Contact us at: sooddram@gmail.com

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

தமிழகத்தில் 234 தொகுதிகளில் மாநில அரசைத் தீர்மானிக்கும் முகமாக தேர்தல் நடைபெறுகிறது. திமுக, அதிமுக என இரு பெரும் கட்சிகள் தமது வெற்றிக்காக மகா கூட்டணிகள் அமைத்து போட்டியிடுகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும், அதிமுக கூட்டணியில் தேதிமுக கட்சியும் இணைந்து போட்டியிடுகின்றன. தனித்து போட்டியிட்டால் யாரும் வெல்ல முடியாது என்ற சூத்திரத்திற்குள் வீழ்ந்து விட்ட இந்திய ஜனநாயகம் தமிழ் நாட்டிலுள்ள திராவிட கட்சிகளுக்கும் பொருந்துவதினால் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. காங்கிரஸும், தேதிமுகவும் தனித்து நின்று தமது பலத்தை நிரூபிக்க முடியாத நிலையில் திராவிடக் கட்சிகள் வழங்கும் இடங்களை ஏற்றுக் கொண்டு தேர்தலில் போட்டியிடுகின்றன. இடதுசாரிகள் தமிழ் நாட்டில் பலம் இழந்த நிலையில், இருப்பதில் முற்போக்கானது என அதிமுக வை இனம் கண்டு கூட்டணி அமைத்து தொகுதிப் பங்கீட்டை ஏற்று போட்டியிடுகின்றன. ஏனைய உதிரிக் கட்சிகளின் தலைவர்கள் சட்ட சபையில் தமக்கான உறுப்புரிமையை உறுதி செய்யும் வகையில் கூட்டணிகளில் ஒட்டிக் கொண்டு தேர்தல் பந்தயத்தில் இறங்கியுள்ளனர்.

தேர்தலில் போட்டியிடுபவர்கள் எல்லோருக்கும் ஒன்று மட்டும் பொதுவாக இருக்கின்றன. இவர்கள் யாவரும் கோடீஸ்வரராக இருத்தல் வேண்டும். தேர்தலில் வென்று போட்ட பணத்தை விட மேலதிகமாக பணத்தை ஈட்டுதல் என்பது இவர்களின் முதன்மையான வேலைத்திட்டமாகவும் இருக்கின்றன. இதில் இங்கொன்றும் அங்கொன்றுமாக மிகச் சிலர் விதிவிலக்காக  இருக்கின்றனர்.

இந்திய சுதந்திப் போராட்டத்தின் பின்னர் தமிழ் நாட்டில் கதர் சட்டையில் இருந்த அரசியல் ஆதிக்கம் கரை வேட்டிக்கு மாறி இருக்கின்தே ஒழிய கேரளம், மேற்குவங்கம், திரிபுரா போன்று இந்திய சுதந்திப் போராட்டத்தின் பின்னரான அரசியலில் சிந்தனையில் பெரியளவு மாற்றம் ஏற்படவில்லை என்பது துர்அதிஷ்டவசமானதே. தந்தை பெரியாரின் பகுத்தறிவு, சீர்திருந்தங்களை கொண்வர முயன்று அது தந்தை பெரியாரின் வாரிசுகளாலேயே தோற்கடிக்கப்பட்டது. சமூக மாற்றத்தற்கு பதில் பிற்போக்குத்தனமான சீர்திருத்தக் கொள்கை தோற்றுப் போகும் என்பதற்கு 'தமிழ்' உதாரணம் இது.

ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க தந்தை பெரியாரின் பகுத்தறிவை திருடிய அண்ணா, காமராசரின் எளிமையான, நல்லாட்சியினை கைமாற்றிக் கொண்டாரே ஒழிய வேறு எந்த முற்போக்கு சிந்தனையையும், பகுத்தறிவையும் தமிழகத்தில் எற்படுத்தவில்லை. அண்ணாவைத் தொடர்ந்து சிறந்த நிர்வாகி, பகுத்தறிவுவாதி என்று புறப்பட்ட கருணாநிதி கணக்கு கேட்டதற்காக எம்ஜிஆர் கட்சியிலிருந்து நீக்கி தன் கையைச் சுட்டதைத் தவிர வேறு எதையும் ஏழை மக்களுக்கு செய்யவில்லை. கருணாநிதியிடம் இருந்து பிரிந்து ஏழைகளின் நண்பன் என்று புறப்பட எம்ஜிஆர் உம் ஏழை மக்களின் மீட்போனாக இன்றுவரை தோற்மளித்தாலும் அவர்களுக்கு நல்வாழ்வை ஏற்படுத்துவேன் என்ற கனவை மட்டுமே அவர்களிடம் விதைத்து விட்டு தொடர்ந்து ஆட்சியில் இருந்து விட்டுச் சென்றுவிட்டார். ஏழைகளுக்காக ஏதும் செய்தாரா? என்றால் இல்லை என்பதே பதில். மேலும் இவர் யாருக்கும் ஏதும் செய்யவில்லை என்பதே இன்று வரை தெரியப்படாமல் இருக்கும் உண்மை.

எம்ஜிஆர் இன் மறைவைத் தொடர்ந்து கருணாநிதி, ஜெயலலிதா கட்சிகள் ஆட்சி அதிகாரத்தை பிடித்தல், அதிகாரத்திற்கு வந்ததும் ஒருவரையொருவர் பழிவாங்குதல் என்பதிலேயே அதிகம் கவனம் செலுத்துகின்றனர், செலுத்தி வருகின்றனர். ஓன்றை ரூபாவுடன் சென்னைக்கு வண்டியேறிய கருணாநிதி குடும்பம் உலப் பணக்கார வரிசையில் 50 இற்குள் இடத்தைப் பிடிப்பதில் வென்று  'ஏழை' களாக வலம் வருகின்றனர். இதேவேளை வளர்ப்பு மகனுக்கு கோடி ரூபாயில் ஆடம்பரத் திருமணம் நிகழ்த்தி தன் பங்கிற்கு பெருமையடித்துக் கொண்டார் ஜெயலலிதா. தமிழக மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் சில வெற்றிகளை காட்டிய கருணாநிதியும், இதே வேளை 'தைரியமான பொண்ணு' என்ற பெயருடன் அரசியல், பணப்பலம் பொருந்திய தாதாக்களின் முதுகெலும்பை உடைத்ததும், பிச்சை எடுக்கும் தன்மையான (கடைநிலை)அரச ஊழியர்களின் இலஞ்ச செயற்பாட்டை கட்டுக்கள் கொண்டு வந்த பெருமை ஜெயலலிதாவைச் சாரும்.

பணப் பலம், அதிகாரப்பலம் இரண்டுமே தமிழகத்தின் தேர்தலை தீர்மானிக்கும் பிரதான காரணிகளாக இன்று இருக்கின்றன. கூட்டங்களை கூட்ட இன்னமும் சினிமாக் கவர்ச்சிகளை உபயோகிக்கும் முறமைகள் முதன்மையாக உள்ளன. சினிமாக் கவர்ச்சிகளுக்கு கூடும் கூட்டம் முழுவதும் தமக்கு வாக்குகளாக மாற மாட்டாது என்று அரசியல் கட்சிகளுக்கு தெரிந்தாலும் கூட்டம் கூடாவிட்டால் எங்கே தமது மக்கள் ஆதரவுத் தளத்தின் பலவீனங்கள் சந்திக்கு வந்து விடுமோ என்று பயந்து அரைகுறை ஆடைகளையும், வெத்து வேட்டு காமடிகளையும் பிரச்சாரப் பீரங்கிகளாக சம்பளத்திற்கு பாவிக்கும் கேடு கெட்ட நிலமைகள் இன்றும் மேலோங்கியே இருக்கின்றன. கேரளத்தில் பல சினிமா நட்சத்திரங்கள் தமது நடிப்பு, படைப்பு என்பவற்றில் மாத்திரம் அல்ல செயற்பாட்டிலும் மக்கள் நலம் சார்ந்த கொள்கை சீலர்களாக செயற்படுகின்றனர் என்பதை தமிழகத்து 'நட்சத்திரங்கள்' கற்றுக் கொள்வேண்டும்.

