத்துக் கொண்டு இலங்கை அரசாங்கத்தை இந்திய அரசாங்கம், "பிளக்மெயில்' பண்ணுவதாக இலங்கைத் தரப்பு மிக ஆழமாக உணர்வதாகவும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இதன் விளைவாகவே இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் சீனாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். (மேலும்...)

வைகாசி 22, 2011

தொடரும் ஆபிரிக்கா மீதான ஆக்கிரமிப்பும் பலியாகிப் போன லிபியாவும்

(நல்லையா தயாபரன் )

'மறைமுகமாக எங்களுடைய செலவில் கொல்லப்படும் ஒவ்வொரு லிபியனின் உயிருக்கும் பதில் சொல்ல வேண்டிய தார்மீகப் பொறுப்பு எங்களுக்கும் இருக்கிறது.'

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்து குற்றஞ்சாட்டப்பட்ட அட்டூழியமான குற்றங்களில் மிகவும் மோசமான ஒன்றாக 2003 ஈராக் மீதான அமெரிக்காவின் படையெடுப்பு இருந்தது.  ஓர் ஆக்கிரமிப்பு யுத்தம் தொடங்குவதும், திட்டமிடுவதும் யுத்தக்குற்றங்களிலேயே முதன்மையானதும், முக்கியமானதுமாகும் என்றும், அத்தகைய நடவடிக்கைகளில் இருந்துதான் மனிதயினத்திற்கு எதிரான ஏனைய குற்றங்கள் இரக்கமின்றி உருவாகின்றன என்றும் நூரெம்பேர்க் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குறிப்பிட்டது.  அதன்படி, ஜனாதிபதி பராக் ஒபாமா, பிரதம மந்திரி டேவிட் கேமரோன், ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசி ஆகியோர் கடாபி செய்துள்ள எவ்வித குற்றங்களையும் விட அதிகமான குற்றங்களைச் செய்துள்ள குற்றவாளிகளாக உள்ளனர்.   இலட்சக்கணக்கான ஈராக்கியர்களை பலியெடுத்த பின் தற்போது ஜனநாயகத்தின் பெயரால் ஒபாமா இன்று லிபியாவைக் குறிவைத்துக் கிளம்பியிருக்கிறார்.  (மேலும்...)

வைகாசி 22, 2011

பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாதம் - சீனா

பாகிஸ்தான் மண்ணில் இன்னமும் பயங்கரவாதிகள் வளர்வது தங்களுக்கு கவலையளிப்பதாக சீனாவிற்கு பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராசா கிலானியிடம் சீன அரசுத் தலைமை தெரிவித்துள்ளது. சீனாவில் இருந்து வெளிவரும் நியூஸ் டெய்லி எனும் நாளிதழ் இத்தகவலை வெளியிட்டுள்ளது. சீனாவில் தனது பயணத்தை முடித்துக்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் கிலானி நேற்று நாடு திரும்பினார். சீன பயணத்தின்போது அவர் அந்நாட்டின் பல தலைவர்களை சந்தித்துப் பேசினார். இந்தியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் பாகிஸ்தான் நல்லுறவை பேண வேண்டும் என்றும் ஆலோசனை கூறியதாகவும் அச்செய்தி தெரிவிக்கிறது. பாகிஸ்தான் மண்ணில் இன்னமும் பயங்கரவாதம் செழிக்கிறது என்றும், அதற்கு பாகிஸ்தான் அரசு முடிவுகட்ட வேண்டும் என்றும், இந்தியாவுடனும், அமெரிக்காவுடனும் உள்ள உறவில் உருவாகியுள்ள தடைகளை அகற்ற முயற்சிக்க வேண்டும் என்றும் சீனத் தலைமை வலியுறுத்தியுள்ளது.

வைகாசி 22, 2011

குடாநாட்டில் மீண்டும் குடும்பப் பதிவு ஆரம்பம்

யாழ். குடாநாட்டில் குடும்பப் பதிவுகள் மற்றும் குடும்பப் புகைப்படம் பிடிக்கும் நடவடிக்கைகளைப் படைத்தரப்பு சத்தமின்றி மீண்டும் ஆரம்பித்துள்ளது எனக் குற்றஞ்சாட்டப்படுகின்றது. குறிப்பாக வரணி மற்றும் சங்கானை உள்ளிட்ட பல பகுதிகளிலும் நேரடியாக இப்பதிவு மற்றும் புகைப்படம் பிடிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.  முன்னதாகப் பெருமெடுப்பில் இராணுவப் பதிவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழ்த் தரப்பு அதற்கெதிராக நீதிமன்றம் சென்றிருந்தது. இதையடுத்து பதிவு நடவடிக்கைகளை தாம் கைவிடுவதாக படைத்தரப்பு அப்போது அறிவித்திருந்தது. (மேலும்...)

வைகாசி 22, 2011

Hope you didn't miss someone in the photo

Movie of the YEAR  - Among FRIENDS...

Planning another convenient 911

 

வைகாசி 22, 2011

வெனிசுலாவில் புதுமை

“சோசலிச செல்போன் நிறுவனம்”

சோசலிச நிறுவனங்களில்தான் உழைப்பு மேல் காதலை ஏற்படுத்துவது சாத்தியம். தனியார் நிறுவனங்களால் அதைச் செய்ய முடியாது. இதுதான் இரண்டு நிறுவனங்களுக்குமிடையிலான வேறுபாடாகும். வெனிசுலாவின் இந்த புதுமையான முயற்சிகள் பொலிவியா, ஈக்குவடார் போன்ற நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கும் இதுபோன்ற நிறுவனங்களைத் துவக்க திட்டமிட்டு வருகிறார்கள். வெனிசுலாவிலும் செல்போன் தயாரிப்பைத் தாண்டி வேறு பல துறைகளிலும் சோசலிச நிறுவனங்கள் உருவானால், நாட்டின் நலனையும், மக்கள் நலனையும் கருத்தில் கொண்டு வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்று ஹியூகோ சாவேஸ் தலைமையிலான அரசு கருதுகிறது. (மேலும்...)

வைகாசி 22, 2011

விடுதலைப்புலி உறுப்பினர்கள் 900 பேரை விடுவிக்க ஏற்பாடு

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் 900 பேர் விடுதலை செய்யப்படவுள்ளனர். இவர்கள் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஏ. திஸாநாயக்க தெரிவித்தார். புனர்வாழ்வு முகாம்களில் 4 ஆயிரம் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் தற்போது எஞ்சியுள்ளதாகவும், அவர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இந்த வருட இறுதிக்குள் புனர்வாழ்வளிக்கப்படும் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் அனைவரையும் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

வைகாசி 22, 2011

கலைஞர் செய்திகள்

ஏன் இவ்வளவு கொண்டாட்டம்?

“கடந்த 20ந் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற விழாவில் மம்தா பானர்ஜி மேற்குவங்க முதல்வராக பதவியேற்றார். ஆளுநரிடம் துள்ளிக்குதித்து ஓடுகிறார். பதவியேற்பு உறுதிமொழியை படிக்கிறார். ஓடிச் சென்று கையெழுத்து போடுகிறார். ஒரு குழந்தையைப் போல் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கிறார். தலைமைச் செயலகத்திற்கு நடந்தே செல்கிறார்.” இந்த நிகழ்ச்சிகள் முழுவதையும், கொல் கத்தாவிற்கு தனது சிறப்பு நிருபரை அனுப்பி விசேஷ ஒளிபரப்பு செய்தது ‘கலைஞர் செய் திகள்’ தொலைக்காட்சி. போகட்டும் அது அவர்கள் உரிமை. ஆனால் போகிற போக் கில் சிறப்பு செய்தியாளர் உதிர்த்த முத்துக் கள் ஜனநாயக சக்திகளையும் நடுநிலையா ளர்களையும் முகம் சுளிக்க வைத்தது. (மேலும்...)

வைகாசி 22, 2011

மட்டக்களப்பில் படையினர் தேடுதல் நடவடிக்கை

மட்டக்களப்பின் நகர் பகுதியின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று சனிக்கிழமை காலை முதல் படையினரும் பொலிஸாரும் இணைந்து கூட்டாக தேடுதல் நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை முதல் நகரையும் நகரைச் சூழவுள்ள பகுதிகளிலும் படையினர் வீடுவீடாகச்சென்று தேடுதலில் ஈடுபட்டதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோன்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அலுவலகம் உள்ள சுற்றுவட்டப்பகுதிகளிலும் தேடுதல் நடத்தப்பட்டுள்ளதுடன் அலுவலகத்துக்குள் தேடுதல் நடத்தப்பட்டதான தகவல்கள் எதுவும் தெரியவில்லை. இந்தச் சோதனை நடவடிக்கையின்போது மக்களின் கடமைகளுக்கு எதுவித பங்கமும் ஏற்படாமல் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றதாகப் படையினர் தெரிவித்தனர். அத்துடன் மட்டக்களப்பு நகரில் குற்றச்செயல்கள் இடம்பெறாமல் தடுப்பதற்காகவே இவ்வாறான தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் படையினர் தெரிவித்தனர்.

வைகாசி 21, 2011

தமிழகத்தின் ஆட்சி மாற்றம் எதிர்காலத்தில் இலங்கைக்கு சவாலாகவே அமையும்

தமிழகத்தின் ஆட்சி மாற்றம் எதிர்காலத்தில் இலங்கைக்கு சவாலாகவே அமையும். இலங்கை தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு உரிய முறையில் தலையீடுகளை மேற்கொள்ள தவறியமையினாலேயே சட்டமன்ற தேர்தலில் கருணாநிதி தோல்வியடைந்தார். அதே பிரச்சினையை தீவிரமாகக் கொண்டு பிரசாரம் செய்தமையால் பெரும்பான்மை ஆதரவுடன் ஜெயலலிதா ஆட்சியை கைப்பற்றிக் கொண்டார் என்று ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது. அரசாங்கம் போலி இனப்பற்றையும் உணர்வுபூர்வ செய ற்பாட்டையும் தவிர்த்து இராஜதந்திர முறையில் செயற்பட்டு புதிய தமிழக ஆட்சியின் ஆதரவை வெற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் எதிர்வரும் நாட்களில் இந்தியாவின் தலையீடு அதிகரிப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளதென்றும் அக்கட்சி எச்சரித்துள்ளது. (மேலும்....)

வைகாசி 21, 2011

விடுதலைப்புலிகளை தடை செய்யுமாறு நோர்வே எதிர்கட்சியினர் கோரிகை

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீது நோர்வேயில் கட்டாயம் தடை கொண்டு வரப்பட வேண்டும் என்று அந்நாட்டு எதிர்க் கட்சியான கொன்சர்வேர்ட்டிவ் கட்சி வலியுறுத்தி உள்ளது. இலங்கையில் யுத்தத்தில் ஈடுபட்ட பிரதான தரப்பைச் சேர்ந்தவர்களில் புலிகளுடம் அடங்குகின்றனர். இலங்கை அரசு, புலிகள் ஆகியோரின் செயல்பாடுகள் ஐ.நா நிபுணர்கள் குழு அறிக்கையில் வன்மையாக கண்டிக்கப்பட்டு உள்ளன. நோர்வேயில் புலிகள் சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் என பல தகவல்கள் கிடைத்து உள்ளன. (மேலும்....)

வைகாசி 21, 2011

சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பிக்கொள்வதற்கு

இலங்கை அரசாங்கம் உடனடியாக உள்ளக நடவடிக்கைகளை மேற்கொள்வதே ஒரே வழி

போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பிக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் உடனடியாக உள்ளக நடவடிக்கைகளை மேற்கொள்வதே ஒரே வழி என்று இலங்கைக்கு இந்தியா ஆலோசனை கூறியுள்ளது. புதுடெல்லி அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி "இந்து'' நாளேடு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த செவ்வாயன்று புதுடில்லியில் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர உயர் மட்டங்களுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஜி.எல்.பீரிஸ் நடத்திய பேச்சுக்களின் போதே இந்தியாவின் இந்த ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. (மேலும்....)

வைகாசி 21, 2011

இந்தியா வலியுறுத்தியுள்ள விடயங்கள் அரசாங்க நிகழ்ச்சி நிரலில் முதன்மையாக உள்ளன

இலங்கை விவகாரம் தொடர்பில் இந்தியா வலியுறுத்தியுள்ள விடயங்களானது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் அடங்கிய நிகழ்ச்சி நிரலில் முதன்மையாக அமைந்துள்ள அம்சங்களாகும். முக்கியமாக அரசியல் தீர்வுகாணும் செயற்பாட்டில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் நடத்தும் பேச்சுக்களில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். அவசரகால சட்டத்தை நீக்குவதுடன் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்தும் விசாரணை செய்யவேண்டும் என்று இந்தியா வலியுறுத்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேற்கண்டவாறு குறிப்பிட்டார். (மேலும்....)

வைகாசி 21, 2011

இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கம் இல்லை - ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கம் இல்லலை என இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி பேர்னாட் சவாஜ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஐ.நா. நிபுணர் குழு பரிந்துரைகளுக்கு அமைய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்திய போதிலும், ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டுமென எதிர்பார்க்கவில்லை எனவும் இலங்கையுடன் நீண்ட காலமாக மனிதாபிமான மற்றும் பொருளாதார உறவுகளைப் பேணி வருவதாகவும் தொடர்ந்தும் உறவுகளைப் பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

வைகாசி 21, 2011

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில்

ஜாமீன் வழங்க சிறப்பு நீதிமன்றம் மறுப்பு   கனிமொழி கைது திகார் சிறையில் அடைக்கப்பட்டார்  

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் திமுக எம்.பி., கனி மொழிக்கு ஜாமீன் வழங்க வெள்ளியன்று நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், அவரை உடனடியாக கைது செய்யவும் நீதிமன்றம் உத் தரவிட்டது. அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். கலைஞர் டிவியின் நிர்வாகியான சரத் குமாரும் கைது செய்யப் பட்டார். மதியம் 2.30 மணியள வில் பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்ற வளாகத்தில் கனிமொழிக்கு கைது உத்த ரவு பிறப்பிக்கப்பட்டவு டன், அங்கிருந்து 3.30 மணி யளவில் திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட் டார். பெண் என்பதால் தனி வேனிலும், சரத் குமார் ஒரு வேனிலும் அழைத்துச் செல்லப்பட்டனர். சிறை யில் கனிமொழிக்கு பெண் களுக்கான தனி அறை ஒதுக்க அறிவுறுத்தப்பட் டது. கனிமொழிக்கு வீட் டில் இருந்து மருந்து பொருட்கள் உள்ளிட்ட வற்றை வழங்கவும் அனு மதிக்கப்பட்டுள்ளது. கனி மொழி திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்படும் முன்பாக, தன் மகன் ஆதித்யா மற்றும் கணவர் அரவிந்தனுடன் சற்று நேரம் பேசிக் கொண்டிருந் தார். (மேலும்....)

வைகாசி 21, 2011

Dr.K.D. Selvarasagopal commemorative event - Saturday, May 28th

On behalf of  Ealathupooradanar Dr.K.D. Selvarasagopal commemorative event group, I am kindly inviting you, your family and friends for this event. The event will be held on Saturday, May 28th at Scarborough Village Community centre at 5:30 PM. (# 3600 Kingston Rd - Markham & Kingston)

Please convey this message to your friends so they can also attend the above event.

Thank you

On behalf of the Group

Ajantha Gnanamuttu

905 460 1667

வைகாசி 21, 2011

தேர்தல் முடிவுகள்

சவால் மிகுந்த, நீண்ட நெடிய போராட்டத்தை நடத்துவோம்!

(பிரகாஷ் காரத்)

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் இடது முன்னணிக் குப் பெரும் தோல்வியைத் தந்துள்ளது. இது மேற்கு வங்கத்தை இடதுசாரி களின் கோட்டை எனக் கருதிய நாட்டில் உள்ள இடது, ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளுக்குப் பெருமளவில் ஏமாற்றத் தைத் தந்துள்ளது. 1977ல் இருந்து ஏழு முறை அனைத்துத் தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்று, 34 ஆண்டு காலம் குறிப்பிடத்தக்க வரலாறு படைத்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான இடது முன் னணி அரசாங்கம் பதவி விலகியுள்ளது. தேர்தல் முடிவில் சில பொதுவான அம் சங்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன. மக்கள் மாற்றத்திற்காகத் தீர்மானகரமான முறையில் தங்கள் விருப்பத்தைத் தெரி வித்திருக்கிறார்கள். அதற்காக, திரிணா முல் காங்கிரஸ் கூட் டணிக்குப் பெரிய அளவில் வெற்றியைக் கொடுத்திருக் கிறார்கள். இதற்காக இடதுசாரிகளுக்கு எதிரான அனைத்து சக்திகளும் - வலது சாரிகளிலிருந்து இடது அதிதீவிர மாவோ யிஸ்ட்டுகள் வரை - ஒன்று சேர்ந்திருக் கிறார்கள். மேலும் இடது முன்னணி இரண்டு ஆண்டுகளுக்கு முன் இழந்த தளத்தை எதிர்பார்த்த அளவிற்கு மீட்க முடியவில்லை என்பதும் தெளிவாகிறது. (மேலும்....)

வைகாசி 21, 2011

காணாமல் போகின்றனவா “நீர்க்கோபுரங்கள்”?

கோடைக்காலமாகி விட்டால் இமயமலையின் பனிப்பகுதிகளில் 75 விழுக்காடு உருகிவிடுகின்றன என்று ஆய்வின் மூலம் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 15 ஆண்டுகளில் சராசரியாக 3.75 கி.மீ. பரப்பளவிலான பனிப்பகுதிகள் காணாமல் போயுள்ளன என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது. (சிந்து, கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆகிய நதிகள் ஓடும்பகுதிகளிலும், சீனா, நேபாளம், பூடான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் பல பகுதிகளிலும் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. முதன்முறையாக இவ்வளவு விரிவான ஆய்வு நடத்தப்பட்டுள்ளதால், சர்வதேச விஞ்ஞான சமூகம் ஆய்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கிறது. இதற்கு முன்பாக, ஆல்ப்ஸ் மலைத்தொடரில்தான் இத்தகைய ஆய்வு நடந்தது என்கிறார் ஆய்வாளர் அஜய். இது இஸ்ரோவின் படங்களைக் கொண்டு வெளியான இரண்டாவது ஆய்வறிக்கையாகும். மேலும்....)

வைகாசி 21, 2011

பின்லேடன் தியாகி அல்ல - ஒபாமா

பயங்கரப் படுகொலை களை செய்த அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லே டன் தியாகி அல்ல என்று அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா கூறினார். அல்கொய்தா தீவிரவா தத் தலைவர் ஒசாமா பின் லேடன் இந்த மே மாதம் 2ம்தேதி பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் நகரில் அமெரிக்க கமாண்டோக் களால் கொல்லப்பட்டார். பின்லேடன் கொலையைத் தொடர்ந்து பாகிஸ்தானில் தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. (மேலும்....)

வைகாசி 21, 2011

Geethani's Story

Worker No. 689 tells her story

My name is Geethani Peries from Sri Lanka and I am 28 years old. I come from a Catholic family from a fishing village called “Negombo”. I’m the oldest in the family with 2 younger sisters. My father works as a tinker (repairing vehicles) in the informal sector. My mother is a housewife. My father suffered from health problems when I was 8 years old, which caused my mother a real shock and some psychological problems. We had to struggle a lot to face the situation. I managed to pass my Advanced Level exam and planned to find work to support my family. In Sri Lanka, it is very easy for girls to find a job in the garment sector because there is no need for qualifications. But most girls do not want to work there because society sees those factory workers as unqualified girls who are not good to marry. Those who work in the factory are not willing to say where they are working. Despite my studies, I was unable to find a job, and my family and financial situation forced me to work in the garment factory. (more...)

வைகாசி 21, 2011

ஒபாமா கருத்தை ஏற்க முடியாது  - இஸ்ரேல்

1967 ஆம் ஆண்டுக்கு முன்பாக இருந்த எல்லை களின் அடிப்படையில் இஸ் ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கிடையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் கருத்தை ஏற்க முடியாது என்று இஸ்ரேல் கூறியுள்ளது. பேச்சுவார்த்தைகளை உடனடியாகத் துவங்க வேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு குறிப் பிட்டிருந்த பாரக் ஒபாமா, அந்தப் பேச்சுவார்த்தை 1967 ஆம் ஆண்டுக்கு முன்பாக இருந்த எல்லைகளின் அடிப் படையில் இருக்க வேண் டும் என்று கருத்து தெரிவித் திருந்தார். அந்தக்கருத்திற்கு உடனடியாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன் யாஹு மறுப்பு தெரிவித் துள்ளார். (மேலும்....)

வைகாசி 21, 2011

கோரியாவுக்கு அமோக வெற்றி  பொது வாக்கெடுப்பு முடிவுகள் வெளியானது

ஈக்குவடார் நாட்டின் அரசியல் சட்டத்தில் பத்து திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான பொது வாக்கெடுப்பில் தற்போதைய ஜனா திபதி ரபேல் கோரியாவுக்கு அமோக வெற்றி கிடைத்திருக்கிறது. முதலாளித்துவ ஆட்சியா ளர்கள் மக்களிடம் கருத்தைக் கேட்காமல் தங்கள் இஷ்டத்திற்கு, விரோதமான கொள்கைகளை அறிமுகப்படுத்தி வந்த லத்தீன் அமெரிக்க நாடுகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சாவேஸ் வெனிசுலாவில் ஆட்சிக்கு வந்த பிறகு, ஒவ்வொரு முக்கியமான முடிவிலும் மக்களின் கருத்தைக் கேட்கும் வகையில் பொது வாக் கெடுப்பு நடத்தினார். பத்து வாக் கெடுப்புகளில் ஒன்பது முறை அவ ருக்கே மக்கள் ஆதரவு தந்தனர். (மேலும்....)

 

 

வைகாசி 21, 2011

எதிர்க்கட்சித் தலைவர் ரணிலுக்கு தமிழக முதல்வர் ஜெயா அழைப்பு

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தமிழ் நாட்டுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் ஜெயலலிதா அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் நாடு மாநிலத் தேர்தலில் அமோக வெற்றியீட்டி முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்திக்கு தொலைபேசி ஊடாக நன்றி தெரிவித்த போதே பிரஸ்தாப அழைப்பையும் ஜெயலலிதா விடுத்துள்ளார். கடந்த 17ம் திகதி இரவு இருவருக்குமிடையிலான தொலைபேசி உரையாடல் நடை பெற்றுள்ளது.

வைகாசி 20, 2011

தமிழகத்தில் பரபரப்பு

கனிமொழி, சரத்குமார் ரெட்டி கைது

கருணாநிதியின் மனைவி தயாளு அம்மா கைதாவாரா...?

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக தமிழக முன்னாள் முதல்வரின் மகள் கனிமொழி நீதிமன்ற உத்தரவின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது சென்னை அலுவலக செய்தியாளர் சற்றுமுன் உறுதிப்படுத்தினார். மேலும் கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத்குமார் ரெட்டியும் பிணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்து தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை தாமதப்படுத்தப்பட்ட கைது தற்போது நிறைவேறி இருக்கின்றது. திமுக உடனான காங்கிரஸின் உறவு நிலைகளை இது எடுத்தக்காட்டுவதாக அமைவதாக அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.கனிமொழி புலிகளின் தீவிர ஆதரவாளர் என்பவும் குறிப்பிடத் தக்கது. இவர் பாதிரியார் கஸ்பருடன் இணைந்தே புலிகளின் தொடர்புகளைப் பேணி வந்தார். இதேவேளை இக் கைது திமுக இற்கு போராட்டம் என்று பறப்பட்டு தமது இருப்பை தமிழகத்தில் காட்டுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தியிருப்பதாக அறிற முடிகின்றது.

வைகாசி 20, 2011

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம் (பகுதி 10)

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத் தில் தப்பியவரின் வாக்குமூலம்

அந்த நாடுகள் கைவிரித்துவிட்டனர் எனவும்.இம்முறை போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா விரும்புவதாகவும் அதற்கான நடவடிக்கைகளை [புலிகள் தலைமைப்பீடத்தை] செய்யச்சொல்லியும் கூறப்பட்டது. இந்த செய்தியால் நம் தலைமை ஆடிப்போனது ஏன் இப்படி நடந்தது? எதனால் இப்படி சொல்லப்பட்டது ? என்ற கேள்விகளுடன்.உங்கள் இராஜதந்திர நகர்வுகளை நம்பித்தானே நாம் எமது படைகளை பின்வாங்கி சென்றோம் என கூறி புலம்பெயர் தலைமைகளுடன் சீறிப்பாய்ந்தனர் நமது தலைவர்கள். எனவே இந்த கட்டத்தில் நம் ஒட்டு மொத்தமாக நம்பியவர்கள் எல்லோரும் சூழ்ச்சி செய்து கவிழ்த்து விட்டனர் நம் தலைமை பீடத்தை. (மேலும்...)

வைகாசி 20, 2011

நோர்வேயில் நெடியவன் கைது

நோர்வேயில் புதிய தலைவராக செயற்பட்டு வந்த நெடியவன் கைது செய்யபட்டு பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் நீதிமன்றில் நிறுத்தபட்டுள்ளார். கொலன் நாட்டில் இருந்து வந்த சர்வதேச பொலிசாரால் நெடியவனின் வீடு சுற்றி வளைக்கபட்டு தேடுதலுக்கு உள்ளாக்கபட்டு நெடியவன் கைது செய்பட்டதுடன் அவர் உடனடியாக நோர்வே தலைநகரம் ஒஸ்லோவுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டுவரபட்டு நீதிமன்றில் நிறுத்தபட்டார். நெடியவன் கைது செய்யப்பட்டு கடந்த இரண்டு தினங்களாக ஜரோப்பிய பயங்கரவாத சட்டபடியான வழக்கை எதிர் நோக்கி வருகின்றார். இது தொடர்பாக இன்று நோர்வே தொலைக்காட்சியான ரிவி2 செய்தி வெளியிட்டுள்ளது. (மேலும்....)

வைகாசி 20, 2011

ஐ நா விலிருந்து ஆபிரிக்க நாடுகள் அவசரம் வெளியேறுவது அவசியம் !

(நல்லையா தயாபரன் )

ஆபிரிக்க மக்களின் ஐக்கியத்தை குலைக்க, வட ஆபிரிக்கா ஆபிரிக்காவின் ஒரு பகுதியல்ல. வட ஆபிரிக்க அரபிய மக்களுக்கும் ஏனைய ஆபிரிக்க நாட்டு கறுப்பு மக்களுக்கும் அதிகளவில் வித்தியாசங்கள் உண்டு. வட ஆபிரிக்கா ஆபிரிக்காவின் ஏனைய நாடுகளைவிடப் பரிணாம வளர்ச்சி, பண்பாட்டு வளர்ச்சி மற்றும் நாகரிக வளர்ச்சி கண்ட இடமாகும் போன்ற பல இனவாத கருத்துக்களை கடந்த இருநூறு வருடங்களுக்கு மேலாக ஐரோப்பியர் பரப்பி வருகின்றனர்.  அத்துடன் டுனீசியா, எகிப்து, லிபியா மற்றும் அல்ஜீரியா ஆபிரிக்காவின் ஒரு பகுதியல்ல என்பது போலப் பாசாங்கு செய்கின்றனர். ஒற்றுமையே பலம் என்பதை ஆபிரிக்க நாடுகள் உணர்ந்து கொண்டு செயற்படவேண்டிய கால கட்டம் வந்து விட்டது. தவறினால் மேற்குலக நாடுகளின் கைப்பொம்மைகளினால் ஆபிரிக்க கண்டம் தொடர்ந்தும் சூறையாடப்படுவது தடுக்க முடியாததாகிவிடும். (மேலும்....)

வைகாசி 20, 2011

கனடாவில் இருக்கும் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தரின் திருமலை வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு

கனடாவில் இருக்கும் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவரின் திருகோணமலை நிலாவெளிப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. நிலாவெளி பிரதேசத்தின் பதினெட்டாம் பிரிவில் இருக்கும் வீடொன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் காணப்பட்ட ஒரு தொகை ஆயுதங்களை திருகோணமலை தலைமையக விசேட பொலிஸ் பிரிவு  மற்றும் கந்தளாய்ப் பொலிசார் ஆகியோர் இணைந்து மீட்டுள்ளனர். பிரஸ்தாப வீடு தற்போதைக்கு கனடாவில் வசிக்கும் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் முத்து என்பவரது வீடு என்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டைவிட்டுத் தப்பியோட முன் அவர் தன் வசம் இருந்த ஆயுதங்களைப் புதைத்துச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகின்றது. அங்கிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுடன் தகவல் பரிமாற்றக் கருவிகள், கைத்துப்பாக்கிகள், துப்பாக்கிகளைச் சுத்தம் செய்யும் உபகரணங்கள் என்பனவும் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவி்க்கின்றனர்.

வைகாசி 20, 2011

ஏ 9 வீதியை காப்பட் மாற்றும் பணிகள் துரிதம்

யாழ்ப்பாணம் முதல் வவுனியா வரையிலான 200 கிலோமீற்றர் நீளமான ஏ 9 பாதையை காப்பற் வீதியாக மாற்றுவதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. மூன்று பிரிவுகளாக நடைபெற்று வரும் வேலைகள் இரண்டு மாதத் தில் பூர்த்தியடையுமென வீதி அபி விருத்தி அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்தனர். இப்பாதைகளில் சேதமடைந்த பாலங்கள், புனரமைக்கப்பட்டு வருவதால் இவ்வேலைகள் முடியும் வரை வீதி அபிவிருத்திப் பணிகள் தாமதமடைந்துள்ளன. பாலங்கள், மதகுகள் புனரமைப்புப் பணிகள் பூர்த்தியானதும் ஒரு மாதத்தில் காப்பற் வீதியாக மாற்றும் பணி விரைவாக நடைபெறும் என தெரி வித்துள்ளனர்.

வைகாசி 20, 2011

 

தீவிர சிகிச்சை பிரிவில் ரஜினிகாந்த்

சுவாசத்தை மேம்படுத்துவதற்காக நடிகர் ரஜினிகாந்த் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளதாக டாக்டர்கள் குழு தெரிவித்துள்ளது. சுவாச கோளாறு மற்றும் குடல்நோய் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். (மேலும்....)

வைகாசி 20, 2011

ஸ்பெயின்  மக்கள் கிளர்ச்சி தொடர்கிறது

அரசின் கொள்கைக ளுக்கு எதிராகப் போராட் டக்களத்தில் இறங்கிய ஸ்பெயின் மக்கள் தங்கள் போராட்டத்தை ஐந்தாவது நாளாகத் தொடர்ந்தனர். தலைநகர் மாட்ரிட் உள் ளிட்ட 50 நகரங்களில் பெருந் திரள் பேரணிகள், ஆர்ப் பாட்டங்கள் போன்றவை நடைபெற்று வருகின்றன. மே 15 ஆம் தேதி துவங்கிய இந்த எழுச்சிமிகு போராட் டம் ஒவ்வொரு நாளும் அதிகமான மக்கள் பங் கேற்போடு தொடர்கிறது. போராட்டக்களத்தில் வந் துள்ள மக்கள் முகாமடித்து போராட்டங்களைத் தொடர்ந்துள்ளனர். (மேலும்....)

வைகாசி 20, 2011

அண்டவெளியில் மனிதர்கள் வாழக்கூடிய இன்னுமொரு கோள்

அண்ட வெளியில் மனிதர்கள் உயிர் வாழக்கூடிய இன்னுமொரு செந்நிற விண்கோள் கண்டுபிடிப்பு அண்ட வெளியில் கோள் மண்டலத்திலிருந்து 20 ஒளி வருடங்களுக்கு அப்பால் இருக்கும் ஒரு விண்கோளில் மக்கள் வாழக்கூடியதாக உயிர்வாய்வும், நீர்வளமும் இருப்பதை விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்துள்ளார்கள். இந்த விண்கோளில் உலகில் இருப்பது போன்று உயிரினங்கள் நிலைத்திருப்பதற்கான சுற்றாடல் இருக்கிறதென்று கலிலி 581 னீ என்ற அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிலையம் அனுப்பி வைத்த செய்மதியில் இருந்து கிடைத்துள்ள தகவல்கள் ஊர்ஜிதம் செய்கின்றன. (மேலும்....)

வைகாசி 20, 2011

ரி. எம். வி. பி உறுப்பினர்கள் நேற்று ஜனாதிபதியுடன் சந்திப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிழக்கில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்த பூரண அறிக்கையொன்றை தயாரித்து ஒரு வாரத்தினுள் தம்மிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை வழங்கியதாக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பேச்சாளர் அஸாத் மெளலானா தெரிவித் தார். முதலமைச்சர் சந்திரகாந்த னின் அலுவலகம், வாசஸ்த லம் என்பன திடீர் சோதனைக் குள்ளாகிய விடயம் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் கள் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்தும் இப்பேச்சு வார்த்தையின் போது ஆராயப்பட்டதாகவும் அஸாத் மெளலானா தெரிவித்தார்.

வைகாசி 20, 2011

தமிழக தலைவர்களுடன் சோனியா தீவிர ஆலோசனை

தமிழக சட்ட சபை தேர்தலில், காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து, ஒவ்வொருவராக சோனியா அழைத்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதன்படி சோனியாவை தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர் கார்வேந்தன் சந்தித்து பேசினார். தமிழக சட்ட சபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய தோல்வியை அடைந்தது. தலைமை தாங்கிய தங்கபாலுவில் தொடங்கி ராகுலின் நேரடி தேர்வாக நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் வரை படுதோல்வி அடைந்தது அக்கட்சியின் தலைமைக்கு அதிர்ச்சியை அளித்தது. இந்நிலையில் சட்ட சபை தேர்தல் தோல்வி குறித்தும், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவதற்கு உண்டான நடவடிக்கைகள் குறித்தும், தமிழகத்தை சேர்ந்த முக்கிய காங்கிரஸ் தலைவர்களை அழைத்து சோனியா ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது. இதன்படி சோனியாவை கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய அமைச்சர் வாசன் சந்தித்து பேசினார்.

வைகாசி 19, 2011

தமிழ் மக்களின் மறுவாழ்வுக்கான பணிகளை துரிதப்படுத்துக!  இலங்கையிடம் இந்தியா வற்புறுத்தல்

இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் மறுவாழ்வை உத்தரவாதப்படுத் தவும், பாதிக்கப்பட்ட பகுதி களில் இயல்பு வாழ்க்கையை மீண்டும் ஏற்படுத்தவும், பாதிக் கப்பட்ட குடும்பங்களின் துய ரங்களை மனித நேய அடிப் படையில் போக்கவும் துரித மான நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு இலங்கை அரசை இந்தியா செவ்வாயன்று வற்புறுத்தியது. (மேலும்....)

வைகாசி 19, 2011

தூக்கணாங்குருவிக்கூடு.

வீட்டுக்குள்ளேயே தொலைந்துபோகும்

மனிதர்

வெளியில்

எதைத் தேடுகின்றனர்?

 

அமிழ்வது  புரியாமல்

அகழ்வது ஏன்?

 

வானவில்லைத் தூர எறிந்துவிட்டு

மின்னலை வலிந்து ஏந்திக்

கண்கள்

குருடாகின்றன.

 

தேடுவது

இனியேனும்

பார்வையாகட்டும்.

(மேலும்....)

வைகாசி 19, 2011

தோழர் கேதீஸ்வரனைக் கொலை செய்தவர் எற்கனவே இராணுவத்தினால் கொல்லப்பட்டுவிட்டார்

அரசாங்க சமாதான செயலகத்தின் பிரதித் தலைவர் கேதீஸ்வரன் லோகநாதனின் கொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் மூதூரில் யுத்தத்தின்போது கொல்லப்பட்டதாக கல்கிஸை நீதவான் நீதிமன்றில் பயங்கரவாத புலனாய்வுப் பணியகத்தினால் (ரி.ஐ.டி.) இன்று தெரிவிக்கப்பட்டது. கேதீஸ்வரன் லோகநாதன் 12.08.2006 ஆம் திகதி தெஹிவளையிலுள்ள அவரின் வீட்டில் வைத்து சுடப்பட்டார். எல்.ரி.ரி.ஈ. பிஸ்டல் குழுவைச் சேர்ந்த மோகனதாஸ் திவாகரன்  எனும்மேற்படி சந்தேக நபர் மூதூரில் ஆயுதப் படைகளால் கொல்லப்பட்டதாக பயங்கரவாத புலனாய்வுப் பணியகம் கல்கிஸை பிரதான நீதவான் திருமதி நிரோஷா பெர்னாண்டோ முன்னிலையில் சமர்ப்பித்த மனுவொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தேக நபரை கைதுசெய்வதற்கு மேற்கொண்ட விசாரணையின்போதே இது தெரிய வந்ததாக பயங்கரவாத புலனாய்வுப் பணியகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வைகாசி 19, 2011

Rejoice O’ Srilanka, for the Paradise regained on 18 May 2009.

By Lenin Benedict-Toronto

It was this day, May the 18th of 2009 which marked the end of Terrorism and Separatism in Srilanka. This was the historic day that brought Peace to all Srilankans and Democracy to Tamils in the North and East. It was May 18th that made the guns silenced. This May 18th is the day that unified the entire country as ONE Srilanka. This is the day we regained the lost portion of our paradise from the Vanni Regime. It is the day our beloved Motherland, the Paradise of the East crushed and thrashed out the evil forces. So Rejoice O’ Srilanka, It’s your Day. (more....)

வைகாசி 19, 2011

அறிவியல் கதிர்

அணுசக்திக்கு மாற்றாக எரிவாயு

(பேராசிரியர் கே. ராஜு)

ஜப்பான் புகுஷிமா அணு உலையில் அண் மையில் ஏற்பட்ட விபத்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் அணு உலைகள் விரிவாக்கத்திற்கு ஒரு வேகத்தடையை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த நாடுகள் அணுசக்தித் துறையில் முன்னேற நினைத்தாலும் மக்களின் நியாயமான கேள்வி களுக்கும் அச்சங்களுக்கும் விடையளித்த பிறகே முன்னோக்கிச் செல்ல முடியும் என்ற நிலையும், மக்களின் உணர்வுகளைப் புறக்கணித்துவிட்டு அணுசக்தித் துறையில் இலக்குகளை நோக்கிச் சென்றுவிட முடியாது என்ற நிலையும் ஏற்பட்டி ருக்கிறது.  (மேலும்....)

வைகாசி 19, 2011

அல் - கொய்தா தலைவராக எகிப்தின் அல் - ஆதல் நியமனம்

அல் கொய்தா அமைப்பின் இடைக்காலத் தலைவராக எகிப்து நாட்டின் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. பின்லேடன் கொல்லப்பட்டதையடுத்து புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை எகிப்து முன்னாள் இராணுவ அதிகாரியான சைப் அல்- ஆதல் இடைக்காலத் தலைவராக செயல்பட உள்ளதாக அல் கொய்தா வட்டாரங்களை மேற்கோள்காட்டி சி. என். என். தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. 1981ல் எகிப்து முன்னாள் ஜனாதிபதி அன்வர் சதாத் படுகொலை செய்யப்பட்டதற்கு பொறுப்பேற்ற எகிப்து இஸ்லாமிய ஜிகாத் அமைப்பில் அல் ஆதல் உறுப்பினராக இருந்துள்ளதாக நம்பப்படுகிறது. மேலும் ஆப்கானிஸ் தானில் சோவியத் படைகளை எதிர்த்துப் போராடியவர் என்றும் கூறப்படுகிறது. அல் கொய்தா அமைப்பில் நீண்டகாலமாக முக்கிய பங்கு வகித்த சைஃப் அல் ஆதல், இடைக்காலத் தலைவராக செயல்படுவார் என பின்லேடனின் முன்னாள் சகாவான நோமன் பெனோட்மன் கூறியதாக சி. என். என். தொலைக்காட்சி செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வைகாசி 19, 2011

கேரளாவின் கொச்சின் சர்வதேச விமான நிலையத்தல் போலி கடவூச்சீட்டை பயன்படுத்தி பிரான்ஸ செல்ல முயற்சித்த இலங்கையர் கைது!

