Contact us at: sooddram@gmail.com

 

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

(சாகரன்)

மீண்டும் ஒரு வட்டுக் கோட்டை மகாநாடு? கூட்டுவது லண்டனில் கிங்ஸ்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் 'தமிழர் தகவல் மையம்' என்ற அரச சார்பற்ற அமைப்பே? முழுப் புலிகளால் நிரம்பும் அமைப்பு. புலிகள் வாழும் காலத்தில் புலிகளுக்காக சர்வ தேசம் எங்கும் செயற்பட்ட அமைப்பின் முக்கிய நபர்கள் இதனை ஒழுங்கு செய்துள்ளனர். வெற்றி பெறுவது போல் தோன்றும் குதிரை மேல் காசு கட்டும் பேர் வழிகள். இவர்களுக்கு சரி எது பிழை எது என்பதெல்லாம் முக்கியமில்லை. காலத்துக்கு காலம் பிழைப்பு நடத்த, விலாசம் காட்ட ஒரு பதாகை வேண்டும். இன்று அதற்கு தூக்கிப்பிடிப்பது தமிழர் அமைப்புக்களுக்கிடையே ஒற்றமையை ஏற்படுத்தல். ஆதற்காக கலந்துரையாடலை ஏற்படுத்தல். இருந்த ஒற்றுமைக்கு ஆப்பு வைத்து ஏனைய அமைப்பக்களை இல்லாமல் செய்வதே புலிகளின் முதல் வேலைத்திட்டம் என்பதை தமிழ் கூறும் நல்லுலகம் வெகு எளிதில் மறந்து விட்டதா?

இக் கலந்துரையாடலில் தமிழ் முதல் அமைச்சர், மத்திய அமைச்சர், எம்பிகள், இடது சாரிகள், முன்னாள் விடுதலை அமைப்புக்களின் தலைவர்கள், தமிழ் கட்சிகளின் தலைவர்கள், முஸ்லீம் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். பொதுவில் கருணா தவிர மற்றய எல்லோரும் கலந்து கொள்கின்றனர், கலந்து கொண்டனர். பிரயாண ஒழுங்குகள்? கூடவே இலவச தங்கும் இடம்? இத்தியாதி... இத்தியாதி.... எல்லாம் உபயம் 'தமிழர் தகவல் மையம்'.

ஆனால் உள்ளுரில் இக் கூட்டம் கூட்டப்படவில்லை மாறாக வெளியூரில் கூட்டப்பட்டது. தமிழ் சினிமாவிற்கு பாடல் எழுதும் பாடலாசிரியர் போல் வெளிநாட்டில் என்றால்தான் மூட் வருமோ? பேசுவதற்கு. யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் உள்ளுர் தவிர்த்து வெளியூரில் சந்திப்பதில் சில நியாயங்கள் இருந்தன? ஆனால் இன்று அதற்கான எந்த நியாயங்களும் இருப்பதாக தெரியவில்லை. இதில் கலந்து கொண்ட யாபேரும் இலங்கை அரசின் பாதுகாப்பு வட்டத்தில் இலங்கையில் திரிபவர்கள். உள்ளுரில் இவர்கள் அனைவரும் கூடிக் கதைக்க யாரோ தடுக்கின்றனரோ? அல்லது வேறு காரணமோ? தெரியவில்லை. அல்லது வேறு யாரின் விருப்பங்களுக்காக நிறைவேற்றப்படுகின்ற சந்திப்புக்களோ? ஆனால் ஒன்று மட்டும் தெரிகின்றது கருணா தவிர ஏனையோரை ஒரே அறைக்குள் அடைதத் பெருமை வரலாற்றில் இதுதான் முதல் தடவை. தமிழ் மக்களின் பிரச்சனையை தெளிவாக பார்த்து அதற்கான தெளிவாக சரியான தீர்வுத்திட்டத்தை வரைவதில் எல்லாவித தகுதியும், திறமையும் உடைய வரதராஜபெருமாள் இதில் இல்லை. சும்மா ஊதுகின்ற சங்கிற்கு அவர் எதற்கு?