இலவசங்களை அள்ளி வீசி, கரைவேட்டியுடன் பொண்டாட்டியுயும், வைப்பாட்டியும் வைத்திருக்கின்றார் தலைவர். தலைவர்களின் பெருமையை இதன் மூலம் அளவீடு செய்யும் வக்கிர நிலமைகளுக்கு பாமர தமிழக மக்களை கொண்டு வந்திருக்கின்றனர் தமிழக அரசியல்வாதிகள். இதில் கதர் சட்டைகாரர்களை விட கரை வேட்டிகாரர்கள் முன்னிலை வகிக்கின்றனர். இலவசங்களை மட்டும் காட்டி பல வேளை சோற்றுக்கு லாட்றி அடிக்கும் மக்களை கூறுபோடும் கேடு கெட்ட அரசியல் பிழைப்பை நடத்துகின்றனர் தமிழக அரசியல்வாதிகள்.

திரிபுரா, மேற்குவங்கம், கேரளா போன்று ஓரளவேனும் பலமாக உள்ள இடதுசாரி சிந்தனை மாநிலங்களின் இடதுசாரிகள் போலன்றி கரை வேட்டிக்குள் அல்லது சேலைத் தலைப்புக்குள் முகத்தைப் புதைத்து சில தொகுதிகளிலாவது வென்று விடவேண்டும் என்ற சிந்தனையே தமிழக இடதுசாரிகளில் மேலோங்கி நிற்கின்றன. இல்லாவிட்டால் இலங்கை வாழ் தமிழினத்தின் பாசிச வழித் தோன்றலை புரட்சி வீரனாக துதிபாட எப்படி தமிழகத்து சில இடதுசாரித் தலைவர்களுக்கு மனம் வந்தது. இவர்கள் தமக்குள் ஒரு மூன்றாவது அணியை உருவாக்கி மக்களிடம் சென்றருந்தால் இன்று இல்லாவிட்டாலும் இன்னும் சில காலத்தின் பின்பாவது தமிழகத்தில் நல்லாட்சியை நிறுவ ஒரு காத்திரமான பங்களிப்பை செய்ய முடியும். இதற்கு இடதுசாரிகள், முற்போக்குவாதிகள் முயலுவார்களா தமிழகத்திலும்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட சகல பகுதிகளிலும் தன் மகன் உள்ளிட்ட சகலரும் தோற்றதிலிருந்து கிடைத்த பாடத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு ஈழத்தமிழ் மக்களின் ஏகபிரநிதிகள் புலிகள் என்ற கோஷத்தையும் கைவிட்டு விட்டு தன் மகனை எப்படியாவது மந்தியாக்க வேண்டும் என்ற காய்களை நகர்த்தி அதில் ஓரளவுக்கேனும் வெற்றியடையும் நிலையில் உள்ளவர் ராமதாஸ். இதேபோல் தனது கட்சியின் முக்கிய தலைவர் பண்டுருட்டி ராமச்சந்திரனின் அரசியல் சாணக்கியம், அரசியல் பழக்கம் ஆகியவற்றால் அம்மா ஜெயலலிதாவுடன் கூட்டு வைத்து தன்னைத் தவிர இன்னும் சிலரையும் இந்தச் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்யப் போகும் விஜயகாந்தும் வெற்றி பெற்றவர்தான். எனவே காணாமல் போய் கொண்டிருந்த ராமதாஸின் பாமக வும், இல்லாமல் போய்கொண்டிருந்த விஜயகாந்தின் தேதிமுக வும் இந்தத் தமிழகத் தேர்தலில் வெற்றி பெறும் கட்சிகளாக அமையப் போகின்றன.