போலி பாஸ்போர்ட்டில், வெளிநாடு செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்த நபரை, போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். இலங்கையைச் சேர்ந்த ஜீவதாஸ்(34) என்பவர், கேரள மாநிலம் கொச்சி (நெடும்பாசேரி) சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, ஓமன் விமான நிறுவனத்தின் விமானம் மூலம், பாரீசுக்கு செல்ல முயன்றார். விமான நிலைய அதிகாரிகள், அவருடைய பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது, அது போலி என்பது தெரிந்தது. இதைத் தொடர்ந்து, அவரை கைது செய்தனர். அவரிடமிருந்த பாஸ்போர்ட், 2007ல், திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில், முத்து பீட்டர் என்ற பெயருக்கு வழங்கப்பட்டிருந்தது. 2003ல், ஜீவதாஸ் இந்தியாவுக்கு வந்துள்ளார். அவருக்கு புலிகளுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. தற்போது இவர் புலிகளின் முக்கிய உறுப்பினர் என்று இனம் காணப்பட்டுள்ளார்.

வைகாசி 19, 2011

சர்வதேச விவகாரங்களில் சீனா தனது பங்களிப்பை அதிகரிக்க வேண்டும்

சர்வதேச விவகாரங்களில் சீனா தனது பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் கிலானி வேண்டுகோள் விடுத்துள்ளார். சீனாவின் பழமையான செழிப்புகளை இன்றைய உலகம் தற்போது தான் சந்திக்கிறது. சீனாவின் தத்துவங்கள் ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் பலன் தரக்கூடியது. சீனா-பாகிஸ்தான் உறவை மேலும் பலப்படுத்தும் வகையில் பாகிஸ்தானில் கன்பூசியஸ் மையங்கள் தொடங்கப்படும். அதுபோல் சீனப் பல்கலைக்கழகங்களில் பாகிஸ்தான் கல்வி மையங்களும் திறக்கப்படும். 21ம் நூற்றாண்டில் சீனா உலகை வடிவமைப்பதை காண்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் சர்வதேச விவகாரங்களில் சீனா தனது பங்களிப்பை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். அமெரிக்காவின் நெருக்குவாரத்திற்கு உள்ளாகி அவமானப்பட்டுக் கொண்டிருக்கும் பாகிஸ்தான் இதிலிருந்த விடுபட சீனாவை மேலும் நெருங்குவதாக அறிய முடிகின்றது.

வைகாசி 19, 2011

ஜனாதிபதிக்கும் பிள்ளையானுக்கும் இடையில் பேச்சுவார்த்தை!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டணி கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவரான பிரதீப் மாஸ்டர் உள்ளிட்ட மூவர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தனர். மேலும், பிள்ளையானின் இல்லம் இராணுவத்தினரால் அண்மையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த சம்பவம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை பெரும் அதிருப்தி அடையச் செய்திருந்தது. இந்த நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேச்சுவார்த்தைகளுக்காக தம்மை அழைத்திருப்பதாக பிள்ளையான் தெரிவித்துள்ளார். நாளைதினம் ஜனாதிபதியுடன் விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாகவும், அதன் பின்னரே இந்தப் பிரச்சினை குறித்து தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவம் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட சில நபர்கள் முகத்தை மூடிக் கொண்டு தேடுதலில் ஈடுபட்டதாக பிள்ளையான் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.

வைகாசி 19, 2011

ஓய்வூதியம் தர பணமில்லை!  கைவிரிக்கிறது “குபேரபுரி” அமெரிக்கா

கடன் வரம்பை அதிக ரிக்க அமெரிக்க நாடாளு மன்றம் அனுமதிக்கும் வரை ஓய்வு பெறுவோருக்கான பணம் மற்றும் ஏற்கெனவே ஓய்வு பெற்றுள்ளவர்களுக் கான ஓய்வூதியம் ஆகிய வற்றைத் தருவதற்கான பணம் அரசின் கையில் இல்லை என்று அமெரிக்க அரசு கைவிரித்துள்ளது. 14.3 லட்சம் கோடி டாலர் என்பதுதான் அமெ ரிக்க அரசு அதிகபட்சமாக வைத்துக் கொள்ளக்கூடிய கடனின் அளவாகும். அந்த அளவை தற்போது எட்டி விட்டதால், வரம்பை அதி கரிக்குமாறு நாடாளுமன் றத்திடம் அரசு கோரிக்கை வைத்திருக்கிறது. இதுவரை அதற்கான அனுமதி கிடைக்காததால் ஓய்வூதியம் மற்றும் ஓய்வு பெறுபவர் களுக்கான பலன்கள் ஆகி யவை தருவதை தற்காலிக மாக அமெரிக்க நிர்வாகம் நிறுத்தி வைத்திருக்கிறது. (மேலும்....)

வைகாசி 19, 2011

தாலிபானுடன் அமெரிக்கா ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது? வாஷிங்டன் போஸ்ட் செய்தியில் அம்பலம்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளோடு மோதி வரும் தாலிபான்களு டன் பல சுற்று ரகசியப் பேச்சுவார்த்தைகளை அமெ ரிக்கா நடத்தியுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் செய்தி கூறுகிறது. இரு தரப்பும் ஒரு ஒப்பந் தத்திற்கு வரலாம் என்று சில மாதங்களுக்கு முன்பாக ஒரு முயற்சி துவங்கியிருக்கிறது. வாஷிங்டன் போஸ்ட் வெளி யிட்ட இந்தச் செய்திக்கு அமெரிக்க அரசுத்தரப்பில் மறுப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், அமெரிக்காவுக்கும், தாலி பானுக்கும் இடையில் எத் தகைய பேச்சுவார்த்தை நடந்தது என்பதை ஆப்கா னிஸ்தான் அரசுக்கு தெரி வித்து விட்டதாக அமெ ரிக்க அரசு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். (மேலும்....)

வைகாசி 18, 2011

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் சாட்சியம் (பகுதி 9)

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

இது இப்படி இருக்க! ஒருபக்கம் சமாதானத்துக்கும் பாதுகாப்புக்குமான பேச்சு வார்த்தை நடந்தவண்ணம் தான் இருந்தது மறுபக்கம் தற்காப்பு யுத்தம் நடை பெற்றுக்கொண்டு இருந்தது. இந்த நேரத்தில் நமக்குள்ளேயே வன்னியிலிருந்து எம்மை குழிபறித்து நம் தளபதிகள் கோரமாக படுகொலை செய்யப்பட்டதை பார்த்தால் எம்மினத்தின் விடியலுக்காக போராடி மாற்றானுடன் சேர்ந்து எமக்கு குழிபறித்தவர்கள் வரிசையில் இப்போது மீண்டும் சிலர் இணைந்து கொண்டு அந்த கொடிய போரில் நாளும் ஆயிரமாயிரம் பேர் செத்து வீழ்ந்து கொண்டிருப்பதையும் பொருட்படுத்தாது எமது போராட்டத்தையும் தலைமையையும் பயங்கரவாதிகள் எனவும் அதை பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தமாக சிங்களவனுடன் சேர்ந்து திசை திருப்பவும் இந்த கூட்டம் பாப்பா என்னும் ஒரு தளபதியூடாக மறுபடியும் அரங்கேறியது. (மேலும்....)

 

வைகாசி 18, 2011

 

ரஜினி?

 

கிளினிக்கல் ரிப்போர்ட்

'ரஜினிக்கு சாதாரண வைரஸ் காய்ச்சல், வயிற்றில் கோளாறு’ என்று லதா ரஜினிகாந்த் திரும்பத் திரும்பச் சொன்னாலும்... உண்மை அது அல்ல. ''ரஜினிக்கு முதலில் நுரை​யீரல் தொல்லையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதன் பிறகு, ராமச்சந்தி​ராவில் ரஜினியின் உடல் முழுவதையும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்தார்கள். வயிற்று வலியால் அவதிப்பட்ட ரஜினியின் கல்லீரல் சோதிக்கப்பட்டது. ஒருவேளை, இது கொடூரமான வியாதிக்கான அறிகுறி​யாக  இருக்குமோ என்ற சந்தேகத்தில் பயாப்ஸி எடுத்து, கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு சாம்பிள் அனுப்பி இருக்கிறார்கள். சிறுநீரகத்திலும் கோளாறு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் கை, கால்கள் அடிக்கடி வீங்கிக்கொள்கிறது. இதனால்  அவஸ்தையில் தவிக்கிறார்.  நடக்க முடியாமல், வீல் சேர் மூலம்தான் செல்கிறார். (மேலும்...)

 

 

வைகாசி 18, 2011

இந்தியாவிடம் இலங்கை உறுதி

13 வது திருத்தத்தின் அடிப்படையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்த முடியும்

இலங்கையின் அரசியலமைப் பின் 13ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு அதிகாரப் பரவலாக்கலை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவ தற்கான சாதகமான சூழலை உருவாக்க முடியுமென இலங்கை இந்தியாவிற்கு தெரிவித்துள்ளது. இதேவேளை, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவ நாடுகளின் எண்ணிக்கையை அதிகரித்து, இந்தியாவிற்கு நிரந்தர அங்கத்துவத்தைப் பெற்றுக் கொடுக்க இலங்கை பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்றும், இலங்கை இந்தியாவிற்கு உறுதியளித்துள்ளது. (மேலும்....)

வைகாசி 18, 2011

யாழ்ப்பாணத்தில் நாளை 7 அரச கட்டடங்கள் திறப்பு

குவைட் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் யாழப்பாணத்தில் சுமார் 60 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப் பட்டுள்ள ஏழு அரச கட்டிடங்களை அமைச்சர் ஜோன் செனவிரத்ன நாளை திறந்து வைக்கவுள்ளார். நாளை 19 ஆம் திகதி யாழ்ப்பாணத் திற்கான மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொள்ளும் அமைச்சர் ஜோன் செனவிரத்ன, 20 ஆம் திகதி யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம சேவர்களுக்கான விசேட மாநாடொன்றையும் நடத்தவுள்ளார். புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அரச கட்டிடங்களில் உடுவில் பிரதேச செயலகம், பருத்தித்துறை பிரதேச செயலக விடுதி, யாழ்ப்பாணம் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் விடுமுறை விடுதியும் உள்ளடங்குவதாக அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

வைகாசி 18, 2011

Israel’s border massacre and human rights hypocrisy

The Obama administration’s reaction to Israel’s massacre Sunday of unarmed Palestinian protesters on its borders underscores the hypocrisy of those ascribing “humanitarian” motives to Washington’s predatory policy in the region. Israeli troops opened fire with live ammunition and, in one case, tank fire on Palestinians who demonstrated on Israel’s borders with Syria, Lebanon, the West Bank and Gaza. Tens of thousands joined in the protests, which were called to commemorate the 63rd anniversary of the Nakba (Arabic for catastrophe), the term used by the Palestinians for Israel’s declaration of independence and the wholesale ethnic cleansing that drove three-quarters of a million Palestinians from their homes in 1948. (more....)

வைகாசி 18, 2011

கானல் நீராகும் கனவுகள்

அ.அன்வர்உசேன்

“மார்க்சிஸ்ட் கட்சிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுவிட்டது.”

“இடதுசாரி அணி இனி தலைதூக்க முடியாது”

“மேற்கு வங்கத் தோல்வியால் மூன்றாவது அணி இனி கானல் நீர்தான்”.

மேற்குவங்கத்தில் இடதுசாரி அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. எனினும் சில ஊடகங்கள் தமது ஆசைகளை வெளியிடு வது போல மார்க்சிஸ்ட் கட்சியோ அல்லது இடதுசாரி அணியோ தலை தூக்க முடியாத அளவிற்கு தோல்வி அடைந்துள்ளதா? மிகப் பெரும்பாலான மக்கள் இடதுசாரி அணியிட மிருந்து விலகிவிட்டனரா? இக்கேள்விகளுக்கு, இல்லை என்பதே பதிலாகும்.
(மேலும்...)

வைகாசி 18, 2011

 

எங்கள் நாட்டில் விருந்தோம்பல் பண்பு தழைத்தோங்கியுள்ளது

இந்த விருந்தோம்பல் பண்பு இன்று இலங்கையிலும், வேரூன்றி யுள்ளது. ஒரு தமிழர் அல்லது ஒரு முஸ்லிம் அல்லது ஒரு சிங்கள சகோதரரின் வீட்டுக்கு வருபவர் எந்த இனத்தைச் சார்ந்த வராக இருந்தாலும் கொஞ்சம் சாப்பிடுங்கள், என்று அவர்கள் வருந்தி அழைத்து அன்புத் தொல்லை கொடுப்பதை நாங்கள் எங்கள் நாளாந்த வாழ்க்கையில் பார்க்கின்றோம். இவை அனைத்துமே பண்டைய விருந்தோம்பல் மரபு வழியில் தோன்றிய நற்பழக்கங்களாகும். பொதுவாக நம் நாட்டவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் சளைத்தவர்கள் அல்ல. அவ்விதம் உதவி செய்யும் போது, அவரது இனம், மதம், குலம் மற்றும் பிரதேச வேறுபாடுகளை அவர்கள் பொருட்படுத்து வதில்லை. வாகன விபத்தொன்றில் காயமடைந்தவர்களை, தங்கள் சொந்த இரத்த உறவுகளைப் போன்று நம் நாட்டு மக்கள் கஷ்டப்பட்டு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்று அவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் நற்பண்பை உடையவர்கள். மேற்கத்திய நாடுகளில் இவ்விதம் ஆபத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக் கின்றது. அவர்கள் ஒரு விபத்தில் காயமடைந்தவர் உயிரோடு போரா டிக் கொண்டிருப்பதை கண்டாலும், அவர்கள் அம்புலன்ஸுக்கு அறிவிப்பார்களே ஒழிய, தங்கள் கைகளால் காயமடைந்தவர்களை தனது வாகனத்தில் ஏற்றி, ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதில்லை. (மேலும்....)

வைகாசி 18, 2011

பிலிப்பைன்ஸ் செல்லும் இலங்கையருக்கு அந்நாட்டு விமான நிலையத்தில் விசா

பிலிப்பைன்சுக்கு செல்லும் இலங்கையர் களுக்கு விமான நிலையத்திலேயே நுழைவு விசா (On Arrival Visa)  வழங்க பிலிப்பைன்ஸ் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பிலிப்பைன்சுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டி ருந்த பிரதமர் டி. எம். ஜயரட்னவிற்கும் அந்நாட்டின் ஜனாதிபதி பெனிங்னோ அகினோவிற்குமி டையில் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் போதே இதற்கான இணக்கப்பாடு காணப்பட்டு ள்ளது. பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற மேற்படி பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார நடவடிக்கைகள், இலங்கைக்கும் பிலிப்பைன்சுக்கும் இடையிலான நேரடி விமான சேவையை மீள ஆரம்பிப்பது, ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தல், பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னணி முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடுகளில் ஈடுபடுத்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளன.

வைகாசி 18, 2011

வன்னியில் வாழும் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு

வன்னிப் பிரதேசத்தில் உள்ள தமிழ் அரசியல் தலைமைகளின் ஒத்துழைப்புடன் வவுனியா மாவட்டத்தில் குடியேறியுள்ள மலையக மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது காலத்தின் அவசியமாகும் என மலையக மக்கள் முன்னணியின் அரசியல் பிரிவு தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நேற்று முன்தினம் திங்கள் மாலை வவுனியா முத்தையா மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் கலந்துரையாடலில் பேசிய போது அவர் மேற்கண்டவாறு கூறினார். நாங்கள் எந்த இலாபமும் தேடி இங்கு வரவில்லை. மக்களுக்கு உதவி செய்யும் நோக்குட னேயே வந்துள்ளோம். இந்த பிரசேத்தின் அரசியல் தலைமைத் துவத்தினை நாங்கள் பகைத்துக்கொள்ளப் போவதில்லை. இணைந்துசெல்லவே விரும்புகின்றோம். (மேலும்....)

வைகாசி 18, 2011

கடன் உச்சநிலை எட்டியதால்  அமெரிக்கா அவசர நிலை நடவடிக்கை

கடன் உச்சநிலையான 14.29 லட்சம் கோடி டாலர் அளவை எட்டியதைத் தொடர்ந்து குறைபாட்டு நிலையை தவிர்க்க அமெரிக்கா அவசர நிலை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இது குறித்து அமெரிக்க நிதித்துறை அமைச்சர் திமோதி கெய்த்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கடன் உச்சநிலை உயர்த்தப்படா விட்டால் திடீர் பொருளாதார மாற்ற விளைவுகள் ஏற்படும் என எச்சரித்து உள்ளார். அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோபிடேன் நாடாளுமன்ற தலைவர்களுடன் கடன் உச்சநிலையை உயர்த்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். (மேலும்...)

வைகாசி 18, 2011

 

சவூதி இராஜதந்திரியின் கொலைக்கு தலிபான் பொறுப்பேற்பு

பாகிஸ்தானுக்கான சவூதி அரேபிய தூதுவ அதிகாரி கொல்லப்பட்ட சம்பவத்திற்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. சவூதி அரேபிய தூதரக அதிகாரி ஒருவர் தனது காரில் நேற்று முன்தினம் அலுவலகத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார். அலுவலகத்திற்குள் நுழைய இன்னும் 200 அடிகளே இருந்த நிலையில், மோட்டார் சைக்கிள்களில் வந்த அடையாளம் தெரியாத நான்கு பேர், அவரது காரை நோக்கிச் சுட்டனர். அதில் ஒரு குண்டு அதிகாரியின் தலையில் பாய்ந்ததில் அவர் கொல்லப்பட்டார். இச்சம்பவத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. எனினும் வரவேற்கிறோம்” என்று முதலில் அறிக்கை விட்ட தலிபான்கள், பின்னர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.  இது குறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், ‘பாக் மற்றும் சவூதி இரண்டும் அமெரிக்காவின் அடிமைகள் இத்தாக்குதல் சரியாக நிறைவேற்றப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளனர்.

வைகாசி 18, 2011

MP Rathika Sitsabaiesan: UN (Darusman) Report on Sri Lanka

Tamil Tiger war-chest to buy sophisticated weapons and explosive materials to make bombs to support their blood thirsty Tamil Tiger terrorists to extend their killing fields from the north to the south, and from the east to the west of Sri Lanka. I am surprised and disappointed that this rookie MP has not considered asking the Canadian parliament to officially apologize to the Sinhalese and Muslim Sri Lankan-Canadian communities for supporting directly and indirectly this Tamil Tiger terrorist war, as we Canadians under your Government have started to cleanse our souls by officially apologizing to the Chinese-Canadian community for the use of the head tax and the exclusion of Chinese immigrants to Canada.   Like the former Liberal MP Ruby Dhalla making a pitch and overseeing the Government apologize to the Canadian-Sikh community for the Komogata Maru incident.  Like your government officially apologizing to the Inuit community for enacting policies to relocate Inuit families from their homes in Inukjuak located in Northern Quebec. (more....)

வைகாசி 18, 2011

பூமி ஈர்ப்பு சக்தி குறைவான தென் பகுதியில் பூமி அதிர்ச்சி அழிவுகள் குறைந்திருக்கும்

சமீபத்தில் உலகில உள்ள புவி ஈர்ப்பு சக்தி குறித்து விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் இலங்கையின் தென் மாகாணத்தில் குறிப்பாக கரையோரப் பிரதேசத்தில் மற்றைய இடங்களைவிட புவி ஈர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பை அடிப்படையாக வைத்து நம் நாட்டு விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் பூமிக்கு அடியிலுள்ள தகடுகளின் வலுகை அடிப்படையாக வைத்தே புவி ஈர்ப்பு சக்தி குறைந்தும் கூடியும் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டுள்ளார்கள். தென் மாகாணத்திற்கு கீழுள்ள தகடுகளின் சக்தி குறைவாக இருப்பதே அங்கு புவி ஈர்ப்பு சக்தி குறைந்திருக்க ஒரு காரணம் என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள்.  இந்த புவி ஈர்ப்பு சக்தி குறையும் போது பூமி நடுக்கங்களினால் ஏற்படக்கூடிய தாக்கத்தை தகடுகள் ஏற்றுக்கொண்டு அழிவுகளை குறைப்பதற்கு உதவுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். (மேலும்....)

வைகாசி 18, 2011

இந்திய மத்திய அமைச்சரவையில் இருந்து திமுக வெளியேறுகின்றது.....?

அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தயாராகி விட்டது......?

முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கூறி தேநீர் விருந்துக்கு வருமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்ததால் பெரும் அதிருப்தி அடைந்துள்ள தி.மு.க மத்திய அரசாங்க அமைச்சரவையிலிருந்து விலகி வெளியிலிருந்து ஆதரவு தருவது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. தி.மு.கவின் தோல்விக்கு காங்கிரஸும் ஒரு காரணம் என்பதை மறந்து விட்ட அந்தக் கட்சி அவசரம் அவசரமாக ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கூறியது. மேலும் சோனியா காந்தியோ ஜெயலலிதாவுடன் 2 முறை தொலைபேசியில் பேசி வாழ்த்து கூறினார். தேநீர் விருந்துக்கும் வருமாறு அழைப்பும் விடுத்தார். (மேலும்....)

வைகாசி 18, 2011

Dutch Tamils arrested for illegal Tigers fundraising

Tamils in the Netherlands have been forced to donate money to the LTTE, the Tamil separatist army, to pay for its war against Sri Lanka’s government army. Dutch court authorities say the Tigers held these people in ‘a stranglehold’, forcing them to pay a ‘war tax’. The investigation has been going on for two years. Several people have been arrested, including the alleged leader of the Dutch branch of the Tigers. (more....)

வைகாசி 18, 2011

சென்னை அருகே நடிகர் வடிவேல் பண்ணை வீடு மீது தாக்குதல்

சென்னையை அடுத்த படப்பை அருகே நடிகர் வடிவேலுவின் பண்ணை வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள் மர்ம நபர்களால் திங்கட்கிழமை அடித்து நொருக்கப்பட்டது. திங்கட்கிழமை மாலை வடிவேலுவின் பண்ணைக்கு வந்த சுமார் 30க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் காவலாளி வேலுவிடம் வடிவேலுவின் தொலைபேசி எண்ணைக் கொடுக்குமாறு மிரட்டினராம். அதற்கு அவர் தொலைபேசி எண் தெரியாது என்று கூறினாராம். மர்ம நபர்கள் வீட்டின் 6 கண்ணாடி ஜன்னல்களை அடித்து நொருங்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் வரும் சனிக்கிழமைக்குள் இந்த இடத்தை காலி செய்துவிட வேண்டும் என்றும் இல்லையென்றால் நாங்களே ஜேசிபி இயந்திரம் கொண்டு வந்து வீட்டை இடிப்போம் என்றும் மிரட்டிச் சென்றனராம்.

வைகாசி 17, 2011

மீண்டும் சாவேஸ் வெற்றி பெறுவார்! கருத்துக்கணிப்புகள் தகவல்

இடதுசாரிக்கொள் கைகளைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வரும் வெனிசுலாவின் ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ், அடுத்த ஆண்டு நடைபெறவிருக் கும் ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவார் என்று பல்வேறு கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. இந்தக்கருத்துக்கணிப்பு களின் முக்கிய அம்சங்கள் பல செய்தித்தாள்களில் பிர சுரமாகியுள்ளன. கிட்டத் தட்ட பாதிக்கும் மேற்பட்ட வெனிசுலா மக்கள், சாவே சின் அரசு நல்ல முறையில் செயலாற்றி உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்கள். இவ் வாறு கருத்து தெரிவித்தவர் களில் பெரும்பாலானவர் கள் நடுத்தர மற்றும் ஏழை மக்கள்தான் என்று தெரி கிறது. சாவேசுக்கு ஆதரவு தொடர்வதற்கு அரசியல் மற்றும் சமூக ரீதியான கார ணங்களே சுட்டிக்காட்டப் படுகின்றன. (மேலும்...)

வைகாசி 17, 2011

TELO இயக்கப் போராளிகள் அழிக்கப்பட்டு 25 ஆண்டுகளின் பின் - சபா நாவலன்

(இக் கட்டுரையின் சாராம்சத்தில் பிழைகள் பெரிய அளவில் இல்லை. ஆனால் சம்பவங்கள் பற்றி சில தகவல் பிழைகள் உள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம் -ஆர்)

இவையெல்லாம் வெறுமனே சம்பவங்களோ மறுபடி இரைமீட்பதற்கான வரலாற்றுப் பதிவுகளோ அல்ல. நமது தவறுகள் ஒரு சுழற்சி போல ஒரு எல்லைக்குள்ளேயே மீண்டு வருகின்ற போது மீண்டும் மீண்டும் கற்றுக்கொள்ள வேண்டியவை. அதிலும், தமிழ்ப் பேசும் மக்கள் மீதான் ஒடுக்குமுறை திட்டமிட்டு இலங்கை அரசிற்கும் புலிகளுக்கும் இடையேயான போர் என்ற விம்பம் உருவமைக்கப்பட்ட நாளிலிருந்து மிகவும் அவதானமாகக் கையாளப்பட வேண்டிய கற்கைகள். இந்த விம்பத்தின் ஒருபகுதியான புலிகளுக்கு எதிரன அரசியலெல்லாம் இலங்கை அரச சார்பானதாக மாற்றமடைந்து விடுமோ என்ற அச்சம் எழுவது இயல்பானது. இவற்றிலிருந்து வெளியேறி, தவறுகளை சுயவிமர்சம் செய்துகொள்ளவும், அதன் வெளிச்சத்தில் ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் சரியான திசைவழியை நோக்கிச் செல்லவேண்டும் என்பதுவும் சமூகப்பற்றுள்ள ஒவ்வொரு மனிதனதும் அவா. (மேலும்....) (இதே விடயமான மேலதிக வாசிப்பிற்கு....)

வைகாசி 17, 2011

இலங்கை விடயங்களில் வியட்நாம் கரிசனை

இலங்கையில் அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு உலக நாடுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென வியட்நாம் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மாறாக நாட்டில் குழப்ப நிலைமைகளை ஏற்படுத்துவதற்கு சர்வதேச சமூகம் முனைப்பு காட்டக் கூடாது என இலங்கைக்கான வியட்நாமின் புதிய தூதுவர் டொன் சின் தன்ஹா தெரிவித்துள்ளார். புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் நம்பகரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் குறித்து இலங்கை அரசாங்கமும் நிதானமாக செயற்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். (மேலும்....)

வைகாசி 17, 2011

கொள்கலன் ஒன்றில் கனடாவிற்கு அனுப்பி வைக்கப்படவிருந்த புலிகளின் பிரச்சாரப் பொருட்கள் மீட்பு!

புலிகளின் பாரியளவிலான பிரச்சாரப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுவரொட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சாரப் பொருட்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. கொள்கலன் ஒன்றில் கனடாவிற்கு அனுப்பி வைக்கப்படவிருந்த பொருட்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து கப்பல் மூலமாக இந்தப் பொருட்கள் கனடாவிற்கு அனுப்பி வைக்கப்படவிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேகத்தின் பேரில் குறித்த கொள்கலன்களை கொழும்பு சுங்கப் பிரிவினர் சோதனையிட்ட போது, பாரிய அளவிலான புலிகளின் சுவரொட்டிகள் மற்றும் ஏனைய பிரச்சாரப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. எங்கிருந்து, யாரால் இந்தப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது புலிகளின் தற்போதைய தமிழ் நாட்டு ‘செந்தமிழன்’ இன் வேலையாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்

வைகாசி 17, 2011

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தேசிய அமைப்பாளர் பிரதீப் கைது

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் கிருஷ்ணானந்தராஜா நேற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் இருந்து சென்ற விசேட பொலிஸ் குழு நேற்று மாலை இவரை கைது செய்துள்ளது. அண்மையில் இடம்பெற்ற சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு நகர அமைப்பாளர் மதியழகன் கொலைச் சம்பவம் தொடர்பிலேயே விசாரணை நடத்துவதற்காக இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றுக் காலை இவரது உதவியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டதாகவும் அதனை தொடர்ந்தே இவரும் கைதானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வைகாசி 17, 2011

ஈராக் தாக்குதலின் போது அமெரிக்காவுடன் ரகசியமாக பங்கேற்ற கனேடிய படைகள்

ஈராக் நாட்டின் மீது அமெரிக்கா 2003ம் ஆண்டில் சர்ச்சைக்குரிய படை யெடுப்பு தாக்குதலை நடத்தியது. இந்த படையெடுப்பை ஆதரிக்க மாட் டோம் என 2003ம் ஆண்டு மார்ச் 17 ஆம் திகதி கனடாவின் அப்போதைய பிரதமர் ஜீன் செரிடன் பொதுச் சபையில் அறி வித்தார். கனடாவின் நிலைப்பாட்டுக்கு அவரது லிபரல் காகஸ் கட்சி உறுப்பினர் பலத்த ஆரவாரத்துடன் ¨கையொலி எழுப்பின. ஆனால் அதே நாளில் கனடா வின் உயர் மட்ட அதிகாரி அமெரிக்காவின் தாக்குதலுக்கு ரகசிய இராணுவ உதவி அளிப்பதாக உறுதியளித்தார். (மேலும்....)

வைகாசி 17, 2011

விஜேவீர, பிரபாகரன், மற்றும் பின் லாடன் ஆகியோரது மூன்று கொலைகள்

-  விக்டர் ஐவன்

அமெரிக்காவின் முதல்தர எதிரியும், முழு அமெரிக்காவையும் கிடுகிடுக்க வைத்த பயங்கரவாதியுமான பின் லாடனை இறுதியில் அமெரிக்காவால் ஒருவழியாகக் கொல்ல முடிந்தது. சில காலங்களுக்கு முன்பு அமெரிக்காவின் புலனாய்வுப் பிரிவுகளால் பின் லாடன் பாகிஸ்தானிலுள்ள அபோட்டாபாத் எனுமிடத்திலுள்ள ஒரு மாளிகையில் மறைந்து வாழுவதைக் கண்டுபிடிக்க இயலுமாகவிருந்தது. கண்டுபிடிப்புகள் உறுதியாக்கப் பட்டதும், அமெரிக்காவின் ஜனாதிபதியும் மற்றும் அவரது சிரேஷ்ட உதவியாளர்களும் உலகின் மறுபக்கத்திலிருந்து வீடியோ ஒளித்திரைகளில் நடைபெறும் நடவடிக்கைகளை பார்வையிட்டுக் கொண்டிருக்கையில் பின் லாடனை கொலை செய்யும் திட்டம் மேற்கொள்ளப் பட்டது. கிடைக்கப் பெற்றிருக்கும் தகவல்களின் அடிப்படையில் இந்தத் திட்டம் சீல் என அழைக்கப்படும் விசேட படைப் பிரிவைச் சேர்ந்த ஆறு கடற்படை உத்தியோகத்தர்களின் விசேடமான குழுவானது மூன்று உலங்கு வானூர்திகளைப் பயன்படுத்தி இந்தத் திட்டத்தை நிறைவேற்றின. (மேலும்....)

வைகாசி 17, 2011

ஐ.நா. அமைதிகாக்கும் படையிலுள்ள பொலிஸ் பிரிவில் இலங்கை அதிகாரிகள்

ஐ.நா. அமைதிகாக்கும் படையிலுள்ள பொலிஸ் பிரிவில் இலங்கையைச் சேர்ந்த நூறு அதிகாரிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நடைபெற்ற தேர்வில் சுமார் 700 பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டதாகவும் அதில் 100 அதிகாரிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். _

வைகாசி 17, 2011

யாழ்ப்பாணம் கிளிநொச்சியில்இரண்டு சடலங்கள் மீட்பு

யாழ்ப்பாணம் கச்சேரியடியிலுள்ள விடுதியிலிருந்து இளைஞன் ஒருவரது சடலமும் கிளிநொச்சி நாச்சிக்குடாப்பகுதியிலிருந்து இளம் பெண்ணொருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளன. கச்சேரியடி சோமசுந்தரம் வீதியிலுள்ள விடுதியிலிருந்து மர்மமான முறையில் இறந்த இளைஞனின் சடலம் நேற்று முன்தினம் மாலை மீட்கப்பட்டது. சடலமாக மீட்கப்பட்டவர் கொழும்புத்துறையைச் சேர்ந்த துரைராசா சுரேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது வாயில் இரத்தக்கசிவுடன் நுரையும் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவரது மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளமையினால் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  இதேபோல் கிளிநொச்சி நாச்சிக்குடாப்பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண்ணொருவரின் சடலம் நேற்றுக்காலை மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலத்தில் அடிகாயங்கள் காணப்படுவதாகவும் உடற் பகுதிகளில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விமலதாசன் பவிதா (வயது 19) என்ற இளம்பெண்ணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ___

வைகாசி 17, 2011

இஸ்ரேல் எல்லைப் பகுதிகளில் கலவரம்

போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு 17 பேர் பலி

இஸ்ரேல் உருவாக்கப்பட்டு 63 ஆண்டு நிறைவையொட்டி அந்நாட்டு எல்லைப் பகுதிகளில் நடந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் 17 பேரளவில் கொல்லப்பட்டுள்ளதோடு நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். 1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் உருவாக்கப்பட்டு 63 ஆவது ஆண்டு நிறைவு தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இஸ்ரேல் உருவாக்கத்தின்போது 700,000 பலஸ்தீனியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனை ‘நிக்பா’ தினம் என்று வர்ணிக்கும் பலஸ்தீன் மற்றும் எல்லைப்புற அரபு நாடுகள் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் இஸ்ரேல் எல்லையில் கூடி எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். பலஸ்தீனின் காசா பகுதி மக்கள் மற்றும் சிரியா, லெபனான் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். (மேலும்....)

வைகாசி 17, 2011

சகல சமூகங்களையும் திருப்திப்படுத்தும் தீர்வுகளே வெற்றிபெற முடியும்

நாட்டின் சகல சமூகங்களையும் திருப்திப்படுத்தக் கூடிய தீர்வுகளே வெற்றிபெற முடியும். எந்த வொரு தரப்பையும் ஒதுக்கி வைத்துவிட்டு தீர்வுகாண முற்பட்டால் அதில் வெற்றியடைய முடியாது. சுனாமி கட்டமைப்பு என்று திணிக்கப்பட்ட தீர்வு முயற்சி தோல்வியில் முடிந்தது அதற்குச் சான்றாகும். இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். (மேலும்....)

வைகாசி 17, 2011

அணு ஆலைகளை இழுத்து மூட முடிவு

ஜப்பான் பிரதமருக்கு மக்கள் பெரும் ஆதரவு

ஜப்பானின் ஹம வோக்க அணுமின் நிலை யத்தை இழுத்து மூட உத்தரவிட்ட அந் நாட்டு பிரதமர் நவோட்டோ கானுக்கு மக்கள் பெரு மளவில் ஆதரவு அளித் துள்ளனர். ஜப்பானில் கடந்த மார்ச் 11ம் திகதி ஏற்பட்ட சுனாமி நிலநடுக்கத்தை அடுத்து புகுஷிமா டாய் இச்சி அணுமின் நிலையம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து எதிர்கால அணுமின் நிலையத் திட்டங்களை அந் நாட்டு அரசு கைவிட்டது. தலைநகர் டோக்கி யோவில் இருந்து 200 கி.மீ தென்மேற்கில் அமைந்துள்ள ஹம்வோக்கா அணுமின் நிலையத்தை பாதுகாப்பு கருதி இழுத்த மூடும்படி பிரதமர் நவோட்டோ கான் உத்தரவிட்டார். பிரதமரின் இந்த உத்தரவு குறித்து நாட் டில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 66.2 சதவீதம் பேர் பிரதமருக்கு ஆதரவு தெரி வித்துள்ளனர். 47 சதவீதம் பேர் நாடு முழு வதும் உள்ள அணுமின் உலைகளின் எண் ணிக்கையைக் குறைக்கும் ஆலோசனையை வரவேற்றுள்ளனர். 29.7 சதவீதம் பேர் மட்டுமே பிரத மரின் உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

வைகாசி 17, 2011

சம்புத்த ஜயந்தி

 

2600 கைதிகள் இன்று விடுதலை

2600 ஆவது சம்புத்த ஜயந்தியை முன்னிட்டு 800 சிறைக்கைதிகளை களனி விகாரையில் நடைபெறும் சமய அனுஷ்டானத்தைத் தொடர்ந்து விடுதலை செய்யும் தேசிய நிகழ்வொன்று இன்று பிரதமர் தி. மு. ஜயரத்ன தலைமையில் நடைபெறும். 2600 வது சம்புத்த ஜயந்தியை முன்னிட்டு 2600 கைதிகளை விடுதலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஏனைய சிறைகைதிகள் சிறைச்சாலைக்கு அருகிலுள்ள விகாரைகளில் வைத்து விடுதலை செய்யப்படுவார்களென்று புனரமைப்பு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஏ. தஸநாயக்க தெரிவித்தார். பொது மன்னிப்புக்காக 75 வயதிற்கு மேற்பட்டவர்களும் சிறு குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்டவர்களும் தெரிவு வெய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். (மேலும்....)

வைகாசி 17, 2011

டுபாயின் கட்டுப்பாட்டிலுள்ள தளத்திலிருந்தே அமெரிக்கா ஏவுகணை தாக்குதல்

பாகிஸ்தானில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் கட்டுப்பாட்டிலுள்ள விமானத் தளத்திலிருந்தே அமெரிக்கப்படை ஏவுகனை தாக்குதல்களை நடத்துவதாக பாக். விமானப்படை தளபதி ஏர். மார்ஷல் முகம்மது ஹுஸைன் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க இராணுவம் பாகிஸ்தானில் உள்ள தலிபான்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதலை அமெரிக்கா நடத்துவதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து உள்ளது. பாகிஸ்தானில் பலுசிஸ்தானில் உள்ள ஷாம்சி விமான தளத்தில் இருந்து தான் இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த விமானத்தளம் பாகிஸ்தானில் இருந்தாலும் அது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் டுபாய்நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த விமானதளத்தை அந்த நாடு தான் கட்டியது. அதனால் அது அந்த நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த நாடுதான் இந்த விமான தளத்தை அமெரிக்காவிடம் ஒப்படைத்துள்ளது.

வைகாசி 17, 2011

சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கை

இலங்கை - இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் டில்லியில் பேச்சு

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு புதுடில்லி சென்றிருக்கும் இல ங்கை வெளி விவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் இந்திய வெளி விவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இச்சந்திப்பு நேற்று நண்பகல் புதுடில்லியிலுள்ள ஒப்ரோய் ஹோட்டலில் நடைபெற்றது. இதன்போது அமைச்சர் பீரிஸ், சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கை தொடர்பான இலங்கை யின் நிலைப்பாடு குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவுடன் கலந்துரையாடியதாக வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார். மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் இந்திய விஜயம் மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்குடனான சந்திப்பு ஆகியன தொடர்பாகவும் இரு அமைச்சர்களும் இப் பேச்சுவார்த்தையின் போது கலந்துரையாடியு ள்ளதாகவும் அவ்வதிகாரி கூறினார். (மேலும்....)