கூட்டத்தை கூட்டுபவர்களின் கரங்களும், பின்னணியும் சரியானதாக தெரியவில்லை. இல்லாமல் போய்கொண்டிருக்கும் புலியிசத்தை மீண்டும் கட்டிகாத்து, பாக்கெற்றுக்களை தொடர்ந்தும் நிரப்ப செய்யும் அடிப்படை வேலைகளாகத்தான் இதனைப் பார்க்க முடிகின்றது. மூன்று நாள் கூட்ட முடிவில் கூட்டறிக்கை வெளியிடப்படும் என  யார் யாரோ பத்திரிகைகாரருக்கு முந்திச் சொல்லியும் இதுவரை எதனையும் காணோம். வெற்றுப்பானைக்குள் சோற்றை தேடும் முயற்சி இது என்று எங்களுக்கு தெரியும். முந்திக் கொண்டு சொன்னால் ஐக்கியத்தை குழப்பு கின்றார்கள் என்ற பேச்சு வரும் என்ற தயக்க உணர்வால் அல்ல. மாறாக வேகமான உலகில் நேரமின்மை காரணத்தால் பிந்திச் சொல்கின்றோம்.

அடிப்படையில் எந்த வேலைத்திட்டமும், கொள்கை வகுப்பும் இல்லாத சுயநல அடிப்படையில் தமிழர் தகவல் மையத்தினால் கூட்டப்பட்ட மந்தைக் கூட்டங்களின் கூட்டமாக முடிந்த வெற்று வேட்டுக் கலந்துரையாடல். இதில் கலந்து கொண்ட சிலர் உண்மையில் மக்கள் நலனில் அக்கறையுள்ளவர்கள். இவர்கள் எப்படி இப்படியான ஒரு வெற்று வேட்டிற்காக வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டனர்? இதில் செலவழித்த நேரத்தை இடம் பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் போரினால் பாதிக்கபட்ட மக்களை சந்திக்க சென்றிருந்தால் நீங்கள் மேலும் வரலாற்றில் நாயகர்களாக பதியப்பட்டு இருப்பீர்கள்.

மூன்று பிரிவுகளாக சிதறி இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஐக்கியப்படுத்த இக்கூட்டத்தை கூட்டியிருந்தால் மக்கள் நலனில் அக்கறையில்லாத, வேலையில்லாத தமிழ் தேசியக் கூட்டமைப்பை வழமைபோல் வெளிநாடுகளுக்கு செல்வது போல் 3 நாள் மகாநாட்டில் தமது நேரத்தை செலவிட்டு இருப்பார்கள். தேர்தல் காலத்தில் மட்டும் மக்களை சந்திக்க போகும் இவர்களுக்கு அது இல்லாத போது வேறு எதாவது வேலை வேண்டும்தானே. ஏனையோரின் விணாக்கப்பட்ட நேரத்தைப்பற்றிதான் கேள்விகள் இங்கே கேட்கப்படுகின்றன. இவர்களை மட்டும்தான் நாம் விமர்சிக்க முடியும். நீங்கள் தான் ஓரளவேனும் விமர்சனத்தை சந்திக்க தயாராக உள்ளவர்கள். அந்த நம்பிக்கையில் கேட்கின்றோம். ஏன் இந்த வெற்று வேட்டுகளுக்கு இழுபடுகின்றீர்கள்?

மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, புனருத்தாரணம் பற்றி பேச ஏன் கதவுகளை மூடவேண்டும். சரி நிருபர்களை அனுமதிக்க வேண்டாம். கூட்டத்தின் நடுவில் கேள்வி? கேட்டு குழப்பிவிடுவார்கள். கூட்டத்தின் முடிவில் நடந்தவற்றை அறியத்தரலாம் என்று காரண காரியம் சொன்னாலும் மற்றயபடி மூடிய அறையில் மக்களைப் பற்றி பேசும் இரகசியம் அப்படியென்ன. 13 வது திருத்தச்சட்டத்திற்கு மேலாக கேட்டல் பற்றி பேசியதாக தினகரனின் செய்தி வந்தது. எனக்கென்னவோ அதற்கான பக்குவம் இக்கூட்டததை கூட்டியவர்களிடமோ அல்லது கூட்டிய முறையிலோ இருந்ததாக தெரியவில்லை. இதற்கு அப்பாலும் சிந்திக்க கூடிய சில நல்லவர்கள், வல்லவர்கள் இக் கூட்டத்திற்குள் இருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் அவர்கள் வீணாக்கப்பட்டிருப்பார்கள் என்பதை இக் கூட்டம் பற்றி வெளிவந்த ஒரு (முதல்)புகைப்படமே சான்றாக அமைகின்றது.