இத்தேர்தல் மூலம் முற்றிலும் தோற்றுப் போனவராக ஏற்கனவே அறியப்பட்டிருக்கின்றார் வைகோ. புலிகளின் மாதக் கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டு சீமானுக்கு அது வழங்கப்படும் நிலை ஏற்பட்டதும் விழித்திருக்க வேண்டும் வைகோ. தேசியத் தலைவர் உயிருடன் இருக்கின்றார் என்பதை தமிழீழத் தமிழர்கள் கூட நம்பமுடியாத நிலையில் இருக்கையில் நெடுமாறனுடன் சேர்ந்து 'தலைவர் வருவார்... ஆனால் இப்ப வரமாட்டார்....' என்று கூறுவதை வைகோ இற்கு அறழை பெயர்ந்து விட்டதாகவே தமிழீழக்காரர்களே எண்ணுகின்றனர். எனவேதான் இள இரத்தம் சீமானை தமிழீழத்தார் தத்தெடுத்து விட்டார்கள் இப்போது.

கனடா போன்ற நாடுகளில் புலம் பெயர் புலி அமைப்புகளால் சீமானின் கட்சிக்கு கிளைகள் அங்குரார்பணம் செய்யப்பட்ட நிலையில் தனக்கென தனியான அரசியல் கட்சி இருந்தும் ஒரு தொகுதியிலும் தனித்தோ, கூட்டமைத்தோ போட்டியிடாமல் காங்கிரஸை வீழ்த்தியே தீருவேன் என்ற வீர வசனம் பேசி தமிழீழக்காரர்களின் போனஸ் பணத்திற்காக எச்சில் வடிக்கின்றார். தன் வெற்றியை மக்களின் வாக்குகளைப் பெற்று உறுதிப்படுத்தாதவன் மற்றவரின் தோல்வியில் தனது வெற்றியை காட்ட முயலும் சீமானுக்கு இன்னும் சில காலங்கள் டாலர்கள் ஒழுங்காக போகும். என்ன கனடாவிற்குள்தான் வர முடியாது. இதற்கு RCMP மட்டும் காரணம் இல்லை.....? வேறு 'சில்மிஷ'க் காரணங்களும் உண்டு. மற்றபடி சீமானால் தமிழகத் தேர்தலில் ஏதும் செய்ய முடியாது.

தற்போதைய ஆட்சிக் காலத்தில் திமுக அரசால் தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட மக்கள் நல திட்டங்களான 'கலைஞர் உயிர்காக்கும் காப்பீட்டுத் திட்டம்', 'காங்கிரிட் வீட்டுத் திட்டம்' என்பன தமிகத்தின் ஏழை, எளிய மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது திமுக விற்கு தமிழகத்து கிராமங்களில் வெற்றியை ஈட்டித் தர உதவும். கூடவே திமுக வின் பணம் பலம், அதிகாரப் பலமும் இந்த பாமர மக்களிடம் வாக்குகளை சேகரிக்க உதவப் போகின்றது. கூடவே காங்கிரஸுடனான கூட்டால் காங்கிரஸின் வாக்குகளும் இணைந்த கிராமங்களில் வெற்றியை உறுதிப்படுத்த உதவும். தேர்தல் ஆணையத்தின் 'பணம் பட்டுவாடா' மீதான கண்கொத்திப் பாம்பு செயற்பாடு திமுக விற்கு முழமையான வெற்றிகளை கிராமங்களில் ஏற்படுத்தித் தர இடைஞ்சலாக இருக்கப் போகின்றது. கிராமத்து மக்கள் மத்தியில் அவர்களுக்கு 'புரியாத', 'அறிப்படாத' ஸ்பெக்ரம் ஊழல் விடயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை. கிராமத்து மக்களுக்கு அடுத்த வேளை சாப்பாட்டிற்கான இனாம்ங்களை மீறி ஸ்பெக்ரம் அவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தப் போவதில்லை. ஆனால் நகரத்து மக்கள் மத்தியில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். கடந்த காலங்களில் நகரங்களில் திமுக விற்கு இருந்து வந்த ஆதரவுத்தளம் இத் தேர்லில் மேலும் வீழ்ச்சியடையும். இது அதிமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்புக்கள் நகரங்களில் அதிகப்படுத்தப்படும்.