வைகாசி 16, 2011

தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார்!

தமிழக முதல்வராக ஜெயலலிதா இன்று பதவியேற்றார். அவருக்கு, ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைத் தொடர்ந்து, ஓ.பன்னீர் செல்வம் உள்பட 33 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். இந்த நிகழ்ச்சியில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற முக்கிய கட்சியான தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த், அவரது கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் சுதீஷும் பங்கேற்றனர்.  தா.பாண்டியன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர். திரையுலக பிரமுகர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.(மேலும்...)

வைகாசி 16, 2011

ரெலோ மீதான தாக்குதலுக்கு மன்னிப்புக் கோருகிறேன்! தாக்குதல் நடாத்திய முன்னாள் புலி வாசுதேவன்!

K. Padmanabha, Sri Sabaratnam, V. Balakumar and V. Prabakaran in 1986.

சரியாக 22ஆண்டுகள் கழித்து 2009மே மாதம் தொலைக்கட்சி ரேடியோ ஏன் உலகம் எல்லாமே அலறியது வெள்ளைக்கொடியுடன் பேசச் சென்றவர்கள் சுட்டக்கொல்லப்பட்டார்கள் என்று! அன்று கோண்டாவிலில் அந்த பெரியவர் என்ன சொன்னாரே அது நடந்தேறி விட்டது! வெள்ளைக் கொடி, சரணடைவு, நிராயுதபாணியாக கொலை என்று நாம் மீளவும் இன்று அங்கலாய்கிறோம்… ஆத்திரப்படுகிறோம்… அவமானப்படுகிறோம். ஆனால் அன்றும் இது நடைபெற்றது. யாரும் ஆத்திரப்படவில்லை, அவமானப்படவில்லை, ஐநாவிடம் சென்று நியாயமும் கேட்கவில்லை! 25 ஆண்டுகள் சென்று விட்டது இன்று கூட இதைப்பற்றி ஒரு சுயவிமர்சனத்தை செய்யவோ குறைந்த பட்சம் ஒரு பொது மன்னிப்பு கேட்க கூட தயாராக இல்லை.கேட்க ஆயத்தப்படுத்தியவரையும் துரோகியாக்கி இறுதியில் அவரின் மன்னிப்பையும் காட்டிக்கொடுப்பு என்று ஏளனம் செய்கிறார்கள். (மேலும்...)

வைகாசி 16, 2011

தமிழக முதலமைச்சராக இன்று   ஜெயலலிதா பதவியேற்கிறார்

தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா திங்களன்று பதவியேற்கிறார். அதிமுக அரசு பதவி யேற்பதையொட்டி அமைச்சர்கள் பட்டியலை யும் அவர் வெளியிட்டுள் ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் 146 இடங்களைப் பெற்று அமோக வெற்றி பெற்ற அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஞாயிறன்று ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதைத் தொடர்ந்து அவரை ஆட்சி யமைக்குமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதை யடுத்து திங்களன்று பகல் 12.15 மணிக்கு ஜெயலலிதா முதல்வராகப் பதவி ஏற்பார் என்று தலைமைச் செயலா ளர் மாலதி அறிவித்தார். முன்னதாக, புதிதாக தேர்வு செய்யப்பட்ட அதி முக எம்எல்ஏக்கள் கூட்டம் ஞாயிறன்று காலை அக் கட்சியின் தலைமை அலுவ லகத்தில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத் தில் ஜெயலலிதாவை சட்ட மன்ற கட்சித் தலைவராக (முதல்வராக) தேர்ந்தெ டுத்து தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. (மேலும்...)

வைகாசி 16, 2011

Canadian Supreme Court has ordered the expulsion of a leading LTTE sea tiger

Canadian Supreme Court has ordered to expel former leading figure of LTTE sea force, Vigu Vignashvaran alias Vigu from Canada. The sea tiger leader has requested political asylum in Canada and Canadian Supreme Court has rejected his appeal. Canadian CID(RCMP) and emigration and immigration department have  presented video tapes that show the suspect conducting military operations for  the LTTE to the Supreme Court. Vigu is the second LTTE carder who has been  evicted by the Canadian Supreme Court.

வைகாசி 16, 2011

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் வாழ்த்துகின்றது

 People's Liberation Organization of Tamil Eelam

தமிழகத்தின் கௌரவ முதல்வர் ஜெயராம் ஜெயலலிதா அவர்கட்கு, 

ஈழத்தமிழ் மக்களிற்கு கௌரவத்துடன் கூடிய அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதுடன், சர்வதேச பிரச்சினையான இந்த விடயத்தில் மாநில அரசு தலையிட முடியாது. ஆகவே மத்திய அரசு இதில் தலையிட்டு உரிய தீர்வை பெற்று கொடுப்பதற்கு   அழுத்தத்தை கொடுப்பேன் என்று தாங்கள் தெரிவித்துள்ளதை தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் சர்வதேச செயலகம் நம்பிக்கையுடன் வரவேற்கின்றது. (மேலும்...)

வைகாசி 16, 2011

பரிதாபத்திற்குரிய தேசமாய் பாகிஸ்தான்

முதல்முறையாக பாகிஸ்தான், அமெரிக் காவுக்கு பகிரங்கமாக கண்டனம் தெரிவித் துள்ளது. பாகிஸ்தானில் உள்ள அபோட்டாபாத் நக ரில் பாகிஸ்தானுக்கே தெரியாமல் விமானத் தாக் குதல் நடத்தி, பின்லேடனை அமெரிக்க ராணு வப் படைகள் கொலை செய்தன. கொல்லப்பட் டவர் சர்வதேச பயங்கரவாதியாகவே இருந்தா லும், மற்றொரு நாட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தி, அவரைக் கொல்கிற உரிமை அமெரிக் காவுக்கு மட்டுமே உரித்தானது என்ற ரீதியில், உலகெங்கிலும் ஊடகங்கள் செய்தி பரப்பின. அமெரிக்காவின் செயலை நியாயப்படுத்தின. ஆனால், தான் ஒரு இறையாண்மைமிக்க நாடு என்பதை உலகிற்குச் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் பாகிஸ்தானுக்கு எழுந்துள்ளது. அந் நாட்டின் பிரதமரோ, ஜனாதிபதியோ இன்று வரையிலும் பகிரங்கமாக அமெரிக்காவை கண்டிக்கவில்லை. ஆனால், அனைத்துப் பிர தேசங்களின் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தால் சும்மா இருக்க முடியவில்லை. (மேலும்...)

வைகாசி 16, 2011

தி.மு.க வை மக்கள் முற்றாக புறக்கணிக்கவில்லை - வடிவேலு

தேர்தலில் மக்கள் அளித்துள்ள மகத்தான தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன். மாற்றம் வேண்டும் என்பதற்காக பலரும் மாற்றி வாக்களித்துள்ளனர். மக்களுக்கு நல்லது செய்வார் என எதிர்பார்த்து ஜெயலலிதாவுக்கு வாக்களித்திருக்கலாம். தி.மு.கவை விட அதிக ஓட்டுகள் பெற்றதால் அ.தி.மு.க ஆட்சியை பிடித்துள்ளது. அதே நேரத்தில் தி.மு.க வை ஒட்டுமொத்தமாக மக்கள் புறக்கணித்துவிடவில்லை. ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்று தான் மக்கள் அ.தி.மு வுக்கு வாக்களித்துள்ளனர். அ.தி.மு.க வுடன் சேர்ந்ததால் தே.மு.தி.கவும் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெற்றால் நல்லது செய்ய வேண்டும். அதைவிட்டு கட்சி தொண்டர்களை ஏவி, எனது வீட்டை கல்வீசி தாக்க செய்துள்ளார். இது விஜயகாந்திற்கு நல்லது அல்ல. நான் எங்கேயோ ஓடி ஒளிந்து விட்டதாக கூறுகின்றனர். மதுரையில் என் தாயாருக்கு பாதுகாப்பாக என் வீட்டிலேயே தங்கியிருக் கிறேன். சென்னையில் 75 பொலிஸார் எனது வீட்டிற்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். மதுரையிலும் என் வீட்டின் மீது நேற்று முன்தினம் இரவு கல்வீசி தாக்கியவர்களை பொலிசார் விரட்டியடித் துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

வைகாசி 16, 2011

Refugee board says government evidence on alleged terrorist is speculation

An immigration board adjudicator chose the word of a Tamil migrant over accusations from the federal government that the man was part of a terrorist group. Leeann King ruled the man can make a refugee claim in Canada and she systematically dismantled the federal government's evidence against him, calling the information trivial, unreliable and riddled with mistakes and speculation."In this case, what (the man) has told officers and what he testified to before me about what happened to him in Sri Lanka is the only credible and trustworthy evidence before me," she concluded in her ruling Thursday. (more....)

வைகாசி 16, 2011

திரிபோலியில் ஓர் அட்டூழியம்

(பிரகாஷ் காரத்)

மே 1ஆம் நாளன்று நேட்டோ படை யினர் திரிபோலியில் மக்கள் குடியிருப்புப் பகுதியில் ஒரு கட்டிடத்தின்மீது ஏவு கணைத் தாக்குதலை நடத்தியிருக்கின் றனர். அத்தாக்குதல் கடாபியைப் படு கொலை செய்யும் நோக்கத்துடன் நடத்தப் பட்டது. அவருக்குப் பதிலாக, அத்தாக்கு தலானது 29 வயதுடைய அவரது இளைய மகன் சைஃப் அல்-அராப் என்பவ ரையும் மற்றும் கடாபியின் மூன்று பேரக் குழந்தைகளையும் கொன்று விட்டது. 1986இல் இதேபோன்றதொரு ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்ட தில் கடாபி தங்கியிருந்த வீட்டின் வெளிச்சுவரில் விழுந்து, அவர் தத்து எடுத்திருந்த பெண் குழந்தையைக் கொன்று விட்டது. (மேலும்...)

வைகாசி 16, 2011

அமெரிக்க விமானம் அத்துமீறி பறந்தால் தகுந்த பதிலடி - பாக். பாராளுமன்றம்

தங்கள் நாட்டின் வான் எல்லை மீது அத்துமீறி பறந்து தாக்குதல் நடத்தினாலோ டுரோன் ரக ஆள் இல்லாத விமானங்கள் மூலம் குண்டுவீசி தாக்கினாலோ தகுந்த பதில் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று அமெரிக்காவையும் நேட்டோ படைகளையும் பாகிஸ்தான் பாராளுமன்றம் எச்சரித்துள்ளது. 11 மணி நேர நீண்ட விவாதத்துக்குப் பின்னர் பாகிஸ்தான் பாராளுமன்றம் நேற்று முன்தினம் நிறைவேற்றிய ஒரு மனதான தீர்மானத்தில் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லை மீது ஒருதலைப்பட்சமாக டுரோன் ரக விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டால் நேடோ படைகள் பாகிஸ்தான் எல்லையில் தங்கி இளைப்பாறவும் எரிபொருள் நிரப்பவும் தரப்படும் வசதிகள் நிறுத்தப்படும் என்று தீர்மானம் எச்சரிக்கிறது. (மேலும்...)

வைகாசி 16, 2011

அமைச்சர் பீரிஸ், சஜின் இன்று இந்தியா பயணம்

சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கை தொடர்பில் இந்தியாவு க்கு விளக்கமளிப்ப தற்கென வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இன்று இந்தியா புறப்படுகிறார். வெளிவிவகார அமைச்சருடன், வெளிவிவகார அமைச்சின் நடவடிக் கைகளைக் கண்காணிப்பதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்.டி.வாஸ் குணவர்த்தனவும் செல்கிறார். சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கையின் உண்மைத் தன்மைகள் தொடர்பில் வெளிநாடு களுக்கு விளக்கமளிக்கும் நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே இந்தியாவுக்கு விளக்கமளிக்க வெளிவிவகார அமைச்சர் செல்கிறார். இந்திய விஜயத்தின் போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட முக்கியஸ்தர்களை அமைச்சர் பீரிஸ் அடங்கிய குழு சந்திக்கவுள்ளது. (மேலும்...)

வைகாசி 16, 2011

 

நேட்டோவால் என்னை கொல்ல முடியாது - முஅம்மர் கடாபி

“நேட்டோ படைகளால் என்னைக் கொல்ல முடியாது, அவற்றால் தாக்க முடியாத இடத்தில் நான் இருக்கிறேன்” என்று லிபிய நாட்டின் ஜனாதிபதி முஅம்மர் கடாபி நாட்டு மக்களுக்கு ஒலிநாடா மூலம் அறிவித்துள்ளார். நேட்டோ படைகள் நடத்திய குண்டுவீச்சில் அவருடைய மாளிகை “பாப் - அல் - அஜீசியா” கடுமையாகச் சேதம் அடைந்தது. கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு நடந்த இத்தாக்குதலில் பத்திரிகையாளர்கள், அப்பாவி சிவிலி யன்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். அந்த 3 பேர் லிபியாவுக்காகத் தங்களுடைய இன்னுயிரை ஈந்துள்ளனர் என்று கடாபி தன்னுடைய ஒலிநாடா உரையில் புகழ் அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அதே இடத்தின் மீது கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவும் சனிக்கிழமை அதிகாலையும் மீண்டும் தாக்குதல்கள் தொடர்ந்தன. லிபிய ஜனாதிபதி கடாபி வான் தாக்குதலில் கடுமையாகக் காயம் அடைந்திருக்கிறார். நடமாட முடியாத அவரை மருத்துவ சிகிச்சைக்காக லிபியாவைவிட்டு வேறு எங்கோ எடுத்துச் சென்று விட்டனர் என்று நாட்டில் வதந்திகள் பரவி வருகின்றன. இன்னும் ஒரு சிலர் அவர் உயிரோடு இருக்கிறாரா என்று சந்தேகம் கிளப்ப ஆரம்பித்து விட்டனர். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவும் இராணுவம் தன்னைவிட்டு விலகாமல் இருக்கவும் இந்த ஒலிநாடாவை வெளியிட்டிருக்கிறார் கடாபி.

வைகாசி 16, 2011

நான் அனுபவப்பட்ட யாழ்ப்பாணம்

-  கலாநிதி: ராஜசிங்கம் நரேந்திரன்

நடந்த எல்.ரீ.ரீ.ஈயின் ஆட்சியின் போது அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்து உயிர் பிழைத்து மற்றும் மோதலின் பல கட்டங்களிலும் அதேபோல இராணுவத்தினரின் கட்டளைகளுக்கெல்லாம் கீழ்படிந்து பழகிப்போன யாழ்ப்பாண அரசாங்க சேவை, போரினால் தாக்கப்பட்ட மக்களுக்கு சேவையாற்றுவதற்குத் தேவையான முனைப்பையும் உணர்ச்சியையும் இழந்து விட்டது.

2011 ஜனவரிக்கும் ஏப்ரலுக்கும் இடைப்பட்ட காலத்தில் மொத்தமாக சுமார் இரண்டரை மாதங்கள் வரை நான் யாழ்ப்பாணத்தில் வசித்திருந்தேன். நான் அங்கிருந்த வேளையில் தொலைக்காட்சியைப் பார்க்கவோ, வானொலியைக் கேட்கவோ, பத்திரிகைகளை வாசிக்கவோ அல்லது இணையத்தைப் பயன்படுத்தவோ இல்லை. மக்களின் நாளுக்கு நாள் வாழ்க்கை முறைகளில் ஏற்படும் உட்தாக்கங்களால் என்னைச்; சுற்றி என்ன நடக்கிறது என்பதில் கண்ணோட்டம் செலுத்த முயற்சித்துக் கொண்டிருந்தேன். நான் இங்கே தரப்போகின்றவை நிச்சயமாக விஞ்ஞான ஆய்வுகளின்படியோ அல்லது கட்டமைப்பு கற்கை நெறிகளின்படியோ பெறப்பட்ட விளைவுகள் அல்ல, ஆனால் எனது தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் எண்ணங்களின் சுருக்கம். (மேலும்...)

வைகாசி 16, 2011

சி.ஐ.ஏவுடன் உளவுத் தகவல்கள் பகிர்வதை நிறுத்தியது ஐ.எஸ்.ஐ

அமெரிக்கா தன்னிச்சையாக நடவடிக்கை எடுத்து அல்கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை கொன்றதைத் தொடர்ந்து அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வுடன் உளவுத் தகவல்களை பகிர்ந்துகொள்வதை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. நிறுத்தியுள்ளது. பயங்கரவாதிகளின் இருப் பிடங்கள் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்த தாங்கள் உதவியதாகவும் சி.ஐ.ஏ வுக்கு தகவல்கள் அளித்ததாகவும் முன்பு கூறிவந்த ஐ.எஸ்.ஐ. முகவர்கள் இப்போது பயங்கரவாதிகள் குறித்து சி.ஐ.ஏ. வுக்கு தகவல்கள் அளிக்க மறுத்து வருவதாக சண்டே டெலிகிராப் தெரிவித்துள்ளது.

வைகாசி 15, 2011

India wants police and land powers for PCs

Delegation postpones visit as New Delhi tells Lanka to respond positively to UN panel report

India is to ask Sri Lanka to implement the 13th Amendment to the Constitution giving full land and police powers to provincial councils as part of measures to address Tamil grievances. The move comes as the government gave the Tamil National Alliance (TNA) a blueprint this week on what it believes is one of the key issues it would address. It is the setting up of a second chamber or a senate within the provisions of the existing constitution. (more....)

வைகாசி 15, 2011

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் சாட்சியம் (பகுதி 8)

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத் தில் தப்பியவரின் வாக்குமூலம்

உண்மையில் அப்போது எம்மிடம் போதிய எறிகணைப்பலம் இல்லை. இத்தகைய ஒரு சூழலில் தலைவரையும், இயக்கத்தையும் மக்களையும் பாதுகாப்பதற்கு ஒரு யுத்த நிறுத்தம் அவசியம் எனவும் அதற்கு வரும்படியும் எமது தலைமை பிடத்தை வலியுறுத்தினார்.
ஆனால் நமது தலைமை ஒரு நிபந்தனையற்ற யுத்தநிறுத்தத்துக்குத் தயாராக நாம் இருப்பதாக அறிவுறித்தியது. ஆனால் நிபந்தனை அற்ற யுத்தநிறுத்தத்தை எமது தலைமை தெரிவி செய்ததற்கும் இந்த நெடியவனும் காஸ்ரோவும் தான் காரணம். அவர்கள் இருவரும் எமது தலைமை பீடத்துக்கு சொன்ன அந்த நம்பிக்கைதரும் செய்தியான ஐரோப்பிய நாடுகள் காப்பாற்ற ஒத்துவருவதாக கூறியுள்ளார்கள் என்ற செய்தியை நம் தலைமை நம்பியது. இதை நம் தலைமை நம்முவதற்கு காரணம் இவர்கள் இருவர் மீதும் இருந்த நம்பிக்கையும் புலம்பெயர் தேசத்தில் நடந்ததாக எமக்கு அனுப்பப்பட்ட ஆதாரங்களும் தான் காரணம்.
(மேலும்....)

வைகாசி 15, 2011

20 வருடங்களின் பின்னர் எனது ஊரில் நான்......​.. (பகுதி 4...)

முதன் முதல் கோட்டையில் அண்ணாவை பார்க்க சென்ற போது நான் கருப்பு, சிவப்பு சட்டை போட்டிருந்தேன். ஓர் அதிகாரி நீயும் போராளியா என்று கேட்டான்.  அப்போதுதான் தெரியும் அந்த அமைப்புக்கு ஒரு வர்ணம் இருக்கு என்று. பின்னர் அந்த அதிகாரி கடுமையாக அண்ணாவை திட்டிக்கொண்டு இருந்தான். Russian Model 84 Pistol வைத்திருந்தான் என்றும், அது தங்களிடம் கூட இல்லை என்றும் சொல்லிக்கொண்டு இருந்தான். அண்ணா மிகவும் மெலிந்து போய் இருந்தார். அவரை நாங்கள் பார்த்த இடம் வெளிகோட்டையில். இன்று அது முற்றாக அழிக்கபட்டு இருந்தது. அண்ணாவை சிறை வைத்த உள்கோட்டைகுள் சென்றோம். அது மிகவும் கொடுமையாக இருந்தது. மதில் சுவருக்குள் குகை போல. அதுக்குள் இன்னொரு குகை இருந்தது . அதில் பல பெயர்கள் எழுதப்பட்டு இருந்தது. ஆனால் அண்ணாவின் பெயர் இருக்கவில்லை. சாதாரண கைதிகளை பார்வையிட்ட அந்த இடமும் அழிக்கபட்டு இருந்தது.(மேலும்....)

வைகாசி 15, 2011

Even without Internet at compound, bin Laden had system to send emails and avoid US tracking

(By Adam Goldman,Matt Apuzzo,)

Using intermediaries and inexpensive computer disks, Osama bin Laden managed to send emails while in hiding, without leaving a digital fingerprint for U.S. eavesdroppers to find. His system was painstaking and slow, but it worked, and it allowed him to become a prolific email writer despite not having Internet or phone lines running to his compound. His methods, described in new detail to The Associated Press by a counterterrorism official and a second person briefed on the U.S. investigation, frustrated Western efforts to trace him through cyberspace. The people spoke to the AP on condition of anonymity to discuss the sensitive intelligence analysis. (more....)

வைகாசி 15, 2011

வெளிநாடுகளிலுள்ள தமிழர்களின் அசையாச் சொத்துக்கள் சுவீகரிக்கப்படும் என்ற செய்தியானது தவறானது

வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் இலங்கையில் உள்ள அசையா சொத்துக்கள் இலங்கை அரசினால் விரைவில் பொறுப்பேற்கப்படும் என்று சாரப்பட சில வெளிநாட்டு தமிழ் இணையத்தளங்களில் வெளிவந்த செய்திகள் முற்றிலும் தவறானவை. ஆதாரம் எதுவும் அற்றவை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட பிரதான அமைப்பாளர் இ.அங்கஜன் தெரிவித்துள்ளார். (மேலும்....)

வைகாசி 15, 2011

இந்தியா செல்கிறார் பீரிஸ்

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரீஸ் இந்தியா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளை 16 ஆம் திகதி இந்தியா செல்லும் பீரிஸுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சின் நடவடிக்கைகளை கண்காணித்துவரும் சஜின் வாஸ் குணவர்த்தனாவும் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மூன்று நாள் பயணமாக இந்தியா செல்லும் பீரிஸ், இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஸ்ணா உட்பட பலரை சந்திப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

வைகாசி 15, 2011

கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'!

 

எகிப்து புரட்சி இங்கேயும் நிகழ்ந்தது..

'ஈழத்து சோகம்தான் காவு வாங்கி​விட்டது!’, 'ஸ்பெக்ட்ரம் ஊழல்தான் தலை குப்புறக் கவிழ்த்துவிட்டது!’, 'கூட்டணிக் குளறுபடிதான் ஏமாற்றி​விட்டது!’ - தி.மு.க-வின் தோல்விக்கு இப்படி எத்தனையோ காரணங்கள் அடுக்கடுக்காகச் சொல்லப்பட்டாலும், அதில் மிக முக்கியமானது குடும்பப் பூசல்! தேர்தல் களத்தில் ஜாம்பவானாக நின்று சாதித்து இருக்கவேண்டிய கருணாநிதி, கோபால​​புரத்துக்கும் சி.ஐ.டி. காலனிக்குமாக அலைந்து அலைந்தே அல்லாடிப்போனார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டும் கூட்டணிப் பூசல்களைச் சரிசெய்ய முடியாமல் கருணாநிதி போராடியதை யாரும் மறந்திருக்க முடியாது. ஆனால், கூட்டணிக் குடைச்சலைக் காட்டிலும், அவர் அப்போது அதிகமாக குமைந்துபோனது குடும்பக் குடைச்சலால்தான். 'கனிமொழி என்னைக்கு கட்சிக்கு வந்த ஆள்? குலாம் நபி ஆசாத்துடன் பேச்சுவார்த்தை நடத்த கனிமொழி எல்லாம் ஒரு ஆளா?’ என அழகிரி ஆவேசப்பட... தயாநிதி மாறன் தகிக்க... இதிலேயே நிலை குலைந்து போனார் கருணாநிதி. 'காங்கிரஸைக் கை கழுவிவிடலாம்!’ என சீனியர் மந்திரிகள் அட்வைஸ் பண்ண, 'அப்படிப் பண்ணினால் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், எப்படியும் கனிமொழியை உள்ளே தள்ளிடுவாங்களேப்பா’ எனத் தழுதழுத்தார் கருணாநிதி. குடும்பக் கவலையிலேயே காங்கிரஸுக்கு 63 தொகுதிகளை ஒதுக்கிக் கொடுத்து ஆசுவாசமானார். 'ஜெயிப்போமா... தோற்போமா?’ எனத் திணறிய ஜெயலலிதாவுக்கு முதல் நம்பிக்கையே காங்கிரஸுக்கு இத்தனைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டதுதான்! (மேலும்....)

வைகாசி 15, 2011

குற்றவாளிகள் தண்டனைகளிலிருந்து தப்பும் நிலை இலங்கையில் தொடர்கிறது  - சர்வதேச மன்னிப்புச் சபை

இலங்கையில் போர் நிறைவுற்ற பின்பும் குற்றங்களுக்குத் தண்டனை வழங்கப்படாத போக்குத் தொடர்வதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சாட்டியுள்ளது. யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும் கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் விவகாரங்கள் தொடர்பில் இன்னமும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதுடன் இலங்கையில் குற்றச் செயல்களுக்குத் தண்டனை வழங்கப்படாத நிலைமை தொடர்வதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது. சித்திரவதை, கடத்தப்பட்டுக் காணாமல் போதல் சம்பவங்கள் நாட்டில் இன்னும் பரவலாகத் தொடர்வதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் இவ்வருடத்துக்கான ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. (மேலும்....)

வைகாசி 15, 2011

கே.பி.எஸ். சில நினைவுகள்

ப.சோழநாடன், சமஸ்

தன்னுடைய தவக் குரலால் ஒரு காலத்தையே கட்டிப்போட்ட சுந்தராம்பாள் 1980-ல் இறந்தபோது, கிட்டத்தட்ட அவர் நினைத்த எல்லாவற்றையுமே சாதித்து இருந்தார். ஒரே ஒரு மனக்குறைதான். குழந்தை இல்லை. கிட்டப்பா - சுந்தராம் பாள் தம்பதிக்குப் பிறந்த ஒரே ஆண் குழந்தை, பிறந்த சில மாதங்களிலேயே இறந்துவிட்டது. ஆனால், அவர் வாழ்ந்த காலம் வரை ஒரு கலைஞர் என்பதைத் தாண்டி, எல்லோராலும் அம்மாவாகவும் பாட்டியாகவும்தான் கொண்டாடப்பட்டார்! (மேலும்....)

வைகாசி 15, 2011

'புலிகள் இயக்க அங்கத்தவர்களுக்கு நோர்வே இரகசியமாக உதவியது'

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் பலர் இலங்கையை விட்டுவெளியேறுவதற்கு கொழும்பிலுள்ள நோர்வே தூதரக அதிகாரிகள் இரகசியமாக உதவியளித்தாகவும் அவர்களுக்கு அரசியல் தஞ்சமளித்ததாகவும் நோர்வேயிலிருந்து வெளியாகும் அவ்டன்போஸ்டன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. நோர்வே தூதரக அதிகாரிகள், இவ்வாறு சுமார் 12 பேருக்கு குறுகிய காலத்தில் விஸா வழங்கியதுடன் விமான டிக்கெட்டுகளை வழங்கி, அவர்களை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது. இது வழக்கத்துக்கு மாறான நடவடிக்கை எனத் தெரிவித்துள்ள நோர்வே எதிர்க்கட்சி, இந்நடவடிக்கையினால் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பாதிப்படையலாம் எனவும் அச்சம் தெரிவித்துள்ளது. நோர்வேயின் சர்வதேச விவகார நிறுவகத்தின் ஆராய்ச்சி பிரிவுத் தலைவர் ஐவர் பி நியூமன் இது தொடர்பாக கூறுகையில், இது இறைமையை மீறும் செயல் எனவும் அடிப்படை சர்வதேச கொள்கைகளுக்கு முரணானது எனவும் தெரிவித்துள்ளார். இது நோர்வேயின் நலன்கைளயும் பாதிக்கிறது. ஏனெனில் நோர்வே போன்ற சிறிய நாடு இந்த விடயம் கையாளப்பட்டதை விட வெளிப்படைத் தன்மை மூலம் நன்மையடைகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் இந்நடவடிக்கையை ஆதரித்துள்ளார். ஆபத்திலுள்ள மக்களுக்கு உதவுவது நோர்வேயில் நீண்டகால சம்பிரதாயம் என அவர் கூறியுள்ளார்.

வைகாசி 14, 2011

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம், ஜெயலலிதா அமோக வெற்றி

தமிழ்நாடு மாநில தேர்தலில் ஜெயலலிதாவின் கூட்டணி மாபெரும் வெற்றியீட்டியுள்ளது. இது பணப்பலத்திற்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் அளித்த தீர்ப்பு - இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்கிறார் ஜெயலலிதா. தமிழ்நாடு மாநில சட்டசபைத் தேர்தலில் மகத்தான வெற்றியீட்டி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் அ. தி. மு. கட்சி கூட்டணியின் தலைவி செல்வி ஜெயலலிதா மூன்றாவது தடவையாக முதலமைச்சர் பதவியை மக்களின் பேராதரவுடன் ஏற்கவிருக்கிறார். (மேலும்....)

வைகாசி 14, 2011

தமிழ்நாட்டில் இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன?

தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள் பற்றி தமிழ் மக்களிடம் அவர்களின் அபிப்பிராயத்தை கேட்டபோது, தமிழ்நாட் டில் இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? அதைப்பற்றி நாங்கள் கவலைப்பட போவதில்லை என்று பதிலளித்தார்கள். ஏன் இவ்விதம் கூறுகின்றீர்கள்? என்று நிருபர்கள் அவர்களிடம் கேட்ட போது, செல்வி ஜெயலலிதாவின் கட்சியோ, கலைஞர் கருணாநிதியின் கட்சியோ இலங்கைத் தமிழர்கள் பற்றி அனுதாபமும், அக்கறையும் காட்டுவதாக கடந்த காலத் தில் மிகவும் தந்திரமான முறையில் அரசியலை நடத்தி வந்தார்கள் அவர்கள், இலங்கைத் தமிழரின் பிரச்சினையை தங்களின் அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தினார்கள் என்று தெரிவித்தனர். (மேலும்....)

வைகாசி 14, 2011

தமிழ்நாடு மாநில தேர்தல் முடிவு காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட படுதோல்வி

தமிழ்நாட்டு மாநில தேர்தல், கேரள மாநிலத் தேர்தல் மற்றும் புதுச்சேரி சட்டசபைத் தேர்தல் முடிவுகள் இந்திய காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதனால், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும், கட்சியின் முக்கியஸ்தர்களும் மாநிலங்களில் உள்ள தங்கள் பழைய தோழர்களை கைவிட்டு, புதிய கூட்டணிகளை அமைப்பதில் ஆர்வம் காட்டுவார்கள் என்று இந்திய அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.(மேலும்....)

வைகாசி 14, 2011

34 ஆண்டு இடதுசாரி ஆட்சி முடிவு

மேற்கு வங்கத்தில் மம்தா பனர்ஜி அமோக வெற்றி

மேற்கு வங்கத்தில் தொடர்ந்து 34 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்து வந்த இடதுசாரி கூட்டணி அரசை பதவியிலிருந்து அகற்றி உள்ளார் திரிணா முல் காங்கிரஸ் தலைவர் மம்தா பனர்ஜி அமோக வெற்றி பெற்றார். நேற்று மாலைவரை வெளிவந்த முடிவுகளின்படி மொத்தமுள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 215 தொகுதிகள் வரை முன்னணியில் உள்ளது அவரது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி. ஆளும் இடதுசாரி கூட்டணி 70 தொகுதிகளில் மட்டுமே முன்னணியில் உள்ளது. இடதுசாரி கூட்டணி அரசை அகற்ற வேண்டும் என்று கடந்த 10 ஆண்டு காலத்திற்கும் மேலாகவே தீவிரமாக போராடி வருபவர் மம்தா. (மேலும்....)

வைகாசி 14, 2011

விஜயகாந்த் அபார வெற்றி

அ.தி.மு.க வெற்றியை தொடர்ந்து வடிவேலு வீட்டுக்கு பொலிஸ் காவல்

ரிஷிவந்தியம் தொகுதியில் தே. மு. தி. க தலைவர் விஜயகாந்த் 30,795 ஓட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். 18 சுற்று முடிவில் விஜயகாந்த் 91,164 ஓட்டுகளும் அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜ் 60,369 ஓட்டுகளும் பெற்றனர். இந்தத் தேர்தலில் தி. மு. க.வின் பிரசார பீரங்கியாகக் கருதப்பட்ட வடிவேலு அ. தி. மு. க. வெற்றி பெற்றதால் பெரும் சிக்கலுக்குள்ளாகியுள்ளார். அவரது வீட்டு முன் பெரும் பொலிஸ் படையே குவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் அ. தி. மு. க. கூட்டணிக்கு குறிப்பாக விஜயகாந்துக்கு எதிராக கடுமையான பிரசாரத்தை மேற்கொண்டார் வடிவேலு. விஜயகாந்த் கட்சி இந்தத் தேர்தலோடு காணாமல் போகும் என்றார். விஜயகாந்த் குடித்துவிட்டு உளறுவதாக கடுமையாக சாடினார். ஆனால் ஜெயலிதாவை மட்டும் அவர் திட்டவில்லை. (மேலும்....)

வைகாசி 14, 2011

தேர்தல் முடிவு உணர்த்தும் பாடம்

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்துள் ளன. தமிழகம் மற்றும் புதுவையில் திமுக- காங் கிரஸ் கூட்டணி, படுதோல்வி அடைந்துள்ளது. மக்கள், ஆட்சிமாற்றத்திற்கு, இந்த இரு மாநிலங் களிலும் வாக்களித்து, தெளிவான தீர்ப்பை வழங் கியுள்ளனர். குறிப்பாக தமிழகத்தில், திமுக- காங்கிரஸ் கூட்டணியைத் துடைத்தெறிந்து, மக்கள், அதி முக தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தேமுதிக, பார்வர்ட் பிளாக் உள்ளிட்ட 13 கட்சிகள் இடம்பெற்றிருந்த அணியை, மகத்தான வெற்றிபெறச் செய்துள்ளனர். (மேலும்....)

வைகாசி 14, 2011

வதந்திகளை நம்பாதீர் - லதா ரஜினிகாந்த்

இன்று காலை  தேர்தல் முடிவுகள் மிகப் பரபரப்பாக வந்து கொண்டிருந்த தருணத்தில், ரஜினியின் உடல்நிலை மோசமடைந்து இருப்பதாக ஒரு செய்தி காட்டுத் தீ போல் பரவியது. ஏராளமான ரசிகர்கள் பதட்டத்துடன் போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீடுநோக்கிச் செல்ல ஆரம்பித்தனர். இதனையடுத்து இது குறித்து விசாரித்த போது " ரஜினி இப்போது வீட்டில் தேர்தல் முடிவுகளை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்கிறார். சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் பழையபடி படப்பிடிப்புக்குச் செல்வார். வதந்திகளை நம்ப வேண்டாம்", என்றனர். இந்நிலையில் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில் " இன்று எனது கணவர் உடல் நிலை குறித்து தவறான செய்தி பரவி உள்ளது. அன்பான உங்கள் எல்லோருடைய  பிராத்தனையாலும் என் கணவர் ரஜினி நலமாக உள்ளார்.  ரஜினி ரசிகர்களுக்கும்  தமிழக மக்களுக்கும் உலகமெங்கும் இருக்கும் அன்பு உள்ளங்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால் ரஜினி நலமாக உள்ளார். அன்பிற்கு நன்றி." என்று கூறியுள்ளார்.

வைகாசி 13, 2011

Party position in Tamil Nadu and other stats

Tamil Nadu Result Status

Status Known For 234 out of 234 Constituencies

Party

Won

Leading

Total

Communist Party of India

8

1

9

Communist Party of India (Marxist)

7

3

10

Indian National Congress

5

0

5

All India Anna Dravida Munnetra Kazhagam

132

19

151

All India Forward Bloc

1

0

1

Dravida Munnetra Kazhagam

16

6

22

Pattali Makkal Katchi

2

1

3

Others

27

6

33

Puducherry Result Status

Status Known For 30 out of 30 Constituencies

Party

Won

Leading

Total

Indian National Congress

7

0

7

All India Anna Dravida Munnetra Kazhagam

5

0

5

Dravida Munnetra Kazhagam

2

0

2

Puducherry NR Congress

16

0

16

Kerala Result Status

Status Known For 140 out of 140 Constituencies

Party

Won

Leading

Total

Communist Party of India

13

0

13

Communist Party of India (Marxist)

45

0

45

Indian National Congress

38

0

38

Nationalist Congress Party

2

0

2

Janata Dal (Secular)

4

0

4

Kerala Congress (M)

9

0

9

Muslim League Kerala State Committee

20

0

20

Revolutionary Socialist Party

2

0

2

Others

7

0

7

Assam Result Status

Status Known For 126 out of 126 Constituencies

Party

Won

Leading

Total

Bharatiya Janata Party

5

0

5

Indian National Congress

76

2

78

All India Trinamool Congress

1

0

1

All India United Democratic Front

18

0

18

Asom Gana Parishad

9

1

10

Bodoland Peoples Front

9

3

12

Others

2

0

2

West Bengal Result Status

Status Known For 294 out of 294 Constituencies

Party

Won

Leading

Total

Communist Party of India

2

0

2

Communist Party of India (Marxist)

39

1

40

Indian National Congress

42

0

42

All India Forward Bloc

11

0

11

All India Trinamool Congress

178

6

184

Revolutionary Socialist Party

7

0

7

Samajwadi Party

1

0

1

Others

7

0

7

வைகாசி 13, 2011

மே 15ஆம் திகதி பதவியேற்பு விழா

3ஆவது முறையாக முதல்வராகிறார் ஜெயலலிதா

நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 147 இடங்களுக்கும் அதிகமாகப் பிடித்து தனிப் பெரும்பான்மை பெற்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா எதிர்வரும் 15ஆம் திகதி முதல்வராகப் பதவியேற்கிறார். அவரது பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த மூத்த பொலிஸ் அதிகாரிகள் இன்று ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதன்போது 15ஆம் திகதி ஆளுநர் மாளிகையிலேயே பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை செய்யுமாறு ஜெயலலிதா கேட்டுக் கொண்டார். இதையடுத்து அன்றைய தினம் சென்னை கிண்டி ராஜ்பவனில் ஜெயலலிதா பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அவருக்கு ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். ஜெயலலிதாவுடன் அமைச்சர்கள் சிலரும் பதவியேற்பர் என்று தெரிகிறது. மே 16ம் திகதி தற்காலிக சபாநாயகர் தேர்வும், அன்றைய தினமே எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பும் நடக்கும் என்று தெரிகிறது.