தமிழ், முஸ்லீம் கட்சிகளை பொறுத்தவரை புலிகளின் செயற்பாட்டை, சிந்தனை வழிப் போக்கை ஏற்றுக்கொண்ட கட்சிகள், அதனை ஏற்றுக்கொள்ளாத கட்சிகள் என்று இருவகையில் மட்டும் தான் பிரித்துப்பார்க்க வேண்டும். அது தான் சரியானதும் கூட. புலியை ஏற்காத அமைப்புக்களை உடனேயே அரசு சார்பு அமைப்புக்கள்; என்று முத்திரை குத்திவிடுவதுண்டு. கூடவே துரோகிகள் என்று முத்திரையும் குத்திவிடுவார்கள். அப்படிப் பார்த்தால் இன்று, என்றும் எல்லோரும் துரோகிகள்தான். புலிகள் உட்பட சகலரும் அரசுடன் பேசியவர்கள், உறவை பேணிவந்தவர்கள். இதில் முதல் துரோகப்பட்டம் புலியிற்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குமே பொருந்தும். கடந்த காலங்களில் புலிகளும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் தான் இலங்கை அரசுகளுடன் கள்ள? நல்ல? உறவுகளைக் கொண்டிருந்தார்கள். பிரேமதாச ஆட்சிக்காலத்தில் மாற்று இயக்ககாரர்களை வேட்டையாட கொழும்பில் இலங்கை இராணுவத்தின் வீதித்தடைகளில் புலி உறுப்பினர்கள் சேர்ந்தியங்கியதை மறுக்க முடியுமா?  மாறாக மரணத்தை தவிர்ப்பதற்காக இலங்கை அரசின் அனுசரணையுடன் காலம் தள்ளியதே ஏனைய மாற்றுக் கருத்தாளர்களின் துர்ப்பாக்கிய நிலமை. அரசுடன் பேசாத, உறவு வைக்காத புலிகளும் இல்லை, புலி அல்லாத அமைப்புக்களும் இல்லை. துரோகிகள் என்ற இந்தக் கண்ணோட்டம் முற்றிலும் தவறான கண்ணோட்டம் ஆகும்.

இந்தவகையில் பார்க்கும் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு. மனோகணேசனின் ஜனநாக மக்கள் முன்னணி, முஸ்லீம் காங்கிரஸ் போன்றோர் புலிகள் ஆதரவுக்கட்சிகள் என்றும் ஏனைய அமைப்புக்கள் புலிகள் ஆதரவு தெரிவிக்காத அமைப்புக்கள். புலிகளின் ஏகபோகம், பாசிசத்திற்கு எதிரானவர்கள். இவர்கள் இருவரும் சாராம்சத்தில் இரு பெரும் துருவங்கள் எப்படி ஒருக்கிணைந்து செயற்பட முடியும். இன்றும் இன்னும் புலி ஆதரவு சக்திகள் அவர்கள் நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை. ஒரு, இரு தினங்களில் அவர்கள் மாறிவிட்டார்கள் என்றால் வாழ்வியல் தத்துவத்தின் நடைமுறையில் இது சாத்தியம் இல்லை. மாறியது போல் தோற்றம் காண்பிக்கின்றார்;கள் என்றால் அது அப்பட்டமான நடிப்பு. பிழைப்பு வாதம். இரு பெரும் முரண்பாட்டுத் துருவங்கள் எப்படி மூடிய அறையில் சேர்ந்து செயற்படுதல் என்பது பற்றி பேச முடியும். அது தான் கூறுகின்றோம் சூரிச் மகாநாடு? இருட்டு அறையில் (கண்மூடிய)கறுப்பு பூனையை தேடும் முயற்சி (சொல்லாடல் உதவிக்கு நன்றி: பாலகுமார்) இதுவென்று.