அதிமுக பொறுத்த வரையில் பல கட்சிகளையும் இணைத்துள்ள பலமான கூட்டணியாக திமுக விற்கு சவால் விடும் வகையில் தமிழகம் எங்கும் இருக்கப் போகின்றது. இதுவே அதன் வெற்றிக்கு பலமான காரணியாக அமையப் போகின்றது. அதேவேளை ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்களையும் இவர்கள்பால் இழுக்கப் போகின்றது. பணப் பலம், அதிகாரப்பலம் இல்லாமை, ஜெயலலிதாவைத் தவிர இரண்டாம் மட்ட தலைவர்கள் முன்னிலைப்படுத்தப்படாமையினால் அதிமுக வில் இரண்டாம் மட்டத் தலைவர்கள் என்று யாரும் இல்லை என்ற தோற்றப்பாடுகள் பலவீனமான நிலமைகளைத் தோற்றிவித்துள்ளது. இது ஜெயலலிதாவால் காலில் விழுந்து வணங்கும் கலாச்சாரத்தால் உருவான பின்னடைவுகள். வற்றின் தாக்கங்களை இந்தத் தேர்தலில் அதிமுக சிறிதளவேனும் அறுவடை செய்யும்.

தமிழ் நாட்டுத் தேர்தலை மட்டும் அல்ல இந்திய பாராளுமன்றத் தேர்தலை இலங்கைத் தமிழ் மக்கள் மட்டும் அல்ல, இலங்கையின் முழு மக்களும் தமது நாட்டுத் தேர்தலை விட அதிக ஆர்வத்துடன் அவதானிக்கும் நிலமைகள் ஈழத் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் கூர்மை அடைந்த பின்பு மேலும் அதிகமாகியுள்ளது. யார் வெல்ல வேண்டும் என்பதைவிட யார் வெல்லக் கூடாது என்பதில் முள்ளிவாய்கால் முளந்தாளிடலின் பின்பு புலிகளின் விசுவாச தமிழ் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் பாராளுமன்றத் தேர்தலில் இந்திய மக்கள் யார் வெல்ல வேண்டும் என்பதை தீர்மானித்து ராஜீவ் காந்தியின் மரணத்தை நியாயப்படுத்தும் கட்சிக் கூட்டணிகளை தோற்கடித்தது இங்கு கவனிக்கப்பட வேண்டியுள்ளது. இதிலிருந்து ஈழத் தமிழ் மக்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இலங்கை அரசை விட இந்திய அரசை தமது முதலாவது எதிரியாக சித்தரிப்பதில் வெற்றி கொண்ட எமது (புலிப்)ஆயுதப் போராட்டம் ஜேஆர் செய்த சூழ்ச்சிக்குள் வீழ்ந்து விட்ட புலிகளால் மிகவும் இலாவகமாக பாமர ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் ஊட்டப்பட்டிருப்பது புலிகளின் தோல்விகளுக்கு மட்டும் அல்ல ஈழத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வை உறுதிப்படுத்த முடியாமல் உள்ள நிலமைகளை ஏற்படுத்தியிருக்கின்றது என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய உண்மை. இவற்றின் அடிப்படையிலேயே தமிழ் நாடு, இந்திய தேர்தல்களை ஈழத் தமிழ் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