வைகாசி 13, 2011

தமிழ் நாடு தேர்தல் முடிவுகள்

இது வரை வெளிவந்த செய்திகளின் படி அதிமுக கூட்டணி அறுதிப் பெரும்பான்மை ( 170 இடங்களுக்கு மேல்) வெல்லக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக அறிய முடிகின்றது. இதே வேளை திமுக கூட்டணி 50 இற்கும் உள்பட்ட தொகுதிகளை மாத்திரம் பெற்று படு தோல்வியடையும் நிலையில் உள்ளதாக அறிய முடிகின்றது. இதே வேளை பாண்டிச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி அதிமுக கூட்டணியை தோற்கடிக்கும் நிலையில் உள்ளதாக அறிய முடிகின்றது. கேரளா, மேற்க வங்கத்தில் இடது சாரிகளுக்கு பின்டைவு ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

வைகாசி 13, 2011

AIADMK looks set for a sweep in Tamil Nadu

AIADMK seems to be heading for a sweep in the Tamil Nadu Assembly polls, having established leads in 149 constituencies in the 234-member House. The ruling DMK front was way behind, leading only in 33 constituencies, as per the latest trends. Most of the ministers including DMK General Secretary K Anbazhagan were trailing. AIADMK Chief Jayalalithaa and DMK patriarch M Karunandhi were ahead in Srirangam and Tiruvarur respectively. (more...)

வைகாசி 13, 2011

தமிழகத்து தேர்தல் முடிவுகள்

தி.மு.க. கூ‌ட்ட‌ணி -15, அ.இ.அ.‌தி.மு.க கூ‌ட்ட‌ணி 22 மு‌ன்ன‌ணி

த‌ற்போது நடைபெ‌ற்று‌ம் வரு‌ம் ‌‌த‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை‌க்கான தே‌ர்த‌‌ல் வா‌க்கு எ‌ண்‌ணி‌‌‌க்கை‌யி‌ல் ‌தி.மு.க. கூ‌ட்ட‌ணி 18 தொகு‌தி‌யி‌ல், அ.இ.அ.‌தி.மு.க. கூ‌ட்ட‌ணி‌ 16 தொகு‌திக‌ளிலு‌ம் மு‌ன்‌னிலை‌யி‌ல் உ‌ள்ளது. நெ‌ல்லை, ந‌ன்‌னில‌ம், கடலூ‌ர், செ‌ன்னை ராயபுர‌ம், ‌திருவையாறு, ‌திரு‌ச்‌சி, பாபநாச‌ம், மண‌ப்பாறை, ‌திரு‌ச்ச மே‌ற்கு, ‌திருவாரூ‌ர், ப‌த்மநாபபுர‌ம், ‌ உதகை‌, அ‌ம்பாசமு‌த்‌திர‌ம், நாம‌க்க‌ல், உ‌‌ப்பள‌ம், சா‌த்தூ‌ர், ஆ‌யிர‌ம் ‌விள‌‌க்கு, உடுமலை‌ப்பே‌ட்டை, வேடச‌ந்தூ‌ர், ‌விளா‌‌த்த‌ி‌குள‌ம், பழ‌னி, ப‌ல்லாவர‌ம், ‌திரு‌ப்பூ‌ர் தெ‌ற்கு, கு‌ன்னூ‌ர், ச‌ங்கர‌ன் கோ‌யி‌ல் ஆ‌கிய தொகு‌திக‌ளி‌ல் அ.இ.அ.‌தி.மு.க. மு‌ன்‌னிலை‌யி‌ல் உ‌ள்ளது. கொள‌த்தூ‌ர், ‌திருவாரூ‌ர், ‌தி‌ண்டிவன‌ம், மதுரவா‌ய‌ல், எழு‌ம்பூ‌ர், ஆல‌‌‌ங்கு‌ள‌‌ம், தா‌ம்பர‌ம், குள‌ச்ச‌ல், கூடலூ‌ர் ஆ‌‌கிய தொகு‌திக‌ளி‌ல் ‌தி.மு.க. மு‌ன்‌னிலை‌யி‌ல் உ‌ள்ளது

வைகாசி 13, 2011

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் சாட்சியம் (பகுதி 7)

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத் தில் தப்பியவரின் வாக்குமூலம்

இதோ செய்கின்றோம் இதோ செய்கிறோம் என்று நம்பிக்கையையும் தொடர்ந்து தந்துகொண்டிருன்தனர் இந்த நெடியவனும் காஸ்ரோவும். இவர்களது அந்த நம்பிக்கைக்கு காரணம் நோர்வேயும் ஒரு சில ஐரோப்பிய நாடுகளும் எமது தலைமை பீடத்தை காப்பாற்ற முன்வந்துள்ளதுடன் அனைத்து போராளிகளையும் பொதுமக்களையும் பாதுகாப்பாக தாம் பொறுப்பேற்று இலங்கை படைகளிடமிருந்து பாதுகாப்பதாகவும் தமக்கு உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் சொன்னார்கள். ஆனால் இந்த நேரம் கே.பி. மாற்று வழி ஒன்றை நம் தலைமை பிடத்துக்கு முன்வைத்தார். அந்த மாற்று வழி என்ன வென்றால்? (மேலும்....)

வைகாசி 13, 2011

ChiDAES-Canada's Annual Gathering-2011

It's a great pleasure for us to kindly invite you & family to ChiDAES-Canada's

Annual Gathering-2011 on  Saturday May 21, 2011, at  6:30 PM  at  15 ClubHouse Court, North York, ON M3L 2L7. ChiDAES-Canada's Sixth Annual Gathering will be followed by Dinner. (Admission Free)

Thank you in advance.

Regards,

On behalf of ChiDEAS-Canada Committee,

Sasi Chaseendran            Sundar Markandu

Secretary                            President

வைகாசி 13, 2011

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம்?

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் கடல் நீர் சிவப்பு நிறமாக மாற்றம் _

யாழ்ப்பாணம் வடமராட்சி வடக்கு கடற்பரப்பில் இருந்து 10 கிலோ மீற்றர் தூரத்தில் கடல் நீர் சிவப்பு நிறமாகக் காணப்படுகின்றது. ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியின் தாக்கமே இவ்வாறு இந்தக் கடல் நீர் சிவப்பு நிறமாக இருப்பதற்கு ஒரு காரணமாக அமையலாம் என்று யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசத் தலைவர் தெரிவித்தார். கடல் நீர் சிவப்பாக வந்ததற்கான காரணத்தை அறிவதற்காக தற்போது அந்தக் கடற்பரப்பில் உள்ள நீர் எடுத்துச் செல்லப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுவருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

வைகாசி 13, 2011

Mahinda Rajapaksa and Rathika Sitsabaiesan.

President of Sri Lanka Mahinda Rajapaksa has sent a congratulatory message to the Canadian Prime Minister Stephen Harper on the electoral victory of the Conservative Party at the Parliamentary election held on 2nd May 2011. In his message President Rajapaksa has stated that Sri Lanka appreciates the firm position taken by the Conservative Government “in helping Sri Lanka to defeat terrorism” and the support given in the post-conflict phase. High Commissioner for Sri Lanka in Canada Chitranganee Wagiswara, has also sent a message of felicitation to Prime Minister Harper.A message of felicitation was also extended to the newly elected MP for Scarborough –Rouge River, Rathika Sitsabaiesan. In her message the High Commissioner stated, “we are indeed proud to have the first Sri Lankan Canadian in the Federal Parliament of Canada”.

High Commission of Sri Lanka, Ottawa, Canada

வைகாசி 13, 2011

அரசு, கூட்டமைப்பு பேச்சு தொடர்ந்தும் முன்னெடுப்பு

செனட் சபையின் கட்டமைப்பு குறித்து இருதரப்பும் ஆராய்வு

  • 13வது திருத்தத்துக்கு அப்பால் அதிகாரம்

  • அரசியலமைப்பில் திருத்தம்

செனட் சபையில் இருந்து மத்திய அரசாங்கத்தில் எப்படி அங்கம் வகிப்பது என்பது தொடர்பாகவும் ஆராயப்படுகிறது. 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் அதிகாரம் வழங்குவது தொடர்பிலே கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக அரசியலமைப்பு திருத்தப்படும். தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மட்டுமன்றி ஏனைய கட்கிகளுடனும் அரசாங்கம் பேச உள்ளது. ஏனென்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளல்ல. இது கடந்த தேர்தல் முடிவுகள் மூலம் நிரூபணமானது. தமிழ் தேசிய கட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகளையடுத்து அரசாங்கம் ஏனைய கட்சிகளுடன் பேச்சு நடத்தும். (மேலும்....)

வைகாசி 13, 2011

பின்லேடனுக்குப் பின்னர் இலியாஸ் காஷ்மீரி?

ஒசாமா பின் லேடனுக்குப் பின்னர் அல்-கொய்தா இயக்கத்தின் தலைமைப் பொறுப்புக்கு இலியாஸ் காஷ்மீரி வரக்கூடும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  மும்பையில் நடந்தது போன்று ஐரோப்பாவின் முக்கிய நகரங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்குத் திட்டமிட்டதில் காஷ்மீரிக்கு முக்கிய பங்கு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். பின் லேடனுக்குப்பின்னர் அல் – ஜவாஹிரியே அல் - கொய்தா இயக்கத்தின் தலைவராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் அல் கொய்தா மற்றும் அதன் துணை அமைப்புகளின் பல்வேறு நிலைகளிலும் ஜவாஹிரிக்கு ஆதரவு இல்லாததால், அவர் தலைமைப் பொறுப்புக்கு வருவதற்கு சாதகமான நிலை இல்லை. இதையடுத்து கடந்த பல ஆண்டுகளாகவே பயங்கரவாதத் தாக்குதல்கள் மூலம் தனது ‘செல்வாக்கை’ நிரூபித்து வந்திருக்கும் இலியாஸ் காஷ்மீரிக்கு அந்தப் பொறுப்பு அளிக்கப்படலாம் என்று தெரிய வந்திருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வைகாசி 13, 2011

(மேலும்....)

வைகாசி 13, 2011

(மேலும்....)

வைகாசி 13, 2011

(மேலும்....)

வைகாசி 12, 2011

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் சாட்சியம் (பகுதி 6)

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து நமது கப்பலை சர்வதேச கடலிலிருந்து இலங்கைக்கு கொண்டு செல்லும் அனுமதியைப் பெற்றுத்தான் கொண்டுசென்றோம். இந்த நடைமுறை எமது தலைமை பீடத்துக்கும் ரணில் விக்கிரமசிங்காவுக்கும் எமது வெளிநாட்டு தொடர்பாளர்கள் சிலருக்கும் மட்டும்தான் தெரிந்தவி டயம். இருந்தும் எமது கப்பல்களை இலங்கை படைகள் தாக்கி அழித்தன. எப்படி என்பதை தேடியபோதுதான் ஆச்சரியமான விடையம் வெளிவந்தது. நமக்கு கொண்டுவர அனுமதி தந்துவிட்டு அந்த இரகசியத்தை இந்தியாவுக்கு சொல்லியவர்தான் இந்த ரணில் விக்கிரமசிங்க. நாம் கப்பலை கொண்டுவந்து இலங்கை கடலுக்குள் பிரவேசிக்க இந்தியாவிலிருந்து செய்தி வருமாம் இலங்கை கடற்படைக்கு புலிகள் கப்பல் வருகிறதென்று, அவர்கள் பறந்துவந்து தாக்கி அழிப்பார்களாம். எப்படி இந்த ரணில் செய்த சமாதான வேஷம். காட்டிக்கொடுப்பு. இந்தக் காரணத்தினால்தான் அப்பொழுது நடைபெற்ற அந்த ஜனாதிபதி தேர்தலை நமது தலைமை புறக்கணிக்கும்படி உத்தரவிட்டது. அதனால் ரணில் தோல்வியும் கண்டார், மகிந்தவை நாம் தெரிந்தோ தெரியாமலோ ஆட்சிப்பிடம் ஏறவைத்தோம். (மேலும்....)

வைகாசி 12, 2011

நிராகரிக்கப்பட்ட சில வேட்பு மனுக்களை ஏற்குமாறு நீதிமன்றம் உத்தரவு _

கடந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் நிராகரிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 33 வேட்பு மனுக்களையும், ஐக்கிய தேசிய கட்சியின் 2 வேட்பு மனுக்களையும் ஏற்றுக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதையடுத்தே இவ்வுத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 450 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதில் உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட 2047 வேட்பு மனுக்களில் 1597 வேட்பு மனுக்கள் மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

வைகாசி 12, 2011

14 குற்றச்சாட்டுக்களின் கீழ் ராஜரட்ணம் குற்றவாளியாக இனங்காணப்பட்டார்

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க செல்வந்தரான ராஜ் ராஜரட்ணம் பங்குச்சந்தை மோசடி தொடர்பிலான வழக்கில் அவர் மீது சுமத்தப்பட்ட 14 குற்றச்சாட்டுக்களின் கீழ் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார். அமெரிக்காவில் நேற்று இடம்பெற்ற இவருக்கெதிரான வழக்கு விசாரணையின்போது 14 குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டதுடன் இறுதிப் தீர்ப்பினை ஜூலை மாதம் 29 ஆம் திகதி வெளியிடுவதென 12 பேர் கொண்ட ஜூரிகள் சபை அறிவித்துள்ளது. இதன்படி அவருக்கு 15 முதல் 19 வருடங்கள் வரையான சிறைத் தண்டனை விதிக்கப்படலாமென தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க பங்குச்சந்தையில் 63.8 மில்லியன் டொலரை சட்டவிரோதமான முறையில் சம்பாதித்தமை தொடர்பாகவே இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. 130 கோடிக்கும் அதிகமான டொலர் பெறுமதியான சொத்துக்களைக் கொண்டவரான ராஜரட்ணம் பிரபல போப்ஸ் சஞ்சிகையின் உலகின் செல்வந்தர் பட்டியலில் 559 ஆவது இடத்தை பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வைகாசி 12, 2011

மட்டக்களப்பில் முன்னாள் இராணுவ புலனாய்வு உறுப்பினர் சுட்டுக்கொலை

மட்டக்களப்பு நகரில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். படுகொலை செய்யப்பட்டவர் இராசமாணிக்கம் மதியழகன் என்ற 38 வயது இளைஞராவார். லேக் வீதியிலுள்ள தனது வீட்டில் மாலை 2.30 மணியளவில் பகலுணவு அருந்திக்கொண்டிருந்த போது இனந்தெரியாத நபரொருவர் பிஸ்டலால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலய செயலாளரும் பிரதியமைச்சர் கருணா அம்மானின் புளியந்தீவு இணைப்பாளர் என தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை நடாத்திவருகின்றனர்.

வைகாசி 12, 2011

Saturday,May 28th at Scarborough Village Community centre at 5:30 PM

On behalf of  Ealathupooradanar Dr.K.D. Selvarasagopal commemorative event group, I am kindly inviting you, your family and friends. The event will be held on Saturday, May 28th at Scarborough Village Community centre at 5:30 PM. (# 3600 Kingston Rd - Markham & Kingston). Please convey this message to your friends so they can also attend the above event.

 Thank you

On behalf of the Group

Ajantha Gnanamuttu

905 460 1667

வைகாசி 12, 2011

நல்லாகத்தான் இருக்குதல்லவா?

வைகாசி 12, 2011

ஐ.நா. அறிக்கையினை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றமைக்கு இலங்கை ஆட்சேபம்

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையினை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றுள்ளமை தொடர்பில் இலங்கை ஆட்சேபம் தெரிவித்துள்ளது. ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி கலாநிதி பாலித கொஹன இந்த ஆட்சேபத்தினை தெரிவித்துள்ளார். ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் மீதான சுயாதீனமான விசாரணைகள் இலங்கையில் நல்லிணக்க செயற்பாட்டிற்கும் நிரந்தர சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் பங்காற்ற வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் நேற்று முன்தினம் விடுத்த அறிக்கையில் தெரிவித்திருந்தது. இதேவேளை கொழும்பில் பொதுப் பூங்காக்களின் நிர்வாகத்தை கடற்படையினர் பொறுப்பேற்பது குறித்து இன்னர் சிட்டி பிரஸ் பாலித கொஹனவிடம் கேள்வி எழுப்பியபோது அதற்கு பதிலளித்த அவர் படையினர் “ 2 இலட்சம் பேர் வேலையற்று இருக்கின்றனர். அப்படையினர் யுத்தத்திற்காகவே திரட்டப்பட்டனர். இப்போது அவர்கள் சிவில் பணிகளில் பயிற்றுவிக்கப்படுகின்றனர் என்றார்.

வைகாசி 12, 2011

NATO ships, planes left African refugees stranded in Mediterranean to die

(By Barry Grey )

The British Guardian newspaper published an investigative report Monday documenting the case of African refugees who were left to die in the early days of the war against Libya by NATO and European authorities who spotted their vessel drifting in the Mediterranean but made no effort to rescue them. The newspaper, citing the account of survivors and an Eritrean priest in Rome who was one of the last people to communicate with the stranded boat, said the passengers were left to drift in open waters for 16 days, even though the Italian coastguard had been alerted and the vessel had been seen by a military helicopter and an aircraft carrier. (more...)

வைகாசி 12, 2011

தமிழக தேர்தல் முடிவுகள் நாளை

கருணாநிதியா? ஜெயலலிதாவா? வெல்லப் போவது யார்?

தமிழக சட்டசபை தேர்தலின் வாக்குகள் எண்ணும் பணி நாளை 13 ஆம் திகதி ஆரம்பமாகிறது. தமிழக சட்ட சபைத் தேர்தல் கடந்த மாதம் 13 ஆம் திகதி நடைபெற்று முடிந்தது. இதில் அளிக்கப்பட்ட வாக்குகள் ஒரு மாத கால இடைவெளியின் பின்னர் நாளை 13 ஆம் திகதி எண்ணப்படுகிறது. இதற்காக தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குகள் எண்ணும் நிலையங்களுக்கு பொலிஸ், மற்றும் கலகம் அடக்கும் விசேட பொலிஸ் பிரிவு ஆகியவற்றின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலதிகமாக ஆயுதப் படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். இது தவிர தமிழ் நாட்டின் எல்லைப் புறங்களில் உள்ள வீதிச் சோதனை சாவடிகளில் கண் காணிப்பும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. (மேலும்....)

வைகாசி 12, 2011

லிபியா பிரதமருடன் ஐ.நா.சபை பேச்சுவார்த்தை

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் தீர் மானத்தை நிறைவேற்றுவதாகக் கூறிலிபியா மீது அமெ ரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் அராஜக மான போரை நடத்தி வருகின்றன. இந்நிலையில், சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளுமாறும் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலர்களை அனுமதிக்குமாறும் லிபியா நாட் டின் பிரதமருடன் ஐநா. சபை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. லிபியாவின் பிரதமருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியதாகவும், ஜனாதிபதி கடாபி அரசின் படைகள் அந்நாட்டு மக்கள் மீது தாக்குதல் நடத் தக்கூடாது என்றும், லிபியப்படைகள் உடனடியாக சண் டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கூறியதாகவும் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன் தெரிவித்தார். மேலும், ஐ.நா.வின் மனிதநேய அலுவலர்களை அனுமதிக் கவும், தற்போதைய மோதலுக்கு ஒரு அமைதியான தீர்வைக்காண பேச்சுவார்த்தைகளை நடத்தவும் ஒரு சிறப்பு ஐ.நா. தூதரை வரவேற்கத் தயாராக இருப்பதாக லிபிய பிரதமர் அல்-பக்தாதி அலி அல் ஒப்புக்கொண்ட தாகவும் பான்-கி-மூன் தெரிவித்தார்.

வைகாசி 12, 2011

தூத்துக்குடி கொழும்பு கப்பல் சேவை தாமதமாகும்!

தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மேலும் தாமதமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை நேற்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகும் என்று இந்திய கப்பல்துறை அமைச்சு தெரிவித்திருந்தது. எனினும் அது குறிப்பிடப்படி ஆரம்பமாகவில்லை. இந்தநிலையில் இந்த சேவை ஆரம்பத்துக்கு குறைந்தது இரண்டு வாரங்களாவது செல்லும் என்று தூத்துக்குடி துறைமுக தலைவர் ஏ சுப்பையா தெரிவித்துள்ளார். இந்த கப்பல் சேவை கடந்த 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்தது. எனினும் கதிரிக்க கருவிகள், பயணிகளை பரிசோதிக்கும் கருவிகள் என்பவற்றை பொருத்துவதற்கு காலம் எடுத்தது. அத்துடன் துறைமுகத்தின் உட்கட்டுமாண பணிகளையும் மேற்கொள்ளவேண்டியுள்ளது. குறிப்பாக பயணிகளுக்கான பாதையமைப்பு, தொடரூந்து சேவையை மேம்படுத்தல், ஆகியவற்றையும் மேற்கொள்ளவேண்டியுள்ளதாக சுப்பையா தெரிவித்துள்ளார். தூத்துக்குடிக்கும் கொழும்பு துறைமுகத்துக்கும் இடையிலான கப்பல் சேவையின் தூரம் 152 கடல்மைல்களாகும். இந்த பயணத்துக்கு 10 முதல் 12 மணித்தியாலங்கள் வரையில் செல்லும்.

வைகாசி 11, 2011

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் சாட்சியம்  (பகுதி 5)

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத் தில் தப்பியவரின் வாக்குமூலம்

ஆம் நாம் மரணத்தின் வாசலில் நின்று எம்மை காக்க கரம் நீட்டும்படி தமிழ் நாட்டு அரசை வேண்டிய பொழுது நாம் என்றும் நம்பிய தொப்பிள்கொடி உறவு செய்த வேலை இப்படி இருந்தது. ஆம் எமது பொறுப்பாளர்களான நடேசன், பாலகுமார்,யோகி, இழந்திரையன் என பலர் தொடர்புகொண்டு முடியாமல் போக கடைசியில் சூசையும் தொடர்புகொண்டு பார்த்தார். தொடர்பை கடைசிவரை ஏற்கவில்லை கருணாநிதி. காரணம் அவர் அந்த நேரத்தில் புலிகளுக்கு ஆதரவு செய்தால் மத்திய அரசிலிருந்து வெளியேற்றப்படும் என சோனியா அம்மையார் கூறியிருந்தாராம். இதை அவரது கூட இதுக்கும் 'தீனா மானா' என எமது தலைமையால் அழைக்கப்படும் நபர் எமது தொடர்பகத்துக்கு அப்போது சொல்லியிருந்தார். என்ன செய்ய மக்களை விட கருணாநிதிக்கு சோனியாவின் உதவி தேவைப்பட்டது தனது குடும்ப பதவிகளையும் தக்க வைத்துக்கொள்ள. (மேலும்....)

வைகாசி 11, 2011

தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் நியாயமான கோரிக்கைகளை அமுல்படுத்துவேன்

  • தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல

  • யுத்தம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளில் பாதுகாப்பாக தங்கள் காலத்தை கடத்தி வந்தார்கள்.

- ஜனாதிபதி

 “புலிகளுக்கு வேண்டியவற்றை தமிழ்த் தேசிய கூட்டமைப்போ அல்லது வேறு எந்தத் தரப்பினரோ என்னிடம் கோரிக்கையாக முன்வைத்தால் நான் அந்தக் கோரிக்கைகளை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பேன். ஆயினும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகளை நான் அவதானமாக செவிமடுத்து அவற்றை அமுலாக்குவதற்கு முயற்சி செய்வேன்” என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். (மேலும்....)

வைகாசி 11, 2011

ஒசாமா கொல்லப்பட்டவேளை மகன் தப்பிச்சென்றதாக தகவல் _

அல் - கொய்தா இயக்கத்தின் முன்னாள் தலைவரான ஒருவரான ஒசாமா பின்லேடனின் இளைய மகனான ஹம்சா பாகிஸ்தானின் அபோடாபாட்டிலுள்ள வீட்டில் தனது தந்தை அமெரிக்க படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டவேளை தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பாகிஸ்தானிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள ஒசாமாவின் மூன்று மனைவிகளே இத்தகவலை தெரிவித்துள்ளனர். ஆரம்பத்தில் இவர் அபோடாபாட்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புத்தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. எனினும் கொல்லப்பட்டது ஹம்சா இல்லையெனவும் அது அவரின் சகோதரரான (22) காலிட் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஹம்சா பின்லேடன் (19) அல் கொய்தா இயக்கத்தின் இளவரசராக வர்ணிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது. __

வைகாசி 11, 2011

The balance sheet of "operation bin laden" by USA

President Obama must be very happy for the fact that American Special Forces had eventually gunned down Al Qaeda leader Osama Bin Laden. Even the western media and certain western / European countries had praised Obama for it and portrayed him as a hero. Freeing the world from Terrorism or even from a terrorist leader for that matter is indeed a blissful thing and a great relief. There are no second thoughts about it. Not only Sri Lankans and Americans, but all the peace-loving citizens in the world will be happy about it. Defeating LTTE terrorism is the most significant achievement in the recent Sri Lankan history and Sri Lankans also celebrated their victory 2 years back with great relief as they knew how miserable it was to suffer in the hands of terrorism. (more....)

வைகாசி 11, 2011

ஒசாமா மனைவிகளை விசாரிக்க அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் அனுமதி

ஒசாமா பின்லேடனின் 3 மனைவிகளிடம் அமெரிக்கா விசாரணை நடத்த பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது. அண்மையில் அமெரிக்க இராணுவத்தினரால் அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் ஒசாமாவின் 3 மனைவிகளும் பாகிஸ்தான் அரசின் பாதுகாப்பில் உள்ளனர். இதனிடையே ஒசாமா மனைவிகளிடம் விசாரணை நடத்த பாகிஸ்தான் அரசிடம் அமெரிக்கா அனுமதி கேட்டிருந்தது. இதன்படி பின்லேடனின் 3 மனைவிகளிடம் அமெரிக்கா விசாரணை நடத்த பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்தினால் அல் கொய்தா திட்டம் பற்றி தெரியவரும் என்று அமெரிக்கா நம்புகிறது.

வைகாசி 11, 2011

 

கோகோஸ் தீவுகளில் குடியேற இலங்கையர்கள் முயற்சி - அவுஸ்திரேலியா

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கோகோஸ் தீவுகளில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற குடியேற்றவாசிகள் அனைவரும் இலங்கையர்களே என்று அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 23ம் திகதி சுமார் எண்பத்தி எட்டுப் பேரைக் கொண்ட சட்டவிரோத குடியேற்றவாசிகள் குழுவொன்று அவுஸ்திரேலியாவின் கோகோஸ் தீவைச் சென்றடைந்திருந்தது. மீன்பிடிப்பட கொன்றின் மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைந்திருந்த அவர்கள் அனைவரும் இலங்கைத் தமிழர்கள் என அவுஸ்திரேலியா உறுதிப்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அதனை அங்குள்ள இலங்கைத் தூதரகத் திற்கு அறிவித்துள்ளது. விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்ட அவர்கள் அனைவரும் தற்போது அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போதைக்கு அவுஸ்திரேலியாவில் ஆறாயிரத்துக்கும் அதிமான சட்ட விரோதக் குடியேற்றவாசிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையர்கள் என்றும் மேலதிகத் தகவல்களிலிருந்து தெரியவருகின்றது.

வைகாசி 11, 2011

பாக். படையினர் தாக்கினால் திருப்பித் தாக்க ஒபாமா உத்தரவு _

ஒசாமா பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்ட போது அதைத் தடு க்க பாகிஸ்தான் பொலிஸாரோ அல்லது படையினரோ முயன்றால் அவர்களைத் திருப்பித் தாக்குமாறு அமெரிக்க சீல் படையினருக்கு ஜனாதிபதி ஒபாமா உத்தரவிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் அபோதாபாத்தில் ஒரு வீட்டில் கடந்த பல வருடங்களாக ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வந்த ஒசாமா பின்லேடனை கடந்த வாரம் அமெரிக்க கடற்படையின் சீல் வீரர்கள் சுட்டுக் கொன்றனர். (மேலும்....)

வைகாசி 11, 2011

ஸ்ரீலங்கன் விமான சேவை

 

கொழும்பு - மொஸ்கோவிமான சேவை ஆரம்பம்

கொழும்புக்கும், மொஸ்கோவுக்கு மிடையில் ஸ்ரீலங்கன் விமான சேவையின் விமான போக்குவரத்து சேவை ஒன்று எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கப்படும் . ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவுக்கு முதல் முறையாக ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமானம் செப்டெம்பர் 15 ஆம் திகதி செல்லவுள்ளது. வியாழக்கிழமைகளிலும், சனிக் கிழமைகளிலும் டுபாய் ஊடாக இர ண்டு விமான சேவைகள் நடத்தப் பட வுள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவை ரஷ்யா வின் மொஸ்கோவுக்கான சேவை யை ஆரம்பிப்பதுடன் தனது 52 சேவையாக இதனை விஸ்தரித்துக் கொள்வதாக அமையும். இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையே இறுக்கமாகிவரும் உறவுகள் மேலும் விருத்தியடைய இதனால் வாய்ப்புக்கள் எற்படும்.

வைகாசி 11, 2011

Indian railway project in Sri Lanka at full steam

With an Indian de-mining team clearing the 107-km stretch of a railway alignment from Medawachchiya to Talaimannar in record time, the Indian Railway Construction Corporation (Ircon) has shifted gears on the construction of a railway line. Ircon is aiming to complete the sections allocated to it in a year-and-a-half. (more...)

வைகாசி 11, 2011

மும்பை தாக்குதலுக்கு உதவிய பாகிஸ்தான் அதிகாரிகள்

கடந்த 2008, நவம்பரில், மும்பையில் தாஜ் ஹோட்டல், சத்ரபதி சிவாஜி ரயில் முனையம், ஓபராய் ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில், பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்ப்பாய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு சதித்திட்டம் தீட்டிக் கொடுத்த அமெரிக்க வாழ் பாகிஸ்தானியரான டேவிட் கோல்மேன் ஹெட்லியை, அமெரிக்க பொலிஸார், சிகாகோவில் 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்தனர். மும்பை தாக்குதல் சம்பவத்துக்கான ஆயத்த ஏற்பாடுகளை செய்ததாக சஜத் மிர் என்பவன் மீதும், தாக்குதலை நடத்த பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்ததாக அபு குவாபா என்பவன் மீதும், தாக்குதல் சம்பவத்துக்காக நிதி உதவி செய்த மேஜர் இக்பால் என்பவன் மீதும், மஜார் இக்பால் என்பவன் ஹெட்லிக் உடந்தையாக இருந்ததற்காகவும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பை தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்ட ஹெட்லிக்கு உதவியாக பாகிஸ்தான் இராணுவ மேஜர் சமீர் அலி என்பவரும், மேஜர் இக்பால் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

வைகாசி 11, 2011

TUs welcome retirement age extension

Local trade unions of Sri Lanka have commended the government’s decision to increase the retirement age of employees engaged in services in Corporations and Statutory Boards. The Sri Lanka Independent Workers’ Union says this is a significant victory of the working class.  General Secretary of the union Lesley Devendra said they discussed this issue with President Mahinda Rajapakse for over two years. He said that although government servants were permitted to work until they reached the age of 60 years, there was no specific retirement age limit for employees in Corporations and Statutory Bodies. Certain institutions used the age of 55 as the retirement age and some institutions allowed their workers to engage in services until they reached the age of 57 and to continue until 60 years. This has created injustice to certain groups of workers. Mr.Devendra further said that as the President has already provided important decisions for the working class the era of  strikes and agitations  has come to an end.

வைகாசி 11, 2011

அமுலாக்கப் பிரிவு விசாரணை,  கனிமொழி கவலை

நீதிமன்றத்திற்கு தினந்தோறும் வர வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆனால் அமுலாக்கப் பிரிவு அதிகாரிகளின் விசாரணைக்கு செல்வதற்கு முன் தங்களது ஆடிட்டர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டியிருக்கிறது. அதற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என கனிமொழியும், சரத்குமார் ரெட்டியும் கவலை தெரிவித்தனர். (மேலும்....)

வைகாசி 11, 2011

திரிபோலி மீது நேட்டோ படை சரமாரி தாக்குதல்

லிபிய தலைநகர் திரிபோலி மீது நேட்டோ படையினர் நேற்று சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். லிபிய ஜனாதிபதி முஅம்மர் கடாபியின் குடியிருப்புப் பகுதியில் நேட்டோ படை நேற்று அதிகாலை 2 மணி தொடக்கம் தொடர்ச்சியாக மூன்று மணி நேரம் வான் தாக்குதலில் ஈடுபட்டதாக லிபிய அரசு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் லிபிய அரச கட்டடங்கள் சிலதுக்கு சேதமேற்பட்டதோடு அருகில் இருந்த மருத்துவமனை ஒன்றும் சேதமடைந்துள்ளது. இதனால் அங்கிருந்த நான்கு குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் லிபிய அரசு கூறியுள்ளது. இந்த தாக்குதல் குறித்து லிபிய அரச பேச்சாளர் முஸா இப்ராஹிம் கூறும்போது, இன்றிரவு திரிபோலி நகருக்கு குறிப்பிடத்தக்க நாளாக அமைந்துவிட்டது. இது கவலையை தருகிறது. நாம் ஒவ்வொரு நாளும் இரண்டு பக்கங்களிலும் பலரை இழந்துவருகிறோம். இது குறித்து தீர்வுகாண வேண்டிய நேரம் வந்திருப்பதாக நாம் நினைக்கிறோம் என்றார். நேட்டோ அமைப்பின் செயலாளர் நாயகம் அன்டஸ் பொக் ராஸ்முஸன், முஅம்மர் கடாபியின் நாட்கள் எண்ணப்பட்டு வருவதாக எச்சரிக்கை விடுத்த நிலையிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வைகாசி 11, 2011

 

பின் லாடனைத் தொடர்நது முல்லா ஓமரைத் தேடி அமெரிக்கா வேட்டை

பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் அல்கொய்தா தலைவர் பின் லேடனை வீழ்த்திய அமெரிக்க படை கள் தற்போது ஆப்கான் தலிபான் தலைவர் முல்லா ஒமரைத் தேடி வேட்டையைத் தொடங்கியுள்ளனர். ஒமரின் மறைவிடம் என சந்தேகி க்கப்படும் இடங்களில் அமெரிக்க மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் கூட்டுப் படைகள் சோதனைகளை நடத்தி வருகின்றன. சமீபத்திய நட வடிக்கை வெற்றிகரமாக முடிந்த தால் அடுத்தகட்ட வேட்டையை அமெரிக்கப் படைகள் தொடங்கியு ள்ளன. (மேலும்....)

வைகாசி 11, 2011

ஒசாமாவைக் கொல்ல அமெரிக்கா - பாக். 2001 இல் ஒப்பந்தம் -  தி கார்டியன்

ஆப்கானிஸ்தானின் டோரா போரா மலைத் தொடரில் இருந்து தப்பிய ஒசாமா பாகிஸ்தானில் வந்து பதுங்கினால் அவரைக் கொல்ல தன்னிச்சையாக நடவடிக்கை மேற்கொள்ள அமெரிக்காவிற்கு அனுமதி அளிக்கும் இரகசிய ஒப்பந்தத்தில் 2001 ஆம் ஆண்டிலேயே பாகிஸ்தான் கையெழுத்திட்டுள்ளது என்று ‘தி கார்டியன்’ நாளிதழ் செய்தி வெளியிட்டு ள்ளது. (மேலும்....)

வைகாசி 11, 2011

ஸ்கைப்பை வாங்க மைக்ரோசொப்ட் திட்டம்

இணையத்தளமூடான தொலைபேசி சேவையான ஸ்கைப் தளத்தை வாங்க மைக்ரோசொப்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்படி 8.5 பில்லியன் டொலருக்கு ஸ்கைப் தளத்தை வாங்குவதற்கு மைக்ரோ சொப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. இது மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் அதிவிலைகூடிய கொள்வனவாக அமையும் எனவும் ஏ.எப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இது குறித்து இரு நிறுவனங்களும் உத்தியோகபூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை. லக்ஷன்பேர்க்கை மையமாகக் கொண்டு இயங்கும் ஸ்கைப் இணையத்தளத்திற்கு 663 மில்லியன் பாவனையாளர்கள் சர்வதேச அளவில் உள்ளனர்.

வைகாசி 11, 2011

ஒரு மனசாட்சி உள்ள அமெரிக்கரின் குரல்

பின்லேடன் கொலை என்பது திட்டமிட்ட ஒரு படுகொலை என்ப தும், அடிப்படையான சர்வதேச விதி கள் மற்றும் சட்டங்களை அப்பட்ட மாக மீறிய செயல் என்பதும் தெளி வானது. எந்தவிதமான ஆயுதமும் இல்லாமல் இருந்த ஒருவரை சுமார் 80 கமாண்டோக்கள் சுற்றிவளைத்து சுட்டுக் கொன்றுள்ளனர். வெளியாகும் தகவல்களின் அடிப்படையில் அவ ரது மனைவி ஒருவர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சமூகத்தில் சட்டத்திற்கு குறைந்த பட்ச மரியாதையாவது தரப்பட வேண் டும். குற்றம் சாட்டப்படுபவர்கள் நீதியின் முன்பு விசாரணைக்கு நிறுத் தப்பட வேண்டும். 2002 ஏப்ரலில் அமெரிக்க உளவுத் துறையான எப்பிஐ-யின் தலைவர் ராபர்ட் முல் லர் தீவிரமான புலன் விசாரணைக்கு பின்பு, அமெரிக்க இரட்டை கோபுரங் கள் மீதான தாக்குதல் ஆப்கானிஸ் தானில் திட்டமிடப்பட்டது என்றும், யுஏஇ மற்றும் ஜெர்மனியிலிருந்து செயல்படுத்தப்பட்டது என்று நம்புவ தாக மட்டுமே கூறினார். (மேலும்....)

வைகாசி 10, 2011

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் சாட்சியம் (பகுதி 4)

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

அவர் நாம் வன்னியிலிருந்து அடிக்கடி தொந்தரவு செய்வதாக தமது சில முக்கியத்தவர்களுக்கு கூறியதுடன் ஏதோ தாங்கள் தான் தமிழரின் தலைவர்கள் என்றும் தம்மால் எல்லாம் செய்து முடிக்க முடியும் என்றும் சொன்னவர்கள் இப்ப ஏன் என்னிடம் மண்டியிடுகின்றனர்?? இப்ப மட்டும் நான் தேவையாமோ? இவங்கள் அழிந்தால் தான் இனி நாம் எமது நடவடிக்கைகளை மேற்கொள்வது சுலபம் ஆகவே என்னால் மத்திய அரசுடன் மோத முடியாது,
இவங்கள் இன்னும் 10 அல்லது .15 நாட்களில் முடிந்துவிடுவாங்கள்
அவர்கள் தலைவிதியை யாராலும் தடுக்க முடியாது. நான் இப்ப இருக்கும் நிலையில் புலிகளுக்கு கைகொடுத்தால் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டு வைத்துக்கொள்வது கடினம் . எனவே முடியும் இவர்களை பற்றி கதைப்பதை இனி கைவிடுங்கள் என சொல்லப்பட்டதாம். (மேலும்.....)

வைகாசி 10, 2011

யாழின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மூன்றினால் குறையும் சாத்தியம்

யாழ்ப்பாண மாவட்டத்தின் வாக்காளர்களின் எண்ணிக்கை நான்கு இலட்சத்து 80 ஆயிரமாக குறைவடையும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில் எதிர்காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் குறைவடையும் சாத்தியம் உள்ளதாகவும் கருதப்படுகின்றது. தற்போதைய நிலைமையில் யாழ். மாவட்டத்திலிருந்து ஒன்பது பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுகின்றனர். இந்நிலையில் புதிய வாக்காளர் எண்ணிக்கையின் பிரகாரம் எம்.பி. க்களின் எண்ணிக்கை இரண்டு அல்லது மூன்று என்ற எண்ணிக்கையினால் குறைவடையலாம் என்று கருதப்படுகின்றது. (மேலும்....)

