Contact us at: sooddram@gmail.com

 

2015 செப்ரம்பர் மாதப் பதிவுகள்

புரட்டாசி 01, 2015

சம்மந்தனா...? மகிந்தாவா....?

எதிர்க்கட்சித் தலைவரைத் தெரிந்தெடுக்கும்

நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நாளை

இலங்கையின் 8ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நாளை செவ்வாய்க்கிழமை (01) காலை 9.00 மணி முதல் 3.30 மணிவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ளது. இதன்போது, நாடாளுமன்றத்துக்கு புதிதாகத் தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் அனைவரும் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வர். நாடாளுமன்ற உறுப்பினர்களிலிருந்து சபாநாயகரும், பிரதி சபாநாயகரும் இதன் போது தெரிவு செய்யப்படவுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவர் கரு ஜயசூரியவினால், புதிய சபாநாயகரின் பெயர் பரிந்துரைக்கப்படும் என்று அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரைத் தெரிந்தெடுக்கும் விடயத்தில் தான் தலையிடப் போவதில்லை எனவும் அது நாடாளுமன்றத்துக்கு உரித்தான விடயமெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இன்றைய மகா காமடி

விசாரணைகளில் கே.பி குற்றவாளியென ஊர்ஜீதமாகவில்லை

கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனிடம் இதுவரை நடத்திய விசாரணைகளுக்கமைய அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட வில்லையென சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது. கே.பியை கைதுசெய்து அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தாக்கல் செய்திருந்த ரிட் மனு மீதான வழக்கு விசாரணை நேற்று மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதன்போதே சட்டமா அதிபர் சார்பில் மேற்கண்டவாறு அறிவிக்கப்பட்டது. புலிகளின் தலைவராக விருந்த கே.பிக்கு எதிராக 193 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. எல்.ரி.ரி.ஈ.யின் சர்வதேசத் தலைவராக விருந்த கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்நமாதன் தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன?

(என்.கே.அஷோக்பரன் LLB (Hons)

இலங்கைத் தமிழரசுக் கட்சியை (ஆங்கிலத்தில் சமஷ்டிக் கட்சி) 1949ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 18ஆம் திகதி அகில இலங்கை தமிழ் காங்கிரஸிலிருந்து பிரிந்த சா.ஜே.வே.செல்வநாயகம், சி. வன்னியசிங்கம், ஈ.எம்.வி.நாகநாதன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் உருவாக்கினார்கள். அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் இணைந்து போகும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் முடிவினை எதிர்த்தே இந்த பிரிவு உருவானது.
'சமஷ்டிக் கட்டமைப்பு அடிப்படையில், மொழிவாரியான தமிழருக்கான சுயாட்சிப் பிரிவு ஒன்றை ஸ்தாபிப்பதனூடாக இலங்கையின் தமிழ் மக்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுத்தல்' என்ற கொள்கையினடிப்படையில் சா.ஜே.வே.செல்வநாயகம் தலைமையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி (ஆங்கிலத்தில் சமஷ்டிக் கட்சி) உருவானது. ஆரம்ப காலங்கள் தமிழரசுக் கட்சிக்கு அவ்வளவு சாதகமாக இருக்கவில்லை. (மேலும்......)

மதங்களும் மக்களுக்கு இடையிலான பிரிவினைகளும் !!!

(விஜயகுமாரன்)

புலிகள், முஸ்லீம் மக்களை வடக்கில் இருந்து துரத்தியதினாலும், காத்தான்குடி பள்ளிவாசலில் வைத்து தொழுது கொண்டிருந்தவர்களை கொன்றதினாலும் கோபங் கொண்ட அல்லா தானாம் புலிகளை அழித்து விட்டார் என்று சில அறிவிலிகள் உளறுகிறார்கள். அவர்கள் இதோடு நிறுத்தியிருந்தால் நமக்குப் பிரச்சனை இல்லை. ஏனென்றால் இது நமக்கு அறிவீனம், மூடநம்பிக்கை, முட்டாள்தனமாக இருந்தாலும் மதவாதிகள் எப்போதுமே இப்படித்தான் இருப்பார்கள். அவர்கள் மதம் என்ற கற்பனையை நம்புபவர்கள், எனவே தமது கற்பனைக்கதைகளுடன் காலத்தை கழிக்கட்டும் என்று விட்டு விடலாம். (மேலும்......)

எம்.எம்.கல்பர்கி - சில குறிப்புகள்

உருவ வழிபாட்டை ஏற்காததே அவர் மீதான ஆத்திரத்தின் பின்னணி ?