வழமை போல் ஈழத் தமிழர் பிரச்சனை தமிழகத் தேர்தல் மேடைகளின் இம்முறையும் முழங்குகின்றது. கருணாநிதி இலங்கைத் தமிழ் மக்களுக்கு துரோகம் செய்து விட்டார் இதற்கு காங்கிரஸ் அரசு துணையாக இருந்தது. சிங்கள இராணுவம் தமிழக மீனவர்களை கொல்கின்றது. கருணாநிதி பார்த்துக் கொண்டு இருக்கின்றார். இவ்விரண்டு பேச்சுக்களும் உசுப்பேத்த சில இடங்களில் பயன்படும். மற்றபடி இது வாக்குகளை அள்ளித்தரப் போவதில்லை. தமிழக மீனவர்கள் பிரச்சனை கடலோரக் கிராமங்களில் சிறியளவு தாக்கத்தை ஏற்படுத்தலாம். மற்றபடி தமிழக தேர்தல் முடிவுகள் இவ்விரண்டு விடயங்களால் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லை. இது போலவே கருணாநிதியின் குடும்ப ஆட்சி என்ற விவகாரமும் அமையப் போகின்றது. பல பாமர கிரமத்து மக்கள் இதனை கருணாநிதி குடும்பத்து பெருமையாக எடுத்தக் கொள்வர். இதேவேளை நகரத்து மக்களிடம் இதற்காக விமர்சனத்தை மட்டும் திமுக கட்சி பெறப் போகின்றது. மற்றயபடி வாக்கு வழங்கல்களில் பெரிய மாற்றத்தை இது ஏற்படுத்தாது. 

இருக்கும் சகல நிலமைகளையும் சீர்தூக்கி பார்க்கையில் திமுக, அதிமுக இரு கட்சிகளும் இத் தமிழகத்துச் சட்டசபைத் தேர்தலில்  அறுதிப் பெரும்பான்மை பெறப் போவது இல்லை. ஆனால் அதிமுக கூட்டணிக்கு. திமுக கூட்டணியை விட கூடுதலான ஆசனங்கள் கிடைக்கும். ஆனால் இது ஆட்சியமைக்க போதுமான வலுவானதாக அமையப் போவதில்லை. இதன் தொடர்சியாக தேர்தல் முடிவுகளுக்கு பின்னான கட்சிகளின் மறு கூட்டமைப்பு ஒன்று ஆட்சியமைக்க முயலும். இதில் பணப்பலம், அதிகார பலம் மிக்க திமுக ஆட்சி அமைக்க கூடிய வாய்ப்புக்களே அதிகம் காணப்படுகின்றன. ஆனால் அமையும் ஆட்சி தனது பதவிக் காலத்தை முழுவதும் நீடித்து நிற்க வாய்ப்புக்கள் மிகக் குறைவு. திமுக ஆட்சியமைத்தால் அதிமுக வை பழி வாங்குதல் என்பதைவிட தமக்குள் இருக்கும் ஸ்பெக்ரம் கேள்விகளை மூடி மறைக்கவே திமுக தனது சக்திகளை, நேரங்களை அதிகம் செலவழிக்க வேண்டி வரும்.

மாறாக ஏதாவது நடந்து அதிமுக ஆட்சியமைத்தால் ஸ்பெக்ரம் என்று கருணாநிதி குடும்பத்தை அதிமுக பழிவாங்கும் என்றுதான் எல்லோரும் எதிர்பார்ப்பீர்கள். இதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவு. காரணம் மத்தியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசு ஸ்பெக்ரத்தை பெரிதுபடுத்த விட்டு தன் தலையிலேயே மண்ணை தானே அள்ளிப் போடாது. மற்றது சிபிஐ மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்பு. எனவே சிபிஐ விசாணை என்று மாநில அரசால் ஒன்றும் பெரிதாக செய்ய முடியாது. கருணாநிதி குடும்பம் 'கலைஞர்' குடும்பமாக கருணாநிதியின் தீர்க்க ஆயிசு வரை நீடிக்கும். இதற்கு பின்னால் எல்லாம் சிதறு தேங்காய்தான். துரை அழககிரி, உதயநிதி ஸ்ராலின் போன்றோரின் தமிழ் சினிமாத் துறை மீதான ஏகபோகம் இல்லாமல் போகும். போங்கள்....பிறகு என்ன நடிகர் விஜய் இன் காட்டில் ஒரே மழைதான்.

2011 தமிழகத்தத் தேர்தலில் வெல்லப் போவது திமுக, அதிமுக இரண்டுமே அல்ல கூடவே தமிழகத்து மக்களும் வெல்லப் போவது இல்லை என்பதுதான் பரிதாகரமான விடயம்.

(சாகரன்) (சித்திரை 14, 2011)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com