வைகாசி 10, 2011

Obama & the Canadian PM

President Obama and the Canadian PM are shown a time machine which can see 50 years into the future. They both decide to test it by asking a question each.

President Obama goes first: "What will the USA be like in 50 years’ time?"

The machine whirls and beeps and goes into action and gives him a printout, he reads it out: "The country is in good hands under the new president, José Fernandez.... crime is non-existent, there is no conflict, the economy is healthy. Vice President Jin Tao has declared Chinese language mandatory in all USA schools There are no worries."

The Canadian PM thinks, "It's not bad, this time machine, I'll have a bit of that" so he asks: "What will Canada be like in 50 years’ time?"

The machine whirls and beeps and goes into action, and he gets a printout. But he just stares at it.

"Come on, David," says Obama, "Tell us what it says."

"I can't! It's all in Tamil!"

என்ன புல்லரிக்குதா...?

(எனது பின் இணைப்பு

President Mahinda goes Last: "What will the Sri Lanka be like in 50 years’ time?"

The machine whirls and beeps and goes into action, and he gets a printout. But he just stares at it.

"Come on, Subramanium," says Obama, "Tell us what it says."

"I can't! It's all in Sinhala!"

என்ன கொதிக்குதா...?)

வைகாசி 10, 2011

அரசு-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நல்ல பயனளிக்கும்

பொலிஸ் அதிகாரம் இல்லாவிடினும் 10,000  தமிழ் பொலிஸாரை நியமிக்கவும் அரசு தயார்

அவசியமாயின் 10 ஆயிரம் தமிழ் பொலிஸ் காரர்களைக் கூட அரசாங்கம் நியமிக்க தயாராக இருக்கிறது என்ற நற்செய்தியும் அங்கு அரசாங்கத் தரப்பினரால் முன்வைக்கப்பட்டது. அரசியலமைப்புக்கான 13வது திருத்தத்தில் உள்ள காணி அதிகாரங்கள் மற்றும் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளும் செயற்பாடுகளுக்கும் கூடியவரையில் இணக்கப்பாட்டை தெரிவிக்க அரசாங்கம் தயாராகவிருக்கிறது. அதிகாரப் பரவலாக்கலின் முதல் நடவடிக்கையாக அரசாங்கத் தரப்பினர் செனட் சபை ஒன்றை அதாவது, இரண்டாவது சபையொன்றை இலங்கை அரசியல் சாசனத்தின்கீழ் அமைப்பதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த யோசனையின் படி செனட் சபையை எந்த நடைமுறையின் கீழ் உருவாக்குவது என்பதில் இதுவரையில் இறுக்கமான கருத்துக்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. (மேலும்....)

வைகாசி 10, 2011

தாய்க்கு முக்கியத்துவம் அளிக்கும் நாடுகளில் கியூபா முதலாமிடம்

தாய்க்கு முக்கியத்துவம் அளிக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 43 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது என உலக அன்னையர் தினத்தை முன்னிட்டு அன்னைக்கு முக்கியத்துவம் வழங்கும் நாடுகள் குறித்து அரச சார்பற்ற நிறுவனமொன்று ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வின் முடிவு உலக அன்னையர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இதன்படி, அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் பட்டியலில் கியூபா முதலாவது இடத்தை பெற்றுள்ளதோடு சீனா 18ஆவது இடத்தையும் இலங்கை 43 ஆவது இடத்தையும் இந்தியா 75ஆவது இடத்தையும் பாகிஸ்தான் 77ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. அபிவிருத்தி அடைந்த நாடுகளின் பட்டியலில் நோர்வே முதலாவது இடத் தையும் அவுஸ்திரேலியா இரண்டாமிடத் தையும் இங்கிலாந்து 13ஆவது இடத்தையும் அமெரிக்கா 31ஆவது இடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வைகாசி 10, 2011

Construction of New Building at Thelippalai Mahajana College in Progress

More than 65% of construction work of the first floor of new three-storied building at Thelippalai Mahajana College has presently been completed by the Army. About 70-80 soldiers belonging to various battalions serving under the Security Forces Headquarters - Jaffna (SF-J) are working daily to see the finish of total construction before the commencement of the third school term 2011. The 5th Battalion of Engineer Services Regiment (5 ESR) has undertaken the project on behalf of the Sri Lanka Army. Commander SF-J Major General Mahinda Hathurusinghe on Thursday (06) went to the site to see the progress of construction work and met officers responsible for the project.The 200 ft x 25 ft new building consisting of 14 classrooms, an aesthetic education unit and a pavilion comes up at the Mahajana College on initiative of Secretary Defence Mr. Gotabhaya Rajapaksa and expenses of the project which is funded with financial assistance of well-wishers and friends of Secretary Defence is estimated to be around Rs. 25 million. Foundation was laid to the building on 7th March this year. Thelippalai Mahajana College which claims a proud history over one hundred years was founded by an eminent teacher and philanthropist Mr. Pavalor Thuraiappa Pillai on 14th October 1910. The college last year celebrated its centenary.

வைகாசி 10, 2011

நோய் எதிர்ப்பு சக்தி

நோய்களைப் போக்கவும் மீண்டும் அவை வராமலிருக்கவும் நோய் எதிர்ப்புச் சக்தியை உடலுக்குத் தருகிறது சிரிப்பு. நாம் சிரிக்கும் போது, மூக்கிலுள்ள சளியில் இம்யூனோகுளோபுலின் என்ட் ஏ என்னும் நோய் எதிர்ப்புப்ட பொருள் அதிகரிக்கிறது. அதனால் பக்டீரியா, வைரஸ், புற்றுநோய்த் திசுக்கள் உடலுக்குள் சென்று விடாதவாறு தடுக்கப்படுகிறது. உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியாகச் செயல்படுகின்ற வெள்ளை அணுக்களுக்கு மிகவும் விருப்பமானது சிரிப்பு. சிரிக்கும் போது வெள்ளை அணுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகின்றன. சிரிப்பினால் இரத்தம் தூய்மையாகிறது. இரத்த அழுத்தம் குறைகிறது. நுரையீரல் நன்கு செயல்படுகிறது.  சிரிப்பினால் என்சி பேலின்ஸ் என்னும் ஓமோன் சுரக்கிறது. அது தசைகளில் ஏற்படும் வலிகளை நீக்குகிறது. இரைப்பைப் புண் குணமாகிறது. இன்றைய காலகட்டத்தில் மாரடைப்பு நோய் ஏற்பட்டு எண்ணற்றோர் உயிரிழக்கின்றனர். சிரிப்பானது கொழுப்பினால் ஏற்படும் மாரடைப்பு நோய் வராமல் தடுக்கப்படுகிறது. நாள் தோறும் குறைந்த அளவு ஒரு மணி நேரமாவது, சிரித்தப் பழக வேண்டும்.

வைகாசி 10, 2011

ஒருவருடத்திற்கு முன்பே பின்லேடன்  இறந்து விட்டதாக ஈரான் தெரிவிப்பு

அமெரிக்கா அடைய முடியாத இலட்சியத்தை ஒஸாமாவின் இயற்கை மரணத்தில் சாதிப்பு

அல் கைதாவின் தலைவர் ஒஸாமா பின்லேடன் இயற்கை மரணமடைந்து வருடங்கள் கடந்துவிட்டதென தெரிவித்த ஈரான் பாதுகாப்பு அமைச்சர் அமெரிக்கா ஆடியவை அனைத்தும் நாடகமென விளக்கினார். போரில் அடைய முடியாத இலட்சியத்தை அமெரிக்கா இயற்கை மரணத்தில் அடைந்து கொள்ள எடுத்த பொய்யான நாடகமே ஒஸாமா பின்லேடனை சுட்டுக்கொன்றதாக விடுத்த அறிவித்தல் என்றும் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கடுமையாகச் சாடினார். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் நீண்டு செல்லும் பிர யோசமில்லாத போரை அமெரிக்க மக்கள் வெறுக்கத் தொடங்கியுள்ளனர். அதிகரித்துச் செல்லும் போர் செலவீனகளால் அமெ ரிக்காவின் பொருளாதாரம் நலிவடைந்து செல்கின்றது. இதனால் ஒபாமாவின் செல்வாக்கு சரிந்து செல்கின்றது. (மேலும்....)

வைகாசி 10, 2011

ஆறு ஆண்டுகளுக்கு முன்பே பின்லேடனும், ஜவாஹிரியும் பிரிந்துவிட்டதாக தகவல்

ஆறு ஆண்டுகளுக்கு முன்பே பின்லேடனும், அல் ஜவாஹிரியும் பிரிந்துவிட்டதாக பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி அமெரிக்க பத்திரிகையான ‘வோல் ஸ்டிரீட்’ ஜர்னல்’ செய்தி வெளியிட்டுள்ளது. 1988ம் ஆண்டு அல்கொய்தா அமைப்பை உருவாக்க பின்லேடனுக்கு உதவியாக இருந்தார் ஜவாஹிரி மேலும் ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் அல்கொய்தாவின் தாக்குதல்களை நடத்தியும் வந்தார் என்று அந்த பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி கூறியுள்ளார். ஆனால் இதை அமெரிக்க அதிகாரிகள் நம்புவதாக இல்லை. (மேலும்....)

வைகாசி 10, 2011

Army Engineers Begin De-Mining the Moat around Jaffna Fort

On directives of Commander Security Forces - Jaffna (SF-J) Major General Mahinda Hathurusinghe, troops of the 1 Field Engineers Regiment serving under the SF-J last month commenced de-mining work of the moat around the historical Jaffna Fort which is being reconstructed by the Archaeological Department with financial aid of the Netherlands. The team of Field Engineer solders assigned to the task started removing the mines and UXOs (Unexploded Ordnance) in the moat on 20th April. Army de-miners expect to complete the project within three months. Maintenance of the Fort was neglected when it fell out of the government administration after a pitched battle between the government forces and the LTTE who used it as a terrorist strong point. It was regained by the Security Forces in Operation Riviresa in 1996. Terrorists paying no heed to the historic value of this world heritage blasted some parts of the construction and caused extensive damages to it. Army Engineer troops had to toil round the clock to de-mine the Fort before it was reopened for the public. Total cost for renovation of this historical Dutch Fort is estimated approximately to be Rs. 100 million.

வைகாசி 10, 2011

கோடீஸ்வர முதலமைச்சர்கள்

இந்தியாவில் உள்ள 30 முதலமைச் சர்களில், 24 முதலமைச்சர்கள் கோடீஸ் வரர்கள் என தகவல்கள் வெளியாகி யுள்ளது. 30 முதலமைச்சர்களின் சொத்து மதிப்பீடு அவர்கள் தேர்தலில் போட்டி யிட வேட்பு மனு தாக்கல் செய்யும்போது அளித்த தகவல்களின் அடிப்படையில் சுமார் 236 கோடி ரூபாய் ஆகும். மார்க் சிஸ்ட் கட்சியின் தலைமையில், மேற்கு வங்கம், கேரளா மற்றும் திரிபுரா மாநிலங் களில் உள்ள இடதுசாரி அரசுகளின் முத லமைச்சர்கள் கோடீஸ்வரர்கள் பட்டிய லில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. (மேலும்....)

வைகாசி 10, 2011

52 Div Organizes Mobile Eye Clinic for Civilians & Donates Pairs of Spectacle

Varani-based 52 Division of the Security Forces - Jaffna this week organized another community welfare project for school children and people in Vadamarachchi and Thenmarachchi areas with assistance of the Development Lottery Board, Colombo. On initiative of General Officer Commanding (GOC) 52 Division Brigadier Anura Sudhasinghe, a stock of spectacles and school items to the value of about Rs. 250.000/- were distributed among the civilians on Saturday (23) after a mobile eye clinic at Varani Maha Vidyalaya. Opticians brought from Colombo by the Wickramaarachchi Opticians initially checked 1013 people with poor eyesight and the Development Lottery Board donated pairs of spectacles to 903 of them on recommendation of the opticians. Others were referred to eye clinics of respective hospitals for further treatments. Members of the Sri Lanka Army Medical Corps also joined the opticians to check eyesight of the civilians present at the clinic. Meanwhile, caps and parcels of school items donated by the Development Lottery were also distributed among 100 students from various schools in the 522 and 523 Brigade areas on the same occasion.GOC 52 Division Brig Anura Sudhasiinghe, Chairman of the Development Lottery Mr. I.R.W. Dissanayake, Working Director Mr. Pradeep Wijesiriwardane, Deputy General Manager Mr. Anura Jayaratne, owner of the “Wickramarachchi Opticians” Mr. Mihira Wickramarachchi and senior Army officers were present on the occasion.

வைகாசி 09, 2011

பாரம்பரிய பந்தபாசங்களை சீர்குலைக்கும் அன்னையர் தினம்

இலங்கை உட்பட உலக நாடுகளில் நேற்று அன்னையர் தினம் பெரும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தமது சொந்த அன்னையர் மீது அன்பையும், பாசத்தையும் தெரிவிப்பதற்கு இவ்வாறான ஒரு தினம் அவசியம்தானா என்று தமிழ் முஸ்லிம் கலாசாரத்தில் ஈடுபாடு கொண்ட கல்விமான்களும் அறிஞர்களும் ஏளனம் செய்யும் அளவுக்கு அன்னையர் தினம் பணம் சம்பாதிப் பதற்கான ஒரு வழிமுறையாக இன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. அதுபோன்றே தந்தையர் தினமும் உலகெங்கிலும் கொண்டாடப்படு கின்றது. மேற்கத்திய நாகரிகத்தில் மூழ்கியிருக்கும் நம் நாட்டவர்கள் உட்பட பல்வேறு கீழைத்தேசங்களைச் சேர்ந்த மக்கள் இந்தப் போலி யான அன்னையர், தந்தையர் தினத்தை கொண்டாடும் பழக்கத்தை இனிமேலாவது கைவிட வேண்டும். அவர்கள் அவ்விதம் செய்தால் தான் அவர்களின் பிள்ளைகள் தங்கள் தாய்மார் வயோதிபம் அடையும் போது அன்புடன் பராமரிப்பார்கள் என்பதை ஞாபகப்படுத்த விரும்புகின்றோம். (மேலும்....)

வைகாசி 09, 2011

அன்புள்ள இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கட்கு ஒரு பகிரங்க மடல்.

(நடேசன் – அவுஸ்திரேலியா)

பேச்சுவார்தைகளை எப்படி நடத்துவது என்ற  பயிற்சி எடுக்க சிங்கப்பூர் போனீர்கள் என தகவல் வந்தது. ஐக்கிய நாடுகள் செயலாளர்நாயகத்தின் அறிக்கையை வரவேற்றுவிட்டு அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தமுடியும் என நினைக்கிறீர்களா?

ஐக்கிய  நாடுகள் பாதுகாப்பு சபையில் எந்த ஒரு நாடும் முக்கியமாக சீனா அல்லது ரஷ்ஷியா வீட்டோ பண்ணாமல் இருந்தால் மட்டுமே மேற்கு நாடுகளின் ஆதரவில் வரையப்பட்ட அறிக்கையின் படி இலங்கையில் போர்க் குற்ற விசாரணைக் கமிஷன் வருவது சாத்தியம். சீனாவுக்கு தீபெத்திலும் ரஷ்ஷியாவுக்கு செச்செனியாவிலும் இதே போன்ற விசாரணையை தொடங்குவதற்கான சகல சாத்தியம் உண்டு. இதை விட அமெரிக்காவும் பிரிட்டனும் ஈராக்கில் ஏற்படுத்திய போர் அழிவுகள் குறைந்தவையல்ல. நமது பக்கத்து நாடான இந்தியாவின் இராணுவத்தால் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட காஸ்மீரிகள் கடந்த சில வருடங்களில் இறந்து விட்டார்கள். அது இன்னும் முடிவடையாத தொடர்கதை இப்படியாக எல்லோர் உடம்பிலும் சிரங்குப் படை உள்ளது. யாருக்கு யார் தைலம் போடுவது?  இந்த நிலையில் இந்த நாடுகள் இலங்கை மீது எங்வளவு தாக்கத்தை பிரயோகிக்கும் என்பது கேள்விக்குரியது.மறுபுறத்தில் அதிக தாக்கத்தை பிரயோகிக்கும் போது இலங்கை அரசாங்கம் இரண்டு வகையாக  செயற்படலாம். (மேலும்....)

வைகாசி 09, 2011

போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுதந்திரமான விசாரணை வேண்டும் - பிரித்தானியா

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமான, நம்பகமான விசாரணை நடத்தப்படுவதையே பிரித்தானியா விரும்புவதாக அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சரும், பிரதி வெளிவிவகார அமைச்சரும் தெரிவித்துள்ளனர். நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான எமது கரிசனைகளையும் நாம் வெளிப்படுத்தியுள்ளோம். அதேவேளை நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையில் என்ன கூறப் போகிறது என்பதை அனுமானிக்க முடியாது. தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான ஒரு வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நாம் இலங்கை அரசைக் கேட்டுக் கொள்கிறோம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். (மேலும்....)

வைகாசி 09, 2011

சுட்டுக் கொன்றதும் பின்லேடனை படி வழியாக இழுத்துச் சென்றனர் - ஒசாமாவின் மனைவி

பின்லேடன் அபோட்டாபாத் பங்களாவில் மாடியில் தங்கி இருந்தார். அதில் 3 அறைகள் உள்ளன. அமெரிக்க வீரர்கள் திடீர் என்று மாடியில் இறங்கி தாக்குதல் நடத்தினார்கள். இதில் பின்லேடன் உயிர் இழந்ததும் அவரது உடலை மாடிப்படிகள் வழியாக தரதரவென்று இழுத்துக் கொண்டு கீழே வந்ததாக தெரிவித்துள்ளார். இதேபோல் பின்லேடனின் மகளும் பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகளிடம் தனது தந்தையை அமெரிக்க வீரர்கள் கொன்று மாடிப்படிகள் வழியே இழுத்து வரப்பட்டதை நேரில் பார்த்ததாக தெரிவித்துள்ளார். (மேலும்....)

வைகாசி 09, 2011

கேள்விக்குறியாகும் கனிமொழியின் அரசியல் எதிர்காலம்?

‘ஸ்பெக்ட்ரம்’ விவகாரம் தி.மு.க வின் மதிப்பை டில்லியில் குறைத்துவிட்டது. கூட்டணிக் கட்சியாக இருந்தாலும், இப்பிரச்சினையில் விலகியே நிற்கிறது காங்கிரஸ், அரசில் அங்கம் வகிக்கும் கட்சி தி.மு.க என்றாலும் கூட, ஒட்டுமொத்த பொறுப்பு உள்ளதாக காங்கிரஸ் கருதவில்லை. இந்நிலையில், கனிமொழிக்கான நெருக்கடிகள் அதிகமாகவே இருக்கின்றன. ‘ஸ்பெக்ட்ரம்’ விவகாரத்திலிருந்து காப்பாற்றுவதற்கு தந்தை என்ற முறையில், கருணாநிதி உதவிகளை செய்யலாம். ஆனால், கட்சி என்று வரும்போது, அவரால் ஒன்றும் செய்ய முடியாது என தி.மு.க வின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகிறார். இந்த பிரச்சினையில் அழகிரி, ஸ்டாலின் மற்றும் தி.மு.க வினர் அரசியல் ரீதியாக எடுக்கும்நிலை கூட கனிமொழிக்கு எதிராகவே இருக்கும். (மேலும்....)

வைகாசி 09, 2011

 

இது எப்படியிருக்கு.....? சுந்தரம்பாள் அம்மா அம்மாதான்!

 

(பரவச பெருவாக்கம் அடைய....)

 

வைகாசி 09, 2011

பின் லாடன் சகாக்களை நோக்கி தொடரும் ஏவுகணைத் தாக்குதல்கள்

அல்கொய்தா இயக்கத்தில் பின்லேடனுக்கு பின்னர் தலைவர் பதவிக்கு வர வாய்ப்பு உள்ளவர்களில் ஒருவரான அன்வர் அல் அவ்லாகியை கொல்வதற்காக யெமன் நாட்டில் அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. எனினும் அத்தாக்குதலிலிருந்து அவர் தப்பிவிட்டதாக அறிவிக்கப்ப ட்டுள்ளது. அல்கொய்தா இயக்கத்தின் தலைவராக இதுவரை இருந்த பின்லேடனை பாகிஸ்தானில் அமெரிக்கா சுட்டுக்கொன்றது. இதனால் அந்த இடம் இப்போது காலியாக உள்ளது. இந்த இயக்கத்தின் தலைவர் பதவிக்கு அடுத்து யார் வரப்போகிறார் என்பது இன்னும் முடிவு ஆகவில்லை. இதற்கான பட்டியலில் அய்மன் அல் ஜவாஹிரி உள்பட பலபேரின் பெயர்கள் இடம் பெற்று உள்ளன. அவர்களில் யெமன் நாட்டில் வசிக்கும் அன்வர் அல் அவ்லாகி என்பவரும் ஒருவர். (மேலும்....)

வைகாசி 09, 2011

பாகிஸ்தான்

ஈராக், ஆப்கானிஸ்தானைத் தொடர்ந்து அமெரிக்காவின் அடுத்து  குறி?

பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் உறுதியான நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் உங்கள் வாக்குறுதியை நிரூபியுங்கள் என பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுரை கூறியுள்ளது. அதேநேரத்தில், “ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின் பாக். மீதான நம்பகத் தன்மை மீது சந்தேகம் வருகிறது என்று அமெரிக்க பாராளுமன்ற ஆய்வுக் குழுவின் (சி.ஆர்.எஸ்.) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு ள்ளது. பாகிஸ்தானில் 2003ம் ஆண்டில் இருந்து, ஒசாமா பின்லேடன் தங்கியிருந்தார். அவர் அங்கு இருந்தது பற்றி தங்களுக்கு ஒன்றும் தெரியாது என பாக். கூறிவருகிறது. இதுகுறித்து அமெரிக்க எம்.பி.க்கள் மற்றும் அரசியல் நிபுணர்கள் பல்வேறு கேள்விக் கணைகளைத் தொடுத்து வருகின்றனர். எந்தக் கேள்விக்கும் பாகிஸ்தானிடம் இருந்து சரியான பதில் வரவில்லை. (மேலும்....)

வைகாசி 09, 2011

 

தீவிரவாதத்தை ஒழித்த பயங்கரவாதி!

அமெரிக்கா எதை எல்லாம் செய்ய நினைக்கிறதோ, அதை எல்லாம் செய்து முடித்துவிடுவதால்தான், ஒசாமாக்கள் உருவாகிறார்கள் என்பதை அமெரிக்க அதிபர்களுக்கு யார் சொல்வது?

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் அந்த அறிவிப்பு வெளியானபோது, நள்ளிரவு என்றும் பாராமல் வீதிகளில் கூடி, ஆடித் தீர்த்தார்கள் அமெரிக்கர்கள். கொண்டாட்டங்கள் தொடர்கின்றன. நிச்சயம் இது நல்ல செய்திதான், அமெரிக்காவுக்கு மட்டும் அல்ல... உலகுக்கே. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள், இரு பெரும் போர்கள், பல்லாயிரக்கணக்கான உயிர்கள், லட்சக்கணக்கான கோடிகளைப் பலியிட்டு, ஒசாமாவை அழித்தே விட்டது அமெரிக்கா. ஆனால், ஒசாமா எப்படி உருவானார்? (மேலும்....)

வைகாசி 09, 2011

வவுனியாவில் ஆசிரியர் வீட்டின் மீது கைக்குண்டு தாக்குதல்

பாடசாலை ஆசிரியர் வீட்டின் மீது நேற்று ஞாயிறு அதிகாலை 5.30 மணியளவில் கிறனைட்டு தாக்குதல் இடம்பெற் றுள்ளது. எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. ஆனாலும், வீட்டு முன்பக்கத்தில் நிறுத்திவைக்கப்ப ட்டிருந்த ஆசிரியரின் மோட்டார் சைக்கிள் பெரும் சேதமடைந்துள்ளது. வீட்டு யன்னல் கண்ணாடிகளும் அதிர்வினால் சேதமடைந்துள்ளதென பொலிஸார் தெரிவித்தனர். ஆசிரியர் குடும்பத்துடன் நித்திரையில் இருந்த போது இனம் தெரியதவர்கள் இந்த தாக்குதலை நடத்திவிட்டு தப்பியோடியுள்ளனர். சம்பவ இடத்திற்கு பொலிஸாரும், இராணுவத்தினரும் சென்று விசாரணைகளை நடத்தினார்கள். இதேவேளை, கொக்கரல்ல என்ற இடத்தில் பொல்கட்டுவையில் கைக்குண்டுகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளர் இவர்கள் இருவரும் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.

வைகாசி 09, 2011

 

வீதிகள், குளங்களை புனரமைக்க 550 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீதிகள், குளங்கள், நீர்ப்பாசன கால்வாய்கள் போன்றவற்றை புனர்நிர்மாணம் செய்வதற்கு 550 மில்லியன் ரூபாவை பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஒதுக்கீடு செய்துள்ளதாக கிழக்கு மாகாண அமைச்சரவை பேச்சாளரும் வீதி, வடிகாலமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார். அமைச்சர் தொடர்ந்து அங்கு கருத்து தெரிவிக்கையில், திருகோணமலை மாவட்டத்தில் மாகாண நீர்ப்பாசன குளங்களைப் புனரமைப்பதற்கு 75 மில்லியன் ரூபாவும் மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத் துக்குச் சொந்தமான வீதிகளைப் புனர மைப்பதற்கு 50 மில்லியன் ரூபாவும் மாகாண விவசாய வீதிகளைப் புனர மைப்பதற்கு 25 மில்லியக் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. (மேலும்....)

வைகாசி 09, 2011

துப்பாக்கிகளை எடுக்கச் சென்ற போதே ஒஸாமா பின்லேடன் கொல்லப்பட்டார் - அமெரிக்கா

அல் கொய்தா தலைவர் ஒஸாமா பின்லேடன் தனது படுக்கையறையிலுள்ள இரு துப்பாக்கிகளை எடுக்க விரைந்த வேளையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாக அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினரான ஜிம் லான்கெவின் தெரிவித்தார். அபோதாபாத்திலுள்ள பின்லேடனின் வசிப்பிடத்தை அமெரிக்கப் படையினர் முற்றுகையிட்ட போது அவர் ஆயுதமெதனையும் வைத்திருக்கவில்லை என்பதை அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக கூறிய ஜிம் லான்கெவின் ஆனால், அந்த அறைக்குள் ஆயுதங்கள் இருந்ததாக கூறினார். அறையில் ஆயுதங்கள் காணப்பட்டதால் பின்லேடன் அமைதியான வழியில் சரணடைய மாட்டார் என அமெரிக்கப் படையினர் அஞ்சியே துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக பிறிதொரு பெயரை வெளியிட விரும்பாத அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்ததாக பிரித்தானிய த சன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

வைகாசி 09, 2011

வைகாசி 09, 2011

அமெரிக்க உளவுப்படை துப்பு துலக்கிய விதமும் பின்லேடன் வீழ்ந்த கதையும்!

அன்னிய மண்ணில் 4 ஹெலிகாப்டர்களுடன் நுழைந்து பாகிஸ்தான் ராணுவத்தின் கண்ணில் மண்ணை தூவி விட்டு அமெரிக்க படையினர் சாதித்துகாட்டிய இந்த துணிச்சல் வேறு எந்த நாட்டு ராணுவத்துக்கும் வருமா என்பது கேள்விக்குறியே! அசகாய சூரர்களாக மாறி ஓசாமாவை வீழ்த்திய கமாண்டோ படையினரை அதிபர் ஒபாமா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது தீவிரவாதத்தின் தலையை துண்டித்துவிட்டோம் என்று வர்ணித்துள்ளார்.இதற்காக அமெரிக்காவுக்கே தேவைப்பட்ட காலம் ஓரிரு ஆண்டுகள் அல்ல! 10 ஆண்டுகள்!! காலம் கடந்தாலும் பின்லேடனை பழி தீர்த்து தனக்கு ஏற்பட்ட களங்கத்தை அமெரிக்கா துடைத்துக் கொண்டது பாராட்டுக்குரியது. (மேலும்...)


வைகாசி 08, 2011

ஐ.நா. செயலாளரின் நிபுணர் குழு கலைப்பு, இரகசியங்களை வெளியிடத் தட

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றம் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்கவென ஐ.நா. செயலாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு கலைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தருஷ்மன் தலைமையிலான மூவர் அடங்கிய நிபுணர் குழுவை ஐ.நா. செயலாளர் நாயகம் கடந்த வருடம் நியமித்திருந்தார். இக்குழு பல வழிகளில் சாட்சியங்களைப் பெற்று இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற விடயங்களை 192 பக்க அறிக்கையாக தயாரித்து அண்மையில் ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் கையளித்ததோடு, அவர் அதனை அம்பலப்படுத்தியிருந்தார். அவ்வாறான நிலையில் நிபுணர் குழுவின் செயற்பாடுகள் முற்றுப்பெற்றுள்ளதால் நேற்று ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் அதனைக் கலைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நிபுணர் குழுவிடம் சாட்சியளித்தவர்களின் இரகசியத் தன்மை எதிர்வரும் இருபது வருடங்களுக்கு பேணப்பட வேண்டுமென நிபுணர் குழு உறுப்பினர்களுக்கு பணிப்புரை விதிக்கப்பட்டுள்ளது.

வைகாசி 08, 2011

ஐ. நா. குழு அறிக்கை: அடுத்து என்ன?

இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடைபெற்ற போர் 2009-ஆம் ஆண்டு மே 19 அன்று முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசு அறிவித்தது. வன்னி பகுதி யில் சுமார் 3 லட்சம் பேருக்கு சொல்லொணாத் துயரங்களை ஏற்படுத்திய கொடூரமான போராக இது நடந்தது. போர் துவங்கிய 2008 செப்டம் பரிலிருந்து போரின் இறுதி வரை கடுமை யான போர்க் குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அப்பாவி மக்கள் படுகொலை, மனித உரிமை மீறல்கள் ஏராளமாக நிகழ்ந்துள்ளன. சர்வதேச மனிதநேய சட்டங்கள் மற்றும் மனித உரிமை சட்டங்களை மீறும் வகையில் இழைக்கப் பட்ட இத்தகு குற்றங்களை ஐக்கிய நாட்டு மன்றத்தின் நிபுணர்குழு, தனது அறிக்கை யில் தொகுத்துள்ளது. 2009, மார்ச் மாதம் இலங்கை யின் ஜனாதிபதி ராஜபக்சேவும், ஐ.நா. தலை மைச் செயலரும் கையெழுத் திட்ட ஒரு பிரகட னம் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிப்பு பணியில் மூன்று பேர் கொண்ட ஐ.நா. குழு ஈடு பட்டது. (மேலும்...)

வைகாசி 08, 2011

 

நாய்க்கு நடுக்கடலில் மட்டுமா நக்குத் தண்ணி?

 

தாகத்தின் பரிதவிப்பு குழந்தைக்குதான் புரியும

வைகாசி 08, 2011

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை பாகம் (05)

ஐ.நா.அலுவலர்களை வெளியேற்ற வேண்டாமென கெஞ்சிய வன்னி மக்கள்

2008 செப்ரெம்பரில் இலங்கை இராணுவம் பல முனைகளில் இருந்தும் வன்னி நோக்கி முன்னேறியதோடு அதனால் அப்பிரதேசத்தில் இருந்து வெளியேற முடியாத அதிக எண்ணிக்கை யிலான பொதுமக்கள் அங்கு சிக்குண்டனர். அப்பிரதேசத்தை விட்டகலுமாறு கிரமமாக அரசாங்கம் துண்டுப் பிரசுரங்களை மேலிருந்து வீசியது (ஆயின் அதனை எவ்வாறு செய்யலாம் என்பது பற்றிய குறிப்பான தகவலை வழங்கவில்லை). ஆயினும், அதிகமானோர் அங்கேயே இருந்தனர். எல்.ரி.ரி.ஈ.இன் அனுமதிச் சீட்டுத் திட்டத்துக்குப் புறம்பாக, எல்.ரி.ரி.ஈ. இன் கட்டுப்பாட்டுப் பிரதேச த்தில் பொதுமக்கள் சிக்குண்டதற்கு மேலும் பல காரணிகளும் பங்களித்தன. இம்மக்களுள் பெரும்பாலானோருக்கு வன்னியே அவர்களின் குடியிருப்புப் பிரதேசமாகும். இராணுவம் யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய அனுபவம் பலருக்கு இருந்ததோடு, 1995 முதல் அவர்கள் எல்.ரி.ரி.ஈ. உடன் சேர்ந்து நகர்ந்தனர். தம் அனுபவத்தில் இருந்து அவர்கள் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குச் சென்றால் அவர்கள் அங்கு தடுத்து வைக்கப்ப டுவார்கள் என அவர்கள அஞ்சினர். அவர்கள் வெள்ளை வான் பற்றியும் அச்சம் கொண்டிருந்ததோடு, இராணுவத்தினரால் கற்பழிப்பு அல்லது சித்திரவதை செய்யப்படுவதையிட்டும் பயந்தனர். மேலும், வலுக்கட்டாயமாக எல்.ரி.ரி.ஈ அணிதிரட்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், அநேக குடும்பங்களின் உறவுகள் எல்.ரி.ரி.ஈ இல் இருந்தனர். அது எவ்வாறாயிருந்த போதிலும், பல சந்தர்ப்பங்களில் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் செல்வதாயிருந்தால், செல் வெடி வரும் திசை நோக்கி, யுத்தம் நடைபெறும் இடங்களை மற்றும் கண்ணி வெடிகள் புதைத்து வைக்கப்பட்டிருந்த இடங்களைத் தாண்டிச் செல்ல வேண்டியும் இருந்தது. (மேலும்....)

வைகாசி 08, 2011

Scarborough Liberals struggle to make sense of losses in safe ridings.

Tamil voters turned on party in Scarborough, says former MP Cannis

Last days of Sri Lanka's civil war in May 2009, Liberal politicians had not appeared to support protestors on Toronto's University Avenue or on Parliament Hill in Ottawa where, she said, only Layton came to address the crowd. (Liberal MPs at the time said they didn't want to appear because protestors were displaying flags of the banned Liberation Tigers of Tamil Eelam.). The NDP is there to "give that voice for struggling people throughout the world," Sitsabaiesan, appointed in January as an advisor to Layton on Tamil issues, said she concluded. The Conservatives nominated popular Tamil-Canadian broadcaster Gavan Paranchothy in Scarborough Southwest but he couldn't carry the riding against New Democrat Dan Harris. A factor may have been a widely-shown Conservative ad, which showed footage of the MV Sun Sea landing last August with 491 Tamil asylum-seekers on board and said the re-elected Tories would crack down on people smugglers who "take advantage of our generosity." The Scarborough-based National Council of Canadian Tamils called on the Conservatives to apologize to the community and remove the ad, which the group said "insinuates that Tamil refugees who are forced to arrive (in Canada) through unconventional means are 'criminals.' (more....)

வைகாசி 08, 2011

Al Qaeda Osama Bin Landen  and LTTE Velluppillai Prabakaran

(more....)

வைகாசி 08, 2011

இந்திய உயர் மட்டக்குழு இலங்கை வருகை

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து விரிவாக ஆராயும்

ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து ஆராயும் பொருட்டு இந்திய இராஜதந்திர குழுவொன்று எதிர்வரும் சில தினங்களில் இலங்கை வரவுள்ளது. இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், இந்திய வெளியுறவுச் செயலாளர் நிரூபமாராவ், இந்திய பிரதமரின் செயலாளர் ரி.கே. நாயர் ஆகியோரே இலங்கை வரவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த இராஜதந்திர குழுவானது, ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து விரிவாக ஆராயவுள்ளதுடன், வடக்கில் இந்திய அராசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் ஆராயுமென தெரிவிக்கப்படுகிறது. (மேலும்....)

வைகாசி 08, 2011

Sri Lanka to take immediate steps to address the core grievances of the Tamil population - African National Congress

The ruling African National Congress (ANC) in South Africa has called on the government of Sri Lanka to take immediate steps to address the core grievances of the Tamil population. A statement by the part which includes the current and past Presidents of the country, also called for a genuine reconciliation process in Sri Lanka. The statement comes following the release of the report by a UN Panel of Experts which included Yasmin Sooka, a prominent South African jurist. The African National Congress has consistently condemned any act of violation of human rights in all conflict areas, the statement said. “We therefore urge all conflicting parties to resolve problems through peaceful dialogue and negotiation. We have noted, with regret, that breakdown of the ceasefire and the negotiations between the Government of Sri Lanka and the LTTE led to a military solution of resolving the problems,” the statement added. The ANC supports the recommendations of UN Secretary General Ban Ki-moon’s Panel of Experts that called for the establishment of an independent body to investigate all violations of international humanitarian and human rights laws committed in the conflict.

வைகாசி 08, 2011

அமெரிக்காவில் வறுமை அதிகரிப்பு 

அண்மையில் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி அமெரிக்காவில் 4 கோடியே 70 லட்சம் பேர் வறுமையில் வாடுகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது. இதிலும் நிற ரீதியான பாகுபாடுகள் அதிகரித்துள்ளன. வெள்ளை அமெரிக்கர்களை விட, கருப்பு ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள், லத்தீன் அமெரிக்கர்கள் மூன்று மடங்கு அதிகமாக வறுமையால் வாடுகிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டப்பிரச்சனை பெருமளவில் மக்களைப் பாதித்திருக்கிறது. வறுமையால் வாடும் குழந்தைகளின் எண்ணிக்கையும் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பணிபுரிபவர்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறார்கள். பெரும் அளவில் ஊதியம் வாங்குபவர்கள் மற்றும் மிகவும் குறைந்த அளவில் ஊதியம் பெறுபவர்கள் என்றுதான் அந்தப் பிரிவுகள் உள்ளன. வீட்டுக்கடன் பிரச்சனையால் நடுத்தர வர்க்கம் என்பதே காணாமல் போய்விட்டது போன்ற தோற்றம் அமெரிக்காவில் உருவாகியுள்ளது. பெரும் பணக்காரர்கள் மேலும் செல்வத்தை குவிப்பவர்களாகவும், குறைவான வருமானத்தை ஈட்டுபவர்களின் வருமானம் மேலும் குறைவதாகவும் நிலைமை இருக்கிறது என்று அமெரிக்க அரசின் புள்ளிவிபரங்கள் பற்றி வல்லுநர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.

வைகாசி 08, 2011

ஐநா அறிக்கைக்கு பதில் அளிக்க சிறப்புக்குழு - இலங்கை

போர்க்குற்றம் தொடர் பான ஐநாவின் அறிக் கைக்கு பதில் அளிப்பதற் காக சிறப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை ராணுவம் கூறி யுள்ளது. இத்தகவலை ராணுவத் தளபதி ஜேகத் ஜயசூரிய தெரிவித்ததாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இக்குழு அளிக்கும் அறிக்கை, இலங்கை அரசு சார்பில் அளிக்கப்படும் அறிக்கையுடன் இணைத்து ஐநாவுக்கு அனுப்பப்படும் என்றும் அவர் கூறியதாக இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இலங்கை ராணுவம் சார்பில் அமைக் கப்பட்டுள்ள குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பி னர்கள் மற்றும் அதன் தலை வர் யார் என்பது குறித்த விவ ரங்கள் வெளியிடப் பட வில்லை. இலங்கையில் போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் நிகழ்ந் ததை உறுதிபடுத்திய ஐநா அறிக்கை, போரில் ஆயிரக் கணக்கான அப்பாவி மக் கள் கொல்லப்பட்டதாக வும் சுட்டிக்காட்டியிருந் தது.
 