டாக்டர் மல்லேஷப்பா கல்பர்கி அவர்கள் முன்னாள் ஹம்பி பல்கலைக் கழகத் துணை வேந்தர் என்பதைக் குறிப்பிட்டிருந்தேன். அதோடு அவர் சாகித்ய அகாதமி பரிசு பெற்ற எழுத்தாளர் மற்றும் ஒரு முக்கிய ஆய்வறிஞரும் கூட. 20 க்கும் மேற்பட்ட ஆய்வு நூற்களை எழுதியுள்ளார். கன்னடத்தில் செல்வாக்கு மிக்க லிங்காயத் (வீர சைவர்) சமூகத்தைச் சேர்ந்தவர். கன்னடப் பல்கலைக் கழகத்தில் வீர சைவத்தைத் தோற்றுவித்த பசவரின் பெயரில் மைந்த ஆய்விருக்கையின் தலைவராகவும் இருந்தவர். (மேலும்......)

ஐ.ம.சு.மு பங்காளி கட்சிகள் இணைந்து புதிய கூட்டமைப்பு

ஐ.ம.சு.முவில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இணைந்து புதிய கூட்டமைப்பொன்றை உருவாக்கி, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக பிவிதுறு ஹெல உருமய கட்சியின் செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்தார். குறிப்பிட்ட விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூட்டணியின் பெயர், சின்னம் மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என இன்று (31) தெரிவித்தார். கடந்த பொதுத் தேர்தலில் ஐ.ம.சு.மு. தோல்வியடைந்தமைக்கு அக்கட்சியின் தலைமைப் பொறுப்பிலுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளே காரணம் என இதன்போது அவர் தெரிவித்தார். இந்நிலைமைகளின் கீழ் ஐ.ம.சு.முவில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான கட்சிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையின் கீழான ஐ.ம.சு.முவில் போட்டியிடுவதில் தயக்கத்துடன் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இது தொடர்பில் வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரிகள் முன்னணி மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்க ஆகியோரும் இது தொடர்பில் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மதம் மனிதனை மிருகமாக்கும்

சாதி மனிதனை சாக்கடையாக்கும்

மதம் மனிதனை மிருகமாக்கும்  சாதி மனிதனை சாக்கடையாக்கும் என்று அன்று தந்தை பெரியார் சொன்னது மீண்டும் நிரூபணமாகி இருக்கறது. பெரியாரின் ஒத்த கருத்துடைய கன்னட எழுத்தாளரும் முன்னாள் பல்கலைகழக துணைவேந்தருமான டாக்டர் எம் எம் கல்புர்கி மத வெறியர்களால் நேற்று சுட்டு கொல்லப்பட்டுள்ளார். உலகில் இத்தனை காலம் நடைபெற்ற போர்களை விடவும் அதிக அளவில் மக்கள் கொல்லப்பட்டது மத வெறியர்களால் தான் என்று வரலாறு நமக்கு உணர்த்துகிறது. இந்து மத வெறியர்களால் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் அரசு கொடுத்த ஆயுதம் தாங்கிய காவலர்கள் தனக்கு வேண்டாம் என்று மறுத்த மாவீரர் இன்று காவி கயவர்களால் கொலை செய்ய பட்டுள்ளது மத சார்பற்ற நாடு என்று தம்பட்டம் அடித்துகொள்ளும் இந்தியாவின் முகத்தில் தார் பூசப்பட்டுள்ளது.(மேலும்......)

சாதி மேலாதிக்கவாதத்தின் உற்பத்திப் பொருளே இனவாதம்...

1966ல் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி (சீனச்சார்பு) பொன்னாலைக் கிராமத்தில் ஐ.தே.கட்சி (தமிழரசுக் கட்சி ஆதரவுடன் செயற்பட்ட) அரசாங்கத்தினால் கிராம மக்களுக்கென வழங்கப்பட்டிருந்த குழாய் நீரை ஒடுக்கப்பட்ட சாதியினர் பயன்படுத்துவதை உயர்சாதியினர் தடை செய்ததனை எதிர்த்து மக்களைத் அணி திரட்டி ஒரு போராட்டத்தை நடாத்தி வெற்றி பெற்றது. இப்போராட்டத்தில் சாதி வெறியர்களினதும் அரச படைகளினதும் தாக்குதல்கள் மூலம் தாங்கள் அடைந்த அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு அக்கட்சி தொடர்ந்து 67-68களில் "சாதியமைப்புத் தகரட்டும், சமத்துவ நீதி ஓங்கட்டும்.." என்ற தாரக மந்திரத்துடன் மேலும் பல உயிர்பலி கொடுத்த போராட்டங்களை (அடிமை குடிமைமுறை ஒழியட்டும்... ஆலய தேநீர்க்கடைப் பிரவேசம் தொடரட்டும்.. என்ற பதாகையுடன்) முன்னெடுத்தது. அதில் மக்களை பாதுகாக்க வேண்டி தற்பாதுகாப்பு அடிப்படையில் ஆயுத வன்முறையையும் கையாண்டது. இதுவே தமிழர்கள் வரலாற்றில் இலங்கை அரசின் அடக்குமுறைக்கு எதிராக முதன் முதலாக ஆயுதம் ஏந்திய மக்கள் போராட்டம் ஆகும். (மேலும்......)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com