எந்த அடிப்படையும் இல்லாமல், ஒரு நிகழ்ச்சி நிரலும் இல்லாமல் பொத்தாம் பொதுவில் ஒரு அறைக்கள் பூட்டிவிட்டால் ஐக்கியமும், தீர்வு திட்டமும் வந்துவிடும் என்றால் நீங்களே உங்களை ஏமாற்றுகின்றீர்கள் என்றுதான் அர்த்தம். யாரைடீயா ஏமாற்றுகின்றீர்கள் என்பது ஒரு புறம் இருக்க, நீங்கள் உங்களையே ஏமாற்றுகின்றீர்கள்.

திம்பு பேச்சு வார்த்தையின்போது தமிழ் மக்கள் மத்தியில் இருந்த விடுதலை அமைப்புக்கள், தமிழர்விடுதலைக் கூட்டணி இடையே பேச்சு வார்த்தையின்போது ஒரு இறுக்கமான ஐக்கியம் ஏற்பட்டு இருந்தது. அப்போது இப் பேச்சுவார்த்தைக்கு நடுநிலமை வகித்த இந்திய அரசின் வேண்டுகோள் தனிநாடு தவிர்ந்த வேறு அரசியல் தீர்வுத்திட்டத்துடன் பேச்சு வார்த்தை மேசைக்கு வாருங்கள் என தமிழ் பேசும் மக்கள் அமைப்புக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கு தனிநாட்டுக் கோரிக்கைக்கு மாற்றீடாக கோரிக்கையை முன்வைத்தல் என்பதன் அடிப்படையில் பேசினார்கள் விடுதலை அமைப்புக்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியும். தமிழர் அமைப்புக்கள் தமக்கிடையே பேச்சுக்களை பூட்டிய அறையினுள் நடத்தினர். இறுதியில் 4 அம்சக் கோரிக்கை என்ற முடிவிற்கு வந்தார்கள். அது தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமை அடிபடையிலான ஒரு அரசியல் தீர்வுத்திட்டமாக அமைந்தது என்பது சிறப்பு அம்சம்.

தீர்வுத் திட்டத்திற்கான வரைதலை மேற்கொண்டவர்களில் முக்கியமான ஒருவர் கேதீஸ்வரன். இன்று எம்மோடு இல்லை. புலிகளால் கொல்லப்பட்டு விட்டார். மற்றயவர் வரதராஜப்பெருமாள். இன்றும் எம்முடன் உள்ளார். இதில் சிறப்பான அம்சம் என்னவெனில் மலையக மக்களின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றான பிரஜா உரிமை பிரச்சனைக்கான தீர்வுத் திட்டதையும் உள்ளடக்கியதாக இருந்தது இந்த 4 அம்சக் கோரிக்கை. இதனை இந்திய அரசின் மத்தியஸ்தின் முன்னிலையில் இலங்கை அரசின் பேச்சுவார்த்தைக்குழு முன் வைத்தனர் தமிழர் தரப்பு. ஒரே கோரிக்கை ஒரு குரலில் சொன்னார்கள். பலமாக நின்றனர். பேச்சுவார்த்தையில் வென்றார்கள்? இதில் தீர்வு ஏற்பட்டால் தனது முழங்கையால் கையெழுத்து வைப்பேன் என்று பிரபாகரன் பதில் அளித்தது வேறுவிடயம். பேச்சுவார்த்தையில் எப்போதும் நம்பிக்கையற்று இருத்தல் என்ற சிந்தனையின் வெளிப்பாடாக இதனை அன்று எல்லோரும் பார்த்தனர். இப் பேச்சு வார்த்தையில் இருந்த ஒரு முக்கிய குறைபாடு முஸ்லீம் தரப்பில் யாரையும் இணைத்துக் கொள்ளவில்லை. மாறாக ஈபிஆர்எல்எவ், ஈரோஸ் போன்ற அமைப்புக்கள் முஸ்லீம் மக்களை பிரநிதித்துவப்படுத்தும் பக்குவத்தில் இருந்தனர் என்பது கவனிக்கத்தக்கது.