வைகாசி 08, 2011

Isolate  Tamil National Alliance (TNA) until they denounce Vaddukoddai resolution.  Let Srilanka not bend to TNA’s pressure tactics.

(By Lenin Benedict- Toronto)

It was on the 14th May  of 1976, at Vaddukoddai, the Tamil United Liberation Front (TULF) under  the Chairmanship of S.J.V.Chelvanayakam Q.C, M.P (K.K.S) adopted the  Vaddukoddai Resolution, which radicalized the entire Tamil population of  the North and east, which also played a greater role in militarizing  the Tamil youths and diminished the political role of the Tamil community. Since this day, the former TULF and the present TNA has never participated or practiced a constructive politics but destructive  politics which has brought the Tamil community to Mullivaikal. (more...)

வைகாசி 08, 2011

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்

இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சி லில் நிரந்தர உறுப்பினராக இந்தியா இடம்பெற ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது. இத்தகவலை இந்திய நாடாளுமன்ற விவகாரத் துறையின் இணை அமைச் சர் அஸ்வனி குமார், மாஸ் கோவில் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டி யில் தெரிவித்தார். அவரது தலைமையில் இந்திய நாடாளுமன்ற உறுப் பினர்கள் குழு 6 நாள் பயண மாக ரஷ்யா சென்றுள்ளது. இக்குழு ரஷ்ய நாடாளு மன்ற குழுவினருடன் பேச்சு நடத்திய பின்னர் அமைச்சர் அஸ்வனி குமார் இத்தக வலைத் தெரிவித்தார். “ரஷ்யாவுடன் இந்தியா வுக்கு எப்போதும் சிறப் பான உறவு உண்டு. ஐ.நா. பாது காப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா இடம்பெற ரஷ்யா தனது ஆதரவை மீண்டும் உறு திப்படுத்தியுள்ளது” என்று அவர் கூறினார். 15 ஆண்டு களுக்குப் பின்னர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கள் குழு ரஷ்யா சென்றுள் ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வைகாசி 08, 2011

ஒபாமாவுக்கு ஒரு திறந்தமடல்

இரட்டை கோபுர கொடூரத்திற்கு நீங்கள் பதிலடி கொடுத்திருப்பதாக பலர் சந்தோஷ கூச்சலிடுகின்றனர். கைத்தட்டி சந்தோஷம் அடைகின்றனர். இல்லை அதிபரே! திட்டமிட்டு இன்னும் ஒரு வினையை விதைக்கிறீர்கள் என்பது என்னை போல உங்களுக்கும் தெரியும். ஒசாமாக்களை உருவாக்கும் நீங்கள் ஏன் அவரை கொலை செய்யப் போகிறீர்கள்? உங்களுக்கு நஜிபுல்லாவை நினைவிருக்கிறதா அதிபரே? முற்போக்கு சிந்தனை கொண்ட ஆப்கானிஸ்தானின் மக்கள் அதிபர் நஜிபுல்லாவை கொலை செய்யத்தானே தாலிபான்களையும் ஒசாமாக்களையும் உருவாக்கினீர்கள். நடுரோட்டில் அந்த அதிபரின் உடல் தூக்கில் தொங்கியதை வரலாறு அவ்வளவு எளிதிலா மறந்துவிடும். ஆப்கானிஸ்தான் துவங்கி இராக் வழியாக உங்கள் அத்துமீறல் கொஞ்சமா? ஒசாமாவை பிடிக்க பாகிஸ்தானில் நீங்கள் அத்து மீறி நுழைந்தது சரியா? எந்த நாட்டுக்குள்ளும் புகுந்து அந்த நாட்டிலுள்ளோர் அனுமதி பெறாமல் யாரை வேண்டுமானாலும் சுட்டுத்தள்ளுவது என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் அல்லவா? (மேலும்....)

வைகாசி 08, 2011

NDP statement on UN Panel Report on accountability for War Crimes in Sri Lanka’

Rathika Sitsabaiesan who took former Derek Lee’s riding  Scarborough Rouge-River, who I have read somewhere that in an interview with CBC she is now trying to distance herself from the Tamil Tigers. Jack, all what I can tell you is,  and I am sincere when I say that I wish your new member of parliament  representing Scarborough Rouge-River “every inch and moment of Good Luck  in the world’ when trying to wipe out the white Tiger stripes from her  psyche, as I have been given reasons to believe from her Facebook pages  that she has some affiliation with the Tamil Tigers as the Tamil Tiger  flag has been prominently displayed there.  She might have to buy  new running shoes with rollers to run fast enough to distance herself of  being a pro-LTTE activist Diaspora member, and Velupillai Prabhakaran  the leader of the Tamil Tigers who was snuffed out on 18 May 2009 must  be turning in his grave spitting bullets through 12 inches of soil  hoping that one would get her for trying to turn her back on his  terrorist movement of the Liberation Tigers of Tamil Eelam  (LTTE) (aka  Tamil Tigers) which was and still is supported by the Tamil Diaspora in  the Greater Toronto Area. (more.....)

வைகாசி 08, 2011

கனடா ரிச்மாண்ட் ஹில் இந்து ஆலயத்தில் தாய்லாந்தின் இலங்கைத் தூதர் Prof J.B. திசநாயக்கா!

கனடாவிற்கு The Language Festival of the Sri Lanka - Canadian Community' இற்கு விஜயம் செய்த தாய்லாந்தின் இலங்கைத் தூதரான பேராசிரியர் ஜே. பி. திசநாயக்கா அவர்கள் கனடாவின் ஒன்ட்டாரியோ மாகாணத்தில் உள்ள இந்து கலாசாரத்தை பிரதிபலிக்கும் தென்னிந்திய கட்டடக்கலைக்கு அமைவாக கட்டப்பட்ட ஆதி இந்து ஆலயமான கனடா ரிச்மாண்ட் ஹில் இந்து ஆலயத்திற்கு கனடாவிற்க்கான இலங்கைத் துணைத் தூதுவர் கருணாரத்தின பரணவிதாரண,  கனடிய தமிழ் நண்பர்கள் சகிதம் நேற்றையதினம் (புதன்கிழமை)  May  04, 2011 மாலை விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். (மேலும்....)

வைகாசி 07, 2011

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை பாகம் (04)

இலங்கைப் படையினருக்கு இந்திய கடற்படை உதவியது

யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் பற்றிய செய்மதி உருவங்கள், நிழற்படங்கள் மற்றும் வீடியோப் படங்களை அது உள்ளடக்கியது. ஐக்கிய நாடுகள் இணையத்தளத்தின் மூலம் விடுக்கப்பட்ட அதன் நடவடிக்கைகள் பற்றிய அறிவித்தலுக்குப் பதிலளிக்கு முகமாக கிடைக்கப்பட்ட சமர்ப்பணங்களையும் அது உள்ளடக்கியது. இவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக சரி பிழை பார்க்க முடியவில்லை என்ற போதிலும், சில சமயங்களில் அவை ஏனைய மூலகங்கைளை உறுதிப்படுத்த உதவின. உதாரணமாக இலங்கை அரசாங்கத்தின் அல்லது குறிப்பான வேறு பகிரங்க அறிவித்தல்கள் பற்றிய சம்பந்தப்பட்ட ஊடக மூலங்கள் இவ்வத்தியாயத்தில் மேற்கோள் காட்டப்பட்ட போதிலும், குழு சேகரித்த தகவலை உறுதிப்படுத்துவதற்கு மாத்திரம் அவை உதவுகின்றன. வன்னியில் நடந்தேறிய விடயங்கள் பற்றிய பல அரச சார்பற்ற அமைப்புக்களின் அறிக்கைகள் இருக்கின்றன. இவ்வறிக்கைகள் சிலவற்றை இக்குழு மீளாய்வு செய்த போதிலும், இக்குற்றச்சாட்டுக்களைத் தொகுப்பதற்காக அது அவற்றில் தங்கியிருக்கவில்லை என்பதோடு, குற்றச்சாட்டுக்களின் சுபாவம் மற்றும் நோக்கெல்லை பற்றிய மதிப்பீட்டினை குழு தானாகவே மேற்கொண்டது. (மேலும்....)

வைகாசி 07, 2011

பின் லேடன் மரணம்

உறுதிபடுத்தியது அல்-காய்தா

ஒசாமா பின் லேடன் மரணத்தை அல்-காய்தா இயக்கம் உறுதிபடுத்தியுள்ளது. இஸ்லாமிய இணையதள குழுக்களுக்கு அல்-காய்தா அனுப்பியுள்ள அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. "சைட்" என்னும் இணையதள கண்காணிப்பு நிறுவனம் இத்தகவலை கண்டறிந்து மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. ஒசாமாவை கொன்றதற்காக அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட அதன் கூட்டு நாடுகளை பழிவாங்கப் போவதாகவும், ஆயுதப் போராட்டத்தில் இருந்து விலகப் போவதில்லை என்றும் அல்-காய்தா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. "ஒசாமாவின் ரத்தம் அமெரிக்கர்களையும் அவர்களின் முகவர்களையும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஒரு சாபமாக துரத்தும். அவர்களது மகிழ்ச்சி கவலையாக மாறும். ஒசாமாவுக்காக குரல் எழுப்ப முன்வருமாறு பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமியர்களை கேட்டுக் கொள்கிறோம். துரோகிகளாலும் திருடர்களாலும் உங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை துடைக்கவும், அமெரிக்காவின் கட்டுப்பாட்டை விலக்கவும் முன்வருமாறு கோருகிறோம்." என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைகாசி 07, 2011

ஒசாமாவை காட்டிக் கொடுத்தாரா ஷவாஹிரி? _

புலிகளுக்கு ஒரு கேபி அல் கொய்தாவுக்கு ஒரு ஷவாஹிரி?

அல் கொய்தா அமைப்பை தனது முழுக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருவதற்காக, பின்லேடனின் பாதுகாப்பை சீர்குலைத்து அவருக்கு துரோகம் இழைத்து கடைசியில் அவரது மரணத்திற்கும் காரணமாகியது அல் ஷவாஹிரி என்று சவூதி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் அல் கொய்தா இயக்கம் மிகப் பெரிய இயக்கமாக உருவெடுத்தது. இந்தநிலையில் 2004ம் ஆண்டு பின்லேடனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து இயக்கத்தின் நடவடிக்கைகளை அல் ஷவாஹிரியே கவனித்து வந்தார். அப்போது அவர் அல் கொய்தாவை தனது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர திட்டமிட்டு செயல்பட்டார். (மேலும்...)

வைகாசி 07, 2011

ஒசாமாவைப் போன்று நிபுணர்குழு அறிக்கையும் கடலில் வீசப்பட்டுவிட்டது - சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர

அமெரிக்காவினால் ஒசாமா பின்லேடனின் உடல் கடலில் வீசப்பட்டது போல் இலங்கை தொடர்பான ஐ.நா.வின் அறிக்கையும் கடலில் வீசப்பட்டு விட்டதென அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அவசரகாலச்சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; இலங்கை மீது ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கை பல்வேறுபட்ட போர்க்குற்றச்சாட்டுக்களையும் தவறான முறையில் சுமத்தியிருந்த நிலையில் தற்போது பாகிஸ்தானில் நடந்த சம்பவம் இலங்கை மீதான சகல போர்க்குற்றச்சாட்டுக்களையும் துடைத்தெளிந்து விட்டது. ஒசாமா பின்லேடனின் உடல் அமெரிக்காவால் கடலில் வீசப்பட்டது. அதே போல் இலங்கை தொடர்பான ஐ.நா.அறிக்கையும் கடலில் வீசப்பட்டு விட்டது. நிபுணர்குழுவின் அறிக்கையை மீளாய்வு செய்த பின்னரே வெளியிட வேண்டுமென ஐ.நா.செயலாளர் நாயகம் தெரிவித்திருந்தார். ஆனால் அது மீளாய்வு செய்யப்படாமலே கசிய விடப்பட்டு இன்று உலகமறிந்த விடயமாகிவிட்டது. இதனால் இலங்கைக்கு அவப்பெயர் ஏற்படுத்தப்பட்டது. அந்த அறிக்கை மீளாய்வு செய்யப்பட்டிருந்தால் அதன் முடிவுகள் வேறுவிதமாக அமைந்திருக்கும்.

வைகாசி 07, 2011

பின்லேடனின் மறைவிடத்தை காட்டியது தொலைபேசி அழைப்பு

பின் லாடன் மீதான தாக்குதல் எவ்வாறு நடைபெற்றது...?

இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டதில் இருந்தே 10 ஆண்டுகளாக பின்லேடனை அமெரிக்க உளவுத் துறை (சி ஐ ஏ) அதிகாரிகள் பின் தொடர்ந்து வந்துள்ளனர். இறுதியாக கடந்த ஆண்டு கிடைத்த ஒரு தொலைபேசி அழைப்பே பின்லேடனை அவர்களுக்கு அடையாளம் காட்டியுள்ளது. அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள் 2001ம் ஆண்டு தகர்க்கப்பட்ட உடனேயே அல்கொய்தா தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியை அமெரிக்க இராணுவம் தொடங்கிவிட்டது. அதே நேரத்தில் பின்லேடனை பிடிக்கும் முயற்சியில் உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க உளவுத் துறையினரும் (சி ஐ ஏ) ரகசியமாக ஈடுபட்டு வந்தனர். இரட்டை கோபுர தாக்குதல் தொடர்பாக சி. ஐ. ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரித்தபோது பின்லேடனுக்கு நெருங்கிய உதவியாளரும் தகவல் கொண்டு சேர்ப்பவருமான ‘அபு அகமது அல் குவைதி’ என்பவரைப் பற்றி தகவல் கிடைத்தது. ஆனால், அல் குவைதியின் இருப்பிடத்தை அறிய முடியவில்லை. (மேலும்....)

வைகாசி 07, 2011

அமெரிக்க விமானங்கள் பாகிஸ்தானுக்குள் அத்துமீறி பிரவேசித்துள்ளது - பாகிஸ்தான் இராணுவத்தளபதி

அமெரிக்க இராணுவம் பாகிஸ்தானுக்குள் அனுமதியின்றி சட்டவிரோதமாக புகுந்து அதிரடித் தாக்குதல்களை இனிமேல் நடத்தினால், நாம் அமெரிக்க விமானங்களை சுட்டுவீழ்த்துவோமென்று பாகிஸ்தான் இராணுவத்தளபதி அஷ்பக் கயானி எச்சரிக்கை செய்துள்ளார். அமெரிக்காவுடன் தங்கள் நாடு செய்துகொண்டுள்ள பயங்கரவாதத்திற்கு எதிரான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நாம் மீளாய்வு செய்ய வேண்டிய சந்தர்ப்பம் நெருங்கியிருக்கிறதென்றும் அவர் மேலும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்க உளவுப் படையினர் பாகிஸ்தானின் அனுமதியின்றி தன்னிச்சையாக பிரவேசித்து, மேற்கொண்ட தாக்குதலில் ஒசாமா பின்லேடன் படுகொலை செய்யப்பட்டமை குறித்தே இராணுவத்தளபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். (மேலும்....)

வைகாசி 07, 2011

Washington funnels confiscated Libyan assets to “rebel” leadership

Yesterday’s meeting of the “Contact Group on Libya” concluded with US Secretary of State Hillary Clinton announcing that Washington will soon “tap some portion” of the $30 billion in Libyan assets it has confiscated to assist the military intervention. The brazen illegality of the Obama administration’s moves to use Libya’s national wealth to keep the so-called rebel leadership afloat again demonstrates the colonial character of the US-NATO war to oust Muammar Gaddafi. (more...)

வைகாசி 07, 2011

பிற்போடப்பட்ட உள்ளூராட்சி சபைகளுக்கு ஜூனில் தேர்தல்

வடக்கு மாகாணம் உட்பட பிற்போடப்பட்டுள்ள 70 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஜூன் மாத நடுப்பகுதியில் அல்லது இறுதிப் பகுதியில் நடாத்தப்படுமென தேர்தல்கள் திணைக்களம் தெரிவிக்கின்றது. இது தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் எதிர்வரும் 12 ஆம் திகதி வரையில் பிற்போடப்பட்டுள் ளமையே இதற்கான காரணமென தேர்தல்கள் திணைக்கள உயரதிகாரி ஒருவர் நேற்று (06) தெரி வித்தார். வடக்கு உட்பட பிற்போடப்பட்டுள்ள 70 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை இம்மாத இறுதியில் நடாத்துவதற்கு ஏற்கனவே உத்தேசித்திருந்த போதிலும், நீதிமன்ற விசாரணைகள் முடிவுறாமையால் தேர்தலை இம்மாதம் இறுதியில் நடாத்த முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

வைகாசி 07, 2011

நான் அரசியலில் வீழ்வேன் என நினைத்தால் தவறு - கனிமொழி

எத்தனையோ பெயர்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்று இருந்தாலும் கூட என்னை மட்டுமே அனைவரும் குறிவைப்பது ஏன் என்பது புரியவில்லை? நான் வீழ்வேன் என யாராவது நினைத்தால் அது தவறு. அரசியல் வாழ்வு இத்துடன் முடிவு பெறும் என சிலர் நினைக்கின்றனர். அது நடக்காது” என கனிமொழி கூறினார். அந்த குற்றப்பத்திரிகையில் எண்ணற்ற பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஏராளமான குற்றச்சாட்டுக்களும் கூறப்பட்டுள்ளன. ஆனால் என் பெயர் மட்டும் பெரிதுபடுத்தப்படுகிறது. நிறைய பெயர்கள் இப்பிரச்சினையில் அடிபட்டாலும், அவர்களை எல்லாம் விட்டுவிட்டு என் ஒருத்தியை மட்டும் அனைவரும் குறிவைக்கின்றனர். இது ஏன் என்பது எனக்கு புரியவில்லை. (மேலும்....)

வைகாசி 07, 2011

நல்லிணக்க ஆணைக்குழுவின் காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் காலத்தை மேலும் ஆறுமாதங்கள் நீடிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கோரிக்கையடங்கிய கடிதமொன்றை ஆணைக்குழுவின் தலைவர், கடந்த புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்திடம் கையளித்திருப்பதாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஊடக ஆலோசகர் லக்ஷ்மன் விக்ரமசிங்க தெரிவித்தார். ஆணைக்குழு பதிவுசெய்துகொண்ட சாட்சியங்களை ஆராய்ந்து ஆரம்ப கட்ட அறிக்கையைத் தயாரிக்கும் பணி கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருக் கும் நிலையில், ஆயிரக்கணக்கான சாட்சியங்களை ஆராய்வதற்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் போதுமானதாக இல்லை. இதனாலேயே ஆணைக்குழுவின் கால எல்லையை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்குமாறு கோரப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். (மேலும்....)

வைகாசி 07, 2011

நேபாள அமைச்சரவையில் மாவோயிஸ்ட் கொலையாளி?

நேபாள பிரதமர் முன்னாள் மாவோயிஸ்ட் முக்கியஸ்தர் ஒருவரை அமைச்சராக நியமனம் செய்துள்ளதையடுத்து கடுமையான விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளார். நேபாள அரசுக்கும், மாவோயிஸ்டுகளுக்குமிடையில் யுத்தம் நடந்த காலப் பகுதியில் பாடசாலைச் சிறுவர்கள் பலரை கொல்ல இவர் உத்தரவிட்டார். எனவே இவரை அமைச்சராக நியமனம் செய்திருக்கக் கூடாது என அமைச்சரவையிலுள்ள சிலர் குறை கூறியுள்ளனர். இதை நிராகரித்துள்ள மாவோயிஸ்டுகள் யுத்த காலத்தில் இரண்டு தரப்பிலும் இழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதை அரசுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் புரிந்துணர்வு, உறவுகள் நிலவுகையில் கிண்டவோ, கிளரவோ கூடாது எனத் தெரிவித்துள்ளனர். நேபாள அமைச்சரவையில் ஒன்பது மாவோயிஸ்டுகள் அங்கம் வகிக்கினறனர். 2006 ம் ஆண்டு மாவோயிஸ்டுகள் அரசாங்கத்தில் இணைந்து கொண்டனர்.

வைகாசி 07, 2011

பின்லேடனின் ஐந்தாவது மனைவியை அமெரிக்காவிடம் ஒப்படைக்க பாக். மறுப்பு

பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்ட அந்த வீட்டில் அவர் மனைவி, பிள்ளைகள் என்று குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கமாண்டோ படையினரின் எதிபாராத திடீர் தாக்குதலில் பின்லேடன், அவர் மகன் காலித், ஒரு பெண், மற்றும் இரு உதவியாளர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், பின்லேடனின் ஐந்தாவது மனைவி அமய் உயிருடன் பிடிபட்ட தகவல் வெளியாகி உள்ளது. பின்லேடன் கொல்லப்பட்ட சமயத்தில் அமய் மீது குண்டுகள் பாய்ந்து காயமடைந்ததாக கூறப்படுகிறது. பின்லேடனின் மனைவி அமய் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பாகிஸ்தான் இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கின்றனர். ராவல் பிண்டியில் உள்ள இராணுவ மருத்துவமனையில் அமய் சிகிச்சை பெற்று வருகிறார். ராவல்பிண்டி மருத்துவமனையில் இருக்கும் அவரிடம், பின்லேடன் மற்றும் அல்கொய்தா இயக்கத்தினர் பற்றிய தகவல்களை பெறுவதற்காக, விசாரணை நடத்த அமெரிக்கா விரும்புகிறது. அதனால், அமெரிக்காவிடம் அமய்யை ஒப்படைக்குமாறு அமெரிக்கா பாகிஸ்தானை வலியுறுத்தி உள்ளது. அந்த கோரிக்கையை பாகிஸ்தான் மறுத்துள்ளது. ___

வைகாசி 07, 2011

கியூபாவின் முன்னாள் அமைச்சருக்கு சிறைத்தண்டனை

கியூபா அரசாங்கம் அந்நாட்டு முன்னாள் அமைச்சர் ஒருவரையும் சிலி நாட்டைச் சேர்ந்தவரையும் இருபது வருடம் சிறையில் தள்ளியது. இவ்விருவரும் இணைந்து ஊழல் மோசடிகளில் ஈடுபட்டமை தெரியவந்தவுடன் இந்த உத்தரவை கியூப அரசின் நீதிமன்றம் பிறப்பித்தது. 65 வயதுடைய சிலியைச் சேர்ந்தவரும் 75 வயதுடைய கியூபாவின் முன்னாள் அமைச்சருமே இவ்வாறு சிறையில் வைக்கப்பட்டவர்களாவர். வங்கிக் கணக்கு மோசடி போலி வியாபார ஆவணப்பத்திரங்கள் என்பனவை தொடர்பாகவே இவர்கள் கைதாகி விசாரிக்கப்பட்டனர். சிலியைச் சேர்ந்தவரை தமது நாட்டுக்கு அனுப்புமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை கியூப அரசாங்கம் நிராகரித்தது. கியூப அரசுக்குச் சொந்தமான உணவுக் கம்பனி யொன்றில் மோசடி செய்ததாகவே முன்னாள் அமைச்சர் மீது குற்றம் சாட்டப்பட்டது. உணவுக் கம்பனியின் முகாமையாளர் கடந்த 2010 ஆம் ஆண்டு இறந்த பின்னரே இந்த ஊழல் விடயங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

வைகாசி 06, 2011

ஒசாமா மனைவி அமாய் பாக். மருத்துவமனையில் சிகிச்சை

அமெரிக்க தாக்குதலின் போது ஒசாமா பின்லேடனை பாதுகாக்க முயன்றது அவரது 27 வயது மனைவி அமாய் அஹமட் அப்துல் பதாஹ் என்பது தெரியவந்துள்ளது. யெமன் நாட்டைச் சேர்ந்த 27 வயதான இவருக்கு ஒசாமா பின்லேடன் மூலம் ஒரு குழந்தை உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தாக்குதலின் போது ஒசாமா பின்லேடனை காக்க முயன்ற இவரது கணுக்காலில் துப்பாக்கிச்சூட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமாய் அஹமட் தற்போது ராவல்பின்டி இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். எனினும் அவர் சுகம் பெற்றதும் நேரடியாக யெமன் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவார் என பாக். புலனாய்வுத்துறை கூறியுள்ளது.

வைகாசி 06, 2011

பின்லேடன் வாழ்ந்த சொகுசு வீட்டை கட்டிய ஒப்பந்தக்கராரிடம் விசாரணை

ஒசாமா பின்லேடன் பதுங்கி வாழ்ந்த அபோட்டாபாத்தில் உள்ள வீட்டைக் கட்டிய ஒப்பந்ததாரரான குல் முகமதுவிடம் பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அபோட்டாபாத்தை ஒட்டிய புறநகர் பகுதியான பிலால் டவுன் பகுதியில் குல் முகமதுவின் வீடு உள்ளது. அங்கு சென்று விசாரணைக்கா அழைத்துச் சென்றதாக பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. 45 முதல் 50 வயது மதிக்கத்தக்க மிது கானை கைது செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவர் எங்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்படுகிறார் என்ற விபரம் வெளிடப்படவில்லை. இந்த கட்டடம் கட்டுவதற்கு ஒத்துழைத்த பிறரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதாவது கட்டட மூலப்பொருள்கள் உள்ளிட்டவற்றை வினியோகம் செய்தவர்களிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. இந்த கட்டடத்திலிருந்து 800 மீட்டர் தூரத்தில் இராணுவ அகாடமி உள்ளது. (மேலும்....)

வைகாசி 06, 2011

SriLankan Airlines’ fleet is now largest in nation’s history

SriLankan Airlines took delivery of an Airbus A320 aircraft on 8th April, expanding the National Carrier’s fleet to its largest ever size in the country’s history. The airline now has a fleet of 17 aircraft, which include five A320’s, five A330’s, five A340’s, and two De Havilland Twin Otters. This surpasses the 16 aircraft that the airline possessed between 2005 and 2007. With plans to acquire four or perhaps even five more aircraft by the end of 2011, SriLankan is likely to end the year with a fleet of at least 19 aircraft. This will include three A320’s which would be the first brand new aircraft to be acquired by SriLankan in 11 years. The first of these A320’s is scheduled to arrive in late May, as is a long-haul A340. (more...)

வைகாசி 06, 2011

உடல்நிலை பாதிப்பு

ரஜினிகாந்த் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி

நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ரஜினிகாந்த் நடிக்கும் “ராணா” படத்தின் படப்பிடிப்பு சென்னை ஏ. வி. எம். ஸ்டூடியோவில் கடந்த 29 ஆம் திகதி தொடங்கியது. இதில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் மதியம் வீடு திரும்பினார். அப்போது ஜீரண கோளாறு காரணமாக அவர் வாந்தி எடுத்ததால் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் சிகிச்சை முடிந்து மாலையில் அவர் வீடு திரும்பினார். இந்த நிலையில், ரஜினிகாந்துக்கு நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடலில் நீர்ச்சத்து குறைந்ததோடு இலேசான காய்ச்சலும் அடித்தது. இதைத் தொடர்ந்து அவர் உடனடியாக இசபெல்லா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு வைத்தியர்கள் ரஜினிகாந்தின் உடல்நிலையை பரிசோதித்து, அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

வைகாசி 06, 2011

கனடா ரிச்மாண்ட் ஹில் இந்து ஆலயத்தில்  தாய்லாந்தின் இலங்கைத் தூதர்Ambassador, His Excellency Professor J.B. Dissanayake ...!!!

கனடாவிற்கு The Language Festival of the Sri Lanka – Canadian Community’ இற்கு விஜயம் செய்த தாய்லாந்தின் இலங்கைத் தூதரான பேராசிரியர் ஜே. பி. திசநாயக்கா அவர்கள் கனடாவின் ஒன்ட்டாரியோ மாகாணத்தில் உள்ள இந்து கலாசாரத்தை சொல்லும் தென்னிந்திய கட்டடக்கலைக்கு  அமைவாக கட்டப்பட்ட ஆதி இந்து ஆலயமான  கனடா ரிச்மாண்ட் ஹில் இந்து ஆலயத்திற்கு கனடாவிர்க்கான இலங்கைத் துணைத் தூதுவர் கருணாரத்தின பரணவிதாரண,  கனடிய தமிழ் நண்பர்கள் சகிதம் நேற்றையதினம் (புதன்கிழமை)  May  04, 2011 மாலை விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். (மேலும்....)

வைகாசி 06, 2011

உலகின் இரண்டாவது பெரிய குற்றவாளி தாவூத் இப்ராகிம்

உலக நாடுகளால் தேடப்படும் பயங்கர குற்றவாளிகளில் இரண்டாவது இடத்தை மும்பை தொடர் குண்டு வெடிப்புக்குக் காரணமான தாவூத் இப்ராகிம் பிடித்துள்ளார் என ‘கார்டியன்’ பத்திரிகை தெரிவித்துள்ளது. தற்போது உலக நாடுகளால் தேடப்படும் பயங்கர குற்றவாளிகளின் பட்டியலில் முதல் இடத்தை, மெக்சிக்கோவைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல் மன்னன் எல்சாபோவும் இரண்டாமிடத்தை மும்பை தொடர் குண்டு வெடிப்புக்கு காரணமான தாவூத் இப்ராகிமும் பிடித்துள்ளனர். இந்திய அரசால் தேடப்படும் பயங்கர குற்றவாளியான தாவூத் இப்ராகிம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடை யவர் இதில் போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் கூலிக்கு கொலை செய்வது உட்பட பல வகையான குற்றங்கள் அடங்கும். பாகிஸ்தான் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் இந்த குற்றங்களை செய்துள்ளார். சர்வதேச பொலிசாரால் தேடப்படும் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாக நம்பப்படுகிறது. இவ்வாறு ‘கார்டியன்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.

வைகாசி 06, 2011

வைகாசி 06, 2011

கனிமொழி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

சிறையா, முன்பிணையா? தி.மு.க பதற்றம்

சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரா வதற்காக கணவர், மகன் சகிதமாக டில் லிக்கு கனிமொழி நேற்று முன்தினம் வந்தி றங்கினார். இன்றைய வழக்கு விசார ணையை எவ்வாறு எதிர் கொள்வது என்பது குறித்து, மத்திய அமைச்சர் அழகிரி வீட்டில், தீவிர ஆலோசனை மேற்கொள் ளப்பட்டது. இருப்பினும், கனிமொழி கைதாவாரா அல்லது முன் பிணை வழங்கப்படுமா என்ற கேள்வி தி.மு.க. வட்டாரங்களை ஆட்டிப்படைக்க ஆரம்பித் துள்ளதால் தி.மு.க. பதற்றம் அடைந்துள்ளது. “ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கருணாநிதியின் மகள் கனிமொழி பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததால் இன்று சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜராகும்படி கனிமொழிக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலை யில், கனிமொழியின் கைதை எப்பாடுபட்டா வது தவிர்க்க வேண்டும் என தி.மு.க. தலைமை போராடி வருகிறது. (மேலும்....)

வைகாசி 06, 2011

ஒசாமா தாக்குதல்

மூன்று இறந்த உடல்களின் புகைப்படங்கள் வெளியீடு

ஒசாமா பின்லேடன் மீதான அமெரிக்கப்படையின் தாக்குதலின்போது கொல்லப்பட்ட மூன்று ஆண்களின் உடல்களின் புகைப்படத்தை ராய்ட்டர் செய்திச் சேவை வெளியிட்டுள்ளது. அமெரிக்கப்படையின் தாக்குதலுக்கு பின் குறித்த கட்டிடத்திற்குள் சென்ற பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரால் இந்த புகைப் படங்கள் எடுக்கப்பட் டுள்ளன. இதில் இருவர் பாகிஸ்தானின் சம்பிரதாய ஜிப்பா அணிந்துள்ளதோடு ஒருவர் வெள்ளைநிற டீசேர்ட் அணிந்துள்ளார்.  இதில் 20 வயது மதிக்கத்தக்க டிசேர்ட் அணிந்துள்ளவர் ஒசாமா பின்லேடனின் மகன் காலித் என்றும் அடுத்தவர் பின்லேடனுக்கு தபால் கொண்டுவரும் அர்ஷாத் கான் என்றும் மற்றையவர் லேடனின் நம்பிக்கைக்கு பாத்திமான ஒருவர் என்றும் நம்பப்படுகிறது.

வைகாசி 06, 2011

எல்லா பொருட்களும் செவ்வகமாக இருப்பதேன்?

ஏன் தொலைக்காட்சி திரை, சினிமா திரை போன்றவை செவ்வகமாகவே இருக்கின்றன? சதுரமாகவோ செங்குத்தா கவோ இருந்தால் என்ன என்று எப்போ தாவது நினைத்ததுண்டா? நினைத்திருப் பீர்கள் இதோ அதன் இரகசியம். உலகில் மிக மிக அழகாக இருப்பதாக நாம் நினைக்கும் கட்டடங்கள், ஓவியங்கள், சிலை கள் அனைத்திலும் ஒரு பொன் விதி’ இருப்பதை பலகாலமாகவே அழகியல் வல்லுநர்கள் தெரிந்து வைத்திருக்கின்றனர். அந்த பொன் விதியை பொன் விகிதம் என்றும் கூறுவார்கள். (மேலும்....)

வைகாசி 05, 2011

ஏன் இந்த ஓரவஞ்சனை?

ஒரு நாடு தனது பாதுகாப்பிற்காக பயங்கரவாதிகளை சுட் டுக் கொல்லும் ஒவ்வொரு நடவடிக்கையும் அந்நாட் டின் அரசாங்கத்தினாலும், பாதுகாப்பு படையினராலும் மேற்கொள்ளப்படும் தேசப்பற்றுடனான செயல் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது. இவ்விதம் பாரெங்கிலும் வாழும் மக்களை ஆயிரக்கணக்கில் பயங்கரவாதிகள் படுகொலை செய்யும்போது, உலக நாடுகள் கைகட்டி பார்த்துக் கொண்டிருப்பதுடன், கண்டனப் பிரேர ணைகளை மட்டும் வெளியிடுகின்றன. ஆயினும், அவ்விதம் கொடிய அரக்கத்தனமான படுகொலைகள் செய்யும் பயங்கரவாதிகளுக்கு எதிராக உலக நாடுகள் சம் பந்தப்பட்ட ஒரு நாட்டிற்கு உதவி செய்வதற்கு பதில், அந் நாடு மேற்கொள்ளும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளு க்கு எதிராக, வெறும் விமர்சனங்களை மட்டும் செய்கின்றன. (மேலும்...)

வைகாசி 05, 2011

அமெரிக்காவிடமிருந்து ஒசாமாவை பலமுறை தப்ப வைத்த ஐஎஸ்ஐ - விக்கிலீக்ஸ்

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ பலமுறை தப்ப வைத்துள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. இதனால் தான் இந்தமுறை பாகிஸ்தானிடம் சொல்லாமலேயே பின்லேடனை அமெரிக்கப் படைகள் தாங்களே வந்து அழித்தாகத் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க தூதரங்களுக்கு இடையிலான ரகசிய கேபிள் தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், குவாண்டநாமோ பே சிறையில் உள்ள சிலர் மூலமாகவே பின்லேடனின் புதிய இருப்பிடம் குறித்து அமெரிக்காவுக்குத் தெரியவந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த சிறையில் உள்ள ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சபீ்ர் லால் மெல்மா என்பவர், 2001ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஐஎஸ்ஐ உதவியோடு பின்லேடனை காபூலில் இருந்து காப்பாற்றி பாகிஸ்தானுக்குள் அழைத்துச் சென்றது குறித்த விவரங்களை அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளார். (மேலும்...)

வைகாசி 05, 2011

இந்திய நிதியுதவியில் காங்கேசன்துறை துறைமுகம் புனரமைப்பு

இந்திய நிதியுதவியில் காங்கேசன்துறை துறைமுகம் புனரமைக்கப்படவுள்ளதாக அமைச்சரவை அறிவித்துள்ளது. துறைமுகங்கள் நெடுஞ்சாலைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைக்கமைய இத்துறைமுகம் புனரமைக்கப்பவுள்ளது

வைகாசி 05, 2011

உயிருடன் பிடித்த பின்னரே பின் லேடனை சுட்டுக்கொன்றனர் ஒசாமாவின் 12 வயது மகள் தெரிவிப்பு

பாகிஸ்தானின் அபோட்டாபாத்தில் அல் ஹைடா தலைவர் ஒசாமா பின்லேடனை உயிருடன் பிடித்த பின்னரே அமெரிக்க படையினர் அவரை சுட்டுக்கொன்றதாக ஒசாமாவின் மகள் கூறியுள்ளார்.  தனது தந்தை சுட்டுக்கொல்லப்பட்டதையும் அதன் பின்னர் அவரின் உடல் ஹெலிகொப்டருக்கு இழுத்துச் செல்லப்பட்டதையும் 12 வயதான அந்த மகள் பார்த்ததாக பாகிஸ்தானின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள்காட்டி அரபிய செய்தி கட்டமைப்பான அல் அரேபியா நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளது. ஒசாமா பின்லேடன் தங்கியிருந்த கட்டிடத் தொகுதியிலிருந்து அமெரிக்கப் படைகள் மீதோ அவர்களின் ஹெலிகொப்டர்கள் மீதோ ஒரு துப்பாக்கிச் சன்னங்கள் கூட பாய்ந்திருக்கவில்லை. தொழில்நுட்ப கோளாறினாலேயே அவர்களின் ஒரு ஹெலிகொப்டர் விழுந்து மோதியுள்ளது என்று பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.  (மேலும்...)

வைகாசி 05, 2011

பின்லேடனும், பிரபாகரனும் உலகில் மிகப் பெரிய பயங்கரவாதிகள்  - ரொபட் ஓ பிளேக்

இலங்கையில் அரசாங்க மாற்றமொன்றை ஏற்படுத்த அமெரிக்கா விரும்புகிறதென்று வெளிவந்துள்ள அறிக்கைகள் ஆதாரமற்றவையென்று இங்கு வந்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் ரொபட் ஓ பிளேக் திட்டவட்டமாக அறிவித்துள் ளார். ஒசாமா பின்லேடன் மற்றும் பிரபாகரன் ஆகிய இருவரே உலகிலிருந்த மிகக் கொடிய பயங்கரவாத தலைவர்கள் என்றும் அவர் அறிவித்தார். இங்கு தாம் இலங்கை அரசாங்கத் தலைவர்களுடன் நடத்திய உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையின் போது அமெரிக்க அரசாங்கம் நீண்டகாலம் இலங்கையுடன் பங்காளியாக இணைந்து இலங்கையின் மேம்பாட்டுக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறதென்றும் உறுதியளித்ததாக அவர் கூறினார். (மேலும்...)

வைகாசி 05, 2011

பின்லேடன் கொல்லப்பட்டது குறித்த புதிய தகவல்கள்!

பின்லேடன் கொல்லப்பட்டது குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவல்கள். மனைவி மற்றும் 12 வயது மகள் கண் எதிரே ஒசாமா பின்லேடன் தலை மற்றும் மார்பில் சுட்டு கொல்லப்பட்டார். பின்லேடன் நிராயுதபாணியாக இருந்தார். பின் லேடனுக்கு பாதுகாப்பாக நின்ற பெண் சுடப்பட்டார் ஆனால் கொல்லப்படவில்லை. பின் லேடனுக்கு அரணாக நின்ற பெண் அவரது மனைவியல்ல; ஆப்கானிஸ்தானிலிருந்து, அமெரிக்க படைகள் வெளியேறுவதில் பிரச்சனையில்லை. பின்லேடனுக்கு மிகவும் பிடித்தமான அவரது மனைவி மற்றும் 12 வயது மகள் கண்ணெதிரேயே அவர் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டார். அவர்கள் இருவரும் தான் பின்லேடனின் உடலை அமெரிக்க படையினருக்கு அடையாளம் காட்டியவர்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. (மேலும்...)