திம்புவில் சகலரும் இணைந்து செயற்பட்டனர், பேசினர். அதில் ஒரு அடிப்படைத் திட்டம் இருந்தது. ஒரு வேலைத்திட்டம் இருந்தது. சரியான திசைவழியில் பயணிக்கக் கூடிய வழி நடத்தலைச் செய்யக் கூடிய தலைவர்கள் இருந்தார்கள். இன்று பலரும் எதிர்பார்த்ததை போலவே 3 நாள் சூரிச் கூட்டத்தின் பின்பு ஒரு பொது அறிக்கையும் வெளியிட முடியாமல் புஸ்வாணம் ஆகியது தான் மிச்சம். சுங்கான் இல்லாத கப்பல் எங்கு போய் சேரும் என்று தெரியாமல் முட்டிமோதி சின்னாபின்மாகியது தான் மிச்சம் இக்கலந்துரையாடலின் விளைவுகள். கூட்டத்தை கூட்டியவர்களின் எதிர்பார்ப்பு அதுதான். அதுமட்டுமே நிறைவேறியுள்ளது.

அர்பணிப்புடனும், சிந்தனைத் தெளிவுடனும் சுயநலமின்றி பிழைப்பு வாதத்தை தவிர்த்து செயற்படும் அமைப்புக்கள் இது போன்ற முயற்சியை முன்னெடுத்திருந்தால் இது போன்ற சந்திப்புக்கள் சரியான திசைவழிப் பயணத்தில் பயணிக்க தொடங்கியிருக்கும். அதற்கு இதில் ஈடுபடுத்தப்படும் அமைப்புக்கள் தமிழ் மக்கள் விடயத்தில் அர்பணிப்புடனும் உளசுத்தியுடனும் செயற்படவேண்டும். தமது கடந்த கால அரசியற் செயற்பாடுகள் சம்மந்தமான ஒரு பொதுவான சுயவிமர்சன செயற்பாட்டிற்கு தயாராக இருத்தல் வேண்டும். இன்றும் இன்னும் பிரிவினைவாதத்தையும் புலிகளின் ஏஜன்டுகளால் ஏதாவது பணம் கிடைக்குமா என்ற எலும்புத்துண்டிற்கு ஆசைப்படும் பிழையான அரசியல்பாதையை கொண்டிருப்பார்கள் ஆயின் எப்படி சரியான திசைவழியை நோக்கி நகர முடியும்.

சற்றே சந்தியுங்கள் மனோ கணேசனைப்பற்றி கொழும்பின் தனக்கொரு எம்பி பதவியை தக்கவைத்துக் கொள்ளல் என்பதுதான் இவரின் இலட்சியம். விகிதாசார பிரநிதித்துவத்தை பயன்படுத்தி எம்பி பதவியை பெறுதல் ரவூப் ஹக்கீம் இன் கனவுகள். புலிகளின் சித்து விளையாட்டால் கிடைத்த எம்பி பதவிகளை மீண்டும் எவ்வாறு தக்க வைத்தல்; என்பதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிழைப்பு. இதில் சம்மந்தர், மாவை, சுரேஸ், ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம் இடையே கடும் போட்டி. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அப்பா தமிழ் மக்களுக்காக? வழக்காடி சேர்த்த சொத்துடன் கொழும்பில் இன்னும் 3 தலைமுறைக்கு காலத்தை ஓட்ட முடியும். எப்படி ஐயா சரிப்பட்டு வரும், இவர்களை இணைத்துக்கொண்டு வேலை செய்ய.