வைகாசி 05, 2011

வலிகாமம், வடமராட்சி

உயர் பாதுகாப்பு வலயங்களில் மீள்குடியேற்றத்துக்கு அனுமதி

யாழ். மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு வலயப் பகுதிகளில் அடுத்து வரும் ஒரு மாத காலத்துக்குள் சுமார் 2,700 குடும்பங்களைச் சேர்ந்த 10,000 பேர் மீளக் குடியமர்த்தப்படவுள்ளதாக யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார். இதற்கான அனுமதியை யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த அத்துருசிங்க வழங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த மீள்குடியேற்ற நடவடிக்கையின் கீழ் வலிகாமத்தில் உள்ள தெல்லிப்பழை, மாவிட்டபுரம் வீமன்காமம், கொல்லன்கழப்பு, தந்தை செல்வாபுரம் மற்றும் விளான் உள்ளிட்ட பிரதேசங்களிலும் வடமராட்சியில் மருதங்கேணியிலும் இவ்வாறு மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்க ப்படவுள்ளதாக யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் குறிப்பிட்டார்.இது மட்டுமின்றி, தென்மராட்சியில் இராமாவில் மற்றும் வடமராட்சி கிழக்கு, குடத்தனை ஆகிய இடங்களில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்கள் வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, முள்ளியான் போக்கறுப்பு உள்ளிட்ட இடங்களில் மீள்குடியேற்றப்ப டவுள்ளதாகவும் யாழ். அரசாங்க அதிபர் மேலும் குறிப்பிட்டார்.

வைகாசி 05, 2011

அமெரிக்க தாக்குதலின் போது ஆயுதமின்றி இருந்தார் ஒசாமா

அமெரிக்கப் படை தாக்குதல் நடத்தியபோது தற்காப்பு ஆயுதம் ஏதுமின்றி ஒசாமா பின்லேடன் இருந்தார் என அமெரிக்கா புதுத்தகவலை வெளியிட்டுள்ளது. வெள்ளை மாளிகை பேச்சாளர் ஜே கார்னி நேற்று நடந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இந்த தகவலை வெளியிட்டார். இந்த மாநாட்டில் பின்லேடன் மீதான தாக்குதல் குறித்து புதிய தகவல்கள் வெளியிட்டன. இதில் அமெரிக்க படைத் தாக்குதல் நடத்திய போது ஒசாமா பின்லேடனிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லாதபோதும் தன்னை காத்துக்கொள்ள தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் ஒசாமா ஆபத்தான நகர்வை முன்னெடுத்ததால் அவரை சுடவேண்டி ஏற்பட்டதாக கார்னி கூறியுள்ளார். (மேலும்...)

வைகாசி 05, 2011

Isolate TNA until they denounce Vaddukoddai resolution

It was on the 14th May of 1976, at Vaddukoddai, the Tamil United Liberation Front (TULF) under the Chairmanship of S.J.V.Chelvanayakam Q.C, M.P (K.K.S) adopted the Vaddukoddai Resolution, which radicalized the entire Tamil population of the North and east, which also played a greater role in militarizing the Tamil youths and diminished the political role of the Tamil community. Since this day, the former TULF and the present TNA has never participated or practiced a constructive politics but destructive politics which has brought the Tamil community to Mullivaikal. (more...)

 

வைகாசி 05, 2011

சபாலிங்கம் படுகொலை 17 வது நினைவுதினம்

பிரான்சில் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல அரசியல் விமர்சகரும் மூத்த போராளியும் புலம்பெயர் தேசங்களில் தொடர்ந்து நடைபெற்றுவரும் இலக்கியச் சந்திப்புக்களின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவருமான எஸ்.சபாலிங்கம் அவர்களின் 17 ஆவது நினைவு தினம் இன்று பாரிஸிலுள்ள அவரது நண்பர்களால் நினைவுகூரப்படுகின்றது. பாரிஸ் நகரின் புறநகர்ப்பகுதியான கார்ஜ் லே கோணேஸ் நகரிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து 1994ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். (மேலும்...)

வைகாசி 05, 2011

காணாமல்போன அருணாசல் முதல்வர் சடலமாக மீட்பு

அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டூ சென்ற ஹெலிகொப்டர் தவாங்கில் விபத்துக்குள்ளானமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹெலிகொப்டர் விழுந்த இடத்திலிருந்து முதல்வர் டோர்ஜீ உள்ளிட்டோரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. இதனையடுத்து முதல்வர் காண்டூவின் மரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக விபத்து இடம்பெற்றதாக கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலிருந்து 3 உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டன எனினும் டோர்ஜி காண்டூலின் கதி குறித்து அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது டோர்ஜிகாண்டூவின் மரணம் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. (மேலும்...)

வைகாசி 05, 2011

பின்லேடன் கட்டிடத்திற்குள் பந்து சென்றால் கிடைக்காது

பின்லேடன் தங்கியிருந்த கட்டிடத் திற்குள் பந்து சென்றால் திரும்பி கிடைப்பதில்லை என அந்த கட்டிடத்திற்கு அருகில் வசிப்போர் கூறியுள்ளனர். அமெரிக்காவின் அதிரடி தாக்குதல் மூலம் கொல்லப்பட்ட அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒஸாமா பின் லேடன் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் 63 கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள அப்போடாபாத்தில் வசித்துவந்துள்ளார். இங்கு வைத்தே அமெரிக்க படைகள் இவர் மீது தாக்குதல் நடத்தினர். இந்நிலையில் ஒஸாமா பின்லேடன் தமக்கு அருகிலேயே இருந்துள்ளது அங்கு வசிக்கும் பலருக்கு தெரியாமல் இருந்துள்ளது. இந்நிலையில் 18 அடி உயர மதில் அமைக்கப்பட்ட பின்லேடன் தங்கியிருந்த கட்டிடத்திற்கு அருகில் கிரிக்கெட் விளையாடிய சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் அங்க வசிப்போர் பற்றி கூறியுள்ளனர். (மேலும்...)

வைகாசி 05, 2011

வவுனியா நகரசபை உத்தியோகத்தர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் _

வவுனியா நகரசபை உத்தியோகத்தர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வவுனியா நகரசபை தமிழ் தேசியக் கூட்டமைப்பு அங்கத்தவர் ஒருவர் நகரசபை செயலாளருக்கு அச்சுறுத்தல் விடுத்தமையை கண்டித்து வவுனியா நகரசபை உத்தியோகத்தர்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். _

வைகாசி 05, 2011

ஆசிய பொருளாதாரத்தை கவனமாக கையாள வேண்டும்: வியட்நாமில் பிரணாப் வலியுறுத்தல்

உலகப்பொருளாதாரம் மீட்சி அடைவதற்கு ஆசிய பொருளாதாரம் மிக முக் கியப் பங்கு வகித்தது. ஆசிய பொருளாதாரம் தனி நப ரால் இயக்கப்படுவது அல்ல. எனவே அதனை கவனமாக இயக்க வேண்டும் என வியட் நாமில் நடைபெறும் ஆசிய வளர்ச்சி வங்கி மாநாட்டு கருத்தரங்கில் இந்திய நிதித் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார். வியட்நாம் தலைநகர் ஹனோயில் ஆசிய வளர்ச்சி வங்கி மாநாடு 2 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க சென் றுள்ள இந்திய நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆசியா 2050 என்ற ஆசிய வளர்ச்சி வங்கி கூட்ட கருத்தரங்கில் புதன் கிழமை பேசினார். அப் போது அவர் கூறுகையில், ஆசிய மக்களின் நலவாழ் வை மட்டும் ஆசிய பொரு ளாதாரம் நிர்ணயிக்கவில் லை. உலகப் பொருளாதார வளர்ச்சிக்கும் அது காரண மாக உள்ளது. எனவே ஆசிய பொருளாதாரத்தை கவனமாக கையாள வேண் டும் என்றார். (மேலும்...)

 

வைகாசி 04, 2011

 

உண்மையும், நேர்மையும் நிரந்தரமானவை எங்களுக்கு எவராலும் தீங்கிழைக்க முடியாது

எல்.ரீ.ரீ.ஈ. இயக்கம் மனிதாபிமான முறையில் யுத்தத்தை நட த்தி தங்கள் நிலைப்பாட்டை உலகிற்கு எடுத்துக் காட்டியது என்று அவ்வியக்கம் கடந்த காலத்தில் இலங்கையில் மேற் கொண்ட மனித படுகொலைகளை சாயம் பூசி மறைத்து, இல ங்கை அரசாங்கமே யுத்த குற்றச் செயல்களில் ஈடுபட்டது என்று ஒரு தலைபட்சமான தருஸ்மன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிரு ப்பது பற்றி நாம் எவ்வித கருத்தையும் முன்வைக்க விரும்ப வில்லை. ஆயினும் நாம் சில விடயங்களை உங்களுக்கு எடுத்துக்காட்டி உங் களின் உள்ளுணர்வுகளை சிந்திக்க வைப்பதற்கு சில உண்மை யான நிகழ்வுகளை எடுத்துக்காட்ட விரும்புகிறோம். ஒரு காலத்தில் அமெரிக்கா பாலூட்டி வளர்த்து ரஷ்ய வல்லரசை ஆப்கானிஸ்தானை எதிர்ப்பதற்காக பண உதவியையும், ஆயுத உதவியையும் செய்து வளர்த்த சவூதி அரேபியாவில் உதித்த பின்லேடன் என்ற பயங்கரவாதியை அமெரிக்க ஒற்றர்கள் சில தினங்களுக்கு முன்னர் துடி துடிக்க சுட்டுக் கொன்ற சம்பவத்தை நாம் எவ்விதத்திலும் கண்டிக்கவில்லை. இந்தப் படுகொலை எவ் விதம் ஒரு யுத்தக் குற்றமாக நாம் ஏற்றுக்கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்புகிறோம். (மேலும்...)

வைகாசி 04, 2011

பிரபாகரன், பின்லாடன்

(அறிவுக்கொழுந்து)

 இரண்டு பேருடைய பெயர்களும் ‘பி’ யில் தொடங்கி ‘ன்’ னில் முடிகிறது. பிரபாகரன் – பின்லாடன் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்கள். பங்கருக்குள் வாழ்க்கையை தொலைத்தவர்கள். பிரபாகரனை விட பின்லாடனுக்கு அறிவுஜாஸ்தி. பிரபாகரன் எட்டாம் வகுப்பு தாண்டாதவர். பின்லாடன் சிவில் என்ஜினியர். இரண்டுபேருமே தற்கொலைத் தாக்குதல்களை அதிகமாக நடாத்தியவர்கள். பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் இவர்களின் தாக்குதல்களில் பலியானார்கள். ஒருத்தருக்கு தலையில் கோடாலியால் கொத்து. மற்றவருக்கு தலையில் நெத்திப்பொட்டில் வெடி. மரணத்தின் பின் பிரபாகரனின் உடல் அஸ்தி கடலில் விசப்பட்டது. பின்லாடனின் உடல் கடலுக்கடியில் புதைக்கப்பட்டது. (மேலும்...)

வைகாசி 04, 2011

ஒசாமா மீதான தாக்குதலை முதலில் வெளிப்படுத்திய ‘ரிவீட்டர்’

பின்லேடன் பதுங்கியிருந்த மாளிகை மீது அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதல் முதல் அவர் கொல்லப்படும் வரை அனைத்தையும் முதன் முதலாக ரிவீட்டர் இணையதளம் தான் செய்தி வெளியிட்டது தெரியவந்துள்ளது. அதன்படி பின்லேடன் பதுங்கியிருந்ததாக கூறப்படும் அபோதாபாத் நகரில் குடியிருந்த சொஹைப் அக்தர் என்பவர், தகவல் தொழில்நுட்பம் படித்துள்ளார். இவர் சம்பவம் நடந்த தினத்தன்று தனது லேப்டொப்பில், ரிவீட்டர் இணையதளம் வாயிலாக தனது வலைப்பூவில் சம்பவம் நடந்த தினமான கடந்த ஞாயிறன்று நள்ளிரவு 1 மணியளவில் ஏதோ தன் வீட்டின் மேல் மிகவும் அரிதாக ஹெலிகொப்டர் வட்டமடித்ததாக வும், பின்னர் அந்த ஹெலிகொப்டர் பறந்து குண்டு வீசுவதாகவும், சுமார் 40 நிமிடம் ஒயாமல் துப்பாக்கி சத்தமும், குண்டு வீச்சும் நிகழ்ந்ததாகவும், பின்னர் அமைதி ஏற்பட்டதாகவும், அதிகாலையில் தான் ஹெலிகொப்டரில் குண்டு வீச்சு தாக்குதல் நடந்தது சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை கொல்வதற்கு என்பது தெரிய வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மேலும், அவர் பி.பி.சி செய்தி நிறுவனத்திற்கு கூறுகையில், நான் கடந்த ஐந்து ஆண்டுகளாக ரிவீட்டர் இணையதளத்தினை ஒன்லைன் மூலம் பயன்படுத்துகிறேன். சம்பவம் நடந்ததை பார்த்ததைத்தான் எனது நண்பர்களுக்கு ஒன்லைன் வாயிலாக தெரிவித்தேன் என்றார்.

வைகாசி 04, 2011

அமெரிக்கா திருந்தாதவரை பயங்கரவாதம் ஒழியாது

ஒசாமா பின்லேடனின் மரணம், அல்கொய்தா அமைப்பிற்கு பின்ன டைவே என்ற போதிலும், மத அடிப்படைவாதத்தால் தூண்டி விடப்படும் பயங்கரவாத வன் முறைக்கு முடிவுகட்டுகிற விளை வை ஏற்படுத்தாது. அதே நேரத் தில், “பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போர்” என்ற பெயரில் நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்காவால் பயன்படுத்தப் பட்ட முறைகள் நிலைமையை மேலும் மோசமாக்கவே செய்துள் ளன. அல்கொய்தாவுக்கு எதிராக போராடுகிறோம் என்ற பெயரில் ஆப்கானிஸ்தானையும், இராக்கை யும் அமெரிக்கா மிகக்கடுமையாக சிதைத்தது. இந்த கொடிய போர் களில் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர் பறிக்கப்பட்டது. (மேலும்...)

வைகாசி 04, 2011

இஸ்லாமிய கொள்கையை பேணுவதற்கு சகலதையும் இழந்து போராடியவர் ஒசாமா

பான் கீ மூன் பிரபாகரனுக்கு ஒரு நியாயமும் ஒசாமாவுக்கு வேறு நியாயமும் காட்டுவது ஏன்?

1967ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ம் திகதி சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் பிறந்த சிவில் இன்ஜினிய ரும் பொருளியல் பட்டதாரி யுமான ஒசாமா பின்லேடன் ஏகாதிபத்திய நாடுகளினால் இஸ்லாத்திற்கு முரணாக மேற்கொண்ட அக்கிரமங்களை பொறு த்துக்கொள்ள முடியாத நிலை யில் 1979ஆம் ஆண்டு அல் கைதா இயக்கத்தை ஆரம் பித்தார். இவர் இஸ்லாமிய மார்க்க பற்றுமிக்கவர். இவ ரது தீவிரவாத செயல்கள் யாவும் இஸ்லாத்திற்கு முர ணானவர்களுக்கு எதிராகவே இருந்தது. இவரது இவ் இயக்கம் இல்லாது இருந்தால் இன்று முஸ்லிம் நாடுகளை ஏகாதிபத்திய நாடுகள் அடக்கி ஒடுக்கியிருக்கும். ஒசாமா பின்லேடன் பயங்கரவாதியா? இஸ்லாமிய கொள்கை தீவிரவாதியா? என்பதை ஏகாதிபத்திய நாடுகள் தீர்மானிக்க முடியாது. அதை தீர்மானிக்கும் சக்தி படைத்தவன் அல்லாஹ் ஒருவனுக்கே உரியது. (மேலும்...)

வைகாசி 04, 2011

Canadian Multicultural Councils outstanding Asian Canadian award goes to Mr. Aloy Perera for his contribution to Srilankan community in Canada.                          

(By Lenin Benedict-Toronto)

The Srilankan community turned with overwhelming joy to share their happiness and show their respect to a most prominent and respectable member of the Srilankan community Mr. Aloy Stephan Perera, for the outstanding Asian Canadian Community Award given to him at the Premiere Convention Centre at Richmond Hill in Toronto. Srilankans belong to all ethnic community turned to this event to honor him with great enthusiasm. (more...)

வைகாசி 04, 2011

ஒசாமாக்களும் ஒபாமாக்களும்

பாகிஸ்தானில் பதுங்கியிருந்த அல்கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் அமெரிக்க உளவுப்படையினரால் சுட்டுக்கொல் லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா அறிவித்துள்ளார். 2001ம் ஆண்டு அமெ ரிக்காவில் அல்கொய்தா நடத்திய தாக்குதலில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்று ஒபாமா கூறியுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பின் லேடன் கொல்லப்பட்டது மிக முக்கியமான திருப்பம் என்றும் ஒபாமா கூறியுள்ளார். கடுமை யான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள அமெரிக்க மக்களின் கவனத்தை திசைதிருப்ப பின்லேடனின் மரணத்தை அமெரிக்க நிர்வாகம் பயன்படுத்திக் கொள்ளக்கூடும்.  (மேலும்...)

வைகாசி 04, 2011

ரொபேர்ட் ஓ பிளேக் கிளிநொச்சி விஜயம் _

இலங்கை வந்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத் துணைச் செயலர் ரொபேர்ட் ஓ பிளேக் இன்று கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் செய்துள்ளார். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பிரதேசங்களைப் பார்வையிட்டதோடு அமெரிக்க அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றல் மற்றும் ஏனைய அபிவிருத்திப் பணிகளையும் பார்வையிட்டுள்ளார். ___

வைகாசி 04, 2011

பாலஸ்தீனம்  நான்காண்டு உள்நாட்டுப்போர் முடிவு?

பாலஸ்தீனத்தை இரு பிரிவு களாக நிர்வகித்து வந்த ஃபடா மற்றும் ஹமாஸ் ஆகிய இரு பிரிவினரும் ஒப்பந்தம் ஒன் றில் கையெழுத்திடப்போவ தால் கடந்த நான்காண்டு களாக நடந்து வரும் உள்நாட் டுப்போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எகிப்து அரசின் முயற்சி யால் எட்டப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்தி டுவதற்காக ஃபடா மற்றும் ஹமாஸ் பிரிவினர் எகிப்து தலைநகர் கெய்ரோ வந்துள்ள னர். இந்தக் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இடதுசாரிக்கட்சிகள், இஸ்லா மிக் ஜிஹாத் அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் பல பாலஸ் தீனத் தலைவர்கள் ஆகியோ ரும் கெய்ரோ வந்தனர். (மேலும்...)

வைகாசி 04, 2011

ஒசாமாவை சுட்டது யாரு? - புதிய சர்ச்சை!

அல்-காய்தா பயங்கரவாத இயக்கத் தலைவர் ஒசாமா பின் லேடன் தனது பாதுகாவலர் ஒருவரால் சுடப்பட்டிருக்காலம் என்கிற ரீதியில், பாகிஸ்தானின் பத்திரிகை செய்தி வாயிலாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் அபோதாபாத் பகுதியில் 5 ஆண்டு காலமாக பதுங்கியிருந்த ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டார். தங்களது சிறப்புப் படையினர் நடத்திய அதிரடித் தாக்குதலில் ஒசாமா என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக, அபோதாபாத்தில் அமெரிக்க படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சண்டை குறித்து அமெரிக்க அதிகாரிகள் விவரித்தனர். ஒரு பெண்மணியை மனித கேடயமாக வைக்க முயன்ற ஒசாமாவை தங்கள் படையினர் சுட்டு வீழ்த்தியதாக அவர்கள் கூறியிருந்தனர். இந்த நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த டான் (dawn) நாளிதழ் வெளியிட்ட செய்தி ஒன்று, ஒசாமாவை சுட்டது அமெரிக்கப் படைதானா என்ற சந்தேகத்தை ஆழமாக எழுப்பியுள்ளது. (மேலும்...)

வைகாசி 04, 2011

ஈரானைத் தாக்க இஸ்ரேல் திட்டம்!  அம்பலப்படுத்தியது பிரஸ் டி.வி.

ஈரானின் எல்லைக்குள் புகுந்து குறிப்பிட்ட இலக்கு களைத் தாக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக பிரஸ் தொலைக்காட்சி அம்பலப் படுத்தியுள்ளது. இது குறித்து பிரஸ் டி.வி. வெளியிட்ட செய்தியில், இராக்கில் உள்ள சில ராணு வத்தளங்களில் இஸ்ரேலிய போர் விமானங்கள் பயிற்சி யில் ஈடுபட்டன. இத்தகைய பயிற்சிகள் நடந்தன என் பதை முக்தாதா அல் சதர் தலைமையிலான பிரிவினர் உறுதிப்படுத்தினர். இராக் கில் உள்ள அல் அசாத் ராணுவ முகாமில் இஸ்ரே லின் எப்-15, எப்-16, எப்-18, எப்-22 மற்றும் கே.சி. 10 போர் விமானங்கள் காணப் பட்டன. அமெரிக்க ராணு வத்தின் உதவியோடு இந்தப் பயிற்சிகள் நடத்தப்பட்டன என்று கூறப்பட்டுள்ளது. (மேலும்...)

வைகாசி 04, 2011

பாகிஸ்தான் வேடம் கலைந்தது

நாடாளுமன்றம், மும்பை உட்பட பல இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகள் பாகிஸ்தானில் பதுங்கி உள்ளனர் என்று இந்தியா பல ஆண்டு களாகக் கூறிவருகிறது. ஆனால், தீவிர வாதிகள் பாகிஸ்தானில் இல்லை என்று பாகிஸ்தான் கூறிவந்தது. இப்போது அந்த நாட்டிலேயே ஒசாமாவை அமெரிக்கப் படைகள் சுட்டுக் கொன்றதால், பாகிஸ்தான் வேடம் கலைந்துள்ளது. மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. (மேலும்...)

வைகாசி 04, 2011

ஒசாமா தாக்குதலை கண்காணித்த ஒபாமா

ஒசாமாவை கொலை செய்ய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கடந்த 29ம் திகதியன்று கையெழுத்திட்டார். மே 1 நள்ளிரவில் ஒசாமா சுற்றிவளைக்கப்பட்டதும், அடுத்த கணம் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு தகவல் பறந்தது. வெள்ளை மாளிகையில் திரண்ட வெளியுறவு செயலாளர் ஹிலாரி, இராணுவ உயர் அதிகாரிகள் உடன் ஜனாதிபதி ஒபாமாவும் அமர்ந்து ஒசாமா தாக்குதல் நடவடிக்கையை கண்காணித்தனர். 40 நிமிடங்கள் நீடித்த தாக்குதலை முழுமையாக கண்காணித்தார் ஒபாமா. ஒசாமா பின்லேடனுக்கு அமெரிக்கா வைத்த ரகசிய பெயர் “ஜெரோனிமோ”. ஒசாமா மாளிகையை சுற்றி வளைத்த அமெரிக்க கமாண்டர் படை “நேவி சீல்” ஒசாமா அங்கிருப்பதை உறுதி செய்தவுடன் அமெரிக்காவுக்கு அனுப்பிய முதல் தகவல் “ஜெரோனிமோ கண்டுபிடிப்பு” (Geronimo)  என்பதுதான். 40 நிமிடங்கள் நடந்த துப்பாக்கிச் சண்டை முடிந்த பின்னர் மற்றொரு தகவல் அனுப்பப்பட்டது. அதில் “Geronimo – E KIA” என குறிப்பிடப்பட்டிருந்தது.

வைகாசி 04, 2011

 

ஒஸாமாவுக்கு பதில் ஒபாமா இறந்ததாக பி.பி.சி தவறான செய்தி

ஒசாமா என்பதற்கு பதிலாக ஒபாமா இறந்ததாக பி.பி.சி செய்திச் சேவை தவறான செய்தியை வெளியிட்டது. ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உத்தியோகபூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து பி.பி.சி தனது இணைய தளத்தின் உடனடிச் செய்தியில் ஒபாமா இறந்துவிட்டதாக குறிப்பிட்டிருந்தது. எனினும் இந்த தவறு ஒருசில நிமிடங்களில் திருத்தப்பட்டது. இதே தவறை அமெரிக்க தொலைக்காட்சி ஒன்று செய்தது. அதேபோன்று எம். எஸ். என். பி.சி இணையச் செய்தியும் ஒஸாமாவுக்கு பதில் ஒபாமா இறந்ததாக தவறாக செய்தி வெளியிட்டிருந்தது.

வைகாசி 04, 2011

ஜப்பான்  மேயர் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி

ஜப்பானின் இசு ஒசிமா நகருக்கான மேயர் தேர்த லில் ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரான கவாசிமா மசாஃபுமி வெற்றி பெற்றுள்ளார். தற்போது பல கட்ட மாக ஜப்பானில் உள்ளாட் சித் தேர்தல்கள் நடை பெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக இசு ஒசிமா தீவிலும் தேர்தல் நடந்தது. இந்தத்தீவு, தலைநகர் டோக் கியோவிலிருந்து சுமார் 120 கி.மீ. தொலைவில் அமைந் துள்ளது. ஒசிமா நகருக்கான தேர்தலில் ஏழு வேட்பாளர் கள் போட்டியிட்டனர். இதில் 35 விழுக்காடு வாக்கு களைப் பெற்று கவாசிமா மசாஃபுமி மேயராகத் தேர்வு செய்யப்பட்டார். (மேலும்...)

வைகாசி 04, 2011

பின்லேடன் மரணத்தில் சர்ச்சை

அமெரிக்கா வெளியிட்ட தகவல்களில் முரண்பாடு

பின்லேடன்தான் என்பது எப்படி உறுதியானது?

அல்கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதாக காட்டப்பட்ட படங்கள் போலியானவை என்று Agence France Press தமது சிறப்புக் கணனி மென்பொருள் மூலம் நிரூபித்துள்ளது. 2009ம் ஆண்டு ஏப்ரல் 29ம் திகதி மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்த இணையத்தள பத்திரிகையில் பிரசுரமான படத்தைக் கொண்டு கணணியில் கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டுள்ளதாக AFP புகைப்படங்க ளுக்கான தலைமை ஆசிரியர் மெலடன் அன்டனோவ் தெரிவித்துள்ளார். பின்லேடன் கொல்லப்பட்டமை தொடர்பாக அமெரிக்கா வெளியிட்ட தகவல்கள் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது. ஒசாமா பின்லேடனின் மறைவிடத்தில் அமெரிக்க இராணுவத்தின் ஈரூடகப் படையினர் தாக்குதல் நடத்தி பின்லேடனை கைது செய்யும்படி ஒபாமா உத்தரவிட்டதாக பராக் ஒபாமா வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்படுகிறது. எனினும் பின்லேடனின் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியமையால் பின்லேடனைக் கொல்ல நேர்ந்ததாக அறிவித்தனர். அத்துடன் கொல்லப்பட்ட பின்னர் அவரது உடல் கைப்பற்றப்பட்டதாகவும் அறிவித்திருந்தனர். (மேலும்...)

வைகாசி 03, 2011

ஒரு அவசர அலசல்

கனடா பொதுத் தேர்தல்

(சாகரன்)

308 உறுப்பினர்களுக்கான பாராளுமன்றத் தேர்தல் முடிவுற்றுள்ளது. முழுமையான தேர்தல் முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை. இதுவரை வெளிவந்த தேர்தல் முடிகளின்படி கனடாவின் பழமைவாதக் கட்சியான கன்சவேட்டிக் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளதாக அறிய முடிகின்றது. மிதவாதக் கட்சியான லிபரல் கட்சி இத் தேர்தலில் பாரிய பின்னடைவைக் கண்டுள்ளது. இதே வேளை இடதுசாரிக் கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி பாரிய வளர்ச்சியை கண்டுள்ளது. கியூபெக் பிராந்திய வகுப்புவாத பிரிவினைக் கட்சி இடதுசாரிக் கட்சியிடம் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. பசுமைக் கட்சி பாராளுமன்றத்தில் தனக்கான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் நிலையில் உள்ளது. யாருடன் சேர்ந்தாவது பாராளுமன்றத்திற்கு சென்று விடவேண்டும் என்று புலிகளின் ஆதரவு பெற்ற இரண்டு இலங்கைத் தமிழ் வேட்பாளர்களில் பெண் வேட்பாளர் ஒருவர் இடதுசாரிகட்சியில் போட்டியிட்டு வெல்ல, வலதுசாரிக் கட்சியில் போட்டியிட்ட ஆண் தோற்கும் நிலையில் உள்ளார். (மேலும்....)

வைகாசி 03, 2011

Eight years after forging new Conservative party, Harper delivers majority

Prime Minister Stephen Harper has finally pushed the party he stitched together eight years ago to majority status — breaking free of the minority bridle that kept him from completing the cultural shift he sought to bring to Ottawa. Harper stopped to clasp the hands and even hug a few of the 1,200 revellers at the Telus Convention Centre as he strode into the room beaming, his wife Laureen and children at his sides. He began his speech Monday night with a jubilant exclamation of the phrase that had carried him through so many stops during the five-week campaign: "I have to say it: a strong, stable, national Conservative majority government!" (more....)

வைகாசி 03, 2011

பின்லேடனின் கொலை மனித உரிமை மீறலாகும் – இலங்கைப் பிரதமர்

அமெரிக்கா பாகிஸ்தானிற்குள் தனது படையினரை அனுப்பி தீவிரவாத இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடனை கொலை செய்துள்ளதுள்ளதோடு ஒசாமாவின் சடலத்தினை எடுத்தும் சென்றுள்ளது. இது ஓர் மனித உரிமை மீறலாகும் என பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பு புறக்கோட்டையில் நடைபெற்ற நிகழவொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'அமெரிக்கா பாகிஸ்தானுள் நுழைந்து இவ்வாறான செயலை செய்தமை அந்த நாட்டின் இறைமைக்கு விடுத்துள்ள அச்சுறுத்தலாகும். மே மாதம் 19 ஆம் திகதியும் அமெரிக்கா போலவே தாமும் செயற்பட்டதாகவும் ஆனால் அமெரிக்கா அதனை போர்க்குற்றம் என இலங்கை மீது குற்றம் சாட்டி வருகின்றது". எனவும் அவர் தெரிவித்தார்.

வைகாசி 03, 2011

இலங்கைக்கு ஆதரவாக ஐ.நாவில் வீட்டோவை பயன்படுத்துவோமரஷ்யா _

ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரும் எந்தவொரு தீர்மானங்களுக்கும் எதிராக ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி நிராகரிக்கச் செய்யும் என்று இலங்கைக்கான ரஸ்யத் தூதுவர் விளாடிமிர் மிக்கலோவ் தெரிவித்துள்ளார். ஐ.நா. அறிக்கைக்கு எதிராக நாம் வீட்டோவைப் பயன்படுத்த மாட்டோம். ஆனால் அதைப் பயன்படுத்தி இலங்கைக்கு எதிராக தீர்மானம் எதுவும் கொண்டு வரப்பட்டால், ரஷ்யா வீட்டோவை பயன்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

வைகாசி 03, 2011 ___

4000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் குழுவுக்குக் கிடைத்தன

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை பாகம் (02)

(05) 11. அதன் நடவடிக்கையின் ஆரம்பத்தில் இருந்தே, செயலாளர் நாயகம் மற்றும் ஐ.நா. வின் சிரேக்ஷ்ட அலுவலர்கள், அது செயலாளர் நாயகத்துக்கு அறிக்கை விடுத்து இறுதியில் ஆலோசனை வழங்கிய போதிலும், அதன் ஆணையை நிறைவேற்றுவதில் சுயேச்சையாக நடவடிக்கை எடுப்பதற்கு அதற்கு அதிகாரம் உண்டு என குழுவுக்குத் தெளிவாக விளக்கியுள்ளனர். மேலும், பின்வரும் சந்தர்ப்பங்களில் இலங்கை அரசாங்கத்தை விட்டும் சுயேச்சையாக குழு இருக்கும் என்பதை ஐ.நா. குழுவிற்குத் தெளிவுபடுத்தியுள்ளது. (மேலும்...)

வைகாசி 03, 2011

யார் இந்த ஒசாமா?

அமெரிக்காவினால் தேடப்பட்டுவந்த அல்-கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

யார் இந்த ஒசாமா?
பிறப்பு: 1957, சவுதி அரேபிய கட்டிட நிர்மாணியின் மகன் குடும்பத்தில் 57 பிள்ளைகள். அதில் ஒசாமா பின்லேடன் 17 ஆவது பிள்ளை. பதின்மூன்றாவது வயதில் அவரது தந்தையை இழந்தார். 17ஆவது வயதில் சிரியன் கெசினை மணந்தார். (மேலும்....)

வைகாசி 03, 2011

பாகிஸ்தானின் அப்போதாபாத்தில் ராணுவ அகடமிக்கு அருகே பதுங்கியிருந்த ஒசாமா!

பாகிஸ்தானின் அப்போதாபாத்தில், ஒசாமா பின்லாடன் பதுங்கியிருந்த கட்டடம், ராணுவ அதிகாரிகள் தங்குவதற்காக கட்டப்பட்டது. இந்த கட்டடம், ராணுவ அதிகாரிகள் பயிற்சி பெறும் அகடமியிலிருந்து, 300 அடி தூரத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் போருக்கு பின், ஒசாமா, அங்குள்ள குகைகள் நிறைந்த டோரோ போரா மலைப்பகுதியில் ஒளிந்திருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் அமெரிக்கப்படைகள் முகாம் அமைத்து இரவு பகலாக தேடின. ஆப்கானிஸ்தான் எல்லை அருகே, பாகிஸ்தானின் பழங்குடிகள் வசிக்கும் பகுதியில் ஒசாமா தங்கியுள்ளதாக அமெரிக்க புலனாய்வுத்துறை நீண்ட நாட்களாக நம்பி வந்தது. இதையடுத்து, அமெரிக்காவின் கவனம் முழுக்க அந்த பகுதியில் தான் செலுத்தப்பட்டது. ஆனால், ஒசாமா தங்கியிருந்த அபோதாபாத், பாகிஸ்தானின் ராணுவ கோட்டையாக விளங்கும் பகுதி. தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து, ஒன்றரை மணி நேரத்தில் இந்த நகரை அடைந்து விடலாம். இந்த கட்டடத்திலிருந்து, 300 அடி தூரத்தில் தான், ககுல் ராணுவ அகடமி உள்ளது. அபோதாபாத்தில், பெரும்பாலும், ஓய்வு பெற்ற ராணுவத்தினர் வசிக்கின்றனர். (மேலும்....)

வைகாசி 03, 2011

இந்தியாவில் தாக்குதல் நடத்திய 6 முக்கிய தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம்!

பின்லேடன் பாகிஸ்தானில் வைத்து கொல்லப்பட்டிருப்பதை அடுத்து பின்லேடனுக்கு இதுவரை பாகிஸ்தான் அரசுதான் அடைக்கலம் கொடுத்து இருப்பது உறுதியாகி உள்ளது. இதேபோல இந்தியாவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்திவிட்டு தலைமறைவாகி உள்ள முக்கிய தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தான்தான் அடைக்கலம் கொடுத்து உள்ளது. அவர்கள் அனைவரும் பாகிஸ்தான் அரசின் ராஜ உபசரிப்புடன் முக்கிய பிரமுகர்கள் போல பாகிஸ்தானில் வந்து கொண்டிருக்கிறார்கள். பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்துள்ள 6 முக்கிய தீவிரவாதிகள் விபரம்:-

வைகாசி 03, 2011

Toronto Socialist Action presents a public forum

What a Federal Election! Now What's next?

Guest speakers:                                               Cheri DiNovo

NDP MPP for Parkdale-High Park in Toronto, Ontario Legislature NDP critic for Public Transit, Housing, Citizenship and Immigration, Employment Standards and Women's Issues.

John Orrett - President of Thornhill federal NDP Constituency Association, member of the NDP Socialist Caucus steering committee, member of Socialist Action.

Mike Skinner - Researcher, York Centre for International and Security Studies, spent March 2011 on an investigative tour of Afghanistan and Pakistan, former shop steward in CUPE Local 3903 and CUPW Toronto Local, former CUPW national education facilitator for ten years and alternate national union representative. (more...)

வைகாசி 03, 2011

Bin Laden bodyguard's satellite phone calls helped lead US forces to hiding place

Pakistani intelligence sources told the Monitor that US intelligence intercepted satellite phone calls made by Osama bin Laden's bodyguard, which helped lead US forces to his hiding place.

Surrounded by red fabric, the Abbottabad compound is seen where Osama bin Laden has been living, located in Pakistan's Khyber Pakhtunkhwa province

Satellite phone calls that Osama bin Laden’s bodyguard made from July to August last year are believed to have helped US forces hunt down the Al Qaeda leader in the Pakistani compound where he was killed early Monday, according to local Pakistani intelligence sources. US intelligence agencies tracked the Kuwaiti bodyguard's calls from the compound to Al Qaeda associates in the cities of Kohat and Charsada in Khyber Pakhtunkhwa Province, a narrative that was corroborated by several sources. Their names and titles could not be disclosed because of sensitivities surrounding the operation, including whether the Pakistani government had any knowledge of it. The Pakistani government has not taken any clear stance as yet on the operation. The sources' information has provided the Monitor new details of the intelligence process that led to bin Laden's capture. (more...)

வைகாசி 03, 2011

ஒஸாமா பின்லேடன் கொலை

அல்கைதா அமைப்பின் நிறுவனரும் அதன் தலைவரு மான ஒஸாமா பின்லேடன் அமெரிக்க படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உத்தியோகபூர்வமாக அறிவித்தார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லா மாபாத் அருகே அப்போடாபாத் என்ற இடத்தில் பதுங்கியிருந்த பின்லேடனை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உதவியுடன் அமெரி க்கப் படையினர் கொன்றதாக ஒபாமா குறிப்பிட்டுள்ளார். அவர்கள் பின்லேடனை உயிருடன் பிடிக்க திட்டமிட்டனர். இதற்காக அந்த விடுதியை சுற்றி உளவுப் படையினரை நிறுத்தினார்கள். இது பின்லேடன் கூட்டாளிகளுக்கு தெரிந்து விட்டது. இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன. இதில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சண்டை ஓய்ந்ததும் அந்த விடுதிக்குள் அமெரிக்க அதிரடிப்படை வீரர்கள் அதிரடியாக நுழைந்து தேடுதல் வேட்டை நடத்தினார்கள். பின்லேடனின் உடலை கைப்பற்றி எடுத்துச் சென்றனர். தற்போது அவரது உடல் அமெரிக்காவின் பாதுகாப்பு படை வசம் இருப்பதாக தெரியவந்துள்ளது. (மேலும்....)