தமிழ் மக்களுகான அரசியல் தீர்விற்கு இலங்கை அரசுடன்தான் பேச வெண்டும் என்ற யதார்த்தத்தை புரிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்றைய உலக, உள்ளுர் அரசியல் யதாரத்;தங்களுக்கு ஏற்ப இணக்கமான அரசியல் அணுகுமுறையுடன் கூடிய பேச்சு வார்த்தையில் ஈடுபட தயாராக வேண்டும். இதற்கான சர்வ தேச நேச அணிகளின் தார்மீக ஆதரவைப் பெறுதல் என்பதுவும் முக்கியம். அதற்கு முதலில் நாம் சரியான சக்திகளுடன் ஐக்கியப்பட்டு ஒருமித்த கருத்தில் உறுதியான சரியான அரசியல் தீர்வுத்திட்ட நிலைப்பாட்டை எடுக்கவேண்டும். தீர்வுத்திட்டத்தை தயாரிக்க வேண்டும். முதலிலேயே முற்று முழுவதையும் பெறுதல் என்பது சாத்தியம் அற்றது. உலக அனுபவங்கள் எமக்கு காட்டி நிற்பது அதுதான். இந்தியா, கனடா போன்ற நாடுகளில் மாநிலஃமாகாண சுயாட்சி என்ற அரச அமைப்பு முறமைகள் இருக்கின்றன. ஆனால் இன்றுவரை மாநில மத்திய அரசுகளுக்கிடையே அதிகாரங்கள் பற்றிய இழுபறிகளும், கொடுக்கல் வாங்கல் சம்மந்தமாக பேச்சு வார்தைகளும், முரண்பாடுகளும், பிரச்னைகளும், தீர்வுகளும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த யதார்த்தங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கை அரசு கொடுப்பதில் குறைந்ததை கொடுக்க முயலலாம் என்ற சந்தேகங்களில் நியாயம் இல்லாமலும் இல்லை. நாம் கடந்து வந்த பாதை அப்படி.

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு பற்றி ஒருவர் சுயநிர்ணய உரிமை என்கின்றார் (சொல்கின்றவருக்கு சுயநிர்ணய உரிமை என்றால் பிரிந்து செல்வது என்ற விளக்கம் மட்டுமே உள்ளது என்பது நகைபிற்கிடம்). இன்னொருவர் இந்திய அமைப்பு முறையிலான சமஷ்டி என்கின்றார். இன்னொருவர் மாகாணசபை என்கின்றார். இன்னொருவர் மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்கின்றார். மற்றவர் 13 பிளஸ் என்கின்றார். இன்னொருவர் தமிழ் மக்களுக்கு என்று பிரத்தியேகமான பிரச்சனை இல்லை என்கின்றார். சூரிச் மகாநாட்டை ஒழுங்கு பண்ணியவர்கள் நாடு கடந்த தமிழ் ஈழம் என்கின்றனர். (இவர்களின நாடு கடந்த தமிழ் ஈழம் கிடைத்தாலும் ஊருக்கு போக மாட்டார்கள் என்பது வேறுவிடயம். கனடா தமிழர் தகவல் மையம்; திருச்செல்வம் உட்பட யாபேரும்.)

ஒரே குழப்பமாக இருக்கின்றது. முதலில் எவை பற்றி எப்படி பேசுவது யார் யாருடன் பேசுவது என்ற சரியாக வரையறை செய்யுங்கள். ஓரு வரைவுத்திட்டத்தை போட்டு அதன் அடிப்படையில் பேச ஆரம்பியுங்கள். இதன் தொடர்சியாக ஒரு பொது முடிவிற்கு வாருங்கள். இதனைவிடுத்து பூட்டி அறைக்கு வெளிச்சம் இல்லாமல் கறுப்பு பூனையை தேடும் தலைவரின் தத்துவத்தை பின்பற்றாதீர்கள். அது தலைவரின் நந்நிக்கடல் சரணடைவுடன் மூட்டை கட்டப்பட்டுவிட்டது. சந்தேகம் என்றால்........? கேபி இடம் கேட்டுப்பாருங்கள்.

(சாகரன்) (கார்த்திகை 26, 2009) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com