வைகாசி 03, 2011

யாரும் நுழைய முடியாத வீடு

இஸ்லாமாபாத் அருகே 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அப்பட்டா பாத்தில் ஒரு மாடி வீடொன்றிலேயே ஒஸாமா பின் லேடன் தங்கியிருந்துள்ளார் இந்த வீடு எவரும் உள்ளே நுழையாத வகையில் அதிக பாதுகாப்பு அரண்களுடன் அமைக்கப்பட்டிருந்தது. இங்கு அவர் வெளி தொடர்புக்காக சில நம்பிக்கையான உதவியாளர்களை மட்டும் வைத்திருந்தார். அவர்கள் மூலம் தான் எந்த தகவலும் வெளியே செல்லும் அல்லது ஒசாமாவுக்கு கிடைக்கும் பொதி தபால் மூலம் மட்டுமே இவருக்கு தகவல்கள் வந்தன. அது மூலமே இவரும் தகவல்களை அனுப்பினர். தபால் கொண்டு செல்லப்படுவதை நான்கு ஆண்டுகளாக அமெரிக்க உளவுப் படைகள் கண்காணித்தன. இதன் மூலம் தான், ஒசாமா பதுங்கியிருந்த வீடு தெரிய வந்தது. இந்த வீடு 2005 இல் கட்டப்பட்டது. அருகில் இருந்த வீடுகளை விட, 8 மடங்கு பெரியது. வீட்டை முதலில் பார்த்த அமெரிக்க படைகளே ஆச்சரியம் அடைந்தன. காரணம் வீட்டைச் சுற்றி 12 அடி உயர சுவர் கட்டப்பட்டிருந்தது. யாரும் நுழைய முடியாத வகையில் இரண்டு அடுக்கு ‘கேட்’ அமைக்கப்பட்டிருந்தது. வீட்டில் தொலைபேசி அல்லது இணைய இணைப்புகள் இல்லை. குப்பை கூட வெளியே செல்லக்கூடாது என்பதால் அவை வீட்டுக்கு உள்ளேயே எரிக்கப்பட்டன.

வைகாசி 03, 2011

மக்களுக்குத் தேவை சமாதானமே ஒழிய ஐக்கிய நாடுகளின் அறிக்கையல்ல

உலக நாடுகள் எமக்கு உதவுவதை விடுத்துவிட்டு பிரச்சினைகளை ஏற்படுத்த கூடாது. எமது மக்கள் தற்போது சுதந்திரமாகவும் அமைதியாகவும் வாழ்ந்து வருகின்றனர். மக்களுக்கு தேவை சமாதானமே ஒழிய ஐக்கிய நாடுகள் அறிக்கையல்ல என்று மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அமைப்பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்தார். இம்முறை வடக்கு, கிழக்கு பகுதியில் இருந்து பெருந்திரளானோர் மேதினக் கூட்டங்களுக்கு வருகை தந்தனர். சுமார் 16 பஸ்களில் ஆண், பெண் இருபாலாரும் கட்சி பேதமின்றி மேதினக் கூட்டத்திற்காக கொழும்பு தலைநகருக்கு வருகை தந்து பேரணியில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். (மேலும்....)

வைகாசி 03, 2011

பின்லேடனின் 2 மனைவிகள் கைது

பாகிஸ்தானில் அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் 2 மனைவிகளும், 6 பிள்ளைகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல் ஒன்று குறிப்பிடுகிறது. பாகிஸ்தானின் அப்போட்டாபாத் நகரில் அமெரிக்கப் படையினரின் தாக்குதலில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார். அவரது உடலும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் இஸ்லாமாபாத்துக்கு வடக்கே 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் நேற்று அதிகாலை நடத்திய தேடுதல் வேட்டையின் போது ஒசாமாவின் 6 பிள்ளைகளும், 2 மனைவிகளும் மற்றும் அவருக்கு நெருக்கமான 4 நண்பர்களும் கைது செய்யப்பட்டதாக துன்யா தொலைக்காட்சி செய்திகள் தெரி விக்கின்றன.

வைகாசி 03, 2011

அடிக்கடி இடம் மாறுகையில்  அகப்பட்டார் பின்லேடன்

அல்கைதாவின் தலைவர் ஒஸாமா பின் லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியைக் கேள்வியுற்ற மேற்குலக ஊடகங்கள் அதைப் பிரதான செய்தியாக வெளியிட்டதுடன் ஐரோப்பிய நகரங்களில் மகிழ்ச்சி ஆராவாரங்களும் இடம்பெற்றன. அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு முன்னால் திரண்ட மக்கள் அமெரிக்கா வாழ்க. ஒபாமா வாழ்க என்ற கோஷங்களுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். அமெரிக்காவின் முக்கிய ஊடகங்கள் வழமையான நிகழ்ச்சிகளை நிறுத்திவிட்டு ஒஸாமாவின் செய்தியை ஒளி, ஒலிபரப்பிக் கொண்டிருந்தன. உலகின் முக்கியமான பயங்கரவாதத் தலைவர் கொல்லப்பட்ட செய்தி கிடைத்தவுடனேயே டொலர், யூரோ நாணயங்களின் பெறுமதிகள் உயர்ந்ததாக அறிவிக்கப்பட்டது. (மேலும்....)

வைகாசி 03, 2011

Why Israel and Obama should welcome Hamas-Fatah reconciliation

The Arab Spring has inspired young Palestinians to protest for an elected, unified government. Hamas has agreed – a hint that its moderates may be gaining influence. Don't dismiss the pact too quickly.

The Arab Spring for freedom that first bloomed in Tunisia last December just keeps unfolding. And each new blossom in the Middle East and North Africa raises this difficult question: What will Arabs demanding liberty eventually do with the liberty-denying Islamists in their countries? In postrevolution Egypt, for example, leaders are trying to work with any democracy-loving member of the Muslim Brotherhood they can trust. Both Libya’s anti-Qaddafi rebels and Syria’s street demonstrators are sorting out the jihadists in their midst. In Yemen, pro-freedom protesters are keeping the local Al Qaeda group at arm’s length. (more...)

Osama bin Laden dead

How the US found him

Years of 'persistent hard work' led US intelligence to a complex about 50 miles northeast of Islamabad, Pakistan, where a 40-minute US special forces strike left Osama bin Laden dead.

(By Peter Grier, Staff writer / May 2, 2011 ) (Washington )

Osama bin Laden dead: Pakistani soldiers walk past the Abbottabad compound in Pakistan, surrounded in red fabric, where Osama bin Laden, the Al Qaeda leader behind 9/11 and other terrorist attacks, had been living

Osama bin Laden’s death proves a truism about the US struggle with terrorism: intelligence can be more important than firepower. This undated artist rendering handout provided by the CIA shows the Abbottabad compound in Pakistan where Osama bin Laden, the Al Qaeda leader behind 9/11 and other terrorist attacks, had been living. A 40-minute strike at the compound early Monday morning left Osama bin Laden dead. The strike team that killed bin Laden was small, with limited weapons. But years of painstaking intelligence work provided that team with the precise location of Al Qaeda’s leader. (more...)

வைகாசி 02, 2011

ஒசாமா கொலை

அமெரிக்காவில் கொண்டாட்டம், பாகிஸ்தான் மக்கள் திண்டாட்டம்

அல் கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஒசாமா பின் லேடன் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நேற்று இரவு வெள்ளைமாளிகையில் வைத்து உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். அமெரிக்காவால் தேடப்பட்டுவந்த அல்-கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதையடுத்து அமெரிக்கர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். பாகிஸ்தானில் தலைமறைவாக தங்கியிருந்த பின்லேடன் அமெரிக்க விசேட படைகளால் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக அறிவித்ததையடுத்து வீதிகளில் கூடிய அமெரிக்கர்கள் ஆடிப்பாடி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுவருவதாக அந்நாட்டு செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன.

வைகாசி 02, 2011

Osamabin Laden us dead in operation in Pakistan, US in possession of body - Obama

Osama bin Laden, the glowering mastermind behind the Sept. 11, 2001, terror attacks that killed thousands of Americans, was killed in an operation led by the United States, President Barack Obama said Sunday. A small team of Americans carried out the attack and took custody of bin Laden's remains, the president said in a dramatic late-night statement at the White House. A jubilant crowd gathered outside the White House as word spread of bin Laden's death after a global manhunt that lasted nearly a decade. "Justice has been done," the president said. The development comes just months before the tenth anniversary of the Sept. 11 attacks on the World Trade Center towers in New York and Pentagon in Washington, orchestrated by bin Laden's al-Qaida organization, that killed more than 3,000 people. The attacks set off a chain of events that led the United States into wars in Afghanistan, and then Iraq, and America's entire intelligence apparatus was overhauled to counter the threat of more terror attacks at home. Al-Qaida organization was also blamed for the 1998 bombings of two U.S. embassies in Africa that killed 231 people and the 2000 attack on the USS Cole that killed 17 American sailors in Yemen, as well as countless other plots, some successful and some foiled.

வைகாசி 02, 2011

கனடாவில் மே தினம்

தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் கனடாவில் அதிகளவு இலங்கைத் தமிழ் மக்கள் வாழுகின்றனர். இந்த வருடமும் கனடாவில் தமிழ் மக்களால் மேதினம் கொண்டாடப்பட்டது. இடதுசாரி அமைப்புக்களுடன் இணைந்து பத்மநாபா ஈபிஆர்எல்எவ், ஈபிடிபி, ஈரொஸ் போன்ற அமைப்புக்கள் தொழிற்சங்கவாதிகள் இணைந்து இந்த மேதின நிகழ்வை நடாத்தினர். இதில் இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்கள், தொழிற்சங்கவாதிகள், முன்னாள் விடுதலைப் போராட்ட அமைப்புக்களின் போராளிகள் தங்கள் கருத்துரைகளை வழங்கினர். பான் கீ மூனின் நிபுணர் அறிக்கை ஏகாதிபத்தியத்தின் இலங்கை மீதான சதிவலையின் ஒரு அம்சம் என்று பலராலும் கருத்து தெரிவிக்கப்பட்டது. இலங்கை அரசு 13 வது திருத்தச் சட்டத்தை உடனடியாக அர்தத்துடன் அமுல்படுத்துவதில் ஆரம்பித்து அதனைத் தொடர்ந்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்குவதற்குரிய ஆக்கபூர்வமான செயற்பாட்டை செய்தல் வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. (மேலும்....)

வைகாசி 02, 2011

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம் (பகுதி 3)

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத் தில் தப்பியவரின் வாக்குமூலம்

அந்த பொறுப்பாளர்கள் யாரை நம்பி எம்மை பின்னகரச்சொன்னார்கள்? எதற்காக இப்படி செய்தார்கள்? நமது தலைமைக்கு எப்படி குழிபறிப்பு நடந்தது? இலங்கையின் கொலை வெறிக்கு இந்திய மத்திய அரசும் கருணாநிதியும் தமிழ் நாட்டு அரசியல் வாதிகளும், மற்றும் பாதிரியார் கஸ்பார் , இந்திய மத்திய அமைச்சர்கள் சிலரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் , நமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சொன்னவை என்ன? செய்தவை என்ன? மேற்குலகின் நம் பொறுப்பாளர்களாக இருந்த கே.பி, காஸ்ரோ, நெடியவன், போன்றோரும் மற்றைய நம் புலம் பெயர் தேச நடவடிக்கை பொறுப்பாளர்களும் செய்தது என்ன? என்ன சொல்லி நம் தலைமையையும் போராட்டத்தயும் குழிபறித்து விழ்த்தினர்? நோர்வேயும் ஐரோப்பிய ஒன்றியமும் செய்தது என்ன ? சொன்னது என்ன? பாராது விட்டது ஏன்?? எப்படி எல்லாம் நமது நகர்வுகளை முடக்கி தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து கொன்று குவித்தனர் நம் பொறுப்பாளர்களை? நமக்குள் இருந்து கொண்டே நமது தகவல்களை யார் யார் அரசுக்கு கொடுத்தனர்?? அவர்கள் உள்ளூர் அரசியல் வாதிகளுடன் பேசுவதாக சொல்லி எப்படி அரச கைப்பொம்மைகளாகி நமது கட்டளைப்பீடத்தி சிதைத்தனர்? எம் வான்படை கண்ட தோல்விதான் ஏன்? தென்பகுதிகளில் எந்தவிதமான தாக்குதல்களையும் செய்யவிடாது தடுத்தது யார்? என்ன சொல்லி தடுத்தனர்? சரணடைய சொன்னது யார்? நமது தலைமை அதற்கு எப்படி இணங்கியது? அந்த இறுதி நாட்களில் தலைமையை காப்பாற்ற புலிகள் செய்த நடவடிக்கைகள் என்ன? அதற்கு கே.பி, நெடியவன், காஸ்ரோ செய்தது என்ன?புலம்பெயர் செய்தியாளர்கள் செய்தது என்ன? அதுபற்றி சொல்லுகிறேன். கேளுங்கள் . (மேலும்....)

வைகாசி 02, 2011

தொழிலாளர் தினத்தில்… தமிழீழ மக்கள் விடுதலைக்க​ழக… ஈ.பி.ஆர்.எ​ல்.எவ் பத்மநாபா அணி சுவிஸ் கிளைகள்…!!​!

சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில்; சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகள் மற்றும் உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்களும் கலந்துகொண்ட தொழிலாளர் தினத்தில்   தமிழீழமக்கள் விடுதலைக்கழக சுவிஸ்கிளையும் கலந்து கொண்டது. இவ் மேதின ஊர்வலமானது சூரிச் பிரதான புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள Sihl Post (Lagerstrasse) ல் இருந்து காலை 10.15 மணிக்கு ஆரம்பமாகிBürkliPlatz (Bellevuey)ில் 12.30 முடிவடைந்தது. (மேலும்....)

வைகாசி 02, 2011

 

வைகாசி 02, 2011

IAC condemns the NATO assassination on April 30 of Moammar Gadhafi's youngest son and three of his grandchildren in an attempted assassination of the leader of Libya.

The one dominant imperialist power and the two former colonial rulers of the world jointly stated their intentions in a open letter published on April 15 in the Washington Post and other media. U.S. President Barack Obama, British Prime Minister David Cameron and French President Nicolas Sarkozy wrote that their goal was to remove Moammar Gadhafi, the leader of Libya. for good. That’s what they call “regime change.” This is even in violation of the resolution rammed through the UN Security Council. It is international lawlessness on a grand scale. Britain, France, and the U.S. possess the most destructive military machines on earth. Despite their internecine rivalries for plunder, despite the rejection of their plans by most African countries, despite the misgivings of their key NATO ally, Germany, they are at war. In arrogant defiance of Brazil, Russia, India, China and South Africa, who met recently and condemned the intervention, they have decided to move forward with the conquest of Libya. Italy, once the colonial master of Libya, has joined the criminal bombing. (more.....)

வைகாசி 02, 2011

புளொட்டின் மேதினச் செய்தி

மே மாதம் முதலாம் நாள் தொழிலாளர் வர்க்கத்தின் காத்திரமான போராட்டத்தினால் கிடைத்த வெற்றியை குறிக்கும் நாள். ஆனால் இப்போது தொழிலாளர்கள் தமது வெற்றிக்காக போராடும் நாளாக மீண்டும் மாற்றப்பட்டுவிட்டது. சோவியத் ஒன்றியத்தின் உடைவு, அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் ஆதிக்கம் செலுத்துகின்ற ஒரு துருவ உலக ஒழுங்கு, உலக தாராளமயமாக்கல், தேசிய இனங்களின் எழுச்சி என்று நாம் கண்ட அனைத்து விடயங்களுமே, தொழிலாளர்கள் என்றொரு வர்க்கத்தினர் உலகம் பூராவும் நலிவடைந்து, பிளவுபட்டு, தனித்துவங்களை இழக்க காரணமாகி விட்டதை உணர்கின்றோம். (மேலும்....).

வைகாசி 02, 2011

சமாதான வெண்புறாவை அழிக்கவிருக்கும் கருடனை ஒழிக்க உலக நாடுகளுடன் ஒன்றிணைவோம்

எங்கள் தாய் நாட்டை உலக வரைபடத்திலிருந்து நிரந்தரமாக அழித்துவிடும் தீய எண்ணம் கொண்ட, சர்வதேச பிற்போக்குவாத சக்திகளும், மற்ற நாடுகளை அழித்துவிடுவதில் ஆனந்தம் காணும், பிறருக்கு துன்பம் இழைத்து இன்பம் அடையும் நோயுடைய சில வல்லமைமிக்க நாடுகளும், எல். ரி. ரி. ஈ யை ஆதரிக்கும் குழுக்களும், புலம்பெயர்ந்த, விரல்விட்டு எண்ணக்கூடிய சில தமிழ் குழுக்களும் இன்று தங்கள் பணப்பலத்தை பிரயோகித்து மேற்கொண்டுவரும் நாசகார வேலைகளுக்கு எதிராக, உலகிலுள்ள இலங்கையின் நட்பு நாடுகளின் ஆதரவை திரட்டுவதை விட எங்களுக்கு வேறு வழியில்லை. (மேலும்....). 

வைகாசி 02, 2011

அருணாச்சல முதல்வருடன் மாயமான ஹெலிகொப்டர்

நேற்று முன்தினம் காலை 9.45 மணிக்கு அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் நகரில் இருந்து பவன் ஹான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஹெலிகொப்டரில் கிளம்பினார் டோர்ஜீ. இந்த ஹெலிகொப்டர் 11.30 மணிக்கு தலைநகர் இடாநகருக்கு சென்று சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் இடையிலேயே அந்த ஹெலிகொப்டருடனான தொடர்பு அறுந்துபோனது. இதனால் அது விபத்துக்குள்ளானதாக அஞ்சப்பட்டு அதை தேடும் பணியில் விமானப் படை ஹெலிகொப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. முதல்வர் டோர்ஜி காண்டு பயணித்த ஹெலிகொப்டர் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பூட்டான் நாட்டு எல்லையில் டபோரிஜோ என்ற இடத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாகவும், முதல்வர் உட்பட ஐந்து பேரும் பத்திரமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் நேற்று முன்தினம் மாலை செய்தியாளர்களிடம் பேசிய அருணாச்சல பிரதேச துணை பொலிஸ் டி.ஜி.பி. ராபின் ஹிபு, காணாமல் போன உலங்குவானூர்தி பற்றியும் அதில் பயணித்த முதல்வர் உட்பட ஐந்து பேர் பற்றியும் எந்தத் தகவலும் இல்லை. அவர்களைத் தேடும் பணி தொடர்கிறது என்றார். இதனால் முதல்வர் நிலை என்ன என்பதில் குழப்பம் நீடிக்கிறது. இந்திய இராணுவத்தில் உளவுப் பிரிவில் பணியாற்றிய டோர்ஜி காண்டு 2007 ஏப்ரல் 9ம் திகதி அருணாச்சல பிரதேச மாநிலத்தின் ஐந்தாவது முதல்வராகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

வைகாசி 02, 2011

அதிகாரத்தை பாதுகாக்க எவரிடமும் மண்டியிடேன் - ஜனாதிபதி

  • மூன்று இலட்சம் மக்களை உயிர்வாழ வைத்தமை மனித உரிமை மீறலா?

  • எங்களுக்கு உதவிய தொழிலாளர் வர்க்கத்திற்கும் உலக நாடுகளுக்கும் எமது நன்றிகள்

  • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மாத்திரமே தொழிலாளர் வர்க்கத்திற்கு சேவையாற்றியுள்ளது

  • பிரபாகரனின் தந்தைக்கும் அரசாங்கம் ஓய்வூதியம் வழங்கியது

  • ஊழியர் சேமலாப நிதியை எதிர்த்தவர்கள் இன்று ஓய்வூதியத்தையும் எதிர்க்கிறார்கள்

  • தனியார் துறையினருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் போது ஊழியர் சேமலாப நிதியம் தொடர்ந்தும் பேணப்படும்

(மேலும்....)

வைகாசி 02, 2011

மனித உயிர்களுக்கு எதிரியாகும் “என்டோ சல்பான்'

விவசாயத்தில் அறிவியல் முன்னேற்றம் அவசியம் ஆனால் மண்ணைப் பாதுகாப்பது அதை விட முக்கியம் விவசாய பரப்பு சுருங்கி வரும்வேளையில், இருக்கின்ற குறைந்த பரப்பிலும் பூச்சிக் கொல்லிகளை தெளிப்பதால் மண்ணின் தரம் குறைந்து வருகிறது. இன்று மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பூச்சிக் கொல்லிகளில் “என்டோசல்பான்” முக்கிய இடத்தை வகிக்கிறது. இதை தடை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக உள்ளது. விவசாய நிலத்தில் சாறு உறிஞ்சும் புழுக்கள் மற்றும் தண்டு துளைப்பான்களை கட்டுப்படுத்த பயிர்களின் ஆரம்ப நிலையில் என்டோ சல்பான் தெளிக்கப்படுகிறது. கேரள மாநிலம் காசர்கோடு முழியார், பெல்லூர் பகுதியில் 4700 ஏக்கரில் பயிரிடப்பட்ட முந்திரி தாவரங்களின் மீது என்டோ சல்பான், ஹெலிகொப்டர் மூலம் தெளிக்கப்பட்டது. இந்த சம்பத்திற்கு பிறகு சுற்றுப்புற கிராமங்களில் பலர் பலியானார்கள். அங்கிருந்த பலர் சுவாச பாதிப்பு, ஒவ்வாமை, வாந்தி, தலைவலி, கை, கால் வலிப்பு, திருகிய கால்கள், தசை வளர்ச்சி குன்றுதல், புற்று நோய் பக்கவாதம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டனர். கிராம மக்களின் இரத்தத்தை பாரிசோதித்த போது, நீரில் கரைந்துள்ள என்டோ சல்பான் அளவைக் காட்டிலும் பல நூறு மடங்கு என்டோ சல்பானின் பங்கு இரத்தத்தில் கலந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

வைகாசி 02, 2011

போர் நிறுத்தத்துக்கு தயார், அதிகாரத்தை  விட்டுக் கொடுக்கமாட்டேன் - கடாபி

லிபிய நாட்டு ஜனாதிபதி கடாபி போர் நிறுத்தம் செய்து கொள்ள தயார் என்றும், ஆனால் அதிகாரத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்றும், நாட்டை விட்டு ஓடும்படி யாரும் என்னை நிர்ப்பந்தம் செய்ய முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். லிபியா மீது மேற்கத்திய நாடுகளின் இராணுவம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் மூலம் கடாபி ஆட்சியை கவிழ்க்க முடியவில்லை. அதற்கு பதிலாக போர் நீடித்துக்கொண்டே போகிறது. எதிர்ப்பாளர்கள் மீது இராணுவம் விமானம் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. சில இடங்களில் எதிர்ப்பாளர்களுக்கும், இராணுவத்துக்கும் இடையே கடும் யுத்தம் நடந்து வருகிறது. (மேலும்....)

முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அரசியல் கட்சி தோற்றம்

எகிப்தின் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு புதிய அரசியல் கட்சியொன்றை அமைத்துள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்தின் அரைவாசி ஆசனங்களை இலக்குவைத்துப் போட்டியிடவுள்ளதாக புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி அறிவித்துள்ளது. இதன்படி புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி ‘சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி’ என பெயரிடப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்சி மதசார்பான கட்சி அல்லவென்றும், இஸ்லாமிய பின்னணியில் உருவாக்கப்பட்டது எனவும் அதன் தலைவர் முஸ்ரி தெரிவித்தார். இந்த கட்சியில் கிறிஸ்தவ, முஸ்லிம்கள் இணையலாம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். எகிப்தில் ஏற்பட்ட மக்கள் புரட்சியை தொடர்ந்து எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அங்கு பொதுத் தேர்தல் நடை பெறவுள்ளது.  எகிப்தில் தற்போதைய நிலையில் தேசிய மட்டத்தில் ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரே அமைப்பாக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு மாத்திரமே உள்ளமை குறிப்பிட த்தக்கது. முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு முந்தைய தேர்தல்களில் சுயேட்சையாகவே போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வைகாசி 01, 2011

இலங்கை விவகாரங்களில் சர்வதேச சமூகம் தேவையின்றி தலையீடு செய்யக் கூடாத – சீனா!

இலங்கை விவகாரங்களில் சர்வதேச சமூகம் தேவையின்றி தலையீடு செய்யக் கூடாது என சீனா கோரிக்கை விடுத்துள்ளது. யுத்தம் தொடர்பான பிரச்சினைகளுக்கு இலங்கை அரசாங்கமும், நாட்டு மக்களும் தீர்வு பெற்றுக் கொள்ள சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமென சீன வெளிவிவகார அமைச்சுப் பேச்சாளர் ஹொங் லீ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யுத்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் ஏற்கனவே உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றை உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சகல பிரச்சினைகளுக்கும் இலங்கை அரசாங்கமும், நாட்டு மக்களும் சரியான முறையில் தீர்வு காண்பார்கள் என சீனா நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு சர்வதேச சமூகம் காத்திரமான ஒத்துழைப்பு வழங்கும் என தாம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைப் பிரச்சினையை மேலும் குழப்பும் வகையிலான செயற்பாடுகளுக்கு அனுமதியளிக்கப்படக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வைகாசி 01, 2011

கருணாவின் பிரிவு புலிகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது

ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை - பாகம் 03

கருணாவின் பிரிவு புலிகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை பாகம் 03 32. எல்.ரி.ரி.ஈ. தற்கொலைக் குண்டுத்தாக்குதலைத் தோற்றுவித்து, இரா ணுவ, அரசியல் மற்றும் சிவில் இலக்குகளுக்கு எதிராக அதனைப் பிரயோகித்தது. இந்திய பிரதம மந்திரி ராஜீவ் காந்தி (1991) அத்துடன் இலங்கை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச (1993) மற்றும் அதிக எண்ணிக்கையிலான இலங்கை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மிதவாதப் போக்குடைய தமிழ் அரசியல் தலைவர்களின் கொலைகளுக்கு ஆண் மற்றும் பெண் எல்.ரி.ரி.ஈ. தற்கொலைக் குண்டுதாரிகள் பொறுப்பாகவிருந்தனர். அநேகமான சந்தர்ப்பங்களில் பல சிவில் பிரஜைகளின் உயிர்களைப் பறித்த பொருளாதார மற்றும் சமய இலக்குகள் மீதும் அது தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டது. எல்.ரி.ரி.ஈ. புறந்தள்ளும் அரசியலைப் பின்பற்றியதோடு, 1990 ஆம் ஆண்டில் வடக்கில் தம் வீடுகளில் இருந்து முஸ்லிம் மக்களை துரத்தியதோடு, அதன் கட்டுப்பாட்டில் இருந்த எல்லைக் கிராமங்களில் வசித்த சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களைப் படுகொலை செய்தது. தமிழ் மக்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக அதிகமாக வன்முறை, அச்சுறுத்தல் மற்றும் பயமுறுத்தலை எல்.ரி.ரி.ஈ.பிரயோகித்தது. வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பதில், சிறுவர்கள் சிறுமியரை உள்ளிட்ட வயது குறைந்தவர்களை படைவீரர்களாகப் பாவிப்பதில் எல்.ரி.ரி.ஈ. ஈடுபட்டதும் தெரிந்த விடயமே. அதன் நடைமுறை காரணமாக கனடா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, ஐக்கிய இராஜதானி மற்றும் ஐக்கிய அமெரிக்கக் குடியரசு ஆகியவற்றை உள்ளிட்ட நாடுகள் இவ்வமைப்பை தடை செய்ததோடு, 2001 செப்டெம்பர் 11 இன் பின்னர் தடை செய்வது மேலும் தீவிரமடைந்தது. (மேலும்....)

வைகாசி 01, 2011

மேதினி போற்றும் மேதினம்!

சோசலிசத்தைப் பேசினால் சிலர் பயப்படுகிறார்கள் நாங்கள் பிறரின் சொத்துக்களை சோசலிசத்தின் பெய ரில் அபகரித்து விடுவோம் என நினைக் கிறார்கள். ஆனால் சோசலிசத்தின் நோக்கம் அது அல்ல. யார் ஒருவர் இன்னொருவருடைய சொத்துக்களை திட்டமிட்டு பறிக்கிறார்களோ அதை தடுத்து நிறுத்தக்கூடிய அமைப்பை உருவாக்குவதுதான் சோசலிசம். (மேலும்....)

வைகாசி 01, 2011

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். மாணவ ஒன்றியத் தலைவரின் இடைநிறுத்தை கண்டித்தே இவர்கள் இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்கலைக்கழக வளாகத்தின் பிரதான வாயில்கள் மூடப்பட்டிருந்தன.

வைகாசி 01, 2011

Pottu Amman Hitting with broom stick when he came into  their house in Batticalo with the intention of killing them.

Mr. Arun Thambimutu the son of former TULF MP Sam Thambimuttu  who was killed by the LTTE in 1980s has said that probing the final  stages of the war would be useless exercise. In an interview to a local English  daily he has recalled how his mother ...Mr. Arun Thambimutu the son of former TULF MP Sam Thambimuttu who was killed by the LTTE in 1980s has said that probing the final stages of the war would be useless exercise. In an interview to a local English daily he has recalled how his mother  chased LTTE strongman Pottu Amman Hitting with broom stick when he came into  their house in Batticalo with the intention of killing them. He has also recalled an incident he witnessed when a woman was killed in Batticaloa by the tiger terrorists for offering a cool drink to some police officers. He has questioned who is going to probe the violation of the rights of this woman. He says he left Sri Lanka after his mother and farther were killed by  LTTE. He has also said that many Tamil youth who joined the LTTE and other militant groups had sacrificed their lives for nothing as the 30 year old conflict had not achieved anything.

வைகாசி 01, 2011

அனைத்து ஒடுக்கு முறைகளுக்கும் எதிரான ஒன்றிணைந்த மேதின ஊர்வலம்…!!! அழைக்கிறார்கள்… ‘சமூக பாதுகாப்பு அமைப்பு’ – France

 அனைத்து ஒடுக்கு முறைகளுக்கும் எதிரான ஒன்றிணைந்த மேதின ஊர்வலம்…!!!

  அழைக்கிறார்கள்… ‘சமூக பாதுகாப்பு அமைப்பு’ – France

  தோழமையுடன்,  இத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் மே தின ஊர்வலம் தொடர்பான செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு…

தோழமையோடு இவ் மே தின ஊர்வலத்திற்கு அனைவரையும் அழைக்கிறார்கள்…!!!

 Sunday May 1st @ 12:00 A.M

 Give your voice for all oppressed people around the world…!!!

வைகாசி 01, 2011

Former Tiger chief confirms he talked to man now running for Tories

A Conservative candidate in Monday’s election is facing fresh questions about his contact with a former leader of the Tamil Tigers. At issue is the nature and amount of contact between Gavan Paranchothy, a Tamil-Canadian broadcast journalist running in Scarborough-Southwest, and the ex-Tiger boss known as KP, who ran the terrorist group’s multimillion dollar international arms-procurement and support operations. Mr. Paranchothy denies having met KP, and says what minimal phone contact they had was for journalistic purposes. But in a rare and lengthy interview with The Globe and Mail, the once-elusive Tiger boss, now in government detention in Sri Lanka, said Mr. Paranchothy is well known to him and they spoke by phone numerous times over several weeks in 2009. (more...)

வைகாசி 01, 2011

உரிமைகளைப் பறிக்கும் தாராளமயம்

(சுகுமால் சென்)

உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர் வர்க்கம், சிகாகோவில் 1886ஆம் ஆண் டின் வீரஞ்செறிந்த மே தினப் போராட்டங் களின் புரட்சிகரமான சாதனைகளை எந்த விதத்திலும் மறந்திட முடியாது. தொழிலாளர் வர்க்கத்திற்கு எட்டு மணி நேர வேலை உரி மையும், ஒரு நாளின் மீதமுள்ள 16 மணி நேரத்தை ஓய்வு, கலாச்சார நடவடிக்கை கள் மற்றும் குடும்ப வாழ்க்கையை அனுப வித்திடப் பயன்படுத்திக் கொள்வதற்கான உரிமையையும் மே தினப் போராட்டங் களின் விளைவாக நடைமுறைப் படுத்தப் பட்டவைகளாகும். ஆனால் இன்றைய நிலைமை என்ன? சில பொதுத்துறை நிறுவனங்களைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் நிலைமை கள் வேகமாக மாறிக் கொண்டிருக்கின்றன. எட்டு மணி நேர வேலை உரிமையைக் காலில் போட்டு மிதித்து நசுக்கிட, தனியார் நிறுவனங்களுக்கு நடைமுறையில் முழுச் சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது.  எட்டு மணி நேர வேலை என்பதும், நாளின் மீதமுள்ள 16 மணி நேரம் ஓய்வு, மனமகிழ் நிகழ்வுகள் மற்றும் குடும்பத்தாரு டன் மகிழ்வுடன் இருப்பதற்கு என்கிற விதி படிப்படியாக அரிக்கப்பட்டு வருகிறது. (மேலும்....)

வைகாசி 01, 2011

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள், உரிமைகள் குறித்து ஈ.பி.டி.பி- அரச தரப்பு பேச்சுவார்த்தை

தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகள் மற்றும் அவர்கள் முகம் கொடுத்து வரும் வாழ்வியல் உரிமைகள் குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினருக்கும் அரச உயர் மட்ட குழுவினருக்கும் இடையிலான பேச்சு வார்த்தை நேற்று நடைபெற்றது. இதில் பின்வரும் விடயங்கள் மக்கியமாக ஆராயப்பட்டன

நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் எதுவித குடியேற்ற மாற்றங்களும்; நிகழாது பாதுகாத்தல்.

நீண்ட காலமாக வடக்கு கிழக்கில் காணிகள் பகிர்ந்தளிக்கப்படாமல் இருக்கும் தமிழ் மக்களுக்கான காணிகளை பகிர்ந்தளித்தல்.

இடம்பெயர்ந்து துயரப்பட்ட தமிழ் மக்களுக்கென மேற்கொள்ளப்பட்டுவரும்; மீள் குடியேற்றங்களையும் வாழ்வாதார வசதிகளையும் மேலும் அர்த்தமுள்ளதாக உருவாக்கி கொடுத்தல்.

கடந்த கால யுத்தம் மற்றும் ஏனைய காரணங்களினால் வேலையற்றிருக்கும் அனைவருக்கும் வேலை வாய்ப்புகளை வழங்கும் முகமாக வடக்கு கிழக்கில் பல்வேறு தொழிற்றுறைகளை ஊக்குவித்தல்.

பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படைகளில் தமிழ் பேசும் இளைஞர் யுவதிகளை கணிசமான அளவு இணைத்தல்.

யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட காரணத்தினால் அவசர கால சட்டத்தை விரைவில் நீக்குவதற்கான கால வரையறை ஒன்றை வகுத்து செயற்படல்.

(மேலும்....)

வைகாசி 01, 2011

பாட்டாளி வர்க்கமே  புரட்சிகரமான வர்க்கம்

(என்.ராமகிருஷ்ணன்)

நம் அன்றாட வாழ்வில் மார்க்சியம் நமக்கு வழிகாட் டுகிறது. தினமும் ஏராளமான சம்பவங்களைக் காண் கிறோம். நாளேடுகளில் படிக்கிறோம். அவை அனைத் தையும் நாம் உணர்ந்துகொள்ள முடியுமா? நிச்சயம் முடி யும். போராடும் மாணவர்கள் மீது தடியடி, 2லட்சம் விவ சாயிகள் தற்கொலை, விவசாய விளைபொருட்களுக்குக் கட்டுப்படியான விலை கிடைக்காததால் விவசாயிகள் கட னாளியாவது. வாழ வழி தெரியாது நகரங்களுக்குக் குடி பெயர்வது, விலைவாசி உயர்வு, கொலை, கொள்ளை என்று எண்ணற்ற நிகழ்வுகளை நாம் அன்றாடம் காண்கிறோம். இவை ஒவ்வொன்றையும் எவ்வாறு நாம் புரிந்துகொள்வது? அதற்கு மார்க்சியம் ஒரு வழிமுறையைக் காண்பிக்கிறது. அந்த வழிமுறைதான் “வர்க்கப் பார்வை” என்பது. வர்க்கப் பார்வை என்பது தொழிலாளி வர்க்கத்தின் நிலைபாட்டி லிருந்து, நோக்கு நிலையிலிருந்து ஒவ்வொன்றையும் ஆராய்வது. மக்களில் தொழிலாளி வர்க்கம். விவசாய வர்க்கம். நடுத்தர வர்க்கம். கைவினைஞர்கள் என்று பல பகுதியினர் உள்ளனர். (மேலும்....)

வைகாசி 01, 2011

நிபுணர் குழு அறிக்கைக்கு தமிழ்க் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்ததால் அரச தரப்பு அதிருப்தி

ஆதாரமற்ற ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்று ஆதரித்து அறிக்கை வெளியிட்டது தொடர்பாக அரசாங்கத் தரப்பினர் அதிருப் தியை வெளியிட்டுள்ளனர். ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்து கூட்டமைப்பினர் விடுத்த அறிக்கையால் சிங்கள மக்களிடம் கூட்டமைப்பு குறித்து நம்பிக்கையீனங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூட்டமைப்பினருடனான பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதில் தமக்கு சிக்கல்கள் தோன்றியிருப்பதாகவும் அரசாங்க தரப்பினர் தெரிவித்துள்ளனர். அதிகார பரவலாக்கல் குறித்த விடயங்களை முன் வைக்குமாறு அரசாங்க தரப்பு கூட்டமைப்பினரை கேட்டுக் கொண்டுள்ளது. அதிகாரப் பகிர்வு தொடர்பாக ஏற்கனவே தாம் ஒரு பட்டியலை அரசாங்க தரப்பினரிடம் கையளித்திருப்பதால் புதிதாக பட்டியலில் கொடுக்க தேவையில்லை என கூட்டமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  (மேலும்....)

வைகாசி 01, 2011

சூப்பர்மேன் கூறுகின்றார்

எனக்கு வேண்டாம் அமெரிக்கக் குடியுரிமை!

கற்பனைக் கதாபாத்திரங்களில் உலக அளவில் பிரபலமானவற்றில் சூப்பர்மேனின் பாத்திரமும் ஒன்றாகும். விரைவில் வெளியாகும் புதிய சூப்பர்மேன் படக்கதைப் புத்தகத்தில், தான் அமெரிக்கக் குடியுரிமையை விட்டுவிடப் போவதாக சூப்பர்மேன் பேசும் வசனம் இடம் பெற்றிருக்கிறது. 900வது சூப்பர்மேன் படக்கதை புத்தகம் தற்போது வெளியாகிறது. இதில் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையில் ராஜாங்க ரீதியிலான விஷயத்தில் சூப்பர் மேன் சிக்கிக்கொள்வது போன்ற காட்சி வருகிறது. அப்போது, உண்மை, நீதி ஆகியவை அமெரிக்காவின் பாதை என்பது காலங்கடந்த விஷயமாகிவிட்டது என்று சூப்பர் மேன் வசனம் பேசுகிறார்.  (மேலும்....)

வைகாசி 01, 2011

ஐ.நா அறிக்கைக்கெதிராக மட்டக்களப்பில் தமிழ்ப் பெண்கள் ஆர்ப்பாட்டம் _

ஐ.நா. அறிக்கைக்கெதிராக மட்டக்களப்பில் இன்று காலை 9 மணிமுதல் ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடா தொகுதி மகளிர் அமைப்பு இதனை ஏற்பாடு செய்திருந்தது. கல்குடா தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பிரதம அமைப்பாளர் டி.எம்.சந்திரபால தலைமையில் இவ்ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. மாவடிவேம்பு வைத்தியசாலைக்கு முன்னால் ஆரம்பமான இவ்ஆர்ப்பாட்டப்பேரணி சுமார் இருமணிநேரம் பலவீதிக@டாகச்சென்றது. பெருமளவிலான பெண்கள் இதில் கலந்து கொண்டனர். _

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com